tag:blogger.com,1999:blog-81119670108237383962024-02-18T19:52:18.771-08:00puthuvisaiபுதுவிசைhttp://www.blogger.com/profile/09276344793619872435noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-8111967010823738396.post-30918271835246553272023-04-03T22:17:00.002-07:002023-04-03T22:17:47.603-07:00இஸ்லாமியப் படையெடுப்பும் இந்துப் படையெடுப்பும் - ஆ. சிவசுப்பிரமணியன்<p><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt; text-align: justify;">நாடாளும் மன்னனுக்குத் தேவையான ஆறு உறுப்புக்களுள்
முதலாவதாக படையைக் குறிப்பிடுவார் வள்ளுவர். பிற்காலச் சோழர் காலத்தைச் சார்ந்த சீவகசிந்தாமணிக்
காப்பியம் படையினால் விளையும் நன்மைகளைப் பின்வருமாறு குறிப்பிடுகிறது:</span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">பொன்னின் ஆகும் பொருபடை யப்படை</span></p><div style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;">தன்னில் ஆகுந் தரணி தரணியிற்</span></div>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">பின்னை யாம் பெரும்பொருள் அப்பொருள்<o:p></o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">துன்னுங் காலைத் துன்னாதன இல்லையே (செய்யுள்:
1923)<o:p></o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;">பொன் இருந்தால் போரிடும் படையைத் திரட்டலாம்.
படை இருந்தால் ஆட்சி கிடைக்கும். ஆட்சி கிடைத்தால் கிடைக்காதன என்று எவையும் இல்லை
என்பது இச்செய்யுளின் பொருளாகும். ஆட்சிப் பரப்பை விரிவுபடுத்துவதே மன்னர்களின் குறிக்கோள்.
இதனால்தான் இடைக்குன்றூர்க்கிழார் என்ற கவிஞர்,</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">“ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்</span></p><p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;">புதுவதன்று இவ்வுலகத்து இயற்கை (புறம்
76: 12)</span></p><p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;">என்று பாடியுள்ளார். இவ்வாறு போர் என்பது
மன்னர்களுக்கிடையில் மிக இயல்பாக நடைபெறும் நிகழ்வாக இருந்தது. ஆயினும், மன்னர்கள்
அவர்களது படைவீரர்கள் ஆகியோருடன் இது நின்று விடவில்லை. குடிமக்களையும் பாதிக்கும்
ஒன்றாகவே போர் அமைந்தது. இதைச் சங்க நூல்கள் சுட்டுகின்றன.</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப்
பெருவழுதியின் வீரச்செயல் நெட்டிமையார் என்ற புலவரால் இவ்வாறு புகழப்படுகிறது,</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">“பகைவர் நாட்டில் தேர் செல்லும் தெருக்களைக்
கழுதை பூட்டிய ஏரால் உழுது பாழ்படுத்தினாய். பறவைகள் ஒலிக்கும் புகழமைந்த வயல்களில்
குதிரைகள் பூட்டிய தேரைச் செலுத்தி விளைபயிர்களை அழித்தாய்”. (புறநானூறு 15). இதே மன்னனைக்
காரிகிழார் என்ற புலவர் வாழ்த்தும் பொழுது,<o:p></o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;"><o:p> </o:p></span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;">“வாடுக இறைவநின் கண்ணி யொன்னார்</span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">நாடுசுடு கமழ்புகை யெறித்த லானே” (புறம்
6)</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">என்று வாழ்த்துகிறார். பகைவருடைய நாட்டினைச்
சுட்டெரிப்பதால் எழும் புகையால் உன் தலைமலை வாடட்டும் என்பது இதன் பொருளாகும்.</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">சோழன் கரிகால் பெருவளத்தான் பகலும் இரவும்
கருதாது பகைவரது ஊரைத் தீயிட்டு அந்த ஒளியில் பகைவர்களின் புலம்பலோசையுடன் கொள்ளையிடுதலை
விரும்புபவன் என்பதனை,<o:p></o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;"><o:p> </o:p></span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;">“எல்லையும் இரவும் எண்ணாய் பகைவர்</span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">ஊர் சுடு விளக்கத் தழுவிளிக் கம்பலைக்<o:p></o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">கொள்ளை மேவலை யாகலின்”<o:p></o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;">என்ற புறநானூற்றுப் பாடலால் (7) அறிகிறோம்.
சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி பகைவரது நெல் விளையும் வயல்களைக் கொள்ளையடித்து
வீடுகளைக் கொளுத்திய செயல் போற்றப்படுகின்றது.</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">பகைவர் நாட்டை எரிக்கும் இக்கொடுஞ்செயல்
அடிக்கடி நிகழ்ந்தமையால்தான் சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, வற்றிய பாலை நிலத்திற்கு
“செருமிகு சினவேந்தன் சிவந்திறுத்த புலம்போல” என்ற உவமையைப் பயன்படுத்துகிறார்.</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">பகைவர் நாட்டைத் தீயிட்டு அழிக்கும்
கொடுமை மட்டுமல்லாது போரில் தோற்றவர்களைக் கொடூரமாகப் பழிவாங்கும் செயல்களும் நிகழ்ந்துள்ளன.</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">நன்னன் என்ற குறுநில மன்னன் தன்னுடைய
பகைவர்களை வென்ற பிறகு அவர்களின் உரிமை மகளிரின் தலையை மழித்து அக்கூந்தலைக் கயிறாகத்
திரித்து, அக்கயிற்றால் அப்பகைவரின் யானையைப் பிணித்தான் (நற்றிணை 270).</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">வேல்கெழு குட்டுவன் என்ற சேர மன்னன்
பழையன் என்ற மன்னனை வென்று அவன் மனைவியாரின் கூந்தலைக் கொண்டு திரிக்கப் பெற்ற கயிற்றினால்
யானைகளை வண்டியில் பூட்டி அவ்வண்டியில் வெட்டப்பட்ட பழையனது காவல் மரத்தை ஏற்றிச் சென்றான்
(பதிற்றுப் பத்து 5ம் பத்து)</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">கணைக்கால் இரும்பொறை என்ற சேர மன்னன்
மூவன் என்பவனைப் போரில் வென்று அவனது பற்களையெல்லாம் பிடுங்கித் தொண்டி நகர் கோட்டைக்
கதவில் பதித்தான்.</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">மத்தி என்ற பரதவர் தலைவன் எழினி என்ற
குறுநில மன்னனின் பற்களைப் பிடுங்கி தனது வெண்மணிக் கோட்டைக் கதவில் பதித்து வைத்தான்.
(அகம் 211).</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">இத்தகையக் கொடுமைகள் தமிழ் மன்னர்களுக்கிடையில்
நிகழ்ந்துள்ளன என்பதனையும் தமிழ் மக்களின் சொத்துக்களே அழிவுக்கு ஆளாயின என்பதனையும்
நினைவிருத்திக் கொள்ளுவது அவசியம். எல்லாவற்றிற்கும் மேலாகத் தனிமனிதர்களின் நாடு விரிவாக்கும்
கொள்கையால் தமிழ்ச் சமுதாயம் அவலத்திற்காளானது.</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">இவையெல்லாம் இரண்டாயிரம் ஆண்டுகட்கு
முன்பு நடந்த கொடுமைகள் என்றால் பதினொன்றாவது நூற்றாண்டில் படையெடுப்பின்போது நிகழ்ந்த
கொடுமைகள் இவற்றை விஞ்சுவதாகவே உள்ளன.</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">ராஜராஜ சோழனின் மெய்கீர்த்திகளில் அவனது
வெற்றிச்சிறப்புகளில் ஒன்றாக “இரட்டைபாடியும், ஏழரை இலக்கமும் வென்று” என்ற தொடர்
இடம்பெறுகிறது. ராஜராஜன் தன் மகன் முதலாம் இராசேந்திரனை அனுப்பி இவ்வெற்றியைப் பெற்றான்.
முதலாம் இராசேந்திரன் தலைமையில் சென்ற சோழர் படை சத்யாசிரையன் என்ற மேலைச் சளுக்கர்
மன்னனுடன் போரிட்டு வென்று இரட்டைபாடியைக் கைப்பற்றியது இப்போரில் இராசேந்திரன் மேற்கொண்ட
பழி செயல்களை சத்தியாசிரையனின் கி.பி. ஆயிரத்தி ஏழாம் ஆண்டு காலத்திய கல்வெட்டு பின்வருமாறு
குறிப்பிடுகிறது. (சாஸ்திரி 1989: 23940): நாட்டைச் சூறையாடி பாழ்படுத்தினான். நகரங்களைக்
கொளுத்தினான். இளங்குழவிகள் அந்தணர் என்றும் பாராமல் அவர்களைக் கொன்றும் கன்னியரைக்
கைப்பற்றி மனைவியராக்கினான். அந்தணச் சாதியை அழித்தும் அளவற்ற பொருள்களைக் கவர்ந்து
கொண்டும் தன் நாட்டிற்குத் திரும்பினான்.</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">இவ்வாறு சூறையாடி வந்த செல்வத்தின் ஒரு
பகுதியைத் தஞ்சை பெருவுடையார் கோவிலுக்கு வழங்கினான். சத்தியாசிரயனின் கல்வெட்டுச்
செய்தி குறித்து தமிழ்நாட்டின் இரு பெரும் வரலாற்றுப் பேராசிரியர்கள் பின்வருமாறு கருத்துத்
தெரிவித்துள்ளனர்.</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">பகைவனின் கல்வெட்டில் காணப்படும்
பெரும் நாசவேலைகளையும் கற்பழிப்புகளையும் சோழ இளவரசன் ராஜேந்திரன் செய்திருக்கக் கூடுமா?
என்ற வினா எழுந்தாலும் . . . (நீலகண்ட சாஸ்திரி 1989: 240).<o:p></o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;">பகையரசன் நாட்டிய கல்வெட்டாகையால்
இது கூறும் செய்திகளை உண்மையென்று நம்பலாகாது. நீதியிலும், நேர்மையிலும் சிவத்தொண்டிலும்
மேம்பட்டிருந்த சோழ மன்னனின் படைகள் இத்தகையக் கொடுமைகளை மக்களுக்கு இழைத்திருக்க முடியாது.
(கே.கே. பிள்ளை 1981: 272)</span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;">இராஜேந்திரன் இத்தகைய செயல்களைச் செய்திருக்கக்கூடுமா?
என்று சாஸ்திரியார் ஐயப்பட, கே.கே. பிள்ளையோ அப்படிச் செய்திருக்க முடியாது என்று சான்றிதழ்
வழங்கிவிடுகிறார்.</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">இராஜேந்திரனின் கரந்தைச் செப்பேட்டின்
மெய்கீர்த்திப் பகுதி ” . . . யானைகள், குதிரைகள், ரத்தினங்கள், பெண்கள், குடைத்தொகுதிகள்”
ஆகியனவற்றை சத்தியாசிரயனிடமிருந்து ராஜராஜன் பறித்துக்கொண்டதாகக் குறிப்பிடுகிறது
(தந்தையாகிய இராஜராஜனால் அனுப்பப்பட்டமையால் இராஜேந்திரனின் வெற்றிச்சிறப்பு இராஜஇராஜனின் வெற்றிச் சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது).</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">இராஜேந்திரன் பட்டத்திற்கு வந்த பிறகு
(1012-1044) நிகழ்த்திய போர்களில் அவன் செயல்பாடு எத்தகையது என்பதைக் கண்டால் மேற்கூறிய
கல்வெட்டுச் செய்திகள் உண்மையா பொய்யா என்பது புலனாகும். கி.பி. 1017-18இல் இவன் நடத்திய
ஈழப் போரில் ஈழ மன்னனை இவன் வெற்றி கண்டு கைப்பற்றிய பொருள் குறித்து இவன் வெளியிட்ட
கரந்தைச் செப்பேடு (செய்யுள் 58-59) பின்வருமாறு குறிப்பிடுகிறது.</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">“அவனுடைய நாட்டையும், அவனுடைய முடியையும்,
அவனுடைய அரச பத்தினியையும், அவளுடைய முடியையும், அவனுடைய மகளையும், மற்றப் பொருட் குவியல்களையும்
. . . கைப்பற்றினான். “</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">சிங்கள நூலான மகாவம்சம் சிங்கள மன்னன்
காட்டுக்குள் ஓடிப்போனதாகவும், உடன்பாடு செய்துகொள்ளுவதாகச் சொல்லிய சோழப்படை அவனை
உயிரோடு பிடித்துக்கொண்டு, மேற்கொண்ட செயல்களை பின்வருமாறு குறிப்பிடுகிறது.</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">“தாங்கள் பிடித்த அரசனையும் தங்கள் கைக்குள்
சிக்கிய கருவூலங்களையும் உடனே சோழ மன்னனுக்கு அனுப்பிவைத்தனர். பாதுகாப்பாக பல இடங்களில்
இலங்கை முழுவதும் வைக்கப்பட்டிருந்த நினைவுச்சின்ன அறைகளை உடைத்து அவற்றிலிருந்த பொன்னாலான
உருவங்களை அவர்கள் எடுத்துச் சென்றனர். அவர்கள் கண்பட்ட இடங்களிலெல்லாம் பெளத்த சமயத்து
மடங்களை அழித்து இரத்தத்தை உறிஞ்சும் அரக்கர்களைப் போல் இலங்கையின் செல்வங்கள் அனைத்தையும்
கொள்ளையடித்தனர்” (சாஸ்திரி, 1989: 272).</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">வங்காள தேசத்து மன்னன் மகிபாலனை வென்று
யானைகள், பெண்கள், செல்லம் எல்லாவற்றையும் கைப்பற்றிக் கொண்டான் (மேலது: 281).</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">முதல் இராஜேந்திரனின் மூத்த மகனான ராஜாதிராஜன்
(1018- 1054) இலங்கையின் மீது படையெடுத்து, வீரசாலமேகன் என்ற சிங்கள மன்னனை வென்றான்.
சிங்கள மன்னன் ஓடி ஒளிய அவனது தமக்கையையும், மனைவியையும் சிறை பிடித்ததுடன் அவனது தாயின்
மூக்கை அறுத்தான் (ளு11 111; 5056).</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">ராஜாதிராஜன் சாளுக்கியர்களுடன் 1048இல்
நிகழ்த்திய போரில் கிருஷ்ணா ஆற்றங்கரையில் உள்ள பூண்டூர் என்ற ஊரில் குறுநில மன்னர்களுடன்
எண்ணற்ற பெண்களும் சிறை பிடிக்கப்பட்டனர். பூண்டூர் நகர் அழித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.
கழுதைகள் பூட்டிய ஏரால் உழுது வரகு விதைக்கப்பட்டது. மாளிகை தீக்கிரையாக்கப்பட்டது.
சோழர் கல்வெட்டுக்கள் கூறும் இச்செய்திகள் மிகைப்படுத்தப்பட்டன என்று கூறும் சாஸ்திரியார்
(1989; 346), இத்தகைய செயல்கள் சோழர் காலக் கல்வெட்டுக்களில் பரவலாக இடம்பெற்றுள்ளன
என்பதை மறந்துவிடுகிறார்.</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">1894ம் ஆண்டுக்கான கல்வெட்டு ஆண்டறிக்கையில்
(எண். 172) ஆகவமல்லன் அனுப்பிய தூதுவர்கள் இருவரில் ஒருவனுக்கு ஐங்குடுமி வைத்து ஆகவல்லமன்
என்று பெயரிட்டும் மற்றொரு தூதுவனுக்கு பெண்களுக்கு உரிய ஆடையை உடுக்க வைத்து ஆகமவல்லி
என்று பெயரிட்டும் ராஜராஜன் அனுப்பியதாக குறிப்பிடுகிறது. (சாஸ்திரி 1989: 347).</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">சாளுக்கியர்களின் பழமையான நகரான கல்யாணபுரத்தைக்
கைப்பற்றி அதை இடித்துத் தரைமட்டமாக்கி அங்கிருந்த ஒரு தூவாரபாலகர் உருவத்தைக் கொண்டு
வந்தான். தஞ்சை மாவட்டம் தாராசுரம் கோவில் இடம்பெற்ற அப்படிமத்தின் பீடத்தில் “ஸ்ரீ
விஜய ராஜேந்திரத் தேவர் கல்யாணபுரம் எரித்து கொண்டு வந்த துவார பாலர்” என்று குறிக்கப்பட்டுள்ளது.</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">முதல் குலோத்துங்கச் சோழன்
(1070—1120) இரண்டாம் கலிங்கப் போரில் (கி.பி. 1110) வென்று குதிரைகள், யானைகள், ஒட்டகங்கள்
மற்றும் செல்வங்களுடன் மகளிரையும் கைப்பற்றி வந்தான். மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி.
1178- 1218) மதுரையின் மீது படையெடுத்து வென்ற பின்னர் அவன் செய்த செயல்களாக அவனது
மெய்கீர்த்திகள் பின்வருபவனற்றைக் குறிப்பிடுகின்றன.</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">1. பெண்கள் அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டனர்.</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">2. தோற்றவர்களின் மூக்கு அறுக்கப்பட்டது.</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">3. பாண்டியனின் கூட மண்டபத்தை (முடி
சூட்டும் மண்டபம்) இடித்து கழுதை ஏரைப் பூட்டி உழுதனர்.</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">திருவாரூர்த் தலைவனாக இருந்த கங்கை கொண்டான்
உத்தம சோழராயனின் படையதிகாரியான கூத்தன் கணபதி என்பவனை “பகைவர்களின் மனைவியர்க்குக்
கணவன்” என்று ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது (ARE 1913 ப. 97).</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">கி.பி. 1219இல் சோழ நாட்டின் மீது படையெடுத்த
முதல் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1216 -1238) தனது வீரச்செயல்களை, செய்யுள் வடிவிலான
மெய்கீர்த்தியாக கல்வெட்டில் பொறித்துள்ளான் (I.P.S; 290, 323) புதுக்கோட்டை மாவட்டம்
குடுமியான் மலையில் உள்ள அக்கல்வெட்டின் உரைநடை வடிவம் வருமாறு:</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">கொடுங் கோபமுடைய குதிரைகளையும், யானைகளையும்
செலுத்திச் சென்று சோழர்களின் தஞ்சை நகரையும் செந்தழலிட்டுக் கொளுத்தினான்.</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">அழகிய குவளை மலர்களும், நீல மலர்களும்
தம் அழகை இழக்கும்படி குளங்களையும் ஆறுகளையும் கலக்கினான்.</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">கூடம், மதில், கோபுரம், ஆடல் நிகழும்
அரங்கங்கள், மாட மாளிகைகள், கருவூலங்கள் ஆகியனவற்றை இடித்துத் தள்ளினான்.<o:p></o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">தன்னை வந்து அடிபணியாத பகை மன்னர்களின்
மனைவியர்கள் அழுத கண்ணீர் ஆறாக ஓடும்படிச் செய்தான்.<o:p></o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;"><o:p> </o:p></span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;">பகைவரது நிலத்தை, கழுதை பூட்டிய ஏர்
கொண்டு உழுது வெள்வரகை விதைத்தான். சோழர் தலைநகராக விளங்கிய முடிகொண்ட சோழபுரம் சென்று
“விஜயாபிஷேகம்” எனனும் சடங்கை இவன் செய்தான். அதன் பொருட்டு சோழ அரசியும், அந்தப்புரத்துப்
பெண்களும் தண்ணீர்க்குடம் முதலிய மங்கலப் பொருள்களை சுமந்து வரும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர்
(சாஸ்திரி, மேலது, 579).</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;"> </span></p><p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;">பல்லவ மரபைச் சேர்ந்த கோப்பொருஞ்சிங்கன்
என்பவன் வைதீக சமயத்தைச் சேர்ந்தவன். சிறந்த சிவ பக்தன். சிதம்பரம் நடராசர் மீது பெரும்பற்று
உடையவன் என்று இவனது வரலாற்றை எழுதிய எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் (1965: 117) குறிப்பிடுகிறார்.</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">சைவர்களின் முக்கிய புண்ணியத்தலங்களுள்
ஒன்றான சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவிலில் தெற்குக் கோபுரம் கட்ட தானம் செய்துள்ளான்.
இதனால் இவனது பட்டப் பெயர் ஒன்றின் பெயரால் “சொக்கசீயன் திருநிலை எழுகோபுரம்” என்று
இக்கோபுரம் அழைக்கப்பட்டது.</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">சிதம்பரத்தின் கீழைக் கோபுரத்தை எழுநிலைக்
கோபுரமாக உயர்த்திக் கட்டினான். தன் பகை மன்னர்களின் தங்கக் கிரீடங்களை உருக்கி இக்கோபுரத்தின்
தங்கக் கலயங்களைச் செய்தான். திருவண்ணாமலை, காஞ்சி ஏகாம்பரநாதன் கோவில், திருவீரட்டாணம்,
ஜெம்புகேஸ்வரம், மதுரை, காளகஸ்தி ஆகிய சிவத்தலங்களில் திருப்பணிகளும் தானங்களும் செய்தான்.</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">“திருப்பதிகளெல்லாம் கும்பிட்டருளி தேவதானங்களும்
திருவிடையாட்டங்களும் இறையிவி விட்டருளி திருப்பணியெல்லாம் செய்தருளி” என்று ஆக்கூர்
சாசனம் (SI XII; 129) இவனது பக்தி உள்ளத்தைச் சுட்டிக் காட்டும்.</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">இத்தகைய சிவபக்தனான கோப்பெருஞ்சிங்கனுக்குரிய
பட்டயங்களுள் “பரராஜ அந்தப்புர பந்திகாரன்” என்பதும் ஒன்று என இவனது ஆற்றூர் சாசனம்
கூறும் (SII XII; 120). பிற மன்னர்களின் அந்தப்புரத்தை சிறைபிடிப்பவன் என்பதே இப்பட்டத்தின்
பொருளாகும்.</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">தன் பகை நாடான சோழ நாட்டின் மீது படையெடுத்த
இக்கோப்பெருஞ்சிங்கன் மூன்றாம் ராஜராஜனை சிறைபிடித்தான். கோப்பெருஞ்சிங்கனுடன் போரிட்ட
போசல நாட்டு மன்னன் மூன்றாம் ராஜராஜனை சிறைமீட்டான். இவ்விரு நிகழ்வுகளையும் ‘திருவய்ந்திரபுரக்
கல்வெட்டு’ குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டில் கோப்பொருஞ்சிங்கன் சோழநாட்டுக் கோவில்களை
இடித்த செயலும் அவனுடன் போரிட்டு வென்ற போசல நாட்டு மன்னன் செய்த கொடுஞ்செயல்களும்
இடம் பெற்றுள்ளன. அக்கல்வெட்டு வருமாறு: (கல்வெட்டு வரிகளில் அழுத்தம் எமது)</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">1. ஸ்வதி ஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்திகள்
ஸ்ரீ ராஜராஜதேவர்க்கு</span></p><p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;">யாண்டு 15 ஆவதின் எதிராம் ஆண்டு பிரதாப
சக்கரவர்த்தி</span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">ஹோய்ஸண ஸ்ரீ வீரநரசிம்மதேவன் சோழசக்கரவர்த்தியைக்<o:p></o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;"><o:p> </o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">2. கோப்பெருஞ்சிங்கன் சேந்தமங்கலத்தில்
பிடித்துக் கொடு இருந்து<o:p></o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">தன் படையை இட்டு ராஜ்யத்தை அழித்துத்
தேவாலயங்களும்<o:p></o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">விஷ்ணு ஸ்தானங்களும் அழிகையிலே இப்படித்தேவன்
கேட்டரு<o:p></o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;"><o:p> </o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">3. ளி, சோழமண்ல பிரதிஷ்டாசாரியன் என்னும்
கீர்த்தி<o:p></o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">நிலை நிறுத்தி அல்லது எக்காளம் ஊதுவதில்லை
என்று தோர<o:p></o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">சமுத்திரத்தினின்றும் எழுந்துவந்து,
மகாராஜ்ய நிர்மூலமாடி<o:p></o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">இவனையும் இவன் பெண்டு பண்டாரமும் கைக்கொண்டு<o:p></o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;"><o:p> </o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">4.பாச்சூரிலே விட்டு கோப்பெருஞ்சிங்கன்
தேசமும் அழித்துச்<o:p></o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">சோழச் சக்கரவர்த்தியையும் எழுந்தருளிவித்துக்கொடு
என்று<o:p></o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">தேவன் திருவுளமாய் ஏவ, விடை கொண்டு எழுந்த
ஸ்வஸ்தி<o:p></o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">ஸ்ரீமான் மகாபிரதானி பிரம விசுவாசி<o:p></o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;"><o:p> </o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">5.தண்டினகோபன் ஜகதொப்பகண்டன் அப்பண தன்னக்க<o:p></o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">னும், சமுத்திரகோபய்ய தன்னக்கனும் கோப்பெருஞ்சிங்கன்<o:p></o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">இருந்த எள்ளேரியும், கள்ளியூர் மூலையும்,
சோழகோன்<o:p></o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">இருந்த தொழுதகையூரும் அஷ்த்து<o:p></o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;"><o:p> </o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">6.வேந்தன் முதலிகளில் வீரகங்க நாடாள்வான்,
சீனத்தரையன்<o:p></o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">ஈழத்து ராஜா பராக்கிரமபாகு உள்ளிட்ட
முதலி 4 பேரை<o:p></o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">யும் கொன்று இவர்கள் குதிரையும் கைக்கொண்டு,
கொல்லி<o:p></o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">சோழகோன் குதிரைகளையும் கைக்கொண்டு, பொன்<o:p></o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;"><o:p> </o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">7. னம்பல தேவனையும் கும்பிட்டு எதுத்துவந்த
தொண்டைமா<o:p></o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">நல்லூர் உள்ளிட்ட தமக்கூர்களும் அழித்து
. . . .<o:p></o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">வெட்டிவித்து திருப்பாதிரிப்பூலியூரிலே
வீற்றிருந்து,<o:p></o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">திருவதிகை திருவெக்கரை உள்ளிட்ட ஊர்<o:p></o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;"><o:p> </o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">8. களும் அழித்து, வாரணவாசி ஆற்றுக்குத்
தெற்கு, சேந்த<o:p></o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">மங்கலத்துக்கும் கிழக்கு கடலிலே அழியூர்களும்,
குடிக்கால்<o:p></o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">களும் சுட்டும் அழித்தும் பெண்டுகளைப்
பிடித்தும் கொள்ளை<o:p></o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">கொண்டும் சேந்தமங்கலத்தே எடுத்து<o:p></o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;"><o:p> </o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">9. விடப்போகிற அளவிலே கோப்பெருஞ்சிங்கன்
குழைந்து<o:p></o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">சோழ சக்கரவர்த்தியை எழுந்தருளிவிக்கக்
கடவதாக<o:p></o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">தேவனுக்கு விண்ணப்பம் செய்ய, இவர் விட்டு,
நமக்கும்<o:p></o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">ஆள்வரக் காட்டுகையிலே, சோழ சக்கரவர்த்தியை<o:p></o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">எழுந்தருளுவித்து கொடு போந்து ராஜ்யத்தே
புகவிட்டது உ”</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">சோழ மன்னர்கள் பாண்டிய நாட்டின் மீதும்
இலங்கையின் மீதும் படையெடுத்தபோது பகை மன்னர்களின் மகன், மனைவி, தாய் ஆகியோரின் மூக்கை
அறுத்ததை ஏற்கனவே கண்டோம். மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் (1623-1659) காலத்தில் பகை
நாட்டுக் குடிமக்களின் மூக்கை அறுக்கும் பழக்கமாக இது வளர்ச்சியுற்றது.</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">கந்திருவ நரசராஜன் (1638-1659) என்ற
மைசூர் மன்னன் திருமலை நாயக்கருடன் போரிட, தன் படையை அனுப்பினான். அப்படை மதுரை நோக்கி
வரும்போது வழியிலுள்ள ஊர்களை எல்லாம் கொள்ளையிட்டும், நெருப்பிட்டும் அழித்தது. ஆண்கள்,
பெண்கள், குழந்தைகள் என்ற வேறுபாடு இன்றி எதிர்பட்டோர் மூக்குகளையெல்லாம் அறுத்தது.
அறுபட்ட மூக்குகள் சாக்கு மூட்டைகளில் மைசூருக்குச் சென்றன. நாட்டுத் துரோகிகளுக்கு
வழங்கப்பட்ட தண்டனையாகவே மூக்கறுத்தல் இருந்தது.</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">மைசூர் மன்னன் எதிரி நாட்டு மக்களுக்கு
வழங்கும் தண்டனையாக இதை மாற்றினான். மூக்கறுப்பதற்கென்றே ஓர் இரும்புக்கம்பியை மைசூர்ப்படை
வீரர்கள் வைத்திருந்தனர். இக்கருவியின் துணையால் மூக்கையும் மேலுதட்டையும் அறுத்துவிடுவார்கள்.
அறுத்த மூக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது. மீசை உள்ள
மேலுதட்டுக்குப் பரிசு அதிகம் (சத்தியநாதய்யர் 1956; 50-52).</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">இதற்குப் பழிவாங்கும் முறையில் தன்
தம்பி குமாரமுத்துவின் தலைமையில் ஒரு படையை திருமலை நாயக்கர் மைசூருக்கு அனுப்பினார்.
மைசூர்ப் படைவீரர்கள் தமிழ்நாட்டில் நிகழ்த்திய மூக்கறுத்தலை மைசூரில் நாயக்கர் படை
மேற்கொண்டது. இறுதியில் மைசூர் மன்னனைக் கைது செய்து அவன் மூக்கையும் அறுத்தனர். (மேலது)</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">ஃரையர் என்ற ஆங்கில அறுவை மருத்துவர்
1673க்கும் 1681க்கும் இடைப்பட்ட காலத்தில் மைசூர்ப்பகுதியில் சுற்றுப்பயணம் செய்துள்ளார்.
மூக்கறுக்கும் செயல் குறித்து அவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். "ஸ்ரீரங்கப்பட்டணத்தின்
மன்னர் தன் படைவீரர்களுக்கு, பகைவர்களின் மூக்கை அறுக்கும் பயிற்சி கொடுத்துள்ளார்.
ஒரு கோணிப்பை அளவிலான மூக்குகள் மன்னரின் காலை உணவுக்கு வழங்கப்பட்டன. உயிர்களைக் கொல்வது
அவரது சமய நம்பிக்கைக்கு மாறானது என்பதால் அவர் இவ்வாறு செய்கிறாராம்" (மேலது).</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">கி.பி. எட்டாம் நூற்றாண்டில் ஆதிசங்கரரால்
நிறுவப்பட்ட சிருங்கேரி மடம் கருநாடகத்தில் உள்ளது. பரசுராமபாகு என்ற மராட்டிய இந்துத்
தளபதி கருநாடகத்தின் மீது படையெடுத்தபோது இந்து மடம் என்று சிருங்கேரி மடத்தைக் கொள்ளையடிக்காமல்
விட்டுவிடவில்லை.</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">60 லட்சம் பெறுமானம் உள்ள அணிகலன்கள்
யானை, குதிரை, பல்லக்கு ஆகியவற்றை அங்கிருந்து கொள்ளையடித்தான். சிருங்கேரி மடாதிபதிகள்
வணங்கிவந்த சாரதா தேவியின் விக்ரகத்தைப் புரட்டிப் போட்டான். பல பிராமணக் குருக்களைக்
கொன்றான். உயிருக்குப் பயந்து போய் சங்கராச்சாரியார் காஞ்சிலா என்ற இடத்திற்கு ஓடி
ஒளிந்தார். அங்கிருந்தபடியே மைசூரில் இருந்த திப்பு சுல்தானுக்கு உதவி வேண்டி கடிதம்
எழுதினார். திப்புவும் சாரதா பீடத்தை மீண்டும் நிறுவ பணமும் தானியங்களும் தந்துதவினான்.
சாரதா பீடத்தைக் காக்க படைகளையும் அனுப்பினான். இச்செய்திகளை சிருங்கேரி சாரதா மடத்திலுள்ள
ஆவணங்களால் அறிகிறோம் (சிவண்ணா, 1999 : 4142).</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">தஞ்சையை ஆண்ட மராத்திய இந்து மன்னன்
ஹாஜி (16851712) ராணி மங்கம்மாளின் ஆளுகையில் இருந்த திருச்சி பகுதிக்கு தன் படைகளை
அனுப்பிக் கொள்ளையடித்தான்.</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">ஆர்.எஸ்.எஸ். நிறுவனரான ஹெட்கேவார் காலமான
பிறகு அவரையடுத்து அதன் தலைவராக விளங்கியவர் கோல்வல்கர். ஆர்.எஸ்.எஸ்.க்காரர்களால்
ஸ்ரீகுருஜி என்றழைக்கப்படும் அவர் இந்தியாவின்மீது படையெடுத்த முஸ்லீம் படையெடுப்பாளர்கள்
குறித்து:</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;"> </span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;">அந்தப் படையெடுப்பாளர்கள் நமது நாட்டுப்
பெண்கள் பலரைக் கற்பழித்தனர். நமது கோவில்களையும், யாத்திரைத் தலங்களையும் தகர்த்துத்
தரைமட்டமாக்கியவர்கள். சுகபோகங்களைத் தருவதாக ஆசை காட்டியோ அல்லது வாள்முனையில் மிரட்டியோ
பெரும் எண்ணிக்கையினரைத் தமது மதத்திற்கு மாற்றினார்கள் - </span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;">என்று எழுதியுள்ளார் (கோல்வல்கர்,
1992 : 8). </span></p><p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;">‘ஸ்ரீ குருஜி’ குறிப்பிடும் கொடுமைகள் இந்திய நாட்டு வரலாற்றில் புதிய
செய்திகளல்ல என்பதை இதுவரை நாம் பார்த்த வரலாற்றுச் சான்றுகள் உணர்த்துகின்றன. இஸ்லாமிய
படையெடுப்பாளர்கள் செய்த கொடுஞ்செயல்களை சைவ, வைணவ, பெளத்த, சமணத்தைப் பின்பற்றிய இந்திய
மன்னர்களும் நிகழ்த்தியுள்ளனர். இதனடிப்படையில் சைவமும், வைணவமும் கொள்ளையடித்தல்,
கோவிலிடித்தல், பெண்களைக் கவர்தல் ஆகிய சமூக விரோதச் செயல்களை வலியுறுத்துகின்றன என்று
பொதுப்படையாக கூறிவிட முடியுமா? படையெடுப்பு என்ற பெயரில் கொடூரமான, அநாகரிகமான செயல்களை
மேற்கொள்வோர் மதங்கடந்து நிற்பவர்கள் என்பதுதான் உண்மை. அவர்களுக்கு வேண்டுவன எல்லாம்
தங்கமும், வெள்ளியும், வெண்கலமும்தான். முதலாம் இராஜேந்திரன் தனது வடஇந்தியப் படையெடுப்பின்
போது வடஇந்தியாவிலுள்ள மதுரா என்ற நகரைக் கைப்பற்றினான். இந்நகர்தான் கஜினி முகம்மதுவின்
தாக்குதல்களுக்கு அடிக்கடி ஆளான நகரமாகும். இது குறித்து கே.கே. பிள்ளை (1981;
278, 279) பின்வருமாறு அவதானிப்பார்.</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">"அந்நகர் அக்காலத்தில் செல்வமும் புகழும்
பொதிந்து காணப்பட்டதால் அந்நகரின் மேல் கஜினி முகம்மது பன்முறை தாக்குதல் தொடுத்தான்.
பன்முறை அதைக் கொள்ளையிட்டான். இவ்வட மதுரையை இராசேந்திரனும் வென்று கைப்பற்றினான்.
இவ்விரு மன்னரின் போர்களுக்கிடையே ஒரு தொடர்பு காண விழைவதில் வழுவேதுமில்லை."</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">தனது இலங்கைப் படையெடுப்பின்போது இலங்கைக்கு
ராஜேந்திரன் நெருப்பூட்டியதை அவனது திருவாலங்காட்டுச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.
மேலும் ஈழ நாட்டு கிராமங்களை தஞ்சைப் பெருவுடையார் கோவிலுக்குத் தானமாக ராசேந்திரன்
வழங்கினான். பொலனறுவை என்ற ஊரை, ஜனநாதமங்கலம் என்று பெயர் மாற்றியதுடன் அங்கு சிவன்
கோவில் ஒன்றைக் கட்டுவித்தான். ஆதிக்கத்தை நிலைநாட்டவும் பொருளைக் கவரவும் மன்னர்கள்
நிகழ்த்தும் போர்களில் அறநெறிகள் பார்க்கப்படுவதில்லை என்பதே வரலாற்று உண்மை. இவ்வுண்மைக்கு
கோரி முகம்மது, கஜினி முகம்மது, மாலிக்கபூர் போன்ற இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் மட்டுமின்றி
இராஜராஜன், இராஜேந்திரன் என இந்து மன்னர்களும் எடுத்துக்காட்டாக அமைகின்றனர். இதனால்தான்
ஜார்ஜ் ஸ்பன்சர் என்பவர் சோழ மன்னர்களின் இலங்கைப் படையெடுப்பு குறித்து, தாம் எழுதிய
கட்டுரைக்கு ‘The Politics of Plunder’, ‘The Cholas in the 11th Century Ceylon’
(அரசியல் கொள்ளை பதினோறாவது நூற்றாண்டு இலங்கையில் சோழர்கள்) என்று தலைப்பிட்டுள்ளார்.</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">சோழ மன்னர்களின் இலங்கைப் படையெடுப்பை
வீரச்செயல் என்று தமிழர்கள் கருதினால் சோழ மன்னர்கள் நிகழ்த்திய கொள்ளையென்று சிங்களவர்
அதைக் கருதுகின்றனர். உணர்ச்சி வயப்படாமல் சிந்தித்தால் அவ்வாறு அவர்கள் கருதுவதில்
நியாயம் உள்ளது என்பது புலனாகும். அதே நேரத்தில் இலங்கையில் வாழும் இன்றைய பெளத்தர்கள்
சோழர்களின் படையெடுப்பை தமிழ்நாட்டுச் சைவர்களின் படையெடுப்பு என்று சமய வண்ணம் பூசி
இன்றைய இலங்கைத் தமிழ்ச் சைவர்களை வெறுப்புடன் நோக்கினால் அது எந்த அளவு தவறானதோ, அந்த
அளவு தவறானது கஜினி முகம்மது, கோரி முகம்மது ஆகியோரின் படையெடுப்பை இஸ்லாமியப் படையெடுப்பு
என்று கருதுவதும், அப்படையெடுப்பாளர்களின் வாரிசாக இன்றைய இஸ்லாமியர்களை நோக்குவதும்,
படையெடுப்பு என்ற பெயரால் கொள்ளையடிக்கும் மன்னர்கள் எதாவது ஒரு மதத்தைச் சார்ந்துதான்
இருப்பார்கள். இது இயற்கையானது. இதற்கு இஸ்லாமிய சமயம் சார்ந்த படையெடுப்பாளர்களும்
விதிவிலக்கல்ல.</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><b style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 16px;"><span style="color: #2b00fe;"><br /></span></b></p><p class="MsoNoSpacing" style="text-align: justify;"><b style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; font-size: 16px;"><span style="color: #2b00fe;">தட்ஸ்தமிழ்.காம் இதழ்வழியே வந்த </span></b><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;"><b><span style="color: #2b00fe;">புதுவிசை மார்ச் 2005 இணைய இதழ்</span></b><o:p></o:p></span></p><p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;"><b><span style="color: #2b00fe;"> </span></b></span></p>புதுவிசைhttp://www.blogger.com/profile/09276344793619872435noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8111967010823738396.post-11295148074765127062021-11-09T05:49:00.002-08:002021-11-09T05:49:23.623-08:00குறவர் பழங்குடி : போராட்டத்தில் அலைவுறும் வாழ்வு - மணிகோ.பன்னீர்செல்வம்<p style="text-align: center;"> <span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; text-align: justify;">பண்டைய
தமிழ்த்திணைப் பாவகைபாட்டிற்குரிய குறிஞ்சிநில மக்களான குறவர்</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; text-align: justify;"> </span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; text-align: justify;">பழங்குடிகள் </span><i style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; text-align: justify;">(kuravar Tribe) </i><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; text-align: justify;">பிற சமூக உழைக்கும்
மக்கள் படும் பொதுவான சிக்கல்களையும் சந்திக்கின்றனர். தங்களுக்கேயுரிய தனித்துவமான
சிக்கல்களையும் சந்தித்து வருகின்றனர்.</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; text-align: justify;"> </span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif"; text-align: justify;">இச்சிக்கலுக்கு
எதிராக நீண்டகாலம் போராடியும் வருகின்றனர். குறவர் பழங்குடிகளின் தனித்துவமான சிக்கலைப்
பகுத்து, அதை விவாதித்து அவர்கள் போராடிவரும் நிலை குறித்த இக்கட்டுரை புதுவிசை 40ஆவது இதழில் வெளியானது. </span></p><p style="text-align: center;"><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif";">கட்டுரையாளர் </span><span style="text-align: left;"><span style="font-family: Arial Unicode MS, sans-serif;">மணிகோ.பன்னீர்செல்வம், </span></span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif";">உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் </span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif";">உதவிப்பேராசிரியராக பணியாற்றுபவர். </span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif";"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif";"><b><span style="color: #cc0000;"><br /></span></b></span></p><p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif";"><b><span style="color: #cc0000;">அ.பழங்குடி
/ இந்து- குறவன் (SC) சான்றிதழ் பெறுவதில் சிக்கல்</span></b></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif";">பிரிட்டிஷ்
ஆட்சிக்காலத்தில் தான் மக்கள்தொகை கணக்கெடுப்பு சாதிவாரியாக மேற்கொள்ளப்பட்டது. இதில்
பல குறைபாடுகள் இருப்பதை விமரிசனம் செய்யலாம். இருந்தபோதிலும் பிற்காலத்தில் பட்டியல்
சாதியினர், பட்டியல் பழங்குடியினர் பட்டியலைத் தயாரிப்பதற்கு விடுதலைப் பெற்ற இந்திய
அரசுக்கு இதுதான் உதவியாக இருந்தது. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பட்டியல்
1950இல் வெளியிடப்பட்டது. அதற்கு பிறகு இன்றுவரையிலும் கூட பல சாதிகள் பட்டியலில் சேர்த்தும்
சில சாதிகளை நீக்கியும் அவ்வப்போது அரசு பட்டியலை மாற்றி வந்துள்ளது. ஆனால் நாடு முழுவதும்
தாழ்த்தப்பட்டோர் (SC)</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif";"> </span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif";">மற்றும் பழங்குடியினர்
(ST) பட்டியலில் பல்வேறுதரப்பினர் தங்களை சேர்க்க வேண்டுமென்ற குரல் தொடர்ந்து எழுப்பப்பட்டு
வருகிறது.</span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif";">தாழ்த்தப்பட்டோர்
மற்றும் பழங்குடியினர் பட்டியலில் ஒரு சாதியை சேர்க்கவோ, நீக்கவோ மத்திய அரசுக்கு மட்டுமே
அதிகாரமுண்டு. மாநில அரசுகள் பரிந்துரை மட்டும் செய்யலாம். தமிழக அரசு, சில இனங்களைப்
பழங்குடிபட்டியலில் சேர்க்க வேண்டுமென்று மத்திய அரசிடம் பரிந்துரை செய்து ஏறத்தாழ
30 ஆண்டுகள் ஆகி யும் கிடப்பிலுள்ளது. இத்தகைய பிரச்சனையில் மத்திய அரசு மிகுந்த அலட்சியத்துடன்
பொறுப்பற்ற முறையிலும் நடந்துகொள்கிறது என்பதை உறுதியாகச் சொல்லமுடியும்.</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif";"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif";">இச்சூழலின்
பின்னணியில் குறவர் பழங்குடிகளும் சாதிச்சான்றிதழ் சிக்கலை எதிர்கொள்கின்றனர். குறவர்
பழங்குடி சான்றிதழ் கேட்டால், ‘எந்த மலையில் நீங்கள் வாழ்கிறீர்கள்?’ என்று கேட்டும்,
சில பகுதிகளில் குறவன் தாழ்த்தப்பட்டோர் சான்றிதழ்கூட கிடைக்காமல் அலைக்கழிப்புக்குள்ளாகி
வருகின்றனர். குறவர் சமூகமானது 27 பிரிவினராகப் பகுக்கப்பட்டு அடையாளப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
மலைக்குறவன் என்றால் பழங்குடியினர் (ST) என்றும் குறவன் என்றால் தாழ்த்தப் பட்டோர்
(SC) என்றும் குறவர் என்றால் கண்காணிக்கப்பட்ட சீர்மரபினர் என்றும் தமிழகத்தின் அனைத்து
பட்டியல்களிலும் வைக்கப்பட்டுள்ளது தான் குறவன் உள்ளிட்ட பிரிவினர் சந்திக்கும் சிக்கலில்
மிகப்பெரிய சிக்கலாக உள்ளது.</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif";"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif";">இதற்கெதிராக
குறவர்பழங்குடி இயக்கத்தவர் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். குறவர் பழங்குடிகளைத்
தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவேண்டுமென்ற ஒரு தவறான பரிந்துரையை 1989ஆம் ஆண்டு
தமிழக அரசு அனுப்பியது. இப் பரிந்துரைகள் 2002ஆம் ஆண்டு மத்திய அரசு தமிழக அரசுக்கு
திருப்பி அனுப்பிவிட் டது. இந்த பரிந்துரைகள் மானிடவியல் துறை வல்லுநர்களின் ஆய்வறிக்கையை
அடிப்படையாக கொண்டு தமிழக அரசால் அனுப்பபடவில்லை. எனவே, மேற்படி இனமக்களின் தற்போதைய
வாழ்க்கைச் சூழல் சம்பந்தமாக ஆய்வினை மேற்கொண்டு<span style="mso-spacerun: yes;">
</span>அதன் அடிப்படையில் பரிந்துரைக்கு அறிவுறுத்தியது மத்திய அரசு.</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif";"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif";">இதற்கு
மத்திய அரசு எடுத்துக்கொண்ட காலம் 25ஆண்டுகள் என்பதை கவனத்தில் கொண்டால் மத்திய அரசின்
அலட்சியத்தையும் மாநில அரசின் பொறுப்பற்ற தன்மையையும் புரிந்து கொள்ளமுடியும். மத்திய
அரசின் அறிவுரையை ஏற்று, ஊட்டியிலுள்ள தமிழ்நாடு பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்திடம்
ஆய்வு மேற்கொள்ளும் பொறுப்பை தமிழக அரசு 2002இல் ஒப்படைத்தது. அவ்வமைப்பு 2004ஆம் ஆண்டு
ஆய்வறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. பெறப்பட்ட இந்த ஆய்வறிக்கையை அப்போது தமிழக முதல்வராக
இருந்த ஜெயலலிதா இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யவில்லை.
பலமுறை வற்புறத்திய பிறகும், சட்டமன்றத்தில் சுட்டிக்காட்டிய போதும் ஏதும் நடக்கவில்லை.</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif";"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif";">உடனே,
2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக ‘தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம்’உள்ளிட்ட
பழங்குடி மக்களின் அமைப்புகள் திமுக தலைவர் கருணாநிதியிடம் மேற்படி கோரிக்கையை கவனத்திற்கு
கொண்டு சென்றன. முதல்வர் பொறுப்பேற்ற 2006 ஜூலை மாதம் 13ம் தேதி முதல்வரை (கருணாநிதி)
சந்தித்து வற்புறுத்தின. 14.08.2006 அன்று குறுமன்ஸ் இன உட்பிரிவைத் தவிர மற்ற இனத்தவரை
பரிந்துரை செய்து தமிழக அரசு, மத்திய அரசுக்கு அனுப்பியது. 21.11.2006 அன்று டில்லி
வரை சென்று கண்காணித்தபோதுதான் மேற்படி பரிந்துரைகள் பழங்குடியினர் நலத்துறைக்குப்
பதிலாக சமூகநீதி- அதிகாரமளித்தல் துறைக்கு தவறாக அனுப்பப்பட்டுள்ளது தெரியவந்தது. இதை
தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து 07.12.2006 அன்று முறையாக மத்திய அரசின்
பழங் குடியினர் நலத்துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif";"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif";">மலைவாழ்
மக்கள் சங்கத்தார் 11.05.2007 அன்று பெல்லார்மின் எம்.பி.யுடன் சென்று இந்தியப் பதிவாளரையும்,
பழங்குடியினர் நலத்துறை செயலாரையும் சந்தித்தனர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர்
என்.வரதராஜனும் முதல்வரைச் சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்திய பிறகு குறவன் மற்றும்
27 பிரிவினரை பழங்குடி பட்டியலில் சேர்க்க 23.10.2008 அன்று பரிந்துரைக்கப்பட்டது.
இவ்விடத்து ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். பழங்குடி பட்டியலில் சேர்ப்பதற்கு பல தடைகளைத்
தாண்ட வேண்டியுள்ளது. முதலில் இந்திய பதிவாளர் தனது ஒப்புதலைத் தரவேண்டும். அடுத்து
பழங்குடியினர் தேசிய ஆணையம் ஒப்புதல் அளிக்கவேண்டும். அதற்கடுத்து பழங் குடியினர் நலத்துறை
அங்கீகரிக்க வேண்டும். பிறகு மத்திய அமைச்சரவை, இறுதியாக குடியரசுத் தலைவர் ஒப்புதல்
என ஏறி இறங்கவேண்டும் என்பதே அந்தத் தடைகள்.</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif";"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif";">2009
ஆகஸ்ட் 4ஆம் தேதி மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் காந்திலால் புரியா, பழங்குடியினர்
தேசிய ஆணையத்தின் துணைத்தலைவர் மோரிஸ் குஜோர், இந்தியப் பதிவாளரின் நேர்முக உதவியாளர்
டாக்டர் சந்திர மவுலி ஆகியோரை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர்
பெ.சண்முகம், மாநிலத் துணைத்தலைவர் ராசப்பன் குறுமன்ஸ் பழங்குடிமக்கள் சங்க பொதுச்செயலாளர்
வீரபத்ரன், துணைப் பொதுச்செயலாளர் வீரபத்ர சேகர், தமிழ்நாடு குறவன் முன்னேற்ற சங்கத்தின்
மாநில அமைப்பாளர் ஏ.வி.சண்முகம், வேலூர் மாவட்ட தலைவர் ஜி.பெருமாள், பழங்குடி மக்கள்
மறுமலர்ச்சி சங்கத்தின் தலைவர் தணிகாசலம் ஆகியோர் சந்தித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. விஜயராகவன் உடன் வந்து உதவினார். <span style="font-size: 13.3333px;"><i> (</i></span></span><i><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif";">பழங்குடிப் பட்டியல்: இன்னும் எத்தனை தடைகள்? பி.சண்முகம், தீக்கதிர், 13.8.2009, மதுரை)</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif";"> </span></i></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif";">ஆனாலும்
நீண்டகாலமாக ‘குறவர்’ இனத்தவர்க்கு பழங்குடி மக்கள் என்னும் அங்கீகாரம் நிலுவையிலேயே
உள்ளது. மார்க்சிஸ்டு கட்சி, மலை வாழ்மக்கள் சங்கம், தமிழ்நாடு குறவர் பழங்குடிமக்கள்
சங்கம் போன்ற பல அமைப்புகள் குறவர் பழங்குடிகளை, பழங்குடிப்பட்டியலில் சேர்க்க எவ்வளவோ
முயன்ற போதும் அது நிறைவேறவில்லை. இச்சூழ்நிலையில் ‘தமிழ்நாடு’ குறவரின் அமைப்புகளின்
கூட்டுக்குழு முதல்வர்க்கு மனுவொன்றை அளித்துள்ளது. இக்கூட்டுக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக
திரு.காவடி எம்.சுந்தரராஜன், செயலராகத் திரு.குடந்தை முருகேசன் ஆகியோர் செயல்படுகின்றனர்.
இக்குழு சில பரிந்துரைகளை அளித்துள்ள நிலையில் தொடர்ந்து குறவரின் போராட்டத்தில் புதிய
கண்ணோட்டத்தை வழங்கியுள்ளது. அக்கண்ணோட்டம் பின்வருமாறு:<o:p></o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif";">1. மலைவாழ்
பழங்குடியான குறவர், சித்தனார் என்ற பெயரில் தாழ்த்தப்பட்டோர் பட்டியலிலும் (வ.எண்:36)
மலைக்குறவன் பழங்குடிப்பட்டியலிலும் (வ.எண்:23) தமிழறியா ஆங்கிலேயர் செய்தொழில், வசிப்பிடத்தைக்
கொண்ட பேச்சுவழக்காய் ‘கொறவர்’ என்று 27 அழைப்புப் பெயரில் தனித்தனிச் சாதியாய் மிகவும்
பிற்பட்டோர், சீர்மரபினர் பட்டியலிலும் மிகையாகச் சேர்க்கப்பட்டுள்ளது (வ.எண்:1,
2, 8, 10, 13, 16, 18,<span style="mso-spacerun: yes;"> </span>19, 23, 25, 30,
31, 33, 35, 37, 44, 50, 51, 52, 56, 59, 60, 62, 63, 66, 67) குறவர் இனமாகும். இதனால்,
பல்வேறு இடங்களில் குறவன் மக்கள் தாழ்த்தப் பட்டோர், பழங்குடியினர் சான்றிதழ் பெறமுடியவில்லை.</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif";"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif";">2. குறவரினத்தில்
இருக்கும் இதே குழப்பம் பறையர் சமூகத்தைச் சுட்டுவதற்கும் இருந்தது. பறையர் அழைப்புப்
பெயரான ‘வெங்கனூர் ஆதிதிராவிடர்’, ‘வேப்பூர் பறையர்’ என்பதே அது. இப்பறையர் என்பார்
DNC பட்டியலில் இருந்து பின்னர் நீக்கப்பட்டனர், ஆதிதிராவிடர் (SC) எனச் சான்றிதழும்
வழங்கப்பட்டது. (அரசாணை எண்: 866, 29.3.1985) சமூக நலத்துறையும் ஆணை பிறப்பித்தது.</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif";"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif";">3. வெங்கனூர்
பறையர், வேப்பூர் பறையர் இரண்டு அழைப்புப்பெயரும் ஆதிதிராவிடர். பறையர் அன்றி வேறு
சாதியல்ல. அவற்றை சீர்மரபினர் பட்டியலில் இருந்து நீக்கப் பரிந்துரைத்த அதே காலத்தில்தான்
1985ஆம் ஆண்டு தமிழ்நாடு இரண்டாம் பிற்படுத்தப்பட்ட ஆணையம் (அம்பாசங்கர்<span style="mso-spacerun: yes;"> </span>ஆணையம்) குறவரின் 27 வகை அழைப்பு பெயரையும் தாழ்த்தப்பட்டோர்
பட்டியலில் உள்ள குறவனின் இணைப்பெயர் தாம் என்னும் சீர்மரபினர் பட்டியலிலுள்ள 27வகை
‘கொறவர்’ பெயர்களையும் நீக்கவும் பரிந்துரை செய்தது.</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif";"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif";">4. அம்பாசங்கர்
ஆணையத்தின் மீது முடிவெடுத்து பறையர் அழைப்புப்பெயரை நீக்கிய தமிழக அரசு, அதற்கான சமூக
நலத்துறை அ.எ:1564 நாள்: 30.07.85ஐ வெளியிட்டது. ஆனால் குறவர் இனத்தின் 27 அழைப்புப்பெயர்களை
அம்பா சங்கர் ஆணையை ஏற்காமல் ‘கு’றவன், ‘கொ’றவன் இரண்டும் ஒன்றே என்பதற்கு மைய அரசுடன்
கலந்தாய்வு செய்து, அரசியல் சட்டத்திருத்தம் தேவைப்படுவதால் குறவரின் 27 பெயர்களும்
சீர்மரபினர் பட்டியலில் இருக்கட்டும் என வைத்துவிட்டது.<o:p></o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif";">5. 2002
ஆம்ஆண்டு, ஊட்டி பழங்குடி ஆய்வுமையம்<span style="mso-spacerun: yes;"> </span>SC, DNC
பட்டியலிலுள்ளவர்களை கொறவர் எனும் ஒரே பெயரில் இணைத்து பழங்குடிப் பட்டியலில்<span style="mso-spacerun: yes;"> </span>(ST) சேர்க்க பரிந்துரைக்க, மாநில அரசும் அதனை ஏற்று
நடுவண் அரசிற்கு அனுப்பிவைத்தது. ‘கொறவர்கள்’<span style="mso-spacerun: yes;">
</span>(<i>koravars</i>) என்ற தலைப்பிலிருக்கும் அத்தனை அழைப்புப்பெயர்களையும் ‘கொறவர்’என
இணைக்க வேண்டும் என்றால் முதலில் ‘கொறவர்’ என்ற பெயருக்குச் சாதகமாக DNC பட்டியலில்
இருந்து நீக்கினால்தான் அது இயலும். எனவே,<span style="mso-spacerun: yes;">
</span>தமிழ்நாட்டு அரசு தனக்குள்ள அதிகாரத்தினைப் பயன்படுத்தி முதலில் அழைப்புப்பெயர்களை
DNC ட்டியலிலிருந்து நீக்கிய பிறகே மைய அரசிற்கு பரிந்துரைத்திருக்க வேண்டும்.</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif";"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif";">6. பரிந்துரையில்,
அனைத்துப்பெயர்களையும் கொறவர் என்ற ஒரே பெயரில் இணைத்து ST ஆக்கவேண்டும் என்பதற்குப்
பதிலாக, 27 வகை பெயர்களையுமே ST பட்டியலுக்குக்<span style="mso-spacerun: yes;">
</span>கொண்டு போக வேண்டுமென்று குறிப்பிட்டுவிட்டது <i>(Letter No.25410/ADW
10/2004-1, dt.14.08.2006 of<span style="font-variant: small-caps;"> ADI DRAVIDAR
AND TRIBAL WELFARE DEPT.) </span></i>முக்கிய தவறாகும்.</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif";"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif";">7. இதன்
விளைவாக 26க்கு மேற்பட்ட பெயர்களை ST பட்டியலுக்குக் கொண்டு செல்ல முடியாத நடைமுறைச்
சிக்கலை சுட்டிக்காட்டி இந்திய தலைமைப் பதிவாளர் <span style="mso-spacerun: yes;"> </span><i>(RGI) </i>அலுவலகம் அத்தனை (27) அழைப்புப்பெயர்களும்
தனித்தனிச் சாதிகளே என்று முடிவு எடுத்து கோப்பினை மனு விளக்கம் கோரி தமிழ்நாடு அரசுக்கே
திருப்பி அனுப்பிவிட்டது.</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif";"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif";">எனவே,
ST தகுதி பெறுவதற்கு பெரும் தடையாக இருப்பது DNC பட்டியலிலும் இடம் பெற்றுள்ள 27 அழைப்புப்
பெயர்களே ஆகும். அதனால் அம்பாசங்கர் ஆணைய பரிந்துரைப்படி தமிழ்நாடு அரசு முதல்கட்டமாக
தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி<span style="mso-spacerun: yes;"> </span>STபட்டியலிலுள்ள
‘குறவன்’, ‘சித்தனார்’ என்கின்ற பெயர்களுக்கு சாதகமாக DNC பட்டியலிலுள்ள 27 அழைப்பு
பெயர்களை நீக்கி<span style="mso-spacerun: yes;"> </span>STக்கான பரிந்துரையை மைய அரசுக்கு
அனுப்பினால் குறவன், சித்தனார் எனும் ஒரே சாதியை<span style="mso-spacerun: yes;">
</span>STஆக்குவதற்கு 27 பெயர்களையும் இணைத்து<span style="mso-spacerun: yes;">
</span>STபட்டியலுக்கு கொண்டு சென்றால் மட்டுமே முழு சாத்தியமுள்ளது என்று தொடர்ந்து
கோரிக்கை வைத்து போராடி வருகின்ற நிலையில் பழங்குடிச் சான்றிதழ் சிக்கல் தொடர்கதையாக
உள்ளது.</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif";"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif";"><b><span style="color: #cc0000;">ஆ.
திருட்டு -<span style="mso-spacerun: yes;"> </span>கொள்ளை என பொய்வழக்கு - லாக்கப்
சித்தரவதை:</span></b></span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif";"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif";">குறவரின
மக்கள் சந்திக்கும் மிக முக்கிய சிக்கல் இது. ஒரு காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால்
குறவன் மற்றும் கள்ளர், மறவர் ஆகிய இனங்கள் ‘குற்றப் பரம்பரையினர்’எனும் கொடியச்சட்டத்தில்
வைத்து குற்றவாளியாக்கி கொடுமை புரிந்ததை நாமறிவோம். இதற்கெதிராக கம்யூனிஸ்ட் பேரியக்கத்தின்
தலைவர்கள் பி.ராமமூர்த்தி, ப.ஜீவானந்தம் ஆகியோரும், பசும்பொன் முத்துராமலிங்கம் போன்றோரும்
போராடி <i>CT Act </i>எனும் குற்றப்பரம்பரைச் சட்டத்தை நீக்கினர். 1952இல் இது நீக்கப்பட்டபோதிலும்
குறவன் இன மக்கள் மீதான தாக்குதல் மட்டும் தொடர்கிறது. குறவனின மக்கள் மட்டுமே குற்றம்
செய்திட பிறந்தவர்கள் போலவும், படித்து பட்டம்<span style="mso-spacerun: yes;">
</span>பெற்று சுயமரியாதையுடன் வாழ மறுப்பவர்கள் போலவும் திட்டமிட்டு தமிழக காவல்துறை
இன்றளவும் தொடர்ச்சியாகப் பொய்வழக்குப் போட்டு சீரழித்து வருகிறது. எந்தப் பகுதியில்
திருட்டுக் குற்றங்கள் நடந்தாலும் உடனே அந்தப்பகுதியில் வாழும் குறவனினத்தைச் சார்ந்தவர்களைப்
பிடித்துவைத்து, அடித்து சித்ரவதை செய்தல்- செய்யாத குற்றத்தை செய்ததாக ஒப்புக்கொள்ள
வைப்பது - பொய்வழக்கு போடுவது -<span style="mso-spacerun: yes;"> </span>அடித்துக்
கொன்றுவிடுவது - என்று காவல்துறை செயல்படுகிறது. இதனால், குறவனின மக்கள் அன்றாடம் அஞ்சிஅஞ்சி
வாழ் கின்ற சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர். ‘குறிஞ்சி நில மைந்தர்கள்’ என்று
பெருமையோடு சங்க இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்ட வேட்டைச்சமூகம், காவல்துறையின் பொய்வழக்கு
வேட்டைக்கு இரையாகி வருகின்றது. எனவே ‘குறவன்’ என்று வெளியில் தெரிந்தாலே கேவலம் என்று
கருதி தமது இனத்தையே மறைத்து வாழ்ந்துவருகின்றனர்.</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif";"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif";">ஒருமுறை
திருட்டு வழக்கில் காவல்துறையிடம் சிக்கிவிட்டால் அக்குடும்பம் மண்ணுக்குப் போகிறவரை
தப்பமுடிவதில்லை. குறவர் மீதான தாக்குதல்களான அடிப்பது, காயப்படுத்துவது, வீடு புகுந்து
அங்கு இருக்கும் குறைந்த பட்ச பொருட்களை தூக்குவது, உற்றார் உறவினர் மீதும் வழக்குபோடுவது.
சிக்கிக் கொண்டவனின் குடும்பப் பெண்களை வன்புணர்ச்சிக்கு உள்ளாக்குவது, எல்லையற்ற கொடுமைகள்,
பொய்வழக்குகள், கொட்டடி சித்ரவதை என கடந்த 20 ஆண்டுகளில் நடந்துள்ள கொடுமைகள் ஏராளம்.
அவற்றின் பட்டியல் பின்வருமாறு:</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif";"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif";">1. 30.11.1997இல்
வேலூர் மாவட்டம் பொன்னை கிராமத்தைச் சார்ந்த 5 குறவன் இன மக்கள் திருவள்ளுவர் மாவட்ட
போலீசாரால் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டு மனைவி மக்களுக்கும் தெரியாமல் கும்மிடிப்பூண்டி
காவல் நிலையத்தில் வைத்து அடித்து சித்தரவதை செய்யப்பட்டனர். செய்யாத குற்றத்தை செய்ததாக
ஒப்புக்கொள்ள வைத்து, தாம் திருடிவைத்திருந்த நகைகளை அந்த ஊர் பெரிய மனிதர்களிடம் கொடுத்ததாக
சொல்லச் சொல்லி நகை, பல லட்சக்கணக்கான ரூபாயை வசூல் செய்தனர்.<span style="mso-spacerun: yes;"> </span>11 பொய்வழக்குகள் போட்டு சிறையில் தள்ளினர். இதில்
அனைத்து வழக்குகளும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
(ஏ.வி.சண்முகம், குறிஞ்சி நில மைந்தர்களின் குமுறல், தீக்கதிர், 3.2.2011, சென்னை)</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif";"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif";">2. விருத்தாச்சலம்
முதனை கிராமத்து ஆர்.ராஜாக்கண் ணுவை 19.03.93 அன்று நகைத்திருட்டு வழக்கில் தொடர்புபடுத்தி
விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்தில் வைத்து அடித்து கொலை செய்துவிட்டனர். மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி தொடுத்த வழக்கில், கொலை செய்த சப் இன்ஸ்பெக்டர், ஏட்டுகள் 2பேருக்கு
31.05.2004ல் விருத்தாச்சலம் நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேல்முறையீட்டுக்குப் பின் உயர் நீதிமன்றமும் அத்தீர்ப்பை உறுதி செய்து தற்போது குற்றவாளிகள்
சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். (மேலது)</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif";"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif";">3. விழுப்புரம்
மாவட்டம் கள்ளக்குறிச்சி நயினார்குப்பம் குளத்துமேட்டைச் சார்ந்த என்.நாராயணன் (அகவை
25) திருட்டு வழக்குகளில் சம்பந்தப்படுத்தி கடலூர் சிறையில் அடைக்கப்பட்டு
1.06.2004இல் இறந்து போனார். (மேலது)</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif";"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif";">4.
அன்றைய தருமபுரி மாவட்டம் எலச்சூர் கிராமத்தில் வாழும் கோவிந்தசாமியின் மகன் ஆனந்தன்
என்பவரை தேடுகிறோம் என்ற பெயரில் ஆனந்தனுடைய தகப்பனார், மனைவி, தம்பி, தம்பி மனைவி
மணிமேகலை, உறவினர் விஜயா ஆகிய அனைவரையும் கைது செய்த வாணியம்பாடி காவல்நிலையத்தினர்
அடித்து, உதைத்து, உலக்கையில் கட்டி தொங்கவிட்டு சித்ரவதை செய்தனர். பெண்களை மானபங்கப்படுத்தி
மங்கை, மணிமேகலை ஆகிய இருவரை பாலியல் பலாத்காரம் செய்ததை கேள்விப்பட்ட சி.பி.எம். தலைவர்கள்
தலையிட்டதும், ‘பிக்பாக்கெட்’ அடித்ததாக வழக்குப்பதிவு செய்தனர்.( பிரண்ட் லைன், சூன்
6, 2002)</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif";"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif";">5.விழுப்புரம்
மாவட்ட பரிந்தல் கிராமத்தைச் சார்ந்த ரவி என்ற வாலிபரை 16.08.2010 அன்று இரவு கைது
செய்தனர். 18.08.2010 அன்று நடுவீரப்பட்டி காவல் நிலையத்தில் வைத்து அடித்து சித்தரவதை
செய்து கொன்றனர். ஆனால் விசாரணைக்கு அழைத்துவரும்போது தப்பி ஓடியதாகவும், விரட்டும்போது
மரத்தில் மோதி இறந்துவிட்டதாகவும் போலீசார் கூறினர். போச்சம்பள்ளி, தேனி, சமயபுரம்,
டால்மியாபுரம், உப்பிலியாபுரம், ஒட்டன்சத்திரம், இராமநாதபுரம், கமுதி, திருச்சி கண்டோன்ட்மெண்ட்,
திருப்பூர் டீ1 காவல்நிலையம், பரமக்குடி நகர காவல்நிலையம், கோவை மதுக்கரை, திருப்பூர்
நல்லூர், ஊத்தங்கரை, நல்லவன்பட்டி, பள்ளிப்பாளையம் கரூர் குளித்தலை, திண்டுக்கல் நிலக்கோட்டை
என பல பகுதிகளில் இன்றுவரை குறவரினத்தின் மீதான பொய்வழக்குகள், லாக்கப் சித்ரவதைகள்
தொடர்கின்றன. (தலித் முரசு, அக்-2010, புதிய கோடாங்கி, ஏப்-2012)</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif";"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif";">‘இந்திய
அசமைப்புச் சட்டம் மனிதஉரிமைகள் பற்றிய 15ஆவது பிரிவில் மதம், இனம், சாதி, பால், பிறந்த
இடம் இவற்றில் ஏதாவதொன்றின் காரணமாக மட்டுமே அரசு குடிமக்களில் எவரையும் ஓரவஞ்சனை செய்யாது’என்கிறது.
ஆனால், இந்த<span style="mso-spacerun: yes;"> </span>நாட்டில் வாழ்கின்ற பல்வேறு சாதிப்பிரிவி
னரில் ஒரு சாதிப்பிரிவினரான தொல்பழங்குடி மக்களான குறவன் இனத்தை மட்டும் அவன் ‘குறவனாகப்
பிறந்து விட்ட ஒரே காரணத்திற்காக’ குற்றச்செயல் புரிபவன்களாகச் சித்தரிப்பது, பொய்
வழக்குப் போடுவது அவனது நியாயங் களை நிராகரிப்பது, உரிமைகளை மறுப்பது என அரசும், அதிகாரிகளும்,
காவல்துறையும் வஞ்சித்து வருவது தொடர் வதும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இம்மக்களிடையே
போராட்டக்குரல்<span style="mso-spacerun: yes;"> </span>மெல்ல வலுத்தும் வருகிறது.</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif";"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif";"><b><span style="color: #cc0000;">இ.
குறவரின் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு: மாறுதல்கள்</span></b><o:p></o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif";">பொதுவாக
குறவர்கள் தங்களது பொருளாதார ஒழுகலாறுகளாக கூடை முடைதல் எனும் கைவினைக்கலையின் மூலமாகவும்,
இறைச்சிக்காக பன்றி வளர்த்தல் போன்ற தொழில்கள் மூலமாகவும், குறிசொல்லுதல் என்கிற மரபார்ந்த
சடங்கியல்சார் தொழில் மூலமாகவும் தங்களது பொருளாதார தேவைகளை நிறைவு செய்துகொள்கிறார்கள்
என்று இதுவரை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் இன்றைய சூழலில் குறவர்கள் தங்களது பொருளாதார
வாழ்வில் பல்வேறு தொழில்களை கைகொண்டு வருகிறார்கள்.</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif";"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif";">மேற்கண்ட
பின்புலத்தில்தான் குறவர் இன மக்கள் குறித்த பொதுவான தொழில்சார் அடையாளங்கள் இன்று
உள்ளது. இந்த விவரங்கள் பலகட்டங்களில் ஆய்வுகளாக கிடைக்கப் பெற்றிருக்கிறது என்றாலும்
நகரம் சார்ந்து தங்களது வாழ்க்கையை அமைத்துக்கொண்ட அல்லது நகரத்தை நோக்கி இடம் பெயர்ந்த
குறவர் பழங்குடி மக்கள் தங்களது பொருளாதார நலன் சார்ந்த நிலைகளில் மேற்கொள்ளும் முனைப்புகள்
குறித்து தெளிவான முழுமையான ஆய்வுகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில்
தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சிக்கட்டத்தில் உள்ள நகரங்களிலும் வாழ்ந்துவரும் குறவர்
பழங்குடி மக்கள் குறித்த ஆய்வு தேவையாக உள்ளது.</span></p><p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif";">இதில்
ஒருபகுதியாக சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் தங்களது குடியிருப்புகளை அமைத்துக்கொண்ட
குறவர் பழங்குடி மக்களைத்தேடி நமது களப்பயணம் அமைந்தது. குறிப்பாக கோயம்பேடு அருகில்
சின்மயா நகர் பகுதியில் உள்ள குலசேகரபுரம், வில்லிவாக்கம், பெரம்பூர், தாம்பரம், ஆவடி,
திருமுல்லைவாயில் ஆகிய பகுதிகளில் வசித்துவரும் குறவர் பழங்குடி மக்களிடம் இந்த ஆய்வு
மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்விலிருந்து நாம் அவர்களது கல்வி பொருளாதார, வேலைவாய்ப்பு
நிலைகள் குறித்து தெளிவான புரிதலுக்கு வர முடியும்.</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif";"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif";"><b><span style="color: #cc0000;">கல்வி</span></b></span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif";"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif";">கல்வியறிவு
சார்ந்த புள்ளிவிவரங்களில் அடிப்படைக் கல்வி என்பதற்கான வரையறை 8ஆம் வகுப்புக்கு குறைவாக
படித்தவர்கள் என்று வைத்துக் கொள்ளலாம். 8 முதல் 10 வரை, 12 ஆம்<span style="mso-spacerun: yes;"> </span>வகுப்புவரை, பட்டப்படிப்பு வரை, பட்ட மேற்படிப்பு
வரை என்று மேலும் வகைப்படுத்திக் கொண்டோம். இந்த ஆய்வின் வரையறைகளோடு மேற்குறிப்பிட்ட
பகுதிகளில் 500 குடும்பங்களைச் சேர்ந்த 1,615 நபர்களை இந்த ஆய்விற்காக எடுத்துக்கொண்டதில்
பொதுவாக கல்வியறிவு பெற்றவர்கள் என்று பார்க்கிறபோது 950 பேர்களாக உள்ள னர். 480 பேர்
அடிப்படைக் கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர். அதாவது 58 சதவித நபர்கள் அடிப்படைக் கல்வி
மற்றும் பட்டப்படிப்பு வரை படித்தவர்களாக உள்ளனர். குறிப்பாக சுட்டுவதெனில் 10ஆம் வகுப்புவரை
230 நபர்கள், 12ஆம் வகுப்புவரை 70 நபர்கள், பட்டயபடிப்பு <span style="mso-spacerun: yes;"> </span>55 நபர்கள்,<span style="mso-spacerun: yes;">
</span>பட்டப்படிப்பு 115 நபர்கள் என படித்துள்ளனர். மீதமுள்ள 665 நபர்கள் கல்வியறிவு
பெறாதவர்களாக உள்ளனர்.</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif";"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif";"><b><span style="color: #cc0000;">வேலைவாய்ப்பு
</span></b><o:p></o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif";">ஆய்வுக்குட்படுத்திய
500 குடும்பங்களின் 1615 உறுப்பினர்களின் வேலைவாய்ப்பு குறித்து தகவல் திரட்டியதில்
சராசரியாக 700 நபர்கள் முறைப்படுத்தப்பட்ட வேலைவாய்ப்பு பெற்றவர்களாகவும், மீதமுள்ள
915 நபர்கள் முறைசாரா வேலைகளிலும் ஈடுபடுகின்றனர். முறைப்படுத்தப்பட்ட வேலை என்கிற
வகையில் அரசுப்பணிகளில் 80 நபர்களும், தனியார் நிறுவனங்களில் 105 நபர்களும், சுயதொழில்
மேற்கொள்பவர்கள் 500 நபர்களும், இதர வீட்டு உதவிப்பணிகள் 15 நபர்களும் செய்கின்றனர்.
அரசு வேலைகளை பொறுத்தவரை பெரும்பான்மையானவர்கள் சென்னை குடிநீர் வாரியத்தில் கடைநிலை
பணியாளர்களாகவும், சென்னை மாநகராட்சி துப்புரவுத் தொழில் மற்றும் பேருந்து ஓட்டுநர்களாகவும்
பணியாற்றுகின்றனர். தனியார் துறை வேலை என்று பார்க்கிறபோது டேட்டா என்ட்ரி (தகவல் உள்ளீடு)
பணிகளிலும், ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களிலும், மருந்து தயாரிப்பு நிறுவனங்களிலும்,
பணியாற்றுகின்றனர். தவிர முறைசாரா தொழில்களாக ஓட்டுநர், ஆட்டோ <span style="mso-spacerun: yes;"> </span>ஓட்டுநர், தலைச்சுமை வியாபாரம் செய்வது, மீன்பாடி
வண்டி ஓட்டுவது, மீன் வியாபாரம் என வகைப்படுத்த முடிகிறது. ஆட்டோ ஓட்டுபவர்களிடம்<span style="mso-spacerun: yes;"> </span>முக்கியமான விஷயமாக கவனித்தது, அதில் 12 நபர்கள்
சொந்த ஆட்டோவை வைத்து தொழில் செய்துகொண்டிருக்கின்றனர்.</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif";"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif";"><b><span style="color: #cc0000;">பொருளாதாரம்
</span></b><o:p></o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif";">பொருளாதார
நிலைமைகளை பொறுத்தவரை அவர்களது தொழிலை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டது. இந்த
வகையில் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட 500 குடும்பங்களின் நிலைமைகளை இப்படி வகைப்படுத்தலாம்.
ரூ.5000த்துக்கும் குறைவான மாதவருமானம் கொண்டவர்களின் எண்ணிக்கை 255 ஆகவும், 5000 ரூபாயிலிருந்து
8000 ரூபாய்வரை வருமானம் கொண்டவர்கள் 135 குடும்பங்களாகவும், ரூபாய் 8000த்திற்கும்
அதிகமாக வருமானம் கொண்டவர்கள் 110 குடும்பங்களாகவும் உள்ளனர்.</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif";"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif";">மேற்குறிப்பிட்ட
ஆய்வுகளிலிருந்து குறவர் பழங்குடி சமூக நிலைமைகள் குறித்தும், அவர்களது சமூக பொருளாதார
நிலைமைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் பொதுவாக புரிந்துகொள்ள முடிகிறது. நகரமய
வாழ்க்கைச்சூழலில் குறவர் பழங்குடி மக்களின் சமூக பொருளாதார அடையாளங்கள் மாற்றம் பெற்று
வருகிறது. குறிப்பாக<span style="mso-spacerun: yes;"> </span>நகர்மய கலாச்சாரக் கூறுகளோடு
ஒன்றிணைவது, ஆங்கிலவழிக் கல்வி, தொழில்நுட்ப மற்றும் ஊடகம் சார்ந்த கல்விகளுக்கு சமீபகாலங்களாக<span style="mso-spacerun: yes;"> </span>முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனனர். இதன் தொடர்ச்சியாக
தங்களது மரபு அடையாளங்களை தொலைப்பதும் அல்லது மறைப்பது போன்றவற்றுக்கும் முற்படுகின்றனர்.
அதேசமயத்தில் தங்களது சமூகச்சடங்கு சார்ந்த விஷயங்களில் மட்டும் தங்களது சாதிப்பண்பாட்டை
தக்கவைத்துக்கொள்ளும் போக்கும் உள்ளது.<span style="mso-spacerun: yes;"> </span></span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif";"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif";">நமது
ஆய்வு நகர்புறங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் குறவர் பழங்குடி மக்களைக் குறித்துதான்
என்றாலும், இவர்கள்<span style="mso-spacerun: yes;"> </span>சென்னையை பூர்வீகமாகக்
கொண்டவர்கள் கிடையாது. அலைகுடி சமூகத்தின் ஓர் அடையாளக்கூறாக இருக்கும் இடம்விட்டு
இடம் பெயர்வது என்கிற ஒரு பண்பாட்டு நடவடிக்கையிலிருந்தும் இதை அணுகலாம். 30 அல்லது
40 ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு<span style="mso-spacerun: yes;"> </span>இடம் பெயர்ந்துள்ள
அவர்களில் கணிசமானவர்கள் திருவண்ணாமலை சார்ந்த பகுதியிலிருந்து குடியேறிவர்கள். கடந்தகாலங்களில்
வேளாண்<span style="mso-spacerun: yes;"> </span>பொருளாதாரத்தில்<span style="mso-spacerun: yes;"> </span>ஏற்பட்ட தாக்குதல்கள் காரணமாக அதைச் சார்ந்த சார்புக்குடிகளாகவும்
இருந்த குறவர் பழங்குடிகளும் இடம் பெயர நேர்ந்துள்ளது.</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif";"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif";"><b><span style="color: #cc0000;">குறவர்
பழங்குடி இயக்கங்களும் போராட்டங்களும்</span></b></span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif";"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif";">மேற்கண்ட
ஆய்வுப்பொருளை மையமாக கொண்டு குறவர் சங்கங்கள் பல போராட்டங்களை நடத்தி வந்திருக்கின்றன.
பொதுவாக குறவரினச் சங்கங்கள் 1940களின் நடுப்பகுதியிலிருந்து செயல்படத் தொடங்கியதாக
அறிய முடிகிறது. அரசியல் போராட்டம், இனச்சீர்திருத்தம் என்னும் இரண்டு கோணத்தில் இம்மக்களின்
போராட்டங்கள் அமைந்து வந்துள்ளன. அடிப்படை வசதிகளுக்கென (உணவு, உடை, உறைவிடம்) போராடியதைவிட
தங்களை மலையினமாக அடையாளப்படுத்திக்கொள்ள போராடிய போராட்டமே அதிகமாக இருந்துள்ளது.
இதற்கு குறவரினத்தின் அனைத்துச் சங்கங்களும் போராடின. சான்றாக, 1.தமிழ்நாடு குறவர் மகா
சனசங்கம் (1945) 2.தஞ்சை மாவட்ட மலைக்குறவன் மகாசன சங்கம், 3. குறவன் முன்னேற்றச் சங்கம்
4. தமிழ்நாடு குறவன் சமுதாய நலச்சங்கங்களின் கூட்டமைப்புச் சங்கம் 5.மதுரை மாவட்ட குறவன்
சமுதாய நலச்சங்கம் 6.குறவர் பழங்குடி மக்கள் சங்கம் (2000) போன்ற இயக்கங்களைச் சுட்டலாம்.</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif";"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif";">மேலும்
குறவர் சங்கங்கள் சமய மரபின் தொடர்ச்சியைத் தக்கவைத்துக்கொள்ள பழனி உள்ளிட்ட அறுபடை
வீடுகளான முருகன் கோயில்கள் தங்களுக்கே பாத்தியப்பட்டது எனவும் அறங்காவலர் பணியைத்
தங்களுக்கே வழங்க வேண்டுமெனவும் அரசின் முன் கோரிக்கை வைத்துப் போராடின. பழனி குறவர்
மடத்தை மீட்க குறவர் முன்னேற்றக் கழகம் நிதியும் திரட்டியது. குறவர் சங்கங்கள் தங்களின்
மலையினம் சார்ந்த பல்வேறு அடையாளங்களை முன் வைத்து கடந்தகாலங்களில் போராடி வந்திருக்கின்றன.
இதில் முதன்மையானது சாதிச்சான்றிதழ், சமய மீட்பு, குறவர் மக்கள் மீது போடுகின்ற பொய்
வழக்குகளுக்கு எதிரான போராட்டம் (விடுதலைச்சிறுத்தைகளோடு இணைந்து தமிழ்நாடு<span style="mso-spacerun: yes;"> </span>குறவர் பழங்குடி மக்கள் சங்கப் போராட்டம், மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியோடு இணைந்து குறவன் முன்னேற்ற சங்கப் போராட்டம், இந்திய கம்யூனிஸ்ட்
கட்சியும் குறவர் பழங்குடி விடுதலை முன்னணியும் இணைந்து நடத்திய மாநாடு) என தொடர்ந்து
போராடி வந்திருக்கிறது. ஆனாலும் குறவர் மக்களின் தன்னுரிமைக்கான போராட்டம் இன்னும்
தொடர்கிறது.</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif";"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif";">கல்வியுரிமை,
அதிகாரப்பங்கீடு சார்ந்த கோரிக்கைகளை வென்றெடுக்க குறவர் சங்கங்கள் போராடவேண்டிய தேவையை
அவ்வளவாக உணர்ந்ததாகத் தெரியவில்லை. குறவர் இனம் தாழ்த்தப்பட்ட சமூகமா? பழங்குடியா?
என்னும் அடையாளச்சான்றைப் பெறுவதில் பலவிதப் பார்வையும் குழப்பமும் தொடர்ந்து நீடிக்கிறது.</span><span style="font-family: "Arial Unicode MS", "sans-serif";"> </span></p>புதுவிசைhttp://www.blogger.com/profile/09276344793619872435noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8111967010823738396.post-89508486021995293062020-09-29T09:55:00.000-07:002020-09-29T09:55:53.984-07:00ஆதி-திராவிடர்: சாதியற்ற சமத்துவத்தின் அடையாளம் கோ. ரகுபதி<p></p><p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;">ஆதி-திராவிடர் என்ற சொல்லாட்சி பறையர்களால்
பறையர்களை மட்டுமே சுட்டுவதற்கு தோற்றுவிக்கப்பட்டது என்ற வாதம் இக்கட்டுரையில்
ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. அச்சொல் உச்சபட்ச தீண்டாமைக்குள்ளான பறையர்,
பள்ளர், சக்கிலி போன்ற பெயர்களால் அழைக்கப்பட்ட மக்கள் பிரிவினர் அனைவரையும் சுட்டுவதற்காகவும்,
தாங்கள்தான் தென்னிந்தியாவின் பண்டைய மக்களென அடையாளப்படுத்திக் கொள்வதற்காகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது
என்ற வரலாற்றுண்மையை முன்வைக்கும் அதேநேரத்தில் ஆதி-திராவிடர் சாதிகளைக் கடந்து சாதியற்ற,
சமத்துவத்தையும் ஜனநாயகத்தையும் வலியுறுத்தும் கருத்தியலாக பரிணமிக்க முயற்சித்திருக்கும்
வரலாற்றினையும் நிறுவுகிறது. </span><span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;"><b><span style="color: #800180;">முன்னுரை: சாதிப்படிநிலையை பிரதிபலிக்கும்
பெயர்</span></b><o:p></o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;"><o:p> </o:p></span><span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;">இந்திய சாதியச் சமூகத்தில் பெயரில் என்ன
இருக்கிறது? என்ற கேள்வியை எழுப்பினால், பதில் அம்பேத்கரிடமிருந்து கிடைக்கிறது: பெயர்கள்
ஒரு முக்கியமான நோக்கத்தைக் கொண்டுள்ளன. அவை சமூகப் பொருளாதாரத்தில் மகத்தான
பங்கை வகிக்கின்றன. பெயர்கள் என்பவை அடையாளக்குறிகள். ஒவ்வொரு பெயரும்
ஒரு குறிப்பிட்ட விஷயம் பற்றிய குறிப்பிட்ட கருத்துக்களையும் எண்ணப்போக்கையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.
அது ஒரு ‘லேபிள்’ அடையாளச்சீட்டு. இந்த அடையாளச்சீட்டிலிருந்து அது என்ன என்பதை மக்கள்
தெரிந்துகொள்கிறார்கள் (அம்பேத்கர்: பேச்சும் எழுத்தும், 1997: 467).</span><span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">அம்பேத்கரின் இக்கூற்று விளக்குவதாவது:
ஒருவரின் அல்லது ஒரு குறிப்பிட்ட சாதியின் சமூக, பொருளாதாரப் படிநிலையைப் பிறருக்கு
எடுத்துரைக்கும் தனிச்சிறப்பினைப் பெயர்கள் பெற்றிருக்கின்றன. சமூகப்படிநிலையைப் பிரதிபலிக்கும்
தன்மையைப் பெயர்கள் பெற்றிருக்கின்ற பொழுது, பெயர் சூட்டுதல் என்னும் நிகழ்ச்சி இந்தியச்
சமூகத்தில் தனிநபர்களின் / தனித்த சாதிகளின் சுதந்திர உரிமைக்குட்பட்டதாக இருந்திருக்கிறதா?
அல்லது புறக்கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாக இருந்திருக்கிறதா? ஆம் என்றால் அப்புறக்
கட்டுப்பாடு எது? என்ற கேள்விகள் இவ்விடத்தில் தவிர்க்க இயலாததாய் எழுகிறது.
இந்தியாவிலுள்ள சாதிகளின் தொழில், உணவுப்பழக்கம், ஆண், பெண் உறவு என சகலத்திற்கும்
கறரான சட்டங்களை வகுத்தளித்திருக்கும் மநு நால்வருணத்திற்குள்ளிருக்கும் ஒவ்வொரு பிரிவினர்களுக்கும்
வழங்கியிருக்கும் பெயர் என்ற அடையாளச்சீட்டு: பிராம்மணன் பெயர் மேன்மையைக் குறிக்கும்
‘சர்மன்’, க்ஷத்திரியனுக்குப் பலத்தைக் குறிக்கும் ‘வர்மன்’, வைசியனுக்கு வளத்தைக்
குறிக்கும் ‘பூபதி’, சூத்திரனுக்கு பணி விடையைக் குறிக்கும் ‘தாசன்’. (திருலோக சீதாராம்,
2000:14). மநுவின் இச்சட்டம், பெயரிடுதல் என்பது மநு என்ற புறக்கட்டுப்பாட்டுக்கு
உட்பட்டதாயிருந்திருக்கிறது என்பதையே தெளிவுபடுத்துகிறது. </span><span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;"> </span><span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">நால்வருண அமைப்பில் இடம்பெற்றிராத உச்சபட்ச
தீண்டாமைக் கொடுமைக்குள்ளான மக்கட்பிரிவினர், இந்த அடையாளச்சீட்டினைச் சூட்டிக் கொள்வதற்கு
உரிமை மறுக்கப்பட்து. சாதிக்கு புறத்தேயுள்ளோர், பறையர், பஞ்சமர், தீண்டத்தகாதோர்,
ஹரிஜன் போன்ற பெயர்களால் அவர்களின் விருப்பத்திற்குட்பட்டோ அல்லது வெறுப்பிற்குள்ளாகியோ
அழைக்கப்பட்டனர். தீண்டத்தகாதோர் என்ற பெயர் குறித்து அம்பேத்கர் கருதியது (அம்பேத்கர்:
பேச்சும் எழுத்தும், 1997: 467): ‘தீண்டப்படாதவர்’ என்ற பெயரானது ஒரு கெட்ட பெயராகும்.
அது அருவருப்பூட்டுகிறது; பயமுறுத்துகிறது; முடைநாற்றம் வீசுகிறது. ‘தீண்டப்
படாதவர்’ என்ற பெயரிலிருந்தே தீண்டப்படாதவர் குறித்து இந்துவின் சமூக அணுகுமுறை தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது.
‘தீண்டப்படாதவர்’ எவ்வளவு தகுதி பெற்றிருந்த போதிலும்கூட, மக்கள் தீண்டத்தகாதவர் ஒவ்வொருவரின்
தனிப்பட்ட தகுதிகள் குறித்து ஆராய விரும்புவதில்லை. இதனையொத்த கருத்தொன்று மகாத்மா
காந்தியால் பரவலாக்கப்பட்ட ஹரிஜன் என்ற பெயர் மீதும் எழுப்பப்பட்டது. பெயரில்
என்ன இருக்கிறது? என்று தலைப்பிட்டு பெயர் குறிப்பிடப்படாத வாசகர் ஒருவர் மகாத்மா காந்தியிடம்
எழுப்பிய கேள்வி: ஹரிஜன் பெயர் எவ்வளவு புனிதமாகயிருந்தாலும் சரி, அது யாரைக் குறிக்கிறதோ
அவர்கள் மனத்தில் தாங்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணத்தை அப்பெயரே புகுத்திவிடுகிறதென்று
நான் நினைக்கிறேன். அவர்கள் எவ்வளவு முன்னேற்றமடைந்தாலும், ஹரிஜன் என்ற பெயராலேயே
அழைப்பதாயிருந்தால், அத்தகைய எண்ணத்தை அவர்கள் மனத்திலிருந்து அகற்றவது மிகவும் கடினமாக
இருக்கும். ஹரிஜன் என்றவுடனேயே, தீண்டாமை, தாழ்த்தப்பட்டயென்பவை தான் பாமர மக்களுக்குப்படும்.
இயற்கையிலேயே இத்தகைய எண்ணத்தைப் புகுத்தாமலும், எடுத்தவுடனேயே தாழ்த்தப்பட்ட நிலையைக்
குறிக்காமலும் உள்ள ஒரு பெயரை உபயோகிப்பது நல்லதல்லவா? மற்ற வகுப்பினரையும் தழுவக்கூடிய
ஒரு பெயரை உபயோகிப்பது உசிதமல்லவா? (தமிழ் ஹரிஜன், 1946: 5). <o:p></o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">இந்திய சாதி அமைப்பில் ஒரு
தனிநபர் அல்லது சாதியின் படிநிலை, சமூகத்தில் வழங்கப்பட்டிருக்கும் உரிமை, பணி போன்றவைகளைக்
கண்டறிய, ஒரு வட்டத்திற்குள் ஒருவர் அல்லது சாதி இணைத்துக் கொள்ளப்படுவதற்கும் அல்லது
ஒதுக்கப்படுவதற்கும் பெயர் ஒன்றே போதுமானதாக இருந்து வருகிறது. உச்சபட்ட தீண்டாமைக்
கொடுமைக்குள்ளாக்கப்பட்ட மக்கள் காலனிய ஆட்சிக்காலத்தில் தங்களை சமூக ஒடுக்குமுறையிலிருந்து
விடுவித்துக் கொள்வதற்காகப் போராடிய போது, பிறரால் வழங்கப்பட்ட பெயர்கள் அவர்களின்
சமூக முன்னேற்றத்தில் இடர்ப்பாடுகளையே ஏற்படுத்துகிறது என்பதை உணர்ந்திருக்கின்றனர்.
இப்பெயர் மாற்றப்பட்டாலொழிய அவர்களுடைய சமூக அந்தஸ்தில் உயர்வதற்கான சாத்தியப்பாடே
இல்லை என்கிறார் அம்பேத்கர் (அம்பேத்கர்: பேச்சும் எழுத்தும் 1997: 468). மானிடவியல்
அறிஞர் ராபர்ட் டெலீஜ், சமூக ஒழுங்கில் முன்னேற விரும்பும் ஒரு சாதி தனது இலக்குகளையும்
உரிமை கொண்டாடுதலையும் பிரதிபலிக்கும் பெயரைக் கைக்கொள்வது இயல்பானது என்கிறார் </span><span style="font-family: TAM-Shree800; mso-bidi-font-family: TAM-Shree800;">(</span><i>Robert
Deliege, 1997:123)</i><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">.
பெயர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து விவாதிப்பதும், புதிய பெயரினைச் சூட்டிக்கொள்வதும்
அல்லது இருக்கின்ற பெயரை மாற்றுவதும் ஒரு சமூக இயக்கத்தின் நிகழ்ச்சிநிரலில் தவிர்க்க
இயலாததாகிவிடுகிறது.</span><span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">தமிழ்ச்சமூகத்தில் நால்வருணம் இல்லாதிருந்தபோதும்
கூட கம்மாளர் (அரசாணை எண். 1802) இடையர் (யாதவ மித்ரன், 1930) போன்ற சாதிகள் தங்கள்
சாதியின் பெயரை விஸ்வபிராம்மணன், யாதவ் என்று மாற்றிக்கொண்டனர். தீண்டத்தகாதோர்,
பஞ்சமர், பறையர், சாதிக்கு புறத்தேயுள்ளோர் என அழைக்கப்பட்ட மக்கள், தங்கள் மீதான தீண்டாமை
ஒடுக்குமுறைக்கெதிராய் காலனிய ஆட்சிக் காலத்தில் திரளான அம்மக்கள் ஆதி-இந்து </span><i><span style="font-family: TAM-Shree800; mso-bidi-font-family: TAM-Shree800;">(</span>Nandini
Gooptu, 2006)</i><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">,
ஆதி-தம் </span><i><span style="font-family: TAM-Shree800; mso-bidi-font-family: TAM-Shree800;">(</span>Ronki Ram, 2004)</i><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">, ஆதி-திராவிடர் போன்ற பெயர்களில் தங்களை
அடையாளப்படுத்திக் கொண்டனர். மண்ணின் மைந்தர்கள், ஆரியருக்கு முற்பட்டோர் என்ற
உரிமையைக் கொண்டாட இவர்கள் ஆதி என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்தினர் </span><i><span style="font-family: TAM-Shree800; mso-bidi-font-family: TAM-Shree800;">(</span>Gail
Omvedt, 1991: 18-19; Susan Bayly, 2000: 246)</i><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">. பெயர் மாற்றத்தில் ஈடுபட்ட முன்னவர்கள்
- அவர்கள் திராவிடர்களாகவே இருந்த போதிலும், பார்ப்பனியமயமாக்கலை முன்னெடுத்தனர். ஆனால்,
பின்னவர்கள் அதற்கு நேரெதிரான திராவிடத்தை கைக்கொண்டனர்.</span><span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;"><span style="color: #800180;"><b>பிளவுபடுதலுக்கு இரையாக்கப்பட்ட
ஆதி-திராவிடர் </b></span><o:p></o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;">சாதி இந்துக்கள் காலனிய ஆட்சிக்குப்
பின்னர், சமூக, பொருளாதார, அரசியல் தளங்களில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வதற்காக
தங்களிடையேயுள்ள உட்சாதிப் பிரிவுகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, தங்களை தனித்த பெரும்
சாதியாக மாற்றிக்கொள்ளும் சாதி அரசியலை மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம், அனைத்துச்
சாதி இந்துக்களும் அடித்தட்டு மக்களுக்கு எதிராக ஒன்றிணைந்து கொள்கின்றனர். இவ்விணைவிற்கான
வெளிப்படையான அல்லது ரகசியமான உரையாடல் எப்பொழுதுமே அவர்களிடம் இருந்து வருகிறது.
உச்சபட்ச தீண்டாமைக்குள்ளான தாழ்த்தப்பட்ட மக்கள்மீது காலனிய ஆட்சிக்குப் பின்னர் சாதி
இந்துக்களால் நடத்தப்பட்டு வரும் வன்முறைகளே இதற்கு சாட்சி. ‘ஒன்றிணைதல்’ என்பது
சாதி இந்துக்களின் அரசியலாக இருந்துவரும் சூழலில் வெளிப்படையாகவே பகையுணர்வுடன் ‘பிளவுபடுதல்’
தாழ்த்தப்பட்ட மக்களின் சமகால அரசியலாக இருந்து வருகிறது. ஆதி-திராவிடர் என்ற
பெயருக்கெதிராக அருந்ததியர் மற்றும் ம(ப)ள்ளர் இயக்கங்களின் போராட்டங்கள் பிளவுபடுதல்
அரசியலில் முதன்மைப் பாத்திரம் வகித்துவருகின்றனர். உண்மையில், ஆதி-திராவிடர்
என்ற சொல்லாட்சி சமீப காலமாகவே பிளவுபடுதல் அரசியலின் முதன்மையான இரையாகிப் போனது என்றால்
அது மிகையான மதிப்பீடு அல்ல. </span><span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">பஞ்சமர், பறையர் ஆகிய பெயர்களுக்கு
மாற்றாக ஆதி-திராவிடர் என்ற சொல்லாட்சியை அறிவித்திருந்த போதிலும் அது ‘’பறையர்’’ எனப்படும்
சாதிக்கு மட்டுமே உரியது; அது எங்களுடையது அல்ல என்று ம(ப)ள்ளர் மற்றும் அருந்ததியர்
இயக்கங்கள் போராடி வருகின்றன. தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் சங்கம் ‘’அரிஜன்’’
என்ற பெயரையே மீண்டும் அமுல்படுத்த வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் 1980களில் வழக்கு
தொடர்ந்தது (தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் சங்கம், திருச்சிராப்பள்ளி, வெளியிட்ட
துண்டறிக்கை. இது வெளியிடப்பட்ட தேதி அச்சிடப்பட்டிருக்கவில்லை). சுயசாதி
அரசியல் வலுப் பெற்றிருக்கும் இக்காலத்தில் அட்டவணைச் சாதியினரை ஆதி-திராவிடர் என்றழைக்க
வேண்டுமென்ற அரசாணை (எண். 13/ஆர்டி-அநமு 1/07-1, 07 பிப்ரவரி 2007) தமிழக அரசாங்கத்தால்
தற்போது வெளியிடப்பட்டிருப்பது போராட்டத்தை மேலும் தூண்டியிருக்கிறது. (தினமணி
17 நவம்பர் 2007: 5; தினகரன் 19 நவம்பர் 2007: 4). ‘ஆதி-திராவிடர்’ என்னும் சொல்லாட்சி
பறையரை மட்டுமே குறிப்பதற்கு பறையர்களால் முன்மொழியப்பட்டு நடைமுறைப் பயன்பாட்டிற்குக்
கொண்டு வரப்பட்டது என்பது அப்பெயரை எதிர்ப்பவர்களின் வாதம். </span><i><span style="font-family: TAM-Shree800; mso-bidi-font-family: TAM-Shree800;">‘</span>Scheduled
Caste’ </i><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">என்ற
ஆங்கிலச் சொல்லாட்சியை அட்டவணைச் சாதியினர் என்று மொழிபெயர்ப்பு செய்வதற்குப் பதிலாக
ஆதி-திராவிடர் என பெயர் சூட்டியிருப்பது மாற்றப்படவேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை.
எனவே, இக்கட்டுரை இனிவரும் பகுதியில் விவாதிக்க இருக்கின்ற சிக்கல்கள்: காலனிய ஆட்சியாளர்கள்
பஞ்சமர், பறையர் என்ற பெயர்களை எந்த மக்கட்பிரிவினரை சுட்டுவதற்காகக் கையாண்டனர்?
சென்னை மாகாண அவையில் முன்மொழியப்பட்ட ஆதி-திராவிடர் என்னும் பெயர், பறையருக்கு மட்டுமான
மாற்றுப்பெயரா? அல்லது பறையரைப்போல் ஒடுக்குமுறைக்குள்ளான அனைத்து மக்கட்பிரிவினரையும்
சுட்டுவதற்காக முன்மொழியப் பட்டதா? ஆதி-திராவிடர் என்னும் சொல்லாட்சி அடையாளப்
பெயராக மட்டுமே முன்மொழியப்பட்டதா? அல்லது ஆரியர்களுக்கு (பிராமணர்) முற்பட்டோர், சாதியற்றோர்
என வரலாற்றையும், கருத்தியலையும் பிரதிபலிக்கும் நோக்கத்துடனும் அப்பெயர் முன்நிறுத்தப்பட்டதா?</span><span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;"><b><span style="color: #800180;">பஞ்சமர், பறையர் சுட்டுவது யாரை?</span></b></span><span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">ஆதி-திராவிடர் எதிர்ப்பாளர்கள் மட்டுமின்றி
பொது எண்ணமும் பிரதிபலிப்பது: பறையருக்கான<span style="mso-spacerun: yes;">
</span>மாற்றுப்பெயரே ஆதி-திராவிடர்.<span style="mso-spacerun: yes;"> </span>இக்கருத்தினை
உறுதிசெய்வதற்கு காட்டப்பட்டுவரும் ஒரேயொரு ஆதாரமான அரசாணை எண். 817 அறிவிப்பதானது
: 1. தென்னிந்தியாவிலுள்ள பண்டைய திராவிட சமூகத்தைக் குறிக்கப் பயன்படுத்தப் படும்
சொற்களான ‘பஞ்சமா<span lang="EN-US">’ </span>அல்லது ‘’பறயா<span lang="EN-US">’’ </span>அரசு
ஆவணங்களிலிருந்து நீக்கப்பட வேண்டும். அதற்குப் பதிலாக தமிழகத்தில் ஆதி-திராவிடர் என்றும்,
தெலுங்கு மாவட்டங்களில் ஆதி-ஆந்திரா என்ற சொற்களும் பயன்படுத்தப்பட வேண்டும். </span><i><span style="font-family: TAM-Shree800; mso-bidi-font-family: TAM-Shree800;">(</span>That
this Council recommends to the Government that the terms ‘Panchama’ or ‘Paraya’
used to designate the ancient Dravidian community in Southern India should be
deleted from<span style="mso-spacerun: yes;"> </span>Government records, etc.,
and the term ‘Adi-dravida’ in the Tamil and ‘Adi-andhra’ in the Telegu
districtse substituted instead’)</i><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">. </span><span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">2. அரசாங்கத்திற்கு ‘ஆதி-திராவிடர்’,‘ஆதி-ஆந்திரர்’
என்றழைப்பதில் எதிர்ப்பு இல்லை. ஆனால், பழைய அரசு ஆவணங்களை மறுமதிப்பு செய்ய
இயலாது. பஞ்சமர், பறையர் ஆகிய சொற்களுக்குப் பதில் ஆதி-திராவிடர், ஆதி-ஆந்திரர்
மற்றும் திராவிட என்ற பெயர்கள் பயன்படுத்தப்படும். </span><span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">மேற்குறிப்பிடப்பட்ட அரசாணை, ‘தென்னிந்தியாவிலுள்ள
பண்டைய திராவிடச் சமூகத்தை’ குறிப்பதற்குப் பஞ்சமர், பறையர் ஆகிய பெயர்கள் பயன்படுத்தப்
படுவதாகத்தான் கூறுகிறது; மாறாக ‘பறையர்’ என்றழைக்கப்படும் பிரிவினரையோ அல்லது ‘அவர்களை
மட்டுமே’ குறிப்பதற்காகவோ அல்ல என்பது தெளிவு. இருப்பினும்கூட அது பறையரை மட்டுமே
குறிக்கப்பயன்படுத்தப்பட்டது என்ற வாதம் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில்
காலனிய ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சியின் நிர்வாகத்தேவைக்கு சாதிகளைக் கணக்கெடுத்த பொழுது
நால் வருணத்திற்குள்ளே இருந்தோரை குறிப்பிட்ட பெயரில் பதிவு செய்வதில் சிக்கல் எழுந்திருக்கவில்லை.
இவர்கள் எவ்வாறு அழைக்கப்பட வேண்டும் என்று மநு வரையறை செய்திருப்பது இச்சிக்கலற்ற
தன்மைக்குக் காரணம். ஆனால், நால்வருணத்திற்கு வெளியே இருந்த மக்கள் பிரிவினரைக்
குறிப்பாக உச்சபட்ச தீண்டாமைக் கொடுமையை அனுபவித்து வந்த மக்களை என்ன பெயரில் அழைப்பது
என்ற சிக்கல் காலனிய ஆட்சியாளர்களின் முன்னெழுந்தது. அவர்கள் இம்மக்களை ‘’பறையா’’,
‘’சாதிக்கு வெளியேயுள்ளோர்’’ என்றே அழைத்தனர் </span><i><span style="font-family: TAM-Shree800; mso-bidi-font-family: TAM-Shree800;">(</span>Simon Charsley,1996: 5)</i><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">. 1871ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பில்- பறையா, பள்ளன், சக்லெர் (சக்கிலியர்),
தோட்டி போன்றோர் பறையாஸ் </span><i><span style="font-family: TAM-Shree800; mso-bidi-font-family: TAM-Shree800;">(</span>Pariahs) </i><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">என்பதின் உட்பிரிவு- என்றே ஆங்கிலேயர்கள்
கருதியுள்ளனர் </span><i><span style="font-family: TAM-Shree800; mso-bidi-font-family: TAM-Shree800;">(</span>Census of 1871, 1874:170)</i><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">. 1881ஆம் ஆண்டு மக்கள்
தொகைக் கணக்கெடுப்பின் போதும் பள்ளர் மற்றும் சக்கிலியர் ‘’பறையா’’ என்றே வகைப்படுத்தப்பட்டனர்.
இது தவறு, அவர்கள் பறையரிலிருந்து வேறுபட்ட பிரிவினர் என்றும் அவர்களை தனித்தனியே வகைப்படுத்த
வேண்டும் என்றும் உணர்ந்தனர் </span><span style="font-family: TAM-Shree800; mso-bidi-font-family: TAM-Shree800;">(</span><i>F.A. Nicholson,1887). </i><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">1891ஆம் ஆண்டு
கணக்கெடுப்பில் பள்ளர்கள் உட்பிரிவு வாரியாக கணக்கெடுக்கப்பட்டிருக்கின்றனர் </span><span style="font-family: TAM-Shree800; mso-bidi-font-family: TAM-Shree800;">(</span><i>Harold
A.Stuart,1891:247)</i><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">.
‘பஞ்சமா’ என்ற பெயர் 1893ல் பயன்படுத்தப்பட்டுள்ளது </span><span style="font-family: TAM-Shree800; mso-bidi-font-family: TAM-Shree800;">(</span><i>Simon
Charsley, p.5)</i><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">.
இது பறையர், சக்கிலியர், குறவர், வில்லியர் போன்றோரைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது
</span><span style="font-family: TAM-Shree800; mso-bidi-font-family: TAM-Shree800;">(</span><i>Aloysius,
1998: 152). </i><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">கர்நாடகாவைச்
சேர்ந்த ஹோலியர்கள் தங்களுக்குப் பஞ்சமர் என்ற பெயரினை வழங்கியதற்காக சென்னை அரசாங்கத்திற்கு
நன்றி செலுத்தியிருப்பது இதற்கான எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம் </span><span style="font-family: TAM-Shree800; mso-bidi-font-family: TAM-Shree800;">(</span><i>Census
of India, 1931: 342)</i><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">.
1901, 1911 மற்றும் 1921 கணக்கெடுப்புகளில் பறையன், பள்ளன், சக்கிலியன் என்று தனித்தனியே
கணக்கெடுக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், பறையா என்ற சொல்லை ‘பறையன்’ என்ற
பிரிவினரையும் இதர ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினரையும் சுட்டுவதற்குப் பயன்படுத்துவதாக
1930களிலும் அவர்கள் கூறியிருக்கின்றனர் (அரசாணை எண். 4554). ஆதி-திராவிடா என்ற
மாற்றுப்பெயர் அரசு ஆவணங்களில் பயன்படுத்தப்பட வேண்டுமென்ற அரசாணை அமலுக்கு வந்த
பின்னர் 1931ம் ஆண்டு கணக்கெடுப்பில் ஆதி-திராவிடர், அருந்ததியர், சக்கிலியன், தேவேந்திரகுலத்தான்,
குடும்பன், மாதாரி, மாதிகா, மாலா, பள்ளன் மற்றும் பறையன் என்ற பெயர்களிலும் அம்மக்கள்
பதிவு செய்யப்பட்டிக்கின்றனர் </span><span style="font-family: TAM-Shree800; mso-bidi-font-family: TAM-Shree800;">(</span><i>Census of India 1931, Vol.XIV,
Part.II)</i><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">.
மேற்காட்டப்பட்ட ஆதாரங்கள் பஞ்சமர், பறையர் ஆகிய சொல்லாட்சிகளைக் காலனிய ஆட்சியாளர்கள்
பறையரை மட்டுமின்றித் தீண்டாமைக் கொடுமைக்குள்ளான இதர மக்களையும் குறிப்பதற்கு பயன்படுத்தியிருக்கின்றனர்
என்பதை உறுதி செய்கிறது. ஆகவே, ஆதி-திராவிடர் என்ற சொல்லாட்சி பறையருக்கு மட்டுமான
மாற்றுப்பெயரல்ல. இருப்பினும், ஆதி-திராவிடா என்ற பெயர் அமலுக்கு வந்ததற்கான
சுருக்கமான போராட்ட வரலாற்றுடனும், அப்பெயரை மையப்படுத்தி நடைபெற்ற விவாதத்தின் ஊடாகவும்
அப்பெயர் பறையருக்கு மட்டுமானதா என்பதைக் காண்பது இங்கு அவசியமாயிருக்கிறது.</span><span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;"><b><span style="color: #800180;">ஆதி-திராவிடர்: 30 ஆண்டுப் போராட்டம்</span></b></span><span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">பஞ்சமர், பறையர் ஆகிய பெயர்கள் நீக்கப்பட்டு
ஆதி-திராவிடர் என்று மாற்றம் செய்வதற்கான போராட்டம் 1892-ஆம் ஆண்டு முதலே நடைபெறத்
தொடங்கியிருக்கிறது. பி.வி. சுப்ரமண்யம் பிள்ளை, வி. முகுந்து பிள்ளை, முனுசாமி
பிள்ளை, ராஜரத்னம் பிள்ளை, சண்முகம் பிள்ளை, ஒங்காரம், முத்துகிருஷ்ண பிள்ளை, திருப்புகழ்
அம்மாள், வேணுகோபால் பிள்ளை, வாசுதேவ பிள்ளை மற்றும் எம்.சி. ராஜா ஆகியோர் மாண்றேகு
செம்ஸ்ஃபோர்டை சந்தித்து பெயர் மாற்றக் கோரிக்கையை முன்வைத்தனர். ஜனவரி 1922
ஆண்டில் 50,000 பேர் பங்கேற்ற பேரணி நடத்தப்பட்டது. சென்னை மாகாண அவை உறுப்பினர்
வீரையன் கோயம்புத்தூரில் பல போராட்டங்களை நடத்தியுள்ளார். மாநாடுகளும் கூட்டங்களும்,
தஞ்சாவூர், மலபார், திண்டுக்கல், செங்கற்கட்டு, வட மற்றும் தென் ஆற்காடு, திருச்சிராப்பள்ளி,
சேலம், கோயம்புத்தூர், நீலகிரி, மதுரை, திருநெல்வேலி, பங்களூர் மற்றும் மைசூர் ஆகிய
இடங்களில் நடத்தப்பட்டிருப்பது ஆதி-திராவிடா பெயருக்கான போராட்டம் அன்றைய சென்னை மாகாணத்தையும்
கடந்து நடந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது. இதற்கென பல அச்சிடப்பட்ட துண்டறிக்கைகளும்
வெளியிடப்பட்டன. சுமார் 30 ஆண்டுகள் போராட்டத்திற்குப் பின்னர் இறுதியாக, அரசாணை
817க்கான தீர்மானம் சென்னை மாகாண அவையில் எம்.சி.ராஜா 20 ஜனவரி 1922 அன்று முன்மொழிந்தார்
(</span><i>MLCD</i><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">,
20 ஜனவரி 1922: 2047). உண்மையில், ஆதி-திராவிடர் சொல்லாட்சிக்கான போராட்டத்தில்
பறையர் என்றழைக்கப்படும் மக்கள் அதிகம் பங்கேற்றிருக்கலாம். அவ்வாறென்றால் பறையருக்கு
மட்டுமானது தானே ‘ஆதி-திராவிடர்’ என்று வாதிடலாம். இவ்வாதம் ஏற்றுக்கொள்ளப் படுவதை
குறுக்கிடும் கேள்வி: ஆதி-திராவிடர் என்ற பெயரினை பறையர்கள் தங்களுக்கு மட்டுமே உரியதென
உரிமை கோரினரா? இச்சிக்கலுக்கான தீர்வுக்கு, சென்னை மாகாண அவையில் ஆதி-திராவிடர்
பெயர் மாற்றத்தை முன்வைத்தவர்களின் விவாதத்தைக் காண வேண்டும். </span><span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;"><b><span style="color: #800180;">ஆதி-திராவிடர்: சாதியற்றோரின் குறியீடு</span></b><o:p></o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;">பெயர் மாற்றத்திற்காக எம்.சி.ராஜா முன்வைத்தக்
காரணங்கள்: நாங்கள் நீண்டகாலமாக பறயாஸ் என்று அழைக்கப் படுகிறோம். இப்பெயரின்
தோற்றம் என்னவாக இருந்தபோதிலும் இது- மகிழ்ச்சியற்ற, புனிதத்திற்கும் மரியாதைக்கும்
எதிரானவற்றையே- வெளிப்படுத்துகிறது. சுயமரியாதைக்கான எண்ணம் எழுந்த போது நாங்கள்
இப்பெயரினை எதிர்த்து ஒரு நல்ல பெயருக்காகப் போராடினோம். எங்கள் மீது அக்கறை
கொண்ட சில இந்துக்கள் பஞ்சமர் என்ற பெயரினைப் பரிந்துரைத்தபோது பறையருக்குப் பதிலாக
அதனை ஏற்றுக்கொண்டோம். எங்கள் சுயமரியாதை அதிகரித்தபோது, பஞ்சமர் என்ற பெயரின்
ஆபத்தையும் உணர்ந்தோம். சாதியை நிராகரிக்கும்- எங்களின் இனத்தையும் தோற்றத்தையும்
புவியியல் நிலையையும் தெரிவிக்கும்- ஒரு பெயரே எங்களுக்கு வேண்டும். இம்மண்ணின்
உண்மையான மைந்தர்கள் நாங்களே. எங்களை நாங்கள் ஒருபோதும் சாதியோடு இணைத்துக்கொண்டதில்லை.
எங்களின் சங்கத்தை சிலர் பறய மகாஜன சபா என்று அழைக்க நினைத்தபோது ‘ஆதி-திராவிட சபா’
என்று அழைக்கவே நாங்கள் தீர்மானித்தோம். ஆதி-திராவிடர்கள் </span><span style="font-family: TAM-Shree800;">(</span><i>Adi-Dravidas)
</i><span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;">அல்லது
உண்மையான திராவிடர்கள் </span><span style="font-family: TAM-Shree800;">(</span><i>Original Dravidas) </i><span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;">என்று அரசாங்கத்தின் அனைத்து ஆவணங்களிலும்
பதிவுசெய்து எங்களுடைய சமூகம் மரியாதை பெறுவதற்கு உதவும்; இது எங்களைத் திராவிடர்களான
பார்ப்பனரல்லாத இந்துக்களுக்கு இணையாக நிறுத்தும் (மேலது, 2048, 2051).</span><span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">எம்.சி.ராஜாவின் உரை, ஆதி-திராவிடர்
என்ற பெயர் பறையர்களைச் சுட்டுவதற்கு முன்மொழியப்பட்டதாகவே கொள்வோம். சாதியை
புறக்கணிப்பவர்களாகத் தங்களை முன்னிறுத்தியிருந்த அவர்கள் ஆதி-திராவிடர் என்ற பெயரைப்
பறையர்களுக்கு மட்டுமென்றே சுருக்கிக்கொண்டார்களா? அல்லது தங்களையொத்த ஒடுக்குமுறையை
அனுபவித்து வந்த இதர சாதியினருக்கும் விரித்துக் கொண்டனரா? இவ்விடத்தில் பெயர்
மாற்றத்திற்கான விவாதத்தில் பங்கேற்ற எஸ்.சோமசுந்தரம் பிள்ளை முன்வைத்த கருத்துக்கள்
கவனிக்கத்தக்கவை: ஆதி-திராவிடர் என்ற சொல் தென்னிந்தியாவின் பண்டைய மக்கள் என்ற
பொருளைத் தருகிறது. ‘பறையர்’ என்ற வார்த்தை மரியாதைக்குரிய பொருளைப் பெற்றிருந்தது.
‘பறையர்’ என்பதின் பொருள் அரசனின் ஆணைக்கிணங்க போர் அறிவிப்பு செய்பவன். எதிரிகளால்
எங்கள் நாடு பிடிக்கப்பட்டபோது நாங்கள் வறுமைக்குள்ளானோம்; பெயரும் திரிபுக்குள்ளாகி
மதிப்பற்றதாக்கப்பட்டது. அனைத்து மக்களுக்கும் ஜனநாயகத்தையும் சமத்துவத்தையும் வலியுறுத்தும்
ஆதி-திராவிட மக்கள் பறையர் என்ற பெயர் நீக்கப்பட வேண்டும் என விரும்புகின்றனர்.
ஆனால், ஆதி-ஆந்திரர் என்ன பொருளைத் தருகிறது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.
சிலர் ஆதி-மலையாளி, ஆதி-கர்நாடகா என்று அழைக்கப் படுவதை விரும்பலாம். இவையனைத்தும்
திராவிட மொழிகளே (மேலது, பக். 2050). ஆதி-திராவிடர் என்ற அழைக்கிறபொழுது அது தெலுங்கு,
மலையாளி, கர்நாடகம் மற்றும் தமிழ் ஆகியவற்றுக்கும் பொருந்தும். சோமசுந்தரம் பிள்ளையின்
உரை இரண்டு முரணற்ற பொருளைத் தருகிறது: 1.பறையர் ஆதி-திராவிடர் என்றழைக்கப்பட வேண்டும்.
2. ஆதி-திராவிடரென்றால் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் மக்களையும் குறிக்கும்.
இவ்விருவர்களின் உரையும் தரும் தீர்க்கமான பதில்: ஆதி-திராவிடா என்ற பெயர் பிறரால்
சூட்டப்படாமல் அம்மக்களாகவே தாங்கள்தான் பண்டைய திராவிடர்கள் என்ற வரலாற்று உணர்வுநிலையோடு
தெரிவு செய்து கொண்ட பெயர். பறயாவுக்கு அல்லது பறையர்களுக்கு என்று மட்டுமல்லாமல்
தங்களைப்போல் ஒடுக்கு முறைக்குள்ளாகும் திராவிட மொழிகளாகிய தெலுங்கு, மலையாளம் மற்றும்
கர்நாடகம் பேசும் மக்களுக்கும் அப்பெயர் வேண்டும் என்பதுதான். எனவே, ஆதி-திராவிடா
என்ற பெயர் பறையர்களுக்கும் மட்டுமல்ல என்பதை அறுதியிட்டுக் கூறலாம். </span><span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">இம்முடிவு உதாசீனம் செய்யப்படுவதற்கான
வாய்ப்பு இருக்கிறது. அப்பெயரினை எதிர்ப்பவர்கள் தங்களுடைய சாதிப்பெயர் அந்த
அரசாணையில் குறிப்பிடப் பட்டிருக்கவில்லை என்று வாதிடலாம். எனவே, ஆதி-திராவிடர்
பறையருக்கு மட்டுமல்ல என்ற வாதத்தை நிரூபிப்பதற்குத் தேவையான ஆதாரத்தை முன்வைப்போம்.
ஆர்.வீரையன், சென்னை மாகாண அவை செயலாளருக்கு 29 ஆகஸ்டு 1924 அன்று அனுப்பிய கடிதத்தில்
குறிப்பிட்டுள்ளதாவது: பறையர், பள்ளர், சக்கிலியர் மற்றும் தொம்பா போன்ற பெயர்கள் பொது
ஆவணங்களில் இடம் பெறக் கூடாது; அவற்றிற்குப் பதிலாக ஆதி-திராவிடா மற்றும் ஆதி-ஆந்திரா
ஆகிய பெயர்கள் தான் இடம் பெற வேண்டும் என்பது குறித்துத் தீர்மானம் வரும் சென்னை
மாகாண அவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டும். இத்தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்
பட்டு ஏற்கனவே அமுல்படுத்தப்பட்ட எண். 817 சட்டம் (பொது) 25 மார்ச் 1922 என்ற அரசு
ஆணையோடு இணைத்து அமல்படுத்தப்பட்டது (அரசாணை எண்.3571). இவ்வாணை, ஆதி-திராவிடா
என்ற பெயர் பறையருக்கு மட்டுமல்லாது பள்ளர், சக்கிலியர், மாதிகா மற்றும் தொம்பா போன்ற
சாதிகளுக்கும் உரியது என்பதை உறுதி செய்கிறது. கேரளாவில் தீண்டாமைக் கொடுமைக்குள்ளான
செருமர்கள் (புலையர்) உட்பட இதர மக்கள் தங்களை ஆதி-திராவிடர் என்று அழைக்கத் தொடங்கினர்
என்பதும் இவ்விடத்தில் கவனிக்கப்பட வேண்டும் </span><span style="font-family: TAM-Shree800; mso-bidi-font-family: TAM-Shree800;">(</span><i>Census of India
1931;p.335)</i><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">.
ஆதி-திராவிடர் என்ற சொல்லாட்சி ஒரு குறிப்பிட்ட சாதிக்கு, குறிப்பாக அப்பெயரை பல போராட்டங்களுக்கிடையே
அமலுக்கு கொண்டுவந்த பறையர்களுக்கு மட்டுமின்றி, உச்சபட்ச தீண்டாமைக் கொடுமைக்குள்ளான
மக்களுக்கும் விரித்துக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. </span><span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">இச்செயல் ஆதி-திராவிடர், ‘பெயர்’ என்ற
தன்மையைக் கடந்து ஒதுக்குமுறைக்குள்ளான மக்களைத் தென்னிந்தியாவின் பண்டைய குடிகள் என்ற
வரலாற்றினை உரிமை கொண்டாடியுள்ளது. திராவிட மொழிக்குடும்பம் என்ற அடையாளத்துக்குள்
திரளுவதற்கு முயற்சித்திருக்கிறது. சமத்துவம் மற்றும் ஜனநாயகத்தை வலியுறுத்தும்
சாதியற்றோராக விரிந்திருப்பதானது ஆதி-திராவிடர் கருத்தியல் தளத்திற்குள்ளும் சென்றிருக்கிறது
என்பது தெளிவு. எனவே, ஆதி-திராவிடர் என்ற சொல்லாட்சி பறையர்களுக்கு மட்டுமே உரியது
அல்ல, அது பறையர்களால் முன்மொழியப்பட்டிருந்த போதிலும்கூட. இதனை வேறு வார்த்தையிலும்
கூறலாம்: ஆதி-திராவிடா என்ற சொல்லாட்சி தங்களுக்கு மட்டுமானது என்று ஒருபோதும் பறையர்கள்
உரிமை கொண்டாட இயலாத அதே சமயத்தில், பிறரும் அதனை பறையர்களுக்கு மட்டுமேயானது என வாதிடவும்
இயலாது. காரணம், சமத்துவத்திற்கான ஒரு கருத்தியல் ஒருபோதும் ஒரு சாதிக்கு மட்டுமே
உரியதாக இருக்கமுடியாது, அக்கருத்தியல் ஒரு குறிப்பிட்ட சாதியினரால் உற்பத்தி செய்யப்பட்ட
போதிலும்கூட. </span><span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;"><b><span style="color: #800180;">பறையர், பள்ளர், சக்கிலியர்: இழிபெயர்களுக்கெதிரான
போராட்டம் </span></b></span><span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">தங்களால் இழிபெயர்கள் எனக் கருதப்பட்டவற்றை
யார் பயன்படுத்தினாலும் அதனை எதிர்த்துப் போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன.
பறையர் என்ற சொல்லைப் பயன்படுத்துபவர்களை எதிர்த்து வழக்கும் தொடரப்பட்டிருக்கிறது
</span><span style="font-family: TAM-Shree800; mso-bidi-font-family: TAM-Shree800;">(</span><i>Aloysius,
1998: 166)</i><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">.
கட்டுரையில் மேற்குறிப்பிட்ட அரசாணை அமலுக்கு வந்த பின்னர், அரசு ஆவணங்களில்
பறையர், பள்ளர், சக்கிலியர், மாதிகா மற்றும் தொம்பா போன்ற பெயர்கள் இடம்பெற்றிருப்பதை
எதிர்த்து சென்னை மாகாண அவைக்குள் குரலெழுப்பப்பட்டிருக்கிறது. சில எடுத்துக்காட்டுக்கள்:
<o:p></o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">1. நீதிமன்ற அழைப்புக் கட்டளை மற்றும்
நீதிமன்ற விசாரணையின்போது பறையன் என்ற பெயர் குறிப்பிடப் படுவதை சென்னை மாகாண அவையில்
எதிர்த்தார் வீரையன். அவ்வாறு குறிப்பிடுவது தவறென்ற சட்ட உறுப்பினர்
(சென்னை மாகாண அவையில் </span><i>Law Member </i><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">பதவியில் இருந்தவரை சட்ட உறுப்பினர்
என இங்குக் குறிப்பிடப்படுகிறது) அதன் மீது நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார் </span><span style="font-family: TAM-Shree800; mso-bidi-font-family: TAM-Shree800;">(</span><i>MLCD,Vol.XXIV1925:767-768)</i><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">.</span><span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">2. மேட்டுப்பாளையம் ஒன்றிய வாரியம் நாகன்
என்பவருக்கு கொடுத்த அறிக்கையொன்றில் ‘சக்கிலியன்’ என்று குறிப்பிட்டிருந்ததைச் சுட்டிக்காட்டிய
வீரையன், அச்செயலை எதிர்த்தார். இத்தகைய பெயர் பயன்படுத்தக்கூடாது என்று அரசாணை
இருந்தபோதும் இன்றும் அப்பெயர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது; அரசாங்கம் அவ்வாணை அமல்படுத்துவதற்கு
தீவிர நடவடிக்கை எடுக்குமா என்ற வினவினார். உள்ளாட்சித்துறை அமைச்சர் பனகல் அரசர்,
‘இதில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது. அரசாங்கம் அத்தகைய பெயர்களைப் பயன்படுத்தாது
என்று மட்டுமே கூறியது. பிறர் அப்பெயர்களை பயன்படுத்தினால் சம்பந்தபட்டவர்களே
நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றார். ஆர்.வீரையன், ‘உள்ளாட்சி அமைப்பு அச்சிட்ட அறிக்கையில்தான்
இவ்வாறு உள்ளது; தனிநபர்கள் அதைப் பயன்படுத்தவில்லை’ என்றார். பனகல் அரசர்,
‘உள்ளாட்சி அமைப்புகளின் ஆவணங்கள் அரசாங்க ஆவணங்கள் அல்ல’ என்றார். ‘உள்ளாட்சி
அமைப்புகள் அரசாங்கத்தின் ஒரு அங்கம் இல்லையா’ என்ற கேள்வியை எழுப்பினார் ஆர்.வீரையன்.
இறுதியில், குறிப்பிட்ட சம்பவத்தை கூறினால், ‘அது குறித்து உள்ளாட்சி அமைப்புகளின்
கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும்’ என்றார் பனகல் அரசர். வீரையன் மீண்டும்
மேட்டுப்பாளையம் சம்பவத்தை குறிப்பிட்டுக் கூறினார் </span><span style="font-family: TAM-Shree800; mso-bidi-font-family: TAM-Shree800;">(</span><i>MLCD,
Vol. XXIX, 1926: 590-591)</i><span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">3. நீதிமன்றங்களிலும் காவல் நிலையங்களிலும்
பறையர் பள்ளர் சக்கிலியர் பயன்படுத்தப்படுவது குறித்து சட்ட உறுப்பினர் பதிலளிக்குமாறு
வீரையன் கோரினார். குறிப்பிட்ட சம்பவங்களைக் கவனத்திற்கு கொண்டு வந்தால் நடவடிக்கை
எடுக்கப்படும் என்று சட்ட உறுப்பினர் தெரிவித்தார் </span><span style="font-family: TAM-Shree800; mso-bidi-font-family: TAM-Shree800;">(</span><i>MLCD,
Vol.XXX, 1926:248)</i><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">.
வீரையன் சென்னை மாகாண அவைக்குள் பறையன், பள்ளன், சக்கிலியன் போன்ற பெயர்கள் பயன்படுத்தப்படுவதை
எதிர்த்து போராடியதற்கு மேற்குறிப்பிட்ட எடுத்துக்காட்டுக்கள் போதுமானது. இதிலிருந்து
அறிந்துகொள்ள வேண்டியது: தீண்டாமைக் கொடுமைக்குள்ளான மக்களின் பிரதிநிதிகளாகச் சென்னை
மாகாண அவை உறுப்பினர்களானோர் பறையர், பள்ளர், சக்கிலியர் என்று பிளவுபடுத்தாமல் அனைவரையும்
ஆதி-திராவிடர்களாகவே கருதினர் என்பது தெளிவு. </span><span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;"><b><span style="color: #800180;">ஆதி-திராவிடர்: சாதிக்கெதிரான சமத்துவக்
கருத்தியல்</span></b></span><span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">கட்டுரையில் காட்டப்பட்டிருக்கின்ற மேற்கோள்கள்
பஞ்சமர், பறையர் ஆகியவற்றிற்கு மாற்றாக ஆதி-திராவிடர் என்ற பெயர், பறையர்களின் போராட்டத்தினால்
விளைந்திருப்பினும்கூட, அது பறையர்களுக்கு மட்டுமே உரியது அல்ல; மாறாக உச்சபட்சத் தீண்டாமைக்
கொடுமைக்குள்ளான பள்ளர், சக்கிலியர் போன்ற சாதிகள் அனைவருக்குமான பெயராகக் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
ஆதி-திராவிடர் என்ற சொல்லாட்சி தீண்டாமை ஒடுக்குமுறைக்குள்ளான மக்களின் பெயராக மட்டுமின்றி
அது -சாதியைப் புறக்கணிப்பவர்கள், சமத்துவத்தையும் ஜனநாயகத்தையும் வலியுறுத்துபவர்களின்-
பெயராக இருந்திருக்கிறது. மேலும், அப்பெயர் திராவிடர்களின் ஒற்றுமைக்கானதாகவும் ஆரியர்களுக்கு
(பார்ப்பனர்கள்) எதிரானதாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ‘ஜாதிபேதத்துக்கும்
ஜாதிக் கட்டுப்பாட்டுக்கும் உட்படாதவர்களும், எக்காலத்துக்கும் யதார்த்தமும் உறுதியும்,
தருமசிந்தனையும் குடிகொண்டவர்களாகிய நம்மவர்கள்’ என்ற பறையர்களின் பகிரங்க அறிவிப்பு,
ஆதி-திராவிடர் சொல்லாட்சியின் அரசியலுக்கு சாட்சி (திராவிட மகாஜன சங்கம் மற்றும் மெட்ராஸ்
பறையா மகாஜன சங்கம் 1916 ஆண்டில் வெளியிட்ட துண்டறிக்கை). ஆதி-திராவிடாவின்
இலக்கு, திராவிடர்களான பார்ப்பனரல்லாத இந்துக்களுக்கு இணையாகத் தாங்கள் வரவேண்டும்
என்பதே, மாறாக இந்துமயமாக்கல் (பார்ப்பனீயம்) அல்ல. இந்த லட்சியத்திற்கு பறையர்,
பள்ளர், சக்கிலியர் போன்ற மக்களை ஒரு குடையின் ஒருங்கிணைக்கும் முயற்சியே ஆதி-திராவிடர்
என்ற கருத்தியல். இக்கருத்தியலை முன்னெடுத்தவர்கள் பெரும்பாலும் பறையர் பிரிவினைச்
சேர்ந்தவர்கள் என்பதால், அவ்வர்க்கம் அப்பெயரை தங்களுக்கு மட்டுமே உரியது என்று உரிமை
பாராட்டாதிருந்த போதிலும் கூட, அது பறையர் சாதிக்கான மாற்றுப்பெயர் என்ற பார்வை தவறெனக்
கட்டுரையில் மெய்ப்பிக்கட்டிருக்கிறது. </span><span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">சமத்துவத்திற்கும் ஜனநாயகத்திற்குமான
கருத்தியலின் உருவாக்கத்தில் அல்லது அக்கருத்தியலை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தை நிறுவுவதற்காகப்
போராடும் ஒரு இயக்கத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியினர் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட சாதியினர்
பங்கேற்கின்ற பொழுது, அம்மக்கட் பிரிவினர் அல்லாத பிறர் அக்கருத்தியலை அல்லது அவ்வியக்கத்தை
அதில் பங்கேற்றிருக்கின்ற சாதிக்கு அல்லது சாதிகளுக்கு மட்டுமேயானது என்று பார்ப்பதும்
அதனை பரப்புவதுமான செயலில் இறங்குவது இந்திய சமூக அமைப்பில் புதிதானதொன்று அல்ல.
இடதுசாரிகள் தமிழகத்தில் விவசாயத் தொழிலாளர்களை ஒன்றிணைத்துப் போராடிய போது அவ்வியக்கத்தில்
கூலித்தொழிலாளிகளாகவும் பண்ணையடிமைகளாகவுமிருந்த பறையர், பள்ளர் அதிகமாக இருந்ததால்
இடதுசாரி இயக்கம் ‘பறையன் கட்சி’, ‘பள்ளன் கட்சி’ என்றே பிறரால் அடையாளப்படுத்தப்பட்டதனை
இங்கே சுட்டிக் காட்ட வேண்டும் </span><span style="font-family: TAM-Shree800; mso-bidi-font-family: TAM-Shree800;">(</span><i>Saraswathi Menon, 1979:408). </i><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">ஆதி-திராவிடர்
என்ற கருத்தியலைப் பறையர்களுக்கான பெயர் என்று இன்று அடையாளப்படுத்தப்படுவதற்கும் இடதுசாரி
இயக்கம் ‘பறையன் கட்சி’, ‘பள்ளன் கட்சி’ என்று அன்று அடையாளப்படுத்தப்பட்டதற்கும்
இடையில் காலம் மட்டும் வேறுபாடே தவிர, பார்வை ஒன்றுதான். இந்நிலையை இவ்வாறு கூறலாம்:
தமிழக/ இந்திய சாதிய சமூக அமைப்பில் அதனை புறக்கணித்துவிட்டு, சமத்துவத்தை வலியுறுத்தும்
முற்போக்கு கருத்தியலை அல்லது இயக்கத்தை ஒரு குறிப்பிட்ட சாதிக்கு மட்டுமே என்று அடையாளப்படுத்துவதன்
மூலமும் ஏற்றத்தாழ்வான சாதிய அமைப்பு தொடர்ச்சியாய் நிலைநிறுத்தப்பட்டு வருகிறது. </span><span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: center;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;"><span style="color: #800180;"><span style="mso-spacerun: yes;"> </span>(கட்டுரையை வாசித்து ஆலோசனை வழங்கிய <span style="mso-tab-count: 1;"> </span>பேராசிரியர்கள் ஆ.தனஞ்செயன், சி.லக்ஷ்மணன், ஆய்வு
மாணவர் ராமஜெயம் ஆகியோருக்கு நன்றி) </span> <o:p></o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;"><o:p> </o:p></span><span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;">1. முதன்மைச் சான்று</span></p>
<p class="MsoNormal" style="line-height: 13.0pt;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;"> </span><i><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 10.0pt;">GO. </span></i><span style="font-family: TAM-Shree800; font-size: 10.0pt; mso-bidi-font-family: TAM-Shree800;">817,
</span><i><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 10.0pt;">Law
(General)</span></i><span style="font-family: TAM-Shree800; font-size: 10.0pt; mso-bidi-font-family: TAM-Shree800;">,<b> </b>25 </span><i><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 10.0pt;">March </span></i><span style="font-family: TAM-Shree800; font-size: 10.0pt; mso-bidi-font-family: TAM-Shree800;">1922.
<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="mso-layout-grid-align: none; text-autospace: none;"><i><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 10.0pt;">GO. </span></i><span style="font-family: TAM-Shree800; font-size: 10.0pt; mso-bidi-font-family: TAM-Shree800;">3571,
</span><i><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 10.0pt;">Law
(General)</span></i><span style="font-family: TAM-Shree800; font-size: 10.0pt; mso-bidi-font-family: TAM-Shree800;">, 16 </span><i><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 10.0pt;">December </span></i><span style="font-family: TAM-Shree800; font-size: 10.0pt; mso-bidi-font-family: TAM-Shree800;">1924.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="mso-layout-grid-align: none; text-autospace: none;"><i><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 10.0pt;">GO. </span></i><span style="font-family: TAM-Shree800; font-size: 10.0pt; mso-bidi-font-family: TAM-Shree800;">4554,
</span><i><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 10.0pt;">Law
(General), </span></i><span style="font-family: TAM-Shree800; font-size: 10.0pt; mso-bidi-font-family: TAM-Shree800;">28 </span><i><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 10.0pt;">October</span></i><span style="font-family: TAM-Shree800; font-size: 10.0pt; mso-bidi-font-family: TAM-Shree800;">
1930.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="mso-layout-grid-align: none; text-autospace: none;"><i><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 10.0pt;">GO. </span></i><span style="font-family: TAM-Shree800; font-size: 10.0pt; mso-bidi-font-family: TAM-Shree800;">1802,
</span><i><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 10.0pt;">Law
(General), </span></i><span style="font-family: TAM-Shree800; font-size: 10.0pt; mso-bidi-font-family: TAM-Shree800;">20 </span><i><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 10.0pt;">April</span></i><span style="font-family: TAM-Shree800; font-size: 10.0pt; mso-bidi-font-family: TAM-Shree800;"> 1931<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="mso-layout-grid-align: none; text-autospace: none;"><i><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 10.0pt;">GO</span></i><span style="font-family: TAM-Shree800; font-size: 10.0pt; mso-bidi-font-family: TAM-Shree800;">.
1458, </span><i><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 10.0pt;">Law
(General)</span></i><span style="font-family: TAM-Shree800; font-size: 10.0pt; mso-bidi-font-family: TAM-Shree800;">, 11 </span><i><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 10.0pt;">April</span></i><span style="font-family: TAM-Shree800; font-size: 10.0pt; mso-bidi-font-family: TAM-Shree800;"> 1932.</span><span style="font-family: TAM-Shree800; font-size: 10pt;"> </span></p>
<p class="MsoNormal" style="mso-layout-grid-align: none; text-autospace: none;"><i><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 10.0pt;">MLCD,</span></i><span style="font-family: TAM-Shree800; font-size: 10.0pt; mso-bidi-font-family: TAM-Shree800;">
20 </span><i><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 10.0pt;">January</span></i><span style="font-family: TAM-Shree800; font-size: 10.0pt; mso-bidi-font-family: TAM-Shree800;">
1922<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="mso-layout-grid-align: none; text-autospace: none;"><i><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 10.0pt;">MLCD, Vol. XXIV
1925. </span></i><span style="font-family: TAM-Shree800; font-size: 10.0pt; mso-bidi-font-family: TAM-Shree800;"><o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="mso-layout-grid-align: none; text-autospace: none;"><i><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 10.0pt;">MLCD, Vol. XXIX,
1926.</span></i><span style="font-family: TAM-Shree800; font-size: 10.0pt; mso-bidi-font-family: TAM-Shree800;"><o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="mso-layout-grid-align: none; text-autospace: none;"><i><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 10.0pt;">MLCD, Vol. XXX,
1926. </span></i><span style="font-family: TAM-Shree800; font-size: 10.0pt; mso-bidi-font-family: TAM-Shree800;"><o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="mso-layout-grid-align: none; text-autospace: none;"><i><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 10.0pt;">MLCD, 0</span></i><span style="font-family: TAM-Shree800; font-size: 10.0pt; mso-bidi-font-family: TAM-Shree800;">5
</span><i><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 10.0pt;">August
</span></i><span style="font-family: TAM-Shree800; font-size: 10.0pt; mso-bidi-font-family: TAM-Shree800;">1932.</span><span style="font-family: TAM-Shree800; font-size: 10pt;"> </span></p>
<p class="MsoNormal" style="mso-layout-grid-align: none; text-autospace: none;"><i><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 10.0pt;">Census of the
Madras Presidency 1871 Vol.1(Madras: 1874)</span></i><span style="font-family: TAM-Shree800; font-size: 10.0pt; mso-bidi-font-family: TAM-Shree800;"><o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="mso-layout-grid-align: none; text-autospace: none;"><i><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 10.0pt;">Census of India
1931 Vol. XIV, Part. I</span></i><span style="font-family: TAM-Shree800; font-size: 10.0pt; mso-bidi-font-family: TAM-Shree800;"><o:p></o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><i><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 10.0pt;">Census of India 1931, Vol. XIV,
Part. II</span></i><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;"><o:p></o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">யாதவமித்ரன் (மே-ஜூன், 1930).<o:p></o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">தமிழ் ஹரிஜன் தொகுதி 14 (ஏப்ரல்:
1946). <o:p></o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">தினமணி, 17 நவம்பர் 2007.<o:p></o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">தினகரன், 19 நவம்பர் 2007. </span><span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">2. இரண்டாம் நிலைச் சான்று<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="mso-layout-grid-align: none; text-align: justify; text-autospace: none;"><i><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 10.0pt;">Aloysius,
G. Religion as Emancipatory Identity: A Buddhist Movement Among the Tamils
Under Colonialism (New Delhi: New Age, 1998).</span></i><i><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 10.0pt;"><o:p> </o:p></span></i></p>
<p class="MsoNormal" style="mso-layout-grid-align: none; text-align: justify; text-autospace: none;"><i><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 10.0pt;">Bayly,
Susan. Caste, Society and Politics in India (Cambridge: Cambridge University
Press, 2000).</span></i><i><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 10.0pt;"><o:p> </o:p></span></i></p>
<p class="MsoNormal" style="mso-layout-grid-align: none; text-align: justify; text-autospace: none;"><i><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 10.0pt;">Charsley,
Simon. “Untouchable”: What is in a Name?’, The Journal of the Royal
Anthropological Institute, Vol. 2, No. 1 (March: 1996).</span></i><i><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 10.0pt;"><o:p> </o:p></span></i></p>
<p class="MsoNormal" style="mso-layout-grid-align: none; text-align: justify; text-autospace: none;"><i><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 10.0pt;">Deliege,
Robert.<span style="mso-spacerun: yes;"> </span>The World of Untouchables:
Paraiyars of Tamil Nadu (Delhi: Oxford University Press, 1997).</span></i><i><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 10.0pt;"><o:p> </o:p></span></i></p>
<p class="MsoNormal" style="mso-layout-grid-align: none; text-align: justify; text-autospace: none;"><i><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 10.0pt;">Gooptu,
Nandini. Swami Acchutanand and the Adi Hindu Movement (New Delhi, Critical
quest, 2006).</span></i><i><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 10.0pt;"><o:p> </o:p></span></i></p>
<p class="MsoNormal" style="mso-layout-grid-align: none; text-align: justify; text-autospace: none;"><i><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 10.0pt;">Menon,
Saraswathi. ‘Historical Development of Thanjavur Kisan Movement: Interplay of
Class and Caste Factors’, EPW,<span style="mso-spacerun: yes;"> </span>Vol. XIV,
Nos. 7 and 8 (1979).</span></i><i><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 10.0pt;"><o:p> </o:p></span></i></p>
<p class="MsoNormal" style="mso-layout-grid-align: none; text-align: justify; text-autospace: none;"><i><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 10.0pt;">Nicholson,
F.A. Manual of the Coimbatore district in the Presidency of Madras (Madras:
Government Press, 1887).</span></i><i><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 10.0pt;"><o:p> </o:p></span></i></p>
<p class="MsoNormal" style="mso-layout-grid-align: none; text-align: justify; text-autospace: none;"><i><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 10.0pt;">Omvedt,
Gail. ‘The Anti-Caste Movement and the Discourse of Power’, Race and Class,
Vol. 33, No. 2 (1991).<o:p></o:p></span></i></p>
<p class="MsoNormal" style="mso-layout-grid-align: none; text-align: justify; text-autospace: none;"><i><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 10.0pt;"><o:p> </o:p></span></i><i><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 10.0pt;">Ram,
Ronk. ‘Untouchability, Dalit Consciousness, and the Ad Dharm Movement in
Punjab’, Contributions to Indian Sociology, Vol. 38, No. 3 (2004).</span></i></p>
<p class="MsoNormal" style="mso-layout-grid-align: none; text-align: justify; text-autospace: none;"><i><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 10.0pt;"><o:p> </o:p></span></i><i style="text-align: left;"><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 10.0pt;">Stuart, Harold
A. Census of India 1891 Vol. XIII.</span></i></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;">டாக்டர் அம்பேத்கர்: பேச்சும் எழுத்தும்
தொகுதி 10 (புது தில்லி: டாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷன், 1997).</span><span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;"> </span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">சீதாராம், திருலோக, மனுதர்ம சாஸ்திரம்
(சென்னை: அலைகள், 2000).<o:p></o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;"><o:p> </o:p></span></p>
<p class="MsoNoSpacing" style="margin-left: 36.0pt; mso-list: l0 level1 lfo1; text-align: justify; text-indent: -18.0pt;"><!--[if !supportLists]--><span style="color: red;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;"><span style="mso-list: Ignore;">-<span style="font: 7.0pt "Times New Roman";"> </span></span></span><!--[endif]--></span><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;"><span style="color: red;">புதுவிசை, இதழ்
19, ஜன-மார்ச் 2008 </span><o:p></o:p></span></p><br /><p></p>புதுவிசைhttp://www.blogger.com/profile/09276344793619872435noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8111967010823738396.post-21053199883333791082020-04-25T06:27:00.001-07:002020-04-25T06:29:33.203-07:00அழகின் அரசியல் - பிரளயன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFi2o7PocPXJZVFeHAtSF_k2jjc3jzK0xtKXk9VV8OOaBMMGgqvrsyhyphenhyphenic8HRzcaKTbJClMp7jZGlDkvqDSOgKiIFG8f9Xsu-n-Zxn1xNRRHVQFYnHLbZCv3TS9aJtXpo5WMDWivCdqF7h/s1600/2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="194" data-original-width="259" height="297" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFi2o7PocPXJZVFeHAtSF_k2jjc3jzK0xtKXk9VV8OOaBMMGgqvrsyhyphenhyphenic8HRzcaKTbJClMp7jZGlDkvqDSOgKiIFG8f9Xsu-n-Zxn1xNRRHVQFYnHLbZCv3TS9aJtXpo5WMDWivCdqF7h/s400/2.jpg" width="400" /></a></div>
<div class="MsoNoSpacing" style="text-align: left;">
<div style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><span style="font-size: large;">ப</span></span><span style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;">ழைய தமிழ்த்திரைப்படங்களான எம்.ஜி.ஆர் நடித்த வேட்டைக்காரன், சிவாஜி நடித்த ‘திருவிளையாடல்<span lang="EN-US">’ </span>படங்களைப்
பார்த்திருக்கிறீரா? இவ்விரு படங்களிலும் ‘சாவித்திரி<span lang="EN-US">’</span>தான்
கதாநாயகி இப்படங்களில் நடிக்கிற போது சாவித்திரி சதைபோட்டு பூசிய உடம்பாய் பார்க்க
சற்று எடை கூடியவராய்த் தெரிவார். எனினும் ரசிகர்கள் இவற்றையெல்லாம் பொருட்படுத்தவேயில்லை. இப்படங்களை பெருத்த வெற்றி பெறச்செய்தனர்.</span></div>
</div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">அதேபோல், 70களில் வெளியான கே.ஆர்.விஜயா
நடித்த படங்களும் இப்படித்தான். சிவாஜியுடன் நடித்த ‘பாரதவிலாஸ்<span lang="EN-US">’</span>,எம்.ஜி.ஆருடன்
நடித்த ‘நல்லநேரம்<span lang="EN-US">’ </span>இவற்றிலிலெல்லாம் கே.ஆர்.விஜயா, இரட்டைநாடி
உடம்புள்ளவராய் சற்று எடைகூடியவராய்த்தான் தெரிவார். பாரதவிலாஸ் படத்தில் தம்பதியரான
சிவாஜி-கே.ஆர்.விஜயாவுக்குள் பலத்த வாக்குவாதம் நடப்பதாக ஒரு காட்சி;அதில் இப்படி
ஒரு வசனம் வரும். சண்டையின் உச்சக்கட்டத்தில் கே.ஆர்.விஜயா, “மொத்தத்துல என்னை உங்க
ளுக்குப் பிடிக்கல அவ்வளவுதானே?” என்று கத்துவார். பதிலுக்கு சிவாஜி அவரை ஏறஇறங்கப்
பார்த்துவிட்டு கைகளால் அவர் உருவத்தை பாவனை செய்து காட்டியபடி, “ஆமாம் மொத்தத்துல
உன்னைப்பிடிக்கல!” என்பார். தியேட்டர் முழுதும் ’கொல்<span lang="EN-US">’</span>லெனச் சிரிக்கும்.
அவரது உருவத்தை கிண்டல் செய்கிற மாதிரி காட்சிகள் இருந்தாலும்கூட மக்கள் அத்திரைப்படங்களில்
கே.ஆர்.விஜயாவை ரசித்தனர். <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">சாவித்திரிக்கும் கே.ஆர்.விஜயாவுக்கும்
அந்தக்காலத்தில்<span style="mso-spacerun: yes;"> </span>மிகப்பெரும் ரசிகர் பட்டாளமே
உண்டு. நான் கல்லூரியில் படிக்கிறபோது எங்களுக்கு ஆங்கில ஆசிரியர் ஒருவர் இருந்தார்,
அவர் ஓர் ஆங்கிலோ இந்தியர். தமிழை தட்டுத்தடுமாறித்தான் பேசுவார். உலக சினிமாவைப் பற்றி
கொஞ்சம் ஞானம் உள்ளவர் அவர். வகுப்பறையில் அத்திரைப்படங்களைப் பற்றியெல்லாம் பேசுவார்.
எப்போதாவது தமிழ்ப்படங்களைப்பற்றி பேசினால் சாவித்திரியைப் பற்றி தான் அதிகம் பேசுவார்.
சாவித்திரியின் தீவிர ரசிகர் அவர். சாவித்திரி நடிக்கிற படங்களையெல்லாம் மூன்று நான்கு
முறை பார்த்துவிடுவாராம். சாவித்திரியை அந்தக்காலத்து ஹாலிவுட் நடிகை ‘கேத்தரின் ஹெப்பர்ன்<span lang="EN-US">’</span>னோடு ஒப்பிட்டுப்பேசுவார். இந்தக் கதைகளையெல்லாம் அவர் எங்களிடம்
பேசுகிறபோது சாவித்திரி ஃபீல்டிலேயே இல்லை என்பது வேறு விஷயம். அது ஸ்ரீதேவி ஸ்ரீப்ரியா
காலம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">இன்று சாவித்திரி போலவோ, கே.ஆர்.விஜயா
போலவோ தோற்றமுள்ள ஒருவர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடித்துவிட முடியுமா? இந்தக்
கேள்வியே பலருக்கு நகைப்புக்கிடமாகத் தோன்றலாம். ஏனெனில் காலம் அப்படி மாறிவிட்டது.
அழகு பற்றிய கருத்தாக்கங்களும் மாறிவிட்டன. பென்சில் போன்ற குச்சியான உடல்வாகு, இடுப்பு
எலும்புகள் தெரிய ஒட்டிய வயிறு, காலர் எலும்புகள் துருத்திக்கொண்டிருக்கும் கழுத்து,
தேவையான இடங்களில் மட்டும் மிதமான சதைப்பிடிப்பு.. இவைதாம் இன்று அழகிய பெண்ணின் இலக்கணங்கள்
என்றாகிவிட்டது. ’ஒல்லிப்பிச்சான்<span lang="EN-US">’</span>, ’எலும்பி<span lang="EN-US">’ </span>என்று சொல்வதெல்லாம் பழைய கதை. இன்று இவைதாம் அழகிய பெண்ணின் லட்சணங்கள்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">சற்று பருமனாக இருந்துவிட்டாலோ லேசாக
கொஞ்சம் வயிற்றில் சதை போட்டு விட்டாலோ பெண்கள்! அதுவும் படித்த நடுத்தரவர்க்கத்துப்
பெண்கள் என்னமாய்த் தவித்துப் போகிறார்கள் தெரியுமா? ஹெல்த் கிளப்பிற்குப் போவது, ஃபிட்னஸ்
கிளப்பிற்கு போவது, மருத்துவ ஆலோசனைகள் பெறுவது, டயட்டில் இருக்கிறேனென்று பட்டினி
கிடப்பது எனப் பலவிதமான சாகஸங்களில் ஈடுபடுகிறார்கள். உடல் நலத்தைப் பேணுவது என்பது
இங்கு தோற்றத்தைப் பேணுவது என்பதாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. </span><span style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;">இது ஒருபக்கம், மறுபக்கத்தில், தனது
உடல் பருமன் பற்றி கவலைப்படாமல் பொருட்படுத்தாமல் இருக்கும் பெண்கள்மீது சோம்பேறி!,
உடல்நலம் பேணுவதில் அக்கறையற்றவள்!</span><span style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;"> </span><span style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;">தின்னுங்கூலி
என்றெல்லாம் சுலபமான</span><span style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;"> </span><span style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;">தீர்ப்புகள் எழுதப்பட்டு விடுகின்றன.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><span style="font-size: 12pt;">வேலைக்குப்போகிற பெண்கள், ‘கேரீர்</span></span><span lang="EN-US" style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;">’ </span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><span style="font-size: 12pt;">பெண்கள், சமூக ஏணியில்</span></span><span style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;">
</span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><span style="font-size: 12pt;">வெற்றியின் படிக்கட்டுகளில் ஏறத்துடிக்கும் பெண்கள் இவர்களுக்கெல்லாம் ‘உடல்
பருமன்</span></span><span lang="EN-US" style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;">’ </span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><span style="font-size: 12pt;">என்பது மிகப்பெரும் “தடைக்கல்</span></span><span lang="EN-US" style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;">” </span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><span style="font-size: 12pt;">என்றே
அறிவுறுத்தப்படுகிறது. இதனால் மனஉளைச்சலுக்கும், தாழ்வுணர்ச்சிக்கும் உடல் பருமன் கொண்ட
பெண்கள் ஆளாக்கப்படுகின்றனர். உண்மையில் இந்த ‘உடல் பெருக்கம்</span></span><span lang="EN-US" style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;">’</span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><span style="font-size: 12pt;"> </span>(obesity) <span style="font-size: 12pt;"> என்பது ஆரோக்கியக்கேடுதானா என்பதே சர்ச்சைக்குரிய விஷயம்.<o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">ஒருவர் அவரது உயரத்திற்கும் வயதிற்கும்
ஏற்ப இருக்கவேண்டிய எடையைவிட இருபது சதம் கூடுதலாக எடை கொண்டிருப்போரை உடல் பெருத்தவர்
என்று சொல்லலாம். ‘டயாப்படீஸ் - டைப் -2’ என்கிற நீரிழிவுக் குறைபாடு, மற்றும் உயர்
ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இக்கூடுதலான எடை ஆபத்தை உண்டாக்கலாம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">முறையான மருத்துவ ஆலோசனைகளும் சிகிச்சையும்
பெற்று, உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடுகளை கொண்டுவந்து உடல் எடையை குறைக்கமுடியும்.
உடல் நலத்தைப் பேண முடியும். அதுவும் உடல் எடையை குறைக்கலாமே தவிர தனது தோற்றத்தை முழுவதுமாக
மாற்றிக்கொள்ள எல்லோராலும் இயலாது. இது அவரவர் உடல்வாகைப் பொருத்தது. ஆனால் என்ன நடக்கிறது?<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">உயர் ரத்தஅழுத்தமோ நீரிழிவுக்குறைபாடோ
இல்லாத பெண்கள் கூட ‘உடல் பருமனை<span lang="EN-US">’ </span>பெரிய பிரச்சினையாக கருதுகிறார்கள்.
டயட்டில் இருக்கிறெனென்று பட்டினி கிடந்து உடல் நலத்தைக் கெடுத்துக்கொள்வது மட்டுமல்ல,
ஃபிட்னஸ்கிளப், ஹெல்த் கிளப், என்று எந்திரங்களோடு எந்திரங்களாக தேகப்பயிற்சியில் இறங்குகிறார்கள்.
உடலை மெலிய வைப்பதற்கான ‘டயட்<span lang="EN-US">’ </span>ஆலோசனைகளில் பல ஆபத்தானவை.<span style="mso-spacerun: yes;"> </span>உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது “1000 கலோரிகளுக்கு
கீழாக உணவு உட்கொள்ளுவது அரைப்பட்டினிக்குச் சமம்.” என்று. குறிப்பாக பெண்களை இது
பலவிதமான<span style="mso-spacerun: yes;"> </span>உடல்நலக் குறைபாட்டிற்கு இட்டுச் செல்லும்.”
என்றும் சொல்கிறது. ஆனால் பல டயட் ஆலோசனைகள் 1000 கலோரிகளுக்கு குறைவான உணவையே பரிந்துரை
செய்கின்றன. <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">பலவிதமான ஆய்வுமுடிவுகள் தெரிவிப்பது
என்னவெனில், உடல் பெருக்கம் கொண்டவரனைவருமே டயட் மற்றும் தேகப்பயிற்சிகள் மூலம் உடலை
மெலியவைத்துவிட முடியாது. அவரவர் உடல்வாகைப்பொருத்தே இது அமையும் என்பதையே. ஆனால்
இந்த உண்மையை ‘மெலிந்த தேகப்பண்பாடு<span lang="EN-US">’ </span>வசதியாக மறந்துவிடுகிறது.
<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">பெண்களின் உடலமைப்பு ஆண்களைவிடக்கூடுதலாக
கொழுப்பைச் சேமித்து வைக்கிற இயல்பு கொண்டது. மாதவிடாய் காலங்களில் நிகழ்கிற உதிரப்போக்கினால்
ஏற்படும் இழப்பை ஈடுகட்ட பெண்ணுடல் கொண்டிருக்கிற தற்காப்பு அம்சம் இது. ஆனால் பெண்களை<span style="mso-spacerun: yes;"> </span>தங்களது உடல்பருமனை ஓர் அவமானமாகவும் தனது ஆளுமையின்
தோல்வியாகவும் கருதச்செய்கிறது இம்மெலிந்த தேகப் பண்பாடு. அதனால் உடல்மெலிவு முயற்சிகளில்
இறங்கி, தனது உடற்கூற்றின் இயல்புக்கு எதிரான ஒரு போராட்டத்தை நடத்த பெண்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">மேட்டிமை நாகரீகமும்,நடுத்தரவர்க்க மனோபாவமும்
இப்படியிருந்தாலும் கூட இன்றும் பெரும்பாலான மக்கள் குண்டாயிருப்பதைதான் அழகு என்று
கருதுகிறார்கள். என்னதான் தொழில்வளர்ச்சி, பெருநகரங்களின் வளர்ச்சியென்று ஏற்பட்டிருந்தாலும்
இந்திய மக்களின் உளம்<span style="mso-spacerun: yes;"> </span>‘விவசாய உளம்<span lang="EN-US">’</span>தான் என்கின்றனர் சமூகவியலாளர்கள். விவசாய உளம், செழிப்பை, வளமையைத்தான்
அழகெனக் கருதும். நமது பண்டைய சிற்பங்கள், ஓவியங்களில் வடிக்கப் பட்டிருக்கிற பெண்ணின்
தோற்றம் பருத்த உடலமைப்பைத் தான் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் மட்டுமல்ல உலகத்தின்
பல நாடுகளிலும் இப்படித்தான். ஐரோப்பிய நாடுகளிலும் கூட இப்படித்தான்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><span style="font-size: 12pt;">16ம் நூற்றாண்டைச்சேர்ந்த இத்தாலிய மறுமலர்ச்சி
யுகத்தின் ஓவியங்கள் சிற்பங்களைப் பாருங்கள். அவை மெலிந்த தேகமுடையவராக பெண்ணைச் சித்தரிக்கவில்லை.
’ரெம்பிராண்டின்</span></span><span lang="EN-US" style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;">’ </span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><span style="font-size: 12pt;">புகழ்பெற்ற ஓவியமான ‘குளிக்கும் அழகி</span></span><span lang="EN-US" style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;">’</span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><span style="font-size: 12pt;"> </span>(Bathsheba at her bath)<span style="font-size: 12pt;"> குச்சியான உடல்வாகைக்
கொண்டிருக்கவில்லை. வாளிப்பான சதைப்பிடிப்புள்ள பெண்ணாகத்தான் அவள் சித்தரிக்கப்பட்டிருக்கிறாள்.
செழிப்பும் வளமையும்தான் அவர்களுக்கும் ‘அழகு</span></span><span lang="EN-US" style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;">’</span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><span style="font-size: 12pt;">. நடிகை ‘குஷ்பு</span></span><span lang="EN-US" style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;">’</span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><span style="font-size: 12pt;">, மெலிந்த தேகம் உள்ளவரென்று சொல்லமுடியாது. ஆனால் இவருக்குத்தான்
தமிழ்நாட்டில் கோவில் கட்டப் பட்டது. இதெல்லாம் இன்று மறக்கடிக்கப்படுகிறது.<o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">சதைப்பிடிப்பற்ற மெலிந்த தேகம் எனும்
அழகுக்கோட்பாடு இன்று ஒரு மதம் போல் மட்டுமல்ல “மெலிந்த தேகமில்லாப் பெண்களுக்கு இவ்வுலகமில்லை<span lang="EN-US">” </span>என்று ‘மத அடிப்படைவாதம்<span lang="EN-US">’ </span>போலக் கோலோச்சத்
தொடங்கிவிட்டது. <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">உண்மையில் ஃபேஷன் தொழிலும், அட்வர்டைஸிங்
தொழிலும் சேர்ந்து பெற்றெடுத்த<span style="mso-spacerun: yes;"> </span>’கார்ப்பரேட்
குழந்தை தான்<span lang="EN-US">’ </span>இந்த ‘அழகுக்கோட்பாடு<span lang="EN-US">’</span>.
விளம்பரங்களும், ஃபேஷன் உலகும் ஊட்டி வளர்த்த ‘இந்த தரப்படுத்தப்பட்ட அழகைப்<span lang="EN-US">’ </span>பேணுவதற்கு, சந்தையில் நிறைய பொருட்கள் விற்கப்படுகின்றன. இந்தப்பொருட்களைத் தயாரிக்கும்
பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆண்டொன்றிற்கான டர்ன் - ஓவர் எவ்வளவு தெரியுமா? </span><span style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;">டயட் இண்டஸ்ட்ரி - 3,300 கோடி டாலர்,
காஸ்மடிக் (அழகுச்சாதனங்கள்) இண்டஸ்ட்ரி - 30,000 கோடி டாலர், </span><span style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;">காஸ்மடிக் சர்ஜரி இண்டஸ்ட்ரி</span><span style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;"> </span><span style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;">- 300 கோடி டாலர். இது அமெரிக்காவிற்கு மட்டும்.
இந்தியக்கணக்கு என்ன தெரியுமா? 2008ம் ஆண்டு 12,000 கோடி ரூபாயாக இருந்த இத்தொழில்
2012ம் ஆண்டில் 64,000 கோடியாக வளரும் என்று சொல்லப்படுகிறது. பெண்கள் தாங்கள் குண்டாயிருந்தாலென்ன ஒல்லியாயிருந்தாலென்ன என்று அலட்டிக் கொள்ளாமலிருந்துவிட்டால் என்னவாகும்?
இந்த கார்ப்பரேட் நிறுவனங்களெல்லாம் தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு போய்விடவேண்டியதுதான்.
ஆனால் பெண்கள் அலட்டிகொள்ளாமல் இருந்துவிடுவதில்லை.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. மதியம் மூன்று
மணி இருக்கும். ஒரு நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். வீட்டிலுள்ள அனை வரும் கொர்கொர்ரென்று குறட்டைவிட்டு தூங்கிக் கொண்டிருந்தார்கள். நண்பனின் தங்கை மட்டும் தூங்காமல்
டி.வி. முன்னால் உட்கார்ந்திருந்தார். என்னம்மா எல்லாரும் தூங்கறாங்க! உனக்கு தூக்கம்
வரல்லியா என்றேன். அவர் பதில் சொல்லாமல் சிரித்துக்கொண்டே எழுந்து போய்விட்டார். உறக்கம்
கலைந்த<span style="mso-spacerun: yes;"> </span>நண்பனின் தாய்தான் பதில் சொன்னார்
‘பகலில் தூங்கினா வெயிட் போட்டுடுமில்லியா, அதான் எப்பவுமே பகல்ல தூங்கமாட்டா<span lang="EN-US">’ </span>என்று.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">நண்பனின் தங்கை ஒரு தனியார் நிறுவனத்தில்
நல்ல வேலையில் இருக்கிறவர். தினமும் பகலில் நிச்சயமாய் அவரால் தூங்கமுடியாது.<span style="mso-spacerun: yes;"> </span>ஏதோ ஞாயிற்றுக்கிழமையில் பகலில் ஒரு மணி நேரம் தூங்கினால்
என்ன பெரிய பிரச்சினை வந்து உடம்பு வெயிட் போட்டுவிடப் போகிறது.? எனது நண்பனின் தங்கையைப்போல்
பல பெண்கள் இருக்கி றார்கள். பகலிலே தூங்கமாட்டார்கள். மனசுக்கு பிடித்ததை சாப்பிடமாட்டார்கள்.
அது எண்ணெய், இது கொலஸ்ட் ரால் என்று வயதானவர்கள் பத்தியம் பேணுவதைப்போல பலதை ஒதுக்குவார்கள்.
உடலைச்சீராக வைத்திருக்க பல தியாகங்களைச் செய்வார்கள். உண்மையில் இது ஒரு பண்பாடு.
இந்தப் பண்பாடு பெண்களை மறுபடியும் தியாகம் செய்யச் சொல்லுகிறது. ஏற்கனவே குடும்பத்திற்காக, கணவனுக்காக, பிள்ளைகளுக்காக தியாகங்களை செய்தவர்கள் நவீனகாலத்தில் செய்கிற
நவீன தியாகம் இது.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">இந்த மெலிந்த தேகப்பண்பாட்டிற்கு இன்னொரு
பரிமாணமும் உண்டு. உண்மையில் இந்த அழகுக்கோட்பாடுகள் பெண்கள் மீதாகத் தொடுக்கப்படுகிற
புதியதோர் வன்முறை என்கிறார்கள் பெண்ணியவாதிகள். அழகு என்பது சார்புடையது. அவரவர்
மனப்பாங்கை பொருத்தது. ஒருவருக்கு அழகாகப்படுவது மற்றொருவருக்கு படாமல் போகலாம், அழகென்பது
அவரவர் மட்டத்தில் வித்தியாசப்படுவது. இதில் எல்லோருக்கும் பொதுவான அளவுகோல்களை உருவாக்க
முடியாது. அப்படி உருவாக்குவது ஒரு வித பாசிஸத்திற்குத்தான் வழிவகுக்கும் என்கின்றனர்
இவர்கள்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">மேலும் இம்மெலிந்த தேகப்பண்பாடு உயர்த்திப்பிடிக்கும்
அழகின் இலக்கணங்களை தோற்றப்பொலிவை எல்லாப் பெண்களும்<span style="mso-spacerun: yes;"> </span>அடைவது என்பது சாத்தியமே இல்லை. மாறாக பருமனாக தோற்றமளிக்கும்
பெண்கள் பாரபட்சத்திற்கும் ஓரவஞ்சனைக்கும் ஆளாக்கப் படுவதுதான் நிகழும்! என்கின்றனர்
இப்பெண்ணியவாதிகள். இவர்கள் சொன்னது போலவே அமெரிக்காவில் பணியிடங்களில் பருமனான பெண்கள்
பாரபட்சத்திற்கு உள்ளாக்கப் படுகிறார்கள். தனது உடல் எடையைக் குறைக்காததால் ஒரு பெண்அலுவலரின் பதவி உயர்வு மறுக்கப்பட்டிருக்கிறது. இதை எதிர்த்து கலிஃபோர்னியாவின் உயர் நீதிமன்றத்தில்
வழக்கு தொடுத்து மறுக்கப்பட்ட பதவிஉயர்வை திரும்ப பெற்றுக் கொடுத்திருக்கின்றனர் இப்பெண்ணியவாதிகள்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><span style="font-size: 12pt;">மருத்துவரிடம் ஆலோசனை பெறச்செல்லும்போது,பொது
இடங்களில் க்யூவில் காத்திருக்கும் போது, வேலைக்காக, உயர்கல்விக்காக நேர்முகத் தேர்விற்குச்
செல்லும்போது எனப் பல தருணங்களில் பருமனான பெண்கள் மீது பாரபட்சங்கள் இழைக்கப்படுவது
தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன. தோற்றத்தை அடிப்படையாகக்கொண்ட பாரபட்சங்களில் </span>(Size discrimination)<span style="font-size: 12pt;"> தலையிடுவதற்காகவே பல பெண்ணிய அமைப்புக்கள்
அமெரிக்காவில் செயல்படுகின்றன.<o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">தொடக்கக்காலத்தில் பெண்ணியவாதிகள், தோற்றம்
குறித்த பாரபட்சங்களை, தரப்படுத்தப் பட்ட அழகு பற்றிய கருத்தாக்கங்களை ஒரு பிரச்சினையாக
கருதியதில்லை. 1970களின் மத்தியிலிருந்துதான் இப்பிரச்சினைகளை கையிலெடுக்கத் தொடங்கினர்.
அதுமட்டுமல்ல, காலங்காலமாக பெண்ணுடலை தனது கட்டுக்குள் வைத்திருக்க ஆணாதிக்கம் செய்த
வன்செயல்களின் நீட்சியாகத்தான் இவற்றைக் காணமுடியும் என்கின்றனர்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><span style="font-size: 12pt;">16ம் நூற்றாண்டிலிருந்து ஐரோப்பா மற்றும்
மேற்கு நாடுகளின் பிரபுத்துவ குடும்பங்களின் பெண்கள் ‘கார்சட்</span></span><span lang="EN-US" style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;">’ </span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;">(corset)<span style="font-size: 12pt;"> என்கிற இரும்பு அங்கியை அணிந்திருந்தார்கள். மத்திய கால வரலாற்றுப் பின்னணியுள்ள கதையம்சம்
கொண்ட ஹாலிவுட் திரைப்படங்களில் இப்படியொரு அங்கியை பெண்கள் அணிவதை நீங்கள் பார்த்திருக்க
முடியும். கிட்டத் தட்ட 15 முதல் 20 கிலோ வரை எடையுள்ள இரும்பிலான இவ்வங்கி, இடுப்பையும்
அடிவயிற்றையும் இறுக்கமாக அழுத்திப்பிடித்து</span></span><span style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;">
</span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><span style="font-size: 12pt;">குட்டைப்பாவாடை போல் கால்முட்டி வரை விரிந்திருக்கும்.</span></span><span style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;"> </span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><span style="font-size: 12pt;">மேலே அணியும் பாவாடை குடை போல் விரிந்து தரையில்
தவழ இந்த அங்கிதான் உதவுகிறது. வசதியாக உட்காரவோ, மூச்சுவிடவோ கூட சிலநேரத்தில் இவ்வங்கி
அணிந்தவர்கள் சிரமப்படுவர்.</span></span><span style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;"> </span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><span style="font-size: 12pt;">சிறுநீர் மற்றும்
உபாதைகளை கழிப்பதெல்லாம் கூட இவர்களுக்கு பெரும் பாடுதான். தங்களது இடுப்பையும், வயிற்றையும்
கவர்ச்சிகரமாக வைத்திருக்கவே பெண்கள் இந்த அங்கிகளை அணியக் கட்டாயப்படுத்தப்பட்டனர்.</span></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjeFEvj7VcjJ4F6Vgtwko093_JVb9A-kogBRFEvMYSz_NK4rRLVoQLwz-offcYi3x6QnM723QzlvVJ0VHgp-y_pT6dB_kIyaNWOdAzS9fuW_R9xUxrCJPA094F9jpeT2E0f47rpyA3FtnDM/s1600/wagner1.gif" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="243" data-original-width="360" height="216" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjeFEvj7VcjJ4F6Vgtwko093_JVb9A-kogBRFEvMYSz_NK4rRLVoQLwz-offcYi3x6QnM723QzlvVJ0VHgp-y_pT6dB_kIyaNWOdAzS9fuW_R9xUxrCJPA094F9jpeT2E0f47rpyA3FtnDM/s320/wagner1.gif" width="320" /></a></div>
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">அதேபோன்று, சீனாவில் பண்டைய காலத்தில்
அரச குடும்பத்தினரின், பிரபுக்கள் குடும்பத்தினரின் பெண்களது கால்களை சிறுவயதிலிருந்தே
கட்டைகளால் இறுக்கிக் கட்டி வைத்துவிடுவார்கள். இதனால் பெண்களது பாதங்கள் குறுகிச் சிறுத்துவிடும்.
சரியாக நடக்கக்கூட முடியாமல் போய்விடும். ஐரோப்பிய பிரபுத்துவ குடும்பத்து ஆண்களுக்கு
குறுகிய இடையும் ஒட்டிய வயிறும் எப்படி பாலுறவு வேட்கையைத் தூண்டியதோ அதேபோல குறுகிச்சிறுத்த
பெண்களின் பாதங்கள்தாம் பிரபுக்கள்குலச் சீனர்களுக்கு கிளர்ச்சியைத் தருமாம். குறுகிச்சிறுத்த
பாதங்கள் அமையாத சீனத்துப் பெண்களின் திருமணம் நடப்பது அவ்வளவு கடினமாம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">இது இப்படியெனில், மத்திய ஆப்பிரிக்க
நாடுகளில் பூப்ப டைந்த பெண்களின் பிறப்புறுப்பில் உள்ள ’கிளிடோரிஸ்<span lang="EN-US">’ </span>எனும் பகுதியை அறுவை சிகிச்சை செய்து எடுத்துவிடுவார் கள். பெண்களது
பிறப்புறுப்பில் விறைப்புத்தன்மையடை கிற உணர்ச்சியை வெளிப்படுத்துகிற பகுதி அதுவே.
அதனைத்தான் நீக்கிவிடுவார்கள். இது இன்றும்கூட நடக்கி றது. ஐரோப்பிய யூனியனில், மத்திய
ஆப்ரிக்க நாட்டு தூத ரகத்தில் பணியாற்றும் உயரதிகாரியொருவரின் மகளுக்கு இப்படிப்பட்ட
அறுவைச்சிகிச்சையை நடத்தியதாக ஐரோப் பாவின் புகழ்பெற்ற மருத்துவமனையொன்றின் மீது பெண்
ணியவாதிகள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">இப்படி காலங்காலமாக பெண்ணுடம்பின்மீது
செலுத்தப்படுகிற ஆதிக்கத்தின் வன்முறையின் நீட்சிதான் இந்தப்புதிய அழகுக்கோட்பாடு
என்கின்றனர் இப்பெண்ணியவாதிகள். சுருங்கச் சொல்லவேண்டுமெனில் பெண் ஒரு போகப்பொருள்;
காட்சிப்பொருள்! என்கிற பழைய கள்ளை புதிய மொந்தையில் விற்பதுதான் இந்த மெலிந்த தேகப்பண்பாடு.
தற்போது பழையகாலம் போல கட்டாயப்படுத்தியெல்லாம் பெண்ணுடம்பை தனது பார்வைக்கினியதாக
வைத்திருக்க முடியுமா? இது ஜனநாயக யுகமல்லவா! அதனால் இந்த ஆணாதிக்கச் சமூகம், பெண்களின்
ஒப்புதலோடு இச்செயல்களைத் தொடர<span style="mso-spacerun: yes;"> </span>சில வழிமுறைகளை
கண்டுபிடிக்கிறது. அதில்<span style="mso-spacerun: yes;"> </span>ஒன்றுதான் ‘பார்பி
கேர்ள்<span lang="EN-US">’ </span>பொம்மைகள். <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">மெலிந்த தேகப்பண்பாட்டை சிறுவயதிலேயே
பெண்களது மனதில் விதைக்கிற ஒரு ஏற்பாட்டை “பார்பி கேர்ள்<span lang="EN-US">” </span>பொம்மைகள் சுலபமாகச்செய்து விடுகின்றன. மெலிந்த தேகப் பண்பாடு லட்சியமாய்க் கருதுகிற
“36 - 18 -38’’ விகித உடலமைப்பை பெற்றிருக்கிற இந்த ‘பார்பி கேர்ள்<span lang="EN-US">’ </span>பொம்மைகள் இன்று பள்ளிச்சிறுமிகள் மத்தியில் மிகவும் பிரபலம்.
ஆங்கிலவழிக்கல்வி பயிலுகிற சிறுமிகளிடத்தில் மட்டுமல்ல, தமிழ் வழிக்கல்வி பயிலுகிற
அரசுப்பள்ளிகளின் சிறுமிகள் மத்தியிலும் இது பிரபலமாயிருக்கிறது. இந்த ‘பார்பி கேர்ள்<span lang="EN-US">’</span><span style="mso-spacerun: yes;"> </span>பொம்மையை வடிவமைத்தவர்
யார் தெரியுமா? அமெரிக்க ராணுவ தலைமையகமான ‘பெண்டகனில்<span lang="EN-US">’ </span>ஏவுகணைகளை
வடிவமைத்துக் கொண்டிருந்த “ஜாக் ரியான்<span lang="EN-US">” </span>என்கிற டிஸைன் எஞ்சினீயர்!.
<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhofS-b5brTz5gBGfiKPxkQtA52DdjeRSVmbG-xGWu2hWDrfZaDjhvkaJTt4b06CK08_Uvu5ngthQp0ar1Td29ObgR56T6-4i931LJqF5ruD3K4rPj35rfJJKDajTV3Udclz6-CsitUKuKo/s1600/31%252BUIrszRaL.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="300" data-original-width="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhofS-b5brTz5gBGfiKPxkQtA52DdjeRSVmbG-xGWu2hWDrfZaDjhvkaJTt4b06CK08_Uvu5ngthQp0ar1Td29ObgR56T6-4i931LJqF5ruD3K4rPj35rfJJKDajTV3Udclz6-CsitUKuKo/s1600/31%252BUIrszRaL.jpg" /></a></div>
<span lang="EN-US" style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">“</span><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">ஐயம் எ பார்பி
கேர்ள்<span lang="EN-US">” </span>என்கிற ஆங்கிலப் பாடலைத் தெரியாத பள்ளிச்சிறுமிகளை
அதுவும் ஆங்கிலவழிக்கல்வி பயிலும், வளரிளம் பருவத்துப் பெண்களை, டீன் ஏஜ் பெண்களை காண்பது
அபூர்வம். “அக்குவாரியம்<span lang="EN-US">”</span> (<span lang="EN-US" style="font-family: "calibri" , "sans-serif"; font-size: 11.0pt; line-height: 115%;">Aquarium</span>) என்கிற இசைக்குழு
உருவாக்கிய பாடல் இது. பார்பி கேர்ள் பொம்மையை பற்றிய பாடல் என்பதால் மட்டுமல்ல, இப்
பாடல் இப்படி செல்வாக்கு பெற்றதற்கு வேறு ஒரு காரண மும் உண்டு. டீன் ஏஜ் பெண்கள் பார்ட்டிகளில்
கலந்து கொள்வதையும், டேட்டிங் வைத்துக் கொள்வதையும் கொண்டாடுகிற பாடல் இது. மில்லியன்
கணக்கில் இப்பாடல் சிடிக்கள் விற்பனையாயின. ஆனால் இப்பாடலை உருவாக்கிய ’அக்குவாரியம்<span lang="EN-US">’ </span>இசைக்குழு மீது ‘பார்பி கேர்ள்<span lang="EN-US">’ </span>பொம்மையை
தயாரிக்கும் ‘மேட்டல் இங்க்<span lang="EN-US">’</span> (<span lang="EN-US" style="font-family: "calibri" , "sans-serif"; font-size: 11.0pt; line-height: 115%;">Mattel.Inc</span>) நிறுவனம்
வழக்கொன்றை தொடர்ந்தது. தனது ‘காப்பிரைட்<span lang="EN-US">’ </span>உரிமையினை ‘பேட்டண்ட்<span lang="EN-US">’ </span>உரிமையினை “அக்குவா<span lang="EN-US">” </span>இசைக்குழு அத்துமீறியதாக
‘மேட்டெல்<span lang="EN-US">’ </span>குற்றஞ்சாட்டியது.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">முதலில் கீழ்கோர்ட்டில் தொடரப்பட்ட இவ்வழக்கு
தள்ளுபடி செய்யப்பட்டது. அடுத்தடுத்து மேல்முறையீட்டுக்குச் சென்ற ஹைக்கோர்ட், சுப்ரீம்
கோர்ட் என எல்லாவற்றிலும் இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இவ்வழக்கை தள்ளுபடி செய்து
அமெரிக்க சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு மிகவும் முக்கியமானது. “பார்பிகேர்ள்<span lang="EN-US">” </span>பொம்மை சமூகத்தில் பிரபலமாகிவிட்ட ஒன்று.! பிரபலமாயிருக்கிற ஒன்றை
`பதிவு<span lang="EN-US">’</span>செய்வதும், ‘பகடி<span lang="EN-US">’ </span>செய்வதும்
கலை-இலக்கியங் களின் இயல்பு ஆகும். இதில் தலையிடுவதா னது கருத்துச் சுதந்திரத்தில்
தலையிடுவதாகி விடும். எனவே வழக்கைத் தொடர்ந்தவர்கள் இதனை பெரிது படுத்தாமல் இருப்பதே
நல்லது.!” என்று வழக்கை தள்ளுபடி செய்தது மட்டுமல்லாமல் ‘மேட்டெல்<span lang="EN-US">’ </span>நிறுவனத்திற்கு அறிவுரையும் கூறியது. இன்றும்கூட ‘காப்பிரைட்<span lang="EN-US">’ </span>மற்றும் ‘பேடண்ட் உரிமை<span lang="EN-US">’ </span>தொடர்பான வழக்குகளில்
‘மேட்டெல் இங்க், ‘அக்குவா<span lang="EN-US">’ </span>வழக்கு தொடர்பாக அமெரிக்க சுப்ரீம்
கோர்ட் அளித்த தீர்ப்பு ஒரு முக்கிய முன்னுதாரணமாகக் கருதப்படுகிறது. இவ்வழக்கு விவரங்கள்
எதைக் குறிக்கிற தென்றால், `பார்பி கேர்ள்<span lang="EN-US">’ </span>பொம்மைகள் மேற்கத்திய
சமூகத்தின், பண்பாட்டின் பிரிக்க முடியாத அம்சமாக மாறிவிட் டது என்பதைத்தான்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">நமது வாண்டுகள் மத்தியில் மிகவும் பிரபலமாயிருக்கிற
‘ஹாட் வீல்ஸ்<span lang="EN-US">’ </span>கார் பொம்மைகளும் இந்த ‘மேட்டெல் இங்க்<span lang="EN-US">’ </span>நிறுவனத்தின் தயாரிப்புகள்தாம். <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">பார்பிகேர்ள் பொம்மைகள் உருவான வரலாறு
மிகவும் சுவாரஸ்யமானது. மேட்டெல்<span lang="EN-US">’ </span>நிறுவனத்தின் மூன்று பங்குதாரர்களில் ஒருவரான ‘ரூத் ஹேண்ட்லர்<span lang="EN-US">’ </span>என்ற பெண்மணி, தான் டென்மார்க்
சென்றிருந்தபோது தனது மகள் பார்பராவுக்காக பொம்மையொன்றை வாங்கி வந்தார்.<span style="mso-spacerun: yes;"> </span>‘பில்டி லில்லி<span lang="EN-US">’ </span>எனும்
அப்பொம்மை ஒருஜெர்மானிய தயாரிப்பு. ஜெர்மனியில் பிரபலமாயிருந்த ‘காமிக்<span lang="EN-US">’ ஒ</span>ன்றின் கதாபாத்திரத்தை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப் பட்ட பொம்மை
இது. இப்பொம்மை குழந்தைகள் விளையாடுவதற்கானதல்ல. வயது வந்தோர்களுக்கான பொம்மை இது.
7 இன்ச் முதல் 12 இன்ச் அளவுவரை உள்ள பொம்மை யின் உடலமைப்பு மற்றும் அதன் விகிதாச்சாரம்
டீன் ஏஜ் பெண்களை மிகவும் கவரவே பிரபலமானது இது.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">தன் மகளுக்காக இதனை வாங்கி வந்த ரூத்
ஹேண்ட்லரின் கவனத்தை இப்பொம்மை மிகவும் ஈர்க்கவே, இப்படியொரு பொம்மையை தமது நிறுவனமே
தயாரித்தாலென்ன என்ற முடிவுக்கு<span style="mso-spacerun: yes;"> </span>வந்தார் அவர்.
மேட்டெல்<span lang="EN-US">’ </span>நிறுவனத்திடம் தனது ஆலோசனையைச் சொன்னார் அவர். மேட்டெல்
நிறுவனம் இதுவரை பொம்மைகளை தயாரித்ததுஇல்லை. வீட்டு உபயோகத்திற்கான ஃபர்னீச்சர்கள்,
உள்ளலங்காரத் திற்கான பொருட்கள் மற்றும் தட்டுமுட்டு சாமான்கள் இவற்றையே அது தயாரித்து
வந்தது. எனவே ரூத் ஹேண்ட் லரின் ஆலோசனையை ஏற்க முதலில் தயங்கிய மேட்டெல் பின்னர் இசைவு
தெரிவித்தது. பொம்மை தயாரிப்பை மேற்பார்வையிடும் பணியை ரூத் ஹேண்ட்லரிடமே ஒப்படைத்தது.
ரூத் ஹேண்ட்லர்,<span style="mso-spacerun: yes;"> </span>அமெரிக்க ராணுவத்தின் தலைமையகமான
பெண்டகனில்<span style="mso-spacerun: yes;"> </span>‘ஸ்பேர்ரோ<span lang="EN-US">’</span>,
‘ஹாவ்க்<span lang="EN-US">’</span> (<span lang="EN-US" style="font-family: "calibri" , "sans-serif"; font-size: 11.0pt; line-height: 115%;">Sparrow, Hawk</span>) போன்ற ஏவுகணைகளை
வடிவமைத்துக் கொண்டிருந்த டிஸைன் என்ஜினீயரான ‘ஜாக் ரியான்<span lang="EN-US">’ </span>என்ப
வரை அழைத்து இந்த பொம்மையை வடிவமைக்குமாறு கூறுகிறார். அவரும் பொம்மையை உருவாக்குகிறார்.
அப்பொம்மைக்கு தன் மகள் பார்பராவின் பெயரைச் சூட்டுகிறார்கள். இப்படிபிறந்ததுதான்<span style="mso-spacerun: yes;"> </span>`பார்பி கேர்ள்<span lang="EN-US">’</span>.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">பிறகு மூன்று வருடம் கழித்து பிலடெல்பியாவில்
நடக்கிற மிகப்பெரும் பொம்மைக் கண்காட்சிக்கு ‘பார்பியை<span lang="EN-US">’ </span>அனுப்புகிறது
மேட்டெல். கண்காட்சியில் பலத்த வரவேற்பைப் பெறுகிறது ‘பார்பி<span lang="EN-US">’</span>.
பார்பியை அறிமுகப்படுத்திய பத்தே ஆண்டுகளில், உலகத்தின் முன்னணியில் இருக்கிற கார்ப்பரேட்
நிறுவனங்களில் ஒன்றாக<span lang="EN-US">’</span>மேட்டெல்<span lang="EN-US">’ </span>வளர்ந்தது.
இன்றும் உலகின் ஏதேனும் ஒரு மூலையில் நொடிக்கு இரண்டு பார்பி பொம்மைகள் விற்பனையாகிக்
கொண்டிருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">பார்பியை உருவாக்குகிறபோது மேட்டெல்
நிறுவனத்தின் ரூத் ஹேண்ட்லருக்கு இப்படியொரு நோக்கம் இருந்ததோ என்னவோ! ஆனால் ஃபேஷன்
உலகமும் விளம்பர உலகமும் உருவாக்கிய மெலிந்த தேகப்பண்பாட்டின் ‘கொடிக்கப்பலாக<span lang="EN-US">’ </span>பார்பி கேர்ள் பொம்மைகள் பரிணாமம் கொண்டன. பெரும்பாலான பெண்களுக்கு
இயற்கையாக கைவரப் பெறாத, அமையச் சாத்தியமில்லாத “அழகின் அளவுகோல்களை<span lang="EN-US">” </span>பார்பி பொம்மைகள் உயர்த்திப் பிடித்தன. 36-18-33 என்ற விகிதத்தில்
பார்பி பொம்மைக்கு இருப்பது போன்ற உடலமைப்பு ஒரு பெண்ணுக்கு இருந்தால் என்னவாகும்?
<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">பின்லாந்தின் தலைநகரான ஹெல்சிங்கியில்
உள்ள மத்திய மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஓர் ஆய்வறிக்கை இவ்வாறு கூறுகிறது. “மாதவிடாய்
காலத்தில் ஏற்படும் உதிரப்போக்கை ஈடுகட்ட ஒரு பெண்ணுக்கு எவ்வளவு கொழுப்புச்சத்து தேவைப்படுகிறதோ
அதைவிட 17 முதல் 22 சதம் குறைவான கொழுப்புச்சத்தே ‘பார்பி<span lang="EN-US">’</span>போன்ற
உடலமைப்பு கொண்ட பெண்களிடத்தில் இருக்கும்!” என்று.<span style="mso-spacerun: yes;"> </span><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><span style="mso-spacerun: yes;"><br /></span></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">‘</span><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">பார்பி கேர்ள்
பொம்மைகளோடு விளையாடுகிற சிறுமிகள் ,அதன் கூந்தலை விதம் விதமாய் அலங்கரிப்பது, புதிது
புதிதாய் ஆடைகளை அணிவித்து மகிழ்வது உறங்கும்போது கட்டிபிடித்துக்கொண்டு உறங்குவது
என்று அப்பொம்மை யோடு உணர்வுபூர்வமான ஓர் உறவினை ஏற்படுத்திக் கொள்கின்றனர். டீன்ஏஜ் பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல. </span><span style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;">பார்பி கேர்ளுக்கு இருப்பது போன்ற தேக
அமைப்பை பெறுவதற்காக அவர்கள் பல முயற்சிகளில் இறங்குகின்றனர். இது அனோரெக்ஸியா (</span><span lang="EN-US" style="font-family: "calibri" , "sans-serif"; font-size: 11.0pt; line-height: 115%;">anorexia</span><span style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;">)</span><span style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;"> </span><span style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;">என்கிற மனச்சிக்கலுக்கு இவர்களை ஆட்படுத்திவிடுகிறது.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">இச்சிக்கலுக்கு ஆட்பட்டவர்கள் குறைந்த
எடையுள்ளவர்களாயிருப்பார்கள். சரியாக சாப்பிட மாட்டார்கள். அப்படி சாப்பிட்டுவிட்டாலும்
எடை கூடிவிடுமோ என்கிற பயத்தில் வலுக்கட்டாயமாக சாப்பிட்டதை வாந்தி எடுத்து விடுவார்கள். இவர்களுக்கு ஹார்மோன் பிரச்சினை, தைராய்டு பிரச்சினை எல்லாம் வந்துவிடும். சேர்ந்தால்
போல மூன்று மாதங்களுக்கு மாதவிடாய் தள்ளிப் போகும். இவையெல்லாம் தான் அனோரெக்ஸியாவின்
அறிகுறிகள்.</span><br />
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_kM6Qr0CEHUeSYBo2gTe9VX-KY_ASLH-Zcyd-CWhxkzgp2H32Fo7hvT00utXqrDoVqZK63A87vcpN8Ay1idXBWIhlieqaErB6a9olYFpEaVWxcv5sPIIZUTuy8_Hw6XdQZw8-U61cQvf-/s1600/9a3fc094df0c92fcdb5b8dd034b35059.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="280" data-original-width="800" height="112" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_kM6Qr0CEHUeSYBo2gTe9VX-KY_ASLH-Zcyd-CWhxkzgp2H32Fo7hvT00utXqrDoVqZK63A87vcpN8Ay1idXBWIhlieqaErB6a9olYFpEaVWxcv5sPIIZUTuy8_Hw6XdQZw8-U61cQvf-/s320/9a3fc094df0c92fcdb5b8dd034b35059.jpg" width="320" /></a><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">1983ல் ‘கரேன் கார்பெண்டர்<span lang="EN-US">’ </span>என்கிற பிரபலமான இளம் பாப் பாடகி உடலை மெலிய வைக்கும் முயற்சிகளில்
இறங்கி கடைசியில் மாரடைப்பில் இறந்துபோனார். அனோரெக்ஸியாவால் பீடிக்கப்பட்டிருந்த இவருக்கு
ஏற்பட்ட உடன்விளைவே இம்மாரடைப்பு. மேற்கத்திய பாப் இசை உலகினை இச்சம்பவம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 1990களில் இவரது வாழ்க்கையை பின்னணியாக கொண்டு ‘சூப்பர் ஸ்டார்<span lang="EN-US">’ </span>என்ற திரைப்படமொன்று ஹாலிவுட்டில் தயாரிக்கப்பட்டது. பெரிதும்
பேசப்பட்ட இப்படம், மெலிந்த தேகப்பண்பாட்டை கடும் விவாதத்திற்கு உள்ளாக்கியது. இச்சூழலில்தான்
பெண்ணியவாதிகள் பார்பி கேர்ள் பண்பாட்டை எதிர்த்து கண்டனக்குரல் எழுப்ப ஆரம்பித்தனர்.
பார்பி கேர்ள்<span style="mso-spacerun: yes;"> </span>பொம்மை விற்பனையாகும் கடைகளுக்குள்
புகுந்து பொம்மைகளை அடித்து நொறுக்கினர்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">“</span><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">லட்சத்தில்
ஐந்து பெண்களுக்குகூட<span style="mso-spacerun: yes;"> </span>பார்பி போன்ற உடலமைப்பு
இருக்காது. இயற்கையின் நியதி இவ்வாறிருக்கையில்<span style="mso-spacerun: yes;"> </span>மெலிந்த தேகப்பண்பாட்டை பறைசாற்றுகிற பார்பி பொம்மைகள் பெண்களின் நலனுக்கு
பெரும் கேட்டினை விளைவிக்கின்றன. பெரும்பாலான பெண்களை தாழ்வுணர்ச்சி கொள்ளச்செய்கின்றன.
மனப்பிறழ்வுக்குள்ளாக்குகின்றன. மெலிந்த தேகம் ஆரோக்கியத்தின் அடையாளமல்ல. மாறாக
அழகுச்சாதன உற்பத்தியாளர்கள், பிட்னஸ் கருவிகள் தயரிப்பாளர்கள், ஃபேஷன் நிறுவனங்கள்
மற்றும் காஸ்மடிக் சர்ஜரி நிறுவனங்கள் போன்ற கார்ர்ப்பரேட் நிறுவனங்கள் பணம் பண்ணுவதற்காக
பெண்களின் நலனை பலி கொடுக்கும் ஏற்பாடுதான் இந்த மெலிந்த தேகப்பண்பாடு<span lang="EN-US">” </span>என்றெல்லாம் கருத்துப்பிரச்சாரம் செய்ய ஆரம்பித்த னர் பெண்ணியவாதிகள்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">லிபொசக்ஷன் (<span lang="EN-US" style="font-family: "calibri" , "sans-serif"; font-size: 11.0pt; line-height: 115%;">Liposuction</span>) என்கிற
காஸ்மடிக் சர்ஜரி அதாவது உடம்பிலுள்ள கொழுப்புச் சத்தை உறிஞ்சி எடுக்கிற சிகிச்சை தற்போது
பரவலாக சர்வசாதாரணமாக செய்யப் படுகிறது. ஆனால் இது கடும் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என்பதை பலரும் உணர்வதில்லை. இருபதுகளின் இறுதியில் அல்லது முப்பதுகளில் வயதுகொண்டிருக்கும்
பெண்கள்தாம் ஏற்கனவே இதுபோன்ற உடலை மெலிய வைக்கும் முயற்சிகளில் இறங்குவார்கள். இப்போதென்னவென்றால் டீன் ஏஜ் பெண்கள்கூட இதற்கு இரையாகத் தொடங்கிவிட்டனர்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">‘</span><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">பார்பி கேர்ள்<span lang="EN-US">’ </span>மெலிந்த தேகப்பண்பாட்டை மட்டுமல்ல வெள்ளை நிற மேலாதிக்கத்தையும்
உயர்த்திப்பிடிக்கிறது ; நியாயப்படுத்துகிறது<span style="mso-spacerun: yes;">
</span>என்று பெண்ணியவாதிகள் குற்றஞ்சாட்டினர். உடனே மேட்டெல்.இங்க் நிறுவனம் என்ன
செய்தது தெரியுமா? பெண்ணியவாதிகளின் விமர்சனத்தில் இந்த ஒன்றை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டது.<span style="mso-spacerun: yes;"> </span>கறுப்பு இனச்சாயலில் ஒரு பொம்மை, செவ்விந்தியச்
சாயலில் (<span lang="EN-US" style="font-family: "calibri" , "sans-serif"; font-size: 11.0pt; line-height: 115%;">Hispanic</span>) ஒரு பொம்மை, ஆசியர்களை போன்ற அதாவது சீன, ஜப்பானியர்களைப்
போன்ற ஒரு பொம்மை (ஆசியர்கள் என்றாலே மேற்கு உலகிற்கு சீனர்களும் ஜப்பானியர்களும்தான்)<span style="mso-spacerun: yes;"> </span>இவற்றையெல்லாம் தயாரித்து சந்தைக்கு அறிமுகம் செய்தது
அதாவது நிறபேதத்தை கைகழுவிவிட்டு.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">பிறகு பேசுகிற பார்பி பொம்மைகளையும்
மேட்டெல் அறி முகப்படுத்தியது. “நான் ஃபேஷன் மாடலாகப் போகிறேன்!”.<span style="mso-spacerun: yes;"> </span>“நான் டேட்டிங் வைத்துக்கொள்ளப்போகிறேன்<span lang="EN-US">” </span>என்றெல்லாம் இப்பார்பி பொம்மைகள் பேசும். 1990களில்<span style="mso-spacerun: yes;"> </span>அறிமுகம் செய்யப்பட்ட இப்பேசும் பொம்மைகள் சிறுமிகளிடத்தில்
வெகுசீக்கிரத்தில் பிரபலமாகிவிட்டன. அப்போது பெண்ணியவாதிகள் என்ன செய்தனர் தெரியுமா?
இப்பேசும் பொம்மைகள் வைக்கப் பட்டிருக்கும் குடோனுக்குள் இரவோடிரவாக யாருக்கும் தெரியாமல்
நுழைந்து பேசுவதற்காக புரோக்ராம் செய்யப்பட்டு அப்பொம்மைகளில்<span style="mso-spacerun: yes;"> </span>பொருத்தப்பட்டிருந்த மைக்ரோ சிப்புகளை அகற்றிவிட்டு
வேறு ‘சிப்<span lang="EN-US">’</span>களை வைத்துவிட்டு வந்துவிட்டனர். அந்தப் பொம்மைகளை
வாங்கி சென்றவர்களெல்லாம் அதிர்ந்து போய்விட்டனர். ஏனெனில் அந்த பார்பி,<span style="mso-spacerun: yes;"> </span>“மெலிந்த தேகம் வேண்டுமா? விஷத்தைக்குடி! பென்சிலில்
இருக்கிற ‘லெட்<span lang="EN-US">’</span>டைத் தின்னு! பாம்புகளைச் சாப்பிடு!” என்றெல்லாம்
பேசியது. பெண்ணியவாதிகளின் எதிர்ப்புச் செயல்பாடுகளை இச்சம்பவம் பிரபலமாக்கியது என்றாலும்
பார்பி கேர்ளின் செல்வாக்கை அவற்றால் குறைக்க இயலவில்லை. <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">கடந்த பத்தாண்டுகளில் வேறொரு போக்கும்
தலையெடுத்தது. 30-22-32 என்ற அளவில் உடலமைப்பு கொண்டவர்கள் அணிவதற்கேற்ற ‘சிக்<span lang="EN-US">’</span>கெனப்பிடிக்கும் ஆடைகளை பேஷன் நிறுவனங்கள் தயாரிக்க ஆரம்பித்தன.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">இந்த உடைகளை அணிவதற்கேற்ற மெலிந்த உடல்
கொண்ட மாடல்கள் ‘ஸைஸ் ஜீரோ<span lang="EN-US">’</span> (<span lang="EN-US" style="font-family: "calibri" , "sans-serif"; font-size: 11.0pt; line-height: 115%;">Size Zero</span>) மாடல்கள்
என்றழைக்கப்பட்டனர். ஸைஸ் ஜீரோ நிலையை எட்டிப் பிடிக்க போட்டி போட்டுக்கொண்டு பலர்
உடல்மெலிவு முயற்சிகளில் இறங்கினர். 2006 ம் ஆண்டு, இப்படி ஸைஸ் ஜீரோ மாடல் என்றறியப்பட்ட
‘லூஸல் ராமோஸ்<span lang="EN-US">’ </span>என்கிற் 22 வயதுள்ள மாடல் உருகுவேயில் நடைபெற்ற
ஃபேஷன் ஷோவில் கேட் வாக் செய்யும்போது மயக்கமடைந்து கீழே விழுந்தார். பின்னர் மருத்துவமனைக்கு
கொண்டு செல்லப் பட்டு இரண்டுநாட்களில் நினைவு திரும்பாமலேயே அவர் உயிர் பிரிந்தது.
இது நடந்த ஆறே மாதங்களில் அவரது தங்கை பதினெட்டு வயதேயான ‘எலீனா ராமோஸ்<span lang="EN-US">’ </span>என்பவர் இதேபோன்று இறந்துபோனார். இவர்களிருவருமே “அனோரெக்ஸியாவால்<span lang="EN-US">” </span>பாதிக்கப்பட்டவர்கள்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">இப்படி மெலிந்ததேகப் பண்பாட்டிற்கு இரையாகும்
பெண்கள் பற்றி ‘மார்கே பியர்ஸி<span lang="EN-US">’ </span>என்கிற கவிஞர் ஒரு கவிதை
எழுதியிருக்கிறார். ‘பார்பி கேர்ள்<span lang="EN-US">’ </span>என்று தலைப்பிடப்பட்ட
அக்கவிதையின் தளர்த்தியான எனது மொழியாக்கம் இது:<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">எவரையும் போலவே</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">இவளும் பிறந்தாள் தவழ்ந்தாள்;
நடந்தாள்.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">அடுப்பு பொம்மை பானை பொம்மை மற்றும் </span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">படுக்கையை நனைக்கும் குழந்தை பொம்மை<span style="mso-spacerun: yes;"> </span></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">இவற்றினோடே விளையாடிக்களித்தாள்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">செர்ரி நிறத்து லிப்ஸ்டிக்கட்டியை கரைத்தாற்
போன்று<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">மூத்திரம் போனாள் ஒருநாளில். </span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">பருவமடைகிற
மாயமிதுவென பலரும் சொல்லினர் அவள் காதில்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">இப்படி நாட்கள் கழிந்திடும்போது</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">வகுப்புத்தோழன்<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">அவளிடம் சொன்னான்:</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">உனக்கு<span style="mso-spacerun: yes;"> </span>புடைத்த மூக்கு!<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">பருத்த கால்கள் என்று.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">வலிய கரங்கள் நெடிய முதுகென</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">அவள் திண்மையானவள்</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">ஆரோக்கியசாலி.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">தன் பாலியல் விழைவை துணிச்சலாய்ச்சொல்வாள்</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">தேவையை நிறைக்கும் திறனும்
கொண்டாள். </span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">எனினும்</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">அவள் வருத்தப்பட்டாள்</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">தனது புடைத்த மூக்கிற்காகவும் </span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">பருத்த கால்களுக்காகவும்<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">எல்லோரிடத்திலும் மன்னிப்பு கோரினாள்.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">அனைவரும் <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">அவள்<span style="mso-spacerun: yes;"> </span>மூக்கையும் கால்களையும் மட்டுமே பார்த்தவாறு<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">அடக்கம் காக்கச்சொன்னார்கள்</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">அவளை<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">உண்மை உணரச் சொன்னார்கள்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">சூழலின் கணைகள் துளைக்க துளைக்க</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">இடையறாத
உடற்பயிற்சி பட்டினி கிடப்பதுவென</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">கவசங்களெடுத்து அணிந்துகொண்டாள்.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">புன்னகையொன்றை
முகத்தில் ஒட்டிக்கொண்டாள்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">இழுத்துச்சலித்த ராட்டினக்கயிறு</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">ஒருநாள்<span style="mso-spacerun: yes;"> </span>இற்று விழுவதுபோல</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">அவளிடமிருந்த அருங்குணங்கள்
அறுந்து விழுந்தன.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">தனது புடைத்த மூக்கை அரிந்தெடுத்தாள்.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">பருத்தக் கால்களை வெட்டினாள்<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">ரத்தம் சொட்டச்சொட்ட அவர்களுக்கு அர்ப்பணித்தாள்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">இதோ மெழுகிட்டு சரிசெய்யப்பட்ட மூக்கும்</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">அழகுப்பொடி பூசப்பட்ட முகமுமாய்</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">வெண்ணிற ஸாட்டீன் துணி விரிக்கப்பட்ட பேழைக்குள்
அவள் ... </span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">வெட்டப்பட்ட கால்களை மறைக்கும் </span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">வெண்ணிற உள் பாவாடையும் பிங்க் நிற ஆடையும்
அணிவிக்கப்பட்டு.<span style="mso-spacerun: yes;"> </span></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">இவளல்லவோ அழகி! </span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">பார்ப்பவரனைவரும்
சொன்னார்கள்</span><span style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;"> </span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">இப்படியாக அவள் முழுமையடைந்தாள்</span><span style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;">’ </span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;">எல்லாப் பெண்களுக்கும் ஏற்படும் சுபமுடிவே அவளுக்கும்</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">அந்தப்பெண் இறந்துவிட்டாள் என்பதை நேரடியாகச்
சொல்ல இக்கவிதை முயலவில்லை. “பேழைக்குள் அவள் கிடத்தப்பட்டிருக்கிறாள்<span lang="EN-US">” </span>என்றே சொல்லப்பட்டிருக்கிறது. சவப் பெட்டியைக் குறிக்கும் காஃபின்
(<span lang="EN-US" style="font-family: "calibri" , "sans-serif"; font-size: 11.0pt; line-height: 115%;">coffin</span>) என்கிற சொல்லை<span style="mso-spacerun: yes;"> </span>அவரிதில் பயன்படுத்தவில்லை.
மாறாக விலையுயர்ந்த நகைகள் வைக்கப்படும் பேழையைக்குறிக்கும் `காஸ்கட்<span lang="EN-US">’</span> (<span lang="EN-US" style="font-family: "calibri" , "sans-serif"; font-size: 11.0pt; line-height: 115%;">casket</span>) என்கிற சொல்லையே அவர் பயன்படுத்தியிருக்கிறார். இந்தக்கவிதை
பெண்கள் மத்தியில் மெலிந்த தேகப் பண்பாடு பற்றிய பெரும் விவாதங்களை உருவாக்கியது.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">ஆஸ்திரேலியாவிலுள்ள ஒரு பெண்ணிய அமைப்பு
அரசுக்கு இப்படியொரு கோரிக்கை வைத்தது. தற்போது சிகரெட் விளம்பரங்களில் எப்படி ‘புகைப்பது
உடல் நலத்திற்கு தீங்கானது<span lang="EN-US">’ </span>என்று எச்சரிக்கை வாசகங்கள் பொறிக்கப்பட்டிருக்கிறதோ அதேபோன்று மெலிந்த தேகமுடைய பெண்களை மாடலாகப் பயன்படுத்தும் விளம்பரங¢களில் ‘மெலிந்த
தேகம் உடல்நலத்திற்கு தீங்கானது<span lang="EN-US">’ </span>என்ற வாசகம் பொறிக்கப்படவேண்டும்<span lang="EN-US">’ </span>என்றனர். அதாவது பிஃப்டி ‘கேஜி தாஜ் மஹால்<span lang="EN-US">’</span>களாயிருப்பது
உடல்நலத்திற்கு தீங்கானது என்று.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">இக்கோரிக்கைகள் நிறைவேறவில்லையென்றாலும்
கூட பெண்ணியவாதிகளின் குரல்களுக்கு ஓரளவு<span style="mso-spacerun: yes;"> </span>பலன்
இருக்கத்தான் செய்தது. பத்திரிகைகள், காட்சி ஊடகங்கள் சில இக்குரல்களுக்கு மதிப்பளிக்க
ஆரம்பித்தன. விளம்பரங்களுக்கு சில கட்டுப்பாடுகளை கொண் டுவந்தன. இதனைத் தொடர்ந்து மெலிந்த
தேகம் கொண்ட பெண்களை மட்டு மல்ல, பருத்த தேகம் கொண்ட பெண்களையும் சராசரி உடலமைப்பு
கொண்ட பெண்களையும் கொண்டு ஃபேஷன் ஷோக்கள் நடைபெற ஆரம்பித்தன. இருந்தபோதிலும் மெலிந்த
தேகப்பண்பாட்டின் மேலாண்மையை, பார்பி பண்பாட்டை இவற்றால் ஒன்றும் செய்ய இயலவில்லை.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">இந்தியாவில் மட்டும் மேட்டெல்.இங்க்
நிறுவனத்திற்கு 1500 அவுட்லெட்டுகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தியாவில் நடைபெறுகிற
பொம்மை விற்பனைகளில் மேட்டெல்லின் பங்கு 8 சதம்தான். 92 சத பங்கினை இதர நிறுவனங்கள்
மற்றும் சீனத்தயாரிப்புகள்தான் வகிக்கின்றன எனினும் கடந்த ஆண்டில் மேட்டெல் நிறுவனத்தின்
ஹாட்வீல்ஸ் கார்களின்<span style="mso-spacerun: yes;"> </span>விற்பனை 32 % அதிகரித்ததெனில்
`பார்பி<span lang="EN-US">’ </span>பொம்மைகள் மட்டும் 40 சதம் அதிகரித்துள்ளன.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<br />
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">எந்த சானலைத் தட்டினாலும் அதில் வருகிற
டெலி ஷாப்பிங் விளம்பரங்களைப் பாருங்கள். அரைகுறை ஆடையோடு ஒரு பெண், எக்ஸர்ஸைஸ் செய்துகொண்டோ,
ட்ரெட்மில்லில் ஓடிக்கொண்டோ இந்த மெலிந்த தேகப்பண்பாட்டை நமக்கு உபதேசம் செய்வதைப்
பார்க்க முடியும். அதில் காட்டப்படுகிற உபகரணங்களையெல்லாம் வாங்கிக் குவித்து நம் ஒவ்வொருவரின்
வீட்டையும் ஜிம்னாஸியமாக்கிவிட வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">இந்தப்போக்குகளெல்லாம் கடந்த இருபதாண்டுகளாகத்
தான் நம்நாட்டில் பரவலாக ஆரம்பித்தது. அதற்கு ஒரு பின்னணியும் உண்டு. பி.வி.நரசிம்மராவ்
பிரதமராகவும், மன்மோஹன்சிங் நிதியமைச்சராகவும் இருந்த 90களின் தொடக்கத்திலிருந்துதான்
இப்போக்கு பரவலாக அறிமுகமாகிறது. அவர்கள் செயல்படுத்தத் தொடங்கிய ‘புதிய பொருளாதாரக்
கொள்கை<span lang="EN-US">’</span>தான் இவற்றின் ஊற்றுக்கண். ராஜீவ்காந்தி காலத்திலேயே
இப்புதிய பொருளாதாரக் கொள்கைக்கான அஸ்திவாரங்கள்<span style="mso-spacerun: yes;">
</span>இடப்பட்டுவிட்டாலும், நரசிம்மராவ் காலத்தில்தான் அவை உயர்வேகம் பெற்றன. தனியார்மயமாக்கம்,
தாராளமயமாக்கம், அன்னிய முதலீட்டிற்கான தங்குதடையற்ற அனுமதி இவையே இவற்றின் பிரதான
அம்சங்கள்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">அரசியலில் பொருளாதாரத்தில் மிகப்பெரும்
மாறுதல்களைக் கொண்டுவந்த சமயத்தில்தான் வேறொரு விஷயமும் இங்கே நடக்கிறது. 1993லிருந்து
பல இந்தியப்பெண்கள் உலக அழகிகளாகவும் பிரபஞ்ச அழகிகளாகவும் தேர்ந்தெடுக்கப்படலாயினர்.
சுஷ்மிதாசென், ஐஸ்வர்யாராய், லாரா தத்தா, டயானாஹெய்டன், யுக்தாமுகி, பிரியங்கா சோப்ரா
என்று பலர் உலக அழகிகளாயினர். இவர்களெல்லாம் போட்டியில் முதல் பரிசை வென்றவர்கள், இரண்டாவது
பரிசு அல்லது சிறந்த தலைமுடி, சிறந்த உடலமைப்பு, சிறந்த பல்வரிசை என்ற வகைகளில் பரிசு
பெற்றவர்களைக் கணக்கிட்டால் அதாவது கடந்த 2010ல் உலக அழகிப் போட்டியில் இரண்டாவது பரிசுபெற்ற ‘பார்வதி ஓமனகுட்டன்<span lang="EN-US">’ </span>போன்றவர்களைச்
சேர்த்தோமானால்<span style="mso-spacerun: yes;"> </span>இப்பட்டியல் அனுமார் வால்
போல இன்னும் நீளும். <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<span style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;">இதற்குமுன் 1966ம் ஆண்டு ரீட்டா பரியா
என்கிற இந்தியப் பெண் உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்குப்பின் 1993-94
காலத்திலிருந்துதான் அடிக்கடி இந்தியப் பெண்கள் ‘உலக அழகி</span><span lang="EN-US" style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;">’</span><span style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;">களாயினர்.
நமக்கு ஒரு கேள்வியெழலாம். 1993க்கு முன்பு நமது இந்திய நாட்டில் அழகிகளே இல்லையா என்று.
இது குதர்க்கமான கேள்வி தான் எனினும், இக்கேள்வி சில உண்மைகளை நமக்கு உணர்த்துகிறது.
உண்மையில் இவ்வழகிப்போட்டிகள், அழகுச்சாதனங்கள் மற்றும் ஃபிட்னஸ் சாதனங்கள் உற்பத்தி
யில் ஈடுபட்டுள்ள பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் சந்தை விரிவாக்க உத்திகள்தாம்.
அவைதாம் இவ்வழகிப் போட்டிகளை ஸ்பான்ஸர் செய்கின்றன.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">இந்நிறுவனங்கள், வாங்கும் திறன் கொண்ட
கோடிக்கணக் கான வலுவான நுகர்வோர்களைக் கொண்ட சந்தையாக இந்தியாவைப் பார்த்தன. இந்தியப்பெண்கள்
உலக அழகி களாவதற்கும் இச்சூழலுக்கும் மிகப்பெரிய தொடர்பு இருக்கிறது. அழகு பற்றிய புதிய
கருத்தாக்கங்கள், ஃபிட்னஸ் குறித்த விழிப்புணர்வுகள் எல்லாம் இதன் பிறகே பரவலாக ஆரம்பித்தன.
உண்மையில் இன்று இந்தியப்பெண்களின் மிகமுக்கியமான ஆரோக்கியப்பிரச்சினையாக எது இருக்கிறது
தெரியுமா? ‘ரத்த சோகை<span lang="EN-US">’</span>தான்.<span style="mso-spacerun: yes;"> </span><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><span style="mso-spacerun: yes;"><br /></span></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">மத்திய அரசின் ஆய்வுக்குறிப்பொன்று இவ்வாறு
கூறுகிறது. இந்தியாவில் 54 சத பெண்கள் ரத்த சோகையால் பீடிக்கப்பட்டிருக்கிறார்களென்று.
இந்த ரத்த சோகை பல நேரத்தில்<span style="mso-spacerun: yes;"> </span>அதுவும் கருவுற்ற
காலத்தில் பெண்களின் உயிரைக்குடிக்கிற எமனாக மாறிவிடும். இந்தியாவில் பிரசவகாலத்தில்
இறந்து போகிற பெண்கள் விகிதம் பல ஆப்பிரிக்க நாடுகளின் விகி தத்தைவிட அதிகம். மிகவும்
பின்தங்கிய நாடான ‘ஹெய்தியில்<span lang="EN-US">’</span> 1000க்கு 52 பெண்கள் பிரசவகாலத்தில்
இறக்கிறார் களென்றால் இந்தியாவில் 1000க்கு 54 பேர் இறக்கிறார்கள். இது உலக சுகாதார
நிறுவனம் கொடுத்துள்ள அறிக்கை.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">அதனால்தான் கருவுற்றுள்ள பெண்கள் இரும்புச்சத்து
மாத்திரைகளைச் சாப்பிடவேண்டும். அல்லது இரும்புச்சத்துள்ள கீரை மற்றும் பயறுவகைகளை
உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென பல நலவாழ்வுத்திட்டங்கள் அறிவுறுத்துகின்றன. விழிப்புணர்வு
பிரச்சாரங்களைச் செய்கின்றன. இப்பிரச்சார உத்திகளிலுள்ள பிரச்சினைகளென்னவெனில் இவையெல்லாம்
பெண்களை குறிவைத்தே நடத்தப்படுகின்றன. இரும்புச்சத்து மாத்திரைகளைச் சாப்பிடு! கருவுற்ற
காலத்தில் மாதம் தவறாமல் மருத்துவமனைக்கு சென்று மருத்துவரைப் பார்.! எடைப்பரிசோதனை
செய்து கொள்! அரசு தருகிற சத்துணவு உருண்டைகளை தவறாமல் சாப்பிடு!! என்று பெண்களை நோக்கியே
புத்திமதிகளை அள்ளிவீசுகின்றன.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">இது என்னவிதமான தோற்றத்தை ஏற்படுத்துகிறதென்றால்,
ஏதோ பெண்கள்தான் வீம்பாக இவற்றையெல்லாம் செய்ய மறுக்கிறார்கள் என்கிற மயக்கத்தை ஏற்படுத்திவிடுகின்றன.
பலியாகிகொண்டிருக்கும் பெண்களின்<span style="mso-spacerun: yes;"> </span>தலையிலேயே
இந்த பழியை சுமத்திவிடுகின்றன.. உண்மையில் இப் பிரச்சினைக்கு ஆளாயிருப்பது<span style="mso-spacerun: yes;"> </span>பெரும்பாலான கிராமப்புறத்து பெண்களும் நகர்ப்புறத்து
அடித்தட்டு பெண்களும்தான். பார்பி கேர்ள் பொம்மைகளை வாங்கிவைத்து விளையாடாமலேயே<span style="mso-spacerun: yes;"> </span>மெலிந்த உடலமைப்பு பெற்ற பெண்கள் இவர்களில் பலருண்டு.
எக்ஸர்ஸைஸ் செய்து மெலியவைத்த தேகமல்ல இது. சரியாக சாப்பிடாமல், சத்துள்ள உணவை உட்கொள்ளாமல்,
முறையாக ஓய்வு எடுக்காமல் உழைத்து உழைத்து நலிந்துபோன தேகம் இவர்களுடையது.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">கிராமப்புறத்து உழைக்கும் பெண்கள் ஒருநாளைக்கு
16மணி நேரம் உழைக்க வேண்டியிருக்கிறது. சமையல் செய்வது, தண்ணீர் சேகரிப்பது, குழந்தைகளை
பராமரிப்பது, வீட்டை பராமரிப்பது, முதியோர் எவரேனும் வீட்டிலிருந்தால் அவர்களைப் பராமரிப்பது
அதோடு சம்பாதிப்பதற்காக வேலைக்குப் போவது என்று அதிகநேரம் இவர்கள் உழைக்க வேண்டியிருக்கிறது.
இந்தச்சூழலில் கருவுற்றபெண் தன் உடல்நலம் குறித்து எத்தகைய அக்கறை எடுத்துக்கொள்ள முடிகிறது.?
நீங்கள் இத்தகைய பெண்களை சந்தித்து கேட்டுப் பாருங்கள் அவர்களின் பதில் பெரும்பாலும்
இப்படித்தான் இருக்கும்: “மருத்துவமனைக்குப் போனால் ஒருநாள் வேலை போய்விடுகிறது. மற்ற
வேலைகளும் கெட்டுவிடுகிறது. அதுவும் மாதாமாதம் போவதென்பதெல்லாம் முடிகிற காரியமா?
சத்துணவு உருண்டைகள் தருகிறார்கள்தான். குழந்தைகளை<span style="mso-spacerun: yes;"> </span>பார்க்க வைத்துக்கொண்டு நான் மட்டும் எப்படிச் சாப்பிடுவது?
அதையெல்லாம் குழந்தைகளுக்கு கொடுத்துவிடுவேன். ஏதோ முடியும்போது மருத்துவமனை சென்று
வருவேன். முடியாவிட்டால் விட்டு விடுவேன்!”. இதுதான் அவர்களின் பதில். பெண்கள் இங்கே<span style="mso-spacerun: yes;"> </span>மறுபடியும் தியாகம் செய்கிறார்கள். தங்கள் உடலநலத்தை
ஏன் உயிரையும் கூட. <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">ஒரு பெண் கருவுற்றால் அது அவளது பொறுப்பு
மட்டும்தானா? அவளது கணவனுக்கு பொறுப்பில்லையா? அவளது குடும்பத்திற்கு பொறுப்பில்லையா?அந்த
சமூகத்திற்கு பொறுப்பில்லையா?<span style="mso-spacerun: yes;"> </span>கருவுற்ற பெண்ணின்
நலம் என்பதும் தாயின் நலம் என்பதும் கணவனின், அந்த குடும்பத்தின், அந்த சமூகத்தின்
பொறுப்பாக ஏன் மாறுவதில்லை? ஏன் இப்படியொரு பண்பாட்டை நாம் வளர்ப்பதில்லை? பார்பி பண்பாட்டையும்
மெலிந்த தேகப்பண்பாட்டையும் பெண் களை தியாகம் செய்யச்சொல்லுகிற பண்பாட்டையும் இன்னும்
ஏன் வளர்த்துக்கொண்டிருக்கிறோம்.<span style="mso-spacerun: yes;"> </span><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><span style="mso-spacerun: yes;"><br /></span></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><b><span style="color: blue;">பின்னுரை :</span></b><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">சோஸலிஸ்ட் அப்பீல் என்கிற பத்திரிகையின்
ஆசிரியரும், புகழ்பெற்ற மார்க்ஸீய சிந்தனையாளருமான பிரிட்டனைச் சேர்ந்த ஆலன் வுட்,
2001ம் ஆண்டு, ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் கோடைக்கால மார்க்ஸீயப் பள்ளியொன்றில்
‘கலையும் வர்க்கப் போராட்டமும்<span lang="EN-US">’ </span>எனும் தலைப்பில் உரையாற்றினார்.
அதில் சில பகுதிகள் இங்கே: </span><span lang="EN-US" style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12pt;">“</span><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12pt;">இப்போதெல்லாம்
அழகியல் பற்றி பல முட்டாள்தனமான விவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. எது அழகு? எது அசிங்கம்?
என்று அடித்துப்பேசுகிறார்கள். எது அழகு, எது அசிங்கம் என்று யாராவது அறுதியிட்டுச்
சொல்லிவிட முடியுமா? அதெல்லாம் இருக்கட்டும்.. அழகென்றால் என்ன என்று உங்களையே நீங்கள்
கேட்டுக் கொண்டிருக்கிறீர்களா.? உண்மையில், அழகென்றால் என்ன அசிங்கமென்றால் என்னவென்று
நமக்கு நன்றாகத் தெரியுமென நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் வரலாறு என்ன சொல்கிறது
தெரியுமா? எல்லா சமூகங்களுக்கும் எல்லா காலத்துக்கும் ஏற்ற பொதுவான ‘அழகென்பது<span lang="EN-US">’ </span>எப்போதுமே இருந்ததில்லை. அது சமூகத்திற்கு சமூகம், காலத்திற்கு
காலம் வேறுபட்டும் மாறிக்கொண்டும்தான் இருந்தது; இருக்கிறது.”</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">“</span><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">ஆரம்பகாலத்து
சமூகங்களில் அல்லது தொல் சமுகங்களில் அழகு பற்றிய கருத்தாக்கங்கள் போன்ற பண்பாட்டு
மதிப்பீடுகளுக்கும், அச்சமூகத்தின் பொருளாதார அடித்தளத்திற்கும் இருக்கிற உறவுகள்
தெள்ளத்தெளிவாக அடையாளம் காட்டக்கூடியதாக இருந்தன. ஆனால் பிந்தைய, தற்போதைய சமூகங்களில்
இவ்வுறவுகள் அவ்வளவு தெளிவாக அடையாளம் காட்டக்கூடியதாயில்லை. மிகவும் சிக்கல் மிகுந்ததாகவும் தெளிவற்றதாகவுமே அவை புலப்படுகின்றன.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbtNpgr7hoATFizRk7Lin-ymaGoKZ3KSKQsJJR5H3LO_L4n822gnE0ivm658AjpvzlcU24GSA4FbfTkiNslb_CGricDKTAruKPLAw4C1ecnczCduu018vupLxgMlVkroLFXsdfTBUEE08P/s1600/32c8adbedfc2df4df767d5512c184098.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="849" data-original-width="595" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbtNpgr7hoATFizRk7Lin-ymaGoKZ3KSKQsJJR5H3LO_L4n822gnE0ivm658AjpvzlcU24GSA4FbfTkiNslb_CGricDKTAruKPLAw4C1ecnczCduu018vupLxgMlVkroLFXsdfTBUEE08P/s320/32c8adbedfc2df4df767d5512c184098.jpg" width="224" /></a></div>
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">உதாரணமாக, கிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள
மாசாய் பழங்குடியினர் ஒட்டகச்சிவிங்கி போல் கழுத்து நீண்டிருக்கிற பெண்களையே அழகெனக்கருதுவர்.
அவ்வழகை அடையவேண்டி, சிறிய வயதிலிருந்தே கழுத்தை நீண்டதாக்க பல முயற்சிகளில் இறங்குவர்.
இப்படி கழுத்து நீண்டிருப்பது நம்மில் பலருக்கு அழகெனப்படாதுதான்.. ஆனால் மாசாய் பழங் குடியினர்க்கு
அழகு பற்றிய இக்கருத்தாக்கம் எப்படி வந்தது என்று நம்மால் விளக்கிடமுடியும்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">இந்நடைமுறைக்கு மூலகாரணம் இதுதான். மாசாய்
பழங்குடியினர், செல்வமெனக் கருதுவது இரண்டு விஷயங்களையே. ஒன்று அவர்கள் வைத்திருக்கும்
கால்நடைகளை, மற்றொன்று அவர்கள் சேர்த்து வைத்திருக்கும் செம்பு உலோகத்தை. ஏனெனில்,
அவர்களைப் பொறுத்தவரை செம்பு அரிதானது; விலை மதிப்பற்றது. எவ்வளவுக்கெவ்வளவு ஒரு பெண்
செம்பினாலான அணிகலன்களை அணிந்திருக்கிறாளோ அவ்வளவுக்கவ்வளவு அவள் கவர்ச்சியுடையவளாய்க்
கருதப்படுவாள். அதுவும் குறிப்பாக கழுத்தில் அணிந்திருந்தால் கவர்ச்சி மேலும் கூடும்.
எனவேதான் அதிகமான செம்பு வளையங்களை அணிய வேண்டி மாசாய் பெண், தனது கழுத்தை நீண்டதாக்கிகொள்கிறாள்.
இக்கருத்தாக்கம் இவர்களிடம் வேர்கொண்டதற்கு காரணம் இதுதான். காலம் செல்லச்செல்ல இந்த
மூலகாரணத்தை அவர்கள் மறந்து போகிறார்கள். எனினும் பண்பாட்டு மரபுகளும், சடங்கு சம்பிரதாயங்களும்
இதனையே வலியுறுத்த கழுத்து நீண்ட பெண்தான் அழகென மெல்ல மெல்ல அவர்கள் நம்பத் தொடங்கிவிடுகிறர்கள்
அவர்கள் சமுக ஆழ்மனத்தில் இக்கருத்தாக்கம் வேர்கொள்ளத் தொடங்கிவிடுகிறது.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">சரி இதிலிருந்து நாம் தெரிந்துகொள்வதென்ன?
ஆகப் பொதுவான அழகென்பது எதுவுமில்லை; அது சார்புடையது. ஆனால் அது வரலாற்று வளர்ச்சியில்
பரிணாமம் கொள்கிறது; பல மாற்றங்களுக்குட்படுகிறது என்பதைத்தானே.?<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">எனினும் இந்த நேரத்தில் ஒன்றை நாம் எச்சரிக்க
வேண்டியிருக்கிறது. இதை ஒரு சூத்திரமாக்கி எந்திரகதியில் எல்லாவற்றிலும் பொருத்திப்
பார்ப்பது மிகவும் அபாயகரமானது. கலைகளும், சமயங்களும் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியோடு - அதாவது பொருளாதார அடித்தளத்தோடு<span style="mso-spacerun: yes;"> </span>நேரடித்
தொடர்புடையதென்று கருதமுடியாதென மார்க்ஸ் தெளிவாகக் குறிப்பிடுகிறார் . இதையும் நீங்கள்
கவனத்தில் கொள்ளவேண்டும்.<o:p></o:p></span><br />
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span>
<span style="color: blue; font-family: "arial unicode ms" , sans-serif;"><b>புதுவிசை, இதழ் 33, செப்டம்பர் 2011</b></span></div>
<br /></div>
புதுவிசைhttp://www.blogger.com/profile/09276344793619872435noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8111967010823738396.post-14757822893971758582020-04-21T06:00:00.001-07:002020-04-21T06:12:26.319-07:00மார்க்சியம் : வர்க்கமும் அடையாளமும் - ந. முத்துமோகன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1clTw7fEpoZSFVXJ9M-UrTBbQvo8_ecm4cTwPYZO-dg0UR7MYt2HUIt892k5WCZ8oMGYjzDXHmhok3fXRaF6gNGI7G5XGDXPMLUvrEVwY6GI1VMifQuCw_nA8WZKhCoaAd9jHvPhhmMti/s1600/identity_crisis-291x300.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="300" data-original-width="291" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1clTw7fEpoZSFVXJ9M-UrTBbQvo8_ecm4cTwPYZO-dg0UR7MYt2HUIt892k5WCZ8oMGYjzDXHmhok3fXRaF6gNGI7G5XGDXPMLUvrEVwY6GI1VMifQuCw_nA8WZKhCoaAd9jHvPhhmMti/s320/identity_crisis-291x300.jpg" width="308" /></a></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<b style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;"><span style="color: blue;">மூன்று அரசியல்கள்</span></b></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><span style="font-size: large;">ந</span></span><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">வீனகால ஐரோப்பா இரண்டு விதமான அரசியல்களை
நமக்குப் பரிச்சயப்படுத்தியது. முதலாவது, பூர்ஷ்வா (முதலாளிய) தாராளவாத அரசியல். தேசிய
அரசு, அரசியல் சட்டம், அரசியல் கட்சிகள், பாராளுமன்றம், தேர்தல், நீதிமன்றம், காவல்துறை
ஆகியவற்றை நிறுவனக்கூறுகளாகக் கொண்ட அரசியல் இது. தனிச்சொத்துரிமை, தனிமனிதன், மனித
உரிமைகள் ஆகியவை இந்த வகையான அரசியல் கோட்பாட்டில் மையமான இடம் வகிக்கின்றன. இரண்டாவது,
மார்க்சிய வர்க்க அரசியல். சமூகம் உற்பத்தி, விநியோகம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு
வர்க்கங்களாகப் பிளவுபட்டுள்ளது என்பது மார்க்சிய அரசியலின் கோட்பாடு. சுரண்டும் வர்க்கம்
ஆளும் வர்க்கமாகவும், சுரண்டப்படும் வர்க்கம் ஒடுக்கப்பட்ட வர்க்கமாகவும் உள்ளன. எனவே
வர்க்க முரண்பாடுகள் அரசியலாக வெளிப்படுகின்றன. தொழிற்சங்கங்கள், பொருளாதாரப் போராட்டங்கள்,
அவற்றோடு அரசியல் போராட்டங்கள், உழைக்கும் வர்க்கங்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவது
ஆகியவை வர்க்க அரசியலின் கூறுகள். இவை இரண்டிலும் நேரடியாகச் சேராதது அடையாள அரசியல்.
தேசம், சாதி, மதம், மொழி, பிரதேசம், பண்பாடு, பாலினம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அல்லது
ஒன்றுக்கு மேற்பட்டவற்றை மையமாகக் கொண்டு மக்களைத் திரட்டி நடத்தும் அரசியலை அடையாள
அரசியல் என்கிறோம். இந்தியா போன்ற நாடுகளில், இன்னும் விரிவாக, மூன்றாம் உலக நாடுகள்
எனப்படும் ஆசிய ஆப்பிரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகளில் அடையாள அரசியல் கடந்த இரு நூற்றாண்டுகளில்
வலுவான ஒன்றாக இடம்பெறுகிறது.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><span style="color: blue;"><b>அடையாள அரசியலின் பண்புகள்</b></span><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">அடையாள அரசியல் என்பது பின்னை நவீனத்துவச்
சூழலில் உருவான ஒருவகை அரசியல் என்று சில மேற்கத்திய சிந்தனையாளர்கள் எழுதி வருகின்றனர்.
மேலைநாடுகளின் நவீன அரசியல் லட்சியங்கள் பொய்த்துப்போன பின்னர், உலக அளவில் சோசலிசத்திலும்
நெருக்கடிகள் எற்பட்ட பின்னர் அடையாள அரசியல் முன்னுக்கு வந்திருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
சமீபகாலங்களில் அடையாள அரசியல் தீவிரப்பட்டு வருவதற்கும் அது கோட்பாட்டு ஆதரவைப் பெற்றமைக்கும்
மேலே குறிப்பிட்ட சூழல்கள் காரணமாக இருக்கலாம். ஆயின் ஆசிய ஆப்பிரிக்க லத்தின் அமெரிக்க
நாடுகளில், காலனியச்சூழல்களில், 19ஆம் நூற்றாண்டின் மத்தியிலிருந்தே சாதி, மதம், இனம்,
மொழி, கலாச்சாரம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு தொடர்ந்து ஓர் அரசியல் நடந்து வந்திருக்கிறது.
முதலாளியத்திற்கு முந்திய பழங்குடிச் சமூகங்களின் சமூகப்பிரிவுகளையும் சமூகத்திரட்சிமுறைகளையும்
கொண்டு இவ்வகை அரசியல் தன்னை வடிவமைத்து வந்துள்ளது. இந்தியச் சூழல்களில் பிரம்ம சமாஜம்,
ஆரிய சமாஜம் முதற்கொண்டு, இந்துக்கள், இஸ்லாமியர், சீக்கியர் போன்ற மதத்திரட்சிகளும்,
தமிழ்ச்சூழல்களில், வைகுண்டரின் அய்யாவழி இயக்கம், ஆறுமுக நாவலரின் சைவ மீட்டுருவாக்கம்,
கால்ட் வெல்லின் திராவிடம் பற்றிய கருத்தாக்கத்திற்குப் பிறகான அச்சு நூல்கள் பதிப்பு
இயக்கம், அயோத்திதாச பண்டிதரின் பூர்வபௌத்தம், நீதிக்கட்சியின் பிராமணரல்லாதார் இயக்கம்,
பின்னர்<span style="mso-spacerun: yes;"> </span>பெரியாரின் நுழைவு, தனித்தமிழ், தமிழிசை
இயக்கங்கள், திராவிட அரசியல் கட்சிகள், இன்று பழங்குடிகள் என நீண்ட நெடிய ஓர் அரசியலைக்
கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் நாம் கண்டு வந்திருக்கிறோம். இவை காலனிய ஆட்சியின் பிரித்தாளும்
உத்திகளால் உரு வாக்கப்பட்டவை என்ற ஒரு கருத்து உள்ளது. ஆட்சியாளர்கள் பிரித்தாண்டனர்
என்பதில் நமக்குச் சந்தேகமில்லை. அவர்கள் பிரித்தாள முடியாதபடி நாம் ஒன்றுபட்டு வாழ்ந்துகொண்டிருந்தோம் என்பதும் வரலாற்று ரீதியாகத் தவறான கற்பிதம். இந்துத்துவச் சிந்தனையாளர்கள்
ஆங்கிலேயரின் வருகைக்கு முன்னால், இஸ்லாம் இந்தியாவில் பரவுவதற்கு முன்னர் இந்தியா
ஒரு பொற்கால வாழ்வை வாழ்ந்து வந்ததாக எழுதுவதுண்டு. இது போன்ற ஒற்றைப்படையான மதிப்
பீடுகளைக் கடந்து இந்திய சமூகத்தை நாம் அணுகிச் செல்லுவதே சரியாக இருக்கும். எனவே ஆட்சியாளர்கள்
பிரித்தாளுவதற்கான சமூக அடிப்படைகள் நமது சமூக அமைப்பில் இருந்திருக்கின்றன என்பதைக்
கவனத்தில் கொள்ளவேண்டும். இந்த விவாதம், அடையாள இயக்கங்களின் வரலாற்றுரீதியான சமூக
அடிப்படைகளை நோக்கி நம்மை இட்டுச் செல்ல வேண்டும். மூன்றாம் உலக நாடுகளின் பழஞ்சமூக
அமைப்புகளிலிருந்த சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறை வடிவங்களும் உட்காலனியக் கூறுகளும்
அடுத்தடுத்த ஆட்சியாளர்களால் பயன்படுத்திக் கொள்ளப் பட்டன என்றே இதனைப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.<span style="mso-spacerun: yes;"> </span><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><span style="mso-spacerun: yes;"><br /></span></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">அடையாள இயக்கங்கள் பலபடித்தானவை என்பது
தெளிவு. அவற்றைக் குறைந்தபட்சம் மூன்று வகைப்பட்டவையாகப் பிரித்துக்காட்டலாம்: (1) பழைய
சமூகத்தின் நில உடமை மற்றும் மேட்டிமைச்சாதிகளின் மரபுரீதியான அனுகூலங்களைத் தக்கவைப்பதற்காக
அடையாள மீட்டுருவாக்கங்களில் ஈடுபட்ட இயக்கங்கள் உண்டு. (2) மேற்கத்திய மதங்கள்,
கல்வி, தொழில்நுட்ப வளர்ச்சி, சனநாயக உரிமைகள் ஆகியவை பற்றிய அறிமுகத்தால் முன்னெடுக்கப்பட்ட
இயக்கங்கள் உண்டு. (3) காலனிய ஆட்சிக்காலத்தில் சமூக அடித்தளங்களில் ஏற்பட்ட அசைவுகளால்
உருவான இயக்கங்கள் உண்டு. எனவே எல்லா அடையாள இயக்கங்களையும் ஒரேவித அளவுகோல்களால்
மதிப்பிட முடியாது. அடித் தளங்களில் வேர்கொண்ட இயக்கங்கள் குறித்த தனித்த கவனம் நமக்குத்
தேவைப்படும். மரபார்ந்த சமூகத்தில் வழக்கிலிருந்த சமூக அநீதிகளுக்கு எதிரான இயக்கங்கள்
குறித்த பிரத்தியேக அக்கறை நமக்குத் தேவைப்படுகிறது.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><span style="font-size: 12pt;">19-20ஆம் நூற்றாண்டுகளின் அடையாள இயக்கங்களில்,
குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒரு விஷயம் உள்ளது. அவை சமயம், இனம், மொழி, சாதி என எந்த
வடிவில் தோன்றியிருந்த போதும், அவற்றில் இந்தியச் சமூகம் குறித்த பிரச்சினை </span>(Social Question) <span style="font-size: 12pt;">ஏராளமாக விவாதிக்கப்பட்டுள்ளது. சமூக அமைப்பு குறித்த ஓர்மை என்று
இதனைக் குறிப்பிடலாம். கிறித்தவ மிஷனரிகள் தமது மதத்தைப் பரப்புவதற்காக இந்தியாவில்
சாதி, இந்து மதத்தில் சாதி என்ற பிரச்சினையைப் பெரிதுபடுத்தினார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு. இது உண்மையாகக்கூட இருக்கலாம். ஆனால் 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தே
சாதி அமைப்பு, இந்தியச் சமூக அமைப்பு, பிராமணியம் மற்றும் இந்து மதத்தோடு அதற்குள்ள
உறவு போன்ற விஷயங்கள் முன்னுக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டன எனலாம். கடந்த இரண்டு நூற்றாண்டுகளில்
எந்த ஒரு இயக்கமும் எந்த ஒரு சிந்தனையாளரும் சாதி குறித்த, இந்தியச் சமூக அமைப்பு குறித்த
நேரடியான அல்லது மறைமுகமான விவாதத்தைத் தவிர்த்துச் செல்ல முடியவில்லை என்பது குறிப்பாகச்
சொல்லப்படவேண்டிய விஷயமாகும்.<o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><span style="font-size: 12pt;">அடையாள இயக்கங்கள் ஒவ்வொன்றும் தம் இருப்பை
நியாயப்படுத்த தத்தமது வரலாற்றைக் கட்டமைக்கின்றன. தமது வரலாற்றை மட்டுமின்றி, கடந்தகாலத்திய
தமது மெய்யியலை, சமயவேர்களைக் கண்டடைகின்றன. வேதங்கள், உபநிடதங்கள், சங்க இலக்கியம்,
பூர்வ பௌத்தம், வாய்மொழி வரலாறுகள் எனப் பலவகையான ஆதாரங்களைக் கொண்டு தம்மைக் கட்டமைத்துக்கொண்ட
அடையாள இயக்கங்களை நாம் அறிவோம். (வர்க்கங்கள் இப்படித் தம்மை வரலாற்றுரீதியாக, மெய்யியல்ரீதியாக
கட்ட மைத்துக் கொள்கின்றனவா?) அடையாள இயக்கங்கள் பண்பாட்டு ஞாபகத்திலிருந்து </span>(Cultural Memory) <span style="font-size: 12pt;">தகவல்களைப் பயன்படுத்துகின்றன. மானுடக்கூட்டங்களின் ஞாபக அடுக்குகளில்
வரலாற்றுக் காயங்கள், பண்பாட்டு இழிநிலைகள் ஆகியவை படிந்திருக்கின்றன. பண்பாட்டுப்
பெருமிதங்கள், வரலாற்றில் பெற்ற வெற்றிகள் ஆகியவை இருப்பதற்கும் வாய்ப்புகள் உண்டு.
அடக்கு முறைகளும் அவற்றுக்கு எதிரான போராட்ட அனுபவங்களும் இருக்க வாய்ப்புண்டு. அடையாள
இயக்கங்களின் வரலாற்றுக் கட்டமைப்புகளில், இவையெல்லாம் முழுக்க முழுக்க உண்மையாக,
புறவயமாக எடுத்துப் பயன்படுத்தப்பட்டன என்று சொல்வதற்கில்லை. சமகால அரசியல் தேவைகளுக்கு
ஏற்ப தெரிவுசெய்யப்பட்ட ஞாபகத்தகவல்கள் அடையாள அரசியலாளர்களால் எடுத்துப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அடையாள அரசியலாளரின் வரலாற்றுக் கட்டமைப்பு என்பது ஒரு சிக்கலான நிகழ்வுப்போக்கு. இந்நிகழ்வுக்கு
நீண்டகால தொடர்விளைவுகள் இருப்பதற்கு சாத்தியங்கள் உள்ளன. இருப்பியல்ரீதியான உண்மைத் தன்மையையும்
வரலாற்றுத்தன்மையையும் </span>(Ontologisation) <span style="font-size: 12pt;">அவை ஈட்ட முயல்கின்றன என்பது இதன்
பொருள். மெய்யியல் அல்லது சமய வேர்களைக் கண்டடையும்போது, அவை உலகு கடந்த மெய்மைத்தன்மையை </span>(Metaphysical, Divine, Revelatory)<span style="font-size: 12pt;"> கட்டியமைக்க முயலுகின்றன
என்று பொருள். இது குறிப்பிட்ட ஒரு குழுவின் அடையாளத்தை நிரந்தரப் படுத்தும் பண்புக்கு
இட்டுச்செல்கிறது. அடையாள அரசியலே நிரந்தரமான ஒன்று என்ற தருக்கவியலுக்கே இது இட்டுச்
சென்றுவிடலாம். அடையாளங்கள், குறிப்பாக அவை இழிவான அடையாளங்களாக இருக்கும்போது, அவற்றை
அழிப்பதற்கு இவ்வகை வரலாற்றுக் கட்டுமானங்கள் உதவுமா என்ற கேள்வி எழுகிறது. மேட்டுக்குடிகள் மிகப் பெருமிதமான வரலாற்றுப் புனைவுகளைக் கட்டி எழுப்பும்போது, அவை தத்தமது
அடையாளங்களை நிரந்தரமாகத் தக்கவைத்துக்கொள்ளவே முயலுகின்றன என்றும் பொருளாகிறது.</span></span><span style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;"> </span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><span style="font-size: 12pt;"><o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><span style="mso-tab-count: 1;"> </span><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><span style="font-size: 12pt;">வரலாறு, மெய்யியல், சமயம் போன்ற அடிப்படைகளைத்
தேடி அடையும்போது, ஒவ்வொரு அடையாளமும் தன்னை மறுவரையறை செய்து கொள்ளுகிறது என்பது உண்மை.
அதாவது, அடையாளம் தன்னை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அடைத்துக்கொள்ளாமல், தனது அடையாளம்
எது? என்ற தொடர்ந்த தேடலுக்குள் ஈடுபடுத்திக் கொள்கிறது என்று பொருள். திராவிடன், தமிழன்,
சங்கத்தமிழன், சைவத் தமிழன், பௌத்தத் தமிழன் என்று அடுத்தடுத்த பல வரையறைகளின் ஊடாக </span>(Fluid Signifier)<span style="font-size: 12pt;"> தமிழ் அடையாள அரசியல் நகர்ந்ததை நாம் அறிவோம். இப்படிச்
சொல்லும் போது, ஒவ்வொரு அடையாளமும் தன்னை இதுதான் என்று அறுதியிட்டுக் கூறி முடித்துவிடாமல்,
தன்னைப் பற்றிய தேடலில் ஈடுபட்டு வருகிறது என்பதையும் புரிந்துகொள்கிறோம். அடையாள
உருவாக்கத்தின்போது இன்னும் வரையறுக்கப்பட்ட வடிவில் உறுதிப்படாத (திரவ நிலையிலுள்ள)
ஓர் அடையாளம் தன்னை விறைப்பாக (திட நிலையில்) ஆக்கிக் கொள்கிறது என்றும் சொல்லலாம்.
விறைப்பான அடையாளம் எல்லா வேளைகளிலும் சனநாயகபூர்வமானது என்று கூற முடியாது.</span></span><span style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;"> </span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><span style="font-size: 12pt;"><o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><span style="font-size: 12pt;">அடையாளங்கள் பொதுவாக ஒற்றை அளவுகோலைக்
கொண்டு தம்மை வரையறுப்பதில்லை. (வர்க்கங்கள் தம்மைப் பொருளாதாரரீதியாக ஒற்றைப்படையாக
வரையறுத்துக் கொள்வதாகக் குற்றஞ்சாட்டப்படுகின்றன.) அரசியல், பண்பாடு, வரலாறு, சமயம்,
மெய்யியல் எனப் பலவகையான</span></span><span style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;"> </span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><span style="font-size: 12pt;">அச்சுக்களில் அடையாளங்கள்
தம்மை வரையறுத்துக் கொள்கின்றன. அல்தூசரின் மிகை நிர்ணயம் </span>(Over Determination) <span style="font-size: 12pt;">என்ற கருத்தாக்கம் இங்கு நினைவுக்கு வருகிறது. பலவகையான சமூகப் பண்பாட்டுக் காரணிகள்
ஒரு நிகழ்வைக் கூட்டாகவும் சிக்கலான முறையிலும் நிர்ணயம் செய்வதை அல்த்தூசர் மிகை நிர்ணயம்
அல்லது குவி நிர்ணயம் என்பார். பலவகையான அச்சுக்களில், பல விதமான அளவைகளின் அடிப்படையில்
அடையாள இயக் கங்கள் தம்மை வரையறுத்துக்கொள்வதால், வெகுமக்கள் அரசியலில் அவை ஈடுபடுவது
எளிதாக்கப்படுகிறது. ஒற்றை அளவைகளைக் கொண்ட இயக்கங்கள் வெகுசனப்பரப்பை முழுவதும் தழுவிநிற்கமுடியாமல்
தேங்கிப் போவதுண்டு. <o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><span style="mso-spacerun: yes;">
</span><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><span style="font-size: 12pt;">அடையாள இயக்கங்கள் கடந்தகாலத்தில் தமது
வேர்களைத் தேடுவதால், அவை கடந்த காலத்தை நோக்கியவை, அவை எதிர்காலப்பார்வை அற்றவை என்று
சொல்லிவிடமுடியாது. சமூக மாற்றத்தை விரும்பாத மேட்டுக்குடிகள் தமது கடந்தகாலத்தை அதிகம்
சிலாகிப்பவர்களாகவும், சமூகமாற்றம் கோரும் அடித்தள இயக்கங்கள் எதிர்காலம் நோக்கியனவாகவும் இருப்பது இயல்பு. அடையாள இயக்கங்கள் கால ஓட்டத்தில் முன்னும் பின்னுமாக நகருகின்றன.
அவை மீட்டுருவாக்கம், சமூகமாற்றம் என்ற இரட்டைநிலையைக் கொண்டவையாக உள்ளன. இருப்பினும்,
நவீனமயமாக்கம் அடையாள இயக்கங்களின் முனைப்பான ஒரு வேலைத்திட்டமாகும். மரபும் நவீனமயமாக்கமும்
என்ற இரட்டை நிலையோடு நகரும்போது, அவை ஒரு மாற்றுப்பண்பைக் கொண்ட நவீனமயமாக்கத்தைச் </span>(Alternative Modernity)<span style="font-size: 12pt;"> சென்றடைகின்றன. ஜப்பான், கொரியா போன்ற
கிழக்கு ஆசிய நாடுகள் தமது பண்பாட்டு அடையாளங்களைப் பேணிக்கொண்டு நவீனமயமாகியிருப்பதை
இங்கு நினைவுக்குக் கொண்டுவருவோம். சீன சோசலிசம்கூட பண்பாட்டு அடையாளத் தன்னுணர்வுடன்
கட்டப்பட்டுள்ளதாகக் கூறுவார்கள். <o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">அடையாள அரசியல் பூர்ஷ்வா தாராளவாத அரசியலைப்போல தனிமனிதரை மையப்படுத்துவது கிடையாது. அது பாராளுமன்ற சனநாயக அரசியலின் முறைமையாகிய
பிரதிநிதித்துவ அரசியலைப் பின்பற்றுவதும் கிடையாது. அடிப்படையில் அவை தமது அடையாளம்
சார்ந்த மக்கள் திரட்சியையும் அவர்களின் நேரடிப் பங்கேற்பையும் கொண்டமைகின்றன.<span style="mso-spacerun: yes;"> </span>இந்தியச்சூழல்களில் எந்த ஓர் அடையாளமும் அறுதிப்
பெரும்பான்மை கொண்டதாக இல்லாததால், அடையாள இயக்கங்கள் பாராளுமன்ற அரசியல் அனுமதிக்காத போராட்ட முறைகளையும் பின்பற்றுகின்றன. தமது கோரிக்கைகளின் வலுவைப் பெருக்கிக் காட்டுவதற்கு
அவை வன்முறையான வழிமுறைகளையும் கையாளுகின்றன. அடித்தள மக்களின் அடையாள இயக்கங்கள் பெரும்பாலும்
இடதுசாரி இயக்கங்களின் போராட்ட முறைகளைப் பின்பற்றுகின்றன. <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><span style="mso-spacerun: yes;"> </span><span style="mso-tab-count: 1;"> </span><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><span style="color: blue;"><b>இன்று என்ன நடக்கிறது?</b></span><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">அரசியல் பொதுவெளியில் அடையாளங்கள் அதிக
இடத்தை ஆக்கிரமித்து வருவதால், அடையாள அரசியலை உள்வாங்க முதலாளிய சக்திகள் முயற்சிக்கின்றன.
சோசலிச சக்திகளும் (வர்க்க சக்திகளும்) முயலுகின்றன.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">முதலாளிய சக்திகள், அடையாள அரசியலின்
சிக்கல்களுக்குத் தாங்கள் பொறுப்பில்லை, பழைய இந்திய சமூக அமைப்பு, இந்துமதம் போன்றவை
பொறுப்பாக இருக்கலாம், ஆயின் தாராளவாத முதலாளிய சனநாயகத்தால்தான் அடையாள அரசியலின்
முரண்களுக்குத் தீர்வுகளை வழங்க முடியும் என்று கூறிவருகின்றன. எனவே அடையாள அரசியல்
சக்திகள் முதலாளிய எதிர்ப்பிலோ, உலகமயமாக்க எதிர்ப்பிலோ பங்கேற்கவேண்டியதில்லை, உண்மையில்
முதலாளிய சனநாயகமும் உலகமயமாக்கமும் அடையாள அரசியல் சக்திகளுக்கு அனுசரணையாகத்தான்
உள்ளன என்று அவை கூறிவருகின்றன. இதனை ஏற்றுக்கொள்ளக் கூடிய அடை யாள அரசியல் சக்திகள்
உண்டு என்பது கவனிக்கத்தக்கது.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">சோசலிச சக்திகளும் அடையாள அரசியலை கையாள
முயற்சிக்கின்றன. இந்திய மண்ணில் சுமார் ஒரு நூற்றாண்டு காலமாக வர்க்க அரசியலை நடத்திவரும்
இடதுசாரிகள் அடையாள அரசியலோடு உரையாடல் நடத்த முன்வந்துள்ளனர். இதற்கு முன்பும் இந்த
உரையாடல்கள் பல முரண்பட்ட சூழல்களில் நடக்கத்தான் செய்துள்ளன. வங்காளியர் பண்பாட்டு
மனோபாவங்களை இடதுசாரிகள் சுவீகரிக்கத் தெரிந்திருந்தனர். கேரளத்தில் நாராயண குருவை
இடதுசாரிகள் வரித்துக்கொண்டதுண்டு. தமிழில் சிங்காரவேலர், ஜீவா, நாவா போன்றோருக்கு
பண்பாட்டு அரசியல் குறித்த தீவிர முன்னுணர்வுகள் இருந்தன. இருப்பினும் முன்னெப்போதையும்விட தீர்க்கமாக இப்போது வர்க்கமும் அடையாளமும், இடதுசாரிகளும் அடையாள அரசியலும்
போன்ற தலைப்புகள் முக்கியப்பட்டு வருகின்றன. அடையாள அரசியலை வரலாற்றுரீதியாகவும் சமூகரீதியாகவும்
புரிந்துகொள்வது எப்படி? அடையாள அரசியலின் பிரச்சினைத்தளத்தை சோசலிச அரசியலோடு இணைப்பது
எப்படி? போன்ற விவாதங்களை நடத்த நாம் நிர்ப்பந்திக்கப்பட்டு வருகிறோம். இந்த விவாதங்களை
விரிவாக நடத்துவதில் தாமதித்துவிட்டோம் என்ற உணர்வும் நம்மிடம் உள்ளது. முதலாளிய எதிர்ப்பும்
உலகமயமாக்க எதிர்ப்பும் கொண்ட சக்திகளாக அடையாள அரசியல் சக்திகளை உருவமைக்கும் கடப்பாடும்
இடதுசாரிகளுக்கு உள்ளது. இத்தகைய பின்புலத்தில்தான் வர்க்கமும் அடையாளமும் என்ற பிரச்சினை
முக்கியமாகிறது. இதனை எப்படிச் செய்வது?<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><b><span style="color: blue;">செய்யவேண்டியது என்ன? </span></b><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">1. அடையாளம், அடையாள அரசியல், அடையாள
அரசியல் இயக்கங்கள் என்ற பிரச்சினைகள் இந்திய, தமிழ்ச் சூழல்களில் வரலாற்றுப் பொருள்முதல்வாதப்
பிரச்சினைகள் என்பது நம்மால் முதலில் அங்கீகரிக்கப்படவேண்டும்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">2. இது, இந்தியச் சமூக அமைப்பு, இந்தியச்
சமூக வரலாறு, இன்றைய இந்தியப் புரட்சி ஆகியவற்றின் பிரச்சினை என்பது நம்மால் ஆழமாக
அங்கீகரிக்கப்படவேண்டும். <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">3. இடதுசாரி இயக்கங்கள் வெகுசன இயக்கங்களாக
மாறவேண்டும் என்ற வேலைத் திட்டத்தோடு இணைத்து இப் பிரச்சினை அணுகப்படவேண்டும்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">4. வர்க்கம் என்ற கருத்தாக்கம் வளர்ச்சியடைந்த
ஐரோப்பிய முதலாளியச் சூழல்களில் உருவான கருத்தாக்கம் என்பதை அங்கீகரித்து, மேற்கல்லாத
சமூகங்களின் பிரத்தியேகப் பண்புகளுக்கு ஏற்ப அக்கருத்தாக்கம் நெகிழ்வாகக் கையாளப்படவேண்டும்.
<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">5. வெவ்வேறு அடையாள இயக்கங்களின் தோற்றம்,
வரலாறு, செயல்பாடுகள், வர்க்க உள்ளடக்கம் ஆகியவை மார்க்சிய நோக்கில் பயிலப்படவேண்டும்.
<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><span style="color: blue;"><b>வர்க்கம் குறித்த மார்க்சின் கருத்துக்கள்</b></span><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">இந்த இடத்தில் மார்க்சியர்களின் வர்க்கம்
பற்றிய கருத்தாக்கத்தைச் சிறிது தெளிவுபடுத்தி விட்டு முன்செல்வோம். அடையாள அரசியலார்
இந்தியச்சூழல்களிலும் சர்வதேசச் சூழல்களிலும் மார்க்சியத்தின் வர்க்க அணுகுமுறை குறித்து
முன்வைக்கும் சில குற்றச்சாட்டுகளை மனதில் இருத்தி இங்கு பேசமுனைவோம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><span style="font-size: 12pt;">வர்க்கம் என்பது ஒரு பொருளாதாரக் கருத்தாக்கம்,
அது மக்கட்கூட்டங்களிடையிலான பொருளாதாரச் சுரண்டலை </span>(Exploitation) <span style="font-size: 12pt;">மட்டுமே
அளவுகோலாகக் கொள்ளுகிறது, அது சாதிரீதியான, நிற அடிப்படையிலான அல்லது இன அடிப்படையிலான,
பாலியல் அடிப்படையிலான ஒடுக்குமுறைகளைக் </span>(Oppressions) <span style="font-size: 12pt;"> கணக்கில் கொள்ளுவது
கிடையாது என்பது அடையாள அரசியல் நம்மீது வைக்கும் குற்றச்சாட்டாகும். சுரண்டல் என்பது,
பொருளாதாரச் சுரண்டல் என்பது மார்க்சியத்தின் மிக வலுவான ஒரு கருத்தாக்கம். மார்க்சின்
“மூலதனம்</span></span><span lang="EN-US" style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;">” </span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><span style="font-size: 12pt;">என்ற மிகப் பிரும்மாண்டமான நூல் அக்கருத்தாக்கத்தைச்
சுமந்து நிற்கிறது. பொருளாதாரச் சுரண்டலை அடிப்படையாகக் கொண்டே சமூக அடக்குமுறைகளை
மார்க்சியம் பேசுகிறது என்பதும் பெருமளவில் உண்மைதான். இந்த உண்மைகள் ஒருபுறமிருக்க,
மார்க்ஸ், லெனின் ஆகியோரின் வர்க்கம் என்ற கருத்தாக்கத்தைப் பரிசீலிப்போம்.</span></span><span style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;"> </span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><span style="font-size: 12pt;"><o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">கம்யூனிஸ்ட் அறிக்கையின் முதல்வரிகள்
வர்க்கப்போராட்டம் பற்றியதாக அமைந்துள்ளன. “இதுவரை இருந்து வந்திருக்கிற சமுதாயத்தின்
சரித்திரம் எல்லாம் வர்க்கப்போராட்டத்தின் சரித்திரமே. சுதந்திரப்பிரஜையும் அடிமையும்,
பாட்ரீஷியன் என்ற மேல்குடிமகனும் பிளேபியன் என்ற கீழ்க்குடிமகனும், பிரபுவும் பண்ணையடிமையும்,
கில்டு மாஸ்டரும் ஜேர்னிமேனும், சுருங்கச்சொன்னால், ஒடுக்குபவனும் ஒடுக்கப்படுபவனும்
என்றென்றும் எதிரெதிரே நின்றுகொண்டு, சில சமயங்களில் மறைவாகவும், சில சமயங்களில் பகிரங்கமாகவும்
இடையறாத போர் நடத்திவந்தனர்.” <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">இந்த வரிகள் வரலாறு குறித்த ஒரு புத்தம்
புதுப்பார்வையை முன்வைக்கின்றன. வரலாற்றின் இயக்குசக்தியாக வர்க்கப்போராட்டங்கள் இருந்து
வந்திருக்கின்றன என்பதைத் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய வரலாற்றின் பல்வேறு சமூக அமைப்புகளில்
(அடிமைச் சமூகத்தில், நில உடமையில்) எந்தெந்த வர்க்கங்கள் எதிரெதிராக நின்று போரிட்டிருக்கின்றன என்பதைத் தெரிவிக்கிறது. சுதந்திரப்பிரஜை- அடிமை, பாட்ரீஷியன் - பிளெபியன்,
பிரபு - பண்ணையடிமை, கில்டு மாஸ்டர் - ஜேர்னிமேன் என்ற எட்டு வகைப்பட்ட, நான்கு ஜோடி
வர்க்கங்களை சொல்லியபிறகு, மார்க்ஸ், “சுருங்கச்சொன்னால், ஒடுக்குபவனும் ஒடுக்கப் படுபவனும்<span lang="EN-US">” </span>என்று எடுத்துச்சொல்லுகிறார். இங்கு “சுரண்டுபவனும் சுரண்டப்படுபவனும்<span lang="EN-US">” </span>என்ற சொற்களை மார்க்ஸ் பயன்படுத்தவில்லை. மார்க்சியம் ஒரு பொருளாதார
நிர்ணயவாதம், வர்க்கம் என்பது பொருளாதாரச் சுரண்டலை முன்வைக்கும் கருத்தாக்கம் என்றெல்லாம்
சொல்லுபவர்கள் இந்த வரிகளைக் கவனிக்க வேண்டும். மார்க்சின் மேற்குறித்த வரிகளில் பொருளாதாரம்
நேரடியாகப் பேசப்படவில்லை. ஒடுக்குமுறைதான் பேசப்பட்டிருக்கிறது. <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">மார்க்ஸ் வர்க்கம் என்ற கருத்தாக்கத்தை
அவரது எழுத்துக்களில் ஏராளமாகப் பேசியிருக்கிறார் என்பது உண்மை. பொருளாதாரச் சுரண்டலை
மையப்படுத்திய கருத்தாக்கமாக அவர் அதனைப் பெருமளவில் பயன்படுத்தியுள்ளார் என்பதும்
உண்மை. ஆயின் அக்கருத்தாக்கத்தைத் தனியான ஒரு பிரச்சினையாகத் தலைப்பிட்டு பேசியிருக்கிறாரா?
என்று ஒரு கேள்வியை முன்வைத்தால் அக்கேள்விக்குப் பதில் சொல்லுவது கடினம். மூலதனம்
நூலில் 3வது பாகத்தில் கடைசி அத்தியாயம் “வர்க்கங்கள்<span lang="EN-US">” </span>எனத்
தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த அத்தியாயத்தில் “வர்க்கங்கள்<span lang="EN-US">” </span>என்ற
கருத்தாக்கத்தை மார்க்ஸ் அவருக்கே உரிய துல்லியத்துடன் வரையறுக்க விழைந்திருக்கவேண்டும்.
ஆயின் இந்த அத்தியாயம் இரண்டே பக்கங்களில் முடிந்துபோகிறது. அந்த இரண்டு பக்கங்களும்கூட
மூலதனம் நூலில் அவர் பேசிவந்த முதலாளியச் சமூகத்தின் வர்க்கங்கள் குறித்தவையாக உள்ளனவே
தவிர வர்க்கம் என்ற கருத்தாக்கத்தை எல்லாச் சமூக அமைப்புகளுக்கும் பொருந்தும் வகையில்
கோட்பாட்டு ரீதியாக வரையறுப்பனவாக இல்லை. அங்கு அவர் முதலாளியத்தின் மூன்று வர்க்கங்கள்
பற்றிச் சொல்லுகிறார். மூலதனத்திற்கும் உற்பத்திச்சாதனங்களுக்கும் சொந்தக்காரனான முதலாளி,
நிலத்தை மூலதனமாகவும் உற்பத்திச்சாதனமாகவும் கொண்ட நிலஉடமையாளன், உழைப்புச்சக்தியை
விற்றுப் பிழைக்கும் நிலையிலிலுள்ள பாட்டாளி என்ற மூவரைப் பற்றி மார்க்ஸ் அங்கே பேசத்
தொடங்குகிறார். லாபம் (உபரி மதிப்பு), நில வாடகை, கூலி ஆகிய மூன்று ஆதாரங்களைக் கொண்ட
மூன்று வர்க்கங்களைப் பற்றி அங்கு மார்க்ஸ் உரையாடத் தொடங்குகிறார். அந்த உரையாடலும்
தொடரவில்லை.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">முதலாளியத்திற்கு முந்திய சமூக அமைப்புகளையும்
உள்ளடக்கிய வர்க்கம் என்ற ஒரு கருத்தாக்கத்தை மார்க்ஸ் எந்த இடத்திலும் வரையறுத்து
வழங்கியதாகத் தெரியவில்லை. ஆயின் முதலாளியத்திற்கு முந்திய சமூகங்களில் வர்க்கம் என்ற
ஒன்று அதன் தூய்மையான பொருளாதார அர்த்தத்தில் காணப்படுவது இல்லை என்று மார்க்ஸ் பல
இடங்களில் குறிப்பிட்டுச் சொல்லுகிறார். கம்யூனிஸ்ட் அறிக்கையிலேயே மார்க்ஸ் இதனைத்
தெளிவாகக் குறிப்பிடுகிறார். “சரித்திரத்தின் ஆரம்பகால சகாப்தங்களில், அனேகமாக எங்குமே
சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைக் கொண்ட சிக்கலான ஏற்பாட்டைக் காணுகிறோம்; சமூக அந்தஸ்தில்
பல படிகளைக் காண்கிறோம். பழங்காலத்து ரோமாபுரியில், பாட்ரீஷியன்கள், நைட்டுகள், பிளேபியன்கள்,
அடிமைகள் ஆகியோரைக் காண்கிறோம். மத்தியகாலத்தில், நிலப்பிரபுக் களையும், மானியக்காரர்களையும்,
கில்டு மாஸ்டர்களையும், ஜேர்னிமேன்களையும், புதிதாக வேலை பயில்பவர்களையும், பண்ணையடிமைகளையும்
காண்கிறோம். மேலும், அனேகமாக, இந்த வர்க்கங்கள் அனைத்திலும் ஒன்றுக்கொன்று கீழ்ப்பட்ட
உட்பிரிவுகளையும் காணலாம்.” (கார்ல் மார்க்ஸ், பிரெடெரிக் ஏங்கெல்ஸ், கம்யூனிஸ்ட் கட்சியின்
அறிக்கை, முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1969, ப.42). இங்கு மக்கள் பிரிவினர் வர்க்கங்கள்
என்ற சொல்லால் குறிக்கப்பட்டாலும், அவை சிக்கலான ஏற்பாட்டைக் கொண்டிருந்தன, அந்தஸ்து
படி நிலைகள் கொண்டவையாக இருந்தன என்றும் மார்க்ஸ் எழுதிச் செல்கிறார். முதலாளியத்தை
விட அதற்கு முந்திய சமூகங்களில் பொருளாதார அளவுகோல் கறாராக வேலை செய்வதில்லை என்பதை
மார்க்ஸ் இங்கு உணர்ந்து எழுதுகிறார் என்று புரிந்துகொள்கிறோம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><span style="mso-spacerun: yes;">
</span><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">மார்க்ஸ் வர்க்கம் என்ற கருத்தாக்கத்தைவிட
வர்க்கப் போராட்டம் என்ற விடயத்தில் அதிகக் கவனம் செலுத்துகிறார். ஜெர்மானிய இயங்கியலில்
ஆழமான புலமை கொண்ட மார்க்ஸ், கருத்துக்களின் இயங்கியலிலிருந்து சமூக இயங்கியலுக்கு வந்து
சேர்ந்தார். சமூக இயங்கியலில் எதிரெதிரான வர்க்கங்களின் முரண், போராட்டம் என்ற கோட்பாட்டைக்
கொண்டே அவர் சிந்தித்தார். எனவே வர்க்கங்கள் என்ற கருத்தாக்கத்தைவிட வர்க்கங்களுக்கிடையிலான போராட்ட உறவுகளுக்கே அவர் முன்னுரிமை வழங்கினார். வர்க்க உறவுகள் என்ற அமைப்பியல்
பண்பு வர்க்கங்களை நிர்ணயிக்கின்றன என்ற கோட்பாட்டுநிலை அவரில் தொழில்படுவதாகவும்
பல அறிஞர்கள் எடுத்துரைக்கின்றனர். முரண்பட்ட வர்க்க உறவுகள் என்று பார்க்கும்போது
அங்கு பொருளாதாரச்சுரண்டல் மட்டுமே சம்பந்தப்படுகிறது எனக்கொள்ளுவது மிக எளிமைப்படுத்தப்பட்ட
சித்திரம் ஆகும். முரண்பட்ட உறவுகளின் ஊடாக எல்லா வித அடக்குமுறைக்கூறுகளும்தான் தொழில்படும்.<span style="mso-spacerun: yes;"> </span><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><span style="color: blue;"><b>வர்க்கம் குறித்த லெனினின் வரையறை:</b></span><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><span style="font-size: 12pt;">(புரட்சிக்குப் பிறகு) 1919ல் எழுதப்பட்ட,
லெனினது மாபெரும் தொடக்கம் </span>(Great Beginning)<span style="font-size: 12pt;"> என்ற கட்டுரையில் வர்க்கம்
என்றால் என்ன என்பதற்கான வரையறை உள்ளது. “வர்க்கங்கள் என்பவை வரலாற்றுவழியில் நிர்ணயிக்கப்பட்ட சமூகப் பொருளுற்பத்தி அமைப்பில் அவை வகிக்கும் இடத்தாலும், உற்பத்திச்சாதனங்களுடன்
அவற்றுக்குள்ள உறவாலும் (மிகப்பெரும்பாலும் இது சட்டத்தால் நிலைநிறுத்தப்பட்டு வரையறுக்கப் பட்டிருக்கிறது),
உழைப்பின் சமூக ஒழுங்கமைப்பில் அவற்றுக்குள்ள பாத்திரத்தாலும், ஆகவே சமூகச்செல்வத்தில்
அவற்றின் செயலாட்சிக்கு உட்படும் பங்கின் பரிமாணங்களாலும், இந்தப் பங்கை அவை சுவாதீனமாக்கிக்
கொள்ளும் முறையினாலும் ஒன்றுக்கொன்று வேறுபடும் பெரும் மக்கள் பகுதிகளாகும்</span></span><span lang="EN-US" style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;">”</span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><span style="font-size: 12pt;"> (வி.இ.லெனின், தேர்வுநூல்கள், தொகுதி 12, முன்னேற்றப் பதிப்பகம்,
1982, 312-313). இது வர்க்கம் என்ற கருத்தாக்கம் குறித்த முழுமையான ஒரு வரையறையாகும்.
லெனின் இங்கு முன்னிலைப்படுத்தும் கூறுகளை வரிசைப்படுத்திக் கொள்வோம். வர்க்கம் என்பதை
நிர்ணயிக்கும் கூறுகள் எவை?</span></span><span style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;"> </span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><span style="font-size: 12pt;"><o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">1. வரலாற்று வழியில் நிர்ணயிக்கப்பட்ட
சமூகப் பொருளுற்பத்தி அமைப்பில் (மக்கள் பகுதிகள்) வகிக்கும் இடம்<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">2. உற்பத்திச் சாதனங்களுடன் உள்ள உறவு
- சட்டத்தால் நிலைநிறுத்தப்படுபவை<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">3. உழைப்பின் சமூக ஒழுங்கமைப்பில் அவற்றின்
பாத்திரம்<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">4. சமூகச்செல்வத்தில் அவை பெறும் பங்கின்
பரிமாணங்கள்<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">5. அந்தப் பங்கை சுவாதீனமாக்கிக் கொள்ளும்
முறை<span style="mso-spacerun: yes;"> </span><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">6. இவை அனைத்திலும் ஒன்றுக்கொன்று வேறுபடும்
பெரும் மக்கள் பகுதிகள்<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">உற்பத்திச் சாதனங்களுடனான உறவு என்ற
ஒற்றை அளவுகோலையே மார்க்சியர்கள் பயன்படுத்துகிறார்கள் என்று கூறுவோர் லெனினின் இந்த
வரையறையை உற்றுக் கவனிக்க வேண்டும். முதல்வரியில் “வகிக்கும் இடம்<span lang="EN-US">” </span>என்று சொல்லப்படுவது பொதுவானதுதான். இருப்பினும் இந்த வரியில்
“வரலாற்றுவழியில் நிர்ணயிக்கப்பட்ட<span lang="EN-US">” </span>என்று சொல்லப்படுவதை
உற்றுக் கவனித்தாக வேண்டும். சமூகப் பொருளுற்பத்தி அமைப்பும் அதில் மக்கள் கூட்டங்கள்
வகிக்கும் இடமும் ஒவ்வொரு நாட்டிலும் அந்தத்த நாட்டின் பிரத்தியேக வரலாற்றுப் பண்புகளுக்கேற்ப
அமைகின்றன என்பது குறிப்பான ஒரு விடயமாகும்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">இரண்டாவது வரியில், உற்பத்திச் சாதனங்களுடன்
உள்ள உறவு என்பது மிகக் குறிப்பாகப் பொருளாதார உறவை எடுத்துச் சொல்லுகிறது. ஆயின் அந்த
உறவுகள் சட்டத்தால் நிலைநிறுத்தப்படுகின்றன எனச் சொல்லப்படுவதைக் கவனிக்க வேண்டும்.
அடிப்படையான பொருளாதார உறவுகளும் மேற்கட்டுமானக்கூறுகளான அரசியலாலும் சட்டத்தாலும்
நிலைநிறுத்தப்படுகின்றன எனச் சேர்த்துப் புரிந்துகொள்ள வேண்டும். <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><span style="mso-spacerun: yes;">
</span><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><span style="font-size: 12pt;">மூன்றாவது வரி, உழைப்பின் சமூக ஒழுங்கமைப்பில்
அவற்றுக்குள்ள பாத்திரம் எனச் சொல்லுகிறது. உழைப்பின் சமூக ஒழுங்கமைப்பு, முதல்வரியில்
சொல்லப்பட்டிருப்பதைப் போல, ஒவ்வொருநாட்டிலும் அந்தந்த நாட்டின் வரலாற்று வளர்ச்சிப்போக்கில்
நிறுவப் படுகிறது என்றும் நாம் சேர்த்துக்கொள்ளலாம். உழைப்பின் சமூக ஒழுங்கமைப்பு என்ற
சொற்கள் இந்தியா போன்ற நாட்டில் சாதி அமைப்பை நினைவுக்குக் கொண்டுவருவதைத் தவிர்க்க
முடியவில்லை. அம்பேத்கர் சாதி அமைப்பைப் பற்றிப் பேசும்போது, சமூகரீதியாக (அதாவது
சாதிரீதியாக, பிறப்பு அடிப்படையில்) நிர்ணயிக்கப்பட்ட பொருளாதாரமே </span> (Social Economics)<span style="font-size: 12pt;"> இந்த நாட்டில் நிலவி வந்திருக்கிறது என்பார். அம்பேத்கர் பெரும்பாலும் அவர் எழுத்துக்களில்
சமூகஒழுங்கு </span>(Social Order) <span style="font-size: 12pt;">என்ற சொற்களையே பயன்படுத்துவார். லெனினின்
“சமூக ஒழுங்கமைப்பு</span></span><span lang="EN-US" style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;">” </span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><span style="font-size: 12pt;">என்ற சொல்லாக்கம் இந்திய விஷயங்களைப்
பேசுவதற்கு உதவலாம். உழைப்பின் சமூக ஒழுங்கமைப்பு என்ற சொற்களை சமூக வேலைப் பிரிவினை </span>(Social Division of Labour)<span style="font-size: 12pt;"> என்று கொண்டால், மீண்டும் அம்பேத்கர்
சொல்லும் சமூக வேலையாட்களின் பிரிவினை </span>(Social Division of Labourers)<span style="font-size: 12pt;">,
அதாவது சமூக ஒழுங்கமைப்பு இங்கு பிறப்பின் அடிப்படையில் நிர்ணயமாகிறது என்ற கருத்து
கணக்கில் கொள்ளப்படவேண்டும்.</span></span><span style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;"> </span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><span style="font-size: 12pt;"><o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><span style="mso-spacerun: yes;"><br /></span></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">நான்காவது வரியிலும் ஐந்தாவது வரியிலும்,
சமூகச் செல்வத்தில் குறிப்பிட்ட ஒரு வர்க்கம் பெறும் பங்கு, அதனை அவ்வர்க்கம் தன்னகப்படுத்தும்
முறை ஆகியவை சொல்லப்படு கின்றன. மார்க்சியர்கள் உற்பத்திமுறையைப் பற்றி மட்டுமே பேசுவார்கள்,
சமூகச்செல்வம் எவ்வாறு பகிர்ந்து கொள்ளப்படுகிறது என்பது பற்றிக் கவலைப்படுவதில்லை
என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு. சமூகச்செல்வம் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படுகிறது என்பதைப்
பற்றியது சமூகநீதி என்ற கோட்பாடு என்று அவர்கள் கூறுவார்கள். அது உண்மையல்ல என்பதை
இந்த வரிகள் எடுத்துக்காட்டுகின்றன. சமூகச்செல்வம் என்ற சொல்லே கவனத்திற்குரியது.
சமூகச் செல்வம் பகிர்ந்தளிக்கப்படுவதில் சாதி அமைப்பு சில நிரந்தர ஏற்பாடுகளைச் செய்து
வைத்திருந்தது என்பதில்தான் இந்தச் சமூகத்தின் பிரத்தியேகப்பண்புகள் அடையாளப் படுகின்றன.
சமூகச் செல்வம் மறுபகிர்வு செய்யப்பட வேண்டும் என்ற செய்தியை உள்ளடக்கியதாகவே லெனினின்
வர்க்கம் குறித்த வரையறை அமைந்திருப்பதைக் காண்கிறோம்.<span style="mso-spacerun: yes;"> </span><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><span style="mso-spacerun: yes;"><br /></span></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><span style="color: blue;"><b>மார்க்சின் ஆசிய உற்பத்திமுறை என்ற கருத்தாக்கம்</b></span><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">ஐரோப்பாவை முன்வைத்துக்கூட, முதலாளியத்திற்கு
முந்திய சமூகங்களில் கறாரான பொருளாதார வர்க்கங்கள் பற்றிப் பேசமுடியாது என<span style="mso-spacerun: yes;"> </span>மார்க்ஸ் குறிப்பிட்டதை மேலே குறிப் பிட்டோம். இப்போது
நாம் இந்தியாவிற்கு வருவோம். இந்தியாவைப் பொறுத்தமட்டில், இங்கிருந்த சமூக அமைப்பு
மேலும் சிக்கலானதாக இருந்தது என மார்க்ஸ் உணர்ந்து எழுதியுள்ளார். <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">இந்தியாவைப் பொறுத்தமட்டில், மார்க்ஸ்
இரண்டுவித மான சிக்கல்களை உணர்ந்து சொல்லியிருக்கிறார். ஒன்று, இந்தியச் சமூக வரலாறு
அடிமை முறை, நில உடமை முறை என்று ஐரோப்பா குறித்து சொல்லியிருப்பதைப்போல நேர் கோட்டு
வடிவில் அமையவில்லை. 18ஆம் நூற்றாண்டு வரை இங்கிருந்த சமூக அமைப்பை மார்க்ஸ் ஆசிய உற்பத்திமுறை
என்ற பெயரால் அடையாளப்படுத்தியுள்ளார். புராதன இனக்குழு அமைப்பு, அடிமை முறை, நில உடமை
முறை ஆகிய மூன்றுக்கும் பதிலாக, அவை மூன்றும் ஒன்றுக்குள் ஒன்றாகச் செம்மிப்போய்க்
கிடந்த ஒரு சமூக அமைப்பை மார்க்ஸ் ஆசிய உற்பத்திமுறை என்ற சொல்லாக்கத்தால் குறித்துள்ளார்.
இது முதல் சிக்கல். (ஆசிய உற்பத்திமுறை குறித்து எனது நூலான “தமிழ் அடையாள அரசியலின்
இயங்கியல்<span lang="EN-US">” </span>நூலைப் பார்க்கவும். என்சிபிஎச், 2012 வெளியீடு).
இரண்டாவதாக, 17-18ம் நூற்றாண்டுகளில் இந்தியாவிற்குள் நுழைந்த காலனியாதிக்கம் தூய
முதலாளியம் அல்ல. அது நவீன முதலாளியத்தின் அடிமைமுறை. எனவே, அடிமைத்தனம் கொண்ட காலனிய
முதலாளியம் இங்கிருந்த மரபுரீதியான ஆசிய உற்பத்திமுறை என்ற வகையிலான சமூகஅமைப்பில்
மாற்றங்களை ஏற்படுத்தியது என்பதை விட, அதனைச் சிதைத்தது என்றும் புரிந்து கொள்ள வேண்டும்.
இது இந்தியா குறித்த, இன்னும் விரிந்த அர்த்தத்தில் ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா
என்ற மூன்று தென்கண்டங்களின் வரலாறு குறித்த இரண்டாவது சிக்கல். <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">இனி இந்த இரண்டு சிக்கல்களையும் சிறிது
விரிவாகக் காண்போம். ஆசிய உற்பத்தி முறை என்றால் என்ன? அதன் பண்புகள் என்ன? அவை குறித்து
மார்க்ஸ் என்ன கூறுகிறார்?<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">18ஆம் நூற்றாண்டுவரை இங்கு தனிஉடமை வேர் கொள்ளவில்லை என்கிறார் மார்க்ஸ். புராதன இனக்குழு வரலாறு தொட்டு இங்கு குழுமச் சமூக உறவுகளே
நிலவின என்கிறார் மார்க்ஸ். அப்படியானால் இங்கு வர்க்கச் சமூகமே தோன்றவில்லை என்று மார்க்ஸ்
சொல்லுகிறாரா? அப்படியல்ல. இனக்குழுக்கள் இங்கு அடியோடு அழியாத நிலையில், அடிமைச்சமூக
உறவுகளும், நிலஉடமை உறவுகளும் அவற்றினுள் ஊடுபாய்ந்து வித்தியாசமான ஒரு சமூக அமைப்பை
உண்டுபண்ணியுள்ளன என்று மார்க்ஸ் சொல்லுகிறார். இனக்குழுக்களே படிநிலை வரிசையில் சுரண்டலுக்கும்
ஒடுக்குமுறைக்கும் உகந்தவகையில் இங்கு அடுக்கப்பட்டன என்று மார்க்ஸ் சொல்லுகிறார் எனலாம்.
<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><span style="font-size: 12pt;">தனிமனிதனை விட இனக்குழு முக்கியப்படும்
ஓர் ஏற்பாடு இங்கு தொழில்பட்டது என்பது மார்க்சின் விளக்கம். 1857-59 பொருளாதாரக் கையெழுத்துப்
பிரதிகள் என்ற பகுதியில் மார்க்ஸ் இதனைக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். “இங்கு
முழுமை என்பது அதன் உட்பகுதிகளால் உருவான ஒன்றல்ல - முழுமையே இங்குச் சுதந்திரமான அமைப்பாகச்
செயல் படுகிறது.. ஒரு குழுமத்தில் இடம்பெறும் உறுப்பினர்களின் உள்ளீடான ஒற்றுமை பிறப்பு
(அல்லது பரம்பரை), மொழி, பொதுவான கடந்தகாலம் மற்றும் வரலாறு ஆகியவற்றின் வழி வடிவம்
பெறுகிறது. </span>(their intrinsic unity is embodied in descent, language, common past and history etc)” (Marx Engels, Pre-Capitalist Economic Formations, Progress, Moscow, 1979, P.94).<span style="font-size: 12pt;"> வர்க்கம் குறித்த விவாதங்களில் தொடங்கிய நாம் அடையாள அரசியலுக்கு
வந்து சேரும் இடம் இதுவே.</span></span><span style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;"> </span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><span style="font-size: 12pt;"><o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><span style="font-size: 12pt;">ஆசிய உற்பத்தி முறை அல்லது ஆசிய கம்யூன்கள்
என்பவை “உள்ளீடான ஒரு திடத்தன்மையுடன் </span>(Internal Solidity)<span style="font-size: 12pt;">” நிலவி
வந்திருக்கின்றன என்று மார்க்ஸ் மூலதனம் நூலின் மூன்றாவது பகுதியில் குறிப்பிடுகிறார்.
எத்தனை ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டாலும், அடிப்படையில் எந்தவித மாற்றமுமில்லாத “தயாராக
வரைந்து வைக்கப்பட்டுள்ள வரைபடத் திட்டமாக</span></span><span lang="EN-US" style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;">” </span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><span style="font-size: 12pt;">இது தொழில்பட்டு
வந்திருக்கிறது என்கிறார் மார்க்ஸ் (மூலதனம், முதல் பாகம், </span>NCBH<span style="font-size: 12pt;">, 1998, 484). ஆசியக்
குழுமச் சமூகத்தில் தனிமனிதனைவிட அக்குழுமம் முதன்மையானது. குழுமத்தின் முன்னுரிமை
அரசனின் ஆளுகை உரிமையாகவோ, தெய்வமாகவோ </span>(a higher Unity that is satisfying and comforting) <span style="font-size: 12pt;">குறிக்கப்படலாம் </span></span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;">(Marx's Grundrisse, p.485).</span><span style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;"> </span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><span style="font-size: 12pt;">“இவ்வகைச் சமுதாயங்களில், எந்தவொரு தனிநபரும் தனது குலம் அல்லது சமுதாயத்தின்
தொப்புள்கொடியிலிருந்து தன்னைத் துண்டித்துக்கொள்வதில்லை (ஒரு தேனீயைப்போல)” (மூலதனம்,
முதல்பாகம்,453). அம்பேத்கர் சொல்லும் அகமண முறையைக் கணக்கில் கொண்டால் இது வெறும்
புராதன உறவு அல்ல, ஒவ்வொரு திருமணத்தின்போதும் தினசரி புதுப்பித்துக் கொள்ளப்படும்
உறவு. திருமண உறவுகள் என்பவை பொருள்வகை உறவுகள் என்று ஏங்கெல்ஸ் குடும்பம், தனிச்சொத்து,
அரசு நூலின் முன்னுரையில் குறிப்பிடுவார்.</span></span><span style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;">
</span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><span style="font-size: 12pt;"><o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><span style="mso-tab-count: 1;"> </span><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><b><span style="color: blue;">சனநாயகப் புரட்சி என்ற மார்க்சியக் கருத்தாக்கம்</span></b><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">அடையாள அரசியலை மார்க்சியர்கள் எவ்வாறு
எதிர்கொள்வது? என்ற கேள்விக்கு அது சனநாயகப்புரட்சியின் பிரச்சினை என்றொரு பதில்
மார்க்சியரிடையில் நிலவுகிறது. இது நியாயமான பதிலாகவே தென்படுகிறது. ஆயின், சனநாயகப்புரட்சியின்
பிரச்சினைகளைச் சோசலிசப்புரட்சியுடன் ஒப்பிட்டு அவற்றை இரண்டாந்தரமான பிரச்சினைகளாக
ஓர் அலட்சியப்பார்வையுடன் அணுகும் போக்கு நம்மிடம் உள்ளது. நாம் ஒரு வெகுசன இயக்கமாக
மாறுவதற்குத் தடையாக இந்த மனோபாவம் செயல்படுகிறது எனலாம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><span style="font-size: 12pt;">லெனின், சனநாயகப்புரட்சியின் பிரச்சினைகள்
உடனடியானவை, நேரடியானவை </span>(Immediate)<span style="font-size: 12pt;">, சனநாயகப் புரட்சியின் பிரச்சினைகளை
எப்படிக் கையாளுகிறோம் என்பதைப் பொறுத்து </span>(Mediated)<span style="font-size: 12pt;"> அமைவது சோசலிசப்புரட்சியின்
வளர்ச்சிப்போக்கு என்று கூறுகிறார். “சனநாயகத்திற்கான போராட்டம் சோசலிசத்திற்கான போராட்டத்திலிருந்து
பாட்டாளி வர்க்கத்தைத் திசைதிருப்பிவிடுமென்றோ, அதனைப் பின்னுக்குத் தள்ளிவிடுமென்றோ,
மூடி மறைத்துவிடுமென்றோ </span>(overshadow)<span style="font-size: 12pt;"> கருதுவது ஒரு தீவிரவாதத் </span></span><span style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 16px;">தவறாகும் </span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;">(radical mistake)<span style="font-size: 12pt;">. மாறாக சனநாயத்திற்கான போராட்டம் முழுமையானதாக, தொடர்ச்சியானதாக,
புரட்சிகரமானதாக (</span>all-round, consistent, revolutionary)<span style="font-size: 12pt;"> அமைய வேண்டும்</span></span><span lang="EN-US" style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;">” </span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><span style="font-size: 12pt;">என்று லெனின் சோசலிசப்புரட்சியும் தேசியங்களின்
சுயநிர்ணய உரிமையும் என்ற கட்டுரையில் (1916) குறிப்பிடுகிறார்.</span></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><span style="font-size: 12pt;">அதே ஆண்டில் எழுதிய மார்க்சியம் பற்றிய
கேலிச்சித்திரமும் ஏகாதிபத்தியப் பொருளாதார வாதமும் என்ற கட்டுரையில் (1916) லெனின்,
சனநாயகப்புரட்சியை அலட்சியப் படுத்துபவர்களுக்கு மார்க்சியம் பற்றிய அறிவே இல்லை </span>(No Knowledge of Marxism) <span style="font-size: 12pt;"> என்று கோபப்படுகிறார். சனநாயகம் வர்க்க ஒடுக்குமுறையை
ஒழிக்காது என்பதை மார்க்சியர்கள் நன்கு அறிவார்கள். (பின் ஏன் சனநாயகத்திற்காகப் போராடவேண்டும்?)
“சனநாயகம் வர்க்க மோதலை அதிகபட்சம் நேரடியானதாக, விரிவானதாக, வெளிப்படையானதாக, தெளிவானதாக </span>(more direct, wider, more open and pronounced) <span style="font-size: 12pt;"> மாற்றுகிறது. அதுதான் நமக்குத் தேவை. அவை வெறுமனே சனநாயக உரிமைகள் குறித்த பிரச்சினை
அல்ல, முதலாளிய அமைப்பே அடிப்படையான பிரச்சினை என்று மக்கள் புரிந்துகொள்ளுவார்கள்</span></span><span lang="EN-US" style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;">” </span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><span style="font-size: 12pt;">என்று லெனின் எழுதுகிறார். <o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><span style="mso-tab-count: 1;"> </span><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><span style="font-size: 12pt;">லெனின் மேலும் சொல்லுகிறார்: சனநாயகப்
பிரச்சினைகளைத் தவிர்ப்பது முதலாளிகளின் கைகளில், எதிர்ப்புரட்சி சக்திகளின் கைகளில்
அவற்றை ஒப்படைப்பதற்குச் சமமாகும் என்கிறார். சனநாயகப் பிரச்சினைகளை கம்யூனிஸ்டுகள்
(முதலாளிய மற்றும் சிறுமுதலாளியக் கட்சிகளைப் போல) சீர்திருத்த வடிவில் முன்வைக்காமல்
அவற்றை இன்னும் தீவிரமான புரட்சிகரமான வடிவில் முன்வைப்பதன் மூலமாகவே அவற்றைச் சரியாகக்
கையாளமுடியும் என்று லெனின் கூறுகிறார். சனநாயகப் பிரச்சினைகளை பிற கட்சிகளை விட தீவிர
புரட்சிகர வடிவில் </span>(radically founded, in a revolutionary manner)<span style="font-size: 12pt;"> நமக்கு முன்வைக்கத் தெரியவில்லை எனில் நாம் வெளிறிப்போன புரட்சிக்காரர்கள் </span>(Poor Revolutionaries) <span style="font-size: 12pt;"> என்பது பொருளாகும் என்கிறார்.<o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><span style="mso-spacerun: yes;"> </span><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">சனநாயகப்புரட்சியின் பிரச்சினைகளை “புரட்சிகர
வடிவில்<span lang="EN-US">” </span>முன்வைப்பது என்பது லெனின் முன்வைக்கும் திட்டம்.
நம்மைத்தவிர மற்ற கட்சிகளை முதலாளிக்கட்சிகள், இன்னும் பல, சிறுமுதலாளியக் கட்சிகள்
என்று நாம் வரையறை செய்கிறோம். அவை சனநாயகப் பிரச்சினைகளை அவரவர் வர்க்க நலனுக்கு
ஏற்ப, குறுகிய வடிவில், தேர்தல் அரசியலுக்கு ஏற்ப, தாராளவாத சீர்திருத்த வடிவில் முன்வைக்கின்றன என்பதெல்லாம் உண்மை. எனவேதான், சனநாயகப் பிரச்சினைகளை கம்யூனிஸ்ட்கள் புரட்சிகர
வடிவில் முன்வைக்க வேண்டும் என்று லெனின் கூறுகிறார். ஆயின் நமது சூழல்களில், பலவேளைகளில்
முதலாளிய சிறு முதலாளியக் கட்சிகள் சனநாயகப் பிரச்சினைகளை முன்வைக்க, நாம் தாமதமாக
அப்பிரச்சினைகளுக்கு வந்து சேர்வதுபோல் உள்ளது. ஆட்சியிலிருக்கும் கட்சிகளைப் பெருமுதலாளியக்
கட்சிகள் எனக் கொண்டால், சனநாயகப் பிரச்சினைகளைக் கையிலெடுப்போரை சிறுமுதலாளியக் கட்சிகள்
எனக் கொண்டால், பலவேளைகளில் அவை இரண்டுக்குமிடையில், தாமதமாக வந்துநின்று, சமரசம் பேசுவோர்களாக,
சமூக நல்லிணக்கம் பேசுவோர்களாக நாம் ஆகிவிடுகிறோம். இது நிச்சயமாக லெனின் சொல்லிய
“புரட்சிகர வடிவம்<span lang="EN-US">” </span>அல்ல. எனவே சனநாயகப் பிரச்சினைகளை சிறுமுதலாளியக்
கட்சிகள் கையிலெடுக்க முடியாத வகையில் அவற்றை முந்திச் சென்று கைப்பற்றிக் கையாளுவோராக
நாம் பரிணமிக்கவேண்டும். அவற்றைப் புரட்சிகரமான வடிவில் வரையறுக்கத் தெரிந்தவர்களாகவும்
முன்வைக்கத் தெரிந்தோராகவும் கையாளுவோராகவும் நாம் உருவாக வேண்டும். சனநாயகப் புரட்சி
என்ற கருத்தாக்கம் மார்க்சிய சிந்தனையில் வரையறுக்கப் பட்டிருப்பதே, அந்தந்த நாடுகளின்
பிரத்தியட்சமான சமூக அமைப்புகளில் எழத்தக்க சனநாயகப் பிரச்சினைகளை நாம் முன்னுணர வேண்டும்
என்பதற்காகவே. சனநாயகப் பிரச்சினைகளை நாம் முன்னுணர்ந்து கையாளும் முறைமையைக் கொண்டு
முதலாளிய மற்றும் சிறுமுதலாளியக் கட்சிகளின் சனநாயக விரோத மற்றும் குறுங்குழும அரசியல்களின்
சாயம் வெளுக்க வேண்டும். <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">இந்தியா போன்ற ஒரு பழைய சமூகத்தில்,
ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தீவிர அசைவுகளின்றித் தேங்கிக்கிடந்த சமூகத்தில், சனநாயகப்புரட்சியின்
செயல்பாடுகள் மிக வன்முறையாக நிகழ்த்தப்படவேண்டி வரலாம். எடுத்துக்காட்டாக, சாதி
ஒழிப்பு என்ற இலக்கு சோசலிசம் என்ற இலக்கைவிட கடுமையானதாகக்கூட அமையலாம்.<span style="mso-spacerun: yes;"> </span>இதற்குப்பொருள் வன்முறையை நாம் தூண்டிவிடப் போகிறோம்
என்பதல்ல, இங்குள்ள சாதி மேலாக்கம் சாதி ஒழிப்பு என்ற இலக்கை மிகத் தீவிரமாக எதிர்த்தே
தீரும். எனில் கம்யூனிஸ்டுகள் அதனை எதிர்கொண்டே தீரவேண்டும். இந்திய சனநாயகப் புரட்சி
சாதாரணமானதாக இருக்கப் போவதில்லை. <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><span style="color: blue;"><b>முடிவுரை</b></span><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><span style="mso-tab-count: 1;"> </span><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">உலகமயமாக்கச் சூழல்களில் தொழிலாளர்கள்,
விவசாயிகள், தலித்துகள் உள்ளிட்ட கிராமப்புறப் பாட்டாளிகள், தேசிய இனங்கள், சமயச் சிறுபான்மையினர்,
கடற்கரை மற்றும் மலைவாழ் பழங்குடிகள், பெண்கள் எனப் பலவகைப்பட்ட மானுடக்கூட்டங்களின்
சனநாயக உரிமைகள் மிகக் கொடூரமாகப் பறிக்கப்படுகின்றன. கம்யூனிஸ்டுகள் இம்மக்களின்
வாழ்வுரிமைகளுக்கான பிரச்சினைகளைக் முந்திச் சென்று கையிலெடுக்கத் தயங்கினால், அவர்கள்
தன்னிச்சையான, தம்மளவிலான இயக்கங்களைக் கட்டமைப்பார்கள். போராட்டங்களை வடிவமைப்பார்கள்.
இம்மாதிரியான நிலைமைகளை இன்று இந்தியாவில், தமிழ்ச்சூழல்களில் முன்னெப்போதுமில்லாத
அளவில் மிக அதிகமாகச் சந்திக்கிறோம். சனநாயகப்புரட்சி பற்றி நம்மிடையிலான கூடுதலான
வெளிப்படையான விவாதங்களும் நடைமுறை அரசியலுமே இச்சூழல்களில் நமக்குத் தேவைப்படுகின்றன.<span style="mso-spacerun: yes;"> </span><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;"><i><span style="color: red;">(தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள்
சங்கத்தின் திருப்பூர் முகாமில் வாசிக்கப்பட்ட கட்டுரை)</span></i></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;"><b><i><span style="color: red;"><br /></span></i></b></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="color: blue; font-family: "arial unicode ms" , sans-serif;"><b>புதுவிசை இதழ் 38, மே 2013</b></span></div>
<br /></div>
புதுவிசைhttp://www.blogger.com/profile/09276344793619872435noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8111967010823738396.post-75804361931267541342020-04-18T23:13:00.000-07:002020-04-18T23:20:27.308-07:00மாவோ - மலேரியா - மருந்து: 2015ஆம் ஆண்டு நோபல் பரிசு சொல்லும் பாடம் என்ன? முனைவர் த.வி. வெங்கடேஸ்வரன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDGGrEG_oHvKXYcE59zCF2KMGTreg0Zkf9HKTFrxmDPBg_IHZsyscz467mOeLNkphUQXkQgQnThpAfyRhOraQwDftZ_cDF3-jcMe20tFjHUUKTLrr165kvSebl5ftXXFdN5xul7CgNGs2B/s1600/Mao-Zedong.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1058" data-original-width="1600" height="210" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDGGrEG_oHvKXYcE59zCF2KMGTreg0Zkf9HKTFrxmDPBg_IHZsyscz467mOeLNkphUQXkQgQnThpAfyRhOraQwDftZ_cDF3-jcMe20tFjHUUKTLrr165kvSebl5ftXXFdN5xul7CgNGs2B/s320/Mao-Zedong.jpg" width="320" /></a></div>
<h3 style="text-align: justify;">
<span style="color: blue;"><span style="font-family: "arial unicode ms" , sans-serif; font-weight: normal;">சோதனை செய்து தெளியாது பழமையே சிறந்தது என பொத்தாம் பொதுவாக தலையில் வைத்து கொண்டாடவும் கூடாது அதேசமயம் காலங்காலமாக உழைக்கும் மக்கள் அனுபவத்தில் சேகரித்த கருத்துகளில் மாயம்-மந்திரம் காத்து-கருப்பு போன்ற கற்பிதக் கருத்துகளை புறந்தள்ளி அறிவியல் பார்வையில் அலசி பயனுள்ளவற்றை தேடி எடுக்கவேண்டும் என்பது பாரம்பரிய சீன மருத்துவத்தை குறித்து மாவோவின் கொள்கையாக இருந்தது. </span></span></h3>
<div>
<span style="color: blue;"><span style="font-family: "arial unicode ms" , sans-serif; font-weight: normal;"><br /></span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif; text-align: justify;"><span style="font-size: large;">"ப்ராஜெக்ட்
523” </span>என்ற பெயரோடு சீனாவில் ரகசியமாக நடத்தப்பட்ட ஆய்வும் அதை தொடர்ந்து சியிங்ஹோசு (அல்லது குயிங்ஹாவ் - </span><span style="text-align: justify;">Qinghaosu</span><span style="font-family: "arial unicode ms" , sans-serif; text-align: justify;">) எனும் சீன மருத்துவ மூலிகையிலிருந்து
மலேரியாவிற்கு இன்று உலகம் முழுவதும் பயன்படுத்தும் ஆர்டிமிஸினின் (</span><span style="text-align: justify;">artemisinin</span><span style="font-family: "arial unicode ms" , sans-serif; text-align: justify;">) வேதிமருந்து பிரித்து எடுக்கப்பட்ட
கண்டுபிடிப்பு சுவையான கதை. கடந்த இரண்டு பத்தாண்டுகளில் பலகோடி மனித உயிர்களை மலேரியா
சாவிலிருந்து காப்பாற்றிய இந்தக் கண்டுபிடிப்புக்கு 2015ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அளித்திருப்பது
உள்ளபடியே பொருத்தமானதுதான்.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif";">உலகை
குலுக்கிப்போட்டு மலேரியா மருத்துவத்திற்கு அடிவேராக விளங்கப் போகிறது என இந்த உயிரிமருத்துவ
ஆய்வில் இறங்கிய சமயத்தில் சீன ஆய்வாளர்கள் ஆருடம் கண்டிருக்க முடியாது. குறிப்பாக
மலேரியா சாவு கூடுதலாக உள்ள ஆப்பிரிக்க, தென்கிழக்காசிய பகுதிகளில் இந்த வேதிமருந்து
"அருமருந்தாக" அமையப் போகிறது என இந்த ஆண்டு நோபல் பரிசை வென்ற யூயூ டு (</span>Youyou
Tu<span style="font-family: "arial unicode ms" , sans-serif;">) மற்றும் அவரது கூட்டாளிகள்
கனவிலும் கருதியிருக்க மாட்டார்கள்தான். 1980களுக்குப் பிறகு பல லட்சம் நோயாளிகளை,
குறிப்பாக மூன்றாம் உலகைச் சார்ந்த குழந்தைகள் ஆர்டிமிஸினின் மருந்தால் உயிர் காப்பாற்றப் பட்டிருக்கிறது.
ஆர்டிமிஸினின் வேதிப்பொருளிலிருந்து வடிவமைக்கப் பட்ட ஆர்ட்டிமீதர் (artemether)),
ஆர்ட்டிசுனேட் (artesunate) கார்டேம் (coartem) முதலிய மருந்துகள்
உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) "அத்தியாவசிய மருந்துப் பட்டியலில்"
(List of Essential Medicines) இடம் பெற்றுள்ளன. “ஆர்ட்டிமிசினின்
சீனப் பரம்பரை மருத்துவத்திலிருந்து உலக மக்கள் பெற்ற கொடை" என நோபல் பரிசு பெற்ற
யூயூ டு பெருமிதம் பொங்க கூறியுள்ளார். <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif";"><b><span style="color: red;">ப்ராஜெக்ட்
523</span></b><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif";">1967இல்
தெற்காசியாவில் நடைபெற்றுக் கொண்டிருந்த வீரியமிக்க வியத்நாம் போரில் தான் இந்த கண்டுபிடிப்பின்
கதை துவங்குகிறது. வியட்நாமில் அமெரிக்கப் படைகள் ஆக்கிரமிப்பு செய்து விடுதலைப்படைகள்
மீது பெரும் சேதம் விளைவித்துக் கொண்டிருந்த காலகட்டம். அமெரிக்கப் போர்விமானங்களின்
தாக்குதலிருந்து தப்ப வியட்நாமியப் படைகள் காடுகளில் ஒளிந்து போர் நடத்திக்கொண்டிருந்தனர்.
அவலம் என்ன என்றால் அமரிக்கப்படைகள் ஏற்படுத்திய சேதத்தைவிட காட்டுப்பகுதியில் பரவியிருந்த
கொசுக்களின் கடிதான் வியட்நாமிய விடுதலை வீ</span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;">ர</span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;">ர்களுக்கு பெரும் சிக்கலாக இருந்தது. கொசுக்கடியில்
மலேரியா ஏற்பட்டு போரிட முடியாமல் முடங்கிய வியட்நாமிய வீரர்கள் அதிகம்.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;">குளோரோகுவின் (chloroquine) சல்பாடாக்ஸின் (sulfadoxine) பிரிமீத்தமீன் (pyrimethamine) முதலிய பல மலேரியா எதிர்ப்பு மருந்துவகைகள் அன்று இருந்தன என்றாலும் இவை எல்லாம் வீரியமிழந்து
போயிருந்தன. மருந்து எதிர்ப்புத்தன்மை (drug resistance) வளர்ந்து குறிப்பாக
குளோரோகுவினுக்கு படியாத பிளாஸ்மோடியம் பால்சிப்பாரம் (Plasmodium falciparum) மலேரியா நோய் ஒட்டுண்ணி பரிணமித்து இருந்தது. இந்த குறிப்பிட்ட இனப்பிரிவு (strain) பி.பால்சிப்பாரம் தாக்கிய நோயாளிகள் பலரும் தவிர கடுமையான நோய்க்கு ஆளாகி சிலர் மடியவும்
செய்தனர்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif";">"அமெரிக்க
ஏகாதிபத்தியப் படைகளை நிச்சயம் வென்றுவிடுவோம், அச்சமில்லை. ஆனால் இந்த கொசுத்தொல்லைதான்
தங்க முடியவில்லை" என வியட்நாமிய தலைவர் ஹோசிமின் நொந்துகொள்ளும் அளவுக்கு கொசுவால்
ஏற்படும் மலேரியா வியட்நா மியப் படைகளுக்கு சேதம் விளைவித்தது. போர்க்களத்தை சென்று
சேரும்போது மூன்றில் இரு வியட்நாமிய வீர்கள் மலேரியாவால் பாதிக்கப்பட்டனர். நோய்வாய்ப்
பட்ட வியட்நாமிய வீரர்கள் போரில் பங்கேற்க இயலவில்லை. மலேரியாவால் வியட் நாமியப் படைகள்
பெரும் சவாலை சந்தித்துக்கொண்டிருந்தன. வியட்நாமிய விடு தலைப் படையின் முக்கிய எதிரி
வலுவான ஆயுதங்களை கொண்ட அமெரிக்கப் படைகள் அல்ல, மெய்யாலும் சிறு கொசுதான். இந்தச்
சூழலில்தான் மலேரியா நோய்க்கு மேலும் வீரியமான முறிவு மருந்து வேண்டும் என்பது சவால்
என்று உணர்ந்த ஹோசிமின் நேச நாடான சீனாவின் அதிபர் மாவோவின் உதவியை நாடினார் . <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;">தமது
நாட்டிலும் பல பகுதிகளில் மலேரியா கோரத்தாண்டவம் ஆடுவதைக் கண்ட சீனத்தலைவர் மாவோ</span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;"> </span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;">ஹோசிமினின் கருத்தை ஏற்று மலேரியாவிற்கு வீரியமிக்க</span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;"> </span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;">புதிய மருந்து கண்டுபிடிக்க முடிவு செய்தார்.
1967இல் சீனப் பிரதமர் சு என்லாய் (Zhou Enlai) தலைமையில் மே23 அன்று மருத்துவ
நிபுணர்கள் குழு கூடி இந்தப் பிரச்னை குறித்து விவாதித்தனர். இதன் தொடர்ச்சியாக சுமார்
அறுபது ஆய்வு நிறுவனங்களிலிருந்து சுமார் 500 விஞ்ஞானிகள் ஒருங்கிணைக்கப்பட்டனர். கூட்டம்
நடந்த மாதம் தேதியை குறிக்கும்படியாக “523 திட்டம்" (Project 523) என்ற
பெயரில் பெய்ஜிங்கில் இந்த ஆய்வுத்திட்டம் துவக்கப்பட்டது. இளம் தாவர-வேதியியல் அறிஞர்களையும்,
மருந்தியல் அறிஞர்களையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த ஆய்வுக்குழுவாக இது அமைந்தது. உடனடி
இலக்கு என்ற வகையில் இந்த ஆய்வுக்குழு மலேரியாவிற்கு எதிராக போர்க்களத்தில் உடனடியாக
பயன்படுத்தக்கூடிய மருந்துகளை உருவாக்கவேண்டும் எனவும், நீண்டகால இலக்காக வேதிச் சேர்ம
முறை (synthetic chemicals) மற்றும் சீனப் பாரம்பரிய மருத்துவ ஆய்விலிருந்தும்
மேலும் வீரியமிக்க மருந்தை இனங்கண்டு பெறுவது எனவும் இலக்கு வைக்கப்பட்டது. <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif";">டு
யூயூ <o:p></o:p></span><span style="text-align: left;"><span style="font-family: "arial unicode ms" , sans-serif;">(Tu Youyou)</span></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;">ப்ராஜெக்ட்
523 இணை இயக்குனராக இருந்த சாங் ஜியன் பாஃங் (Zhang Jianfang) பின்னாளில்
எழுதிய வரலாற்று குறிப்புதான் யூயூவின் பங்களிப்பையும் இந்த திட்டத்தின் பெருமைமிக்க
வரலாற்றையும் தெரிவிக்கும் ஆவணம். இந்தத் திட்டம் துவங்கிய காலகட்டத்தில் சீனாவில்
கலாச்சாரப் புரட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. துவக்கக் கட்டத்தில் கலாச்சாரப் புரட்சி,
பழமைச் சிந்தனை மற்றும் பாரம்பரிய அடக்குமுறைக்கு எதிராக இயங்கினாலும், மாவோவின் மறைவுக்குப்
பிறகு "நால்வர் குழு"</span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;"> </span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;">தலைமையில்
எல்லாவித அறிஞர்களையும் "முதலாளித்துவ" சிந்தனையாளர்கள் என முத்திரை குத்தி
சீரழிவான போக்கிற்குச் சென்றது. அந்த காலகட்டத்தில் தனிநபர் பங்களிப்பு என்பதை ஏற்காமல்
எல்லாம் "கூட்டு தான்" என முரட்டுத்தனமாக வாதம் செய்த காலகட்டம். எனவே எந்த
ஆய்வும் யார்யார் செய்தது என வெளிப்படுத்தப்படாமல் இருந்தது. எனவே உள்ளபடியே ப்ராஜெக்ட்
523இல் யார் யார் என்ன செய்தார்கள் என்பது பின்னாளில்தான் வெளிவந்தது. ப்ராஜெக்ட்
523இல் பணியாற்றிய ஒரு குழு ஏற்கனவே இருந்த வேதிமருந்துகளில் சிறு மாற்றம் செய்து
அதனை மேலும் வீரியமிக்கதாக ஆக்கமுடியுமா எனத் தேட, வைக்கோல் போரில் ஊசியை தேடிய கதையாக
வேறொரு குழு சுமார் 40,000 வேதிப்பொருள்களை உற்றுநோக்கி அவற்றில்</span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;"> </span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;">ஏதாவது மலேரியா மருந்தாக பயன்படுமா என ஆராய்ந்தனர்.
கொசு கடித்தால் தானே மலேரியா நோய் ஏற்படும். எனவே வேறு ஒரு குழு கொசுக்கடியிலிருந்து
தப்ப ஆற்றல்மிக்க கொசுவிரட்டிகளை தயார் செய்ய ஆராய்ந்துகொண்டிருந்தது. <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKZqcovodEcBgCp_HYY28jagnWh3R2bI9p0sjzL-EsVS_GbrZXXGOzP9jAt4XpI3JPpUt8DTCZ0kURdCEY5iLQ6L5XXzja0p895aqCf2lBhxe8t94voFXPMP2np_LvrgJo4y4jsijjUO2C/s1600/1.JPG" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="485" data-original-width="866" height="179" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKZqcovodEcBgCp_HYY28jagnWh3R2bI9p0sjzL-EsVS_GbrZXXGOzP9jAt4XpI3JPpUt8DTCZ0kURdCEY5iLQ6L5XXzja0p895aqCf2lBhxe8t94voFXPMP2np_LvrgJo4y4jsijjUO2C/s320/1.JPG" width="320" /></a></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;">மாவோவின்
"நவீன மருத்துவ வெளிச்சத்தில் சீன மருத்துவம்</span><span lang="EN-US" style="font-family: "arial unicode ms" , sans-serif;">” </span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;">(Modern medicine looks at Traditional Chinese medicine) எனும் கொள்கைக்கேற்ப வேறொரு குழு சீன மருத்துவத்தில் ஏதாவது மலேரியாவிற்கு மருந்து
கிடைக்குமா எனத் தேடலில்</span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;"> </span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;">ஈடுபட்டுவந்தனர்.
இந்தக் குழுவில் வந்து சேர்ந்தார் முப்பத்தியேழு வயதான டாக்டர் டு யூயூ </span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;">(</span>Youyou Tu<span style="font-family: "arial unicode ms" , sans-serif;">)</span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;">.
<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;">சீனாவின்
நிங்போ (Ningbo) பகுதியில் 1930 டிசம்பர் 30இல் பிறந்த டு யூயூ முதலில் பெய்ஜிங்
மருத்துவக் கல்லூரியில் 1955 ஆம் ஆண்டுகளில் நவீன மருத்துவம் படித்தார். அதன் பின்னர்
அன்றய சீன விதிமுறைகளின்படி இரண்டரை வருடம் சீன மருத்துவத்திலும் பயிற்சி பெற்றார்.
கல்வி கற்று முடித்தப்பின் "சீன மருத்துவ அகாடமியில்</span><span lang="EN-US" style="font-family: "arial unicode ms" , sans-serif;">”</span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;"> (Academy of Chinese Medicine) பணியில் சேர்ந்தார். நவீன மருத்துவம்
மற்றும் பாரம்பரிய மருத்து வத்தில் பயிற்சி பெற யூயூ ப்ராஜெக்ட் 523க்கு மிகவும் பயனாக
இருப்பார் என்று அவரை அந்த துறைக்கு பணிமாற்றம் செய்தனர். இவ்வாறு தான் யூயூ 1967இல்
ப்ராஜெக்ட் 523க்கு வந்து சேர்ந்தார். <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif";"><b><span style="color: red;">ரோனல்ட்
ரோஸ் </span></b><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;">மலேரியா
என்பது உள்ளபடியே போர்த்துக்கீசிய வார்த்தையாகும். கொசு, கிருமி முதலியன குறித்து
அறிந்திராத காலகட்டத்தில் மாசு நிரம்பிய மலக்காற்று (mal air) தான் விட்டுவிட்டு
குளிர் சுரம் தரும் நோயை ஏற்படுத்துகிறது என கருதினர். அதன் காரணமாக இந்த நோய்க்கு
"மலேரியா" என்ற பெயர் ஏற்பட்டது. <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzChS9lSNqV8GYQkVPkgpbb8jzS_byFG2ZQUsDVw6-873YeOGOo4Z7K1eED_nBlI4GS4pcbuRMqRmimxQbohMslfgT9XdEvxESz1R9B2gepltADHjyDkPZEyxzkK5BIWVrmomxLbwFw_SA/s1600/800px-Ronald_Ross.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1136" data-original-width="800" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzChS9lSNqV8GYQkVPkgpbb8jzS_byFG2ZQUsDVw6-873YeOGOo4Z7K1eED_nBlI4GS4pcbuRMqRmimxQbohMslfgT9XdEvxESz1R9B2gepltADHjyDkPZEyxzkK5BIWVrmomxLbwFw_SA/s320/800px-Ronald_Ross.jpg" width="225" /></a></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif";">இந்தியாவில்
பிறந்துவளர்ந்த ரோனல்ட் ரோஸ் என்பவர் தான், ஹைதராபாத் மற்றும் கல்கத்தாவில் தான் நடத்திய
ஆய்வின் தொடர்ச்சியாக 1897 மலேரியா நோயின் மெய்த்தன்மையை கண்டுபிடித்தார். மலேரியா
என்பது ஒட்டுண்ணிகளால் ஏற்படும் ஒரு தொற்றுநோய் என்பது இவரின் ஆய்வில் துலங்கியது.
இதன் தொடர்ச்சியாக அவருக்கு 1902ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif";">உலகின்
மிக முக்கியமான ஒட்டுண்ணி நோய் மலேரியா ஆகும். சஹாரா பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான
ஆப்பிரிக்கப் பகுதிகளிலும், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும், மெக்ஸிகோ,
ஹைதி, மத்திய, தென், அமெரிக்காவிலும், பாபுவா நியூ கினியா மற்றும் சாலமன் தீவுகளிலும்
பரவலாகக் காணப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் அறிக்கைபடி 2013-ல் 19 கோடியே 80 லட்சத்துக்கும்
அதிகமானோர் மலேரியாவால் பாதிக்கப் பட்டார்கள். மலேரியா நோய் தாக்கி அந்த ஆண்டில் மட்டும்
கிட்டத்தட்ட 5,84,000 பேர் மடிந்தார்கள் என புள்ளிவிபரம் கூறுகிறது. மடிந்தவர்களில்
80சதவீதம் பேர் ஐந்து வயதுக்கு கீழுள்ள குழந்தைகள் என்பதுதான் துயரம்; அவலம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif";">உலகில்
அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் நோய்களில் மலேரியா 5வது இடத்தில் உள்ளது. உலகம் முழுவதும்
சுமார் நூறு நாடுகளில் மலேரியா அதிகம் பரவும் ஆபத்து இருக்கிறது. ஆப்பிரிக்காவில் மட்டும்
ஒவ்வொரு நிமிடமும் ஒரு குழந்தை மலேரியாவினால் இறந்து போகிறது. குழந்தைகளையும் கர்ப்பிணிப்
பெண்களையும் இந்த நோய் தாக்கினால் அவர்கள் மோசமாக பாதிக்கப்படுவார்கள். <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif";">ப்ளாஸ்மோடியா
என்ற ஒற்றைச்செல் மலேரியா கிருமி பொதுவே அனாபிளஸ் என்ற ஒருவகை பெண் கொசுவில் ஒட்டுண்ணியாக
வாழும். அந்தக் கொசு ஒருவரை கடிக்கும்போது அதன் உமிழ்நீர் வழியாக மனிதனின் உடலில் இரத்தத்தில்
கலக்கிறது. இந்தக் கிருமிகள் இரத்தத்தின் வழியாக கல்லீரலுக்குச் செல்லும். இக்கிருமிகள்
ஒரு வாரம்வரை கல்லீரலில் தங்கி, கோடிக்கணக்கில் பெருகும். கல்லீரலில் முதிர்த்தன்மையடைந்து
அங்கிருந்து ரத்தத்தில் கலக்கும். குருதியில் உள்ள இரத்த சிவப்பணுக்களில் தங்கி வளர்ந்து,
இனவிருத்தி அடையும் போதுதான் ரத்தச்சிவப்பணுக்க்கள் சிதைந்துவிடுகின்றன. ரத்தத்தில்
சிவப்பணுக்கள் குறைய குறைய நோய் முற்றுகிறது. <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif";">இவ்வாறு
கல்லீரலில் கிருமிகள் பல்கிப்பெருகி ரத்தத்தில் கலக்கும் நிலையில் தான் நோயாளியிடம்
நோய்க்கான அறிகுறிகள் தென்படும். மலேரியா கிருமிகள் இருக்கும் கொசு, ஒருவரை கடிக்கும்போது
அவர் மலேரியாவால் பாதிக்கப்படுவார். மற்ற கொசுக்கள் இவரைக் கடிக்கும்போது அந்த கொசுக்களுக்கும்
மலேரியா கிருமிகள் கடத்தப்படுகிறது. இந்த கொசுக்கள் மற்றவர்களை கடிக்கும்போது அவர்களுக்கும்
மலேரியா பரவுகிறது.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif";"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif";">கொசு
கடிப்புக்கும், மலேரியா நோயின் அறிகுறிகள் தோன்றுவதற்கும் இடையே பொதுவாக 7-முதல்
21 நாட்கள் இடைவெளி இருக்கும். ஒரு சிவப்பு அணு வெடிக்கும்போது அது கிருமிகளை வெளியிடுகிறது.
இந்தக் கிருமிகள் மேலும் பல சிவப்பு அணுக்களைத் தாக்குகின்றன. ஒவ்வொரு தடவை சிவப்பு
அணுக்கள் வெடிக்கும்போதும் மலேரியாவுக்கான அறிகுறிகள் தெரியவருகின்றன. காய்ச்சல், குளிர்
ஜூரம், தலைவலி, உடல் வலி, வாந்தி, குமட்டல், வியர்த்து கொட்டுவது போன்றவை இதன் அறிகுறிகள்.
நோய் தாக்கிய கிருமியின் வகையைப் பொறுத்தும், எத்தனை நாள் இந்த நோய் இருக்கிறது என்பதைப்
பொறுத்தும் அதன் அறிகுறிகள் தெரியவரலாம். 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை அறிகுறிகள்
விட்டுவிட்டு தெரியவரலாம். <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;">மனிதனைத்
தாக்கும் மலேரியா ஒட்டுண்ணிகளில் நான்கு வகைகள் உள்ளன. பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபரும்,
பி.விவாக்ஸ், பி.ஒவேல் மற்றும் பி.மலேரியா) ஆகிய இந்த நான்கில் பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபரும்
உண்டாக்கும் தொற்றுநோய் மிக வேகமாகப் பரவி உயிருக்கே ஊறு விளைவிக்கும். ஃபால்ஸ்பரும்
மலேரியாவால் பீடிக்கப்படும் நோயாளிகளில் நூற்றுக்கு ஒருவர் அல்லது இருவர் மரணமடைகின்றனர்.
மலேரியாவுக்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை பெறாவிட்டால் பல ஆபத்துகள் வரும். சிலருக்கு
மூளை காய்ச்சல் ஏற்பட்டு, வலிப்பு வந்து உயிரிழப்பும் ஏற்பட அதிக வாய்ப்புண்டு. இன்னும்
சிலருக்குச் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு, ‘கறுப்புத் தண்ணீர் காய்ச்சல்' (Black Water Fever) வரும். இந்த நோயின் போது சிறுநீரில் ரத்தம் அதிக அளவில் வெளியேறி
உயிருக்கு ஆபத்து ஏற்படும். சிறுநீரகம் செயலிழக்கவும் வாய்ப்பு உண்டு.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif";"><b><span style="color: red;">தேடல்
வேட்டை </span></b><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif";">மலேரியா
நோயின் முக்கிய அறிகுறிகளான விட்டு விட்டு ஜுரம் வருதல் முதலிய உள்ளங்கை நெல்லிக்கனி
போல தேடத் தெளிவாக இருந்ததால் முற்காலத்தில் மலேரியா கிருமி குறித்து எந்தவித அறிவுமின்றி
இருந்தனர் என்றாலும் இந்த நோய் குறித்த அறிமுகம் இருந்தது. இந்தியா உட்பட பல்வேறு
பண்பாடுகளில் மலேரியாவின் சிறப்பு அறிகுறி- விட்டுவிட்டு ஜுரம் வருதலை- கொண்டு அதற்கென
மருந்துகள் தேடி கண்டு பரிந்துரை செய்திருந்தனர். குறிப்பாக மலேரியா காய்ச்சலை குணப்படுத்தும் நாட்டு மருந்துகள் பல பண்பாடுகளிலும் உண்டு. இவ்வாறுதான் பல மூலிகைகள் கஷாயங்கள்
முதலியன சீன மருத்துவத்திலும் மலேரியாவிற்கு பரிகாரமாக பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
சீன மருத்துவத்தை பயன்படுத்தி தேடல் வேட்டையில் ஈடுபட்ட ஆய்வாளர்கள் பலரும் பரிந்துரைக்கப்பட்ட
வெவ்வேறு மூலிகைகளின் பயன்பாட்டை ஆராய்ந்து வந்தனர். யூயூ இதுபோன்ற ஒரு குழுவில்
தலைவராக இணைக்கப்பட்டார்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif";"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;">சீன
மருத்துவக்குறிப்புக்களை எங்கே தேடுவது? எங்கெல்லாம் மலேரியா பரவிய பகுதியோ அங்கெல்லாம் அதற்கான கைமருந்து, மூலிகை மருந்து முதலியன உருவாகியிருக்கும் அல்லவா? எனவே தேடுதலை
வெறும் பண்டைய புத்தகம் அல்லது மருத்துவக் குறிப்புகளில் மட்டும் தேடாது வெகுஜன மக்களிடம்
வெகுவாக புழக்கத்திலிருந்த பட்டறிவான கைமருந்துகளையும் ஆய்வுக்கு சேகரித்தனர். எனவே
ஆய்வாளர்கள் மலேரியா பரவிய களத்துக்குச் சென்றனர். மேலும் ஆய்வாளர்கள் அனைவருக்கும்
மலேரியாவின் கொடுமை அவலம் நேரடி அனுபவம் வேண்டும் என்பதால் அனைவரும் மலேரியா தாக்குதல்
இருந்த பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர். யூயூவும் மிகுதியாக மலேரியா காய்ச்சல் பீடித்த
பிரதேசமான ஹைனான் (Hainan) பகுதிக்கு அனுப்பப்பட்டார். மூன்றே மூன்று வயதான தனது
மகளை பெய்ஜிங்கில் குழந்தைகள் காப்பகத்தில் தனியே விட்டுவிட்டு கண்காணா இடத்துக்கு
பெய்ஜிங்கிலிருந்து பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் இருந்த ஹைனான் பகுதிக்குச் சென்றது
குறித்து பின்னாளில் நினைவுகூர்ந்த யூயூ அந்த அனுபவம் எப்படி தமக்கு மன உறுதியை அளித்தது
என்கிறார். மலேரியா பீடித்த அந்தப் பகுதியில் ஒருசில நாட்களிலேயே இளம் சிறுவர் சிறுமியர்
மட்டுமல்ல கைக்குழந்தைகளும் மடிந்து போகும் அவலத்தைக் கண்டு மனம் வெதும்பினார். அந்தக்
காட்சிகள் தமது நெஞ்சத்தை விட்டு என்றும் அகலவில்லை என்று கூறிய யூயூ தாம் எப்படியாகிலும்
மலேரியாவிற்கு மருந்து கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பை மனஉறுதியை அந்த அனுபவம்
ஏற்படுத்தியது என்றார்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif";">அவரும்
அவரது கூட்டாளிகளும் ஹைனான் பிரதேசத்தில் புழங்கிய மருத்துவக்குறிப்புக்களை சேகரித்தனர்.
தொன்மை மருத்துவக்குறிப்பு நூல்கள், கிராமப்புறத்தில் உள்ள நாட்டார் மருத்துவர்கள்
மற்றும் வெகுஜனங்களிடம் மலேரியா அறிகுறிக்கு எந்தெந்த மூலிகைகளை பயன்படுத்துகின்றனர்
என்ற தகவலை சேகரித்தார்கள். இந்த உரையாடல்களிலிருந்து அவர் ஜுரத்துக்காக சுமார்<span style="mso-spacerun: yes;"> </span>2,000 மூலிகை மருந்து செய்முறைக் குறிப்புகளை திரட்டினார். இதில் சில மந்தரித்து தாயத்து கட்டுவது போன்ற புனைவுகளாக இருந்தன. ஆயினும் சுமார்
640 மருத்துவக்குறிப்புகள் மலேரியா ஜுர அறிகுறிகளுக்கு பொருந்தி அமைந்தன. இவற்றை கவனமாக
பரிசீலனை செய்து மிளகு உட்பட 808 மூலிகைகள் இனம் காணப்பட்டன. இறுதியில் கவனமாக தேடி
தேர்வுசெய்து சுமார் 380 மூலிகைகளின் வடிசாறு எடுக்கப்பட்டது. இந்த வடிசாறுகளிலிருந்து
பல்வேறு மூலக்கூறுகள் பிரித்து எடுக்கப்பட்டன. வடிசாறுகளில் பிரித்து எடுக்கப்பட்ட
பல்வேறு<span style="mso-spacerun: yes;"> </span>மூலக்கூறுகள் மலேரியா நோய் கிருமி
பரவிய பரிசோதனைக் கூட எலி மீது பிரயோகித்து பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில்
ஒன்பது மூலிகைகள் மலேரியா மருந்தாக பிரகாசமாக தென்பட்டன. இதில் ஒன்று குறித்துதான்
ஆராய்ந்து வந்தார் யூயூ. <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif";">யூயூ
ஆராய்ந்த அந்த மூலிகைதான் சியிங்ஹோசு. மலேரியா நோய்க்கு முறிவாக சியிங்ஹோவிலிருந்து
தயாரிக்கப்பட்ட வடிசாறு இந்த சோதனைகளில் வெளிப்பட்டது. இந்த குறிப்பிட்ட வடிசாறு செலுத்தப்பட்ட<span style="mso-spacerun: yes;"> </span>நோய்வயப்பட்ட எலியின் ரத்தத்தில் மலேரியா கிருமிகள்
வெகுவாக குறைந்தன. சில ஆய்வுகளில் சுமார் 68% மலேரியா கிருமி வளர்ச்சி தடைப்பட்டதை
கண்டனர். கண்டோம் மாமருந்தை என யூயூடுவும் அவரது ஆய்வுக் கூட்டாளிகளும் மகிழ்வுற்றனர்.
<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXEpimh_Da5Jx9cEj5pHGrKu-I9uLOYwglkMsnJUTfUF53MdpUrpXDDAWe0-qKEbgkJ7kpQLoamvZ147NGP4vAia61UhDmf97JTV0w3vifldXoyJhXInsGI6my_r6KCqCLxWdBygcAKoSC/s1600/pic2.jpeg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="1200" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXEpimh_Da5Jx9cEj5pHGrKu-I9uLOYwglkMsnJUTfUF53MdpUrpXDDAWe0-qKEbgkJ7kpQLoamvZ147NGP4vAia61UhDmf97JTV0w3vifldXoyJhXInsGI6my_r6KCqCLxWdBygcAKoSC/s320/pic2.jpeg" width="240" /></a></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;">சீனாவில்
பரவாலக புதரில் விளையும் அர்டிமீசியா அன்னுவா (Artemisia annua) எனும்
தாவரத்தின் வடிசாறிலிருந்து எடுக்கப்பட்ட மூலக்கூறுதான் அது. சியிங்ஹோசு (qinghao) என சீனமொழியில் அறியப் பட்ட இந்த மூலிகைத்தாவரம் ஜுரத்தை குணப்படுத்தும் என்ற செய்தி
கி.மு.168வை சார்ந்த ஒரு நூலில் காணப் படுகிறது. "52 வகையான நோய்களுக்கும் மருத்துவக்
குறிப்புகள் (The recipes for 52 kinds of diseases)” என்ற
அந்த நூலில் மலேரியா நோயின் சிறப்பு அறிகுறியான விட்டுவிட்டு வரும் ஜுரம் போன்ற நோய்க்கு
இந்த மூலிகையின் சாறு மருந்தாக பரிந்துரை செய்யப் பட்டிருந்தது. 1798ல் பதிவு செய்யப்பட்ட
வேறொரு நூலில் இந்தத் தாவரத்தின் பயன் குறித்து விரிவான குறிப்பு உள்ளது. விட்டு விட்டு
ஏற்படும் ஜுரத்தை கட்டுப்படுத்த இந்த மூலிகையின் வடிசாறை பயன்படுத்த வேண்டும் என பாரம்பரிய
மருத்துவ நூல்கள் கூறின. மலேரியா ஜுரமும் விட்டு விட்டுதான் வரும். இந்தப் பின்னணியில்
எல்லோரும் மலேரியா நோய்க்கான அடுத்த தலைமுறை மருந்தை தரவல்ல மூலிகையை கண்டுவிட்டோம்
என மகிழ்ச்சி அடைந்தனர். <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;">மருத்துவக்
குறிப்புகளில் உள்ள இந்தத் தாவரம் எது என குழம்பியபோது ஹைனன் பிரதேசத்து நாட்டார் மருத்துவர்கள் 1950களில் ஹைனன் பிரதேசத்தில் பெரும் வீச்சில் மலேரியா நோய் கொள்ளைநோய் போல
பரவியபோது இந்த மூலிகையின் தேனீர் எல்லோருக்கும் தரப்பட்டு மருந்தாக பரவலாக பயன்பட்ட
வரலாற்று தகவலும் கிடைத்தது. உள்ளூர் மக்கள் அன்று தமக்கு எந்த தாவரத்தின் சாறு தரப்பட்டது
என யூயூவிற்கு அடையாளம் காட்டினர். சீனமொழியில் சியிங்ஹோசு என்று அறியப்பட்ட அர்டிமீசியா
அன்னுவா (Artemisia annua L.) எனும் தாவரம்தான் அது. <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif";">சுமார்
ஐநூறு வகை தாவரங்களை தன்னுள் கொண்ட அர்டிமீசியா குடும்பத்தைச் சார்ந்தது இந்தத் தாவரம்.
மஞ்சள் நிறத்தில் பூக்கள் கொண்ட கூர்முனை போல கதிர் இலை அமைப்பை<span style="mso-spacerun: yes;"> </span>கொண்ட தாவரம் அது. சீனா போன்ற நாடுகளில் தெருவோரம்
இயல்பாக வளரும் புதர்ச்செடி. 70லிருந்து 200 செ.மீ வரை உயரமாக வளரும் இத்தாவரம் ஆண்டுப்பயிர்
ஆகும். இன்று சீன, வியட்நாம் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் தோட்டங்களில் விளைவிக்கப் படுகிறது.
இதன் பதப்படுத்தப்பட்ட இலை ஏற்றுமதி செய்யப்பட்டு பல இடங்களில் மருந்து உற்பத்தி நடைபெறுகிறது.
<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif";"><b><span style="color: red;">கதையில்
திருப்பம்</span></b><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif";">ஆனால்
பெரும் அதிர்ச்சியாக வேறு விஞ்ஞானிகள் இந்த வடிசாறை<span style="mso-spacerun: yes;"> </span>மேல் ஆய்வுகள் செய்த போது மருந்தின் வீரியம் மங்கியது.
ஏற்கனவே பார்த்தது போல மலேரியா கிருமி வளர்ச்சி தடைபடவில்லை. சோதனைச்சாலையில் எலிகளில்
வெறும் 12% முதல் 40% மலேரியா கிருமி ஒடுக்கம் தென்பட்டது. எதிர்பார்த்தை விட மிகமிக
குறைவு. வியந்தனர் விஞ்ஞானிகள். குழம்பினார் யூயூ. <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif";"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;">மூலிகையிலிருந்து
எடுக்கப்பட்ட வடிசாற்றில் வீரிய செயற்கூறு (active ingredient) அடர்த்தி
போதிய அளவு இன்மையால்தான் நோய்கிருமி ஒடுக்கம் போதிய அளவு ஏற்படவில்லை என உணர்ந்தார்
யூயூ. ஏன் வடிசாற்றில் வீரிய செயற்கூறு அடர்த்தி குறைந்துபோகிறது? வியந்தார் யூயூ.
மறுபடி பண்டைய மருத்துவக்குறிப்புகளை கவனமாக படித்தார். அதில் ரஷ்ய குறிப்பு என தனியாக
ஒன்று இருந்தது. தீவிரமான ஜுரம் ஏற்பட்டு அவசர சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் மூலிகையை
அரைக்காமல், நீரில் இட்டு கொதிக்கவைத்து சாறு பிழியாமல் வெறுமனே ஒரு கீற்றை நீரில்
ஊறவிட்டு அதனை அப்படியே அருந்தவேண்டும் எனக் குறிப்பு இருந்தது. <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif";"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;">யூயூ
உட்பட ஆய்வு விஞ்ஞானிகள் உள்ளபடியே மூலிகையை நீரில் கொதிக்கவைத்துதான் வடிசாறை பிரித்தெடுத்து
வந்தனர். நீரின் கொதிவெப்பத்தில் இந்த மூலிகையில் உள்ள மெய்யான மருந்துச் செயற்கூறு சிதைந்துவிடுகிறது
என உணர்ந்துகொண்டார் யூ யூ. வெறும் 35°Cயில் கொதிநிலை உடைய ஈத்தர் கொண்டு மூலிகையின்
முக்கிய வேதிப்பொருளை (வீரிய செயற்கூறு) கரைத்து பிரித்தெடுத்தார். இதன் வீரியம் எதிர்பார்த்ததை போல அமைந்தது. ஆயினும் இன்னமும் சிக்கல் இருந்தது. இந்த மருந்து சில பக்கவிளைவுகளை
ஏற்படுத்தியது. இதனை ஆராய்ந்த யூயூ வீரிய செயற்கூறு வேதிக்கலவையிலிருந்து அமிலத் தன்மையுள்ள
சில பொருள்களை நீக்கம் செய்ய எஞ்சிய வீரிய செயற்கூறு பக்கவிளைவு இன்றி பலன் தந்தது.
<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;">"வடிசாறு
எண் 191” என்று பெயரிடப்பட்ட இந்த நடு நிலை வேதிக்கரைசல் பிளாஸ்மோடியம் பெர்க்ஹி (Plas modium berghei) கிருமியை சோதனைச்சாலை எலிகளில் நூற்றுக்கு நூறு சதவீதம்
அகற்றிவிடுகிறது என்பதை ஆய்வுகள் மூலம் 1971இல் யூயூ நிறுவினார். இதனை நோய்வாய்ப்பட்ட
எலி மற்றும் குரங்கு போன்ற விலங்குகளில் சோதனை செய்தார் யூயூ. அனைவருக்கும் வியப்பு.
இந்த முறையில் தயாரிக்கப்பட்ட சாறு கொடுக்கப்பட்ட நோய் எலி குரங்கு முதலியவற்றில்
நூறு சதவிகிதம் நோய்க்கிருமி அகன்றது. இரண்டே நாளில் இவை மலேரியாவிலிருந்து குணமடைந்தன.
மார்ச் 8, 1972 அன்று நடந்த ப்ராஜெக்ட் 523 திட்டக் கூட்டத்தில் யூயூ பெருமையுடன் தமது
வெற்றியை விளக்கி ஆய்வு முடிவுகளை கூறினார். <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif";">எலி
குரங்கில் சரி, மனிதனில் வேலை செய்யுமா? மனிதனுக்கு தீங்கு விளைவிக்குமா? அந்த ஆய்வுக்குழுவின் தலைவராக இருந்த யூயூயும் அவரது இரண்டு உதவியாளர்களும் தாமே தமது உடம்பில் சோதனை
செய்துகொள்ள முன்வந்தனர். அந்த வேதி மூலக்கூறு எந்த பாதிப்பும் தரவில்லை. பின்னர்
சுமார் 2000 மலேரியா நோயாளிகளிடையே சோதனை செய்தனர். வெறும்<span style="mso-spacerun: yes;"> </span>30 மணிநேரத்தில் அவர்களின் ஜுரம் போனது மட்டுமல்ல
ரத்தத்தில் மலேரியா கிருமி முற்றிலும் அழிந்தது. இறுதியில் இந்த ஆய்வு 1977இல் உறுதி
செய்யப்பட்டு வெளியுலகத்திற்கு வெளியிடப்பட்டது. அதன் பின்னர் 1976லிருந்து 1978வரை இதன் வேதிவடிவம் ஆராய்ச்சி செய்யப்பட்டு 1979ல் மருந்து உற்பத்தி துவங்கியது.
ப்ராஜெக்ட் 523ன் வெற்றியைக் கொண்டாடும் விதமாக அளிக்கப்பட்ட சீன அரசின் பதக்கத்தை
அந்த ஆய்வுக்குழுவின் சார்பில்<span style="mso-spacerun: yes;"> </span>1978இல் யூயூ
பெற்றுக்கொண்டார். <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;">1980களில்
உலக சுகாதார நிறுவனத்தின் உதவியுடன் மேலும் நுணுக்கமான ஆய்வுகள் செய்யப்பட்டு இன்று
ஆர்டிமிஸினின் (artemisinin) என்று அறியப்படும் இந்த வேதிப் பொருளைக் கொண்டு
மலேரியா மருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.</span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;">
</span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;">இன்று ஆண்டுதோறும் பல கோடி நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றுகிறது. <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif";"><b><span style="color: red;">மேஜிக்
மூலக்கூறு </span></b><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAQgzv6x-Ed12tofRyGMu55IDBJoDgoX1chL34ovzICajKuUP3tnKohUd8v4HUxc2EXwm8fpOnF6OQWb270UBMrhDhylR8lZjU4cFxOeAkr-AY2h764YH7XETnXAIE9oaYSA25VovwShBk/s1600/pic1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="341" data-original-width="535" height="253" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAQgzv6x-Ed12tofRyGMu55IDBJoDgoX1chL34ovzICajKuUP3tnKohUd8v4HUxc2EXwm8fpOnF6OQWb270UBMrhDhylR8lZjU4cFxOeAkr-AY2h764YH7XETnXAIE9oaYSA25VovwShBk/s400/pic1.jpg" width="400" /></a></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;">யூயூவின்
ஆய்வுகளைத் தொடர்ந்து அந்த மூலிகையின் செயற்கூறின் வேதித்தன்மையை ஆராய்ச்சி செய்தனர்.
உள்ளபடியே ஆர்டிமிஸினின் ( artemisinin a) மற்றும் டை-ஹைட்ரோ ஆர்டிமிஸினின் dihydro artemi sinin b) எனும் வேதிப்பொருள்கள்தான் அது
எனவும் அதன் வேதிஅமைப்பும் அதன்பின் இனம் காணப்பட்டது. இந்த தூய வேதிப்பொருள் மிகுவீரியமாக மலேரியா கிருமியைத் தாக்கிச் செயல்பட்டது. அதன்பின் அர்டேமிதேர் (artemether c) அர்தேசுனேத் (artesunate d) அர்டேமிசொன் (artemisone e) அர்தீத்தர்</span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;"> </span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;">(artelinicacid g) அர்டேலினிக்
அமிலம் (endoperoxide bridge) முதலிய வழித்தோன்றல் மருந்து வேதிப் பொருள்களையும்
சீன மருத்துவ ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பொதுவே அர்டேமிசினின் என்று அழைக்கப்படும்
இந்த வேதிப்பொருள்களில் எண்டோ பெராக்ஸ்சைடு பாலம் (endoperoxide bridge) எனும் சிறப்பு வேதி அமைப்பு உள்ளது. இந்த சிறப்பு வேதி அமைப்பு உள்ள வேதிப்பொருள்கள்
மட்டுமே மலேரியா எதிர்ப்புத்தன்மை கொண்டுள்ளன. <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;">ஏனைய
மருந்துகளைவிட இது இரண்டு மடங்கு வேகவேகமாக சுரத்தை குறைக்கிறது. ரத்தத்தில் இருக்கும்
மலேரியா கிருமியை ஆயிரம் மடங்கு வீரியத்துடன் நாசம் செய்கிறது. எனினும் அர்டேமிசினின்
மூலக்கூறு வெகுநேரம் உடலில் தங்குவதில்லை. எனவே அங்கொன்று இங்கொன்று எனத் தப்பிப்பிழைத்த மலேரியா கிருமி மறுபடி தலைதூக்கும் வாய்ப்பிருக்கிறது. அர்டேமிசினின் எளிதில்
நீரிலோ எண்ணை பொருள்களிலோ கரையாது. உடலில் இந்த மூலக்கூறு வெகுநேரம் தங்காது. உடல்
வெகுவிரைவில் இந்த மூலக்கூறை வேகமாக வெளியேற்றிவிடும். வெறும்</span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;"> </span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;">2லிருந்து 5 மணி நேரம்தான் இதன் அரை வாழ்நாள்.
வேறு மலேரியா மருந்துகளின் அரை வாழ்நாள் சிலநாட்கள் ஆகும். எனவே அர்டேமிசினின் வீரியம்மிக்கது
என்றாலும் அதன் தாக்குதலில் தப்பிப் பிழைக்கும் ஒருசில மலேரியா கிருமிகளினால் ஆபத்து
மறுபடி வரும் வாய்ப்பு இருக்கும். எனவே உலக சுகாதார நிறுவனத்தின் உதவியுடன் ACT எனும் புதுவகை கலவை மருந்து தற்போது தயார் செய்யப் படுகிறது. இதில் முக்கிய பங்கு அர்டேமிசினின்
தான், இதனுடன் சிறிதளவு நீண்டகாலம் தங்கி மலேரியாவிற்கு எதிராக செயல்படும் வேறொரு
மருந்துப் பொருளையும் கலந்து தருவார்கள். வீரியமாக செயல்பட்டு சட்டென்று மலேரியா நோயை
விரைவாக அர்டேமிசினின் குணப்படுத்தும். கலவையில் உள்ள ஏனைய மருந்துகள் சில நாட்கள்
உடலில் தங்கி மிச்சம் மீதம் எஞ்சும் மலேரியா கிருமிகளை மொத்தமாக துடைத்து எடுத்துவிடும்.</span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;"> </span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif";"><b><span style="color: red;">வெளிச்சத்திற்கு
வந்தது </span></b><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif";">சீனா
1980களில் ஆர்டிமிஸினின் கண்டுபிடிப்பை நடத்தியிருந்தாலும் அந்த மருந்து வெளியுலகத்துக்கு
வரவில்லை. சீனா மற்றும் அதன் நேச அண்டை நாடுகளான வியட்நாம், கம்போடியா போன்ற பகுதியில்
மட்டுமே வெகுகாலம் பயனில் இருந்தது. <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;">இதற்கிடையில்
அமெரிக்காவும் மலேரியாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல ஆயிரம் செயற்கை
வேதி மூலக்கூறுகளை வைத்து சோதனை செய்து தோல்வி அடைந்திருந்தது. வியட்நாம் போரில் அமெரிக்க ராணுவவீரர்களும் மலேரியா வியாதியில் அவதியுற்றனர். எனவே அமெரிக்காவும் மருந்து
கண்டுபிடிப்பில் இறங்கியது. அமெரிக்க வால்டேர் ரீட் ஆர்மி ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில்
இறுதியில் மேப்லோகுயின் (mefloquine) என்ற வீரியம்மிக்க வேதிப்பொருள் ஏற்கனவே
இருந்த குளோரோகுயின் வேதிப் பொருளிலிருந்து வடிவமாற்றம் செய்து உருவாக்கப்பட்டது.
இந்த மருந்தின் கெடுதல் விளைவிக்கக்கூடிய பக்கவிளைவுகள் காரணமாக பரவலாக பயன்படுத்த
முடியாமல் போனது. அச்சம் தரும் கனவுகள், மனப்பிரமை போன்ற பல சிக்கல்களை இந்த மருந்து
தூண்டியது. பாதுகாப்பான ஆனால் வீரியம்மிக்க மலேரியா மருந்து தேவையை உலகம் உணர்ந்து கொண்டது.
<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;">1979இல்
தான் அமெரிக்க மலேரியா ஆய்வாளர் டாக்டர் கெய்த் ஆர்னோல்ட் (Dr. Keith Arnold) சீனக் கண்டுபிடிப்பு குறித்து கேள்விப்பட்டார். வியட்நாம் கம்போடியா முதலிய பகுதிகளுக்குச்
சென்ற மேற்கத்திய பத்திரிகையாளர்கள் மலேரியாவிற்கு புதிய சீன மருந்து பயன்படுத்தப்படுவதையும்
அதன் வீரியத்தையும் வியந்து கூறினார். ஆயினும் அன்று சீன ஆய்வு குறித்து மேற்குலகில்
அவநம்பிக்கைதான் மேலோங்கி இருந்தது. மேலும் சீன மருத்துவத்தை பயன்படுத்துவது என்கிற
மாவோவின் கருத்தை எள்ளலோடுதான் மேற்குலகு கண்டுகொண்டிருந்தது. இப்போதுதான் விடுதலையடைந்த
ஒரு மூன்றாம் உலக நாடு நம்மை விட செம்மையாக உயர் அறிவியலில் துலங்கிவிடமுடியுமா என இறுமாந்திருந்த
டாக்டர் அர்னோல்ட் அவநம்பிக்கையோடுதான் சீனா மலேரியா மருந்தை சோதனை செய்து பார்க்க
முடிவு செய்தார். <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;">தம்மிடம்
வந்த மலேரியா நோயாளிகளை இரண்டு பிரிவாக பிரித்து ஒரு குழு நோயாளிகளுக்கு ஆர்டிமிசினின்
மற்றொரு குழுவிற்கு மேப்லோகுயின் செலுத்தி சோதனை செய்யப்பட்டபோது ஆர்டிமிசினின் மருந்தின்
பலம் உள்ளங்கை நெல்லிக்கனியாக வெளிப்பட்டது. மருத்துவ உலகம் வியப்பில் ஆழ்ந்தது. இதனைத் தொடர்ந்து வீரியம்மிக்க மலேரியா மருந்தை தேடிக்கொண்டிருந்த உலக சுகாதார நிறுவனம் ப்ராஜெக்ட்
523 குறித்து தகவல்களை திரட்டியது. மேலும் அக்டோபர்</span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;"> </span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;">1981இல் பீஜிங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட அறிவியல்
மாநாட்டில் யூயூ தமது ஆய்வு குறித்து கட்டுரை வாசித் தார். இதன் தொடர்ச்சியாக லான்செட் (Lancet) எனும் முன்னணி மருத்துவ ஆய்வு இதழ் சீன ஆய்வாளர்களின் கட்டுரைகளை வெளியிட்டது.
இந்த கட்டுரைகள் சிறப்புப் பரிசினை பெற்றன. <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif";">ஆர்டிமிசினின்
மருந்தின் மருத்துவக்குணம் வெள்ளிடை மலையாக தெளிவாக இருப்பினும் உலக நாடுகள் பயன்
பெறுவதில் ஒரு சிக்கல் இருந்தது. உலக சுகாதார நிறுவனம் 2000 ஆண்டில் இந்த மருந்தை பரிந்துரை
செய்து ஏற்றுக்கொள்வது வரை பரவலாக இந்த மருந்து சீனா தவிர வெளியுலகில் கிடைக்கவில்லை.
எந்தவொரு பெரும் மருந்து உற்பத்தியாளரும் இந்த மருந்தை உற்பத்தி செய்ய முன்வராததே காரணம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif";">உலகில்
உள்ள மொத்த ஒட்டுண்ணி நோயில் மூன்றாம் இடத்தில் இருக்கும் மலேரியாவிற்கு வீரியமான மருந்தான ஆர்டிமிசினின்-ஐ உற்பத்தி செய்ய முன்வராதது ஏன்? இன்று மருத்துவம் என்பது வணிகமயமாக்கப்பட்டு லாபம்தான் முக்கிய குறிக்கோள் என்று ஆகியுள்ள நிலை தான் அடிப்படையில் காரணம்.</span></div>
<blockquote class="tr_bq" style="text-align: justify;">
<span style="color: blue;"><span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><span style="font-weight: 400;">தொன்மைக்கருத்து என்பதாலோ பழைய மருத்துவக்குறிப்பில் உள்ளது என்பதாலோ குறிப்பிட்ட மருந்துக் குறிப்பு ஏற்கப்படவில்லை. பழமை என்பதால் ஒதுக்கப்படவும் இல்லை. நவீன மருத்துவ ஆய்வுமுறைகளை பயன்படுத்தி இவை சோதனை செய்யப்பட்டன. அறிவியலுக்கு பொருந்தி பயனுக்கு வந்தவை மட்டும் சீன மருத்துவம் என ஏற்கப்பட்டது. சீன மருத்துவத்தின் நவீனமயமாக்கம்தான் மாவோ கண்ட பாதை.</span></span></span></blockquote>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif";"><o:p> </o:p></span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;">தீவிர
கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தின் அடிப்படையில் 1970களில் சீனா தனி ஒரு ஆய்வாளரை முன்னிறுத்துவதை
தடை செய்திருந்தது என்பது மட்டுமல்ல எந்த ஒரு கண்டுபிடிப்புக்கும் அறிவுச்சொத்துரிமை
கொண்டாடுவதையும் தடை செய்திருந்தது. எல்லா கண்டுபிடிப்புகளும் பொதுஉடைமை என்ற கொள்கையை
கடைபிடித்து வந்தது.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif";">வெளியுலகில்
முதலாளித்துவ பொருளாதரத்தில் இது சிக்கலை ஏற்படுத்தியது.<span style="mso-spacerun: yes;"> </span>ஏதாவது முன்னணி மருந்துக் கம்பெனி இந்த மருந்தை
உற்பத்தி செய்தால், அறிவுச் சொத்துரிமை இல்லை என்பதால், வேறு எந்த கம்பெனியும் போட்டியாக
தயாரிக்க முடியும். எனவே தமக்கு லாபம் வருவது உறுதியில்லை என்பதால் எந்தவொரு மருந்துக்
கம்பெனியும் ஆர்டிமிசினை தயாரிக்க முன்வரவில்லை. ஆப்ரிக்கா ஆசியா முதலிய பகுதிகளில்
மலேரியா ஒழிப்புத் திட்டத்துக்கு ஆர்டிமிசினின்-னை பயன்படுத்துவது என உலக சுகாதார
நிறுவனம் முடிவு செய்து அதற்கான ஆர்டரை தர முன்வந்த பிறகுதான் சில கம்பெனிகள் இந்த
மருந்தை உற்பத்தி செய்யத் துவங்கின. <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif";"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif";"><b><span style="color: red;">ப்ராஜெக்ட்
523 சொல்லும் பாடம்</span></b><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif";">தொல்
மருத்துவக் குறிப்புகளை பக்கம்பக்கமாக புரட்டிபுரட்டி, மரபு மருத்துவக் குறிப்புக்களை
சேகரித்து இன்று நோபல் பரிசினை பெற்று இருக்கிற ஆர்டிமிசினின் கண்டுபிடிப்பு மறுபடியும்
மருந்து கண்டுபிடிப்பில் மரபின் பங்கினை குறித்த விவாதத்தை சூடுபிடிக்கச் செய்யும்.
சீன மருத்துவத்தினை பயன்படுத்தி ஆர்டிமிசினின் மட்டுமல்ல வேறு பல கண்டுபிடிப்புகளையும்
சீன விஞ்ஞானிகள் நிகழ்த்தியுள்ளனர். <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;">நவீன
சீனாவின் முதுபெரும் எழுத்தாளர் லு சூன் (Lu Xun) பாரம்பரிய சீன மருத்துவத்தை வெகுவாக
சாடி எழுதியுள்ளார். தமது தந்தை கடும் நோயால் பீடிக்கப் பட்டு அல்லல்படும் போது சீன
பாரம்பரிய மருத்துவர்கள் "புலிப்பால்" கொண்டு வா என்று சொல்லாததுதான் குறை.
எல்லாவிதமான மூடநம்பிக்கைகளை அள்ளி வீசினர். பிற்காலத்தில் நவீன மருத்துவம் பயின்ற லு சூன் "என்னுடைய இன்றைய அறிவினை வைத்து பார்க்கும்போது அவர்கள்</span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;"> </span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;">(அவரது தந்தையை குணப்படுத்த வந்த சீன மரபு மருத்துவர்கள்)</span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;"> </span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;">தெரிந்தோ தெரியாமலோ ஏமாற்றுக்கரர்கள் தான்"
என்று சாடினார். மாவோ சீன மரபு மருத்துவத்தின் யின்-யான் போன்ற நகைப்புக்குரிய கருத்துக்களை
கடுமையாக விமர்சனம் செய்து மரபு மருத்துவர்களை "பாம்பு எண்ணையை விற்கும் போலிகள்"
எனவும் "சர்க்கஸ் கோமாளிகள்" என்றும் எள்ளி நகையாடினார்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif";">1949ல்
சீனா விடுதலை அடைந்தபோது பொது மருத்துவ நிலை வெகு அவலமாக இருந்தது. அத்தியாவசியமான
மருந்துகளுக்கு கூட பெரும் தட்டுப்பாடு. பயிற்சி பெற்ற மருத்துவர்கள் வெகுசொற்பம்.
ஆனால் காலனிய ஆதிக்கம் மற்றும் உள்ளநாட்டுப் போர், ஜப்பானிய ஆக்கிரமிப்பு போன்ற காரணங்களால்
எங்கும் நோயும் உடல்நலக்குறைவும் பரவி இருந்தது. "மனிதர்கள் மற்றும் விவசாய விலங்குகளின்
இறப்பு விகிதம் மிக கூடுதலாக இருக்கிறது. பேய் ஓட்டுதல் போன்ற முறைகளைத்தான் பெரும்பாலான
மக்கள் நாடிவரும் நிலை இருகிறது. நவீன மருத்துவர்கள் தொகை தற்போது வெகு சொற்பம். எனவே
பெரும்பாலான மக்கள், குறிப்பாக விவசாய மக்கள் சீன மருதுவத்தைத்தான் நம்பவேண்டிய நிலை<span lang="EN-US">” </span>என்று உள்ள நிலையை வலியுறுத்திய மாவோ “சீன மருத்துவம் ஒரு செல்வக்களஞ்சியம்<span lang="EN-US">” </span>என்றார். மருத்துவ ஆய்வாளர்கள் சீன மருத்துவக் குறிப்புக்களை
தீவிரமாக தேடி ஆராய்ந்து முன்னேற்றம் காண செய்ய வேண்டும்" என்றார். <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj1gD71M-fnFRd8deFxPO2CiMSwi8SazPnACXBHdVi8UhQqHUxHNmqV406__lM0-LzJCOgE_d7HsXkVguolDh8E-jcGRDfmgpKvC7QBmICkTmd4CV_oMOLwUXq7e4W-FUpxzzjC8Or9Q-Ei/s1600/pic5.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="900" data-original-width="1200" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj1gD71M-fnFRd8deFxPO2CiMSwi8SazPnACXBHdVi8UhQqHUxHNmqV406__lM0-LzJCOgE_d7HsXkVguolDh8E-jcGRDfmgpKvC7QBmICkTmd4CV_oMOLwUXq7e4W-FUpxzzjC8Or9Q-Ei/s320/pic5.jpg" width="320" /></a><span style="font-family: "arial unicode ms" , sans-serif;">காத்து
கருப்பு தீண்டி நோய் வந்துள்ளது என கருதுவது போல பண்டைய சீன போலி தத்துவமே யின்-யான்
ஆகும். எதிர்மறை ஆற்றல்களாக கருதப்படும் யின், யான் தான் உயிர் உறுப்புகள் வழியாக உயிராற்றலாக
ஓடுகிறது எனவும் இவற்றின் சமநிலைக் குலைவே நோய் எனவும் கருதுகிறது. ஆமை மயிர், ஆகாயத்தில்
மலரும் தாமரை போல இவை இல்கருத்து ஆகும். எனவே இது போன்ற பழமை பத்தாம்பசலி கருத்துக்களை
மாவோ கடுமையாக சாடினார். அதே சமயத்தில் நாட்டுப்புற மருத்துவம் என்பதில் பட்டறிவு
சார்ந்து பல்லாண்டுகளாக மனித அனுபவத்தின் பயனில் சில மெய்கள் பொதிந்து கிடக்கலாம்
எனவும் மாவோ கருதினார். மார்க்சிச தத்துவப் பார்வையில் நவீன அறிவியலின் தோற்றுவாய்
மானுட உழைப்பே எனக் கருதுகிறது. இதன் அடிப்படையில் நவீன ஆய்வுக்கருவிகள் உருவாகாத முற்காலத்தில்
அனுபவத்தின் வாயிலாக மனிதன் துவக்க அறிவியலை (proto science) உருவாக்குகிறான்
எனவும், காலப்போக்கில், ஏற்ற சமூகமாற்றத்துக்கு பிறகு பழமைவாத சிந்தனைக்கு தலைவணங்கும்
தேவை அகன்று, இயற்கையை மேலும் நுணுக்கமாக ஆராயும் கருவிகள் உருவாகி அனுபவத்தை தாண்டிய
மேலும் மெய்நோக்கி நகரும் நவீன அறிவியல் உருவாகிறது எனவும் மார்க்ஸிசம் கருதுகிறது.
வெறும் அனுபவத்தை மட்டும் கைக்கொண்டால் நாம் சூரியன் கிழக்கே உதிக்கிறது எனக் கூறி
செல்லவேண்டி வரும். அனுபவத்துக்கும் அப்பால் சென்று அறிவியல் நுட்பமாக ஆராயும்போதுதான்
பூமி தன்னைத் தானே சுற்றிக்கொள்வதால் தான் பகல் இரவு ஏற்படுகிறது என விளங்கும். ஆயினும்
எல்லா அனுபவ அறிவும் முற்றிலும் தவறாக இருக்கும் என்பதில்லை. இதன் அடிப்படையில்தான்
சீன மருத்துவத்தில் அங்கே இங்கே "முத்துக்கள்" பொதிந்திருக்க வாய்ப்பு உண்டு
என மாவோ கருதினார்.</span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;"> </span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;"> </span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><br /></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif";">சோதனை
செய்து தெளியாது பழமையே சிறந்தது என பொத்தாம்பொதுவாக தலையில் வைத்து கொண்டாடவும் கூடாது
அதேசமயம் காலங்காலமாக உழைக்கும் மக்கள் அனுபவத்தில் சேகரித்த கருத்துகளில் மாயம்-மந்திரம், காத்து-கருப்பு போன்ற கற்பிதக் கருத்துகளை புறம்தள்ளி அறிவியல் பார்வையில் அலசி பயனுள்ளவற்றை தேடி எடுக்க வேண்டும் என்பது பாரம்பரிய சீன மருத்துவத்தைக் குறித்து மாவோவின்
கொள்கையாக இருந்தது. <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif";">இதன்
தொடர்ச்சியாக சீன பாரம்பரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தை ஏற்படுத்தியும் இருந்தார்
மாவோ. இந்த ஆய்வு நிறுவனத்தில் கிராமம் கிராமாக சென்று மக்கள் பயன்படுத்தும் கைமருந்து
பழக்கவழக்கங்கள் சேகரிக்கப்பட்டு ஆராய்ச்சி செய்யப்பட்டது. பழம்பெருமை பேசி ஆயிரமாயிரம்
ஆண்டுகளுக்கு முன்பிருந்த "தூய" சீன மருத்துவத்தைத் தேடிச் செல்வதல்ல மாவோ
வகுத்த பாதை. தொன்மைக்கருத்து என்பதாலோ பழைய மருத்துவக்குறிப்பில் உள்ளது என்பதாலோ
குறிப்பிட்ட மருந்துக்குறிப்பு ஏற்கப்படவில்லை. பழமை என்பதால் ஒதுக்கப்படவுமில்லை.
நவீன மருத்துவ ஆய்வுமுறைகளை பயன்படுத்தி இவை சோதனை செய்யப்பட்டன. அறிவியலுக்குப் பொருந்தி
பயனுக்கு வந்தவை மட்டும் சீன மருத்துவம் என ஏற்கப்பட்டது. <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif";">சீன
மருத்துவத்தின் நவீனமயமாக்கம் தான் மாவோ கண்ட பாதை. "மரபு" சீன மருத்துவம்
எனக்கூட இதை அடையாளப்படுத்தவில்லை. "சீன மருத்துவம்" என்று தான் அடையாளப் படுத்தினார்.
"மரபு" அல்ல முக்கிய பிரமாணம்; அறிவியல் வழியில் சீர்தூக்கிப் பார்ப்பது
தான் என்பதே மாவோ காலத்துப் பார்வையாக விளங்கியது. நவீனமயமாக்கத்தின் பகுதியாக நவீன
உடலியல் மருத்துவம் முதலியவற்றோடு முற்றிலும் முரண்படும் யின்-யாங் போன்ற பண்டைய சீன
மருத்துவக் கொள்கைகள் சீன மருத்துவத்தில் ஒதுக்கப்பட்டன. சோதிடம் அல்லது மூக்கு நீளம்
அல்லது தலையின் வடிவை வைத்து ஒருவரின் மருத்துவக்குணத்தை வகை செய்வது போன்ற அறிவுக்கு
ஒவ்வாத நடைமுறைகள் சீன மருத்துவத்திலிருந்து நீக்கம் செய்யப்பட்டன. <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif";">இதன்தொடர்ச்சியாக<span style="mso-spacerun: yes;"> </span>1956இல் பீஜிங் செங்க்டு ஷாங்காய்
போன்ற<span style="mso-spacerun: yes;"> </span>நகர்களில் சீன மருத்துவக்கல்லூரிகள்
ஏற்படுத்தப்பட்டன. சீன மருத்துவக்குறிப்புகளில் அறிவியல் பூர்வமானதை மட்டும் எடுத்து
மீதமுள்ள கற்பிதங்கள் நீக்கி களையப்பட்ட புதிய மருத்துவ நூல்கள் எழுதப்பட்டன. சீன
மருத்துவமுறைகள் தரப்படுத்தப்பட்டன. கிருமியியல், உடலியல், உடற்கூற்றியல் போன்ற நவீன
மருத்துவப் பட்டங்களை சீன மருத்துவக்கல்வியில் படிக்க வேண்டும். இவ்வாறு சீன மருத்துவம்
நவீனப்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நவீன மருத்துவம் படிக்கும் மாணவமாணவியரும்
சீன மருத்துவத்தில் அறிமுக வகுப்புகளை படிக்க வேண்டும் என்ற முறையில் பாடத்திட்டம் மாற்றப்பட்டது.
அதேபோல சீன மருத்துவம் படிக்கும் மாணவமாணவியருக்கும் நவீன மருத்துவம் அறிமுகம் செய்யப்பட்டது.
அதாவது ஒருங்கிணைந்த மருத்துவப்பார்வையை வலியுறுத்தியது. யூயூடுவும் இப்படிப்பட்ட
மருத்துவக் கல்வி நிறுவனத்தில் படித்து வந்தவர்தான். நவீன மருத்துவம் படிக்கத்தான்
அவர் பீஜிங் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தாலும் இரண்டரை ஆண்டுகள் அவரும் சீன மருத்துவத்தை
மாவோவின் ஒருங்கிணைந்த மருத்துவம் என்ற கொள்கையால் படிக்க வேண்டிவந்தது. <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif";"><b><span style="color: red;">இந்திய
மருத்துவம் </span><o:p></o:p></b></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;">இன்று
இந்திய மரபு மருத்துவத்தின் நிலை என்ன?</span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;"> </span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;">வெகுஜன
பத்திரிகைகளில் ஆயுர்வேதம், சித்த மருத்துவம் போன்றவை குறித்து வெகுவாக கட்டுரைகள்
வந்த வண்ணம் உள்ளன. எனினும் பகுத்தறிவாளர் நரேந்திர நாயக் அவர்கள் விவரிக்கும் ஒரு
சர்வேபடி புறநோயாளிகளில் வெறும் 0.5% சதவிகிதம் நோயாளிகள் மட்டுமே இந்திய மருத்துவ முறைகளை
நாடுகின்றனர். உள்நோயாளிகள் என்று பார்த்தல் மேலும் சொற்பம்தான். சமீபத்தில் NSSO சர்வேயும் நகர்புறத்தில் நடுத்தர உயர்குடி மக்கள்தான் அதிகம் மாற்று மருத்துவத்தை
நாடுகின்றனர் என்றும், பொதுவே தீராத நோய்களுக்குதான் நாடி வருகின்றனர் என்கிறது. அதாவது
பரவலாக மரபு இந்திய மருத்துவம் உள்ளபடியே நோயாளிகளுக்கு நோய்க்கு சிகிச்சை அளிக்கும்படியான
நிலையில் இன்று இல்லை என்கிறது இந்த சர்வே. ஆயுர்வேதம் போன்ற மருத்துவமுறைகள் வெளிநாட்டு
சுற்றுலா பயணிகளுக்கு வினோத அனுபவமாகவும் நடுத்தர மக்களுக்கு உடல் அசதி போன்ற
"அவதி"களுக்கும் "மூட்டு வலி" போன்ற தீர வியாதிகளுக்கும்</span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;"> </span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;">"மசாஜ்" செய்வதும் எனச் சுருங்கி உள்ளது
கண்கூடு. <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif";">எனினும்
பாரம்பரிய மருத்துவம் ‘குறளி வித்தை<span lang="EN-US">’</span><span style="mso-spacerun: yes;"> </span>மட்டுமே என ஒரே போடாக போடுவதும் சரியான புரிதலாக
இருக்காது. யூயூ கண்டுபிடிப்பு முதல் பற்பல கண்டுபிடிப்புகள் மரபு மருத்துவக்குறிப்புகளை
வைத்து நடத்தப்பட்டுள்ளன. எனவே இந்திய மருத்துவத்தை முற்றிலும் ஒதுக்கித்தள்ளுவதும்
அறிவியல் பார்வையாக இருக்காது. <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;">அகத்தியர்
"அருளிய" சித்த மருத்துவம் அல்லது வேதத்திலிருந்து பிறந்த ஆயுர்"வேதம்"
என்று இந்திய மருத்துவங்களை மாயமந்திரமாக பார்க்கும் போக்குதான் பரவலாக உள்ளது. மத்திய
அரசின் ‘ஆயுஷ்</span><span lang="EN-US" style="font-family: "arial unicode ms" , sans-serif;">’ </span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;">துறைக்குக் கீழ் இயங்கும் சித்த, ஆயுர்வேத,
யுனானி ஆய்வு நிறுவங்களின் போக்கு அவ்வளவு சீர்மிக்கதாக இருப்பாதாக தெரியவில்லை. மருந்துகளுக்கான
தர நிர்ணயம், மருந்துத் தயாரிப்பின் தர மேம்பாடு, மருந்துகளின் தரக்கட்டுப்பாடு என்று
தான் கவனம் காட்டுகிறதே தவிர மரபு மூலிகைகளின் செயற்கூறு (active ingredient) இனம் கண்டு மருத்துவத்தை மேம்படுத்துவது என்பது குறைவாகவே இருக்கிறது. மேலும் பண்டைய
மருத்துவ நூல்கள் மற்றும் குறிப்புக்களை "வேதவாக்காக" கொண்டு "ஆகம"
பிரமாணத்தை முன்னிறுத்தி வாதங்கள் செய்யும் வேடிக்கையும் நிலவுகிறது. <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif";">எடுத்துக்காட்டாக<span style="mso-spacerun: yes;"> </span>ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரியில் டீன்
ஆக இருக்கும் எஸ்.சுவாமிநாதன், "ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்" எனும் தன் தொடரில்
கூறுவதை பாருங்கள். "ஆண்கள் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது நல்லது என்றும்,
பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது நல்லது"
என்றும் வாதிடும் அவர் "இந்த இந்த கிழமையில் எண்ணெய் தேய்த்துக் குளித்தால் இந்த
இந்த பலன் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது<span lang="EN-US">” </span>என்று
தனது வாதத்துக்கு ஜோதிடத் தினை துணையாய் கொள்கிறார். மேலும் "சனியின் இயல்பு மந்தகதி.
உடலிலுள்ள அசதி, சோர்வு, சோம்பல் முதலிய தமோ குணங்களுக்கு அவர் அதிபன். அவருடைய சக்தி
மிகுந்திருக்கக் கூடிய சனிக்கிழமைகளில் உடலில் ஓய்வு தானே ஏற்படும். சுறுசுறுப்பும்,
விஸ்தரிப்பும் வேண்டிய சுபகாரியங்களை அவனது தினத்திலே வைத்துக் கொள்ளமாட்டார்கள்.
ஓய்வு பெற்றுச் செய்யவேண்டிய காரியங்களே அவனது தினத்திற்கு ஏற்றதாக அமைகின்றன. ஆகவே
சனிக்கிழமையில் எண்ணெய்க் குளியல் ஏற்றதாகிறது.” இது ஆணுக்கு. அதாவது ஆணுக்கு ஓய்வு
வேண்டுமாம். தினமும் அடுப்படியிலும் வயல்வெளிகளிலும் அலுவலங்களிலும் வேலை செய்யும்
பெண்களுக்கு ஓய்வு தேவையில்லை. அவர்கள் தமது "பெண்மையை" தான் முக்கியத்துவம்
தரவேண்டும் என்கிறார் இவர். “ஆணினம் எண்ணெய்க் குளியலால் உணர்ச்சிக் கொந்தளிப்பு தணிந்து
தசைகளின் முறுக்குத் தளர்ந்து ஓய்வுபெறுவது போல, பெண்ணினம் எண்ணெய்க் குளியல் தன்
பெண்மையை வளர்த்துக் கொள்கிறது.” எனும் அவர், செவ்வாய் தான் பெண்களுக்கு உகந்தது என்கிறார்.
பிதற்றல் என்பதல்லாமல் என்னவென்று கூறுவது? ஜோதிடப்புரட்டு தான் இதில் மேலோங்கி உள்ளது
அல்லவா?</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif";"><br /></span></div>
<blockquote class="tr_bq" style="text-align: justify;">
<span style="color: blue;"><span style="font-family: "arial unicode ms" , sans-serif;">இந்திய விஞ்ஞானி சுனில்குமார் ஷர்மா (SunilKumar Verma) என்பார் யூயூ டுவின் கண்டுபிடிப்புக்கு முன்பே இந்திய மரபு ஆர்டிமிஸினின் மருந்து குறித்து அறிவு கொண்டிருந்தது என்று கூறி ஊடகங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளார். 1918இல் கிர்த்திகார் மற்றும் பாசு என்போர் (KIRTIKAR and BAS) எழுதிய இந்திய மருத்துவ தாவரங்கள் (INDIAN MEDICINAL PLANTS) என்ற நூலில் காஷ்மீர் முதல் குமவன் வரை பரவியிருந்த ஒருவகை அர்டீமிசியா மரிடிமா (Artemisia maritima) எனும் தாவரத்திலிருந்து எடுக்கப்பட்ட வடிசாறு காய்ச்சலை குணப்படுத்தும் என்றும் அந்த தாவரத்திலிருந்து அர்டிமிசின் (Artemisin) பிரித்து எடுப்பது குறித்தும் தகவல் உள்ளது என்றும் கூறி, யூயூ க்கு முன்பே இந்தியாவில் புழங்கிய மருந்துதான் இது என்கிறார் அவர். இந்த தாவரத்தை அஜவையன் என்று வடமொழியில் அழைப்பார்கள் என்றும் இந்த தாவரத்தை இட்டு கொதிக்கவைத்த நீர் காய்ச்சலுக்கு உகந்த மருந்து என ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது என்றும் கூறி எல்லாம் அந்தகாலத்திலேயே இருந்தது என்று கூறும் போக்கினை திரு ஷர்மா அவர்கள் முன்வைக்கிறார்கள். </span><span style="text-align: left;"><span style="font-family: "arial unicode ms" , sans-serif;">முதலாவதாக சீன மருத்துவம் கண்டுபிடித்து தனித்து பிரித்து எடுத்தது ஆர்டிமிஸினின் (artemisinin), அர்டிமிசின் (Artemisin) அல்ல! சல்பேட் மற்றும் சல்பைடு இரண்டும் வெவ்வேறு வேதிப்பொருள்கள் என்பதுபோல ஆர்டிமிஸினின் (C15 H22 O5 ) மற்றும் அர்டிமிசின் ( C15 HI8 O4) இரண்டும் வெவ்வேறு மூலக்கூறுகள். இரண்டின் வேதிவினை வெவ்வேறானது. இரண்டாவதாக நோபல் பரிசு மரபு மருத்துவத்துக்கு அல்ல. மரபு மருத்துவ துணை கொண்டு சரியான மூலிகையைத் தேடி அதில் இருக்கும் செயற்கூறு வேதிப் பொருளை பிரித்தெடுத்து தனிமைப்படுத்தி நோயாளிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் வெற்றிகண்டு புதிய வீரியமிக்க மருந்தை தயார் செய்தததற்குத் தான் நோபல் பரிசு தரப்பட்டுள்ளது. மூன்றாவதாக அர்டீமிசியா மரிடிமாவில் குறிப்பிடத்தகுந்த அளவில் ஆர்டிமிஸினின் இல்லை. எனவே இந்த சர்ச்சை போலியானது.</span></span></span></blockquote>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;">"சீனாவுக்குக்
கிடைத்த மருத்துவ நோபெல் பரிசு சொல்வது என்ன" என்ற தலைப்பில் அரவிந்தன் நீலகண்டன்
தனது தினமணி கட்டுரையில் "ஒவ்வொரு முறையும், இந்தியப் பாரம்பரிய மருத்துவம் சார்ந்த
ஆராய்ச்சி, ஒரு புதிய முயற்சியைத் தொடங்கும்போது உடனடியாக முத்திரை குத்தப்படுகிறது.
இதன் விளைவாக, ஒரு பெரிய அறிவுக்களஞ்சியம் முன்னெடுக்கப்படாமல் அழிவை நோக்கிக் கொண்டுசெல்லப்படுகிறது"
என ஆதங்கப் படுகிறார். சில விஞ்ஞானிகள் முன்வைக்கும் 'ஆயுர் ஜினோமிக்ஸ்</span><span lang="EN-US" style="font-family: "arial unicode ms" , sans-serif;">’ </span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;">என்ற புதிய பார்வை குறித்து பல மருத்துவ விஞ்ஞானிகள் கடுமையான
விமர்சனப்பார்வை கொண்டிருப்பதை சுட்டிக்காட்டி, "காரவன்" இதழில் வெளிவந்த
ஒரு கட்டுரையை ஆதாரமாக கொண்டு “இடதுசாரி" நோக்கர்கள் இந்திய பாரம்பரிய அறிவியலை
முன்னெடுக்க முனைபவர்களை எதிர்மறை உணர்வுடன் அணுகுகிறார்கள் என்றும் "இடதுசாரிகள்
ஆக்கிரமித்து நிற்கும் நம் ஊடகங்களிலோ, இவர்களுக்குக் கிடைப்பதெல்லாம் மறுப்பு, சந்தேகம்,
இயன்றவரை எதிர்மறை சித்தரிப்பு" எனக் கூறுகிறார்.</span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;"> </span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;">மேலும் "யூயூடு தம் கண்டுபிடிப்புகளை வெளியுலகுக்குக்
கொண்டு செல்ல காத்திருந்த காலகட்டத்தைவிட, இடதுசாரி ஆக்கிரமிப்பு நிறைந்த இந்திய உலகில்,
இந்தியப் பாரம்பரியம் சார்ந்த அறிவியல் எல்லாவித எதிர்மறை சித்தரிப்புகளையும் தாண்டித்தான்
தன்னை உலகுக்குக் கொண்டுசெல்ல வேண்டிய நிலையில் இருக்கிறது ”எனவும் வருத்தம் தெரிவிக்கிறார்.</span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;"> </span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif";">திருவிளையாடல்
படத்தில் தருமிக்கும் நக்கீரருக்கும் இடையே நடக்கும் வசனம்தான் இங்கு நினைவுக்கு வருகிறது.
எழுத்தாளரே உமது எழுத்தில் பிழை உள்ளது என்றும் இந்தக் கவிதைக்கு விளக்கத்தை சொல்லிய
பிறகு பரிசை பெற்றுச் செல்லுமாறும் நக்கீரன் கூற தருமி "பிழை இருந்தாலென்ன? எவ்வளவு
பிழை இருக்கிறதோ அதற்கு தகுந்தபடி பரிசை குறைத்துக் கொள்ளுங்கள்" என்றும்
"போங்கப்பா அரசருக்கே விளங்கிவிட்டது இடையில் நீர் என்ன?” என்றும் தருமி கூறுவதுபோல
தான் அரவிந்தன் நீலகண்டனின் வாதம் உள்ளது. <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;">ஐன்ஸ்டைன்
தன்னுடைய சிறப்பு சார்பியல் தத்துவம் குறித்த ஆய்வுக்கட்டுரையை பிரசுரிக்க பல அறிவியல்
ஆய்விதழ்களுக்கு அனுப்பியபோது பலரும் அந்த கட்டுரையை ஏற்க மறுத்தனர். கடைசியில் ரோண்ட்கன் (Röntgen) தான் ஆசிரியராக இருக்கும் அறிவியல் இதழில் பிரசுரித்தபோது ஆசிரியர்
குறிப்பில் ஐன்ஸ்டைனின் கட்டுரையை தம்மால் ஏற்க முடியவில்லை என்று கண்டன குறிப்போடுதான்
பிரசுரம் செய்தார். இன்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள பல அறிவியல் கருத்துகள் முதலில்
அறிவியல் உலகம் விமர்சனத்தோடும் சந்தேகக்கண் கொண்டும்தான் பார்த்துள்ளது என்பதே வரலாறு.
<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<blockquote class="tr_bq" style="text-align: justify;">
<span style="color: blue; font-family: "arial unicode ms" , sans-serif;">மார்க்ஸிச தத்துவப்பார்வை, நவீன அறிவியலின் தோற்றுவாய் மானுட உழைப்பே என கருதுகிறது. இதன் அடிப்படையில் நவீன ஆய்வுக்கருவிகள் உருவாகாத முற்காலத்தில் அனுபவத்தின் வாயிலாக மனிதன் துவக்க அறிவியலை உருவாக்குகிறான் எனவும், காலப்போக்கில், ஏற்ற சமூக மாற்றத்துக்கு பிறகு பழமைவாத சிந்தனைக்கு தலைவணங்கும் தேவை அகன்று, இயற்கையை மேலும் நுணுக்கமாக ஆராயும் கருவிகள் உருவாகி அனுபவத்தை தாண்டிய மேலும் மெய் நோக்கி நகரும் நவீன அறிவியல் உருவாகிறது எனவும் மார்க்ஸிசம் கருதுகிறது.</span></blockquote>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;">அப்படிதான்
பார்க்கவேண்டும் என்பதுதான் அறிவியலின் தர்மம். எல்லா கருத்துகளும் முன்மொழிவுகளும்
தீவிர விமர்சனத்துக்கு உள்ளாக்குவதுதான் அறிவியலின் முக்கிய தன்மைகளில் ஒன்று. அறிவியல்பார்வை
ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தேகங்களை எழுப்புவது (organised scepticism) என்பர். இவ்வாறு "நக்கீர"ப் பார்வையோடு அறிவியல் செயல்படுவதாலேயே பிழை</span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;"> </span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;">நீக்கி மெய் துலங்குகிறது. பல குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனால் ஒரு நிரபராதி தண்டனை பெற்றுவிடக்கூடாது எனபது நீதி சாஸ்திரம். அதேபோல பல
மெய்களை நாம் ஏற்றுக்கொள்ளாமல் போகலாம், ஆனால் பிழையான ஒன்றை மெய் என்று சாதிக்கக்கூடாது
என்பது அறிவியலின் நியதி. எனவே</span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;"> </span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;">தயவுதாட்சண்யம்
அற்ற விமர்சனமே அறிவியலின் வெற்றிக்கு முக்கிய காரணம். பண்டைய இந்திய கருத்தை விலை
செய்கிறார்கள் என்பதாலேயே "கொஞ்சம் குறைத்து" எல்லாம் விமர்சனம் செய்ய முடியாது.
உள்ளபடியே நீலகண்டன் முதலியோரின் பார்வையும் பரிந்துரைகளும் தாம் ஆயுர்வேதம், சித்த
மருத்துவம் முதலியவற்றிலிருந்து அறிவியல்பூர்வமான ஆராய்ச்சியை தடுத்து வெறும் போலி
பெருமையை மட்டும் முன்னிறுத்தும் போக்காக அமைந்துவிடுகிறது. <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;">இந்தியப்
பாரம்பரியத்திலிருந்து சிலவற்றை மீட்டெடுக்க வேண்டும் என்கிற அனைவரும் "மறைவாக
நமக்குள்ளே பழங்கதைகள்" மட்டும் பேசுபவர்களல்லர்; மூடநம்பிக்கைகளில் முழ்கியவர்களுமல்ல.
"நாடிப்பிடிப்புடன் நவீன அறிவியலைப் பயன்படுத்தி, சித்த மருத்துவத்தை உள்வாங்க
வேண்டும்</span><span lang="EN-US" style="font-family: "arial unicode ms" , sans-serif;">” </span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;">எனக் கூறும் சித்த மருத்துவர் கு.சிவராமன்
"நவீன அறிவியல் கண்ணோட்டத்தோடு பார்த்து, சித்தமருத்துவ சிகிச்சை அளிக்கவேண்டும்"
என்கிறார். மேலும் "பாரம்பரிய அனுபவங்களைக் கட்டவிழ்க்க, பாரபட்சமற்ற பாரம்பரிய
மருத்துவப் புரிதலும் வேண்டும்; நவீன விஞ்ஞான ஆய்வுகளும் வேண்டும். இரண்டில் எது குறைந்தாலும்
விடை கிடைக்காது" எனக் கூறி "ஒரு மருந்து பழமையானது என்பதாலோ, நம்முடைய
மரபு என்பதாலோ கொண்டாடாமல், Reverse pharmacology முறையில் நடத்தப்படும்
ஆய்வுகளில் தவறென்று தெரியவரும் எந்த மருந்தையும் விலக்கி வைக்கவும்" தயாராக இருக்கவேண்டும்
என்கிறார்.</span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;"> </span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;">ஆனால் இவரைபோன்று "மறைவாக
நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை" என்று உரக்கக்கூறி, அறிவியல்
பார்வையை முன்னிறுத்த வேண்டும் என்ற அவா கொண்ட மரபு மருத்துவ அறிஞர்கள் விதிவிலக்கு
தான் என்றே தோன்றுகிறது. <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;">இந்திய
மருத்துவத்தை நவீனப்படுத்துவது என்ற பார்வை இல்லாமல், பழம்பெருமை பேசுவதில் காலத்தை
நாம் கழிக்கும்வரை ஆயுர்வேதம், சித்த மருத்துவம் முதலியவை</span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;"> </span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;">சுற்றுலாத்தலங்களில் "மசாஜ்" சென்டராகவும்
வசதி படைத்தவர்கள் தம்மை "வித்தியாசமாக" காண்பித்து கொள்ள கைக்கொள்ளும் (fad) வறட்டுப் பகட்டாகவும் மட்டுமே துலங்கும். <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif";"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="text-align: left;"><span style="color: purple; font-family: "arial unicode ms" , sans-serif;">- முனைவர் த.வி. வெங்கடேஸ்வரன்,</span></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="color: purple;"><span style="font-family: "arial unicode ms" , sans-serif;">முதுநிலை விஞ்ஞானி, </span><span style="font-family: "arial unicode ms" , sans-serif;">விக்யான் பிரச்சார், புதுடெல்லி</span></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="color: purple;"><span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><br /></span></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="color: blue; font-family: "arial unicode ms" , sans-serif;">புதுவிசை, இதழ் 45, 2016 பிப்ரவரி</span></div>
<br />
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<br /></div>
புதுவிசைhttp://www.blogger.com/profile/09276344793619872435noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8111967010823738396.post-19350104652472507802018-03-25T18:37:00.000-07:002018-03-25T18:37:57.456-07:00ஒடுக்கப்பட்டோர் இலக்கியமும் மனித இலக்கியமே... பாகுராவ் பாகுல் தமிழில் : தி.சு. சதாசிவம் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="bltxtbold1" style="background-color: white; font-family: Latha; font-size: 12px; font-weight: bold; text-align: center;">
<br /></div>
<div align="justify" style="background-color: white; font-family: Latha; font-size: 12px;">
துன்ப-துயரங்களின் தோற்றுவாய்: மனித சமுதாயத்தில் சொத்துடமை தோன்றிய நாளிலிருந்தே ஆட்சியதிகாரத்தில் இருந்தவர்களால் பல்வேறு கருத்தாக்கங்களும் கோட்பாடுகளும் அவர்களுக்குத் தேவைப்படும் போதெல்லாம் உருவாக்கப்பட்டு வந்திருக்கின்றன. அவை சுரண்டல்தன்மை கொண்ட அதிகாரம், துயரம், நோவு - நலிவு, அடிமைத்தனம், பொருளற்ற சமயச் சடங்குகள் மற்றும் சொர்க்கம்-நரகம் என்னும் கற்பனைக் கருத்துக்களை நியாயப்படுத்தின. இத்துடன் குடியாட்சி பற்றிய பழைய கருத்துக்கள் மறைந்து, சமூக, பண்பாட்டு அமைப்புகள் சுரண்டல் தன்மை கொண்ட அரசுகளின் முழுமையான ஆளுகைக்கு உள்ளாக்கப்பட்டன....<br /><br />ஒரு பொருள் - விரிந்த தொலைநோக்கு: முழுமையான முடியாட்சியின் தோற்றமும் குடியரசுகளின் வீழ்ச்சியும், பகவான் புத்தரின் “தம்மா” உருவாக்கத்தோடு ஒரே காலத்து நிகழ்வுகளாக அமைந்தன. இம்மாபெரும் கருணையுள்ளம் கொண்ட முற்றுமறிந்த ஞானி, செல்வக்குவிப்பு, செல்வத்தையும் - அதிகாரத்தையும் அடைவதற்கான பயங்கரப் போராட்டங்களின் விளைவான பெரும்போர்கள், அதன்பின்னான வன்முறைகள், வளர்ந்து கொண்டே வரும் சமத்துவ மின்மை, துயரம், நோவு-நலிவு, அடிமைநிலையை கூர்மையாக உற்றுணர்ந்தார். “தம்மா” கருத்தாக்கச் சக்கரத்தைச் சுழற்றி துயரங்களுக்கெல்லாம் தோற்று வாய் எதுவெனக் காட்டினார். துயரங்களே இல்லாமலாக்குவதற்கான வழிகளை பகுத்தறிந்தார்; சுரண்டல் தன்மை கொண்ட கோட்பாடுகளையும் சமூக அமைப்பையும் அவற்றால் உண்டாகும் நடைமுறைகளையும் வன்மையாகக் கண்டித்தார். இருப்பினும் முற்றான்மை கொண்ட முடியாட்சியும் சுரண்டல் அரசும் நொருங்கிப் போய்விடவில்லை. அல்லது செல்வமும் அதிகாரமும் ஒரே இடத்தில் குவிவதும் தடுக்கப்பட்டு விடவில்லை. அடிமைத்தளை கழன்று மக்கள் விடுதலை பெற்றுவிடவில்லை. செல்வமும் அதிகாரமும் சமூகத்தின் உடமையாக்கப்பட்டு பரவலாக்கப்பட வேண்டும் என்னும் கருத்தும் நிலை பெறவில்லை. மேலும் மேலும் பல போர்கள் நடைபெற்றன. அடிமைகளின் எண்ணிக்கை பெருகிற்று.<br /><br />யாரெல்லாம் அதிக அதிகாரத்தையும், செல்வத்தையும் போர்க் கருவிகளையும் கையில் வைத்திருந்தார்களோ அவர்களே மேலும் பெரும் எண்ணிக்கையிலான அடிமைகளின் சொந்தக்காரர்களாயினர். நாடுகளே முழுமையாகவும் அடிமைகளாயின. ஏற்றத்தாழ்வு அதிகரித்துக் கொண்டே தடுத்து நிறுத்த முடியாத நிலைக்குப் போயிற்று. நிலவி வந்த சமூக மற்றும் அறிவுநிலை முறைமைகள் “வருணம்” மற்றும் வகுப்பு வேறுபாடுகளை வளர்த்து வளப்படுத்திக் காத்த தத்துவங்களால் மேலும் ஆழமாக்கப்பட்டன. சமூக ஒருங்கிணைப்பு என்னும் முழுப் பின்னலே ஏற்றத்தாழ்வு என்னும் தீயால் கொளுத்தப்பட்டு சீர்குலைந்தது. பகவான் புத்தரின் ‘சங்க’த்தில் மட்டுமே ஒரு மக்களாட்சி சமூகத்தைக் கண்டெடுக்க முடியும். அங்கேதான் ஆறுகள் கடலை நோக்கிப் பாய்வதைப் போல வெவ்வேறு சாதிகள் மற்றும் வகுப்புகள் சார்ந்த மக்களும் ஒன்றிணைய முன்வருவர். சமூக மக்களாட்சி வடிவத்தில் சமத்துவமும் அமைதியும் நிறைந்த ஒரு மகிழ்வான வாழ்வை வாழ்வார்கள்.<br /><br />சுரண்டல் தன்மை கொண்ட அரசமைப்பின் இயல்பு: சுரண்டல் தன்மையுள்ள அரசு ஒரு தனித்த தன்மையைக் கொண்டது. அதன் சுரண்டல் இயல்பை மேலும் வளர்த்தெடுப்பதற்கு உதவும் தத்துவங்களையும் நிறுவனங்களையும் மட்டுமே அது வாழவும் வளரவும் விடும்; அவ்வரசுக்கு ஏற்றத்தாழ்வும் தீண்டாமையும் மிகவும் தேவை. எனவே அது அவைகளைக் காத்து, பெருக்கச் செய்யும். அதற்கேற்றவாறு எண்ணங்களையும் பண்பாட்டையும் வடிவமைக்கும். மறுபுறம், ஏற்றத்தாழ்வையும், தீண்டாமையையும் எதிர்க்கும் ஆக்கவகையிலான கொள்கைகளையும் கோட்பாடுகளையும் ஒன்று முழுமையாக அழித்து விடும் அல்லது அடக்கு முறைக்கு உள்ளாக்கி மாசுபடுத்திவிடும்.<br /><br />கடவுள் மறுப்பு கொள்கையும் நாத்திகமும் தனது வகுப்பு நலன்களைக் காக்கத் தவறிவிடும், எதிராகவே செயல்படும் என்பதை ஆளும் அதிகார வகுப்பு உணர்கிறது. இக்கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டால் “எல்லாம் வல்ல இறைவன், அவனது புனிதத்தன்மை” என்னும் கருத்தாக்கத்தை அவைகள் தாமாகவே மறைந்துபோக செய்துவிடும். அத்துடன் அந்த புனிதத் தன்மையைப் பகரான்மைப்படுத்தும் (Represent) மத வகையிலான தண்டிக்கும் அதிகார அமைப்பையும் கூட அவை மறைந்து போகச் செய்துவிடும். தாழ்ந்தவர் உயர்ந்தவர்க்கிடையில் மதத்தால் இடப்பட்டு இறையருள் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் புனித எல்லைகள் இல்லாமலாக்கப்பட்டுவிடும். கடவுளால் உண்டாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஏற்றத் தாழ்வுகள் சடுதியில் மறைந்துபோகும். அத்தகைய சூழ்நிலைகளில் எந்த ஒருவராலும் வெறும் தகுதி மற்றும் சாதனை, திறமைகளின் அடிப்படையில் உயர்வது இயலக்கூடியதாக இருக்கும். இவையாவுமே வல்லாண்மை அரசுக்கு சாவுமணி அடிப்பவைகளாகும். மறுபுறம், கடவுள் மறுப்பு மற்றும் நாத்திகக் கோட்பாடுகளே குடியாண்மை அரசுக்கு உயிர்நாடியாகும். உண்மையில் அக்கோட்பாடுகள் அதன் உடனுறைபவையாகும்.<br /><br />ஏற்றத்தாழ்வின் மீது அமைக்கப்பட்ட சுரண்டல் தன்மை கொண்ட அரசாகவோ அல்லது சமூகத்தை இயல்பாக மாற்றியமைத்துவிடும் ஒன்றாகவோ பௌத்தவியல் இருக்க முடியாது. அவ்வரசின் தன்மையான சமத்துவமின்மையை - அது தன்னெழுச்சியாக எதிர்ப்பதால், முற்றான்மை முடியாட்சி அரசு தன்னையே விவுபடுத்திய போதெல்லாம் அதை எதிர்த்து பௌத்தவியம் ஒரு வழிகாட்டும் ஆற்றலாக மாற முடிந்தது. எப்படியாயினும் அது ஒரு இலக்காக மட்டுமே செயல்பட முடியும். தனிப்பட்ட சில மனிதர்கள், அல்லது சிறு குழுக்கள் அதை ஒரு வழிகாட்டும் ஒளியாக கொண்டனர்; அதனால் கவரப்பட்டனர். படிப்படியாக அவர்கள் “சங்கத்தில்” சேர்ந்தனர். புத்தபிட்சுக்கள்- ஒடுக்கப்பட்ட, ஒடுங்கிப்போன, ஆளும் - என எல்லா வகுப்புகளிலிருந்தும் வந்தவர்களாவர். பௌத்த சங்கத்தில் அவர்கள் ஒரு சாதியற்ற, வகுப்புகளற்ற சமூகத்தின் மகிழ்வான வாழ்க்கையை நுகர்ந்தனர். மக்கள்திரள் நலனில் அக்கறைகொண்டு அதற்கான பணிகளில் பங்கேற்றனர். சங்கம் பாலைவனத்தில் ஒரு சோலையாக விளங்கியது. அன்று முழு சமூகமுமே சுரண்டல் தன்மையுள்ள அரசுக்கு ஆதரவாக இருந்தது. இதனாலேயே ஒரு சமூக ஒழுங்கமைவும் உயர்வுநிலையும் கொண்ட சமூக அடிப்படையை அமைப்பதற்கு பௌத்த கோட்பாடுகளை சுரண்டல் தன்மையுள்ள அரசால் அனுமதிக்க முடியவில்லை. ஆகையினால் பௌத்தவியம் இதற்கு எதிராக எல்லா மட்டங்களிலும் பல நூற்றாண்டுகளாகப் போராடி வருகின்றது. சுரண்டல் தன்மை கொண்ட ஆளுகை தன் உச்ச நிலையை எட்டியதோடு, ஏற்றத்தாழ்வும் தீண்டாமையும் சமூக பண்பாட்டு கட்டுமானத்திற்குள் மிக ஆழமாக ஊடுருவிவிட்டன.<br /><br />ஜாதகக் கதைகளின் கதைத் தலைவனான போதிசத்வன், ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகளிலிருந்து வரவே முடியாத அளவுக்கு அந்த அழிவு ஊடுருவல் ஆழமாக அமைந்துவிட்டது. கதைத் தலைவர்களில் பலர் பார்ப்பனர்கள், சத்தியர்கள், வைசியர்களே. ஏன் பறவைகளும் விலங்குகளும் கூட இருக்கின்றன. ஆனால் ஒப்புநோக்கில் வெகு சிலரே ஒடுக்கப்பட்ட வகுப்புகளிலிருந்து வந்தவர்கள். காரணம் ஒடுக்கப்பட்ட வகுப்புகளுக்கும் போதிய வாய்ப்பு நலங்கள் இல்லாமையேயாகும். அதாவது, தீண்டாமைக் கருத்தாக்கம் வேறுபல கருத்தாக்கங்களோடு நெருக்கமாக பிணைக்கப்பட்டிருப்பதும் எல்லா சட்டதிட்டங்களும் ஆட்சியதிகாரங்களும்- ஆளும் அமைப்புகளும் இதை ஒரு இயற்கையான பண்பமைவாக இயல்பான நிகழ்வாக ஏற்றுக் கொண்டிருப்பதும் தான்.<br /><br />சொத்துடமை : வருணமும் சாதியும்: பிறப்பின் அடிப்படையிலேயே வருணமும் சாதியும் தீர்மானிக்கப் பட்டன. செல்வம், அதிகாரம், உயர்ந்த ‘சமூக அந்தஸ்து’ மீதான முழுமையான பிடிப்பை தன்னிடமே தக்கவைத்துக் கொள்வதை உறுதிப் படுத்திக்கொள்ள ஆளும் வகுப்பு விரும்பியதே இதற்குக் காரணம். மேலும், ஒடுக்கப்பட்டோர் மீது திணிக்கப்பட்ட துயரம், தொல்லைகள், அடிமைநிலை சமூகத்தின் மற்ற பகுதியினருக்கும் மாற்றப்பட்டுவிடக் கூடாது என்று அவர்கள் விரும்பியதும் மற்றொரு காரணமாகும். முற் பிறவியில் புரிந்த (கர்மங்களுக்கு) நல்வினை தீவினைக்கு ஏற்பவும் தெய்வத்தின் அருளுக்கும் நீதிக்கும் ஏற்பவுமே இப்பிறவியில் பிறப்புக்கள் ஏற்படுகின்றன என்னும் நம்பிக்கைகள் வலிந்து உருவாக்கப் பட்டது அந்நிலையில் தவிர்க்க முடியாததாகும். இது உறுதியாகவும் மாற்ற முடியாத வகையிலும் ஒரு தனிநபரைக் குறிப்பிட்ட ஒரு வருணம் மற்றும் ஒரு குறிப்பிட்ட சாதியில் பொருத்தி வைத்தது.<br /><br />இது உண்மையில் சொத்துடமை அமைப்பை நியாயப் படுத்துவதற்காக - மிகுந்த அறிவுத்திறனுடனும் மாபெரும் சூழ்ச்சித் தன்மையுடனும் அடையப்பெற்ற ஒரு சாணக்கியத்தனமான (மாக்யவல்லிய) துரோகத்தனமான அரசியல் தந்திர நடவடிக்கையாகும். இதன் விளைவாக, ஏற்றத்தாழ்வை அடிப்படையாகக் கொண்டு அச்ச மேற்படுத்தும் அளவிற்கு சமூகம் பிளவுண்டுபோனது. தமது வகுப்பு நலன்களைக் காத்துக் கொள்வதற்காக இத்தகைய சிதைவுகள் ஆளும் வகுப்புகளுக்குத் தேவையாயிற்று. அடிப்படையான முதன்மைப் பிரிவு என்பது தெய்வத்தின் பகராண்மையராக (பிரதிநிதிகளாக) தங்களையே கற்பித்துக் கொண்டு செல்வம், வாழ்க்கை வளம், அதிகாரம், கடவுளுக்கு நெருக்கமாக இருத்தல் ஆகியவற்றை பிறப்பாலேயே உரிமையாக பெற்றிருந்த மக்கள் ஒருபுறம்; கடவுளாலும் மதங்களாலும் பழிக்கப்பட்டதாகக் கூறி, துயரம்-துன்பங்கள், அடிமைத்தனம் மற்றும் தீண்டாமை மட்டுமேயான வாழ்க்கைக்கு நிலையாகத் தள்ளப்பட்ட மக்கள் மறுபுறம். தெய்வீக சாபம், பழிப்புக்கு ஆளாதல், கோபத்தால் வஞ்சந்தீர்க்கப்படல் மற்றும் கடவுளின் ஆணை, இச்சை போன்றவைகளின் பேரால் இரண்டாவதாக கூறப்பட்ட மக்களுக்கு விடுதலை, வீடுபேறு, கதிமோட்சம், மீட்பு ஆகியவற்றின் எந்த நிலையும் மறுக்கப்பட்டன. அதன் விளைவாக அவர்கள் முழுமையாகவும் சமூக உற்பத்தியின் செயல்பாட்டிலிருந்தும் ஒதுக்கப்பட்டுவிட்டனர். சமூக உற்பத்தி சாதனங்களிலும் அவற்றின் உடைமையாளர்களுக்கிடையிலும் மாற்றம் நிகழ்வதென்பது வகுப்புக் கட்டுமானத்தில் மாற்றங்கள் நிகழந்து அதன் பலனாக சமூக முன்னேற்றத்தில் கொண்டு விடுவதாகும். ஆனால் சமூக உற்பத்திச் செயல்பாட்டில் எந்த முன்னேற்றமும் வளர்ச்சியும் இல்லாததால், வகுப்புக் கட்டுமானத்தில் நிகழ வேண்டிய இம் மாற்றங்கள் கூட ஏற்படாமல் போயின.<br /><br />தெய்வீகத்தின் தோற்றுவாய்: பாவ-புண்ணிய நடவடிக்கைகள், முன்வினைக் கர்மங்கள், மறுபிறப்பு, ஊழ்வினைக் (விதி) கோட்பாடு, வீடுபேறு (மோட்சம்) போன்ற கவைக்குதவாத எண்ணங்கள், தெய்வீகத் தன்மை கொண்டவர்களாகவும் சமய ஆசான்களாகவும், மடாதிபதிகளாகவும், அவதாரங்களாகவும், தங்களைத் தாங்களே மேல்நிலைக்கு உயர்த்திக் கொண்டவர்களால் பரப்பப்பட்டு புனிதத்தன்மை அளிக்கப்பட்டன. அநீதி, அடக்குமுறை, துயரம், துன்பங்களை உண்டாக்கிய ஒடுக்கும் வகுப்பும் சுரண்டல் தன்மை கொண்ட சமூகக் கட்டுமானமும் வேண்டுமென்றே தெரிந்தே மறைக்கப்பட்டு அவைகளின் சுயநலக் கருத்துக்களைப் பரப்புவதற்காக நம்பிக்கைகளில் மட்டுமே இருப்பதும் உண்மையில் புலனுக்கெட்டாததும் உருவமற்றதுமான கடவுள் கருத்து முன் வைக்கப்பட்டது. இப்படியாக, ஒடுக்கப் பட்டோர் உண்மையான ஒடுக்கு முறையாளர்களை என்றுமே வெளிப்படையாக காண முடியாமல் இருப்பதன் விளைவாக சுரண்டலுக்கு எதிராக ஒடுக்கப் பட்டோர் (தலித்துக்கள்) அனைவரும் கூட்டாக எழுச்சி பெற்று எதிர்க்குரல் எழுப்பிப் போராடியதற்கு தடயங்கள் ஏதும் இல்லை. இச்சமூக அமைப்பு அது வடிவமைக்கப்பட்டுள்ள வகையில் ஒடுக்கப்பட்டோர் தங்களின் பரிதாபகரமான அவலமான நிலையை உணர்ந்து கொள்வதற்கும் கூட எப்போதும் அனுமதித்ததேயில்லை. இந்திய வாழ்க்கை முறை உண்மையில் கூட்டுச் செயல்பாட்டை எப்போதும் ஏற்பதே இல்லை, கண்டித்தே வந்துள்ளது. மோட்சம் என்னும் வீடு பேற்றை-பரமநிலை எய்துதல், ஆன்ம விடுதலை பெறல், முக்தியடைதல் என்றெல்லாம் விளக்கப்படும் ஒன்றை தனி மனிதராகத்தான் முயன்று அடைய வேண்டும் என்ற கோட்பாட்டை அது முன் வைக்கின்றது.<br /><br />ஒடுக்கு முறையாளர்களின் கருத்துப்பரப்பல் பின்வரும் வடிவத்தைக் கொண்டது: எல்லா துன்பங்களுமே மனித உடலில்தான் தோன்றுகின்றன; மனித உடம்பு இல்லையென்றால் துன்பம் என்பதும் இல்லை. தொல்லைகளும் தீவினைகளும் இல்லை. துன்பங்களும் தீவினைகளும் இறப்போடு முடிவடைகின்றன. எனவே வாழ்வது என்பதே துன்பங்கள் நிறைந்தது தான்; வாழ்க்கை, ஆசை மற்றும் காமத்தால் விளையும் செயல்களில் ஈடுபடச் செய்கிறது. ஆகையினால், வாழ்வையே நாம் துறக்க வேண்டும். இத்தகைய கருத்துப்பரப்பல் (கூட்டுணர்வுநிலை மற்றும் கூட்டுச் செயல்பாடு ஆகியவற்றிலிருந்து எழும்) சமூக உணர்வுநிலை, தோழமை உணர்வு, சினம், எதிர்ப்புத் தன்மை ஆகியவற்றை தாமாகவே மழுங்கடிக்கின்றது. சாதாரண மனிதன், தன் நிலையையும் நோவு நலிவுகளையும் உணர்வதற்கும், நடைமுறை மெய்மையை புரிந்து கொள்வதற்கும், தான்படும் துன்பத் துயரங்களுக்கெல்லாம் யார் காரணம் என்று பார்ப்பதற்குமான ஆற்றலை இழக்கும்படி இந்துமத நிலவுடமை எல்லா மட்டங்களிலும் செயலாற்றி கவனமாகப் பார்த்துக் கொள்கிறது. இத்துடன், இராணுவம், காவல் துறை, சிறைச்சாலை, மற்றும் சமய நூல்களை ஏற்படுத்தி இவற்றுக்கெல்லாம் ஒரு மேலான புனிதத் தன்மையையும் வழங்கியுள்ளது.<br /><br />இதன்மூலம் வரலாற்றுக் காலகட்டத்தில் ஆளும் வகுப்பானது அறிவு சார்ந்ததும் சமூக நீதியானதுமான அமைப்பை எதிர்க்கின்ற ஒரு சில கருத்துக்களை வாழவும் வளரவிடவும் விட்டிருக்க முடியும் என்பதை உய்த்துணர முடிகிறது. இறை மறுப்பியல், நாத்திகம், பகுத்தறிவுவாதம் மற்றும் முற்போக்கான போக்குகள் வளர்வதற்கு அரசு அனுமதித்தபோது பௌத்தவியம் செழித்தோங்கியது. ஆனால் சுரண்டல்தன்மை கொண்ட அரசு, அது தனக்கு உடன்பாடாக இல்லை என்று கண்டபோது, இராணுவத் துணை கொண்டோ அல்லது வேறு வழிகளிலோ அதை அழித்தது. எனவே, தவறு ஒரு குறிப்பிட்ட சாதியால் என்பதைவிட இந்து நிலவுடமை அமைப்பால்தான் என்பதே சரியாயிருக்கும். முழு சமூக அமைப்பும் முடியாட்சியின் மீது நிறுவப்பட்டது. காலமும்கூட அதற்கு ஓர் உயர்வைத் தந்து தூயதன்மை, புனிதத்தன்மை, கடவுள்தன்மை ஆகியவற்றை வெளிப்படுத்தும் அல்லது அவதாரங்களாக காட்சிதரும் கருத்தாக்கங்களை வளர்த்தெடுத்தது. இக்காலகட்டத்தில்தான் வருவதுரைக்கும் எல்லா திருநாவுரையர்களின் (தீர்க்கதரிசிகள்) - ஞானிகளின் -மதங்களின் முதல் வருகை / தோற்றம் அமைந்தன என்பதை நாம் காண்கிறோம்.<br /><br />போர் விரும்பும் மாதர்கள்: இந்துத்துவத்தால் புனிதத் தன்மையும் தெய்வத்தன்மையும் ஏற்றிக் கூறப்பட்ட வீரநாயகர்கள் எல்லோருமே உண்மையில் அதிகாரத்திற்காக போர் புரிந்தவர்களே. அவர்களின் போர்களும் அவர்களைப்பற்றி கூறப்பட்ட கதைகளும் புராணக்கதைகளாக மறை நூல்களாக புனிதமாக்கப் பட்டன. மேலும் அநேக இந்துமத விழாக்களும்கூட உண்மையில் அத்தகைய போர்களை கொண்டாடு பவைகளே. இப்போர்களில் வென்றடக்கப்பட்ட அரசர்கள் அரக்கர்களாக்கப்பட்டனர், வென்றவர்கள் புகழாரம் சூட்டப்பெற்று தெய்வங்களாயினர். பொறாமை, காழ்ப்பு, இகழ்ச்சி, வெறுப்பு, பகைமை மற்றும் பழிவாங்கும் தன்மை போன்ற வன்முறையின் அடிப்படைத் தன்மைகள் ஒரு பண்பாட்டு முக்கியத்துவத்தோடு போற்றி வளர்க்கப்பட்டன. இந்துத்துவ மதிப்பீட்டுக் கட்டுமானத்தில் (இந்து பண்பாட்டு அமைப்பில்) போர் என்பது முதன்மை நிலையில் இருப்பதையே இப்போக்குகள் தெளிவாகக் சுட்டிக் காட்டுகின்றன. அதிகாரமும் ஆட்சியும் மற்றொரு வருணத்திற்கு-மற்றொரு குழுவிற்கு மாற்றப்பட்ட போது, அங்கு சமரசத்தன்மை கொண்ட புதிய கருத்தாக்கங்கள் எழுந்தன. இப்போக்குகளாவது தொடர்ந்திருந்தால் சீதையையும் சூர்ப்பனகையையும் அவமானப்படுத்தியவனும், காண்டவவனத்தை எத்தவனுமான நாயகன் (ராமன்) புராணப் புத்தகங்களிலும் கோயில்களிலும் இடம் பெற்றிருக்கமாட்டான். அவன் ஒரு புராணப்புனைவு (தொன்மக்கனவு) முன்மாதியாக கொண்டாடப்பட்டிருக்கமாட்டான். ஆனால், அதிகாரமும் ஆட்சியும் தொடர்ந்து பார்ப்பனர் மற்றும் சத்தியர் கைகளிலேயே இருந்துவிட்டன.<br /><br />விளைவாக, அவர்களது ஆட்சியின் நிலைபேற்றிற்கு துணைபுரிந்தோரெல்லாம் அவர்கள் வீரமாந்தர்களாகவும், கடவுள்களாகவும் போற்றிப் புகழப்பட்டனர். இந்த ஆளும் வருணங்களின் விருப்பங்களுக்கு ஏற்பவே சமூக அமைப்பும் கட்டப்பட்டது /உருமாற்றப்பட்டது. விளைவாக, புராணப் புனைவியல் (தொன்மவியல்) மற்றும் பண்பாட்டு உணர்வுநிலை அவர்களின் கருத்தாக்கங்களுக்கு ஏற்பவே அமைந்தன. இலக்கியமும் அவர்களின் இசைவுகளுக்கேற்பவே உருவாக்கப் பட்டன. அவமதிப்பு. காழ்ப்பு, செருக்கு, இறுமாப்பு போன்ற ஏற்றத்தாழ்வின் உள்விளைவுகள் கொண்டாடப்படும் தன்மைகளாகத் தொடர்ந்தன. அதே வேளையில் அன்பு, கருணை, தோழமை மற்றும் சமத்துவம் ஆகிய நற்பண்புகள்-இலக்கியத்திலும் சமூகத்திலும் புறக்கணிக்கப்பட்டன.<br /><br />கிருஸ்து- மாறுபட்ட முன்மாதிரிகள்: ஏசுகிருஸ்து கடவுளின் இருப்பையும் அவரது வானுலக அரசாங்கத்தையும் முன்னுரைத்தார். தன்னையே பிதாவின் நெருங்கிய பிரியமுள்ள குமாரனாக கருதினார். முதலும் அசலுமான பாவத்தை ஆதாமும் ஏவாளும் செய்ததால் அவர்கள் விண்ணுலகின் ஏதேன் தோட்டத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். உடலுறவு பாவமானதாக நம்பப்பட்டது. மாறாக, நீங்கள் ஏசுவை பின்பற்றினால் அதாவது நீங்கள் அன்பு, கருணை, தொண்டு, தோழமை (சகோதரத்துவம்) சமத்துவம், தன்மறுப்பு (தியாகம்) பொறுமை போன்ற நற்பண்புகளைக் கைக்கொண்டால் கடவுள் உங்கள்மீது கருணையைப் பொழிவார் என்றும் நம்பப்பட்டது. கடவுளின் அன்பை மனம் வருந்துதல் (பாவமன்னிப்பு), தொழுதல் மூலமாகவும் கூட அடைய முடியும். இக்கோட்பாடுகளே கிருத்துவ சமுதாயப் பண்பாடு மற்றும் இலக்கியங்களின் அடிநாதமாக இருக்கின்றன. இம்மதிப்பீடுகளால் உள்ளவர்-இல்லாதவர், ஏழை-பணக்காரரிடையே பிரிவினை இருந்த போதிலும் மக்கட்திரளில் மிகவும் தீவிரமான துன்பத் துயரங்களாலும் தீவினையாலும் பாதிக்கப்பட்டோருக்கும் கூட கிருத்துவ சமூகத்திலும் இலக்கியத்திலும் ஒரு இடமுள்ளது. மாறாக, சாதிகளிலேயே மிகத் தாழ்ந்த சாதியினரும் சாதியக் கட்டமைப்பிற்கு வெளியேயே வைக்கப்பட்டோருமான சூத்திரர்களும், ஆதி சூத்திரர்களும் இந்துக்களின் மத ரீதியான மற்றும் மதச்சார்பற்ற இலக்கியங்களில் எந்த இடத்தையும் பெற முடியவே இல்லை.<br /><br />இந்துத்துவத்தின் கடவுள்களும் புராணங்களும் உண்மையில் ஒடுக்கப்பட்டவர்களை, நலிந்த மக்களை எதிரிகளாக நடத்தி அவர்களுக்கு எதிராக மோசமான கருத்துப் பரப்பலில் ஈடுபடுவதுதான் இதற்குக் காரணம். இப்போது கடவுளும் அவரது புராண நூல்களுமே, வெறுப்பு, இகழ்ச்சி, தூற்றல், செருக்கைப் பரப்புவதில் ஈடுபடும்போது சூத்திரர்களும் ஆதிசூத்திரர்களும் சமூகத்திலும் இலக்கியத்திலும் இடம் பெறுவதை நாம் எதிர்பார்க்க முடியுமா? இக்காரணத்தால் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம், பகுத்தறிவுத் தன்மை மற்றும் அண்மைக்கால கருத்துக்களான குடியான்மை, சமூகவுடமை போன்ற மதிப்பீடுகள் இந்துக்களின் சமூகத்திலும் இலக்கியத்திலும் புனைவு மயக்க (தொன்ம) சிறப்பான்மைகளைப் பெறவில்லை. இந்துத்துவத்தில் அவைகளுக்கான வேர்கள் இல்லை, தகுதி வாய்ந்த அடிப்படை இல்லை. திருத்தொண்டர்களின் இலக்கியமும்கூட அவர்களுக்கு உரிய இடத்தை தர தவறி விட்டது. அதற்கு மாறாக அவற்றிலும் இனவெறி வல்லாண்மை (ஆட்சிவெறி & பாசிசம்) வக்கத்த போக்கு ஆகியவையே பெரும்பாலானவற்றில் இடம் பெற்றுள்ளன.<br /><br />வடமொழி (சமஸ்கிருத) இலக்கியம்: வடமொழியின் மத இலக்கிய, செவ்வியல் இலக்கிய நாயகர்கள் ஆளும் பகுதியினரையும் இந்துத்துவத்தின் மதிப்பீட்டுக் கட்டமைப்பிற்கு பங்களிப்பு செய்த பகுதியினரையுமே சேர்ந்தவர்களாவர். இந்த நாயகர்களுக்கு தெய்வீகத் தன்மை அளித்து கோவில்களில் வைக்கப்பட்டதை முன்பே பார்த்தோம். இலக்கியங்களில் அவர்களின் வாழ்க்கை மட்டுமே கருப்பொருளாயின. மத, ஆட்சி- அதிகாரங்களால் பழிக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டோரில் யாரும் தெய்வீக, நாயகப் பெருமையை, ஏன் துணைநாயகன் இடத்தையும் கூட பெறவில்லை. வட மொழியின் மதரீதியானவையும், வெறும் கற்பனைவாத இலக்கியங்களும் மத நிறுவனங்களுக்கும் ஆளும் அமைப்புகளுக்குமே ஊழியம் செய்ய உறுதி பூண்டிருப்பதே இதன் தெளிவான பொருளாகும். மேல் வருணங்களைச் சார்ந்த அரசர்களையும், பேரரசர்களையும் புகழ்ந்தும் கடவுளரைப் போற்றியுமே அது பெருமளவில் செழித்தது. பார்ப்பனர், சத்தியர் தவிர மற்றெந்த வருணமும் வடமொழி இலக்கியத்தில் தோன்றியதேயில்லை.<br /><br />விதிவிலக்காக ஒன்றிரண்டு எடுத்துக்காட்டுக்கள் இருக்கலாம். செல்வம், அதிகாரம், கல்வி மூன்றுமே ஆளுமை செலுத்தி வந்த அந்த இரு வருணங்களின் முற்றுடைமையாக (ஏகபோகமாக) இருந்தன. அதன் விளைவாக வடமொழி இலக்கியம் ஸ்மிருதி அல்லது மறை நூல்களின் வரையறையை மீற முடிந்ததில்லை. அதுவே அவ்விலக்கியத்தை சலிப்பூட்டும் ஒன்றாக மாற்றிற்று. வருணாசிரம அமைப்பிற்கும் அதற்கு அடி நாதமாய் அமைந்துள்ள அறிவார்ந்த கட்டமைப்பிற்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட வடமொழி இலக்கியம் ஒடுக்கப்பட்டோர் (தலித்) இலக்கியத்திற்கான புனைவியல் (தொன்ம) அடிப்படையையும் முழுமையான மரபு வழிகளையும் படைத்தளிக்காது.<br /><br />திருத்தொண்டர்களின் இலக்கியம்: பிறகு இசுலாமிய ஊடுருவல் இந்தியாவை குலுக்கியது. இசுலாமிய அதிகாரத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்து அரசுகளின் அழிவு தொடங்கிய காலகட்டத்தில் திருத் தொண்டர்களின் இலக்கியம் தோன்றியது. அதன் முகாமையான செயல்பாடாக நொறுங்கிக் கொண்டிருந்த இந்து அரசைத் தாங்கி நிறுத்துவதும் பெருகிவளரும் இசுலாத்தை தடுத்து நிறுத்துவது மாகவே இருந்தது. விளைவாக, வருணாசிரம அமைப்பின் அடிநாதமாக இருந்த கருத்தியலை பரப்புவதில் மட்டுமே அது வெற்றி கண்டது.<br /><br />அரசுகள் நிலைகுலைந்து குழப்பம் மிகுந்திருந்த அக்காலகட்டத்தில் இந்துத் திருத்தொண்டர்கள் குறைந்து கொண்டும் இசுலாமிய திருத்தொண்டர்கள் கூடிக் கொண்டும் வந்த காலக்கட்டத்தில் - (சமூகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து) சூத்திரர், ஆதிசூத்திரர் மற்றும் பெண்களிடமிருந்து சிந்தனையாளர்கள் தோன்றத் துவங்கினர். இசுலாமிய தாக்குதலின் கீழ் இந்து ஒடுக்குமுறை அதிகாரம் நொறுங்காமல் போயிருந்தால் இவ்வகுப்புக்களிலிருந்து கலைஞர்கள், அறிவார்ந்தவர்கள், சிந்தனையாளர்கள் தோன்றிய அற்புதங்களை நாம் கண்டிருக்க முடியாது. இந்து ஒடுக்குமுறை எந்திரம் கலகலத்துப்போனதன் காரணமாகவே சிறிதே காலமாயினும் சமூகம் படைப்பாக்கம் கொண்டதாக மாறிற்று.<br /><br />பிறகு முசுலிம் அரசு நிலைபெற்றது. இந்து அரசர்களும் ஆளுவோரும் முசுலிம் ஆட்சியின் கீழ் ஒரு அடிமைத்தனமான நிலைமையை ஏற்றுக் கொண்டோ அல்லது தனியரசுகளாக நின்றோ வாழ்ந்தனர். இந்நிலை, ஒடுக்குமுறை வருணாசிரம அமைப்பு மீண்டும் தலை தூக்கவே உதவியது. முசுலிம் ஆட்சியாளர்கள் தங்களின் ஒடுக்குமுறை செயல்பாடுகளுக்கு இது மிகவும் பொருத்தமானதாக இருப்பதைக் கண்டதால் இந்து சமூக கட்டமைப்பையே நிலை நிறுத்திக்கொள்ள முடிவெடுத்தனர். ஆங்கிலேயர் வந்த போது சமூகத்தின் படைப்பாக்கத்திறன் முழுவதுமே நசிந்து போயிருந்தது. உண்மையில் திருத்தொண்டர்களின் இலக்கியம் இந்த மாறிவரும் காலகட்டத்தைச் சேர்ந்ததுதான். நூற்றுக்கணக்கான ஆண்டுகளின் போர்க்கால பின்னிலையை எதிர்த்துத்தான் அது எழுதப் பட்டது. இவ்வகைக் காலத்தில் வேறு எப்படிப்பட்ட இலக்கிய வகையை நாம் எதிர்பார்க்க முடியும்?<br /><br />(போர்க்காலத்தில் இயற்றப்பட்ட) இத் “திருத்தொண்டர்” இலக்கியம் ( அதாவது இந்து திருத்தொண்டர்களின் ) வருணாசிரம அமைப்பு அதன் அறிவுசார்ந்த நிலை, இலக்கியக் கோட்பாடுகளுக்கு முழுவதுமாக தன்னை ஒப்படைத்துக் கொண்டிருந்தது. வடமொழி இலக்கியம் உருவாக்கி வைத்திருந்த கட்டுத்திட்டங்கள்-அதன் கருத்தாக்கம், தெரிவியல் (Theory), நாயகர்கள், ஒடுக்கு முறையை வளர்க்கும் கோட்பாடுகள் - எல்லாமும் ஏற்றுக்கொள்ளப்பட்டு திருத்தொண்டர் இலக்கியமும் அவற்றை முழுமையாக வெளிப்படுத்தியது. விளைவாக சுரண்டல் தன்மை கொண்ட வருணாசிரம அமைப்பு மேலும் வலுவாக்கப்பட்டது. இந்தியாவிலிருந்த இசுலாமிய சமூகமும் கூட சாதிய அமைப்பையும் அதன் அடிநாதமான மதிப்பீட்டுக் கட்டமைப்பையும் உள்வாங்கிக் கொண்டது. (திருத்தொண்டர்கள் வெளிப்படுத்திய) பக்தி அல்லது ஒப்படைப்பு உணர்வால் சமூக சமத்துவத்தின் செய்தியை பரப்ப முடியவில்லை. அவர்களின் மாறுபட்ட நடுநிலை முயற்சிகள் சமூக முன்மாதிரிகளாகவோ, புனைவுக் (தொன்மக்) கோட்பாடுகளாகவோ உருமாறத் தவறி விட்டன. ‘பக்திமார்க்கம்’ என்னும் வழிபாட்டுப்பாதை பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இருந்தாலும் சாதிய அமைப்புமுறைக் கருத்தியலை விடாப்பிடியாகப் பற்றிக்கொண்ட பல்வேறு வழிபாட்டு பிவுகள் தொடர்ந்து நிலைக்கவே செய்தன. விதி அல்லது ஊழ் வினையில் நம்பிக்கை, முன்வினைப்பயன், மறுபிறவிச் சித்தாந்தங்கள் தொடர்ந்து பற்றிப் படர்ந்தன. அதே போன்று ‘கடவுள் எப்படி படைத்தானோ அப்படியே இருத்தல்’ நடவடிக்கையும் பரப்பப்பட்டது. அத்தகைய தொரு அறிவு மற்றும் சமூக அமைப்பே இந்து நிலவுடமை அரசுக்கு தேவையாக இருந்தது, எனவே அந்நிலை தொடர்ந்து நீடித்தது.<br /><br />ஆங்கிலேயர்களினதும் அறிவியலினதும் வருகை: ஆங்கிலேயர்கள் இந்து-முசுலீம் திருத்தொண்டர்களைத் தோற்கடித்து இந்தியாவைக் கைப்பற்றினர். அவர்கள் கூடவே புதிய அறிவும் அறிவியலும், புதிய எந்திரங்கள், தொழில் நுட்பங்கள், புதிய தொழில்களும் வணிகமும் வந்தன. உற்பத்திக்கான சமூக மாற்றம் மேற்கொள்ளத் துவங்கியது. அத்துடன் பழைய கட்டமைப்பும் நொறுங்கி விழத் தொடங்கியது. ஒரு புதிய அறிவார்ந்த அமைப்பு வேர் கொள்வதற்கான போதிய வாய்ப்பும் வசதியும் உருவாயின. மேற்கத்திய அறிவுநிலையின் (ஞானத்தின்) புதிய விழிப்புணர்வு உள்ளங்களை ஒளிப்பெறச் செய்தன. விளைவாக, சுய-திறனாயவுத் சிந்தனைகள் உருவாக முடிந்தது. இச்சுய திறனாய்வுப்போக்கு, கற்பனைத் திறன் வாய்ந்த இலக்கிய ஆய்வுடன் இணைந்து புதிய இலக்கிய வெளிப்பாட்டிற்கு வழி வகுத்தது. முதன் முதலாக இலக்கியம் வெறும் உளநிலை சார்ந்த, அறிவு நிலை மீறிய அகநிலை சார்ந்த, அல்லது மதரீதியானவைகளுக்கும் அப்பால் சமூக கருப்பொருட்களை வெளிப்படுத்துவதற்கு முயன்றது.<br /><br />கடந்த காலங்களில் உயர் வருணங்கள் மதத்தால் அவைகளுக்கு அருளப் பெற்ற உயர்நிலையினால் சமூக வாழ்வின் முன்னிலையில் இருந்தபடி பொருளியல், மத, அரசியல் அதிகாரங்களைக் கையில் வைத்திருந்தனர். இப்போது தங்களின் சொந்த குடும்பச்சிக்கலையே மையக்கருத்தாக வைத்து அதே வருணத்தார் சமூக இயக்கங்களின் தலைவர்களாயினர். அதே நபர்கள் கவிகளாகவும்-எழுத்தாளர்களாகவும் வெளிப்படத் தொடங்கினர். தங்களது சொந்த குடும்பச் சிக்கல்களையே வெளிப் படையாக முன்வைத்து விவாதிக்கவும் தொடங்கினர். ஆனால் இந்த விவாதங்களிலும் கூட இந்துத்துவத்தை திறனாய்வுடன் பார்க்க வேண்டிய கட்டாயத்துக்குள்ளாயினர். அத்தகைய திறனாய்வு நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தோன்றியது. இத்திறனாய்வுடன் கூடிய அலசல்கள் சீர்திருத்தங்களை கோரின. உளஆய்வுடன் கூடிய முன்னேற்றம் என்னும் கண்ணோட்டத்திலிருந்து இத்தகைய நடவடிக்கைகள் சரியான திசையில் மேற்கொள்ளப்பட்டன.<br /><br />பெண்கள்: நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு பெண்கள் இலக்கியத்தின் கருப்பொருளாயினர். பல்வேறு வடிவங்களில் அவர்கள் இலக்கியங்களில் தோன்றத் தொடங்கினர்: ஒரு குழந்தைக் கைம்பெண்ணாக, குழந்தை மணப்பெண்ணாக, திருமணமான (அவளது கொண்டான் வீட்டான் கருணையில் வாழும்) பெண்ணாக இன்னும் இதுபோன்ற இந்துக் கூட்டுக் குடும்பத்தால் கசக்கிப் பிழியப்பட்ட பல்வேறு பெண்களின் வடிவங்களில். புதிய அறிவியலும் தொழில் நுட்பங்களும், தொழில்கள் மற்றும் வாணிகத்தின் புதிய வடிவங்களும் புதிய இலக்கியம் மற்றும் அறிவு சார்ந்த கருத்துக்களும் உண்மையில் பெண்களின் வாழ்வை படம்பிடித்து காட்டும் துணிவான முயற்சியில் இறங்க மிகுந்த ஊக்கமளித்தன.<br /><br />சூத்திரர்கள் யார்?: பெண்களைப் போன்றே அதுவரை புறக்கணிக்கப் பட்டு வந்த சூத்திரர்கள் மற்றும் ஆதி சூத்திரர்களைப் படைத்துக் காட்டுவதில் இப்போது எந்த இடரும் இல்லை. மேலும் ஒரு வலுவான பெரும் பேரரசு முழுமூச்சுடன் குடியாட்சி சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து வந்தது. அரசு மட்டுமல்ல, சமூக சீர்திருத்த இயக்கங்களும் கூட இவற்றை ஆதரித்தன. இராமாயண கால சம்புகனைப் போலல்லாமல், புதிய ஆட்சியாளர்கள் இந்த எழுத்தாளர்களுக்கு எதிராக பார்ப்பனர்களால் தொடுக்கப்பட்ட விஷமத்தனமான குற்றச்சாட்டுகளை (முறையீடு) கேட்டு, தங்களின் எழுத்துக்களில் பெண்களின் நிலையை படம் பிடித்துக் காட்டியதற்காக அந்த எழுத்தாளர்களைத் தண்டிக்கத் தயாராக இல்லை. உண்மையில் எழுத்தாளர்களின் சார்பாகவே சட்டம் நின்றது. மேலும் பார்ப்பனர்கள் இதற்குள்ளாக புதிய தொழில்களையும் புதிய பதவிகளையும் மேற் கொண்டிருந்தனர். விளைவாக அந்த வகுப்பே சற்று பிளவுண்டிருந்தது. வரலாற்றிலேயே முதன்முறையாக, சீர்திருத்தக்காரர்கள், பழைய பஞ்சாங்கங்கள் (சனாதனவாதிகள்) என்று பார்ப்பனர்களில் இருபிவினர் தோன்றி முரண்பட்டு நின்றனர்.<br /><br />பெண்களைப் போலவே சூத்திரர்களுக்கும் இலக்கியத்தில் இடம் பிடிப்பது கடினமான ஒன்றாகத் தோன்றவில்லை. மேலும் சூத்திரர், ஆதி சூத்திரர் போன்று அதே ஒத்த நிலைமையிலிருந்த மிகவும் எளிய ஏழை மக்களின் வாழ்வை அன்றைய ஆங்கிலப் புதினங்கள் படம் பிடித்துக் காட்டியிருந்தன. இப்படியெல்லாம் ஒரு சுமூகமான சூழ்நிலைமை இருந்தும் கூட ஏன் சூத்திரர்களுக்கும் ஆதி சூத்திரர்களுக்கும் இலக்கியத்தில் உரிய இடம் மறுக்கப்பட்டது? இது எழுத்தாளர்கள் அழகியல் பார்வை அல்லது கலை கலைக்காகவே என்னும் கருத்தாக்கத்திற்கு அடிமைப்பட்டு அதில் தீவிரமாக இருந்ததினாலா? அவர்கள் புதிய அறிவு விளக்கம் (ஞானம்) பெற விரும்பாததினாலா? அல்லது துன்ப-துயரங்கள், வாழ்க்கைத் தொல்லைகள் அடிமைத்தனம், ஒடுக்கப் பட்டோரின் நோவு-நலிவுகள் இந்த எழுத்தாளர்களின் சொற்திறமைக்கும் எழுத்தாற்றலுக்கும் மீறி வெகு தூரம் தள்ளி இருந்ததாலா?<br /><br />எழுத்தாளர்கள் திறமையில் குறைந்தவர்கள் என்று கூற முடியாது. அவர்களுமே சமூக சீர்திருத்தத்தையும் அறிவொளிவியக்கத்தையும் விரும்பினர். ஆனால் சூத்திரர்களையும் ஆதி சூத்திரர்களையும் கவனிக்கத் தவறிவிட்டனர். அவர்களின் சொந்த பண்பாட்டு நிலையாக்கமும், உளப்பாங்கும் புராணப் புனைவுமே (தொன்மம்) ஒடுக்கப்பட்டோரை தங்களின் எழுத்துக்களில் படம் பிடித்துக் காட்ட விடாமல் அவர்களைத் தடுத்த உண்மைத் தடைகளாகும்.<br /><br />முன்மாதிரி சீர்மைகள்(Classics - செவ்வியல்கள்): ஆங்கில எழுத்தாளர்கள் ஏழை எளியவர்களைப் பற்றி உணர்வுபூர்வமாக அறிந்திருந்தனர். காரணம் ஏசு கிருத்துவானவர் அம்மக்களைப் பற்றி அவ்வாறே கண்டறிந்திருந்தார். கடவுளின் திருக்குமாரனாக இருந்தபோதிலும் கூட, ஏழை எளியோரை புனிதமற்றவர்களாகவோ வெறுக்கத்தக்கவர்களாகவோ அவர் நடத்தவில்லை. பாவ புண்ணிய கருத்தாக்கத்தை ஏற்றுக் கொண்டிருந்தாலும் பிறப்பு அல்லது சாதியின் அடிப்படையில் அதற்கான தகுதி அல்லது பழி பாவம் சுமத்தல் என்பதை அவர் முன்வைத்ததில்லை. அவர் தன் இருகைகளையும் விரித்து அன்பையும் கருணையையும் ஏழை எளியோர் மீது பொழிந்தார். இதனாலேயே கிருத்துவமும், அதன் நிறுவனங்களும், அச்சமூகமும் அதன் அறிவார்ந்தவர்களும் எழுத்தாளர்களும் ஏழை எளியோரை தங்களின் உற்றார் உறவினராக பாவிக்கின்றனர். கிருத்துதான் இம்முன்மாதியான சீர்மைகளை, இலக்கியத்திற்கு இத்தொன்ம மதிப்பீடுகளை (புனைவு இலக்குகளை) அளித்தார். ஆகையினால் அன்பு, கருணை, எதிர்ப்புச் சினம் ஆகியவற்றை அடிமையாகக் கொண்டு எழுந்த புரட்சிகர இயக்கங்களும் கூட ஏசுகிருத்துவிலிருந்து அகத்தூண்டுதல் பெற முடிந்தது.<br /><br />மூடத்தனம்: சூத்திரர், ஆதிசூத்திரர் பற்றி இந்து எழுத்தாளர்களால் உற்றுணர முடியாமல் போனதற்கு காரணம் கடவுள்தன்மை கொடுக்கப்பட்ட இந்து நாயகர்களும் தெய்வீகப் படைப்புக்களாகக் கருதப்படும் புனித புராணநூல்களும் ஏழை எளியோரைப் பற்றி என்றுமே கவலை கொள்ளாமல் இருந்ததே. கணக்கற்ற அவதாரங்களும் திருத்தொண்டர்களும் இருந்தபோதிலும் அவர்கள் அனைவருமே சூத்திரர் ஆதிசூத்திரர் பெண்களின் நோவு நலிவுகளை காணத் தவறிவிட்டனர். கடவுள்கள், திருத்தொண்டர்கள், மதங்கள் அனைத்துமே ஏழை எளிய மக்கள் மீது வெறுப்பையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தும் போது, இந்துக்களால் ஏற்படுத்திக்கொண்ட மதிப்பீட்டு கட்டமைப்பு-புராணப்புனைவு (தொன்ம) ஆகியவைகளில் சூத்திரர்கள் என்ன இடத்தைப் பெறமுடியும்? அன்பு, கருணை, தோழமைக்கு இந்து வருணாசிரம அமைப்பில் என்றுமே எந்த இடமும் இருந்ததில்லை.<br /><br />விளைவாக, சூத்திரர் ஆதிசூத்திரர்களுக்கு இந்து சமூகத்திலும் இலக்கியத்திலும் இடமிருந்ததில்லை. ஆகையால் அவர்களை மேல்நிலைக்குக் கொண்டுவர யாரும் எண்ணியதுமில்லை. அவர்களிடையில் இருக்க யாரும் முயன்றதில்லை அல்லது ஒரு போராட்டத்திற்காக அவர்களை யாரும் எழுச்சிபெற வைத்தது மில்லை. ஒரு போராட்டத்திற்காக அவர்களை தயார்படுத்துதல் என்பது விதி (ஊழ்வினைக்) கோட்பாடு, மறுபிறவி, சுரண்டல் ஆகியவற்றைப் போற்றி வளர்த்த சமூக அமைப்பையும் அதன் அறிவார்ந்த நிலையையும் அழித்தொழிப்பது என்பதாகும். எனவே அது இயலாத ஒன்றே. எனவே எல்லோருமே வருணாசிரம அமைப்பின் தேவைகளில் தோன்றிய புனைவு மயக்க மதிப்பீடுகள் மற்றும் கோட்பாடுகளை போற்றி வளர்க்கவும் பரப்பவுமே செய்தனர்.<br /><br />பௌத்தவியம் இருந்திருந்தால்: மக்களின் மனப் பாங்கை ஆளுமை கொள்ளும் ஒரு வடிவமைக்கும் ஆற்றலாக பௌத்தவியம் தொடர்ந்து நீடித்திருந்தால் இந்திய மரபில் அன்பும், கருணையும், முதன்மைப் பெற்றிருக்கும். கிருத்துவ நிறுவனங்களைப் போலவே ஏழை எளியவர்களுக்குத் தொண்டு செய்யும் எண்ணற்ற பள்ளிகள் அனாதை இல்லங்கள், மருத்துவ மனைகள், மற்றும் சமய நிறுவனங்களை கொண்டிருந்திருப்போம். அவற்றின் மூலமாக சமூகத்தில் பல்வேறு மனிதநேய சீர்மைகள் தோன்றியிருந்திருக்கும். மேலும் கடவுள் மறுப்புக்கொள்கை, நாத்திகம், பகுத்தறிவுக் கோட்பாடு, முற்போக்கான நடவடிக்கைகள் ஆகியவை அறிவியல் மற்றும் சமூக உற்பத்திச் சாதனங்களின் தொடர்ந்த வளர்ச்சிக்கு வழி வகுத்திருக்கும். உற்பத்திச் சாதனங்கள் மட்டும் வளர்ச்சி பெற்றபோது சமூகக் கட்டமைப்பு மாற்றம் கொண்டது, அச்சாதனங்களின் உடைமை நிலை மாறும்போது அது புரட்சிகரமான நிலைமையை மேற்கொள்கிறது. இவைகள் வெறும் சமூக மாற்றங்கள் அல்ல. அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் தளங்களில் மாற்றங்களை கொண்டுவரும் புதிய ஆய்வுகளுக்கு அவைகள் செயலூக்கிகளாகவும், தூண்டுதல்களாகவும் விளங்குகின்றன.<br /><br />இந்திய மருத்துவம், வேதியியல், இலக்கணம், சட்டம், மெய்யியல், மற்றும் கலை ஆகிய துறைகளில் ஒரு மாபெரும் பங்களிப்பை பௌத்தவியம் செய்திருக்கின்றது. பௌத்தவியம் செயலாற்றல் கொண்டது, முற்போக்கானது, புரட்சித்தன்மை கொண்டது. மற்றும் கடவுள் மறுப்பானது. ஆத்திகம் (கடவுள் ஏற்புக் கோட்பாடு), இறையியல் கோட்பாடுகளைப் போன்று, இது ஒரு சலனமற்ற அசையா பரம்பொருளின் முழு முதல் பிம்பமாக இருக்க முடியாது. புத்தரின் மெய்யியல் அதன் அடிப்படைக் கோட்பாடுகளின் துணைக் கொண்டு சமூகத்தை குடியாண்மைக்குக் கொண்டு சென்றிருக்க முடியும். மக்களது உள்ளுணர்வின் ஒரு பகுதியாக வடிவம் கொள்ள குடியாண்மையைக் கொண்டு செல்லும்போது (பதப்படுத்தும் போது) பொருளாதார ஏற்றத்தாழ்வும், செல்வந்தர்களின் கையிலேயே அதிகாரம் இருந்தாலும், நிலைத்திருந்தாலும் கூட எளிய மனிதன் தீண்டத்தகாதவனாகவும் புறக்கணிக்கப்பட்டவனாகவும் வெறுக்கத்தக்கவனாகவும் தொடர்ந்திருக்க முடியாது. சாதாரண மனிதப் பிறவியாக எண்ணிப் பார்ப்பதற்குரியவனாக சிந்திக்கக் கூடியவனாக இருந்திருக்க முடியும். இதுதான் பௌத்தவியத்திற்குள் நடைபெற்று வந்தது. சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட பகுதிகள் ‘தெர்’ மற்றும் தெரிகதாக்களில் உரிய இடத்தை பெற்றிருந்ததற்கு இதுவே காரணம்.<br /><br />புராண புனைவு (தொன்ம) மதிப்பீடுகள் உள்ளுணர்வையும் கலை இலக்கியத்தையும் நகல் படுத்தி நவீன இலக்கியம் தோற்றம் கொள்ள தொடங்கியபோது ஆளும் அதிகாரத்தின் உட்சாரம் மாறியது. புதிய அரசு அதிகாரம் மற்றும் புதிய உற்பத்தி சாதனங்களின் காரணமாக பிறந்த புதிய அறிவின் துணைக்கொண்டு பாவ-புண்ணிய செயல்பாடுகள் கர்மவினை புனிதத்தன்மை ஆன்மா, பிறப்பின் உள்நோக்கை விளக்க புதிய மெய்யியலுக்கு தற்போது திறன் வந்துள்ளது. தீண்டாமை எப்படி சுரண்டலுக்கும் பகைமைக்கும் வெறுப்புக்கும் காரணமாகயிருந்தது என்பதை அது இப்போது தெளிவு படுத்தி காட்டமுடியும். ‘மகாத்மா பூலே’ உண்மையில் அத்தகைய உண்மை வெளிப்பாடுகளின் செல்வத்தையே நமக்களித்தார். இக்கருத்து மற்றும் பணியின் துணை கொண்டு, குடியாண்மை, சமூக சீர்திருத்தத்தின் கருத்தாழத்தை, சிந்தனையாளர் வகுப்பு பெற்றிருக்க முடியும். ஆயினும் அது நடைபெறாமலேயே போயிற்று. காரணம் இந்திய சிந்தனையாளர் வகுப்பு எப்போதுமே நிலை பெற்றிருந்த எண்ணத்திற்கும் முறைமைக்குமே தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருந்தது தான்.<br /><br />நமது சிந்தனையாளர்கள் உண்மையில் நடப்பிலுள்ள சமூக அமைப்பின் உற்பத்திப் பண்டங்கள் மற்றும் அதன் பிம்பங்களேயன்றி வேறல்ல. டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் முன்வைத்த கேள்விகளில் ஒன்று மிகத் தெளிவாக நமது சிந்தனையாளர் வகுப்பின் அடித்தளத்தை ஆணிவேரை நமக்கு வெளிப்படுத்துகின்றது. அவர் கேட்டார்: அத்தகைய தொரு அறிவு களஞ்சியமான நீண்ட பாரம்பயம் -ஞானத்தின் மரவுவழி இருந்தும் கூட ஒரு ஒற்றை வால்டேயரையும் கூட இந்த பார்ப்பனர்களால் உற்பத்தி செய்யமுடியாமல் போனது ஏன்? எப்படி? ஒரு வால்டேயர் ஆவதற்கு ஒடுக்குமுறை மதம் மற்றும் அரசியல் சார்ந்த அதிகாரத்துவத்திற்கு எதிராக ஒருவன் துணிந்து நிற்கவேண்டும். இந்தியப் பார்ப்பனர்களாலும் கற்றறிந்த சிந்தனையாளர் வகுப்பாலும் அத்துணிவைப் பெறமுடியாது. அப்படி எதிர்த்து நிற்கமுடியாது. காரணம் தங்களின் சொந்த நலனுக்காக மதம், அரசியல் அதிகாரம், மற்றும் சுரண்டலை போற்றி வளர்க்கும் இம்முழு சமூக அமைப்பை அவர்களே உருவாக்கி வைத்திருப்பதுதான். அதே வருணத்தை சார்ந்த எழுத்தாளர்களாகயிருப்பதால் அவர்களின் எழுத்தும்கூட “மனுஸ்மிருதி”யால் வகுக்கப்பட்ட எல்லைகளுக்கு உள்ளாகவேதான் இருக்கும் என்பதும் வெளிப்படையானது.<br /><br />தேசிய விழிப்புணர்வு: தேசிய விழிப்புணர்வு ஏற்பட்ட போது, சாதிகளின் எழுச்சிகள் ஏற்பட்டு அதுவே இந்து வருணாசிரம அமைப்பிற்கு அறை கூவலாக நின்றது. பார்ப்பனர்கள் திறனாய்விற்கும் தூற்றுதலுக்கும் இலக்காவது தவிர்க்க முடியாததாயிற்று. ஆனால் உள்ளபடி பார்க்கப்போனால் பார்ப்பனர்களும் சத்தியர்களும் சேர்ந்தே ஒரு நியாயமற்ற அமைப்பை உருவாக்கி தொடர்ந்ததில் சமமான பொறுப்பாளர்களாக இருந்தனர். பார்ப்பனர்கள் மத அதிகாரத்தை வைத்திருந்தபோது, சத்தியர்கள் அரசியல் அதிகாரத்தை வைத்திருந்தனர். பல்வேறு சாதிகளிலிருந்தும் உருவெடுத்துவந்த இயக்கங்களுக்கு கற்றறிந்த சிந்தனையாளர் வகுப்பு உண்மையில் தலைமை தாங்கி வழி நடத்தியிருக்க வேண்டும். சிதறிக்கிடந்த இயக்கங்களுக்கு ஒரு குடியாண்மை தோற்றத்தை கொடுத்து பொருளியல், அரசியல் உள்ளுணர்வின் அடிப்படையில் தேசிய விடுதலைக்கான ஒரு பெரும்புரட்சிகர இயக்கமாக அதை அவர்கள் தான் மாற்றியிருக்க வேண்டும். ஆனால் அச்சிந்தனையாளர் வகுப்போ, (அதாவது இந்திய தேசியத் தலைமை) தேசிய விடுதலை இயக்கத்தையே பிளந்துவிட்டது. அவர்கள் எழுச்சிப் பெற்று வந்த விழிப்புணர்வையே, எதிர்த்துப் போடும் இரு குழுக்களாகப் பிளந்து விட்டனர்.<br /><br />ஒன்று அரசியல் இயக்கம் மற்றது சமூக இயக்கம். மேலும் சமூக இயக்கங்களைக் கட்டியவர்களையும் வேளாண்மை மற்றும் தொழில்கள் மீது புதிய கருத்துக்களை உருவாக்கியவயர்களையும் ஆங்கிலேயர்களின் கைக்கூலிகளாகவும், காட்டிக் கொடுப்பவர்களாகவும் குற்றம் சுமத்தினர். தேசிய இயக்கமே வரலாற்று - புராண இயக்கமாகவும் முன்னோரை வழிபடும் வடிவமாகவும் மாற்றப்பட்டுவிட்டது. உண்மையில் பழங்கால போர்களையும் அவற்றின் நாயகர்களையும் வழிபடுவதற்கு எந்த காரணமும் இல்லை. கடந்த காலத்தில் சாமானிய ஆணோ அல்லது பெண்ணோ அடிமையாகவே இருந்தனர். எனவே அந்த கடந்த காலத்தைப்பற்றி சாதாரண மனிதனுக்கு பெருமைப்பட ஏதுமில்லை. உண்மையில் அவன் மிக கொடுமையாக ஒடுக்கப்பட்டான். ஒரு கொத்தடிமையாக சுரண்டப்பட்டும், நசுக்கப்பட்டும், உள்நாட்டு போர்களிலும், சூறையாடும் கொள்ளைக் காரர்களின் தொல்லைகளாலும் அழிக்கப்பட்டான். புதிய காலம் வந்த பிறகுதான் தனது சொந்த அடையாளத்தையே அவன் போராடிப் பெற்றான். அறிவியலின் காரணமாகவும் உற்பத்திச் செயல்பாட்டில் அவன் கொண்டிருந்த பங்கினாலும் அவனது இருப்பு மற்றும் சமூகநிலை தீர்மானகரமானதாகவும் இன்றிய மையாததாகவும் ஆயிற்று. குடியாண்மைக் கருத்திய லும் பரந்துபட்ட மக்களின் எண்ணிக்கை வலுவும் சேர்ந்து போராட்டத் தன்மையையும் தலைமையையும் அவன் மீது சுமத்தின.<br /><br />கடந்த காலத்தில் உயர் சாதி வருணங்கள் மற்றும் இனங்கள் என்று சொல்லப்பட்டவையே பெருமை கொண்டதாகயிருந்தன. ஆனால் இயந்திரயுகமும் அதன் அறிவியலும் தொழில்நுட்பமும், அதிகார சமன்மையை முழுவதுமாக மாற்றிவிட்டன. மேல்நிலையோர் கீழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். ஏற்றத் தாழ்வைப் போற்றி வளர்த்து சமூகம் குடியாண்மையாவதை விரும்பாதவர்கள் வரலாறு புராண கதைகள், கடந்து போன காலம் ஆகியவற்றை புகழவும், மேன்மைப்படுத்தவும் துவங்கினர். காரணம் அந்த புராணக் காலத்திலும் வரலாற்றுயுகங்களிலும் அவர்கள் மாபெரும் வெற்றியாளர்களாகவும், தலைவர்களாகவும் இருந்தனர். இதே காரணத்தால் தான் இந்திய கற்றறிந்தார் வகுப்பும் இன்று பின்நோக்கிச் சென்று கடந்த காலத்தை வழிபடுகின்றனர். சூத்திரர்கள் ஆதி சூத்திரர்களின் அடிமைநிலை, துன்ப துயரங்களைப் பேசிய- வருணாசிரம அமைப்பைக் கண்டித்து, சமூக, பொருளியல், அரசியல் மறுகட்டமைப்பு கோரிய- பூலே, ஆகார்கர், கோகலே, ராணடே, போன்றோர் எதிரிகளாக அறிவிக்கப்பட்டு எல்லாத் திசைகளிலிருந்தும் தாக்கப்பட்டனர். கற்றறிந்த வகுப்பு வெற்றி பெற்றது. இந்திய விடுதலைப் போராட்டத்தையே ஒரு சமநிலையற்ற சண்டையாக மாற்றி மற்ற இயக்கங்களையும் இரண்டாம் நிலைக்கு தரம் தாழ்த்தி விட்டனர்.<br /><br />ஐரோப்பாவில் இதற்கு எதிர்மாறாக நடைபெற்றது. அங்கு புதிய சிந்தனை, புதிய ஆய்வு, புதிய அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், புதிய உற்பத்தி சாதனங்கள் போன்றவற்றை நிறுவுவதற்காக ஒடுக்குமுறை மத அரசியல் அதிகார மையத்தை எதிர்த்து மக்கள் போராடினர். அவர்கள் மரணத்தையும், மரண தண்டனையும் தழுவி ஏற்றனர், மக்கள் திரள் இயக்கங்களும் மக்கள்திரளின் வாழ்க்கையும் அவர்களின் ஈகத்தால் (தியாகத்தால்) முன்னேறின. ஏன் இந்த வேறுபாடு? பிறப்பு, மதத்தால் மேல்நிலையை வழங்கிய ஒரு சாதி அமைப்பின் அடிப்படையில், தானே உயர்ந்ததாகவும் சிறப்புமைகள் கொண்டதாகவும் ஐரோப்பிய கற்றறிந்தோர் வகுப்பு காட்டிக் கொள்ளவில்லை. அரசியல் அதிகாரம், சமூக மேல்நிலை அல்லது செல்வம் ஆகிய எதைப் பெறுவதிலும் அவர்களுக்கு எந்தச் சிறப்பு சலுகையும் அவர்களின் மதத்தால் அளிக்கப்படவில்லை. அவர்களின் சொந்தத் திறமையின், சாதனைகளின் அடிப்படையில் அவர்கள் உயர் நிலை பெறமுடியும். அதற்கு மாறாக இந்தியக் கற்றறிந்தோர் வகுப்பு கடந்த காலத்தையே விரும்பினர். காரணம் அவர்களின் முன்னோர்களுக்கு ஒரு நாயகனின்-ஒரு கடவுள் அல்லது ஒரு மிகப் பெரும் கடவுளின் அந்தஸ்து அளிக்கப்பட்டிருந்ததுதான்.<br /><br />எந்திரயுகம் அதன் அறிவியல், தொழில் நுட்பம் காரணமாக தற்கால நிலைமையில் அக்கடந்தகால அந்தஸ்தின் உண்மையான மதிப்பீட்டை வெளிப்படுத்தி உழைப்பாளிகளுக்குத் தனிச்சலுகை தருகின்றது. ஆனால் இந்திய மேல்மட்ட சிந்தனையாளர் தற்காலத்தை அதன் புரட்சிகரமான ஆற்றல் வளத்தோடு ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை.<br /><br />இங்குள்ள அறிவார்ந்தவர்கள் புதிய அறிவியலையும் தொழில் நுட்பத்தையும் அதன் உற்பத்தி சாதனங்களுடன் விரும்புகின்றனர். காரணம் இவைகள் அதிகாரத்தையும் வலிமையையும் அடைய அவர்களுக்கு உதவுகின்றன. ஆனால் அதன் புரட்சிகரமான ஆற்றல் வளத்தை மட்டும் சொந்தம் கொண்டாட விரும்புவதில்லை. அவர்கள் சமூக உடமையை ஏற்றுக் கொள்வதில்லை. மீண்டும் வருணாசிரம அமைப்பை மேற்கொள்ளவே விரும்புகின்றனர். சீர்திருத்தம் பற்றிக் கவலைக்கொள்வதில்லை. ஒருசிலரை மட்டும் மேல் நிலைக்குக் கொண்டு வருவதற்காக வேதகாலத்து அதிகார அமைப்பையே திணிக்கவும் அவர்கள் தயங்குவதில்லை. வகுப்பு, சாதி, மற்றும் வருணங்களின் வேறுபாட்டை தனிசிறப்புகளை அழித்து சமத்துவத்தை நிறுவக்கூடிய ஒரு முழுபுரட்சி போன்ற எதையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.<br /><br />இதனாலேயே இவ்வறிவார்ந்தவர்கள் முழு புரட்சிகளாக வளர்வதற்கு நம்பிக்கையூட்டும் சமூக குடியாண்மைக் கான போராட்டங்களைத் தடுத்தனர். விடுதலைப் போராட்டத்திலிருந்து அப்போராட்டங்களை அவர்கள் தனிமைப்படுத்தி பழமைவாதத்தின் துணை கொண்டு தங்களின் சொந்த வகுப்பு மற்றும் சாதி நலன்களுக்காக இந்திய விடுதலைப் போராட்டத்தையே வெற்றிகரமாக திசை திருப்பிவிட்டனர்.<br /><br />நாட்டு விடுதலைப் போராட்ட காலகட்டத்தில் எழுதப்பட்ட நவீன இந்திய இலக்கியம் அச்சமூக சூழ்நிலையின் அத்தகைய போக்கின் உற்பத்திப் பொருளாகும்.<br /><br />நாட்டு விடுதலைப் போராட்டம், சமூக - அரசியல் - பொருளியல் மற்றும் பண்பாட்டு சீர்திருத்தங்களுக்கான போராட்டமாக வளர்வது தடுக்கப்பட்ட போது டாக்டர் அம்பேத்கர் சமூக புரட்சி மற்றும் குடியாண்மைக்கான தனது இயக்கத்தை துவக்கினர். அது வாழ்க்கையின் இன்றியமையாத வெளிப்பாடாகவே இருந்தது. கடந்த கால சமூகப் போராட்டங்கள் நேரிட்டதைப்போன்ற எதிர் வினையையே இந்த இயக்கமும் சந்திக்க நேர்ந்தது. அவற்றைப் போலவே இதுவும் கூட ஒரு நாடு தழுவிய இயக்கமாக மாறிவிடாமல் இருப்பதற்காக பொது நீரோட்டத்திலிருந்து இதையும் தனிமைப் படுத்தும் முயற்சி நடைபெற்றது. பாபா சாகேப்பிற்கு இது தெரியும். இருந்தும் போராட்டத்தை துவக்கினார். தானே உண்மையாக பட்டறிந்து துன்பதுயரங்களை உணர்ந்திருந்ததால் போராட்டத்தை துவக்கியே ஆக வேண்டிய கட்டாயத்தில் அவர் இருந்தார். அவரே ஒரு பெரும் ஊழித்தீயாக மாறினார். ஆழமான பவுணர்வும் அடங்காச் சீற்றமும் இணைந்த போது ஒரு புரட்சி பிறந்தது. ஒரு புதிய யுகம் துவங்கியது.<br /><br />பாபாசாகேப் பேசத் துவங்கினார்; தனது போராட்டத்தைத் துவக்கினார். பல ‘பரமநிலை’கள் அழிந்தன. ஏழை, எளிய ஒடுக்கப்பட்டோர் நல் வாய்ப்பற்ற மக்கள் அதற்கு முன்பு அழுதேயிராத, போராடியேயிராத நலிந்த மக்கள் தங்கள் தலை மீதிருந்த நசுக்கும் சுமைகளைத் தூக்கியெறிந்து போராட்டத்தில் சேர்ந்து “எங்கே எதிரி?” என்று கூவினர். எதி உண்மையில் இந்தியத்தன்மை முழுமையிலும் ஊடுருவி நீக்கமற நிறைந்திருந்திருந்தான். மரபுகளிலும், வழி முறைகளிலும் கட்டுமானத்திலும், அமைப்பிலும், நூல்களிலும், உள்ளங்களிலும், சொற்களிலுமாக மறைந்திருந்தான். மறுபுறத்தில் நண்பர்களோ, தேசிய இயக்கத்தில் தோற்கடிக்கப்பட்டுக் கிடந்தனர்.<br /><br />சமூகவுடைமையர்களும், பொதுவுடைமையர்களும், தேசிய இயக்கத்தை தொழிலாளர் மையம் கொண்டதாக ஆக்க முயன்றனர். வெற்றிபெறாமல் போயினர். இயக்கம் முழுமையாக நிலவுடைமை மற்றும் முதலாளித்துவ சக்திகளின் கட்டுபாட்டிற்குள் இருந்தது. மனேவேந்திரநாத் போன்ற பெரும் புள்ளிகள் அடங்கிய புரட்சியாளர்கள் வீதியோரம் வீழ்த்தப்பட்டனர். இக்கட்டத்தில்தான் முதல் முறையாக சூத்திரர்களும் ஆதிசூத்திரர்களும் இந்திய இலக்கியத்தில் நாயகர் துணை நாயகர் ‘அந்தஸ்தைப்’ பெற்றனர். எப்படியாயினும் அவர்கள் அம்பேத்கர் வழிச் சிந்தனைகளை வெளிப்படுத்தவில்லை. அவர்களால் முடிந்திருக்காது. காரணம் நாட்டுப்பற்று இயக்கம் வருணாசிரம அமைப்பை ஒதுக்கியிருக்கவில்லை. சாதிய அமைப்பு முழு சமூகத்தின் வாழ்க்கையை எங்கும் ஊருடுவியிருந்தது. சிந்தனையாளர் வகுப்போ மதத்திற்கு கட்டுப்பட்டிருந்தது. முதலாளி வகுப்பு புரட்சியை வழிநடத்த முடியாது. காரணம் அது நிலவுடமை மேட்டுக் குடியினருடன் உறவு கொண்டு கைகோர்த்து நின்றிருந்தது.<br /><br />அறிவார்ந்தவர்கள் முதலாளித்துவ வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருந்ததால் அவர்கள் புனைவுநிலைச் (தொன்ம மதிப்பீடுகள்) சிந்தனை மற்றும் உளப்பாங்கு ஆகியவை இருக்கும் அமைப்பிற்கே துணைபோகக் கூடியவர்களாக இருந்தனர். வருணமும் சாதியும் ஒரு தனித்தன்மையான குணாம்சம்தைக் கொண்டிருந்தன. வறுமைமிக்க ஏழைகளிடமும் சரி மாபெரும் செல்வந்தர்களிடமும் சரி வகுப்பு உணர்வை அவை வளரவிடாமல் தடுத்து வைத்தன. அதேபோன்று ஊழ்வினை கோட்பாடு போன்ற இந்துமத தத்துவார்த்த கருத்தாக்கங்களும் கூட வகுப்பு உணர்வை தளர செய்தே வந்தன. ஆகையால் அறிவியல் கண்ணோட்டத்துடன் பகுத்தறிவுப் போக்கைக் கொண்டிருந்த கலகக்காரனான அம்பேத்கரிய நாயகனோடு ஒத்துப் போவதை இந்து எழுத்தாளர்கள் கடினமானதாக உணர்ந்தனர். மறுபக்கம் கர்ணன், ஏகலைவன் போன்ற நாயகர்கள் அவர்கள் உள்வாங்கியிருந்த பண்பாடு மற்றும் புனைவு நிலை (தொன்ம) மதிப்பீட்டு கட்டுமானத்துடன் முரண்படாமல் ஒத்து நின்றனர்.<br /><br />கர்ணன், ஏகலைவன், போன்ற நாயகர்கள் உண்மையில் வருணாசிரம அமைப்பிற்கு இசைவான போக்கையே கொண்டிருந்தனர். அவர்கள் துணிவுமிக்கவர்கள்தான்; ஆனால் அந்த அமைப்பில் அவர்களுக்குரிய இடம் மறுக்கப்பட்டிருந்ததால் துன்பத் துயரங்கள் கொண்டதாக மட்டுமே அவர்கள் வாழ்க்கையைப் பார்த்தனர். மதத்தால் அவர்கள் மறுக்கப்பட்டிருந்ததால் இந்த நாயகர்கள் விதியின் கைகளில் விளையாட்டு பொம்மைகளாயினர்... இத்தகைய நாயகர்கள் ஏராளமான துன்பத் துயரங்களை, உயர்ந்த நாடகத்தை, முரண்பாட்டின் ஆழ அகலத்தை, ஆழமான அழகியல் இன்பத்தை வழங்குவர். அவர்கள் மிகசுலபமாக ஒரு ஊழ்வினைக் கோட்பாட்டை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குவார்கள். இது வகுப்பு சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்ப சதி செய்துகொண்டு போவதற்காக மதத்திற்குள் புகலிடம் தேடுவதைத் தவிர வேறில்லை. இத்தகைய நாயகன் படிப்பவரை வாழ்க்கை என்பதே துன்பத் துயரத்தை தவிர வேறில்லை என்று நம்ப வைக்க தொடர்ந்து முயற்சிப்பான். படிப்பவரும் நம்பத் துவங்கிவிடுவார். இத்தகைய நாயகனின் படப்பிடிப்பு தனது சொந்த பட்டறிவையே மீண்டும் உணர்ந்து இன்ப மடையும் வாய்ப்பை படிப்பவர்க்குத் தருகின்றது. அத்தகைய கலைப்படைப்பு இந்து புனைவுநிலை (தொன்ம) மதிப்பீடுகளையும் உள்ளுணர்வையுமே வெளிப்படுத்துகிறது. அதன் தோற்றம் எவ்வளவுதான் நவீனமாக இருந்தபோதும் மேற்குறிப்பிட்ட முன்மாதிகளை ஒத்துப்போகும் இலக்கியம் பிற்போக்கானது.<br /><br />இந்து மதிப்பீட்டுக் கட்டமைப்பை உள்வாங்கிக் கொண்ட எழுத்தாளர்கள் பூலே, அம்பேத்கரின் தத்துவக் கோட்பாடுகளிலிருந்து பெறப்படும் சிந்தனைகள், கதை, கருத்துகள், நாயகர்கள், ஆகியவற்றை ஏற்றுக் கொள்ள இயலாதவர்களாக உள்ளனர். அத்தகைய ஒரு வாழ்க்கை வடிவத்தை வெளிப்படுத்தும் திறன் அவர்களுக்கு இல்லை. மார்க்சிய எழுத்தாளர்களும் கூட இந்து புனைவுகளை (தொன்ம) மதிப்பீடுகள் மற்றும் உள்ளுணர்வுகளோடு ஒத்துபோகும் நாயகர்களுக்கே முதலிடம் தருகின்றனர். பூலே அம்பேத்கர் கோட்பாடுகளின் அடிப்படையில் மாதிரியாக்கப்பட்ட நாயகன், உண்மையில் சாதி மதம் மற்றும் அவைகளின் மீது சார்ந்திருக்கும் பொருளியல் சமூக அமைப்புகளை ஒதுக்கித்தள்ளி தன்னிச்சையாகவே குடியாண்மை சமூகவுடைமையை ஏற்றுக்கொள்கிறான். ஏற்றத் தாழ்வை கடுமையாக எதிர்ப்பவனாக இருப்பதால் அவன் ஏற்றத்தாழ்வின் மீது அமைந்த ஒரு சமூக அமைப்பிலிருந்து பிறப்பிக்கப்படும் தெய்வீக பிறவிகள், அவதாரங்கள் அதிமனிதபிறவிகள் போன்ற கருத்தாக்கங்களை எதிர்த்து போடுகிறான்.<br /><br />பூலே, அம்பேத்கர் தத்துவங்கள் இயல்பாகவே இக் குடியாண்மைச் சமூகவுடைமை என்ற தொலை நோக்கிற்கு இட்டுச் செல்கின்றன. மேலே விவரிக்கப்பட்ட வகையான நாயகன் மார்க்சிய எழுத்தாளர்களை கவர்ந்தாலும் அத்தகைய ஒரு நாயகனை விடுதலைக்கு முந்தைய காலகட்டத்தில் முழுமையாக புரிந்து கொள்ள தவறிவிட்டனர் என்பதுதான் உண்மை. இதற்குக் காரணம் இந்த எழுத்தாளர்கள் சாதி அமைப்பிற்கு துணை போய்விட்டார்கள் என்பதினால் அல்ல. அவர்கள் பெற்ற மதிப்பீட்டு கட்டமைப்பும் வகுப்பு வரையறைகளும் எவ்வளவு ஆழமான அகழியை உருவாக்கியுள்ளன என்பதையே அது வெளிக்காட்டுகின்றது. இக்காரண விளக்கமே முற்போக்காளர்களாகவும் சமூக அக்கறையுள்ளவர்களாகவும் இருந்த எழுத்தாளர்கள் ஒடுக்கப்பட்டோர் (தலித்) இலக்கியம் பற்றி ஏன் சிந்திக்க தொடங்கியுள்ளார்கள் என்பதை தெளிவாக்குகின்றது. இந்திய சமூக சீர்திருத்தத்தின் வரலாறு விடுதலை போராட்ட வரலாற்றை விடவும் மிகப்பெரியதாகும். விடுதலை என்னவோ வந்தது. ஆனால் அதிக எண்ணிக்கையிலான சமூக பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமலே இருக்கின்றன. நாடு குடியாண்மையை ஏற்றுக் கொண்டது.<br /><br />தீண்டாமையை அரசியல் அமைப்பு சட்டப்படி நீக்கியுள்ளது. அதனால் ஆயிரக்கணக்கான ஆண்டு பழமையான மதம் மற்றும் சமூக கட்டமைப்பை செல்லாததாக்கி உள்ளது. எனினும் இந்துத்துவத்தை அரசியல் அமைப்பு ஆற்றல் இழக்க செய்துள்ளது என்னும் உண்மை ஒருபுறம் இருந்த போதிலும் தீண்டாமையும் ஏற்றத்தாழ்வும் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. இதுவே எல்லாம் அல்ல. இன்று இந்தியாவில் குடியாண்மையும் வருணாசிரமும் கூடியே வாழ்கின்றன. அதே போன்றுதான் பீம்ஸ்மிருதியும் (டாக்டர் அம்பேத்கரின் கருத்தியலும்) மனுஸ்மிருதியும் சேர்ந்தே நிலவுகின்றன. இந்தியா ஒரே நேரத்தில் இரண்டு வாழ்வியல் முறையை வாழ்ந்து வருகின்றது. ஒன்று இருபதாம் நூற்றாண்டினது மற்றொன்று இடைக்காலத்தைச் சேர்ந்தது. அது இருவேறு வாழ்க்கை வடிவங்களாக இரண்டு சமூக முறமைகளாக பிளவுண்டு கிடக்கின்றது.<br /><br />ஏன் இந்நாடும், மக்களும் தங்களையே இப்பிளவு களுக்கிடையில் வைத்திருக்க வேண்டும்? சாதிப் பிரிவினைகளோடு குடியாண்மை எப்படிச் சேர்ந்து வாழ முடியும்? அவைகள் ஒன்றுக்கொன்று எதிரானவை என்பதால் அப்படி வாழ முடியாது. வருணாசிரம அமைப்பிற்கும் இடம் தரும் குடியாண்மை ஆற்றல் மிக்கதாக இருக்க முடியாது. ஆனால் இந்தியாவில் அது சேர்ந்து இருக்கிறதென்றால்- அது இந்தியக் குடியாண்மை வெறும் வடிவத்தில் மட்டுமே இருக்கின்றது-உள்ளடக்கத்தில் அது முதலாளித்துவக் குடியாண்மையாகவே உள்ளது என்பதே பொருள். முதலாளித்துவக் குடியாண்மைதான் பொருளியல், மதம் மற்றும் இனம் சார்ந்த ஏற்றத்தாழ்வுக்கு இடம் தரும்; தீண்டாமையும் சாதியமும் பரந்துபட்ட மக்களின் வாழ்வை அழித்துக் கொண்டுள்ளது என்னும் உண்மையை கண்டும் அது மன உறுத்தலே கொள்ளாது.<br /><br />முதலாளித்துவக் குடியாண்மை சட்டங்களை இயற்றுமே தவிர நடைமுறைப்படுத்த நாள் கடத்திக் கொண்டே போகும். அது தீண்டாமையால் எந்த பாதிப்பையும் அடையாது. தனி மனித ஆளுமையின் அழிவிற்கும் ஆளாகாது. மேலும், இந்திய முதலாளித்துவம் எந்தவொரு சமூகத் தேவையினாலோ வளர்ச்சியினாலோ தோன்றியதல்ல, அல்லது உற்பத்திச் சாதனங்களின் உடமைக்கான போராட்டத்தின் வந்ததுமல்ல அல்லது புதிய அறிவியல், தொழில் நுட்பங்களுக்காக போராடிய எந்த வரலாற்று போலிருந்தும் விளைந்ததுமல்ல. மாறாக செல்வத்தையும் அதிகாரத்தையும் முற்றுடைமையாக்கிக் கொள்ள மதத்தால் சிறப்பான சலுகைகளும் உரிமைகளும் வழங்கப்பட்டிருந்த வகுப்பு வாரிசுரிமையால் பெற்ற செல்வத்தைக் கொண்டு இயந்திரங்களை வாங்கியும், தொழிற்சாலைகளைக் கட்டி பெருக்கியும் லாபம் பெற முடிந்தது. எந்திரயுகத்தில் இவ்வகுப்பு அக்காலகட்டத்தின் தேவைக்கேற்ப தன்னெழுச்சியாக எந்தத் தலைமையையும் வழங்கவில்லை. பாட்டாளிய வகுப்பு, சாதி மற்றும் மதம் என்னும் பிரிவுகளால் பிளவுண்டு கிடக்கும்போது ஒரு வகுப்புப் போரைத் தொடுத்து, ஒரு வகுப்புகளற்ற சமுதாயத்தை அமைப்பது கடினமே. இக்காரணத்தால் மதத்தால் பிளவுண்ட ஒரு சமூகம் முதலாளித்துவத்திற்குத் தேவைப்படுகின்றது.<br /><br />நாட்டு விடுதலைக்கு பிறகு முதலாளித்துவம் குறிப்பிடும்படியான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. சிறிய சண்டைகளில் வெற்றி பெறும் அளவிற்கு தனது அதிகாரத்தையும் வளர்த்துக் கொண்டுள்ளது. ஆனால் அதே வேதத்தில் சமூக ஏற்றத்தாழ்வு மறைந்து போகவில்லை. முரணாக வறுமையும் சொத்துடைமையும் எதிரெதிர் எல்லைக்கே சென்றுள்ளன. முதலாளித்துவத்தின் மூலமாக ஏற்படும் பொருளாதார வளர்ச்சி சமூகப் பிரச்சினைகளைக் கட்டாயம் தீர்க்கும் என்ற நிலையில்லை. அதற்குமாறாக முதலாளித்துவ வளர்ச்சியானது வரலாறு நெடுக நாம் கண்டதைப்போல் போர், நாடுகளை காலனியமயமாக்கல், பாசிச ஒடுக்கு முறைக்கு வழிவகுக்கின்றது. இம்முதலாளித்துவம் தான் மனித இனத்தின் மீதும் அதன் வாழ்க்கையின் மீதும் எண்ணற்ற போர்களைத் திணித்தது. நாடுகளை காலனிகளாக மாற்றுவதற்கும் சந்தைகளைப் பிடிப்பதற்கும் போர்களை தொடுத்தது. அதன் கருத்தியலுக்கு எதிராக எழுந்த மெய்யியல்களையும் இயக்கங்களையும் ஒடுக்க போர்களை நடத்தியது.<br /><br />இவ்வாறு இலாப நோக்குடன் மட்டுமே கூடிய பொருளாதார வளர்ச்சி உறுதியாக சமூகப் பிரச்சினைகளை தீர்க்கவே செய்யாது. என்றாலும் சமூக இயக்கங்களும் கூட தாங்களாகவே தீண்டாமையின் சிக்கல்களைத் தீர்த்து வைக்க முடியவில்லை. இதன் காரணமாகவே ஒடுக்கப்பட்டோர் (தலித்) இலக்கியம் தனது சொந்த சமூகக் கண்ணோட்டங்களை வெளிப்படுத்தும்போதே பின் வரும் பிரச்சினைகள் குறித்தும் கூட விவாதிக்கின்றது: பொருளியல், அரசியல் இயல்பு எப்படியிருக்க வேண்டும்? அதிகாரத்துவம் எவ்வாறு அமைய வேண்டும்? இப்பிரச்சினைகளையும் அவற்றிற்கு அடித்தளமாக இருக்கும் தத்துவார்த்த சிக்கல்களையும் கூட அது விவாதிக்கின்றது. கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்கின்றது. காரணம் அவைகள் ஒடுக்கப் பட்டோரின் வாழ்வோடு நேரிடையாக தொடர்பு கொண்டுள்ளன.<br /><br />அத்தகையதொரு விரிவான அனைத்தும் சார்ந்த கண்ணோட்டத்தை வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பை இலக்கியம் ஏன் மேற்கொள்ள வேண்டும்? உண்மையாகவே ஒடுக்கப்பட்டோர் இலக்கியத்திற்கு அது மிகவும் தேவைப்படுகிறது. சமூக அக்கறை கொண்டவர்களாகத் தங்களைக் கூறிக்கொள்ளும் எழுத்தாளர்களுக்கு, ஒடுக்கப்பட்டோர் வாழ்க்கையை பகராண்மைப்படுத்துவதாக கூறிக்கொள்வோருக்கு அத்தகையதொரு பரந்த கண்ணோட்டத்தை வளர்ப்பதற்கு அது மிகவும் தேவைப்படுகின்றது.<br /><br />டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஒடுக்கப்பட்டோர் இலக்கியத்தின் மாபெரும் புனைவு மயக்க ஆதாரமாக விளங்குகின்றார். அவரே முன்மாதிரி. அவரே புனைவு நிலைக்கு வரையறை. ஒடுக்கப்பட்டோர் தன்மானத்திற்கான கருத்துருவம். அவரே அதன் அதி உன்னத தொன்மப் படிவம். இந்த எல்லாப் பிரச்சினைகள் குறித்தும் அழமாக சிந்தனைத் தெளிவைத் தந்தவர் அவரே. அவைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதற்காக எதிர்ப்பு நடவடிக்கைகளை தொடுத்தவர் அவரே. இந்திய குடியாண்மைக்கான ஒரு முன்மாதிரியை நிறுவுவதற்காக, கடவுள் மறுப்பு, நாத்திகத்தின் மெய்யியலான ஆற்றல் வளமும் மனித நேய கண்ணோட்டமும் கொண்ட மெய்யியலான பௌத்தவியத்தை மறு சீரமைப்பு செய்தார். நிலம், வணிகம், தொழிலை தேசியமயமாக்கவும் அவர் வாதாடினார். வாழ்க்கையின் எல்லா பிரச்சினைகளின் மீதும் தன் கருத்துக்களை முன்வைத்து அவற்றிற்கு ஆதரவாக போராட்டங்களையும் தொடுத்தார்.<br /><br />ஒடுக்கப்பட்ட மக்கள் திரளின் சிக்கல்கள்/பிரச்சினைகள் தாம் ஒடுக்கப்பட்டோர் இலக்கியத்தின் சிக்கல்களும் கூட.. இவ்விலக்கியம் பொதுமக்களோடு ஒடுக்கப்பட்ட (தலித்) மக்கள்திரளோடு தன்னையே இணைத்துக் கொண்டுள்ளது. அதனால், அது நிறுவனமாக்கப்பட்டு விட்டவைகளை எதிர்க்கின்றது. அதன் தொடர்ச்சியாக அது இடதுசாரித்தன்மை கொண்டதாகின்றது. இவ்வாறாக அது இந்தியாவின் எதிர்காலத்தையே வடிவமைக்கும் வல்லமை வாய்ந்தது.<br /><br />எதிர்ப்பு நிலையும் ஏற்பு நிலையும்: வருணங்களை அடிப்படையாகக் கொண்ட இந்துத்துவம் இந்தியாவின் பெரிய மதம். பௌத்தவியம் நிலைபெற்றிருந்த போதும், இந்துத்துவமே இந்திய சமூகத்தின் மீதும் அதன் பண்பாட்டின் மீதும் அதாவது மக்கள் திரளின் உளப்பாங்கின் மீது மிகவும் முகாமையான/முழுமையான ஆளுமையைச் செலுத்தி வருகின்றது. இந்தியாவின் ஒரு பெரிய பெரும்பான்மை மக்கள்தொகை இந்துமதத்தைப் பின்பற்றி வருகின்றது.<br /><br />வேதம், உபநிஷத்துக்கள் மற்றும் பல்வேறு மதம் சார்ந்த, பகுதி மதம்சார்ந்த புராணவியல் நூல்களிலிருந்து பல கருத்தாக்கங்கள் உண்மையாக, மெய்மைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இந்நூல்களில் வரும் கடவுள்களும் அரக்கர்களும் பெரும்பாலான இந்தியர்களால் முறையே வழிபடவும் வெறுக்கப் படவும் செய்கின்றனர். இந்துக்களே இந்தியாவின் பெரும்பான்மையோர். ஆகையினால் அரசு ஏந்திரம், பொருளியல் மற்றும் பண்பாட்டு அமைப்புக்கள் அனைத்தும் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றன. இந்திய முசுலிம்கள் தங்களின் தனி அடையாளங்களைக் காத்துவந்த போதிலும் அவர்களின் மனப்போக்கு என்னவோ இந்துநிலை சார்ந்ததே. மேலும் எல்லாம் வல்ல இறைக்கோட்பாடு, ஆன்மா, சொர்க்கம், நரகம், பாவ புண்ணிய நடவடிக்கைகள் ஆகிய அனைத்துமே எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவையே உண்மையில் இவ்வகையில் இந்தியாவில் உள்ள மற்ற மதங்களும், இந்துத்துவத்திற்கு உறவுநிலை கொண்டவைகளாகவே உள்ளன. இந்துக்களும் இந்து அல்லாதவர்களும் ஒரே வகையான உளப்பாங்கையே கொண்டுள்ளனர். அதன் விளைவாகவே, அவர்களின் இலக்கியமும் கூட ஒரே வகையானதே, இந்துக்கள் உளப்பாங்கு புனைவுநிலை மதிப்பீட்டு கட்டமைப்பு ஆகியவை மற்றவர்களின் இலக்கியத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்துகின்றன.<br /><br />சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட குடியாண்மை சமூகவுடமை நவீன காலகட்டத்தின் தத்துவமாகும். இந்திய உளப்பாங்கு மற்றும் புனைவுநிலை மதிப்பீட்டு கட்டமைப்பில் இந்த மெய்யியலின் வேர்கள் கால்கொண்டிருந்ததில்லை. திருத்தொண்டர்களின் இலக்கியமும் முன் மாதிரி வடிவங்களில் எந்த பொருத்தமான மாற்று நிலைபாடுகளையும் கூட கொடுத்ததில்லை. மறுபுறத்திலோ ஃபாசிசவெறி, வருணங்களின் ஆதிக்கம், தனிமனித வழிபாடு, செருக்கு, பழி சுமத்தல், காழ்ப்புணர்வு, வெறுப்புணர்வு - ஆகிய அனைத்தும் இலக்கிய மற்றும் அறிவார்ந்தவர் ஆதரவு பெற்றிருக்கின்றன.<br /><br />குடியாண்மை சமூகவுடமை, புதிய அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் புரட்சிகரமான தற்காலம் ஆகியவை ஒடுக்கப்பட்டோர் இலக்கியத்தின் உட்சாரத்தை உருவாக்குகின்றன. எனவே அது கடந்தகால மரபுகளைச் சொந்தம் கொண்டாடுவதில்லை. ஒடுக்கப் பட்டோர் இலக்கியத்தின் மரபுவழியும் புனைவுநிலை (தொன்ம) மதிப்பீட்டு ஆக்கமும் புரட்சிகர உலக இலக்கியத்தில் கண்டெடுக்கப்பட வேண்டும். சாதாரண எளிய மனிதனை கதைமாந்தனாக்கும் இலக்கியமே சமூகவுடமையை முன்வைக்கும் இலக்கியமே ஒடுக்கப்பட்டோர் இலக்கியத்திற்கு முன் மாதிரியாகும்.<br /><br />ஒடுக்கப்பட்டோர் (தலித்) இலக்கியம்: ஒரு மனிதப்பிறவி பிறப்பிலேயே ஒடுக்கப்பட்ட (தலித்) புறக்கணிக்கப்பட்ட தீண்டத்தகாத பிறவி இல்லை. இந்த அமைப்புதான் அவனை அந்நிலைக்குத் தாழ்த்துகின்றது. அமைப்பு மாறும்போது மனிதப்பிறவியும் தனது மனித உட்சாரத்தை திரும்பப் பெறுகின்றது. ஆகையால், மனிதப்பிறவியை படம் பிடித்துக்காட்டும் இலக்கியம் உண்மையில் ஒடுக்கப்பட்டோர் இலக்கியமே இல்லை. இதை உணர்ந்த பிறகும் கூட ஒரு பெரும்பான்மை இலக்கியப்போக்கு எல்லா சீயத்தன்மையோடும் தன்னை ஒடுக்கப்பட்டோர் (தலித்) இலக்கியம் என்று அழைத்துக் கொள்கிறது. சாதியால் வழி நடத்தப்படும் சமூகமும் அதன் இலக்கியமும், ஒடுக்கப்பட்டவனை (தலித்) இழிவானவன், புறக்கணிக்கத்தக்கவன், குற்றம் புரிபவன், கீழானவன், கடந்த பிறவியில் செய்த தீவினைகளின் காரணமாக பலியானவன் என்றே பார்க்கின்றன. அவன் இப்பிறவியில் துயரத்தையே கொள்பவன், ஏழை, மானமில்லாதவன், வரலாறு இல்லாதவன், கோயில்களிலோ, புனித நூல்களிலோ மதிப்பையும் மரியாதையையும் பெறமுடியும் என்ற நம்பிக்கையை என்றுமே கொண்டிருந்திராத முன்னோர்களைக் கொண்டவன் என்றே பார்க்கப் படுகிறான்.<br /><br />இது உண்மையில் இந்திய சமூகம் முழுமைக்குமான துன்பதுயரம், நோவு-நலிவு, அடிமைத்தனம், மரியாதைக்குறைவு, புறக்கணிப்பு, இழிவாகும். ஆனால் ஒடுக்கப்பட்டோர் இலக்கியம் மட்டுமே அந்தச் சுமையை தன் தலையில் சுமந்து கொண்டிருக்கிறது. ஒடுக்கப்பட்டோர் இலக்கியம் ஒடுக்கப்பட்டோர் தன்மையை (அதாவது, சமூக நிலையை) ஏற்றுக் கொண்டுள்ளது, புத்தர் மக்களின் துன்பத்துயரங்களை ஏற்றுக்கொண்டதைப்போல அல்லது அனேக புரட்சியாளர்கள் ஒடுக்குமுறைக்கு ஆளானோரின் நிலையை ஏற்றுக் கொண்டதைப் போல. பகற்கனவும், நிறுவனமாக்கப்பட்ட சமூக அமைப்பும் அதற்குச் சொந்தமான எல்லாவற்றையும் பற்றிய படப்பிடிப்பும் (அத்துடன் அதிகாரமும் இணைக்கப்பட்டிருப்பதால்) அழகானதாகவே தோற்றம் அளிக்கலாம். ஆனால் இந்த நிறுவனமாக்கப்பட்ட சமூக அமைப்புதான் பெண்களையும் சூத்திரர்களையும் அடிமையாக்கி அவர்களைத் தீண்டத்தகாத நிலைக்குத் தள்ளி வைத்திருக்கிறது என்பதை மறந்துவிட முடியாது. கூடாது. டாக்டர் அம்பேத்கர் சமூகப்புரட்சியின் உட்சாரமாகவே இருந்தார். ஒடுக்கப்பட்டோரின் இலக்குக்கு மாதிரியாக விளங்கினார்.<br /><br />அவர்களின் தொன்ம (புனைவு நிலை) மதிப்பீட்டு கட்டமைப்பிற்கு கருத்துருவமானார். மகர் என்னும் கீழ்சாதியினராக இருக்கின்றார் என்பதால் மட்டுமே ஒடுக்கப்பட்டோருக்கு அவர் தலைவராகி விடவில்லை. அவர்கள் படும் துன்பதுயரங்களை, தீண்டாமைத் தொல்லையை, சாதியப் பாகுபாடுகளைக் களைவதற்காகவே அவர் அவர்களின் தலைவரானார். பிறப்பு, சாதி, வருணம், வகுப்பு ஆகியவற்றைக் கொண்டு பாகுபாடுகளை வலிமை கொள்ளச் செய்யும் முற்பிறவியின் பாவபுண்ணியக் கோட்பாட்டின் அடிப்படையிலான கருத்தியலுக்கு மதிப்பளிக்காத காரணத்தால் அவர் ஒரு ‘ஒடுக்கப்பட்டவராக’ (தலித்தாக) மாறிவிடவில்லை. அவர் ஒரு மாபெரும் புரட்சிகரப் போராளி. ஒரு மாபெரும் கற்றறிந்த மேதை, இருந்தும் அவர் தன்னையே தீண்டத்தகாத ‘தலித்’ (ஒடுக்கப்பட்டவன்) என்று அழைத்துக்கொண்டார்.<br /><br />இதே காரணத்திற்காகத்தான் இன்றைய மற்றும் நாளைய எழுத்தாளர்கள் மாபெரும் உலக இலக்கியங்களின் மரபில் வைத்து எண்ணப்படும் தகுதியுள்ள படைப்புகளை ஆக்கும் எழுத்தாளர்கள் தங்களை ஒடுக்கப்பட்ட (தலித்) எழுத்தாளர்கள் என்று அழைத்துக் கொள்கின்றனர். இதுவரை அங்கீகரிக்கப் பட்ட இந்திய இலக்கியம் இந்து இலக்கியம். ஆனால் புதிய அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் ஏற்றுக் கொள்வதற்கான புரட்சிகரமான ஆற்றலை பெற்று ஒரு முழுமையான மாற்றத்தைக் கொண்டுவரப்போவது ஒடுக்கப்பட்டோர் (தலித்) இலக்கியமே. ‘தலித்’ (ஒடுக்கப்பட்டோர்) என்பது முழுப்புரட்சிக்கான புதியப் பெயர்: அது புரட்சியின் அவதாரம்.</div>
<div align="justify" style="background-color: white; font-family: Latha; font-size: 12px;">
<br /></div>
<div align="justify" style="background-color: white; font-family: Latha; font-size: 12px;">
<span style="font-weight: 700; text-align: -webkit-center;">புதுவிசை, ஏப்ரல் - ஜுன் 2006</span></div>
</div>
புதுவிசைhttp://www.blogger.com/profile/09276344793619872435noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8111967010823738396.post-53770018165843077912018-03-23T10:20:00.002-07:002018-03-23T10:20:36.056-07:00அர்ஜூன் டாங்ளே அவர்களுடன் நேர்காணல் - புதியமாதவி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h1 class="title entry-title" itemprop="name" style="background-color: white; display: table-cell; margin: 0px; padding: 0px 40px 0px 0px; position: relative; text-align: center; vertical-align: middle; width: 710px;">
<div class="separator" style="clear: both; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhC2s7B78n4OhYhsHOKZWhjRzctTl7mY0FGzWulZ8_wZpkyG5jEDgeUp4C82INYZAX8QawoJ2c4IxQvwYeZyZm5zIkLwVehsnTQs9n7zY1TZMxfXQ16YCbe6qlxUi86JlhQ2NfHpXJxjLQ2/s1600/Arjun-Dangle_Setu.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="627" data-original-width="418" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhC2s7B78n4OhYhsHOKZWhjRzctTl7mY0FGzWulZ8_wZpkyG5jEDgeUp4C82INYZAX8QawoJ2c4IxQvwYeZyZm5zIkLwVehsnTQs9n7zY1TZMxfXQ16YCbe6qlxUi86JlhQ2NfHpXJxjLQ2/s320/Arjun-Dangle_Setu.jpg" width="213" /></a></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS", sans-serif;">மகாராஷ்டிரா மாநிலத்தின் அரசியலிலும் இலக்கியத்திலும் குறிப்பிடத்தக்க ஆளுமை அர்ஜூன்
டாங்ளே. 1945 ல் மும்பையில் பிறந்தவர். மும்பை பல்கலைக்கழகத்தின் முதுகலைப் பட்டதாரி.
நாடு தழுவிய அளவில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கிய தலித் சிறுத்தைகள் (தலித் பேந்தர்
) அமைப்பின் நிறுவனத்தலைவர்களில் ஒருவர். தற்போது பாரதீய குடியரசுக் கட்சியின் மகாராஷ்டிர
மாநிலத் தலைவர். இவரது நூல்கள்:</span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><br />
<span style="background: white;">1. Chhavani Halte Ahe- போர்க்குற்றத்தின் பயணம் -கவிதைகள்
( 1978 ல் மாநில அரசின் விருதினைப் பெற்றது )<o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><br />
<span style="background: white;">2. Hi Bandhavarchi Manse - ஏ... உறவுகளே... – சிறுகதைகள்<o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><br />
<span style="background: white;">3. Dalit Sahitya, Ek Abhyas- தலித் சமூகத்திற்கு ஒரு
பாடம் , விமர்சனம்<o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><br />
<span style="background: white;">4. Dalit vidroha- - தலித்துகளின் எதிரி, இலக்கியம்
மற்றும் அரசியல்சார் கட்டுரைத் தொகுப்பு</span><br />
<br />
<span style="background: white;">அர்ஜூன் டாங்ளே, தனது ஆக்கங்களை வெளியிட்டுக் கொள்வதை
விடவும், தலித் இலக்கியத்தை உலகளாவிய வாசிப்புக்குகொண்டு செல்ல வேண்டும் என்பதில்தான்
கூடுதல் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். இதனாலேயே அவர், மராத்திய தலித் ஆக்கங்களை
ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து தொகுப்புகளாக பதிப்பித்து வருகிறார். டாங்ளே மொழிபெயர்த்து,
தொகுப்பாசிரியராயிருந்து வெளியிட்ட நூல்கள்:<o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><br />
<span style="background: white;">1. A Corpse In The Well : (translations From
Modern Marathi Dalit Autobiographies) 1992</span><br />
<span style="background: white;">2. No Entry For The New Sun: Translations From Modern
Marathi Dalit Poetry</span><br />
<span style="background: white;">3. Homeless In My Land: Translations From Modern
Marathi Dalit Short Stories</span><br />
<span style="background: white;">4. Poisoned Bread: Translations From Modern
Marathi Dalit Literature</span><br />
<br />
<span style="background: white;">மும்பையில் வசிக்கும் தோழர் புதியமாதவி அவர்கள், புதுவிசைக்காக
திரு அர்ஜுன் டாங்ளே அவர்களைச் சந்தித்து உரையாடியதிலிருந்து இந்நேர்காணல் தொகுக்கப்பட்டுள்ளது.</span><br />
</span></div>
<div style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; text-align: center;">
<span style="font-family: "Arial Unicode MS", sans-serif;">I</span></div>
<br /><div style="text-align: justify;">
<span style="color: #333333;"><span style="font-family: inherit; font-size: small;">உங்கள் எழுத்துகள்
எங்கள் தமிழுலகத்துக்கு ஏற்கனவே அறிமுகமானவை. குறிப்பாக தலித் இலக்கிய வட்டாரத்தில் உங்களை
அறியாதவர்கள் இருக்கவே முடியாது. நாங்கள் அறியாத உங்கள் இளமைக் காலம் பற்றி அறியவிரும்புகிறோம்.</span></span></div>
<div style="color: #333333; font-size: 20px;">
</div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><b style="mso-bidi-font-weight: normal;"><span style="background: white;"><br /></span></b></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="background: white; font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;">அர்ஜூன் டாங்ளே: நம்ம தாராவி அருகிலிருக்கும்
மாதுங்கா லேபர் கேம்ப் பகுதியில்தான் நாங்கள் குடியிருந்தோம். என் அப்பாகாட்டன் மில்லில்
வேலை செய்தார். 15.6.1945 ல் நான் பிறந்தேன். நாங்கள் 6 பேர் அண்ணன் தம்பிகள். தாராவி
சால்களில் எனக்குநண்பர்கள் உண்டு. மும்பை துறை முகத்தில் வேலை செய்துகொண்டே நான் மர்ஸி
தயாநந்த் கல்லூரியில் முதுகலை படித்தேன்.காலையில் கல்லூரி. 11 மணிக்கு மேல் வேலை. இதற்கிடையில்
கவிதை, கதை என்று எழுத ஆரம்பித்தேன். என் தாய்வழி மாமாசங்கர் நாராயண் பவார் பொதுவுடமை
இயக்கத்தில் இருந்தார். அந்தக் காலக்கட்டத்தில் தான் மும்பையில் பாபாசாகிப் அம்பேத்கரின்போராட்டங்களும்
இயக்கமும் செயல்பட்டுக் கொண்டிருந்தன. இந்த இரண்டு இயக்கங்களின் தாக்கங்களுடன் தான்
என் இளமைக்காலம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><br />
<b style="mso-bidi-font-weight: normal;"><span style="background: white;">ஆனால் பொதுவுடமை
இயக்கமும் அம்பேத்கரிய இயக்கமும் ஒன்றுக்கொன்று எதிரெதிரானதாகத்தானே நிறுத்தப்படுகிறது?
இரண்டுக்குமிடையே உள்ளது பகைமுரணா ? நட்பு முரணா?<o:p></o:p></span></b></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><br />
<span style="background: white;">இரு இயக்கங்களும் ஒன்றுக்கொன்று எதிரணியில் நிற்பதாகச்
சொல்லப்படும் கருத்துகளுடன் எனக்கு உடன்பாடில்லை. 1936ல்பாபாசாகிப் அம்பேத்கர் உழைப்பாளர்
விடுதலை இயக்கத்தை (Independence labour party) ஆரம் பித்தபோது அந்த இயக்கத்தின் அடையாளமாக
இருந்தது சிவப்புக்கொடிதான். மட்டுமல்ல,1938 வாக்கில் நிலமற்ற கூலிவிவசாயப் பெருமக்களை
ஒன்றிணைத்து அவர் நடத்திய பேரணியிலும், கருப்புச் சட்டத்தை (Black act) எதிர்த்து நடந்த
போராட்டங்களிலும் பெரும்பான்மையான கம்யூனிஸ்ட் தோழர்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள்.
தொழிற்சாலைகளை, அங்காடிகளை அதன் உரிமையாளர்கள் எவ்விதமான முன்னறிவிப்போ காரணமோ இன்றி
இழுத்து மூடுவதை அங்கீகரித்த சட்டம்தான் கருப்புச்சட்டம். அதை எதிர்த்து நடந்த போராட்டங்களில்
டாங்கே, விவேஷ்கர், ஜம்னாதாஸ் போன்ற தோழர்களும் பிரிட்டிஷ் பிரட்லியும் கலந்துகொண்ட
வரலாற்றை அறிந்தவர் எவரும் இரண்டு இயக்கங்களும் எதிரணியில் நிற்பதாகக் கருதுவதில்லை.</span><br />
<br />
<span style="background: white;">இந்தியச் சமூகச்சூழலில் சாதிப்படிநிலை ஒழியாமல் சமத்து
வம் சாத்தியமில்லை என்ற கருத்தை உள்வாங்கிக்கொள்ளகம்யூனிஸ்டுகள் சற்று காலம் எடுத்துக்கொண்டார்கள்
என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் பல்வேறு இக்கட்டானகாலக்கட்டங்களில் இரு இயக்கங்களும்
இணைந்தே செயல்பட்டிருக்கின்றன. 1957ல் மும்பை மாநகரை மொழிவழி மாகாணப்பிரிவின் அடிப்படையில்
மராத்திய மாநிலத்துடன் இணைக்க நடந்த போராட்டங்களில் "ஒன்றுபட்ட மராட்டியம்"
(united maharashtra) அமைப் பில் குடியரசுக் கட்சியும் அங்கம் வகித்திருந்தது. 17 சட்டசபை
உறுப்பினர்களும் 7 நாடாளு மன்ற உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்கள். பிரகாஷ்
அம்பேத்கருடன் இணைந்து நாங்கள் ஆரம்பித்த 'பகுஜன் தலித் சமித்சமிக்தி' நிலவுரிமைக்காக
நிறைய போராட்டங்களை நடத்தியது. 2009ல் இங்கு நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் 3வது
அணியின் பெயர் RLDF - Republican left democratic front. அம்பேத்கரிசம் Vs கம்யூனிசம்
என்று அடிக்கடி நடக்கும் வாதங்கள் இரண்டு கருத்துருவாக்கங்களை எதிரணியில் நிறுத்தாமல்
இணைகோட்டில் நிறுத்தும் வாதங்களாகவே கருதுகிறேன். சொற்பமான சிலர் வரலாறு அறியாமல் இரண்டையும்
எதிரணிகளாக கருதி வாதிடுவதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.</span><br />
<br />
<span style="background: white;">சி.பி.எம் தோழர்கள் இன்று அம்பேத்கரின் கருத்துகளை
அதிகமாக அறிந்துகொள்ள விரும்புவதை நானறிவேன். அவர்கள் நடத்தும் இயக்கம் சார்ந்த இதழ்களில்கூட
அம்பேத்கரின் புகைப்படம் அட்டைப் படமாக வர ஆரம்பித்துவிட்டது. பத்திரிகையாளர் மதுஷேட்டே
போன்றவர்கள் லெனின் எழுதிய அரசும் புரட்சியும் புத்தகத்தையும் அம்பேத்கர் எழுதிய
anihalation of caste புத்தகத்தையும் இவ்விரு இயக்கத்தாரும் கட்டாயம் வாசிக்கவேண்டும்
என்று அறிவுறுத்துகிறார்கள். இரு இயக்கங்கள் சார்ந்த போராட்டக் களப்பணி இன்று நீர்த்துப்
போயிருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.<o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><br /><b style="mso-bidi-font-weight: normal;"><span style="background: white;">உங்கள் தந்தையார்
காட்டன் மில்லில் வேலை பார்த்ததை நீங்கள் சொன்னதும் இன்னொரு செய்தியும் நினைவுக்கு
வருகிறது. இந்த மில் தொழில்வளர்ச்சி மும்பையில் ஏற்பட்டதால் மராத்திய தலித்துகளின்
வாழ்க்கையில் மிகப்பெரியமாற்றம் ஏற்பட்டது என்று சொல்லலாமா?</span><br />
</b><br />
<span style="background: white;">உண்மைதான். கிராமங்களில் நிலமற்றவர்கள் நாங்கள். பண்ணையார்களுக்கு
அடிமைகள். எங்கள் உழைப்புக்கு கூலி கேட்கும் உரிமை எங்களுக்கு கிடையாது. ஆனால் இந்த
தொழில் வளர்ச்சி இந்த பண்ணை அடிமைகளுக்கு தொழிலாளர் என்ற புதியமுகத்தைக் கொடுத்தது.
எங்கள் உழைப்புக்கான ஊதியம் கிடைத்தது. உரிமைகளைக் கேட்பது தவறல்ல என்ற அடிப்படை உணர்வை ரொம்பவும்
சாதாரண எழுதப் படிக்கத் தெரியாத அனைவரும் புரிந்து கொண்டோம். எங்கள் தலைமுறையின் கல்விக்கு
இந்தத்தொழில் வளர்ச்சி உதவி யது. மட்டுமல்ல. 60களில் நாராயண் சுர்வேயின் கவிதைகள்-
தொழிலாளர் பிரச்னைகளை முன்வைத்துவெளிவந்தன. பாபுராவ் பாகுல் சிறுகதைத் தொகுப்பு -
'நான் என் சாதியை மறைத்தபோது' - 'jevha mi jaat chorli hoti' வெளிவந்தது. அந்தப்பத்து
சிறுகதைகளையும் பத்துதடவை - மின்சாரம் தாக்கியது - ten electric shocks -என்று சொன்னார்கள்.<o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><br />
<span style="background: white;">இந்த மில்களில் அப்போது நிலவிய தீண்டாமைக் கொடுமைகள்
குறித்து தொழிற்சங்கங்களின் அணுகுமுறை என்னவாக இருந்தது?<span style="font-weight: normal;"><o:p></o:p></span></span></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><br />
<span style="background: white;">அன்றைக்கு காட்டன்மில்களில் சாதியப்பாகுபாடு இருக்கத்தான்
செய்தது. மில் தொழிலாளர்களின் யூனியன்களிலும் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டது என்பதை
மறுப்பதற்கில்லை. அன்றைக்கு யூனியன் ஆபிஸ்களில் கயிறு/ரிப்பன் அல்லது நூல்களால் கோர்க்கப்பட்டிருக்கும்
கோப்புகள் அல்லது காகிதங்களை பல்நுனியால் கடித்து அவிழ்ப்பார்கள். அப்படி பல்லால் கடிக்கும்
குறிப்பிட்டஅந்த வேலைக்கு தலித்துகளை யூனியன் ஆபிஸ்களில் நியமிப்பதில்லை. தலித் எச்சில்
பட்ட காகிதத்தைத் தொடுவது யூனியன் தலைவர்களைத் தீட்டுப்படுத்திவிடும் என்பதுதானே காரணமாக
இருக்கக் கூடும்! இன்றும்கூட களப்பணியாளர்களிடம் சாதியம் காப்பாற்றப்பட்டுக் கொண்டுதானிருக்கிறது.
மேதாபட்கரின் போராட்டங்களில் பங்கேற்றபோது கண்கூடாகக் கண்டேன். களப்பணியிலும் சாலைப்
போராட்டங்களிலும் கலந்து நின்றவர்கள் சாப்பிடும்போது தனித்தனியாகப் பிரிந்து நின்றார்கள்.
தமிழ்நாட்டில் கூட இரட்டைக்குவளை முறை இன்றும் கிராமங்களில் இருப்பதாக வாசித்திருக்கிறேன்.
அதுபோலத்தான் இதுவும். மேதாபட்கரிடம் இதுபற்றி கேட்டபோது 'this is not my problem'
என்று சொன்னதை நினைத்துப் பார்க்கிறேன்.<o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><br />
<span style="background: white;">போராட்டக்களத்திலேயே சாதியம் இருக்கிறது தீண்டாமை நிலவுகிறது
என்றால் மற்ற இடங்களைப் பற்றி சொல்வதற்கு என்ன இருக்கிறது? தலித்துகளுக்காக குரல் கொடுக்கிறார்கள்
என்பதைவிட தலித்துகளுக்கு உதவி செய்வதை தொண்டு மனப்பான்மையுடன் - ஒரு charity அமைப்பு
போல -நடந்துகொள்வதாகவே கருதுகிறேன். காங்கிரசாகட்டும் காந்தியாகட்டும் இன்றைய மேதாபட்கராகட்டும்
இந்த விசயத்தில் ஒரேமாதிரியான மனப்பான்மையுடன்தான் இருந்தார்கள் / இருக்கிறார்கள்.</span><br style="mso-special-character: line-break;" />
<!--[if !supportLineBreakNewLine]--><br style="mso-special-character: line-break;" />
<!--[endif]--><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<b style="mso-bidi-font-weight: normal;"><span style="background: white; font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;">கல்வி நகரமயம் தொழில்மயம் போன்றவற்றால் சாதி ஒழிந்துவிடும்
என்று சில அறிவுஜீவிகள் சொல்வதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?</span></b><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><br />
<span style="background: white;">அன்றுபோல கண்டால் தீட்டு, தொட்டால் தீட்டு என்பதெல்லாம்
மும்பை போன்ற மாநகர வாழ்க்கையில் ஜனநெரிசலில் மிதிபட்டு விட்டது. இதை மட்டும் ஒரு மாற்றமாக
கருதலாமே தவிர சாதியம் செத்துவிட்டது என்று சொல்வதற்கில்லை. லோக்கல் டிரெயினில் அருகருகே
உட்கார்ந்து இன்று எல்லோரும் பயணம் செய்தாலும் பயணம் செய்கிற ஒவ்வொருவரின் அடிமனசிலும்
சாதி வாழ்ந்து கொண்டுதானிருக்கிறது. கிராமத்தில் பண்ணையாருக்கு அடிமையாக வாழ்ந்த தலித்,
நகரவாழ்வில் குடிசைப்பகுதியில்வாழ்ந்தா லும் தினமும் சாலையோரத்தில் குப்பைகளை/ தாள்களை/
ப்ளாஸ்டிக்குகளைப் பொறுக்கிக்கொண்டு ஜீவனம் செய்தாலும் அவன் இங்கே எந்தப் பண்ணையாருக்கும்
அடிமையில்லை! மேலும் தனியார் நிறுவனங்களில் மட்டுமே வேலைவாய்ப்புகள் இருப்பதால் தலித்துகள்
மற்றவர்களுடன் சேர்ந்து தன்னைத் தகவமைத்துக்கொண்டு வேலை வாய்ப்புகளை வசப்படுத்திக் கொள்ளவேண்டிய
சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே ரிசர்வேஷன் காரணமாக இவன் இந்த வேலைக்கு வர முடிந்தது என்று
சொல்லும் காரணங்கள் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது.</span><br />
<br />
<span style="background: white;">அடிமட்ட நிலையில் தலித்துகளுக்கு இதனால் ஏற்பட்டிருக்கும்
பாதகங்கள் அதிகம் என்பது உண்மைதான் எனினும் மும்பை போன்ற மாநகர வாழ்க்கையில் சாதியம்
தன் முகத்தையும் வேஷத்தையும் மாற்றிக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். அதனால்தான்
கிராமத்தை நோக்கிப் பயணம் செய்ய காந்தி போன்றவர்கள் சொன்ன போது பாபாசாகிப் கிராமத்தை
விட்டு நகரத்தைநோக்கிய வாழ்க்கைப் பயணத்தை முன்னிறுத்தினார். இப்படியாக வெளிப்படையாக
சாதியம் மும்பை மாதிரி மாநகரத்தில்தெரிவதில்லை என்பதாலேயே சாதியம் இல்லை, தீண்டாமை
இல்லை என்று சொல்வதெல்லாம் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதாக அமையும். இங்கே இன்றும் திருமணவீட்டிலும்
இழவுவீட்டிலும் சாதி அதற்கான முகம் மாறாமல் அப்படியே வாழ்ந்துகொண்டிருப்பதை நாமறிவோம்.
நம்முடைய குடியிருப்புகளில் கூட தலித்துகளில் பலர் தன் தலித்திய அடையாளத்தை மறைத்துக் கொண்டு
ஏன் வாழ்கிறார்கள்? நகர வாழ்க்கையில் சாதி இல்லை என்றால் அப்படி மறைத்துக்கொண்டு வாழவேண்டிய அவசியம் என்ன?<o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><br />
<span style="background: white;">காட்கோபரில் (மும்பை புறநகர் பகுதி ) அம்பேத்கரின்
சிலை அவமதிக்கப்பட்டதும் அப்போது நடந்தப் போராட்டங்களையும் நினைத்துப் பாருங்கள். மேதாபட்கரின்
பேரணிகளில் களப் போராட்டத் தளத்தில் நிலவும் சாதியம் குறித்து சொன்னதையும் யோசித்துப்
பாருங்கள். எனவே சாதியம் செத்துவிட்டது என்று சொல்வதற்கில்லை. இதைவிடுத்து இன்றைக்கு
கிராமப்புறங்களில் சாதிச்சண்டைகள் தீவிரமாகி இருக்கின்றன. தலித்துகளுக்கு ஏற்பட்டிருக்கும்
விழிப்புணர்வு ஆதிக்கச்சாதியினரை எரிச்சலூட்டுகிறது. பீகார், உத்திர பிரதேச மாநிலங்களில்
மிக அதிகமாக சாதிக்கொடுமைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.</span><br />
<br />
<b style="mso-bidi-font-weight: normal;"><span style="background: white;">அம்பேத்கருக்குப்
பிந்தைய தலித் இயக்கங்கள் அவரது நோக்கங்களைப் பழுதற உள்வாங்கி செயல்படுகின்றனவா?</span></b><br />
<br />
<span style="background: white;">பார்லிமெண்டெரி டெமாக்ரசியில் அமைப்புரீதியாக அம்பேத்கரின்
கருத்துகளை முன்னிறுத்தி அனைத்திந்திய அளவில் செயல்படும் ஓரமைப்பு தலித்துகளுக்கு இல்லை
என்பதாலும் இருக்கிற தலித்திய அமைப்புகள் மாநில அளவில் மட்டுமே இருப்பதாலும் பெரும்பாலும்
தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகளுடன் சேர்ந்தே அரசியல் தளத்தில் நிற்பதாலும் அம்பேத்கரின்
கருத்துருவாக்கங்களை இந்த இயக்கங்கள் முழுமையாக உள்வாங்கிக் கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை
நீங்கள் வைப்பதாக எண்ணுகிறேன். ஆனால் அம்பேத்கரின் கருத்துகள் இந்தியா முழுவதும் பரவி
இருப்பதும் இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் அவருடைய நூல்கள் மொழிபெயர்க்கப் பட்டு அந்தந்த
மாநிலங்களில் விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதையும் அமைப்புகள் போராட்டங்கள் இயக்கங்களுக்கும்
அப்பாற்பட்டு நடந்த ஒரு மிகப்பெரிய புரட்சியாகவே நினைக்கிறேன்.<o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><span style="background: white;"><br /></span></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="background: white; font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;">50, 60 வருடங்களுக்கு முன் 1924 வாக்கில்
காலில் செருப்பு போட அனுமதி மறுக்கப்பட்டவன் காலடியில் விரைந்து ஓடும் காரின்ஆக்ஸிலேட்டர்
வந்துவிட்டதை மிகப்பெரிய மாற்றமாகவே நினைக்கிறேன். இந்த மாற்றங்களுக்கு அடித்தளமாக
இருந்தது அம்பேத்கரின் ஜடியாலஜி தான். அமைப்புரீதியாக அம்பேத்கரின் இயக்கங்களுக்கு
மட்டுமல்ல, கம்யூனிச இயக்கங்கள் எந்தளவுக்கு மார்க்சியத்தை உள்வாங்கிக்கொண்டு செயல்படுகின்றன?
காந்தியத்தை ஏற்றுக்கொண்ட காங்கிரசு எங்கே இருக்கிறது? <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<b style="mso-bidi-font-weight: normal;"><span style="background: white; font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;">அம்பேத்கரின் <span style="mso-spacerun: yes;"> </span>சிந்தனை செயலூக்கத்துடன் நின்று செயலாற்றிய காலம்
என்று எதை மதிப்பீடு செய்கிறீர்கள்?<o:p></o:p></span></b></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><br />
<span style="background: white;">1957 முதல் 1965 வரை அரசியல் களத்தில் செயலூக்கத்துடன்
இருந்த காலம். நிலமற்றவர்களுக்கு வாழ்வாதாரமாக நிலம் வேண்டிநடந்தப் போராட்டத்தில் சற்றொப்ப
3,87,000 பேர் சிறை சென்றார்கள். அரசு அம்பேத்கரிஸ்டுகளின் போராட்டங்களைக் கண்டு அச்சப்பட்டது.
அக்காலத்தில்தான் உ.பி.யில் ரிபப்ளிகன் பார்ட்டியைச் சார்ந்த 3 பேர் அமைச்சர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
1972முதல் 1975வரை மராட்டியத்தில் தலித் பேந்தர்களின் காலம். அப்போது தலித் அல்லாத
ஒத்த சிந்தனையாளர்களும் எங்களுடன் சேர்ந்து பணியாற்றினார்கள். கலை இலக்கியத்தளத்தில்
அம்பேத்கரின் சிந்தனை செயலூக்கத்துடன் எப்போதும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. இந்தியா
முழுமையும் இந்த அலை கலை இலக்கியத் தளத்தில் தொடர்வதைத்தான் மிகவும் பெருமையும்மகிழ்ச்சியும்
தரும் விசயமாக கருதுகிறேன்.<o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><br />
<b style="mso-bidi-font-weight: normal;"><span style="background: white;">இந்தியக்குடியரசுக்
கட்சி இருக்கும்போது 9.7.1972ல் நீங்கள் தனியாக தலித் சிறுத்தைகள் அமைப்பை ஏற்படுத்த
என்ன காரணம்?<o:p></o:p></span></b></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><br />
<span style="background: white;">அமெரிக்காவின் கறுப்பின விடுதலையும் கறுப்பு இலக்கியமும்
என்போன்ற இளைஞர்களுக்கு அதுபோன்ற ஓர் அமைப்பை உருவாக்கி நிறைய சாதிக்கவேண்டும் என்ற
வெறியை ஏற்படுத்தி இருந்த காலக்கட்டம். கலகக்குரலாக கவிதை எழுதுவது மட்டும் இந்தச்
சமூகத்தின் எந்தப் பிரச்னையையும் தீர்த்துவிடாது என்பதையும் உணர்ந்தோம். அப்போதுதான்
நான்,என்னுடன் நாம்தேவ்தசல், ஜே.வி பவார் சேர்ந்து தலித் சிறுத்தைகள் அமைப்பை ஆரம்பித்தோம்.
குடியரசுக் கட்சியின் ஒரு மந்தமான செயல்பாடு எங்கள் வேகத்திற்கு அன்று ஈடுகொடுக்க முடியவில்லை.
அதுவும் ஒரு காரணம்.<o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><br />
<b style="mso-bidi-font-weight: normal;"><span style="background: white;">அவ்வளவு வேகத்துடன்
ஆரம்பிக்கப்பட்ட தலித் சிறுத்தைகள் அமைப்பு ஆரம்பித்த வேகத்திலேயே 1978ல் முடிந்துபோனது
ஏன்? உங்கள் அமைப்பில் அப்படி என்ன பிரச்சனை ஏற்பட்டது? அதைத் தவிர்த்திருக்கலாம்
என்று நீங்கள் எப்போதாவது நினைத்தது உண்டா?<br style="mso-special-character: line-break;" />
<!--[if !supportLineBreakNewLine]--><br style="mso-special-character: line-break;" />
<!--[endif]--></span></b><span style="background: white;"><o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="background: white; font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;">ரொம்ப பெரிதாக எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை.
சின்ன கருத்தியல் முரண்பாடுகள்தான் காரணம். மூன்று விதமான குரல்கள் ஒலித்தன. ஒன்று மார்க்சியவாதிகள்.
எல்லாமே அதற்குள் அடக்கம் என்று நினைப்பவர்கள். அடுத்து தீவிர - கலப்படம் விரும்பாத
தூய அம்பேத்கரிஸ்ட். நமக்கு அம்பேத்கர் மட்டும் போதும் என்றார்கள், மூன்றாவது புத்திஸ்ட்.
பதவி, அதிகாரம் இருக்கும் இடத்தில்தான் விட்டுக்கொடுத்தலும் சமரசமும் தேவைப்படுகிறது.
எங்கள் அமைப்புகளில் அப்படி எதுவுமில்லை. எனவே சமரசத்திற்கு யாரும் தயாரில்லை. இதேநிலை
கம்யூனிச, சோசலிஷ, நக்சல் அமைப்புகளுக்கும் ஏற்பட்டிருக்கிறது. அடுத்தவர்களை உதாரணம்
சொல்வதன் மூலம் நான் எங்களை நியாயப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. இப்போது நினைப்பதுண்டுதான்..
நீங்கள் கேட்பது மாதிரி "தவிர்த்திருக்கலாமோ" என்று. எப்படியோ அது கடந்த
காலம். இப்போதும்கூட தலித் பிரச்சனைகளில் நாங்கள் ஒன்றுபட்டு செயல்படுகிறோம். அடிக்கடி
என்னைச் சந்திக்கும் பலர் தலித் சிறுத்தைகள் அமைப்பின் அவசியத்தை இன்றும் என்னிடம்
சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள்..</span><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><br />
<br />
<b style="mso-bidi-font-weight: normal;"><span style="background: white;">உங்கள் வேகத்துக்கு
இந்தியக் குடியரசுக் கட்சி ஈடுகொடுக்காது என்று சொன்ன நீங்கள் இன்று அதில்தானே இருக்கிறீர்கள்!</span></b><span style="background: white;"><o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><br />
<span style="background: white;">ஆமாம். மராத்திய மாநிலத்தில் வளர்ந்து வரும் சிவசேனா,
விஷ்வ இந்து பரிஷத், மராத்திய நவ நிர்மான் சேனா, பி.ஜேபி என்று மதம்சார்ந்த அரசியல்
சூழலில் ஒரு செக்குலார் அமைப்புக்கான தேவை இன்று அதிகம். அந்த வகையில் நாங்கள் இந்திய
குடியரசுக்கட்சியில் சேர்ந்து எங்கள் செயல்பாடுகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்.<o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><br />
<b style="mso-bidi-font-weight: normal;"><span style="background: white;">குடியரசுக்
கட்சியின் ஒருபிரிவு சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதை எவ்வாறு விளங்கிக்
கொள்வது?</span></b><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><br />
<span style="background: white;">RPI இணைந்து நிற்கவில்லை. Rashtriya republican
party சிவசேனாவுடன் சேர்ந்து நின்றது. இவர்கள் எப்போதுமே சிவசேனாவுக்கு ஜால்ரா அடிப்பவர்கள்தான்.
இது ஒரு பலகீனமான அமைப்பு. ஒரு சில இடங்களில் RPIலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காகப்
பிரிந்த சிலர் சிவசேனையுடன் இணைந்திருக்கலாம்.<o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><br />
<b style="mso-bidi-font-weight: normal;"><span style="background: white;">இந்த நாட்டில்
1/5 ஆக இருக்கின்ற தலித்துகள் இயற்கை வளங்களில், பொதுச்சொத்தில், பொருளாதர வணிகச் செயல்பாடுகளில்
கலை இலக்கிய பண்பாட்டு நடவடிக்கைகளில் உரிய பங்கை அடைவதற்குப் போராடாமல் பிறரோடு சேர்ந்து
சில்லறை அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்காக தலைகளைக் காட்டி பங்கு வாங்கிக்கொள்வதாக
தலித் இயக்கங்கள் வலுகுன்றிப் போயிருப்பதை எப்படி விளங்கிக்கொள்வது?<o:p></o:p></span></b></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<b style="mso-bidi-font-weight: normal;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><br />
</span></b><span style="background: white; font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;">இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆட்சிதான் கைமாறியது.
மக்களாட்சி, அரசியல் சட்ட உரிமை என்றெல்லாம் வந்த பிறகும் ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியல்
அதிகாரத்தைக் கைப்பற்ற எது தடையாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தலித்மக்களில்
படித்த நடுத்தர வர்க்கத்தினர் போராட்டங்களைக் கைவிட்டு அதிகாரத்தைப் பங்கிட்டுக் கொள்ள
அடிப்படைக் கொள்கைகளை மறந்துவிட்டு அரசியல் கட்சிகளுடன் பேரம் பேசி விலை போய்க் கொண்டிருக்கிறார்கள்.
அனைத்திந்திய தலித்திய அரசியலமைப்பு/ அல்லது மாநில தலித் இயக்கங்களை ஒட்டுமொத்த இந்திய
அளவில் ஒன்றணைக்கும் ஓரமைப்பின் தேவையை உணர வேண்டும். அப்படி ஓர் அரசியல் சக்தியாக
மாற்றம் பெற்றால் மட்டுமே நீங்கள் சொல்வதுபோல நமக்கான உரிய பங்கை நாமடைவது சாத்தியப்படக்கூடும்.
அதுவரை அவர்கள் தூக்கி எறியும் எலும்புத் துண்டுகளுக்காக காத்திருக்கும் தெருநாய்களாகத்தான்
நாமிருப்போம். இந்தப் பூர்ஷ்வா அரசு தன் குடிமக்களை வாழவைப்பதும் இல்லை. சாகவிடுவதும்
இல்லை, இரண்டுக்கும் நடுவில் தத்தளிக்கும் வாழ்க்கை. இந்த அரசு வீடு இல்லாதவனுக்கு
தண்ணீர்க்குழாயும் மின்சாரமும் வழங்கும் திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருக்கிறது. இம்மாதிரியான
சூழலில் அம்பேத்கரின் கருத்துகளை முன்னெடுத்துச் செல்லும் அகிலஇந்திய அமைப்பின் தேவையை
நாம் உணர வேண்டும்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><br />
<b style="mso-bidi-font-weight: normal;"><span style="background: white;">இப்போதைய சூழலில்
ஒரு தலித் இயக்கம் அகில இந்திய மட்டத்தில் துவக்கப்படுவதாக இருந்தால் அல்லது இருக்கிற
இயக்கம் தன்னைச் சரிப்படுத்திக் கொள்வதென்றால் அதன் செயல்திட்டத்தில் இடம்பெற வேண்டிய
தலையாய அம்சங்கள் என்று எவற்றைச் சுட்டிக்காட்டுவீர்கள்?</span></b><br />
<br />
<span style="background: white;">அந்தந்த மாநிலத்தின் தலித் இயக்கங்களின் தலைவர்கள்
ஒன்றுகூடி அனைத்திந்திய அமைப்புக்கான தேவைபற்றி பேசவேண்டிய காலக் கட்டமிது. அப்படி ஓரமைப்பு
நிறுவப் பட்டால் மட்டுமே அரசியல் தளத்தில் அதிகாரப்பகிர்வும் உரிமைகளைப் பெறுவதும்
சாத்தியப் படும். அந்த அமைப்பில் ஒத்தக்கருத்துள்ள தலித்தல்லாதவர்களையும் ஒன்றிணைத்துக்
கொண்டு செயல்பட வேண்டும். பாபாசாகிப்கூட சாதியடிப்படையில் மட்டுமே ஒன்றிணைக்கப்பட்டிருக்கும்
இயக்கங்களை முழுமனதுடன் வரவேற்கவில்லை.</span><br />
<br />
<b style="mso-bidi-font-weight: normal;"><span style="background: white;">தலித் அல்லாதவர்களையும்
ஒன்றிணைத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்று சொல்லும் நீங்கள் பகுஜன் மாயாவதி சர்வஜன்
மாயாவதி ஆனதை விமர்சனம் செய்கிறீர்களே, ஏன்?</span><br />
</b><br />
<span style="background: white;">பகுஜன் சர்வஜன் ஆனதால் பகுஜனுக்கும் சரி சர்வஜனுக்கும்
சரி.. என்ன கிடைத்தது? அதனால்தான் சொல்கிறேன் மீண்டும் சொல்கிறேன் ஒத்தக்கருத்துள்ள
தலித் அல்லாதவர்களையும் இணைத்துக் கொண்டு என்று. "ஒத்தக் கருத்துள்ள' (like
minded ) என்ற சொல்லை அடிக்கோடிட்டு வாசிக்கவும். தலித்தல்லாதவர்களை இணைத்துக்கொள்ளும்
போது ஒத்தக்கருத்துள்ளவர்களாக இருக்க வேண்டியது அடிப்படை விசயம். இல்லை என்றால் நம்
தேர்தல் கூட்டணிக்கும் இதற்கும் வித்தியாசமில்லாமல் போய்விடும்!<o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><span style="background: white;"><br /></span></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<b style="mso-bidi-font-weight: normal;"><span style="background: white; font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;">தலித் மக்கள் சக்தி வலுவான அதிகாரமாக இந்திய அரசியலில்
வளர்ச்சி அடையாமைக்கு என்ன காரணம்?<o:p></o:p></span></b></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><br />
<span style="background: white;">தலித் நேஷனல் பார்ட்டி கிடையாது. எல்லோரும் ஏற்றுக்கொண்ட
தலித் தலைமை அம்பேத்கருக்குப் பின் நம்மிடம் இல்லை. பாபாசாகிப் அவர்களுக்கு தேசியஅளவில்
தலித் அமைப்பு ஒன்று வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. டாக்டர் லோகியா, ஆச்சார்ய அதர்லே,
சமாஜ்வாடி எஸ்.என். ஜோஷி ஆகியோருக்கு பாபாசாகிப் கடிதம் எழுதினார். ஆக்கப்பூர்வமாக
அதைச் செய்வதற்குள் அவர் இறந்து விட்டார். தலித் அமைப்புகளின் மாநிலத்தலைவர்கள் உள்ளூரைத்
தாண்டி வரத் தயாராகவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிகள்கூட மாநில வாரியாக தங்கள் கூட்டணிகளை
மாற்றிக்கொண்டாலும் மத்திய அளவில் ஒன்றாக நிற்கின்றன. குறைந்தபட்ச அடிப்படைக் கொள்கைகளின்
அடிப்படையில் அனைத்து மாநில தலித் அமைப்புகளையும் ஒருங்கிணைக்கும் ஓர் அமைப்பு இன்றைய
தேவை. அப்படிப்பட்ட ஓர் அமைப்பு ஏற்படாதவரை தலித் சக்திகளை அரசியல் தலைவர்கள் தங்கள்
தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்வார்கள்.<o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><br />
<b style="mso-bidi-font-weight: normal;"><span style="background: white;">தலித்துகளுக்குள்
நிலவும் சாதிப்படிநிலைகள், உட்சாதிப்பூசல்கள், இட ஒதுக்கீடுக்குள் உள்ஒதுக்கீடு- பற்றி
எல்லாம் என்ன நினைக்கிறீர்கள்?</span></b><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><br />
<span style="background: white;">சாதிப்படிநிலைகள் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும்
இருக்கிறது. தலித்துகளில் இரண்டுவகை. ஒருசாரார் இந்து தலித்துகள். ஜெகஜீவன்ராம் போன்றவர்கள்
இதில் அடங்குவர். ஒன்றை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் அம்பேத்கரை இந்து தலித்துகள்
ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை! மகர்கள்தான் ரிசர்வேசனை அனுபவித்து முன்னேறி இருக்கிறார்கள்.
மாத், மதங் என்று இங்கேயும் உட்சாதி இட ஒதுக்கீடு குரல்கள் கேட்கின்றன. உள் ஒதுக்கீடுகளில்
உள்ள சில நியாயங்களை இந்துத்துவவாதிகள் திசைதிருப்பி ஆதாயம் தேடிக் கொள்வதை அனைத்து
தலித் உட்சாதிப்பிரிவினரும் புரிந்துகொள்ள வேண்டும்.</span><br />
<br />
<b style="mso-bidi-font-weight: normal;"><span style="background: white;">ஒரு சேமநல
அரசாக இந்திய அரசு முழுமை பெறுவதற்குள் உலகமயமாதலில் கால்வைத்து விட்டது. இன்று அரசானது
சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் ஓர் ஏஜென்சியாக மாறிவிட்டது. எனவே ஒடுக்கப்பட்டோர் நலனில்
தனித்த அக்கறை செலுத்த வேண்டும் என்பது பேச்சளவிலும் கூட கைவிடப்பட்டு வருகிறது. இட
ஒதுக்கீடு நடைமுறையில் முடக்கப்பட்டுவிட்டது. ஏற்கனவே தொழில் வணிகம் போன்றவற்றில்
தலித்துகளுக்கு வாய்ப்பு குறைவு. மிகுந்த சவால்களுடன் கூடிய இந்த நிகழ்காலத்தை தலித்துகள்
எவ்வாறு கடப்பது?</span></b><span style="background: white;"><o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="background: white; font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><br />
இந்திய அரசு உலகமயமாதலில் நுழைந்தது சரியா தவறா என்று பேசுவது இனி அர்த்தமில்லாதது.
வெகுதூரம் வந்தாகிவிட்டது. உலகமயமாதலில் இருந்து இனி நாம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும்
வெளிவருவது சாத்தியமில்லை. <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="background: white; font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="background: white; font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;">அமெரிக்காவிலிருந்து அறிவியலையும் அணு
ஆயுதத்தையும் ஹை டெக்னாலஜியையும் இறக்குமதி செய்திருக்கும் நாம் அமெரிக்க அரசின் சில
மனித உரிமைக் கொள்கைகளையும் தனியார் நிறுவனங்களிலும் கறுப்பர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும்
முன்னுரிமையையும் சேர்த்தே இறக்குமதி செய்திருந்தால் நல்லது. <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><br />
<span style="background: white;">ஆனால் உலகமயமாதல் என்றால் அமெரிக்காவுக்கு அடிமையாதல்
என்பதல்ல. அந்தப் புரிதல் நமக்கு வேண்டும். உலகமயமாதல் என்றால் நம் இயற்கை வளங்களை
அடுத்தவன் கொள்ளை அடிக்க விட்டுவிட்டு நிற்பதல்ல. மக்கள் சக்தியை ஒன்று திரட்டினால்
நம்மால் சில அழிவுகளிலிருந்து காத்துக்கொள்ள முடியும். மராட்டியத்தில் விடியோகோனின்
சிறப்பு பொருளாதார மண்டலத்தை மக்கள் சாலையில் இறங்கி தடுத்து நிறுத்திவிட்டார்கள்.
இவை எல்லாம் நம்பிக்கை தரும் செய்திகள். எனினும் இன்றைக்கு தலித்துகளிடம் போராட்டக்குணம்
நீர்த்துப்போய்விட்டதோ என்ற அச்சம் எனக்குண்டு. எங்கள் போராட்டங்களைக் கண்டு அரசும்
ஆட்சியாளர்களும் அச்சப்பட்ட காலம் ஒன்றுண்டு. அன்றைக்கெல்லாம் ஒரு பிரச்சனை என்றால்
சாலையில் இறங்கி நின்று போராடிய பொதுமக்கள் இன்றில்லை. தலித்துகளின் வளர்ச்சியில் ஏற்பட்டிருக்கும்
நடுத்தர வர்க்கம், உயர் நடுத்தர வர்க்கம் சார்ந்தவர்கள் இன்றைக்கு குடிசைவாழ் தலித்துகளுக்காக
போராட சாலையில் இறங்கத் தயாராக இல்லை. போராட்டக்குணம் குறைந்துவிட்டது. இன்றைய சூழலில்
மக்கள் சக்தியை ஒன்றுதிரட்டுவதன் மூலமே நம்மை நோக்கியிருக்கும் சவால்களை எதிர்கொள்ள
முடியும். ஆனால் அதுவே காணாமல் போய்க் கொண்டிருக்கிறதோ என்ற அச்சம் கவலை தருகிறது.<o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><br />
<b style="mso-bidi-font-weight: normal;"><span style="background: white;">தலித் பெண்களின்
தனித்துவமான பிரச்சனைகள் என்று எவற்றை அடையாளப்படுத்துவீர்கள்? தலித் இயக்கங்கள் அவற்றைக்
கவனத்தில் கொண்டுள்ளனவா?<o:p></o:p></span></b></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><br />
<span style="background: white;">போராட்டகளத்தில் நிற்கும் ஒவ்வொரு தலித் ஆண்மகனின்
வீட்டிலிருக்கும் பெண்களும் அதே போராட்டகளத்தில் நிற்கும் தலித் அல்லாத ஆண்மகனின் வீட்டிலிருக்கும்
பெண்களும் அடிப்படையில் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனையை நாங்கள் கவனத்தில் கொண்டிருக்கிறோம்.
தலித் போராடினால் அவனை அடக்க அவன் வீட்டுப் பெண்டு பிள்ளைகளை வன்கொடுமை செய்கிறார்கள்.
அன்று முதல் இன்றுவரை தொடரும் கதை இது. தலித் அல்லாத ஆண்மகனின் வீட்டுப் பெண்களுக்கு
அடிப்படையில் இந்தப் பிரச்சனை அதிகமாக இருப்பதில்லை. பெண்ணியம் பேசும்போதும் தலித்
பெண்களின் பிரச்சனைகளை தனித்துவப்படுத்தி இன்று தலித் பெண்கள் முன்வந்து பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
இயக்கங்கள் இவற்றை என்றைக்குமே புறக்கணித்ததில்லை.<o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><br />
<b style="mso-bidi-font-weight: normal;"><span style="background: white;">ஆனால் தலித்திய
இயக்கங்களில் பெயர் சொல்லும்படியாக பெண்கள் இல்லையே? ஏன்? நீங்கள் ஆரம்பித்திருந்த
தலித்பேந்தர் அமைப்பிலும் பெண்கள் நிர்வாகத்தில் இருந்ததாகத் தெரியவில்லையே?</span></b></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><br />
<span style="background: white; font-weight: normal;">பெண்கள் நிர்வாகத்தில் முன்வரவில்லை. தலைமைப் பொறுப்பேற்க
முன்வரவில்லை. தலித் பேந்தரிலும் தலைமைக்கு வரவில்லை என்பதையெல்லாம் ஏற்றுக்கொள்கிறேன்.
ஆனால் சாலையில் இறங்கிப் போராட்டமா, பேரணியா.. பெரும்பான்மையான பெண்கள் அக்காலக் கட்டங்களில்
கலந்துகொண்டார்கள். இன்று நிலைமை ஓரளவு மாறி வருகிறது. தலைமைக்கு வரவும் நிர்வாகப்பொறுப்புகளை
ஏற்கவும் பெண்கள் தயாராகிவிட்டார்கள்.<o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><br />
<b style="mso-bidi-font-weight: normal;"><span style="background: white;">இங்கு சிலைகளை
வைத்து நடக்கும் அரசியல் அறிந்ததுதான். இதுவரை அரசாங்கங்களும் கட்சிகளும் வைத்துள்ள
பெரும்பாலான சிலைகள் தலித்தல்லாதவர்களுடையதே. ஊடகங்களில் வெளியாகும் அரசுத்துறை விளம்பரங்களில்
ஆளுயரத்திற்கு நின்று புன்னகைப்பதும் இவர்களே. விபத்தில் மறைந்த ராஜசேகர ரெட்டிக்கு
12,000 சிலைகளை ஆந்திரா முழுக்க வைக்கப்போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. அரசாங்கமோ,
கட்சிகளோ அவை செலவழிக்கிற தொகை பொதுமக்களுடையதுதான். ஆனால் இதையெல்லாம் விரயமென்று
பேசாத பொதுநல விரும்பிகள், நீதிமன்றங்கள் எல்லாம் மாயாவதியின் சிலைவைப்பு முயற்சிக்கு
இப்படி கொந்தளிப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?<o:p></o:p></span></b></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><br />
<span style="background: white;">ரொம்ப சிம்பிள். அவர் ரெட்டி, இவர் மாயாவதி. மாயாவதி
ரெட்டியாக இருந்திருந்தால் இந்தக் கேள்வியே வந்திருக்காது. இந்த இடத்தில் இன்னொரு செய்தியையும்
சொல்லியாக வேண்டும். உ.பி.யில் தலித்துகளுக்கும் பிற சிறுபான்மை மக்களுக்கும் செய்யவேண்டிய
உருப்படியான காரியங்கள் நிறைய இருக்கிறது. மாயாவதி தன் அதிகாரத்தையும் ஆற்றலையும் காட்டவும்
நிலைநிறுத்தவும் களங்கள் பல உ.பி.யில் இருக்கின்றன. எனவே இந்த சிலை விவகாரத்தில் எல்லாம்
தன் நேரத்தையும்ஆற்றலையும் வீணடிக்கக் கூடாது. தொலைநோக்குப்பார்வையுடன் கூடிய எதிர்காலத்
திட்டங்களில் அவர் கவனம் செலுத்த வேண்டும்.</span><br />
<br />
<b style="mso-bidi-font-weight: normal;"><span style="background: white;">மாயாவதியின்
அரசியல் வெற்றி தலித் சமூகத்தின் வெற்றியா?</span></b><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><br />
<span style="background: white;">இல்லை. மாயாவதியின் அரசியல் வெற்றிகளை நாமும் ஊடகங்களுடன்
சேர்ந்து பாராட்டலாம். ஆனால் ஊடகங்கள் சொல்வதுபோல அவர் தலித்துகளின் அடையாளம் அல்ல.
இந்த வெற்றியை அடைய அவர் கொடுத்திருக்கும் விலை என்ன ? அவரை ஆதரிக்கும் புனே டி.எஸ்.
குல்கர்னி ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர். மாயாவதி தேர்தலில் நிறுத்திய நாசிக் 'மகந்த' ஒரு
ஆர்.எஸ்.எஸ்.காரர். இந்த மாதிரி விலையைக் கொடுத்து மாயாவதி தலித் சமுதாயத்திற்கு என்ன
செய்துவிடப்போகிறார்? அண்மையில் தாதர் சிவாஜி பார்க் கூட்டத்திற்கு வந்தவர் அங்கிருக்கும்
அம்பேத்கரின் சைதன்ய பூமிக்குக்கூட போகவில்லை! she lost her dalit idealogy.</span><br />
<br />
<b style="mso-bidi-font-weight: normal;"><span style="background: white;">சைதன்யபூமி
கிட்டத்தட்ட ஒரு வழிபாட்டுத்தலம் போலதானே இருக்கிறது? செருப்பு போட்டுக்கொண்டு போகக்கூடாது,
மெழுகுவர்த்தி ஏற்றி வழிபடுவது, பூ வாங்கி அர்ச்சனை செய்வது இத்யாதி காட்சிகளைப் பார்க்கிறோமே..
அம்பேத்கரை நாம் கடவுள் ஆக்கிவிட்டோமோ?</span><br />
</b><br />
<span style="background: white;">சைதன்யபூமிக்கு வருகிறவர்களுக்கும் திருப்பதிக்கு போய்
வருகிறவர்களுக்குமான வித்தியாசத்தை புரிந்துகொள்ள வேண்டும். எதையும் வேண்டி கேட்டு,
கேட்டது கிடைத்துவிட்டால் அதற்குக் கைமாறாக எதையாவது செய்து தன்னையும் தன் கடவுளையும்
ஏமாற்றிக் கொள்ளும் கூட்டமல்ல சைதன்யபூமிக்கு வருபவர்கள். அன்பை, மரியாதையை தங்களுக்குத்
தெரிந்தவகையில் வெளிக் காட்டும் மக்கள். தங்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய
ஒரு தலைவனுக்கு தங்கள் நன்றியை மட்டும் காட்டவரும் மக்கள். மும்பையில் பிறந்து வளரும்
நம் வீட்டு பிள்ளைகள் சாதியம் தெரியாதவர்களாக ஏன் சாதியற்றவர்களாக இருக்கிறார்கள்.
சாதியற்றவர்கள் என்று சொல்வதில் பெருமைதான் எனினும் சாதிப் படிநிலை மாறாத இச்சமூக அமைப்பில்
அவர்களுக்கான இடம்..<o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><br />
<span style="background: white;">இன்று நம்மைப் போன்ற பலர் குடும்பத்தில் இப்பிரச்சனையை
எதிர் கொள்ள வேண்டியுள்ளது. அமெரிக்கன் சிலிக்கன் வேலியில் டாலராக சம்பாதிக்கும் அவாள்
வீட்டுக்குழந்தைகள் தங்கள் மேனிலையைக் காப்பாற்றிக்கொள்ள டாலர் டாலராக விஷவ இந்து பரிஷத்
மாதிரி அமைப்புகளுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். நம் தலித்துகளிடம் தான் நவ தலித்
பிராமணர்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். நம் குடியிருப்பில் எத்தனை தலித்துகள் இருக்கிறார்கள்
தெரியுமா உங்களுக்கு? உங்களையும் என்னையும் போல அவர்கள் தம்மை தலித் என்று சொல்லிக்
கொள்வதில்லை. தங்கள் அறிவு, பணம், பதவி இந்த சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்கு
பயன்பட வேண்டும் என்ற சமூக விழுமியத்தை நாம் நம் குடும்பங்களின் தனிமனித விழுமியமாகக்
கடைபிடிக்க வேண்டும்.<o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><br /></span></div>
<div style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; text-align: center;">
<span style="font-family: "Arial Unicode MS", sans-serif;">II</span></div>
<br /><div style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; text-align: justify;">
<span style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; font-weight: normal;"><span style="font-size: small;">இந்து மதத்தின்
பிடியிலிருந்து தம்மக்களை விடுவிப்பது என்ற அம்பேத்கரின் அடிப்படை நிலைப்பாட்டை பல
தலித்இயக்கங்கள் கைவிட்டுவிட்டது எதனால்? இந்துமதம் அவற்றையும் உட்செரித்துக் கொண்டதா?</span></span></div>
<div style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px;">
</div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><br />
<span style="background: white;">மிகவும் விரிவாக பேசப்பட வேண்டிய விசயம் இது. பாபாசாகிப்
one man one vote என்று அரசியல் சட்டத்தின் மூலம் சமஉரிமை கொடுத்த பிறகுதான் பவுத்தம்
தழுவினார். அப்படியானால் அரசியல் சட்டம் மட்டுமே சமூகத்தில் சம உரிமையை தம் மக்களுக்கு
கொடுக்க முடியாது என்பதில் அவர் தெளிவாக இருந்தார். மராட்டியத்தில் தலித்துகள் மகர்,
சம்பார், மாத் என்று மூன்று பெரும்பிரிவுக்குள் அடங்குவர். இதில் மகர் பிரிவினர் முதலில்
அம்பேத்கரின் கருத்துகளை ஏற்றுக்கொண்டு சமூகத்தளத்தில் சம உரிமைப் போராட்டக்களத்தில்
முன்நின்றார்கள். அதனால்தான் காங்கிரசு இயக்கம்கூட மகர் அல்லாத ஜெகஜீவன்ராம் அவர்களை
அம்பேத்கருக்கு எதிராக நிறுத்துவதற்காகவே வளரவிட்டது. இந்தப் பிரிவுகளில் ஒருசாரார்
அம்பேத்கரை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டினார்கள். இன்றும் அவர்களைப் பயன்படுத்திக்
கொண்டுதான் சிவசேனை, பாரதிய ஜனதா போன்ற இந்துத்துவ அமைப்புகள் "இந்து தலித்துகள்"
என்ற முத்திரையுடன் நம் மக்களைப் பிளவுபடுத்தி இருக்கிறார்கள். அம்பேத்கர்கூட அரசியல்
களத்தில் அவருடன் எவ்விதத்திலும் ஒப்புமைப்படுத்த தகுதியில்லாத வேட்பாளருடன் போட்டியிட்டு
மும்பையில் தோல்வி அடைந்திருக்கிறார். இதை ஏன் சொல்கிறேன் என்றால் தலித் அரசியல் இயக்கங்களையும்
பவுத்தத்தையும் இணைத்து பார்க்கும் யதார்த்தத்தில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளை யோசித்துப்
பாருங்கள்.<o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><br />
<span style="background: white;">ஒரு உதாரணத்திற்கு சொல்கிறேன். நானே சட்டசபை தேர்தலில்
நிற்பதாக வைத்துக்கொள்வோம். என் தொகுதியில் இருக்கும் அனைத்து வாக்காளர்களையும் சந்திக்கும்போது
அதில் சிலர் கணபதி கோவிலுக்கு அழைத்து அர்ச்சனை செய்யலாம். சிலர் மசூதிக்கு அழைக்கலாம்.
அவர்களுடன் சேர்ந்து நோன்பு கஞ்சி குடிக்கலாம்... இதை எல்லாம் எவ்விதமான தடைகளுமின்றி
இந்துமத வேட்பாளரால் செய்ய முடிகிறது. இதையே நான் செய்தால் அது கேள்விக்குறி ஆவது தவறு.
இன்னொரு முக்கிய விசயத்தையும் கவனிக்கத் தவறி விட்டோம். நீங்கள் (புதியமாதவி) படித்தவர்,
தொலைக்காட்சி பார்க்கவும் நேரமில்லாமல் வாசிப்பு, கருத்தரங்கு, இலக்கியம் என்று உங்கள்
நேரத்தைக் கழிக்க முடிகிறது. ஆனால் பெரும்பான்மையான மக்கள் கதி? அவர்களுக்கான வடிகால்?
எனக்குத் தெரிந்து பவுத்தம் தழுவிய நன்கு படித்த குடும்பங்கள்கூட வெளியில் பவுத்தம்
சார்ந்தும் குடும்பத்தின் பழக்கவழக்கங்கள், சடங்கு சம்பிரதாயங்களில் ஒரு இந்துவாகவும்
இருக்கிறார்கள். கண்பதி உற்சவங்கள், தசரா கொண்டாட்டத்தின் ஆடல் பாடல்கள், தயிர்ப்பானை
உடைக்கும் கோவிந்தா கோவிந்தா விளையாட்டு... இப்படியான கொண்டாட்டங்களை தன்னுள் வைத்திருப்பதால்
சாதாரண மனிதனுக்கு, கொண்டாட்டங்களுடன் கூடிய வாழ்க்கையை அனுபவிக்க ஏங்கிக்கொண்டிருக்கும்
வெகுமக்களுக்கு இந்துமதத்தில் இம்மாதிரியான வடிகால்கள் இருக்கின்றன.<o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><br />
<span style="background: white;">பவுத்தத்தில் புத்தபூர்ணிமா, அம்பேத்கர் ஜெயந்தி தவிர்த்து
கொண்டாட எதுவுமில்லை. ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையை கொண்டாட்டங்களுடன் மகிழ்ச்சியுடன்
அனுபவிக்கவே விரும்புகிறான். அந்த உளவியலை மிகவும் சரியாகப் புரிந்து கொண்டதால் மட்டுமே
இந்துமதம் இத்தனை எதிர்ப்புகளையும் தாண்டி இன்றும் மக்களைக் கவர்ந்து கொண்டிருப்பதாக
நினைக்கிறேன்.<o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><br />
<span style="background: white;">பவுத்தம் ஒரு மதம் அல்ல, அது ஒரு வாழ்வியல் முறை, அறிவியல்
சார்ந்த பகுத்தறிவு சார்ந்த ஒரு வாழ்க்கை முறை. பவுத்தத்தில் புத்தபகவானிடம் நீங்கள்
வரமெல்லாம் கேட்கும் வாய்ப்புகளே இல்லை! தனிமனிதன் கடவுளை நம்புவதும் கும்பிடுவதும்
பேரம் பேசுவதும் எனக்கு நீ இதைக் கொடு நான் உனக்கு இந்தப் பூஜை செய்கிறேன் என்றெல்லாம்
கேட்பதும் பவுத்தத்தில் சாத்தியமே இல்லை. தனிமனிதனை, அவனது சிந்தனைகளையும் மீறிய சில
உளவியல் தாக்கங்கள் ஆட்சி செய்துகொண்டிருக்கின்றன. இந்த இடத்தில்தான் வெகுஜனமும் அவர்களின்
உளவியலும் பவுத்தம் போன்ற அறிவியல் சார்ந்த பகுத்தறிவு வாழ்வியலுக்கே சவாலாக அமைந்துவிடுகிறது.
இதில் பார்த்தீர்கள் என்றால் இன்னொரு வேடிக்கை. என்னவோ விவரம் தெரியாத நம்வீட்டு பெண்களோ
முதியவர்களோ மட்டும் இப்படி இருக்கிறார்கள் என்று சொல்வதற்கில்லை. அறிவியலில் கரைகண்ட
இன்றைய நம் இளைய தலைமுறையும் பவுத்தத்தைப் புரிந்துகொண்டும் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்
என்று ஒத்துக்கொண்டும் தசரா கொண்டாட்டத்தில் ஆடுகிறார்கள், பாடுகிறார்கள்.. அம்மாதிரியான
கொண்டாட்டங்கள் அவர்களுக்கும் பெரிதும் தேவைப்படுகிறது..<o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><br />
<span style="background: white;">ஒருகாலத்தில் தலித்துகள் கும்பிட்ட சிறுதெய்வங்கள்
காணாமல் போய்விட்டன. அவர்களைப் போலவே இருந்த அவர்களின் கோரமுக தெய்வங்களை அவர்கள் மறந்து
பலகாலம் ஆகிவிட்டது. அலங்காரங்களுடன் கூடிய பெருந்தெய்வ வழிபாட்டுக்கு வந்து விட்டார்கள்.
உங்களுக்குத் தெரியுமா.. பத்துப்பதினைந்து வருடத்திற்கு முன் மும்பையில் சித்தி விநாயகர்
கோவில் குறித்து யாருக்கும் தெரியாது. இன்று பாருங்கள் அந்தக் கோவிலுக்கு வந்திருக்கிற
மவுசை! (நான்: ஆமாம்.. அசோக்சவான்கூட முதலமைச்சரானவுடன் சித்தி விநாயகர் கோவிலுக்குப்
போய் அர்ச்சனை செய்திருக்கிறாரே.. பார்த்தீர்களா..?)<o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><br />
<span style="background: white;">ஒரு மதமும் அது சார்ந்த கருத்துருவாக்கமும் பொதுமக்களிடம்
பரவ அரசு எந்திரங்களும் பெரும் பங்கு வகிக்கின்றன. சக்கரவர்த்தி அசோகர் பவுத்தம் தழுவிய
பின் இந்திய மண்ணில் பெரும்பகுதி அவர் அரசாட்சியில் இருந்ததால் பவுத்தம் வேகமாகப் பரவியது.என்னதான்
செக்குலர் பேசினாலும் இந்திய அரசும், ஊடகங்களும் இந்துத்துவா சார்ந்தே இயங்கிக் கொண்டிருக்கின்றன.
இம்மாதிரியான புறம் சார்ந்த காரணிகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். பல சமயங்களில்
இதனால் தான் நான் அடிக்கடி சொல்வதுண்டு, இயக்க அரசியலையும் தனிமனித மத நம்பிக்கைகளையும்
சேர்த்து குழப்பிக் கொள்ளக் கூடாது. மதம் அகம்சார்ந்தும் அரசியல் புறம் சார்ந்தும் சமூகத்தை
இயக்கிக் கொண்டிருக்கின்றன. ஒன்றை இன்னொன்று ஆட்சி செய்யவோ அடக்கி ஆளவோ முயற்சிக்கும்
போது கலவரங்கள் நடக்கின்றன.</span><br />
<br />
<b style="mso-bidi-font-weight: normal;"><span style="background: white;">எனில் அம்பேத்கரின்
பவுத்த மதமாற்றம் தோல்வி அடைந்து விட்டதா?</span></b><span style="background: white;"><o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><br />
<span style="background: white;">இல்லை. அது அன்றைய தேவை. இன்று பவுத்தம் அடுத்தக் கட்ட
நகர்வுக்கு/ மாற்றத்திற்கு உள்ளாக வேண்டிய தேவைவந்திருக்கிறது.<o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><span style="background: white;"><br /></span></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<b style="mso-bidi-font-weight: normal;"><span style="background: white; font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;">பவுத்தம் தழுவிய தலித்துகளை இன்றும் neo
buddist என்று தனித்து தான் அடையாளப்படுத்துகிறார்கள். எனவேமதமாற்றம் தீர்வாக இருக்க
முடியாது என்பதைப் புரிந்துகொண்ட சூழலில் தலித்துகள் எல்லா மத அடையாளங்களையும் துறக்கவேண்டிய
நிலை உருவாகியுள்ளதா?</span></b><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><br />
<br />
<span style="background: white;">எல்லா மத அடையாளங்களையும் துறப்பது என்ற தீர்வு என்றைக்குமே
வெகுஜனத்திற்கான தீர்வாக இருக்கவே முடியாது. எனவேதான் தலித்துகள் அனைவரையும் நாத்திகராக்காமல்
பாபாசாகிப் அறிவியலும் பகுத்தறிவும் சார்ந்த வாழ்வியல் தத்துவங்களைப் போதித்த பவுத்தம்
தழுவினார்.</span><br />
<br />
<b style="mso-bidi-font-weight: normal;"><span style="background: white;">நீங்கள் பவுத்தம்
ஏற்றபின் உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றம் கண்டீர்கள்? உங்களை நியோ புத்திஸ்ட் என்றுதானே
அழைக்கிறார்கள்?</span></b><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><br />
<span style="background: white;">50 வருடங்களில் மிகப்பெரிய மாற்றங்களை, நம்பிக்கையை,
சுயமரியாதையை, உத்வேகத்தை ஆற்றலை எங்களுக்கு பவுத்தன் என்ற அடையாளம் கொடுத்திருக்கிறது.
உலக வரலாற்றில் இந்த மாதிரி ஒன்றை உங்களால் சொல்ல முடியாது. அதனாலேயே எல்லா கொடுமைகளும்
முடிவு பெற்றுவிட்டது என்று நாங்கள் நினைத்து எங்களை ஏமாற்றிக்கொள்ளவில்லை. பவுத்தம்
ஏற்ற கயர்லாஞ்சி பய்யாலால் கதை உங்களுக்குத் தெரியும். ஆனால் அதற்காக அவர்களுக்காகப்
போராடும் உத்வேகத்தை அறிவாற்றலை எங்களுக்கு பவுத்தம் கொடுத்திருக்கிறது.</span><br />
<br />
<b style="mso-bidi-font-weight: normal;"><span style="background: white;">சாதியொழிப்பு
சாத்தியம்தானா? அல்லது அதை ஒரு தொலைதூர லட்சியமாக வைத்துக் கொண்டு சாத ஒடுக்குமுறைக்கு
எதிராக தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்பதில் தலித்துகளின் ஆற்றல் கழியுமா?</span></b><span style="background: white;"><o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><br />
<span style="background: white;">புத்தர் காலத்திற்கு முன்பே சாதி அமைப்பும் தீண்டாமையும்
சமூகத்தில் வந்துவிட்டது. 2500 ஆண்டுகால ஒரு சமூக அமைப்பை மாற்றுவதும் மக்கள் அடிமனதில்
ஊறிப்போன சாதிய வேர்களை அறுப்பதும் அவ்வளவு எளிதான காரியமல்ல. இது ஒரு தொடர்போராட்டம்தான்.
சரி, நீங்கள் கேட்பது போல இப்படியான தொடர் போராட்டங்களில் நம் ஆற்றல் கழியுமா என்றால்
இல்லை. இந்தப்போராட்டங்கள் தான் நம் மக்களைத் தூக்கிப்பிடித்து தாங்கி நிற்கும் தூண்கள்.
இவை சரிந்துவிட்டால் ஏறிய உயரத்தைவிட வேகமாக அதல பாதாளத்தில் மீண்டும் நாம் தள்ளப்படுவோம்.
மொரிஷியஸ் தீவுக்குப் போனவர்கள் இன்று தங்கள் மூதாதையரின் சாதிஅடையாளத்தைத் தேடி அலைவதாக
வாசித்திருக்கிறேன். இந்துமதம் இருக்கும்வரை இந்தியாவில் சாதியும் இருக்கும்.<o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><br /></span></div>
<div style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; text-align: center;">
<span style="font-family: "Arial Unicode MS", sans-serif;">III</span></div>
<div style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif;">
</div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><br />
<b style="mso-bidi-font-weight: normal;"><span style="background: white;">தலித் இலக்கியம்
புழக்கத்திலிருந்த மையநீரோட்டத்தில் இணைந்து விட்டதா? அல்லது தனித்துவத்தோடு வளர்நிலையை
எட்டியிருக்கிறதா?</span></b><span style="background: white;"><o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><br />
<span style="background: white;">தலித் இலக்கியம் மைய நீரோட்டத்தில் இணைந்துவிட்டது
என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏனெனில் தலித் இலக்கியம்இலக்கியத்தின் ஒருவகை. மராட்டிய
இலக்கியத்தை எடுத்துக் கொண்டால் அதில் தலித் இலக்கியம் என்பது மராட்டிய இலக்கியத்தின்
ஒருவகை. மற்ற இலக்கியங்களில் ஏற்பட்டிருக்கும் இசம், உத்தி மாற்றங்கள் தலித் இலக்கியத்திலும்
மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.<o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><br />
<b style="mso-bidi-font-weight: normal;"><span style="background: white;">தலித் இலக்கியம்
வடிவத்திலும் பேசுபொருளிலும் அடைந்துள்ள மாற்றங்கள் என்று எவற்றை அவதானிக்கிறீர்கள்?</span></b><br />
<br />
<span style="background: white;">மராத்தி இலக்கியத்தை உலகத்தரம் வாய்ந்த இலக்கியமாக்கியதில்
தலித் படைப்பாளர்களின் பங்கு மகத்தானது. ஆரம்பகாலங்களில் எடு துப்பாக்கியை, வெடிக்கட்டும்
தோட்டா, குண்டுமழை, ரத்தம், காயம் என்று எழுதிக் கொண்டிருந்தோம். இன்றுஅப்படி எழுதுவதில்லை.
இலக்கியத்தின் அனைத்து உத்திகளையும் தலித் இலக்கியம் தனக்குள் வாங்கி செரித்து நிற்கிறது.
மத்தியவர்க்கம், உயர்தர மத்திய வர்க்கம், கூட்டுக்குடும்பச் சிதைவு, உலகமயம் என்று பல்வேறு
தடங்களில் கிளை பரப்பி நிற்கிறது. பெண்கவிஞர்களின் பங்களிப்பு பெருமை சேர்த்துள்ளது.
சத்யா பவார், ஊர்மிளா பவார் எழுத்துகளை எல்லாம் குறிப்பிட்டு சொல்லலாம். இன்னொரு பெரிய
மாற்றம் அன்று எழுதியவர்கள் இயக்கம் சார்ந்த களப்பணியாளர்கள். இன்று அப்படியில்லை.<o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><br />
<b style="mso-bidi-font-weight: normal;"><span style="background: white;">தலித் இலக்கியத்தை
பௌத்த இலக்கியமாக நீங்கள் ஏன் ஏற்றுக் கொள்வதில்லை?<o:p></o:p></span></b></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><br />
<span style="background: white;">தலித் இயக்கம் தலித் இலக்கியம் என்பது ஓர் உணர்வு,
சமூக மாற்றத்தை விரும்பும் ஓரியக்கம். இதற்குள் பௌத்த இலக்கியமும் இடம் பெறலாமே தவிர
தலித் இலக்கியத்தை பௌத்த இலக்கியமாக அடையாளப்படுத்தமுடியாது.<o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><br />
<b style="mso-bidi-font-weight: normal;"><span style="background: white;">தலித் படைப்புகள்
ஒரே சாயலில் - ஸ்டீரியோ டைப்- ஆக இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு பொதுவாக வைக்கப்படுகிறதே?<o:p></o:p></span></b></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><br />
<span style="background: white;">ஆரம்பகாலங்களில் இப்படி எல்லாம் சொல்லிப் பார்த்தார்கள்.
இன்றைக்கு மகர்களின் படைப்புகளை வாசித்துவிட்டு மராத்தாக்களும் தங்கள் யதார்த்த வாழ்க்கையை
எழுதத் துணிந்தார்கள் என்பதுதான் உண்மை. புதிய சொல்லாக்கங்களை, பழைய சொற்களுக்குப்
புதுப்புது அர்த்தங்களை எங்கள் படைப்புகள் தான் மராத்திய மொழிக்கு கொடுத்திருக்கிறது.
இன்றைக்கு மராத்திய அரசு தலித் இலக்கிய சொல்லாடல்களுக்கு தனி அகராதியே கொண்டுவரப்
போகிறது என்றால்.. அந்தளவுக்கு இந்த மொழியை நாங்கள் வசப்படுத்தியிருக்கிறோம்!</span><br />
<br />
<b style="mso-bidi-font-weight: normal;"><span style="background: white;">நாராயண் சுர்வேயின்
கவிதைகள் ஃபக்தா சிறுபத்திரிகையில் வெளிவந்தன. சிறுபத்திரிகைகளின் பங்களிப்பையும் மராத்திய
இலக்கியத்தில் ரொம்பவும் முக்கியமானதாகச் சொல்கிறார்கள். உங்கள் கருத்து என்ன?</span></b><span style="background: white;"><o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><br />
<span style="background: white;">உண்மைதான் சிறுபத்திரிகைகளின் பங்களிப்பு அதிகம். நான்கு
நண்பர்கள் சேர்ந்தால் உடனே ஒரு சிறுபத்திரிகை ஆரம்பிப்பது, சிலகாலம் வரும் பிறகு நின்று
போவது எல்லாம் நடந்தது. கோபங் கொண்ட இளம் தலைமுறையினரால் ஆரம்பிக்கப்பட்ட சிறு பத்திரிகைகள்
நாளடைவில் தனிநபர் ஆதிக்கத்துக்குட்பட்டன. அதனால் அந்த இயக்கம் தோற்றுப்போனது என்று
வைத்துக் கொண்டாலும் சதீஸ் கலேஸ்கர், துளசிபரப், ராஜா தலே என்று பல எழுத்தாளர்களை அடையாளம்
காட்டியதில் அதன் பங்கு மகத்தானது.<o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><br />
<span style="background: white;">மூன்றுவகையான தலித் எழுத்தாளர்களை இன்று காணலாம். ஒன்று:
கல்லூரி பேராசிரியர்கள். இரண்டாவது வொயிட் காலர் ஆபீஸ் மக்கள். மூன்றாவது தொழிலாளர்கள்.
சில சமயங்களில் எனக்கு அச்சம் ஏற்படுவதுண்டு. தலித் இலக்கியம் ரொம்பவும் (academic
level) அகடெமிக் இலக்கியமாகிக் கொண்டிருக்கிறதோ என்று. தலித் இலக்கியம் தலித் இயக்கம்
சார்ந்தே இருக்க வேண்டும் என்பதுதான் என் போன்றவர்களின் விருப்பம்.<o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><br />
<b style="mso-bidi-font-weight: normal;"><span style="background: white;">தொடக்கத்திலிருந்த
படைப்பு உத்வேகம் இப்போதும் உங்களிடம் இருக்கிறதா? தங்களின் சமீபத்திய படைப்பு முயற்சிகள்
எவை?<o:p></o:p></span></b></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><br />
<span style="background: white;">நான் 1967களிலேயே இயக்கம் சார்ந்து செயல்படவும் எழுதவும்
ஆரம்பித்துவிட்டேன். 67களில் ரிபப்ளிகன் ஐக்கிய பார்ட்டியுடன் சேர்ந்து பணியாற்றி இருக்கிறேன்.
என்ன அன்றுபோல உத்வேகத்துடன் ஓடிய ஓட்டம் இன்று களப்பணியில் சற்று குறைந்திருக்கலாமே
தவிர எழுத்துப்பணி எப்போதும் போல தொடர்கிறது. அண்மையில் என் கட்டுரைகளின் தொகுப்பு
நூல் (neh abivithi - blue underline) வெளிவந்துள்ளது.<o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><br />
<b style="mso-bidi-font-weight: normal;"><span style="background: white;">நாடு தழுவிய
அளவில் தலித் எழுத்தாளர்கள், கலைஞர்களுக்கான செயலூக்கம் கொண்ட ஒரு கூட்டமைப்பின் தேவையை
உணர்கிறீர்களா? அதற்கான முன் முயற்சிகளைத் தங்களைப் போன்றவர்கள் ஈடுபடுவது தானே வலு
சேர்ப்பதாக இருக்கும்?<o:p></o:p></span></b></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="background: white; font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;">பலமுறை இதைப்பற்றி நாம் பேசி இருக்கிறோம்.
ஒருமுறை தமிழகத்தில் பிரிந்துகிடக்கும் தலித்திய இயக்கங்களை ஒன்றிணைக்க நான் என்ன செய்ய
வேண்டும் என்பது குறித்தும் கூட நாம் பேசியிருக்கிறோம். நான் பேசுவது மட்டுமல்ல ..
உங்களைப் போன்றவர்களும் முன்வர வேண்டும்.</span><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><br />
<br />
<b style="mso-bidi-font-weight: normal;"><span style="background: white;">மராத்தியில்
தன்வரலாற்று இலக்கியவகை ரொம்பவும் பிரசித்தமானது. உங்களுடைய சுயசரிதையை எப்போது எதிர்பார்க்கலாம்?</span></b><span style="background: white;"><o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="color: #333333; font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="background: white; font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><span style="mso-spacerun: yes;"> </span></span><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; mso-fareast-language: EN-IN;"><br />
<span style="background: white;">(சிரித்துக்கொண்டே..) என் சுயசரிதம் என்பது நானும்
என் குடும்பமும் என் எழுத்துகளும் மட்டுமல்ல. என் வாழ்க்கை ஓர் இயக்கம் சார்ந்தது.
எங்கள் இயக்கம் குறித்தும், என் தோழர்கள் குறித்தும் நிறைய உண்மைகளை எழுத வேண்டியிருக்கும்.
அப்படி எழுதாமல் இருந்தால் அது சுயசரிதையாக இருக்கவும் முடியாது. என்ன.. அதனால்.. புனைவுகளின்
ஊடாகப் பயணித்து ஒரு நாவல் எழுதலாம் என்ற எண்ணமிருக்கிறது.<o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="font-family: "Helvetica Neue Light", HelveticaNeue-Light, "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 20px; font-weight: normal; text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><br />
<span style="background: white; color: #333333;">***</span><br />
<span style="background: white;"><span style="color: blue;">(புதுவிசை, அக்டோபர் 2009)</span></span></span><span style="color: #333333; font-family: "Arial Unicode MS", sans-serif;"><o:p></o:p></span></div>
</h1>
</div>
புதுவிசைhttp://www.blogger.com/profile/09276344793619872435noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8111967010823738396.post-32210768896588648962018-03-22T19:56:00.001-07:002018-03-22T19:56:57.491-07:00ஆனந்தம் பண்டிதர்: சித்த வைத்தியரின் சமூக வைத்தியம் - கோ. ரகுபதி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9YflrvG1jSmK0V4QKcR7il9JpgkIPR9ivl_Y5w2U5ju2bacKbs_Y11EUZSpBExwb_ZzKqznpBAwG6ztwcFlqd5Hqa-gb6QCqw4-M2-oVv7UWxtDKi05G0_2cteQ5VmEyvrsVJdStfQ874/s1600/anandhampillai.jpg"><span style="color: windowtext; font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt; text-decoration-line: none;"><!--[if gte vml 1]><v:shapetype id="_x0000_t75" coordsize="21600,21600"
o:spt="75" o:preferrelative="t" path="m@4@5l@4@11@9@11@9@5xe" filled="f"
stroked="f">
<v:stroke joinstyle="miter"/>
<v:formulas>
<v:f eqn="if lineDrawn pixelLineWidth 0"/>
<v:f eqn="sum @0 1 0"/>
<v:f eqn="sum 0 0 @1"/>
<v:f eqn="prod @2 1 2"/>
<v:f eqn="prod @3 21600 pixelWidth"/>
<v:f eqn="prod @3 21600 pixelHeight"/>
<v:f eqn="sum @0 0 1"/>
<v:f eqn="prod @6 1 2"/>
<v:f eqn="prod @7 21600 pixelWidth"/>
<v:f eqn="sum @8 21600 0"/>
<v:f eqn="prod @7 21600 pixelHeight"/>
<v:f eqn="sum @10 21600 0"/>
</v:formulas>
<v:path o:extrusionok="f" gradientshapeok="t" o:connecttype="rect"/>
<o:lock v:ext="edit" aspectratio="t"/>
</v:shapetype><v:shape id="Picture_x0020_1" o:spid="_x0000_i1025" type="#_x0000_t75"
alt="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9YflrvG1jSmK0V4QKcR7il9JpgkIPR9ivl_Y5w2U5ju2bacKbs_Y11EUZSpBExwb_ZzKqznpBAwG6ztwcFlqd5Hqa-gb6QCqw4-M2-oVv7UWxtDKi05G0_2cteQ5VmEyvrsVJdStfQ874/s1600/anandhampillai.jpg"
href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9YflrvG1jSmK0V4QKcR7il9JpgkIPR9ivl_Y5w2U5ju2bacKbs_Y11EUZSpBExwb_ZzKqznpBAwG6ztwcFlqd5Hqa-gb6QCqw4-M2-oVv7UWxtDKi05G0_2cteQ5VmEyvrsVJdStfQ874/s1600/anandhampillai.jpg"
style='width:196.5pt;height:223.5pt;visibility:visible;mso-wrap-style:square'
o:button="t">
<v:imagedata src="file:///C:\Users\Aadhavan\AppData\Local\Temp\msohtmlclip1\01\clip_image001.jpg"
o:title="anandhampillai"/>
</v:shape><![endif]--><!--[if !vml]--><!--[endif]--></span></a><span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;"><o:p></o:p></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzoUgAXa5D5HABGToQPlr6bQ3WfhYaQ1KduCyBFbjzKbUQZ5OTTubOOkfbagPg1nXFzADQOyC88UKZbMB7ybPuMbHg_jaO3cuQzixbHKc_UiQ3IK2pF_jq3sC2Z6GSLRFqyvkPqDusTOrR/s1600/anandhampillai.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="298" data-original-width="262" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzoUgAXa5D5HABGToQPlr6bQ3WfhYaQ1KduCyBFbjzKbUQZ5OTTubOOkfbagPg1nXFzADQOyC88UKZbMB7ybPuMbHg_jaO3cuQzixbHKc_UiQ3IK2pF_jq3sC2Z6GSLRFqyvkPqDusTOrR/s1600/anandhampillai.jpg" /></a></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;">தமிழ்ச் சித்தவைத்திய நிபுணர்,
அறிஞர், களப் போராளி எனப் பன்முக அடையாளம் கொண்ட பண்டிதர் எஸ்.எஸ். ஆனந்தம் பிள்ளை
(இனிவரும் பகுதியில் ஆனந்தம் பண்டிதர் எனக் குறிப்பிடப்படுவார்) தமிழ்ச்சமூக ஆளுமைகளின்
வரலாற்றில் எழுதப்படாதவர். எந்தக் கருதுகோளையும் முன்வைத்துக்கொண்டு அவரைத் தேடவில்லை;
நான் அவரைக் கண்டுபிடித்தது ஒரு விபத்துதான். முனைவர் பட்டம் பெறுவதற்காக தேவேந்திரர்
சாதி இயக்கம் குறித்த ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது ஆதிமருத்துவர் சாதியின் மீதான கவனம்
ஒரு கட்டுரையினூடாக ஏற்பட்டது. இதற்கு மேலும் தூபமிட் டது புதுமைப்பித்தன் எழுதிய
‘நாசகார கும்பல்’. இவை முனைவர் பட்ட ஆய்விலிருந்த என் கவனத்தைத் திசைதிருப் பியது.
மருத்துவர் சாதி குறித்தத் தரவு சேகரிப்பில் ஈடுபடத் தொடங்கினேன். அந்தச் சாதியைச்
சேர்ந்த ஒரு சித்த வைத்தியர் ஆனந்தம் பண்டிதர் குறித்துக் கூறியதோடு பண்டிதர் நடத்திய
மருத்துவன் இதழின் ஒருசில பக்கங்களையும் கொடுத்தார். அதைத் தமிழகத்தில் தனிநபர்கள்
பலரிடமும் நூலகங்கள் பலவற்றிலும் தேடினேன்; மிஞ்சியது ஏமாற்றம்தான். என் முனைவர் பட்ட
ஆய்வைத் தொடரவேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக கிடைத்தத் தரவுகளைக் கொண்டு “ஆதிமருத்துவர்:
சவரத்தொழிலாளராக்கப்பட்ட வரலாறு” என்னும் நூலை 2006ஆம் ஆண்டு வெளியிட்டேன்; அதில் ஆனந்தம்
பண்டிதர் குறித்து சிறு அறிமுகம் மட்டும் கொடுக்கமுடிந்தது. நூல் வெளியீட்டு விழா முதன்முதலில்
பாண்டிச்சேரியில் நிகழ்ந் தது. இவ்வாறு ஒரு நூல் வெளியாயிருக்கிறது என்பதை அறிந்த ஆதிமருத்துவர்
சமூகத்தைச் சேர்ந்தவரும் சமூக விடுதலைக் கான அரசியல் செயல்பாட்டில் தன்னை இணைத்துக்கொண்
டிருக்கும் அரிமாவளவன், கவிஞர் ஆலா ஆகியோர் அதற்கான ஏற்பாட்டைச் செய்தனர். அந்த நிகழ்வில்
மருத்துவன் இதழைக்கண்டுபிடித்து அதனைத் தொகுத்துத் தமிழ்ச் சமூகத்திற்கு அளிப்பேன்
என்ற என் எண்ணத்தை வெளிப்படுத்தினேன். <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;">அன்றுமுதல் என் தரவு சேகரிப்புப்பட்டியலில்
மருத்துவன் இதழும் இணைந்துட்டது. இந்தத் தேடலில் சில வருடங்களுக்குப்பின்னர் ஆனந்தம்
பண்டிதரைப் பற்றிய குறிப்புகளும் அவர் திராவிடன் பத்திரிகையில் எழுதிய கட்டுரை ஒன்றும்
கிடைத்தது. இருப்பினும், அவை போதுமான தரவுகளல்ல என்பதை உணர்ந்து மருத்துவன் இதழைத்
தேடினேன். ஆதி மருத்துவர் புத்தகத்தை மறுபதிப்பு செய்து வெளியிடவேண்டும் என்ற எண்ணத்தில்
தீவிர தேடுதலில் ஈடுபட்டேன்; இருப்பினும் மிஞ்சியது ஏமாற்றமே. மறுபதிப்பும் ஆனந்தம்
பண்டிதர் குறித்தச் சித்திரம் முழுமை பெறா மல் வெளிவர வேண்டிய நிலைமை உருவானபோது பெருத்த
வருத்தமே என்னை ஆட்கொண்டது; இது மறு பதிப்பு நூல் எழுதுவதில் தாமதத்தை ஏற்படுத்தியது.
எனவே, மீண்டும் தேடிக்கொண்டே இருந்தேன், ஒரு நாள் திடீரென எதிர்பாராதவிதமாக அந்த இதழின்
பெரும்பகுதியைக் கண்டெடுத்தேன்; பத்தாண்டுத் தேடுதலில் புதையல் ஒன்றைக் கண்டெடுத்த
மகிழ்ச்சி. உடனடியாக அந்த இதழ் முழுவதையும் படிக்கத் தொடங்கினேன், அப்போது ஆனந்தம்
பண்டிதர் தமிழ்ச் சமூகத்தின் தனித்துவமான ஓர் ஆளுமையாகத் தெரிந் தார். தமிழ்ச்சமூக
வரலாற்றில் இருக்கின்ற ஒரு பெருத்த இடைவெளியை ஆனந்தம் பண்டிதர் நிரப்ப இருக்கிறார்
என்ற ஆனந்தம் பெருக்கெடுத்தது. எனவே, ஏற்கனவே வெளியிட்ட நூலில் ஆனந்தம் பண்டிதர் குறித்து
விரி வாக எழுதுவது குறித்து முதலில் சிந்தித்தேன்; ஆனால் அவ்வாறு செய்தால் பண்டிதர்
குறித்து முழுமையான சித்திரம் கிடைப்பது கடினம் என்பதால் அவர் குறித்துத் தனியாக ஒரு
நூல் வெளியிடவேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். இதற்கு அடிப்படைக் காரணம் அவருடைய அறிவுச்செயல்பாடும்
களப்போராட்டமும் ஆகும். எனவே, அவரது சிந்தனைகளைத் தொகுத்துத் தமிழ்ச்சமூகத்திற்கு அளிப்பது
அவசியம் என்று உணர்ந்ததால் அது நூல் வடிவம் பெற்றுவிட்டது. <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;">தமிழ்ச் சித்தவைத்திய காவலர் <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;">ஆனந்தம் பண்டிதர் மருத்துவர்
சாதியைச் சேர்ந்த கும்பகோணம் சாமிநாதன்-கமலம்மாள் தம்பதியருக்குப் பிறந்தார்; இந்தக்
குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக அரசர் குடும்பங்களுக்கு வைத்தியம் செய்துவந்த னர்.
வைத்தியர் பரம்பரையில் பிறந்து வளர்ந்த ஆனந்தம் பண்டிதர் தன் சாதியின் பாரம்பரிய குலத்தொழிலான
சித்த மருத்துவத்தைக் கைக்கொண்டிருந்ததோடு அதில் நிபுணத்துவமும் பெற்றிருந்தார்; இசை,
நாடகம், கூத்து போன்றவற்றில் ஆர்வமிக்க அவர் தமிழ் இலக்கியத்தை யும் மருத்துவநூல்களையும்
ஆழ்ந்து படித்தார். தமிழ்ச் சித்த வைத்தியமுறையைப் பாதுகாத்து அடுத்தடுத்தத் தலைமுறைகளுக்குக்
கொண்டு செல்லவேண்டும் என்ற எண்ணமும் அவருக்கிருந்தது. ஆனால் அவர் வாழ்ந்த அந்தக்காலத்தில்
தமிழ்ச் சித்தவைத்தியம் ஆயுர்வேத, ஆங்கில மருத்துவம் ஆகிய இருமுனைத் தாக்குதலை எதிர்கொண்டது;
முன்னது சுவீகரித்துக்கொள்ள எத்த னித்தது; பின்னது அழித்தொழிக்க முற்பட்டது. பிரிட்
டிஷ் ஏகாதிபத்தியம் தன் அரசியல் பொருளாதார நலனுக் காக ஆங்கில மருத்துவத்தைப் பரப்பியது;
சென்னை மாகாணத்தின் பலபகுதிகளிலும் ஆங்கில மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை ஆகியவற்றை
நிறுவத் தொடங் கியது. இதனால் தமிழ்ச் சித்த வைத்தியம் மட்டுமின்றி இந்தியாவில் அப்போதிருந்த
பல்வேறு வகையான சுதேச மருத்துவமுறைகள் தாக்குதலுக்குள்ளாயின. எனவே, ஆயுர்வேத வைத்தியர்கள்
இந்திய அளவில் ஒரு சங்கத்தை நிறுவி மாநாடு, கண்காட்சி போன்ற வற்றை நடத்தியதோடு அதை
ஆங்கில மருத்துவக் கல்லூரியில் முறையாகக் கற்பிப்பதற்கும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின்
ஆதரவை வேண்டினர். இவர்கள் இந்தியாவின் சுதேசிய வைத்தியம் என்றால் அது ஆயுர் வேதம்,
யூனானி ஆகியன மட்டுமே எனக் கூறினர். மேலும் அந்த மருத்துவமுறைகளை நிறுவனமயமாக்கு வதற்கான
முயற்சிகளை எடுத்தனர். ஆயுர்வேத வைத்தியத்தை பரப்பும் பணியைச் செய்துகொண்டிருந்த வைத்திய
கலாநிதி பத்திரிகை ஆயுர்வேதம், யுனானி ஆகிய சுதேச வைத்தியசாலைகளை அரசாங்கம் அமைக்கவேண்டும்
என வேண்டுகோள் விடுத்தது. (வைத்திய கலாநிதி, அக்டோபர் 1914,ப.45.). <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;">சென்னை சட்டசபையில் ஏ.எஸ்.கிருஷ்ணராவ்
நவம்பர் 1914ஆம் ஆண்டு ‘‘ஆயுர்வேத - யூனானி வைத்தியங்களென்னும் சுதேச வைத்திய முறைகளை’’
கவர்ன்மென்டார் ஆதரித்து, அவற்றை அபிவிருத்தி செய்யவேண்டுமென்று ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார்.
மேலும் அந்தத் தீர்மானம், பிரிட்டிஷ் அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கும் மருத்துவமனைகள்
மக்களின் மருத்துவத் தேவைகளை நிறைவேற்றுவதற்குப் போதுமானவையாக இல்லை; மக்களில் படித்தோருக்கு
சுதேச வைத்தியத்தின் மீது நம்பிக்கைக்குறைவு ஏற்பட வில்லை. ஆகவே, சுதேச வைத்தியமுறைகளான
ஆயுர் வேதம் யுனானி ஆகியவற்றை தேச மொழிகளிலும் ஆங்கிலத்திலும் பரவச் செய்ய வேண்டுமென
வலியுறுத் தியது. அவர்கள் ஆயுர் வேத, யூனானி மருத்துவ முறைகளை ஆதரிப்பதற்கு சாதியும்
ஒரு காரணம். மேற்குறிப்பிட்ட தீர்மானத்தை ஆதரித்து நரஸிம்மையர், ‘மேனாட்டு முறையை அனுஸரித்த
சாஸ்திரங்களின்படி வைத்தியம் செய்துகொள்வதற்கு அவர்களுக்கு இஷ்டமு மில்லை. ஆகவே ஜனங்களுக்கு
வைத்திய உதவி வேண் டியளவுக்கு கிடைக்கும்படிச் செய்வதற்கு இது ஒன்று தான் ஏற்ற வழியாகும்.
அதாவது, ஆயுர்வேத யூனானி வைத்திய சாலைகளையும் பாடசாலைகளையும் ஸ்தாபித்து...’ எனப் பேசினார்
(வைத்திய கலாநிதி, நவம்பர் 1914, 63). <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;">ஆயுர்வேத வைத்தியர்கள் தமிழ்ச்சமூகத்தில்
சித்த வைத்தியம் என்ற ஒன்று இருந்ததாக எங்கும் குறிப்பிடவில்லை. இது இருட்டடிப்பு வேலை
மட்டுமல்ல, சுவீகரிக்கும் தந்திரமும்கூட. இதன் அரசியலானது, தமிழ்ச் சித்த வைத்தியம்
உட்பட இதர மொழி பேசும் மாநிலங்களில் ஒடுக்கப்பட்ட மக்களிடம் மருத்துவத் தில் இருந்த
பன்மைத்தன்மை மீது ஆயுர்வேதமென்ற ஒற்றைத்தன்மையை ஒட்டுவதற்கான முயற்சியே அது. இதில்
தமிழ்ச் சித்த வைத்தியம் அழித்தொழிக்கப்படும் அபாயமிருப்பதை அன்று உணர்ந்தவராகத் தென்படுப
வர் ஆனந்தம் பண்டிதர் மட்டுமே; எனவே அதைப் பாதுகாப்பதற்காக இரண்டு வடிவங்களில் போராடினார்:
1) களப்போராட்டம் 2). அறிவுச் செயல்பாடு. இந்தப் போராட்டத்தில் ஆனந்தம் பண்டிதரின்
முதல் வெளிப் பாடு, பிராமணரல்லாத இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான பி.தியாகராயர் தலைமையில்
1915 டிசம்பர் 23 அன்று அவர் தென் இந்திய மருத்துவர் சங்கத்தை நிறுவியதாகும். ஆங்கிலேய
ஏகாதிபத்தியத்தின் துணை யுடன் ஆயுர்வேதத்தை நிறுவனமாக்கு வதற்கான முயற் சிக்கப்பட்ட
(1914) அடுத்த ஆண்டே (1915) தமிழ்ச் சித்த வைத்தியத்தை பாதுகாப்பதற்கானச் சங்கத்தை
ஆனந்தம் பண்டிதர் நிறுவியது கூர்ந்து கவனிக்கத்தக்கது. இந்தப் போராட்டத்தில் அவருக்கு
துணைநின்றோர் ஆதிமருத்து வர் சாதியினரும் அன்றைக்கு வலுவாக இருந்த பிராமண ரல்லாதோர்
இயக்கத்தினரும் ஆவர். ஆயுர்வேத வைத்தி யத்தை நிறுவுவதற்கு முன்னின்றவர்கள் பிராமணர்கள்
என்பதால் தமிழ்ச் சித்த வைத்தியத்தைப் பாதுகாக்கும் போராட்டம் இயல்பாகவே பிராமண எதிர்ப்புப்
போராட்டமாகவும் இருந்ததால் பிராமணரல்லாதோர் இயக்கத் தலைவர்கள் ஆனந்தம் பண்டிதருக்கு
ஆதரவு கொடுத்தது வியப்புக்குரியதல்ல. ஆதி மருத்துவர்களின் பாரம்பரிய தொழில் தமிழ்ச்
சித்தவைத்தியம் என்பதால் அவர்களும் அந்தப் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
மேலும், தென் இந்திய மருத் துவர் சங்கம் ஆதிமருத்துவர்களின் சமூக விடுதலையையும் இலக்காகக்
கொண்டிருந்ததாலும் அவர்கள் இயல் பாக அதில் அய்க்கிமாயினர். அதாவது, தமிழ்ச் சித்த வைத்தியத்தைப்
பாதுகாப்பதனூடாக அதைக் குலத் தொழிலாகக் கைக்கொண்டிருந்த ஆதிமருத்துவர்களின் விடுதலையையும்
ஆனந்தம் பண்டிதர் இணைத்தார். <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;">காலனிய அரசாங்கம் 1921ஆம்
ஆண்டு சென்னையில் வெளியிட்ட மருத்துவர் கோமன் அறிக்கையானது இந்தி யாவிலுள்ள பாரம்பரிய
மருத்துவமுறைகள் மீது பாத கத்தை விளைவிப்பதை உணர்ந்த ஆனந்தம் பண்டிதர் சுதேசி மருத்துவமுறைகளைப்
பாதுகாக்கும் நோக்குடன் சென்னையில் 1923 அக்டோபர் 20,21 ஆகிய நாட்களில் தென் இந்திய
மருத்துவர் சங்க மாநாட்டை ஒருங்கி ணைத்ததோடு அதில் தமிழ்ச் சித்த வைத்தியம் குறித்து
உரை நிகழ்த்தினார். காலனிய அரசாங்கம் 1924 ஜூலை 01 அன்று ஆயுர்வேதம், யூனானி ஆகிய மருத்துவ
முறை களைக் கற்பிப்பிதற்குக் கல்விநிலையம் நிறுவ முனைந்தபோது அந்த வைத்தியமுறைகளோடு
சித்த வைத்தியமும் கற்பிக்கப்பட வேண்டுமென்று குரலெ ழுப்பிய ஆனந்தம் பண்டிதர் அதில்
வெற்றி கண்டார். தமிழ்ச் சித்த மருத்துவத்தைப் பாதுகாப்பதற்கு இத்தகைய களப்போராட்டம்
போதுமானதாக இல்லை; அதற்கு அறிவுப்போரட்டமும் அவசியம் என்றுணர்ந் தார் அவர். விளைவு,
மருத்துவன் (றிபிசீஷிமிசிமிகிழி) என்ற தமிழ் வைத்திய மாத இதழை 1929ஆம் ஆண்டு சென்னை,
221 தங்கசாலை வீதியை தலைமையிடமாகக் கொண்டு வெளியிட்டார். இது ஓராண்டுகாலம் வெளி யானது.
இதில் ஆனந்தம் பண்டிதர் ‘தமிழ் வைத்தியமும் சம்ஸ்கிருத வைத்தியமும்’ என்ற தலைப்பிட்டு
தொடர் கட்டுரை எழுதினார். இந்தக் கட்டுரையில் சித்த வைத்தி யம் சம்ஸ்கிருதத்திலிருந்து
உருவானது எனக்கூறி அதைக் கபளீகரம் செய்வதை எதிர்த்து தமிழர்களுக்கென மருத்துவ அறிவுப்
பாரம்பரியம் இருப்பதை எடுத்து ரைத்தார்; தமிழ்ச் சித்தவைத்தியம் சுயமாக உருவாகி பிற
மருத்துவ முறைகளின் துணையின்றி தனித்துச் செயல்படுகிறது என்ற வாதத்தை முன்வைத்தார்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;">தமிழ்ச் சித்த வைத்திய அறிவுப்
பாரம்பரியத்தைத் தற்காத்துக் கொள்வதற்கான இந்தப் போராட்டத்தில் ‘தமிழ்ச் சித்த வைத்தியம்
தனித்துவமானது என்ற வரலாற்றை ஒப்புக்கொண்ட’ பிராமணர்களின் கருத்துக் களையும் மருத்துவன்
இதழில் ஆனந்தம் பண்டிதர் வெளியிட்டார். இந்த அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி
எஸ். சுப்ரமணிய ஐயர், வைத்தியர் டி.கோபாலாச்சாரியார் ஆகியோரின் கட்டுரை, உரை ஆகியன
அந்தப் பத்திரிகையில் வெளியாயின. மேலும், அவரிடம் சிகிச்சை பெற்று குணமடைந்த இராமநாத
புரம் அரசர், எட்டயபுரம் அரசர், ஜமீன்தார், நீதிமன்ற நீதிபதிகள், பிராமணர்கள், பிராமணரல்லா
உயர்சாதியி னர் போன்றோர் தமிழ்ச் சித்த வைத்தியம் குறித்தும் அதில் ஆனந்தம் பண்டிதரின்
நிபுணத்துவம் குறித்தும் எழுதிய கடிதங்களை மருத்துவன் இதழில் ஆனந்தம் பண்டிதர் வெளியிட்டார்.
இது தற்ப்புகழ்ச்சிக்கான செயல்பாடு அல்ல; அது தமிழ்ச் சித்த வைத்தியத்தின் சிறப்புகளை
எடுத்துரைக்கின்ற ஓர் அறிவுச் செயல்பாடு. இதன் அடிப்படை நோக்கம் வெகுமக்களிடத்தில்
தமிழ்ச் சித்த வைத்தியத்தின் தனித்துவத்துவம், அதன் சிறப்பு போன்றவற்றைப் பரப்புவதனூடாக
அதைப் பாதுகாத்தலாகும். அவர் தமிழ்ச் சித்த வைத்தியத்தைப் பாதுகாப்பதற்குப் போராடிய
அதேசமயம் அவர் இந்தியாவின் இதர மருத்துவ முறைகளைப் புறக்கணிக்க வில்லை; தென் இந்திய
மருத்துவர் சங்க மாநாட்டை 1923ஆம் ஆண்டு அவர் நடத்தியபோது ஆயுர்வேத மருத்துவர்களே எண்ணிக்கையில்
அதிகம் பங்கேற்றனர் என்பது அதற்குச் சாட்சி. அவர் நடத்திய இந்தப் போராட்டத்தின் விளைவாக
சித்த மாணவர்களுக்கு பட்டங்கள் அளிக்கும் தேர்வாளர் குழுவில் ஆனந்தம் பண்டிதர் இணைக்கப்பட்டார்.
சித்த மருத்துவத்தை இதர மருத்துவ முறைகளோடு இணைத்துக் கற்பிக்கப் பட வேண்டுமென்ற போராடி
வெற்றிகண்ட பண்டிதர் இறுதியில் சித்த மருத்துவத்துக்கு மட்டுமேயென தனிக்கல்வி நிலையம்
நிறுவப்படுவதற்கு வித்திட்டார். குறிப்பாக பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி
நிறுவப்பட்டதில் ஆனந்தம் பண்டிதருடைய பங்கு அளப்பரியது.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;">ஆதிமருத்துவர்களின் பொருளாதார
விடுதலைக்கான ஓர் ஆயுதமாகவும் சித்த வைத்தியத்தைக் கண்டார் ஆனந்தம் பண்டிதர்; இதை ஆதிமருத்துவர்களுக்கான
கூட்டுறவுச் சங்கம் மூலம் செயல்படுத்த வேண்டுமெனச் சிந்தித்தார். இது அவர்களுக்கு ஒரு
பொருளாதார விடு தலையைத் தருமெனக் கருதினார் அவர். இதனால் சித்த வைத்தியம் மூலம் பொருளீட்டுவதற்கு
அவர் திட்ட மிட்டார் என அவர்மீது குற்றம் சுமத்தவும் இயலாது; காரணம், பொருளாதாரம் ஒன்றுதான்
அவருக்கான இலக்காக ஒரு போதும் இருந்திருக்கவில்லை. சென்னை யில் அவர் நடத்திய
தமிழ் சித்த வைத்தியசாலையில் இலவசமாகவும் சிகிச்சை அளித்தது, சுயமரியாதை இயக்க
மாநாடுகள் நடக்கிறபோது அங்குத் தன் மருத் துவக்குழுவோடுச் சென்று இலவச மருத்துவம் செய்தது
ஆகியன அவர் மருத்துவத்தை பொருளீட்டுவதற்கான தொழிலாக செயல்படுத்தவில்லை என்பதைத் தெளிவு
படுத்துகிறது. ‘...பணம் சம்பாதிக்கும் நோக்கத்தையே முக்கியமாகக் கருதாமல் சித்த வைத்தியத்தில்
தமக்குள்ள அறிவைப் பொதுஜன நன்மைக்கே உரியதாகச் செய்யக் கருதி அவ்வாறே செய்து வருகின்றார்’
என ஆனந்தம் பண்டிதர் குறித்து சென்னை நகராட்சியின் அன்றைய கவுன்சிலர் வி.சக்கரை செட்டியார்
குறிப்பிடுகிறார். மருத்துவரின் ஆலோசனைக்கு ஒரு பொருளா தார மதிப்பை ஆங்கில மருத்துவமுறை
நிர்ணயம் செய்து அதை வசூலிக்கிறது ஆனால், ஆனந்தம் பண்டிதர் எவ்விதப் பொருளாதரமும் பெற்றுக்கொள்ளாமல்
மருத்துவ ஆலோசனையை இலவசமாக வழங்கினார். ‘நேரில் வருவதற்கு இயலாத நோயாளர் தமது நோயின்
விவரத்தைத் தபாலில் அறிவித்தால் தக்க ஆலோசனை சொல்லப் படும்’ என்று ஆனந்தம் பண்டிதர்
மருத்துவன் இதழில் அறிவித்தார்; இது அவர் தன்னுடைய சொந்தச் செலவில் மருத்துவ ஆலோசனை
கொடுத்தார் என்பதை உணர்த்துகிறது. <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;"> <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;">அன்றைய காலகட்டங்களின் ஆவணங்களைக்
காணுகிறபோது பல்வேறு நோய்களின் தாக்குதலுக்குள்ளாகி மகளிரும் குழந்தைகளும் ஆங்கில
மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றிருப்பதைக் காணமுடிகிறது. மேலும் குழந்தை இறப்பும்
அதிகம் நிகழ்ந்துள்ளது; பிறந்த குழந்தைகளில் நான்கில் ஒரு பங்கினர் ஒரு வருடத்திற்குள்
இறந்தனர். எனவே, இவற்றைத் தடுப்பதற்கு மருத்துவ ஆலோசனை மக்களுக்குத் தேவைப்பட்டது.
ஆனந்தம் பண்டிதர் மருத்துவன் இதழில் பாலர் பரிபாலனம் என்ற பகுதியில் தாய்-சேய் நலன்
குறித்துத் தொடர்க்கட்டுரை எழுதினார். இதர நோய்கள் குறித்துப் பிற வைத்தியர்கள் எழுதியதையும்
அந்தப் பத்திரிகையில் வெளியிட்டார். இன்றைய தினசரி பத்திரிகைகள் மருத்துவமனைகள், மருந்து
உற்பத்தி நிறுவனங்கள் ஆகியவற்றிடமிருந்து பெருத்தத் தொகையை விளம்பரமாகப் பெற்றுக் கொண்டு
மேம்போக்கான மருத்துவ ஆலோசனைகள் வழங்குவது போல் அல்லாமல் எந்தவித விளம்பரமும் பெற்றுக்கொள்ளாமல்
மிக ஆழமான விரிவான மருத்துவ ஆலோசனை வழங்கினார் ஆனந்தம் பண்டிதர். அதுமட்டுமின்றி எந்த
நோய்க்கெல்லாம் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டுமென ஆங்கில மருத்துவம் பரிந்துரை செய்ததோ
அந்த நோய்களுக்கெல்லாம் அறுவையின்றியே தமிழ்ச் சித்த வைத்தியத்தால் குணப்படுத்தினார்
ஆனந்தம் பண்டிதர். ஆங்கில மருத்துவத்தின் அறுவைச் சிகிச்சைக்கு கூடுதல் பணச்செலவும்
சித்த மருத்துவத்திற்கு மிகக் குறைந்த பணச்செலவும் ஆகும் என்பதை விளக்கத் தேவையில்லை.
எனவே ஆனந்தம் பண்டிதர் சித்த வைத்தியத்தை பொருளைப் பெருங்குவி யலாக மாற்றுவதற்கான தொழிலாக
அல்லாமல் மக்கள் ஆரோக்கியத்திற்கான ஒன்றாகக் கைக்கொண்டிருந்தார் என்பது திண்ணம். இந்தக்
காரணத்தால்தான் தந்தை பெரியார், தியாகராய செட்டியார், மறைமலை அடிகள் எனப் பிராமணரல்லாதோர்
இயக்கத் தலைவர்கள் மட்டுமின்றி பாஷ்யம் ஐயங்கார், சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி எஸ்.
சுப்பிரமணி ஐயர் எனப் பிராமணர் களும் ஆனந்தம் பண்டிதரைப் போற்றி எழுதியுள்ளனர்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;">சமூக அரசியல் அறிஞர் <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;">பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம்
இந்தியாவில் சில அரசியல் சீர்திருத்தங்களைச் செய்தபோது அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு
ஒவ்வொரு சாதியினரும் தங்களை மேம்படுத்திக் கொள்வதற்குப் போராடினர். அதற்காக அவர்கள்
சாதிச்சங்கங்கள் நிறுவுதல், பிரிட் டிஷ் அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்தல், அதன்
ஆதரவை நாடுதல், இழிவேலைகளைச் செய்ய மறுத்தல் எனப் போராட்டங்கள் பல நடத்தினர். இந்தப்
போக்கு களிலிருந்து ஆனந்தம் பண்டிதர் சிலவற்றில் ஒன்று பட்டும் சிலவற்றில் வேறுபட்டும்
சிலவற்றில் தனித்தும் நின்றார். அன்றைய சாதிய இயக்கங்கள் சில மாகாண அளவிலும் சில இந்திய
அளவிலும் உருவாயின. ஆதி மருத்துவர்களுக்கான சாதிச்சங்கத்தை தென் இந்திய அளவில் நிறுவிய
ஆனந்தம் பண்டிதர் அவர்களை ஒருங் கிணைப்பதற்காக பெரும் முயற்சி எடுத்தார். இந்திய அளவில்
வலைப்பின்னலை ஏற்படுத்துவதற்காக 1921 டிசம்பர் 26 முதல் 28ஆம் தேதி வரை ஆக்ராவில் நடை
பெற்ற மருத்துவ சமூக மாநாட்டில் பங்கேற்றார். தமிழ் ஆதிமருத்துவர் சாதியினர் எந்தெந்த
நாடுகளுக்கெல்லாம் இடம்பெயர்ந்தனரோ அங்கெல்லாம் சங்கத்தை நிறுவி னார்; 1924ஆம் ஆண்டு
ஒரு குழுவாக இலங்கைக்குச் சென்ற அவர் அங்குச் சுற்றுப்பயணம் செய்து மருத்துவ குலச்
சங்கத்தை ஏற்படுத்தினார். உண்மையில், ஆனந்தம் பண்டிதர் ஆதிமருத்துவர் சங்கத்தை ஆசிய
அளவில் கட்டமைத்தார். இந்தச் சங்கத்தின் மூலம் அவர் “இந்திய அரசியல் மகாசபையாகிய சர்.
ஜான் சைமன் கமிஷ னுக்கு தென் இந்திய மருத்துவர் சங்கத்தின் அறிக்கை” யெனச் சமர்ப்பித்தார்.
அதில் ஆதிமருத்துவர்களின் ஒடுக்கப்படும் நிலைமை, அவர்களை முன்னேற்றுவ தற்குத் தேவையானவை
குறித்து எடுத்துரைத்தார். <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;">பொதுவாக, ‘பாரம்பரிய தொழிலைக்’
கைவிடுதல், பிராமணியமயமாக்கம் எனச் சாதிய அமைப்புகள் கொண்டிருந்த நிலைப்பாட்டுடன் அவர்
வேறுபட்டு நின்றார்; தங்களின் பாரம்பரிய தொழிலான சித்த மருத்துவத்தைப் பற்றிக்கொள்ள
வேண்டுமென அறிவுறுத்தினார்; அது அதன் செல்வாக்கை மெல்லமெல்ல இழந்து கொண்டிருந்த போதிலும்கூட.
அன்றைய காலங்களில் பொருளாதார மேம்பாட்டிற்காக கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தும் முயற்சியில்
அனைத்து சாதிகளும் ஈடுபட் டன; ஆனந்தம் பண்டிதரும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் அவருடைய
சிந்தனையின் தனித்துவமானது, அவர் ஆதிமருத்துவர் சாதியின் பொருளாதார மேம்பாட் டிற்காக்
கூட்டுறவு சங்கம் மூலம் மூலிகைமரம் வளர்ப்பு, மருந்துத் தயாரிப்பு, ஏற்றுமதி என அதை
நிறுவனமாக மாற்றவேண்டுமென்ற தொலைநோக்குத் திட்டத்தை முன்வைத்தாகும்; ஆனால், அந்தத்
திட்டம் அந்தச் சமூகத்தால் செயல்படுத்த இயலவில்லை. இருப்பினும், சென்னையில் 1944ஆம்
ஆண்டு நிறுவப்பட்டு இன்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்திய மருத்துவர்களின் (சித்தா,
ஆயுர்வேதம், யுனானி) கூட்டுறவுச் சங்கத்தின் மருந்து உற்பத்தி, விற்பனை என்ற செயல்பாடு
ஆனந்தம் பண்டிதரின் சிந்தனையின் விளைவு எனலாம். இந்த கூட்டுறவுச் சங்கத்தின் உருவாக்கத்தில்
ஆனந்தம் பண்டிதர் ஆற்றிய பங்கு என்னவென்பதை அறிந்து கொள்ள இயலவில்லை; ஆனால் அதற்கான
கருத்தியலை முதன்முதலில் முன்வைத்தவர் ஆனந்தம் பண்டி தர் என்பதை மறுக்க இயலாது. ஆனந்தம்
பண்டிதரின் சிந்தனை பாரம்பரிய தொழிலையே சுற்றி இருந்ததால் அவர் நவீன தொழில்களுக்கு
எதிரானவர் என்ற முடிவுக்கு வர இயலாது; காரணம், அவர் நவீன தொழில்கள் பலவற்றையும் ஆதிமருத்துவர்கள்
கற்க வேண்டுமென வலியுறுத்தினார். அதாவது, ஆனந்தம் பண்டிதர் தொழிலில் ஜனநாயகப்போக்கைக்
கடைபிடித்தார். <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;">சாதி இயக்கங்கள் எவையெல்லாம்
இழிதொழில்கள் எனக் கருதினவோ அவற்றை எல்லாம் விட்டொழிப்பதற்காகப் போராடின. ஆதிமருத்துவர்
செய்த இழி தொழில்களை மறுப்பதற்கான போராட்டத்தைத் திட்டமிட்ட ஆனந்தம் பண்டிதர் அதனால்
ஏற்படும் பின்விளைவுகள் குறித்தும் சிந்தித்தார். ஆதிக்கச்சாதிகள் வழக்கமாக அரங்கேற்றும்
‘வன்முறை, சமூகப் பொருளாதார விலக்கம்’ ஆகிய எதிர்வினைகளைப் புரிந்துகொண்டு போராட்டக்காரர்களுக்கான
மாற்றுத் தொழிலையும் அதைச் செய்யும் இடத்தையும் முன்கூட்டியே திட்டமிட்டு போராட்டத்தை
நடத்தினார். எதிர்வினைகளையும் உணர்ந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கான முன்னேற்பாட்டோடு
போராட்டத்தைத் திட்டமிட்டு நிகழ்த்தியது அவருடைய தனித்துவம். <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;">மாப்பிள்ளைச் சவரம், சவச்சவரம்
செய்ய மறுத்தல் போராட்டங்கள் 1920களின் தொடக்கத்தில் திருநெல்வேலியில் முகிழ்த்து அது
அந்த மாவட்டத்தின் தாமிரபரணி நதிக்கரையின் மேற்குத்திசையில் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி
போன்ற ஊர்களில் தொடங்கி கிழக்குத்திசையில் ஆத்தூர் வரை பரவியபோது அந்தப் போராட்டத்தை
வெற்றி பெறச் செய்வதற்கு ஆதிமருத்துவர் சமூக ஆடவர்களை இலங்கைக்குச் சென்று அங்கு ஒப்பனைத்தொழில்
செய்து பிழைத்துக்கொள்வதற்கு வழிவகுத்தார். ஆனால் ஆதிக்கச்சாதியினரின் உளவியல் வன்மத்தை
அவர் எதிர் பார்த்திருக்கவில்லை; அவர்கள் ஆதி மருத்துவர் சாதி பெண்களையும் குழந்தைகளையும்
கொடூரமாகத் தாக்கினர். பொதுவாக, பெண்களையும், குழந்தைகளையும் மதித்துப் போற்றுகின்ற
நாடென்று தொடர்ந்து கூறிவருது அப்பட்டமான பொய்யென்பதை ஆனந்தம் பண்டிதர் அப்போது உணர்ந்திருக்கலாம்.
ஒரு நிகழ்வில் அவரும் வன்முறையை எதிர்கொண்டார். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடை மருதூரில்
1924 மே 25 அன்று பண்டிதர் ஆதிக்கச்சாதியினரால் தாக்கப் பட்டார், அதிலிருந்து தன்னைத்
தற்காத்துக் கொள்வதற்காகப் பெண் வேடமணிந்து வேறுவழியின்றி அங்கிருந்து வெளியேறினார்.
தன் சமூக விடுதலையைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்ட பண்டிதர் அதற்கானப் போராட்டத்தை
நடத்துகிறபோது தனக்கு மட்டுமென சலுகை தருவதை மறுத்தார். ஆதிமருத்துவர் சமூகத்திற்கு
அனுமதி மறுக்கப்பட்ட திருச்சிராப்பள்ளி மலைக் கோட்டை தாயுமானவர் கோயிலில் 1923 ஏப்ரல்
01 அன்று அவர்களை அழைத்துக்கொண்டு அந்தக் கோயிலுக்குள் சென்றபோது ஆனந்தம் பண்டிதருக்கு
மட்டும் அனுமதி தந்தபோது, ‘இந்துக்களெல்லோரும் ஆலயத்துள் செல்லுங்காலம் வரும்போதன்றி
இது போது நான் ஆலயத்துட் செல்லேன்’ எனக் கூறி அதை மறுத்தார். இந்தச் சம்பவங்களெல்லாம்
அரச மருத்துவ குடும் பத்தைச் சேர்ந்த ஆனந்தம் பண்டிதருக்குச் சாதியின் கொடூரமுகத்தைக்
கற்றுக் கொடுத்திருக்கக்கூடும். அதனால்தான் அவர் அன்று வலுவாக ஒலித்து ஆங்காங்கு செயல்படுத்தப்பட்ட
சீர்திருத்தத் திருமணம், சாதி ஒழிப்பு ஆகிய கருத்தாக்கங்களோடு ஒத்திசைந்தார்; ஆனால்,
இது குறித்துத் தனியாகக் கட்டுரை ஏதும் அவர் எழுதவில்லை; இருப்பினும், மருத்துவன் இத
ழில் திருமணம் தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தி; சாதி மறுப்புத் திருமணம் ஒன்று முடிந்த
பின்னர் அவர் விருந்து கொடுத்தது போன்ற அவருடைய செயல்பாடுகள் அவர் சாதி ஒழிப்பு நிலைப்பாட்டைக்
கொண்டிருந்தார் என்பது தெளிவு. <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;">சுயமரியாதை இயக்கத்தோடு
நட்புறவு கொண்டி ருந்த போதிலும் ஆனந்தம் பண்டிதர் நாத்திகர் அல்லர். அவர் கடவுளர்களை
விமர்சிப்பதோடு முரண்பட்டார். குறிப்பாக, சிவலிங்கம் விமர்சிக்கப்படுவதற்கு எதிராக
எதிர்வினையாற்றினார். அதேசமயம் மதச் சீர்திருத்தத்தை முன்வைத்த அவர் மத அடையாளங்களுக்கு
தன்னு டைய கருத்தை குமரன் பத்திரிகையில் இவ்வாறு பதிவு செய்தார்: ‘‘கடவுளைப்பற்றிய
கொள்கையெல்லாம் மக்களுடைய மனத்தில் இருக்க வேண்டுமேயல்லாது அவரவர் மதச்சின்னங்களாக
உடைகளிலோ, தலைமயிரிலோ, நெற்றிகளிலிடும் குறிகளிலோ வெளிப்படுத்திக் காட்டிக்கொள்ள
வேண்டுவதில்லை. இக்கொள்கையை பரவச்செய்ய வேண்டும். இல்லையேல் நாட்டில் மக்கள் சமாதானமாக
ஒற்றுமையோடு வாழ்வ தற்கு வழி ஏற்படாது.’’ மதச்சின்னங்களையே ஏற்காத ஆனந்தம் பண்டிதர்
மதங்கள் நிறுவனங்களாக்கப் படுவதையும் ஏற்காதவர் என்று முடிவு செய்யலாம். மொழி குறித்த
அவருடைய சிந்தனையும் தனித்துவமா னது. மொழி என்பதைப் புவிப்பரப்பு வரைகோடுக்குள் மட்டும்
சுருக்கிக் கொள்ளாமல் மொழியினூடாகவே அறிவு கட்டமைக்கப்பட்டிருப்பதைக் கண்ட ஆனந்தம்
பண்டிதர் தமிழ் மொழியைக் கற்பதனூடாகவே சித்த மருத்துவத்தைப் பாதுகாக்க இயலும் என்றுணர்ந்து
தன் சாதியினரை தமிழ் மொழியை நன்றாகக் கற்குமாறு அறிவுறுத்தினார்; அதேசமயம் ஆங்கிலத்தையும்
பயிலுமாறும் அறிவுறுத்தினார். <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;">ஆனந்தம் பண்டிதர் பிராமண
எதிர்ப்பு மரபின் ஓர் தனித்துவமான தமிழ்ச் சித்த வைத்திய ஆளுமை என்பதைக் குறிப்பிட்டு
கூறவேண்டியதுள்ளது. பிராமண ஆதிக்கத்திற்கு எதிரான இயக்கத்திற்கு தமிழ்ச் சமூகத் தில்
நீண்டநெடிய வரலாறு உண்டு. அந்த மரபின் நவீன கால ஆளுமைகளாக அயோத்திதாச பண்டிதர், ஆபிரகாம்
பண்டிதர், ஆனந்தம் பண்டிதர் ஆகியோரைக் குறிப்பிட லாம். பிராமண, சம்ஸ்கிருத எதிர்ப்பு
உச்சத்திலிருந்த அன்றைய காலகட்டத்தில் பறையர் சாதியைச் சேர்ந்த அயோத்திதாச பண்டிதர்
தலித்துகளின் சாதி பேதமற்ற தனித்துவமான தமிழ் பௌத்த அடையாளத்தை முன் வைத்தார். நாடார்
சாதியைச் சேர்ந்த ஆபிரகாம் பண்டிதர் கர்நாடக இசையை மறுத்து அது தமிழ் இசை என்றார்.
இந்த வரிசையில் ஆதிமருத்துவர் சாதியைச் சேர்ந்த ஆனந்தம் பண்டிதர் ஆயுர்வேத வைத்தியத்தைப்
புறக்கணித்து தமிழ்ச் சித்த வைத்தியத்தை உயர்த்திப் பிடித்தார். பிராமண ஏகாதிபத்தியமானது
மொழி, இசை, மருத்துவம் எனத் தமிழ் அறிவுப் பாரம்பரியத்தைக் கபளீகரம் செய்வதற்கு எதிராக
மேற்குறிப்பிட்ட பண்டிதர்கள் அறிவுத்தளத்தில் போராடினர். அதாவது பிறரின் உடைமைக்கு
தன் பெயரிட்டு தன் உடைமையாக்கிக் கொள்ளும் கபளீகரச் செயல்பாட்டிற்கு எதிராக தங்கள்
உடைமையை தற்காத்துக் கொள்வதற்குப் போராடினர். அயோத்திதாச பண்டிதர், ஆபிரகாம் பண்டிதர்,
ஆனந்தம் பண்டிதர் ஆகிய மூவரும் இரண்டு புள்ளிகளில் ஒன்றிணைகின்றனர்: <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;">1) இம்மூவரும் வெவ்வேறு
சாதியைச் சேர்ந்தோர் என்றபோதிலும் தொழிலடிப்படையில் தமிழ்ச் சித்த வைத்தியர்கள்<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;">2) பிராமணிய கபளீகரத்திலிருந்து
தமிழர்களின் அறிவுப் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல். இது அந்த மூவரின் தனித்துவம்கூட. <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;">சித்த மருத்துவத்தைப் பாதுகாத்தல்,
தன் சமூக மக்களின் விடுதலை ஆகிய இரண்டு இலக்குகளையும் கைக்கொண்டு பயணித்த பண்டிதர்
உ.வே.சாமிநாத அய்யர், ராஜாஜி, பெரியார் போன்றோருடன் நட்புறவு கொண்டிருந்தார். பிராமணரல்லாதோருடன்
நெருக்கமான உறவைக் கொண்டிருந்த ஆனந்தம் பண்டிதர் பிராமணர் ஆதிக்கத்தை எதிர்த்த போதிலும்
அவர்களை வெறுத்து ஒதுக்கவில்லை, அவர் நடத்திய மருத்துவர் மாநாட்டின் வரவேற்புக்குழுத்
தலைவராகவும் டி.பி. சீனிவாச ஐயங்கார், மாநாட்டுத்தலைவராக ஸ்ரீ நாராயண ஐயங்கார் ஆகியோர்
செயல்பட்டது அதற்குச் சாட்சி. அவருடைய இந்த நற்பண்பின் காரணமாகவே அவர் சென்னை நகர பரிபாலன
சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டபோது தென்னிந்திய மருத்துவர் சங்கம், வியாசர் பாடி ஆதித்திராவிட
ஐக்கிய நாணய சங்கம், கணேசபுரம் கல்வி வளர்ச்சி சங்கம், வாலிபர் கால்பந்துக் கூட்டம்,
சென்னை சிவனடியார் திருக்கூட்டம், ஆரிய சமாஜம் ஆகிய அமைப்புகள் அவருக்கு சென்னையில்
வாழ்த்துக் கூட்டம் நடத்தின. <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;">பிரிட்டிஷ் ஏகாதிபத்திய
எதிர்ப்புப் போராட்டத்தின் போது ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த சாதிச் சங்கங் கள்
பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ‘கைக்கூலிகளாகச்’ செயல் பட்டனர் எனக் காங்கிரஸ் இயக்கம் குற்றம்
சுமத்தியது. பொதுவாகவே பிராமணர் சாதிச் சங்கம் முதற்கொண்டு சாதிய சமூகத்தின் அடித்தட்டிலுள்ள
சாதிச் சங்கங்கள் வரை பிரிட்டிஷ் அரசாங்கத்தைப் போற்றின; ஆனால் தேசப்பற்றை எவ்வாறு
அளவிடுவது என்பதுதான் இங்குச் சிக்கல். சுதேச தொழில்களும் அதனை ஆதார மாகக் கொண்டு வாழும்
மக்களும் பிறரால் தாக்குதலுக் குள்ளாகும்போது அவற்றைப் பாதுகாப்பது தேசப்பற்று என வரையறுக்கலாம்.
கைத்தறி மூலம் துணி உற்பத்தி செய்தவர்களின் வாழ்க்கை பிரிட்டிஷ் ஏகாதபத்தியத்தின் எந்திர
உற்பத்தி கடுமையாகத் தாக்கியபோது கதராடை தேசப்பற்றின் அடையாளமாக முன்னிறுத்தப்
பட்டது; இதர சுதேசி தொழில்களை காங்கிரஸ் கணக்கில் கொள்ளவில்லை. ஆனால் குறைந்த செலவில்
மக்களுக்கு மருத்துவம் கொடுத்துக் கொண்டிருந்த தமிழ்ச் சித்த வைத்தியத்தின் மீது பிரிட்டிஷ்
ஏகாதிபத்தியம் மட்டுமின்றி அதன்மீது தாக்குதல் தொடுத்த ஆயுர்வேத சம்ஸ்கிருத வைத்தியத்தையும்
என்னவென்று வரையறுப்பது? தமிழ்ச் சித்த வைத்தியத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடிய ஆனந்தம்
பண்டிதரை யார் என அடை யாளப்படுத்துவது? உள்நாட்டுத் தொழில்கள் எவையாக இருப்பினும் அவற்றைப்
பாதுகாத்தல் என்பதே தேசப்பற்றின் குறியீடுதான் அந்தவகையில் சித்த வைத்தியத்தைப் பாதுகாத்தலும்
தேசப்பற்றின் அடையாளமே. அவ்வாறென்றால் ஆனந்தம் பண்டிதர் ஒரு பச்சையான தேசப்பக்தர்.
தமிழ்ச் சித்த வைத்தியத்தைப் பாதுகாப்பதற்காக அவர் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்த,
தியாகராய செட்டியார், பனகல் அரசர் ஆகியோரை நினைவுகூறும்விதமாக புதுமாம்பலம் என்ற வந்த
பெயரை தியாகராயநகர், என்றும் அதேபகுதியில் ‘பனகல் பூங்கா’ எனவும் பெயர் சூட்டியவர்
பண்டிதர் ஆனந்தம். அதுமட்டுமல்ல, சென்னையில் நடைபெற்ற மகளிர் மாநாட்டில் ‘பெரியார்
ஈ.வே.ரா.’ என்றழைக்க வேண்டுமென்ற தீர்மானத்தையும் உருவாக்கியவர் ஆனந்தம் பண்டிதரே.
<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;">சித்த வைத்தியத்தில் மட்டுமின்றி
சமூகப், பொருளாதார, அரசியல் துறைகளிலும் புலமை மிக்க ஆனந்தம் பண்டிதர் 1876 மார்ச்
16 அன்று பிறந்து 1972 ஜூன் 18 அன்று மரித்த போதிலும் அவர் போராடி நிறுவனமயமாக்கியுள்ள
தமிழ்ச் சித்த மருத்துவக் கல்லூரிகளில் பயின்று ஒருபோதும் அந்தத் தொழிலைச் சாதித் தொழிலாகக்
கொண்டிருக்காத சாதியினர் சித்த மருத்துவர்களாகி பொருளீட்டுகின்றனர்; மக்களும் சித்த
மருத்துவத்தை நோக்கித் திரும்புகின்றனர் என்றால் அதற்கு அடித்தளமிட்டவர். ஆனால் அந்தப்
போராட்டத்தில் பெரும்பான்மையாகப் பங்குபெற்ற அவருடைய ஆதிமருத்துவர் சாதியினர்
அவர்களின் பாரம்பரிய சித்த மருத்துவத்தை இழந்து நிற்கின்றனர்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;"><span style="color: blue;">இந்தக் கட்டுரை ஆனந்தம் பண்டிதர் மருத்துவன்
இதழ், திராவிடன் பத்திரிகை ஆகியவற்றில் எழுதிய கட்டுரைகள், அவரைப் பற்றி தந்தை பெரியார்,
மறைமலை அடிகள் போன்றோர் எழுதிய கட்டுரைகள் ஆகியவற்றை கோ.ரகுபதி தொகுத்து வெளியிடயிருக்கும்
நூலின் முன்னுரை. </span><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;"><span style="color: red;">புதுவிசை 46</span><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;"> <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
</div>
புதுவிசைhttp://www.blogger.com/profile/09276344793619872435noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8111967010823738396.post-3716554816849778052017-08-31T07:53:00.000-07:002017-08-31T07:53:26.674-07:00இன்னுமொரு இன அழிப்பு...? - எஸ்.செந்தில், ரகுராம் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhx3x5yXG0lkdOhhQL_ZHS6RhcittAAd5bgIzfh6ub8ivv6HmMuXfMaa-lQ9LyDsGpwylR3qj6HZaCmIugBxPGI29b9Tuz2ga0-rNMssIFLXRioiCCP6if37cuyjxuvEpry9n2cSdu65kYd/s1600/myanmar_%2521.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="331" data-original-width="674" height="313" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhx3x5yXG0lkdOhhQL_ZHS6RhcittAAd5bgIzfh6ub8ivv6HmMuXfMaa-lQ9LyDsGpwylR3qj6HZaCmIugBxPGI29b9Tuz2ga0-rNMssIFLXRioiCCP6if37cuyjxuvEpry9n2cSdu65kYd/s640/myanmar_%2521.jpg" width="640" /></a></div>
<blockquote class="tr_bq" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="color: red;">மியான்மாரில் ரோஹிங்ய முஸ்லிம்கள் மீது
கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இனவழிப்புக் கொடுமை பற்றிய இக்கட்டுரை 2012 ஆகஸ்டில் புதுவிசை
36வது இதழில் வெளியானது.</span></span></blockquote>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;"> <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">மியன்மாரின் (பர்மாவின்) வடமேற்கிலுள்ள
அரகான் பகுதியில் வாழும் சிறுபான்மை இனமான ரோஹிங்ய </span><i>(Rohingya)</i><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;"> முஸ்லிம்கள்
மீதான தாக்குதல்களும் கலவரங்களும் ஜூன் 2012 முதல் தீவிரமடைந்துள்ளன. ரமலான் நோன்பைக்கூட
அமைதியாக மேற் கொள்ள முடியாதபடி அவர்கள் மீதான தாக்குதல்கள் இப்போதும் நீடிக்கின்றன.
இந்தக்கலவரங்களை உள்ளூர் புத்தபிக்குகளும் அப்பகுதியின் பெரும்பான்மையினரான ரக்கயன்
இனத்தைச் சேர்ந்த வகுப்புவாதிகளும் வழிநடத்துகின்றனர். பர்மிய பாதுகாப்புப்படையினரும்
இக்கலவரங்களின் கூட்டாளிகளாக இருப்பதாக மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கின்றது. கொலை, வல்லாங்கு, முஸ்லிம்களை
விரட்டியடிப்பது என இந்த பாதுகாப்புப்படையின் இனவெறிச் செயல்கள் அமைந்துள்ளன. இந்தியா
இந்துக்களுக்கே எனக் கூறப்படுவது போலவே பர்மா புத்த பர்மி யர்களுக்கே எனும் வாதம் இந்தக்கலவரத்தின்
பின்னணியாக உள்ளது. <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">இதுவரை 80,000க்கும் அதிகமான ரோஹிங்ய
முஸ்லிம்கள் உயிருக்கும் உடைமைக்கும் பயந்து அகதிகளாக பங்களாதேஷிற்கு புகலிடம் தேடிச்சென்றுள்ளனர். பங்களாதேஷிற்கு போய்ச் சேர்ந்தாலும் சரி, அல்லது
போகும் வழியில் கடந்தாகவேண்டிய நஃப் ஆற்றில் மூழ்கிச் செத்தாலும் சரி பர்மாவிலிருந்து
இப்போதைக்கு தப்பித்தால் போதும் என்கிற பதைப்பே இவர்களிடம் காணப்படுகிறது. ஆனால் பங்களாதேஷ்
பிரதமர் ஷேக் ஹசினா </span><i>(Sheikh Hasina)</i><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;"> அல்ஜஸிர </span><i>(aljazeera)</i><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;"> ஆங்கில பத்திரிகைக்கு
அளித்தப் பேட்டியில் ரோஹிங்ய முஸ்லிம் அகதிகளுக்கு தாங்கள் பொறுப்பேற்க இயலாது எனக்
கூறியுள்ளார். மியன்மரின் அதிபரான தீன் சென் </span><i>(Thein Sein)</i><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;"> முஸ்லிம் சிறுபான்மையினரை
நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் எனக் கூறியிருக்கின்றார். மூன்று தலைமுறைகளுக்கு முன்னால்
(1948 சுதந்திரத்திற்கு முன்னால்) குடியேறிய ரோஹிங்ய மக்களுக்கு மட்டுமே பர்மிய அரசு
பொறுப்பேற்க முடியுமென்றும் அதன் பிறகு வந்தேறியவர்களுக்கு பொறுப்பேற்க இயலாது எனவும்
இவர் 2012 ஜுன் மாதத்தில் தெரிவித்துள்ளார். எட்டாம் நூற்றாண்டிலிருந்தே பர்மாவில்
ரோஹிங்ய முஸ்லிம்களும் வாழ்ந்துவரும் நிலையில் அவரது இந்த அறிவிப்பு வரலாற்றைத் திரிப்பதாகும்.
(இந்த தீன் சென்னைத்தான் பொருளாதார மற்றும்
ஜனநாயக சீர்திருத்தங்களுக்காக உலகநாடுகள் வெகுவாகப் பாராட்டுகின்றன. இதேவகையான பாராட்டு
நரேந்திர மோடிக்கும் கிடைத்திருப்பது தற்செயலானதல்ல) <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">புத்தபிக்குகளின் இக்கலவரத்தை ஐக்கிய
நாடுகள் சபையும் உலக ஊடகங்களும் பல்வேறு மனிதவுரிமை அமைப்புகளும் கண்டுங்காணாது இருக்கின்றன.
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் நவிபிள்ளை விடுத்த ஒன்றிரண்டு அறிக்கைகளைத் தாண்டி செயல்பூர்வமாக
எதுவும் அங்கு மேற்கொள்ளப்படவில்லை. புத்தபிக்கு களை அமைதிவழிக்கு திரும்பும்படி அறிவுரை
கூறி இவ்வினப்படுகொலையைத் தடுக்குமாறு தர்மத்தின் குரலென சிலரால் விதந்தோதப்படுகிற
தலாய் லாமாவிடம் உலக முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை வைத்தன, எனினும் அதனால் எந்தப்பலனும்
இல்லை. ஜனநாயகம் மற்றும் சமாதானத்தின் தூதுவராக முன்னிறுத்தப்படும் ஆங் சான் சூகீ,
ஒரு பேட்டியில் ரோஹிங்ய மக்கள் பர்மியர்களா என்றுகூடத் தெரியவில்லை எனக் கூறியுள்ளார்.
அவரைப் பொறுத்தவரை இம்மக்கள் பர்மாவில் நிரந்தரமாக
வசிப்பவர்கள் தானே தவிர பர்மிய குடிமக்கள் அல்லர். ஒருவேளை அவர்கள் பர்மியர்கள் என்றால்
அவர்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருப்பது மிகவும்
விஷமத்தனமானது. <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">காக்சான் பகுதியில் ஐ.நா. சபை நடத்தும்
அகதி முகாமில் 30,000க்கு மேற்பட்ட ரோஹிங்ய
முஸ்லிம்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான பரிதாபம் பங்களாதேஷில் இருக்கின்றபோதும்
ஏற்கனவே ஏழ்மையும் மக்கள்தொகை நெருக்கடி மிகுந்த இடமாகவும் அது இருப்பதால் இதுவரை ரோஹிங்ய
முஸ்லிம்களுக்கு தனது நாட்டின் கதவுகளைத் திறக்க மறுக்கிறது. ஒரு வேளை பங்களாதேஷ் கதவைத்
திறந்துவிடுமானால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி புத்தமத வெறியர்கள் பர்மாவிலுள்ள அனைத்து
முஸ்லிம்களையும் அடித்து பங்களாதேஷிற்கு விரட்டிவிடுவார்கள் என அது அஞ்சுகிறது.
1992முதல் காக்சான் பகுதியில் அகதிகளுக்கு மருத்துவ உதவி செய்து கொண்டிருக்கிற எல்லையில்லா
மருத்துவர் குழு, ரோஹிங்ய முஸ்லிம் அகதிகள் மீதான தடையை பங்களாதேஷ் உடனடியாக மறுபரிசீலனை
செய்யவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது. தடை நீடிக்குமானால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட
ரோஹிங்ய முஸ்லிம்கள் உயிர் காக்கும் மருத்துவ உதவியின்றி மடிய நேரிடும் எனவும் கூறியுள்ளது.
<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgiAyM-rHaxeYQpUrVoEoCp3NNBeqF0y72_IUwf4P9wwyVRCH4IjXwum59RhpsRTOcRfU7X8NnLjjaydSIqJpTYOFBqH11dbL87gGief3lSpIbYg7RpOnCQgfLhYIrDoZulAEqsmj1mVqYi/s1600/myanmar_3.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="264" data-original-width="333" height="316" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgiAyM-rHaxeYQpUrVoEoCp3NNBeqF0y72_IUwf4P9wwyVRCH4IjXwum59RhpsRTOcRfU7X8NnLjjaydSIqJpTYOFBqH11dbL87gGief3lSpIbYg7RpOnCQgfLhYIrDoZulAEqsmj1mVqYi/s400/myanmar_3.jpg" width="400" /></a></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">புதுடெல்லியிலுள்ள மியன்மார் தூதரகத்திற்கு
எதிரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய தேசிய லீக், சமாஜ்வாடி கட்சி, ஜனதா தளம்,
ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள்
ஒரு சிறு போராட்டத்தை நடத்தியுள்ளன. உலகில் தொடர்ந்து அதிகமான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படும்
சிறுபான்மைச்சமூகங்களில் ஒன்றாக ரோஹிங்ய முஸ்லிம்கள் இருக்கின்றனர் என அப்போது இவர்கள்
கூறியிருக்கின்றனர். <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">இந்தியாவின் கடைசி முகலாய அரசான இரண்டாம் பகதுர்ஷா மியான்மருக்கு நாடு கடத்தப்பட்டு
1862ல் அங்கேயே சிறையில் இறந்தும் போனார். இந்தி யாவிலிருந்து சென்ற முஸ்லிம்களில்
அதிகமானோர் ரங்கூனில் வாழ்கின்றனர். இவர்களும் இதர பர்மிய முஸ்லிம்களும் சேர்ந்து பர்மிய
மக்கள்தொகையில் 4%. <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயே இந்தியர்களுக்கும்,
முஸ்லிம்களுக்கும் எதிரான இனக்கலவரங்கள் வெடித்துள்ளன. இந்தியர்களையும் முஸ்லிம்களையும்
வந்தேறிகளாக கருதி வெறுக்கும் போக்கு இருந்துவந்துள்ளது. 1938லேயே பர்மா பர்மியர்களுக்கே
எனும் கோஷத்துடன் முஸ்லிம் பஜார் பகுதியில் ஒரு ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த வன்முறை
போராட்டத்தை முறியடிக்க அன்றைய இந்திய காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையில் மூன்று புத்தபிக்குகள்
காயமடைந்தனர். இந்தப் படங்களை பர்மிய செய்தித்தாள்கள் பெரிதாக்கி வெளியிட்டன. இதைத்
தொடர்ந்து பெரிய அளவில் கலவரம் பர்மா முழுக்க வெடித்தது. முஸ்லிம்களின் உடைமைகளும்,
வீடுகளும், 113 மசூதிகளும் சூறையாடப்பட்டன. இதைத் தொடர்ந்து 1938 செப் 28ல் பிரிட்டிஷ்
கவர்னர் அமைத்த ஒரு விசாரணைக்கமிசன், பொருளாதாரம்
மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த பிரச்சினைகளே இக்கலவரத்திற்கு காரணம் எனக் கூறி யது.
எல்லா சிறுபான்மையினருக்கும் முழுக்குடியுரிமை வழங்கவேண்டும் என்று இதற்குப்பின் வந்த
சைமன் கமிசன் கூறியது. சுதந்திரமான வழிபாட்டுரிமை, சொத்து ரிமை, பொது வருவாயிலிருந்து
பள்ளிகளை நடத்தக் கூடிய உரிமை, இந்தியாவிலிருந்து தனிநாடாக பர்மிய சுயாட்சி ஆகியவை
இருக்கவேண்டுமெனவும் சைமன் குழு பரிந்துரைத்தது. <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">1948ஆம் ஆண்டு சுதந்திர பர்மாவின் முதல்
பிரதமராக பொறுப்பேற்ற யு-நு </span><i>(yu-nu)</i><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">, 1956ல் புத்த மதத்தை பர்மிய அரசின்
மதமாக அறிவித்தார். மதச்சார்பற்ற, எல்லா இனக்குழுக்களுக்கும் பொதுவான ஒரு தேசம் என்கிற
பர்மிய அரசியல் சாசன வரையறுப்புக்கு விரோதமான இவ்வறிவிப்பு சிறுபான்மையினரை கோபம் கொள்ளச் செய்தது. 1962ல்
முஸ்லிம்களின் நிலை மேலும் மோசமடைந்தது. அவர்கள் ராணுவத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்பது போன்ற வாதங்கள் வலுப்பெற்றன. கருப்பர் (கலா) என்று
பர்மிய முஸ்லிம்களை இனத்துவேஷத்துடன் குறிக்கும் போக்கும் வலுப்பெற்றது. 1997ம் ஆண்டு
ஒரு முஸ்லிம் ஆண் வன்புணர்ச்சியில் ஈடுபட்டார் எனக் குற்றம்சாட்டி 1000 புத்தபிக்குகள்
மசூதிகளையும், கடைகளையும், வாகனங்களையும் சூறையாடினர். இதையொட்டி மாண்டலேவில் மூன்றுபேர்
இறந்தனர், 100 புத்தபிக்குகள் கைது செய்யப்பட்டனர். <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">2001ம் ஆண்டு சிட்வே </span><i>(sittwe)</i><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;"> பகுதிகளிலும்
முஸ்லிம்களுக்கும் புத்தமதத்தவர்க்கும் இடையே மோதல் நிலை உருவானது. இளந்துறவிகள் 7
பேர் கேக் தின்றுவிட்டு முஸ்லிம் கடைக்காரருக்கு காசு கொடுக்கவில்லை என்றும், கடைக்காரரான
முஸ்லிம் பெண்மணி ஒரு துறவியை அடித்துவிட்டார் என்றும் இதைத் தொடர்ந்து மற்ற புத்தத்துறவிகள்
பிரச்சனையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் கூறி பெரும் கலவரம் வெடித்தது. புத்தத் துறவிகள்
முஸ்லிம்களின் வீடுகளையும் கடைகளையும் பெட்ரோல் ஊற்றி எரித்தனர். 2001ம் ஆண்டு
"நம் இனம் அழிந்து காணாமல் போகும்" என்பது போன்ற முஸ்லிம்களுக்கு எதிரான
துண்டுப்பிரசுரங்கள் புத்தபிக்குகளால் விரிவாக விநியோகிக்கப்பட்டன. 2001 கலவரத்தின்
போது கலவரக்காரர்கள் செல்போன் வைத்திருந்ததாகவும், எனவே அரசுத்தலையீடு இல்லாமல் இது
சாத்தியமில்லை எனவும் கூறப்படுகின்றது.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFbvsRvOuO8HepCTS92gOT551atnkZiBkW4zk7HTRtpCRPDgscIpqL0creR7IiklRTFNRAza7kh_fAtclSq-3eBnNoYXl_nt6mzHlIsK3JUgmOv5DZRUEPsZtaOFv7L9Vbs_lx33knHC6-/s1600/myanmar_2.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="262" data-original-width="329" height="254" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFbvsRvOuO8HepCTS92gOT551atnkZiBkW4zk7HTRtpCRPDgscIpqL0creR7IiklRTFNRAza7kh_fAtclSq-3eBnNoYXl_nt6mzHlIsK3JUgmOv5DZRUEPsZtaOFv7L9Vbs_lx33knHC6-/s320/myanmar_2.jpg" width="320" /></a></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;">ஆப்கானிஸ்தான் பாமியன் பகுதியில் புத்தர்
சிலை உடைப்பு நடந்ததையொட்டி பர்மாவில் முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலை மேலும் மோசமாகியது.
பாமியானில் புத்தர் சிலை உடைக்கப்பட்டதற்கு எதிராக டாங்கு </span><i>(toungoo)</i><span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;"> பகுதியிலுள்ள
ஹந்த </span><i>(Hantha)</i><span style="font-family: TAM-Tamil004; font-size: 12pt;"> </span><span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;">மசூதி இடிக்கப்படவேண்டுமென புத்தபிக்குகள்
சொல்லத் துவங்கினர். இவர்கள் தலைமையில் 11 மசூதிகள் இடிக்கப்பட்டன, 400 முஸ்லிம்களின் வீடுகள் கொளுத்தப்
பட்டன, 200 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். டாங்கு பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
2001 மே 18, ஹந்த மசூதியும் டாங்கு ரயில்நிலைய
மசூதியும் இடிக்கப்பட்டன. முஸ்லிம்கள் தங்கள் வீடுகளிலேயே தொழுகை செய்யும் நிலைக்குத்
தள்ளப்பட்டனர்.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">ரோஹிங்ய முஸ்லிம்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டு
ஐ.நா. அகதி முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டுமென அதிபர் தீன் சென் 2012 ஜூனில்
கூறியதைத் தொடர்ந்து தற்போது ரக்கயன் பகுதிகளில் இன்னொரு இனப்படுகொலை துவங்கியுள்ளது. <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">பல்வேறு பர்மிய அரசியல் அமைப்புகளுக்குள்
ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு எதிரான பகைமை தலை தூக்கியுள்ளது. இந்த பாசிஸ்ட் கலவரம் மிகவும்
நுணுக்கமாக திட்டமிட்டு செயல்படுத்தப்படுகிறது. முஸ்லிம் தரப்பு ஏதாவதொரு சிறு தவறு
செய்யும்வரை காத்திருந்து அத்தவறைப் பயன்படுத்தி அந்தப்பகுதியிலுள்ள முஸ்லிம்களை விரட்டியடிக்கும்
தந்திரம் கையாளப்படுகிறது. ரக்கயன் </span><i>(Rakhine) </i><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">புத்தபிக்குகளே
இக்கலவரத்தைத் துவக்கியதாக ரோஹிங்கிய முஸ்லிம்களும், ரோஹிங்கிய முஸ்லிம்களே இதற்கு
காரணம் என ரக்கயன்களும் மாறிமாறி குற்றம்சாட்டுகிறார்கள். பர்மிய உளவுத்துறையின் பல
ஏஜெண்டுகள் புத்தபிக்குகளாக உள்ளனர் என்றும் இவர்களே இக்கலவரத்திற்கு தலைமையேற்றுள்ளனர்
என்றும் கூறப்படுகிறது. வன்முறையைத் தூண்டும் புத்தபிக்குகளுக்கும், வன்முறையை விரும்பாத
புத்தபிக்குகளுக்கும் இடையே ஒரு பிளவு உள்ளதாகவும் தெரிகிறது. <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">மியான்மர் வெளியுறவுத்துறை அமைச்சகம்
தற்போதைய கலவரம் பற்றிய விளக்க அறிக்கை ஒன்றை 30.07.2012 அன்று வெளியிட்டுள்ளது. ஐ.நா.சபைக்கும் அனுப்பப்பட்டுள்ள அந்த அதிகாரப்பூர்வ
அறிக்கையின் படி, 2012 மே 28 அன்று மூன்று முஸ்லிம் இளைஞர்கள் புத்தமதத்தைச் சேர்ந்த
ஒரு பெண்ணை வன்புணர்ச்சி செய்ததாகவும் அதற்கு
பதிலடியாக 10 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாகவும், அதையொட்டி புத்தமதத்தை பின்பற்றுபவர்களுக்கும்
முஸ்லிம்களுக்குமிடையே கலவரம் மூண்டதாகவும், இதில் இருதரப்பினரும் சமமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது முஸ்லிம்களுக்கு
எதிரான கலவரம் அல்ல என்றும், இருதரப்பிலிருந்தும் மொத்தமாக 77 பேர் மட்டுமே இறந்துள்ளதாகவும்,
பெரிய அளவில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டுக் கிடப்பதாக வெளியாகியுள்ள புகைப்படங்கள் போலியானவை
என்றும், கலவரத்தில் அரசின் ஈடுபாடு உள்ளது எனும் வாதம் பொய் என்றும்
கூறப்பட்டுள்ளது. <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">எந்தக் கொலையாளியும் உண்மையை ஒப்புக்கொள்வதில்லைதானே?
சேனல் 4 வீடியோக்காட்சிகள் போலியானவை என்று ராஜபக்ஷே கும்பல் வாதாடவில்லையா? பெண்போலிசை
மானபங்கத்திலிருந்து காப்பாற்றவே தாமிரபரணியிலும் பரமக்குடியிலும் துப்பாக்கிச்சூடு
நடத்தவேண்டியதாகிவிட்டது என்று தமிழ்நாட்டு போலிஸ் தலித்துகள் மீது பழிபோடவில்லையா?
பர்மா அரசும் அப்படித்தான், முஸ்லிம்களை காமுகர்களாக சித்தரித்துக் காட்டி தனது இஸ்லாமிய
எதிர்ப்பு மற்றும் இனஅழிப்புக் கலவரங்களையும் கொலைகளையும் நியாயப்படுத்த முயற்சிக்கிறது.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">சர்வதேச சமூகத்தின் முன்னே வைக்கப்படும்
மேற்சொன்ன அறிக்கையில், மியான்மர் பன்முக கலாச் சாரமும் வேறுபட்ட வழிபாட்டு முறைகளும்
பல்வேறு மதநம்பிக்கைகளும் கொண்ட இனங்கள் ஒன்றுபட்டு வாழும் நாடு என்று பீற்றிக்கொண்டாலும்
ரோஹியாங் முஸ்லிம்களை நாடற்றவர்களாக்கிடும் அரசின் இழி முயற்சி ஓயவில்லை.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">பத்திரிகையாளர்களுக்கு கலவரப்பகுதியில்
அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாலும், எல்லா தகவல் தொடர்பாளர்களுக்கான வழியும் அடைக்கப்பட்டுள்ளதாலும்
நிலைமையை உறுதி செய்துகொள்ள இயலாத நிலை இருக்கிறது. இதைப்பற்றி அல்ஜஸிர </span><i>(aljazeera)</i><span style="font-family: TAM-Tamil004; font-size: 12.0pt; mso-bidi-font-family: TAM-Tamil004;">,
</span><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">அரபு
நியூஸ் </span><i>(Arabnews),</i><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">,
ரடியாண்ட்ஸ்விக்கி </span><i>(Radiantswiki)</i><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">
போன்ற பத்திரிகைகளின் இணையதளங்களில் வெளியாகும் கட்டுரைகளும் செய்திகளும் நம்
காலத்திலேயே நமக்கு மிக அருகாக இன்னொரு இன அழிப்பு நடந்துகொண்டிருக்கிறது என்ற திகிலூட்டும்
உண்மையைத் தெரிவிக்கின்றன. இஸ்லாமிய எதிர்ப்பு மனோபாவத்தால் பீடிக்கப்பட்டிருக்கின்ற
கார்ப்பரேட் ஊடகங்கள் கொல்லப்படுவது இஸ்லாமியர்கள் தானே என்று பாராமுகமாகவே இருக்கின்றன.
நாமும் மௌனம் மட்டுமே காப்போமானால் அது சிறுபான்மையினருக்கு எதிரான போர்க்குற்றத்திற்கும்
இனவழிப்புக்கும் துணைபோவதன்றி வேறல்ல என்பதை
இலங்கையின் வரலாறு நமக்கு ஏற்கனவே தெரிவித்துள்ளது. <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<br />
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
</div>
புதுவிசைhttp://www.blogger.com/profile/09276344793619872435noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8111967010823738396.post-78803127561769237292017-08-27T18:08:00.004-07:002017-08-27T18:08:34.993-07:00நேர்காணல் : அருந்ததி ராய் எழுத்து, போராட்டம் மற்றும் சீருடல் பயிற்சி...?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3zFcFIHOktH6LM-X2f0z4Jc5Pvt04ZKlp7br_gdQH8csxcC07o4U8YQ7iGRraV9yHQvmiU0tXNELlPLDXaMkKIUXk1xptE8MRdqWxsVjhRm1e_Emb8LNpFWZuM0ocd2yU4KJr3gij6n0S/s1600/3.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1040" data-original-width="794" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3zFcFIHOktH6LM-X2f0z4Jc5Pvt04ZKlp7br_gdQH8csxcC07o4U8YQ7iGRraV9yHQvmiU0tXNELlPLDXaMkKIUXk1xptE8MRdqWxsVjhRm1e_Emb8LNpFWZuM0ocd2yU4KJr3gij6n0S/s400/3.jpg" width="305" /></a></div>
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><span style="font-size: 12pt;">எழுத்தாளராகவும், சிந்தனையாளராகவும்,
அரசியல் செயல்பாட்டாளராகவும் அறியப்படும் அருந்ததிராய் அவர்களின் மனம்திறந்த பேட்டி
எல் </span>(ELLE)<span style="font-size: 12pt;"> என்ற ஃபேஷன் இதழில் வெளிவந்திருக்கிறது. காட் ஆஃப் ஸ்மால் திங்க்ஸ்
மூலம் உலகப்புகழ் பெற்றிருந்த அருந்ததிராய், ஃப்ராஸ்ட் கவிதையின் 'குறைவான பேர் பயணித்த
சாலையை' விரும்பி தேர்ந்தெடுத்தார். மாவோயிஸ்ட்களுடனும், பழங் குடி மக்களுடன் காடுகளில்
நடந்தார். ஒரு வழக்கமான இலக்கியவாதியின் தந்திரத்தைக் கொள்ளாமல் அரசை விமர்சித்தார்.
அவருடைய தீவிரமான நிலைப்பாடுகளும், காத்திரமான விமர்சனங்களும் அரசை நிலைகுலையச் செய்தன.
வழக்குகள், கைது, மிரட்டல், தாக்குதல், அவதூறு என்று சோதனைக்குள்ளானார். அதேநேரத்தில்
இவை தவிர்க்கவியலாமல் இந்திய இடதுசாரி தரப்பின் முக்கிய ஆளுமையாக அவரை உயர்த்தியது.
அருந்ததி ராயின் தனித்துவமான தனிவாழ்வு பேரவா ஏற்படுத்தும் ஒன்று. இப்பேட்டியின் பெரும்பகுதி
அதைச் சுற்றியே சுழல்கிறது. தனதுதாய், சகோதரர், கணவர், குழந்தைகள், தோழிகள், பிடித்த
எழுத்தாளர்கள், புதிய நாவல், விரும்பும் உடைகள், உடற்பயிற்சியக அனுபவங்கள் குறித்த
தகவல்களை உற்சாகமாகப் பகிர்ந்திருக்கிறார். என்ன பேச நினைத்தாலும் அது அரசியலாகவே திமிறுகிறது.
இந்த வித்தியாசமான பேட்டியை எல் இதழ் சார்பாக <b>ஐஸ்வர்யா சுப்ரமணியம் எடுத்திருக்கிறார்.
தமிழில்: ராஜ்தேவ்</b></span></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">***<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;">எல் இதழின் அட்டைப்படத்தில் நீங்கள்
எப்படி?</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">அது நரையின் செருக்கு! எல்லின் அட்டையில்
பெண்கள் வருவதற்கான நேரம் வாய்த்திருக்கிறது. கண்ணாடி செருப்புகளை அணிந்துகொண்டு மிடுக்காக
சுற்றிவரும் சின்ட்ரல்லாவின் தீய மூத்த சகோதரிகள் வெளிச்சத்துக்கு வரும்நேரம்வந்துவிட்டது.
ஏன் குறிப்பாக எல்? ஏனெனில் கருப்புநிற பெண்களை யெல்லின் அட்டைப் படங்களில் பார்த்துள்ளேன்.
நான் அதை விரும்பினேன். நான் ஒரு கருப்புநிற பெண். நம்மில் பலரும் அந்த நிறம் தான்.
தொண்ணூறு சதவீதம் கருப்பு நிறமே. வெள்ளை நிறம் மீதும், நேர்முடி மீதும் இந்தியர்களுக்கு
இருக்கும் பற்று என்னை வாட்டும் ஒன்று. நமக்கு ஒரு புதிய அழகியல் தேவைப்படுகிறது. எல்
அதற்கு முயற்சிப்பதை பார்க்கிறேன். அது விந்தையானது. நான் அந்த நோக்கத்தை உயர்த்திப்
பிடிக்க இங்கு வந்துள்ளேன்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">இது என்னை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது.
ஆனால், மற்றவர்கள் உங்களை எப்படி பார்ப்பார்கள், உங்கள் நம்பகத் தன்மை போன்றவற்றை மோசமாக
மதிப்பிடமாட்டார்களா?<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">ஓ! எனது நம்பகத்தன்மை முதலியவை. ஆமாம்
ஆமாம். ஆனால் நான் விமர்சனங்களை எதிர்கொள்ள துணிந்து விட்டேன். அச்சுறுத்தக்கூடிய,
நரைத்த தலைமுடி உடைய வயதான பெண்மணிக்குள், பரவசம் நிறைந்த கறுத்த தலைமயிர் கொண்ட
22 வயதின் வேட்கை ஒன்று வெளிவரத் துடிப்பதை நான் இந்த உலகுக்கு தெரியப்படுத்த விழைகிறேன்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><span style="font-size: 12pt;">எனக்கு தெரிந்ததுதான் அது. ஸ்நோடெனுடன்
உங்கள் சந்திப்பை முன்வைத்து ‘சொல்லக்கூடியவையும், சொல்லக் கூடாதவையும்’</span>(Things That Can And Cannot Be Said) <span style="font-size: 12pt;"> என்ற தலைப்பில் இப்போது ஒரு புத்தகம்
உங்களிடமிருந்து அடுத்தமாதம் (ஜூலையில்) வெளிவர இருக்கிறதே.<o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">அது ஒரு சிறிய புத்தகம். ஜான் கசாக்குடன்
இணைந்து எழுதியது. ஸ்நோடெனை ரஷ்யா சென்று சந்திக்கும் ஆலோசனையை ஜான் கசாக்தான் வழங்கினார்.
பல வகைகளில் ஸ்நோடென் தனித்துவமானவர். முழுமை யான வாக்கியங்களுடன் மிகவும் தொடர்ச்சியாக
பேசக் கூடிய சிலரை மட்டுமே பார்த்துள்ளேன். ஒரு புஷ் ஆதரவாளராக வலதுசாரி முகாமிலிருந்து,
இராக் போருக்கு ஆதரவாக கையெழுத்தும் இட்டிருந்த அவர் இன்று வந்திருக்கும் இடம்- திகைக்க
வைக்கும் ஒரு பயணம். நாங்கள் இரண்டு நாட்களை முழுமையாக அவருடன் கழித்தோம். ஜான் கசாக்,
டேனியல் எல்ஸ்பெர்க் மற்றும் நான். பென்டெகன் தொடர்பான தகவல்களை கசிய செய்து டேனியல்
60களின் ஸ்நோடென் என்று பெயர் பெற்றவர். அது ஒரு வசீகரிக்கும், நெகிழ்ச்சியான உரையாடல்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">ஏதாவது பதிவு செய்ய முடிந்ததா?<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">ஸ்நோடென் எங்களை பதிவு செய்ய அனுமதித்தார்.
பின்னர் அவற்றை எழுத்துப்பூர்வமாக வடித்து, தொகுத்து அனுப்பியபோது அதனை அவர் பதிப்பிக்க
விரும்ப வில்லை. பரிகாசம் மற்றும் கேலிமிகுந்து இருந்தது கூட காரணமாக இருக்கலாம். அவருடைய
நிலை மிகவும் கடினமானது. எனவே அவர் கவனமாக இருக்கவேண்டும். ஆனால் அதுவல்ல அந்த உரையாடலின்
தன்மை. அது கொஞ்சமும் மதிப்பு பெறவில்லை. ஆனால், துர திருஷ்டவசமாக, ‘சொல்லக்கூடியவையும்,
சொல்லக் கூடாதவையும்’ நூல் ஸ்நோடெனின் நேர்ச்சொல்லாக எதையும் கொண்டிருக்கவில்லை. அது
மிகவும் சங்கடமானது. இணையம், கண்காணிப்பு மற்றும் அதை நடை முறைப்படுத்தும் முறை போன்று
அவர் நன்கறிந்த வற்றை சொல்லும் போது நம்மை வாய்பிளக்கச் செய்யும் அளவுக்கு அறிவுக்கூர்மையுடன்
இருக்கிறார். கேலி மற்றும் நையாண்டிக்கு அப்பால் அந்த நூல் தேசியம், ஏகாதிபத்தியம்,
போர், முதலாளித்துவம், கார்ப்பரேட் உதவி மற்றும் கம்யூனிசத்தின் தோல்வி போன்ற தீவிர
மான பிரச்சினைகள் பற்றிய எண்ண அலைகள் எனலாம். நூலின் இறுதிப்பாகம் மிகவும் அதிர்ச்சிகரமானது.
அணு ஆயுதப்போட்டியில் அமெரிக்க அரசு ஈடுபடுவது பொய் தகவல்களின் அடிப்படையில் என்றார்
எல்ஸ்பெர்க்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">நீங்கள் ஒழுங்குமுறையை கடைபிடிக்கும்
ஓர் எழுத்தாளரா?<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">நான் கொஞ்சம் ஒழுங்குமுறையை கடைபிடிப்பேன்.
இப்போது மிகக்கடுமையாகக் கடைபிடிக்கிறேன். ஏனெனில் ஒரு புதிய புத்தகத்தை எழுதிவருகிறேன்.
நான் ஒவ்வொரு நாளும் வீட்டில் எனது மேசையில் எழுதி வருகிறேன். சிலநேரங்களில், நாள்போவதே
தெரியாமல் இருந்திருக்கிறேன். திடீரென சுற்றிப் பார்க்கும்போது இருண்டிருக்கும். கணினித்திரையில்
இருந்து மட்டுமே வெளிச்சம் வந்துகொண்டிருக்கும். கடந்தவாரம் வேக வைக்க நினைத்த முட்டையை
இரும்புச்சட்டியில் கருகவிட்டு விட்டேன். சமையலறையில் புகை சூழ்ந்தது. இந்த வாரம்
மறுபடியும் முட்டை கருகிவிடுமோ என்று பயந்துபோய் ஓடிச்சென்று தீயை அணைத்தபோது தான்
தெரிந்தது இரும்புச்சட்டியில் முட்டை இல்லை என்று. கொஞ்சம் பைத்தியம் பிடித்தது போன்றுதான்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">புதிய நாவல்! நாங்கள் எல்லோரும் காத்திருக்கிறோம்.
எப்போது வெளிவருகிறது?<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">அடுத்த வருடம் வந்துவிடும் என்று நினைக்கிறேன். <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">சின்ன விசயங்களின் கடவுள் வெளியாகி இருபது
வருடங் கள் கழித்து புதிய நாவல் வெளிவருகிறது. எதிர்பார்ப்புக்குரியதாக என்ன இருக்கிறது?<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">என்ன வேண்டுமானாலும் கற்பனை செய்துகொள்ளுங்கள். இது சின்ன விசயங்களின் கடவுள் II.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">ஏன் இப்போது எழுதத் தீர்மானித்தீர்கள்?<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">நான் முடிவு செய்யவில்லை, அது முடிவு
செய்துகொண்டது. சிலவருடங்களாகவே அதனை சுற்றி நான் சிந்தித்து கொண்டிருக்கிறேன். புனைவு
என்று வரும்போது நான் அவசரப்படுவதில்லை. கடந்த 20 வருடங்களாக நான் அதிகமான பயணத்தையும்,
எழுத்தையும் மேற்கொண்டி ருக்கிறேன். அவை ஒரு பாறையாக என்னுள் படிந்துள்ளதை உணர்கிறேன்.
உங்களுக்குத் தெரியுமா? அந்தப் புரிதல்கள் பல அடுக்குகளாக படிந்துள்ளன. அவற்றை புனைவாக
அல்லாமல் வேறு எப்படியும் கூறிட இயலாது. நீங்கள் அங்கே அமரவேண்டும். பல அடுக்குகள்
கொண்ட அந்த அனுபவம் அவிழ்ந்து உங்கள் மரபுப் பொருளின் ஒரு பகுதியாக மாறவேண்டும். பின்னர்
அது உரைநடையாக வியர்த்து வெளியேற வேண்டும்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">உங்கள் புனைவு சுயவரலாற்றுத்தன்மை கொண்டதா?<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">சுயவரலாறு என்று எதை சொல்கிறீர்கள்?
எது எதார்த்த வகைப்பட்டதாகும்? நீங்கள் கற்பனை செய்துகொள்ளும் ஒன்று சுயவரலாறு ஆகுமா?
உங்கள் கற்பனையில் நீங்கள் அனுபவத்த ஒன்று? உங்கள் கற்பனையில் இன் னொருவரின் வலியையோ,
மகிழ்ச்சியையோ உணர்வது சுய வரலாறா? எனக்கு தெரியவில்லை. அடையாளம் மற்றும் பிரதிநிதித்துவம்
பற்றி பெரும் விவாதம் நடந்தி ருக்கும் நிலையில் இது மிகப்பெரிய கேள்வியாகவும், ஒரு
புனைவெழுத்தாளருக்குப் பெரும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகவும் இருக்கிறது.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">நீங்கள் எழுதும் முறை என்ன?<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">நான் அதைப்பற்றி பேசமுயன்றால், என்னுடைய
பேச்சு சிறிது தொடர்பற்றதாகிவிடுகிறது. ஏனெனில், நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன்
என்று என்னால் முழு மையாக உணரமுடியவில்லை. என்னுடைய கதையாடல் கட்டவிழ்கின்ற முறை எனக்கு
மிக முக்கியமானது. இதோ என்னிடம் ஒரு வசீகரக் கதை இருக்கிறது. நான் அதை சொல்லப்போகிறேன்
என்பதை போன்றல்ல. நான் அதுபோன்று எழுதுவதில்லை. அதிலும் குறிப்பாக நான் எழுதிக்கொண்டிருக்கும்போது,
என்னால் அதை ஒரு கோட்பாட்டுக்குள் கொண்டுவர இயலாது. நான் அதை புரிந்துகொள்ளவும், விளக்கவும்
சிரமப்படுவேன். நான் உட்கார்ந்து எழுதுவது மிக முக்கியம் என்று சொல்வேன். மேலும் அது
புத்தகமாக எப்போதுமே அங்கு இருக்கி றது என்று சொல்வேன். உங்களுக்கு தெரியுமா?
உங்கள் மண்டைக்குள் இசை ஓடுவதைப் போன்று. ஏதாவது ஒருவகையில் அதுபற்றி சிந்திக்காத ஒரு
பொழுதில்லை. அது அங்கு இல்லாத ஒரு நொடிப்பொழுதும் இல்லை. அது ஒருவகையான ஆட்கொள்ளல்
என நினைக்கிறேன்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">இது ஒருவகை ஆட்கொள்ளல் போலுள்ளதே.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">நீங்கள் ஒரு கதையை உடமையாக்குவதல்ல;
உங்களை ஒரு கதை உடமையாக்குவதை உணரவேண்டும். பின்னர் அது எப்படி சொல்லப்பட வேண்டுமென்று
அது சொல்ல நீங்கள் காத்திருக்கவேண்டும். அது என்னுடைய அனைத்து அறிதிறன்களுடனும் உறவாடும்.
நான் அதை தடுக்காமல் நன்றியுடன் இருப்பேன். அது மிக அழகா னது. அது நீங்கள் ஏதோ அற்புதமான
ஒன்றை செய்கி றீர்கள் என்று பொருளில்லை. அப்படி இல்லாமலும் இருக்கலாம். ஆனால், ஏதோவொன்று
வாழ்க்கையில் உங்களை முழுமையாக ஆட்கொள்ளும். அது ஒரு கொடை. இந்த உலகில் புனைவு எழுதுவதை
போன்று என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்கும், ஆட்கொள்ளும், வருத்தும் ஒன்று வேறெதுவும் இல்லை.
ஆனால், பெரும்பாலான நேரம் நான் உணர்வது என்னவென்றால், என்னுடைய பணி என்பது கவனம் குவித்து
புத்தகம் தன்னை எழுத விடுவதுதான்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">கட்டுரைகள் பற்றி?<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">எனது கட்டுரைகள் ஒரு அவசரத்தன்மையுடனும்,
சிறிது கோபத்துடனும் எழுதப்படுபவை. ஒவ்வொரு முறை அரசியல் கட்டுரை எழுதும்போதும், இன்னொரு
கட்டுரை நான் எழுதமாட்டேன் என்று நான் சொல்லிக் கொள்வேன்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">பிறகு இன்னொன்றை எழுதிவிடுவீர்கள்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">ஆம். அது எப்படியென்றால், வேறொருவர்
அதைப் பற்றி எழுதவேண்டும் என்று எப்போதும் விரும்புவேன். உங்களுக்கு தெரியுமா? ஆனாலும்
நான் எழுதுவதற்கு காரணம், என்னால் அதைக் கட்டுப்படுத்த இயலாததை உணர்வதால்தான். நான்
அதை எழுதத் துவங்கிவிட்டால், நாளொன்றிற்கு 20 மணிநேரம் வெறித்தனமான ஈடுபாட்டுடன் எழுதுவேன்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">நீங்கள் 17 வயதில் வீட்டைவிட்டு வெளியே
வந்துள்ளீர்கள். அம்மாவுடன் ஏதும் பிரச்சினையா?<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">என்னால் வீட்டில் வாழமுடியவில்லை. அது
பெரும் மனவேதனையாக அப்போதிருந்தது. ஆனால், வீட்டை விட்டு வெளியேறியதை பல வழிகளில் அதிர்ஷ்டமாக
உணர்கிறேன். எனது தாய்தான் எனது ஆக்கச்சக்தியும், அழிப்புச்சக்தியுமாக இருந்தார். அவர்
முன்னிலையில் நான் நொறுக்கப்பட்ட ஒரு ஈரல். அவர் ஓர் அழகான பள்ளியைத் துவக்கினார்.
அதன் மூலம் அங்கு படிக்கும் மாணவர்களின் வாழ்வில் ஒரு மாற்றத்தை கொண்டு வந் தார். பல
தலைமுறைகளாக இது நடந்துகொண்டிருக்கி றது. அவர் அவராக இருப்பதை மெச்சுகிறேன். அதே நேரத்தில்
அந்த உணர்ச்சியில் நான் கருகிப் போய்விடக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்கிறேன்.
நாங்கள் இருவரும் இரு அணுஆயுதச் சக்திகள். மிக அருகாமை யில் நாங்கள் நீண்டநாட்களுக்கு
இருக்க முடியாது.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">இப்போது அவருடன் உங்களுக்கு ஒட்டுறவு
இருக்கிறதா?<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">நாங்கள் ஒரு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு,
அதனை மதித்து நடக்கிறோம். ஆனால், ஒரு போர் ஏற்பட்டுவிட்டால், நான் தெளிவாகவும், ஐயத்துக்கு
இடமின்றியும் சொல்லிவிடுகிறேன்- எனது தாய் தான் வெற்றி பெறவேண்டும். நான் அவரை தோற்கடிக்க
விரும்பவில்லை.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">இது ஒரு விசேடமான உறவாக தெரிகிறதே.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">உண்மைதான். ஆனால் எந்தக் கோணத்திலிருந்து
பார்த் தாலும் அது அழகற்ற ஒன்று. இப்படி சொல்லலாம். நேர் திசை என்றாலும், எதிர்திசை
என்றாலும் அல்லது, வாய்ப்புள்ள எந்த வழியாக இருந்தாலும் நான் இருப்ப தன் மையம் அம்மாதான்.
அவள் விசேடமான பெண். மணி. பெண்களுக்கு இருக்கும் எந்த தாய்மைக்குணமும் அவருக்கு இருந்ததில்லை.
ஒருவேளை தாய்மைக்குணம் இல்லாதது தான் நான் வியக்க காரணமா என்றும் தெரிய வில்லை. அல்லது
சிலநேரங்களில் ‘கொஞ்சம் விநோதம் குறைவாக இருக்கக்கூடாதா?' என்று நினைத்துக்கொள் வேன்.
ஆனால், இல்லை, இல்லை. அது உண்மை இல்லை.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">வேறு என்ன வகையான பண்புநலன்கள்?<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">ஒருமுறை என்னை தொலைபேசியில் அழைத்து
‘நான் வெளியே சென்றிருந்தபோது, என்னை அருந்ததி ராயின் அம்மாவா என்று கேட்டார்கள். கன்னத்தில்
அறைந்தது போன்று உணர்ந்தேன்!' என்றார். எனது பாதி மனநிலை சிரித்துக்கொண்டது. மீதி பாதி,
‘அப்படி கேட்டது என்ன ரொம்ப தப்பா?' என்று சொல்லிக்கொண்டது.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">ஆ! அம்மாக்கள்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">அம்மா நீண்டகாலமாகவே உடல்நிலை சரியில்லாதவர்.
கடும் ஆஸ்துமாவால் பீடிக்கப்பட்டவர். ஆஸ்துமா உள்ளவர்களின் இயக்கத்தை மூச்சுதான்
கட்டுப்படுத்தும். அதுபோல தான் என்னையும் அவரது மூச்சு கட்டுப்படுத் தியது. அம்மா இறந்துவிடுவாரோ
என்ற அச்சத்துடனே வளர்ந்தேன். ஒவ்வொரு மூச்சிலும் அவர் அனுபவிக்கும் வலியையும், மீட்சியையும்
கண்ணுற்றேன். பலநாட்கள் அம்மாவுடன் மருத்துவமனையில் எனது நேரம் கழிந் தது. சிலமாதங்களுக்கு
முன்னர் அவர் நோய்வாய்ப்பட் டார். காற்றூட்டக் கருவி பொருத்தும் அளவுக்கு உடல் நிலை
மோசமடைந்தது. இப்போது மீண்டெழுந்து மறுபடியும் தனது வேலைகளில் மும்முரமாக உள்ளார்.
அவர் ஆட்சிப்பகுதி மறுபடியும் அவர் கைகளுக்கு வந்துள்ளது. அடிப்படையில் அவர் ஒரு ஹூடினி-
தப்பிக்கும் கலைஞர். எனது அம்மாவைப் பற்றி சொல்ல ஒரு புத்தகம் தேவைப்படும். என்னால்
மட்டுமே எழுத முடியும். அது வேறெவராலும் முடியாது.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">நான் அதை படிக்க விரும்புகிறேன். உங்களை
பாதித்த வேறு பெண்கள் யார்?<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">என் அம்மா என் அப்பாவை விட்டு பிரிந்தபோது
அசாமி லிருந்து ஊட்டிக்கு வந்தார். அப்போது பணமில்லாம லும் நோய்வாய்ப்பட்டும் இருந்தார்.
எழுந்திருக்க இயலா மல் படுக்கையிலே சும்மா படுத்துக் கிடப்பார். வீட்டில் நான் மற்றும்
சகோதரருடன் மூன்று அல்லது நான்கு பேர் உண்டு. எங்களை கடைவீதிக்கு ஒரு கூடையுடனும் ஒரு
குறிப்புடனும் அனுப்புவார். அந்த குறிப்பை படித்து விட்டு கடைக்காரர்கள் பொருள்கள்
மற்றும் காய்கறி களை கூடையில் போடுவார்கள். அதன் பிறகு குருசம் மாள் என்ற பெண் எங்களுடன்
இணைந்தார். அவர் எங் களை கவனித்துக்கொண்டார். அவர் எங்கிருந்து வந்தார் என்று எனக்குத்
தெரியாது. அதன்பிறகு நான்கு வருட காலம் அம்மாவுடனே அவர் இருந்தார். சமீபத்தில் அவரை
பார்க்கச் சென்றிருந்தேன். இருவரும் கட்டிப் பிடித்து கூக்குரலிட்டோம். ஒரு தாயின்
‘வழக்கமான' அனைத்து பணிவிடைகளையும் எனக்குச் செய்தவர். நான் அவரை காதலித்தேன். சில
நாட்களுக்கு முன்பு மரணித்தார். 96 வயது. அவரைப் பார்த்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக
இருந்தது.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">உங்கள் சகோதரருடன் நீங்கள் மிகவும் நெருக்கமாக
இருந்தீர்களா?<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">ஆம். நாங்கள் மிகவும் நெருக்கமானவர்கள்.
அவர் கொச்சியில் வாழ்கிறார். கடலுணவு சார்ந்த தொழில் அவருடையது. இறால் தரகர் அவர்.
எனக்கு இறால் பிடிக்காது. ஒத்துக்காது.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">தன்னிறைவு அமைதி கொண்ட ஒரு வாழ்க்கையை
வாழ்பவர் நீங்கள், இல்லையா? அது தனிமையுணர்ச்சியை கொண்டு வராதா?<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">தனித்து வாழும் மிக அற்புதமான மற்றும்
விசித்திரமான ஒரு சமூகத்தின் பகுதியானவள் நான். தனிமையுணர்ச்சி என்று அதனை புரிந்துகொள்ளக்கூடாது.
எனக்கு ஆழ மான மற்றும் நீடித்த நட்புகள் உள்ளன. இந்த பூமியின் கடைசி முனைவரை ஒருவர்
மற்றவருக்காக இணைந்து நடக்கத் தயாராக இருப்பவர்கள். எனவே ஆம், நான் தனியே வாழ்பவள்.
ஆனால் என் வாழ்வு முழுமையான அன்பால் நிறைந்து இருப்பது. எனது முன்னாள் கணவர் பிரதீப்
மற்றும் தங்கள் தாயை மிகச்சிறுவயதிலே இழந்த எனது குழந்தைகள் மித்வா மற்றும் பையா ஆகியோரு
டனான உறவு விந்தையானது. நான் தனியே வாழ்வதன் காரணம் மற்றவர்களின் மீது எனது தனிப்போக்குகளை
சுமத்தக்கூடாது என்பதற்காகத்தான். மட்டுமின்றி, நான் எழுதுவதால் ஏற்படும் விளைவுகளை
- அவ்வப்போது அவை மிக மோசமானவை- மற்றவர்கள் அனுபவிப்ப திலும் எனக்கு விருப்பமில்லை.
நான் தனியே வாழ விரும்பவில்லை என்றால், நான் வாழமாட்டேன். எந்த குறையும் இல்லாததாக... </span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;">குறை இல்லாததாக...? அந்த வாக்கியத்தை
முடியுங்கள்.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">ஓ, ஹா! ஹா! <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">ஏன் போராடுகிறீர்கள்?<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">நாம் இப்படி சொல்வோம். அதிகாரத்தின்
பக்கவாட்டில் எளிதாக சாய்பவர்கள் மற்றும் அதனுடன் இயல்பான பகைமை பாராட்டும் மக்கள்.
இந்த இருபிரிவினரின் மோதல்தான் உலகின் சமநிலையைக் குலைக்கிறது என்று கருதுகிறேன். இந்த
கோட்டின் அடிப்படையிலே என்னை நான் நிறுத்துகிறேன். நமது சுதந்திரங்களை உருவாக்க நீண்ட
மற்றும் குறிப்பிடத்தக்க பல போர் களை நிறைய பேர் இட்டுள்ளனர். நாம் அந்த வெளி களை எப்படி
எடுத்துக்கொள்ளப் போகிறோம்? ஏதாவ தொரு இயற்கை சக்தி நமக்கு இந்த சுதந்திரங்களை கொடையளித்ததாக
கருதுவது சரியா? இல்லை. அவை ஒவ்வொன்றாக அடையப் பெற்றவை. சில உணர்ச்சியற்ற இளம்பெண்கள்
‘நான் ஒரு பெண்ணியவாதியல்ல' என்று சொல்வதை கேட்கும்போது மிகவும் எரிச்சலுறுகிறேன்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">என்னை சொல்ல வைக்காதீர்கள்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">நான் சொல்வது, என்ன போர்கள் நடைபெற்றுள்ளன
என்பதை அவர்கள் அறிவார்களா? இன்று நாம் பெற்றிருக்கும் ஒவ்வொரு சுதந்திரமும் பெண்ணியவாதிகள்
பல ரால் கிடைத்தவை. இன்றைய நமது நிலைக்காக பெண் கள் பலர் பெருவிலையை கொடுத்திருக்கிறார்கள்.
நமது பிறவித்திறத்தாலும், திறமையாலும் அவை வரவில்லை. பெண்களின் வாக்குரிமை சம்பந்தப்பட்ட
எளிய விசயத்தையே எடுத்துக்கொள்வோம், யார் அதற்கு போராடினார்கள்? பெண் வாக்குரிமைப்
போராளிகள் அல்லவா. பெரும் போராட்டமின்றி எந்த சுதந்திரமும் நமக்கு கிடைக்கவில்லை. நீங்கள்
பெண்ணியவாதி இல்லையென்றால், திரைச்சீலைக்குள் மறுபடியும் புகுங்கள். அடுக்களைக்குள்
சென்று கட்டளைகளை பெறுங்கள். அதை செய்ய நீங்கள் விரும்பவில்லை அல்லவா? அப்படியெனில்,
பெண்ணியவாதிகளுக்கு நன்றி சொல்லுங்கள்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">மேலும் சுதந்திரங்கள் நிலையற்றவை.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">இந்தியாவில் எழும் பெண்விடுதலை வியக்கத்தக்கதாக
இருக்கிறது. ஆனால், அதேநேரத்தில், இந்தப் புரட்சிக்கு இணையாக பழமைவாதத்தின் இருளும்
உள்ளோட்டத் தில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆஃப்கானிஸ்தான் பெண் களை எடுத்துக்கொள்ளுங்கள்.
நாம் வளர்ந்துகொண்டி ருந்தபோது மருத்துவர்களாகவும், அறுவைச் சிகிச்சை நிபுணர்களாகவும்
இருந்தார்கள். விரும்பிய உடை அணிந்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந் தார்கள்.
இப்போது? நமது ஆபத்துகள் பற்றிய எச்ச ரிக்கை உணர்வு அவசியம். கணநேரத்தில் பல நூற்றாண்
டுகளுக்கு பின்னால் நாம் கொண்டு செல்லப்படலாம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">விமர்சனங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">நான் இயல்பான உணர்வெழுச்சி கொண்ட ஒரு
எழுத்தா ளர். என்னுடைய எழுத்துக்களுக்கு வரும் விமர்சனங் களை எனது பித்தப்பை வேடிக்கை
உருவாக இருக்கிறது என்று சொல்வதைப் போன்று கருதுவேன்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">ஆங். உங்கள் அபுனைவு எழுத்து பற்றி?<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">என்னுடைய அபுனைவு எழுத்துக்கு வருகின்ற
அறிவார்ந்த விமர்சனத்தை சலித்தறிவது எளிதான செயல் இல்லை. பெரும்பாலனவை இணையத்தில் பரவுகின்ற
உடனடி முட்டாள்தனங்களும் வெறிக்கூச்சல்களும் ஆனவை. ஆனால் எனக்கு வேண்டியது கிடைத்துவிடும்.
அடிக்கடி மக்கள் சொல்வார்கள், ‘அருந்ததிராய் ஒரு சர்ச்சைக்குரிய எழுத்தாளர்' என்று.
வாதங்களுக்கு முகம் கொடுக்க மறுக்கும் தன்மை கொண்டது அது. ‘அருந்ததி ராய் சர்ச்சைக்குரியனவற்றை
எழுதுகிறார்' என்பது சரி யான கூற்றாக இருக்கலாம். சர்ச்சை அங்கிருக்கிறது. அணைகள் நல்லதா?
அனைத்தையும் தனியார்மயமாக்க வேண்டுமா? பஸ்தர் முழுவதையும் கார்ப்பரேட்களுக்கு கையளிக்க
வேண்டுமா? நான் அவை குறித்து எழுதுகி றேன். அவற்றைச் சீர்தூக்கி மதிப்பிடுகிறேன். பின்னர்
ஒரு நிலைப்பாடு எடுக்கிறேன். ஆனால், சர்ச்சைகளை நான் உருவாக்குவதில்லை என்று என்னால்
உறுதியாக சொல்லமுடியும்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">உங்கள் நூல்களுக்கு வரும் விமர்சனங்களில்
ஏதும் பொருட்படுத்தத் தகுந்ததை பார்த்துள்ளீர்களா?<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவள் என்று
எப்போதுமே நான் இருந்ததில்லை இருக்கவும் முடியாது. இவை விவாதிக்கப்படவேண்டும். அது
சரி அல்லது தவறு என் பதாக அல்ல. எனக்கு வருகின்ற விமர்சனத்துக்கு என்னு டைய நூல்கள்
பரிணமித்தமுறை சில வழிகளில் உகந்த எதிர்வினையாக இருக்கலாம். ஆனால், எனது பார்வை களை
மாற்றிக்கொள்ள நான் உடன்பட்டதில்லை.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">நீங்கள் சொல்வதில் மிகவும் கவனமாக இருக்கவேண்டுமா?<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">நாம் இன்றொரு காலனியாக அல்லாமல் சுதந்திர
நாடாக கருதப்படுகிறோம். ஆனால், அம்பேத்கர் 1936ல் சொன் னதை நம்மால் இன்று சொல்லமுடியுமா?
‘இந்துமதம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பேரச்சம் ஏற்படுத்தும் அகன்ற அறை' என்று அவர்
அன்று சொன்னதை போன்று இன்று நாம் சொல்லமுடியுமா? அதைச் சொன்னால் என்ன நடக்கும் நமக்கு?
நாம் இன்று மிக ஆபத்தான இடத்தில் இருப்பதாகக் கருதுகிறேன். நாம் இன்று மிக கவனத்துடனும்,
முன் ஆலோசனையுடனும் பேசவேண் டியது முக்கியம் என்று கருதுகிறேன். அதேநேரத்தில், நாம்
பின் வாங்கக் கூடாது என்பது மிக முக்கியம். நமது எண்ணங்களை நாம் கண்டிப்பாக பேசவேண்டும்.
இப்போது நேரம் வாய்த்திருக்கிறது. இல்லையெனில், மிகவும் தாமதித்துவிடுவோம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">ஒரு நாள் சிறைவாசம் எப்படி இருந்தது?<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">ஞாபகார்த்தமானது அது. என்னுடைய சாகச
உணர்வை யும் கடந்து என் பின்னால் கதவுகள் மூடப்பட்ட போது நடுக்கமூட்டியது. ஒரு
குற்றவாளியாக உள்ளே சென் றேன். தோழர்களுடன் இணைந்து சிறைநிரப்பும் போராட்டமல்ல அது.
சுதந்திரமும், சிறைவாசமும் இரண்டு தனித்த பிரபஞ்சங்கள். ஒருநாள் சிறை என்பது பெரிய
விசயமல்ல. தாங்கள் செய்யாத குற்றத்துக்கு ஆயிரக்கணக்கான பேர் தற்போது சிறையில் வாடுகிறார்கள்.
அவர்கள் ஏழைகள், தலித்கள், முஸ்லிம்கள் மற்றும் மிக முக்கியமாக ஆதிவாசிகள். ஏழைகள்
மற்றும் அடித்தட்டு மக்களுக்கு எதிராக போரை ஏவியிருக்கும் நாடு நம்முடையது.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">நீங்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவீர்களா?
நான் ஒரு கை பார்ப்பதுண்டு.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">நான் மாட்டிறைச்சி, பன்றிக்கறி ஆகியவற்றை
உண்பேன். நமது நாட்டில் இப்போது தலையெடுக்கும் உணவு பாசிஸம் கண்டிப்பாக நிறுத்தப்பட
வேண்டும்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">தினமும் உடற்பயிற்சிக்கூடம் செல்வீர்களா?<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">ஆம். தினமும் செல்வேன்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">ஒவ்வொரு நாளும்?<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">ஒவ்வொரு நாளும் தான்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">பாருங்கள். இது எனக்கு ஒரு அன்னிய கருத்தாக்கமாக
படுகிறது.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">நன்று. ஒரு பழக்க அடிமையின் மரபுக்கூறுகள்
உள்ளவள் நான். என்னுடைய தந்தை ஒரு குடிகாரர், தெரியுமா. ஒரு விஸ்கி குப்பியை அவருடையை
கல்லறையின் மேல் வைத்துவிட்டு கவனியுங்கள். நல்லூழாக அவரு டைய பழக்க அடிமைத்தனத்தின்
மரபணு என்னுள் தங்கிக்கொண்டது.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">உடற்பயிற்சி சம்பந்தமாக நீங்கள் எப்பவுமே
இப்படித்தானா?<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">எனது குழந்தைப்பருவம் தொந்தரவான ஒன்றாக
இருந்ததே தவிர துயரார்ந்ததாக இல்லை. நான் ஓடிக் கொண்டே இருந்தேன். ஓடிக்கொண்ட சமாளித்தேன்.
வீட்டைச் சுற்றி, பள்ளி மைதானத்தைச் சுற்றி... நான் சமீபத்தில் என்னுடைய பழைய உடற்பயிற்சி
ஆசிரியர் திரு.செல்வபாக்கியத்தை சந்தித்தேன். அவர் பையன் களுக்கு மட்டும்தான் பயிற்சி
கொடுப்பார். ஆனால், நான் அவருடனே எப்போதும் திரிந்ததால் எனக்கு கொஞ்சம் சொல்லிக்கொடுத்தார்.
நானொன்றும் நட்சத்திர விளை யாட்டு வீரர் இல்லை. உடற்பயிற்சியகத்துக்கு நான் என்னை வருத்தச்
செல்வதில்லை. தம்மை வருத்தும் எண்ணம் கொண்டு ஒப்படைக்கும் நபர்களை நான் ஐயுறுகிறேன்.
நான் ஒரு முழுமையான சந்தோசத்துக்காக செல்கிறேன்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">நீங்கள் சொல்வது ஒன்றும் விளங்கவில்லை.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">இங்கே பாருங்கள், நாங்கள் பழைய வட்டம்
ஒன்றின் நண்பர்கள் மற்றும் பயிற்சியாளர்கள். அங்கு அவ்வள விற்கு அன்பு உண்டு. என்னுடைய
நாள் ஒன்றின் உச்ச நிலை அது. என்னை நிதானமிழக்காமல் தொடரச்செய் வது. காதல், நட்பு,
சிரிப்பு மற்றும் வியர்வை நிறைந்த இடம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">நீங்கள் ஒரு சீருடல் பயிற்சியாளராக இருந்தீர்கள்,
இல்லையா?<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">ஆம். மனமுடைந்திருந்த நாட்களில் நான்
சீருடல் பயிற்சி யாளராக இருந்தேன். நானும் சுஷ்மா என்ற அழகான பெண்மணியும் பயிற்சியாளர்களாக
இருந்தோம். அவர் பளுதூக்கும் வீராங்கனை. அற்புதமான, கட்டுறுதி கொண்டவர். உடற்பயிற்சி
உடையில் அங்குள்ள பெண்களைப் பார்க்க இந்த லாலாஜிக்கள் வருவதுண்டு. நாங்கள் அவர்களை
சீண்டுவோம். ஒருமுறை ஒருவர் மிகவும் தளர்ச்சியுற்று வீழ்ந்தார். வகுப்பின் கடைசியில்
படுத்துக்கிடந்தார். நான் நடுக்கமுற்றேன். அவர் இறந்து விட்டதாகவே கருதினேன். இது அடுத்த
நாளின் பத்திரிகையில் எப்படியான செய்திப்பதிவாக இருக்கும் என்பது எனது மனக்கண்ணில்
ஓடியது.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">ட்விட்டரில் இருக்க வேண்டியவர் நீங்கள்.
ஏனில்லை?<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">ஏனெனில் நான் என்னை சேகரித்துக் கொண்டிருக்கிறேன்.
என்னிடம் உள்ள அனைத்தையும் ஒரு நாவலாக திறக்க முயற்சிக்கிறேன். நான் ஒரு ரகசியமாக இருக்க
விரும்புகி றேன். ட்விட்டரில் என்னால் என்னை சிதறடித்துக் கொள்ள முடியாது.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">சரி நாம் ஃபேஜன் குறித்து பேசுவோம்.
நீங்கள் பெரோ மற்றும் ஈகா உடைகளை அதிகம் அணிவீர்கள் அல்லவா?<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">நான் அவற்றை வெறும் முத்திரையாக கருதுவதில்லை.
சின்ன விசயங்களின் கடவுளை என்னிலிருந்து வேறாக கருதாதது போன்று எனக்கு அவை. நான் அவற்றை
அனீத் (அரோரா) மற்றும் ரீனா (சிங்)- ஆகவே கருதுகிறேன். அவர்கள் எனது நண்பர்கள். அனீத்தின்
உழைப்பை பல்லாண்டுகளாக அறிவேன். பெரோ என்றழைப்பதற்கு முன்பிருந்தே அவரை தெரியும். என்னால்
அந்த உடை களை வாங்கும் வசதி வந்த உடனே அவற்றை வாங்கி விட்டேன். அவற்றில் சில 15
வருடங்கள் பழையவை. அவற்றை நான் தொடர்ந்து அணிந்துவருகிறேன். என்னு டைய சிறந்த
உடைகளைத் தயாரித்தவர்கள் அனீத்தும், ரீனாவுமே. அவர்கள் இருவரும் நவீனப் பெண்களாக நம்மை
மாற்றும் புதிய அழகியலை வடிவமைக்க முயற்சிப்பதாக எண்ணுகிறேன்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">அது அழகாக சொல்வதாக இருக்கிறது.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">அது மிக முக்கியமானது. நவீனத்துவத்தை
தனித்த பாரம் பரியமிக்க துணியிலும், பாணியிலும் எப்படி கொண்டு வருவீர்கள்? சிறிய கருப்பு
உடைகளை அணிந்து கொண்டு வெளியே செல்பவர்கள் அல்ல நாம் (எனக்கு அப்படி செல்வதில் எந்தப்
பிரச்சினையுமில்லை என்றா லும்). புடவை அணிவதை நான் விரும்புகிறேன் என்றா லும் புடவையையும்,
சுடிதாரையும் எப்போதும் அணிவதும் விரும்பக்கூடியது அல்ல. எனவே எப்படி நாம் உடை உடுத்துவது?
நாம் என்ன அணியவேண்டும்? உடைகள், நான் அணியும் முறையில் அவை கேளிக்கை யாக இருக்கின்றன.
மிகுதியான மகிழ்ச்சியை வழங்கு கின்றன. மேலும் அரசியலும் அதிலுள்ளது.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">அரசியல் எங்ஙனம்?<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">நான் கட்டிடக்கலை பயின்று கொண்டிருந்தபோது
இந்த கேள்விதான் - மரபு மற்றும் நவீனத்துவத்துக்கு இடையே யான விளையாட்டு- எனது மனதில்
எப்போதும் இருந்தது. <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">ஒரு நேர்மையான நவீனத்துவ கட்டிடக்கலை
இந்த உல கில் எப்படி இருக்கவேண்டும்? என்னுடைய இளமைக் காலங்களில் எனக்கு வேண்டியதெல்லாம்
மரபின் பிடியி லிருந்தும் அது எனக்கு வைத்து இருந்ததிலிருந்தும் தப்பிப்பதாக இருந்தது.
அதன்பிறகு பிரியமான நவீனத்து வத்தின் விகாரமான பேருருவுக்கு எதிராக வந்தீர்கள். பிறகு
அதனிலிருந்தும் திரும்பி பறந்துவிட்டீர்கள். எனவே நான் என்ன அணிகிறேனோ, அது இந்த மாற்றத்
தின் கதையை கூறும் என்று கருதுகிறேன். ஒயில் மிக முக்கியமானது. யாரும் இல்லையென்று
சொல்ல முடி யாது. ஆம், இது சற்று இனிமையான மிகை. அதை பெறுவது நன்றிக்குரியது. நல்லூழாக
நகைநட்டுகள் மீது எனக்கு ஆர்வமில்லை... எனது மொத்த ஆடை அலமாரி யும் ஒரு ஜோடி வைரத்தோடுகளுக்கு
இணையாகாது. எனது ஆடைகள் அழகான அனுபவத்தை தருவன. சில இன்ப நுகர்வுகளுக்கு கண்டிப்பான
தேவை என் வாழ்வில் இருக்கிறது.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">கையில் மிக நீண்டகாலத்துக்கு பணம் ஏதுமில்லாமல்,
இறுதியில் பணம் வந்து சேர்ந்தது மிகப்பெரிய ஆசுவாசமாக இருந்ததா?<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">ஒரு குறிப்பிட்ட அளவுக்கு உண்மைதான்.
ஆனால் அதனை ஏற்றுக்கொள்ள எனது மனதிற்கு நீண்டகாலம் ஆனது. நான் அது குறித்து தீவிர குற்றஉணர்ச்சி
அடைந்தேன் . மேலும் மனம் சிக்கலானது.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">ஆனால் ஏன்? நீங்கள் சம்பாதித்ததுதானே.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">ஆம். ஆனால் அதற்கொரு எல்லை உண்டு. எனக்கு
அந்த சிறிய, சந்தோச, வெற்றிகர மற்றும் உவகை உணர்ச்சிகள் இருந்ததில்லை. உங்களுக்குத்
தெரியுமா, நான் இன்று உலக அழகி. நான் என்னுடைய தாய் மற்றும் முகவர் மற்றும் இயேசுநாதருக்கு
நன்றி சொல்லவிரும்புகிறேன். நீண்டகாலத்துக்கு அது மனப்புணர்ச்சியாக இருந்தது. நான்
சிறிது சம்பாதிப்பது தேவையாக இருந்தது. ஆனால், எனக்கு கிடைத்தது... மிக அதிகம். அது
நான் கொஞ்சம் கூட கற்பனை செய்துகொள்ளாதது, தெரியுமா? அந்தளவுக்கு புகழ். அந்தளவுக்கு
பணம். அதாவது எனது தரத்தின் மூலம் பெற்றது. ஒரு ரூபாய் வாடகைக்கு சைக்கிளை எடுத்துக்கொண்டு
வேலைக்குப் போனவருக்கு கிடைத்தவை அவை.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">நீங்கள் சிறந்த நாவல் ஒன்றை எழுதினீர்கள்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">புக்கர் விருது கிடைத்தபோது நான் கிளர்ச்சியுற்றேன்.
ஆம், அதுதான் உண்மை. ஆனால், இந்த விருது எனக்கு கிடைத்த நாளின் இரவில் நான் விநோதமான
கனவு ஒன்றை கண்டேன். மெலிந்த, மரகதக் கை ஒன்று நான் நீந்திக்கொண்டிருந்த நீரில் என்னை
நோக்கி வந்தது. நான் ஒரு மீனாக இன்னொரு மீனுடன் நீந்திக்கொண்டிருந் தேன். பின்னர் அந்தகை
என்னை நீரிலிருந்து தூக்கி வெளி யேற்றியது. பின்னர் ஒரு குரல், ‘நான் உனக்கு எதையும்
தருவதற்கு தயாராக இருக்கிறேன். என்ன வேண்டும் உனக்கு?' என்று கேட்டது. நான் சொன்னேன்,
‘என்னை மறுபடியும் பழைய நிலைக்கு திரும்ப வை' என்று. எனது வாழ்க்கை மாறிவிடும்... வெடித்துவிடும்
என்று திகிலடைந்தேன். அது நடந்தது. என்னிடமுள்ள தீவிர மான அரசியல் நபர் வெளியே வரவேண்டியிருந்தது.
அவள் ஒளிந்துகொள்ள வேறிடமில்லை. எனது சொந்த வாழ்க்கையில் பெருவிலை அதற்காகக் கொடுக்க
வேண் டியிருக்கும். அது நடந்தது. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல அதை எப்படி கையாள்வது
மற்றும் என்ன செய்துகொள்வது என்பதை கற்றுக்கொண்டேன். எனவே இப்போது எனக்கு அது அதிர்ச்சியில்லை.
ஆனால், நான் ஒத்துக்கொள்கிறேன்- முன்பிருந்தேன் என்று.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">மேலும் அந்த புகழ்? விமான நிலையங்களில்
நீங்கள் சூழ்ந்துகொள்ளப்பட்ட அனுபவம் உண்டா?<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">ஆம், அது எப்பவுமே மரியாதைக்குரிய தன்மையில்
நடைபெறுவதுண்டு. ஆனால், அது சோர்வடையச் செய்கிறது. நான் அதுகுறித்து எந்த புகாரையும்
தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால், செல்ஃபீ மோகம் பெருகியி ருக்கும் இந்த நாட்களில் உங்களுடன்
செல்ஃபி எடுத்துக் கொள்ள எல்லோருக்கும் ஒரு உரிமை இருக்கிறது. இது வொரு தொற்றுநோய்.
நான் மிகவும் பயந்த நேரங்களும் உண்டு. இந்த ஜெ.என்.யூ விசயம் நடந்து கொண்டிருந்த போது,
சத்தமிடும் ஊடக நெறியாளர்கள் தொலைக்காட்சிகளில் என்னை நோக்கி கத்திக் கொண்டிருந்தார்கள்.
அது ஆபத்து ஏற்படுத்தக்கூடியது.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">நீங்கள் தேசவிரோதியா?<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">நான் தேசவிரோதிகள் பட்டியலின் அ-பிரிவில்
இருப்பவள்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">உங்களுக்கு மதநம்பிக்கை உண்டா?<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">இல்லை. சாதாரணப் பொருளில் நான் மதநம்பிக்கை
உள்ளவள் அல்ல. ஆனால், நான் அனைத்தையும் வர்க்கக் கண்ணோட்டத்தில் விளக்கும் ஒரு தீவிர
மார்க்சிஸ்டும் அல்ல. அதேநேரத்தில், சமூகத்தை ஆய்வு செய்யும் மிக முக்கியமான வழிமுறை
அது என்பதை நான் நம்புகி றேன். ஆனால், அதுவே அனைத்துக்கும் என்பதை ஏற்க முடியவில்லை.
ப்ரவுஸ்டை போன்று நான் அனைத்தின் சாத்தியத்திலும் நம்பிக்கை கொண்டவள். அனைத்துக் கும்,
உயிரற்ற பொருட்களிலும் ஆன்மா இருப்பதாக நம்புகிறேன். புனைவு எழுதுவது நான் பிரார்த்தனைக்கு
மிக அருகாமையில் வருமிடம். என்னுடைய கவனத்தை ஒன்றின்மீது மிக தாராளமாக செலுத்தவும்,
ஒன்றிருக்கி றது என்ற நன்றியுணர்ச்சியுடன் இருப்பதும், என்னிடம் ஒன்றிருக்கிறது, நான்
அதன் மீது முழு கவனத்தையும் கொடுத்து அதை ஆராதிப்பேன் என்பதும் ஒரு உயர்ந்த சக்தி ஒன்றின்மீது
கொள்ளும் பிரார்த்தனை போன்றது.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">மரணம் உங்களை அச்சுறுத்துவது உண்டா?<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">மரணம் அல்ல. ஆனால் நோய்களும், பலகீனங்களும்
அச்சுறுத்துவதுண்டு. மருத்துவமனைகள், சுகவீனம் மற்றும் மற்றவர்களின் நோய்களுடனும் பெரும்பகுதி
நேரத்தை செலவிட்டிருக்கிறேன். ஒரு அசைந்தாடும் நாற் காலி இங்கிருக்கிறது. வீட்டின்
உணர்ச்சிப்பூர்வ பொருள் இது. என்னுடைய மிகவும் இனியதோழி ஒருவர் கொடுத்தது. அவள் புற்றுநோயால்
மாண்டாள். புற்று நோய் அவள் மூளையை அடைந்தபோது எங்கள் இருவ ருக்கும் முடிவு நெருங்கியது
தெரிந்துவிட்டது. முடிவு எப்படி ஏற்படும் மற்றும் அதை எப்படி சிறந்தமுறையில் எதிர்கொள்வது
என்பதை தெரிந்துகொள்ள நான் அவளுடன் மருத்துவமனைக்குச் சென்றேன். இன்னும் சிலவாரங்களில்
மூளை செயலிழந்துவிடும் என்று மருத் துவர் கூறினார். எனவே அடுத்தநாள் எனது வீட்டுக்கு
கையில் இந்த அழகான நாற்காலியுடன் மதிய உணவுக்கு வந்தார். நான் அதை விரும்பியதை அவள்
அறிவாள். அவள் சொன்னாள், 'இது உன்னுடையது. அது இங்கே இருக்கட்டும்' என்றார். மேலும்
அவள், ‘இதில் நீ அமர்ந்து உன்னுடைய புதிய புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை என்னுடைய
மூளை செயல்படும் இப்போது படித்துக்காட்டவேண்டும். நான் எங்கு செல்கிறேனோ அந்த இடத்துக்கு
உன்னுடைய நூலின் ஒரு துணுக்குடன் செல்ல விரும்புகிறேன்' என்றார். அவர் இறந்தார். மரணம்
குறித்த எனது பயம் அதன் பிறகு குறைந்துவிட்டி ருந்தது. அவளால் அது முடியும் என்றால்,
என்னாலும்.. என்ற எண்ணம் தோன்றியது. ஆனால் நோய்வாய்ப் படுதல் கொடுமையானது.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">எதைப் பற்றி நாமெல்லோரும் பயப்படவேண்டும்?<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">உள்நாட்டுப் போர்.1925 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ்
என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. அதன் ஒரே நோக்கம் இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்றவேண்டும்
என்பதுதான். அரசாங்கத்தின் திட்டங்களை வழிநடத்தும் அமைப்பாக இன்று அது தன்னை நிலைநிறுத்தியிருக்கி
றது. பாகிஸ்தான் அதனை இசுலாமியக் குடியரசாக அறி வித்த பிறகு அதற்கு நேர்ந்ததைப் பாருங்கள்.
எது ‘உண்மையான இசுலாம்' எது உண்மையானதில்லை என்று முடிவு செய்ய பலரும் முயன்றதில் அந்தநாடு
சின்னாபின்னமாகி இருக்கிறது. இந்தியா பாகிஸ்தானை விடவும் மிகவும் சிக்கலான, பன்முக
நாடு. இந்து ராஷ்டி ரம் இங்கு ஏற்படவே முடியாது. நமது தொண்டைக் குழிக்குள் அவர்கள்
தள்ளினால், நாம் நொறுங்கி விழுவோம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">என்ன படித்துக்கொண்டிருக்கிறீர்கள்?<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">ஸ்வெத்லனா அல்க்ஸிவிச் எழுதிய செர்னோபில்
பிரார்த் தனை என்ற நூலைத்தான் படித்துக்கொண்டிருக்கிறேன். மிகவும் அழகாக எழுதப்பட்டுள்ள
புத்தகம். ஒரு அழகான உரைநடையை அளியுங்கள்; உங்கள் பின்னே எங்கும் வரத் தயாராக
இருக்கிறேன்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">பிடித்த இலக்கியவாதிகள்?<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">ஷேக்ஸ்பியர், கிப்ளிங், ரில்க்... பாடப்படக்கூடிய
வாக்கி யங்களின் குருக்கள் இவர்கள். அழகான உரைநடையின் வசீகரத்துக்கு மயங்கும் வேசி
நான். இசைக்கப்படும் உரைநடையாக இருக்கவேண்டும். ஷேக்ஸ்பியரின் எந்த வரியாக இருப்பினும்
என்னை புல்லரிக்கச் செய்யும். அல்லது நபொகவ். மேலும் ஜான் பெர்கர். என்ன ஒரு வனப்பு!
ஜேம்ஸ் பால்ட்வின் மற்றும் டோனி மோரிசன்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">அனைவரும் அவசியமாக படிக்கவேண்டியது?<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">இந்தியாவில் டாக்டர் அம்பேத்கர் மற்றும்
ஜோதிராவ் பூலே ஆகியோருடைய எழுத்துக்களை அனைவரும் படிக்கவேண்டும் என்று சொல்வேன். இந்தியச்
சமூகத் தில் சாதி ஒரு புற்றுநோய் என்பேன். நாம் அதை கருத்தில் கொள்ளவில்லை என்றால்,
நமது சமூகம் தொடர்ந்து அழுகிய நிலையிலேதான் இருக்கும்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">கன்னையா குமார் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">அவர் சொன்ன பலவற்றுடன் எனக்கு உடன்பாடில்லை.
ஆனால், அவர் சொன்ன விதம் என்னை கவர்ந்தது. அவர் வெளியே வந்தபிறகு வழங்கிய உரை என்னை
மிகவும் ஈர்த்தது. அது உற்சாகமூட்டியது. பலரிடம் கவிந்திருந்த பயத்தின் புகைப்படலத்தைப்
போக்கியது. அவருடைய உயிர்ப்பு பிடித்தது. எல்லோருமே என்னை பின் தொடர்ந்து நான் சொல்வதை
திரும்ப சொல்லவேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை. அதுபோலவே நான் நம்புவ னவற்றை அப்படியே
ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறுவதில்லை. இதைத்தான் எதிர்ப்பின் பன்முகத் தன்மை
என்கிறேன்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">இந்த உலகை மாற்ற நாம் என்ன செய்யவேண்டும்?<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">உங்களை எங்கே பொருத்திக்கொள்வது என்று
முடிவெடுங்கள். யுத்தங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">ஏதாவது நம்பிக்கை இருக்கிறதா?<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">நம்பிக்கை எப்போதும் ஆதாரத்தின் அடிப்படையில்
இருக்க வேண்டியதில்லை என்று கருதுகிறேன். சில நேரங்களில் மகிழ்ச்சிதரும் அடுத்தவரியை
எதிர்நோக்கி இருப்பேன். பெருங்காட்சிகள் இங்கே அரங்கேறுகின்றன- காலநிலைமாற்றம், அணுஆயுதப்
போர் என்று சொல்லிக்கொண்டே போகலாம். பின்னர் சிறுகாட்சிகள் வருகின்றன. பெரிய சித்திரத்தின்
இருள் என்னை அடையத் துவங்கும் போது நான் கீழிறங்குவேன். ஒரு தவளையாக மாறி பாரவண்டிகள்
செல்லும் நெடுஞ் சாலையில் குதித்து கடப்பேன். அதுவே சாத்தியமானது. வலப்பக்கம் பார்,
இடப்பக்கம் பார்... செல்! செல்! செல்! இன்னொரு நாள் போராட வாழு.<o:p></o:p></span><br />
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span>
<span style="color: blue; font-family: arial unicode ms, sans-serif;">புதுவிசை 47</span></div>
<br />
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
</div>
புதுவிசைhttp://www.blogger.com/profile/09276344793619872435noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8111967010823738396.post-6243269992229106352017-08-25T05:51:00.000-07:002017-08-25T05:51:19.587-07:00குடிமக்கள் மீது ஓர் உளவியல் போர் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது - புதுவிசை 48வது இதழ்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg85BfyYONVpxcrmVUfICZM8iES0nXQlkCrINOdRRaX3mQHNx8EqoADgnxRHRwOmTZ8Yu7DtV6v-NNnb6yjnep2kPyfxWLuPFK14PqX_c0QjKQcgqxepE55utW43RyGVT7w7oXv0EJ3hq_X/s1600/48-1.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="1179" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg85BfyYONVpxcrmVUfICZM8iES0nXQlkCrINOdRRaX3mQHNx8EqoADgnxRHRwOmTZ8Yu7DtV6v-NNnb6yjnep2kPyfxWLuPFK14PqX_c0QjKQcgqxepE55utW43RyGVT7w7oXv0EJ3hq_X/s400/48-1.jpg" width="293" /></a></div>
<div class="MsoNoSpacing">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">நாட்டின் வளங்களையும் உழைப்பையும் சேமிப்பையும்
களவாடிக் கொழுப்பதற்கென, இதுகாறும் தான் உருவாக்கி வைத்துள்ள ஏற்பாடுகள் யாவும் காலாவதியாகிவிட்டதாக
ஆளும் வர்க்கம் கருதுகிறது. எனவே அது நடப்பிலுள்ள நாடாளுமன்ற ஜனநாயகம், அரசியல் சாசனம்,
சட்ட திட்டங்கள், மரபுகள், மதிப்பீடுகள் என அனைத்தையும் தனது சுரண்டல் வேகத்திற்கு
ஈடுகொடுக்கும் விதமாக மாற்றியமைப்பதில் மும்முரமாகியிருக்கிறது. இதன் பொருட்டு அரசு
இயந்திரமும் அரசாங்கமும் அப்பட்டமாக தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டுமென
அது விரும்புகிறது. இந்த இழிமுயற்சியோடு லகுவில் பொருந்துவதாக சங் பரிவாரத்தை அடையாளம்
கண்டுள்ள ஆளும் வர்க்கம் அதனிடம் ஆட்சி பொறுப்பை ஒப்படைத்ததற்குரிய பலன்களை அதீதமாய்
ஈட்டி வருகிறது. <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<br /></div>
<div class="MsoNoSpacing">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">சங் பரிவாரம், தனது அரசியல் கட்சியின்
மூலம் எழுப் பிய ‘வளர்ச்சி<span lang="EN-US">’ </span>என்ற முழக்கம் அதன் மெய்யான பொருளில்
ஆளும் வர்க்கத்தின் லாப வளர்ச்சியையும் சுரண்டல் வேகத்தையுமே குறிக்கிறது. தனது இந்துத்துவச்
சேனைகளின் பலத்தில் மத, சாதிய மோதல்களை நடத்தி சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கும் சங்
பரிவாரம், அந்தப் பதற்றம் என்னும் திரையின் மறைப்பில் மட்டுமீறிய கடனுதவி, கடன் தள்ளுபடி,
மானியங்கள், வரிச்சலுகை, அரசுத்துறைகளை சல்லிசான விலையில் கொடுப்பது, தொழிலாளர் நலச்
சட்டங்களை முடக்குவது என அரசதிகாரத்தை முழுமையாக திருப்பிவிட்டு இந்தியப் பெருநிறுவனங்களுக்கு
லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை மடைமாற்றுகிறது. அதே வேளையில் போதிய சிகிச்சைக்கு வழியின்றி
மருத்துவமனையிலேயே பச்சிளங் குழந்தைகளையும் சாகக் கொடுக்கிறது. வெகுமக்களுக்கு பிணங்களையும்
கார்பரேட்டுகளுக்கு வளங்களையும் பகிர்ந்தளிக்கிறது சங் பரிவாரம். <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<br /></div>
<div class="MsoNoSpacing">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">மக்களுக்காக அரசு என்றில்லாது அரசுக்காக
மக்கள் என்றாக்கும் சங் பரிவார ஆட்சி, ஒவ்வொருவரது அன்றாட தனிப்பட்ட வாழ்விலும் நேரடியாக
தலையிட்டு கண்காணிக்கவும் ஒடுக்கவும் சட்டப்பூர்வமான வழிகளை பயன்படுத்துகிறது. தன்னோடு
இணங்கிப்போகாத - மாறுபட்ட அரசியல் / பண்பாட்டு பின்புலம் உள்ளவர்களை தாக்கவும் அழிக்கவும்
சிறுமைப்படுத்தவும் அவர்களது நிலைப்பாடுகளை குலைத்துப்போடவும் ஜனநாயக உரிமைகளுக்கான
போராட்டத்திலிருந்து பின்வாங்கச் செய்யவும் பாசிஸ்ட்டுகளும் நாஜிகளும் கையாண்ட மனிதத்தன்மையற்ற
அத்தனை வழிகளையும், கருஞ்சட்டை- பழுப்புச் சட்டைப் படைக்கு இணையான சட்ட விரோத காவி
அமைப்புகளையும் சங் பரிவாரம் கைக்கொண்டுள்ளது. மனித சமூகத்தின் ஆழ்மனங்களில் நொதித்துக்கிடக்கும்
கீழ்மைகளின் திரண்ட வடிவமாக உள்ள சங் பரிவாரம் அவற்றை வெளிப்படுத்துவதற்கும் பரவலாக்குவதற்கும்
தேவையான ஒத்தாசைகளை ஆளும் வர்க்கத்திடமிருந்தும் அதன் ஊடகங்களிடமிருந்தும் எளிதாக பெற்றுக்
கொள்கிறது. <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<br /></div>
<div class="MsoNoSpacing">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">அச்சத்தையும் பீதியையும் கிளப்பி மக்களின்
யோசிப்பு முறையிலும் செயல்பாட்டிலும் மதிப்பீட்டிலும் குறுக்கீடு செய்து தம்மைத்தாமே
முனைமழுக்கிக் கொள்கிறவர்களாகவும், சுய தணிக்கைக்கு உட்படுத்திக் கொள்கிறவர்களாகவும்
மாற்றிக் கொள்ளும்படியாக குடிமக்கள் மீது ஓர் உளவியல் போரை சங் பரிவார ஆட்சி கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
அறிவிக்கப்படாத ஓர் அவசரநிலை காலத்துக்குள் நாட்டைத் தள்ளிக் கொண்டிருக்கிற அது, குடிமக்களுக்கு
தமது உடைமைகள் மீது மட்டுமன்றி உடல் மீதும் கூட முழு உரிமை இல்லை என்றதன் மூலம் அவர்களது
உயிர் வாழும் உரிமையினையே கேள்விக்குள்ளாக்கி வந்தது. இந்நிலையில், தன்னைப் பற்றிய ரகசியங்களை பாதுகாத்துக்கொள்வதற்கான
சுதந்திரம் அரசியல் சாசனத்தின் படி தனிநபரின் அடிப்படை உரிமைகளில் ஒன்று என்கிற தீர்ப்பினை வழங்கியதன் மூலம் எதேச்சதிகார
சங் பரிவார ஆட்சியின் செவுளில் அறைந்திருக்கிறது உச்சநீதிமன்றம். <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">*** <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWqoIxwx69MMIsB7AdJayySXPBLE0zceYeRrw9TEvqSsKn2yvsh1z0FdpWw4V0tuRH6e3PTkHBHl7qtwYvUEryBVPRS9xcZvSlOtcQoYLIaYFQRrYnGLB8YhcFb5cDA6R0XHj1uVY77104/s1600/48-index.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="1152" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWqoIxwx69MMIsB7AdJayySXPBLE0zceYeRrw9TEvqSsKn2yvsh1z0FdpWw4V0tuRH6e3PTkHBHl7qtwYvUEryBVPRS9xcZvSlOtcQoYLIaYFQRrYnGLB8YhcFb5cDA6R0XHj1uVY77104/s400/48-index.jpg" width="287" /></a></div>
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">ஐஐடி, மருத்துவக் கல்லூரி தகுதி நுழைவுத்
தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், ஆண்டுக்கு 100 பில்லியன் அளவுக்கு பணம் புழங்கும்
தொழிலாக உருவெடுத்து வருவதால் அதில் முதலீடு செய்தால் லாபம் கொழிக்குமென அசோசெம் போன்ற
முதலாளிகள் சங்கம் கும்மாளம் போட்டு வந்த நிலையில் நீட் தேர்வை ஒன்றிய அரசு கட்டாயமாக்கியிருப்
பது தற்செயலானதல்ல. தமிழக மக்கள் தமது வருங்கால தலைமுறைக்கென சுயமாக உருவாக்கிக்கொண்ட
மருத்துவக் கல்லூரிகளையும் சமூக நீதியையும் நீட் ஏற்பின் மூலம் சங் பரிவார ஒன்றிய அரசிடம்
பறிகொடுத்திருக்கிறது மாநில அரசு. வெவ்வேறு பாடத்திட்டங்களில் பயின்ற மாணவர்களை ஒரேவகையான
தகுதி நுழைவுத் தேர்வை எழுத வைப்பதே இயற்கை நீதிக்கு எதிரானது என்கிற நியாயத்தை உச்சநீதிமன்றத்திடம்
வலியுறுத்திப் பெறுவதில் தமிழக ஆட்சியாளர்கள் தவறியுள்ளனர். நீட்டை எதிர்த்த போராட்டம்
சம்பிரதாயமானதாக அல்லாமல் சமூக நீதியை, மாநில உரிமையை, மாணவர்களின் எதிர்காலத்தை மீட்டெடுப்பதற்கானதாக
முன்னெடுக்கப்பட வேண்டும். <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<br /></div>
<div class="MsoNoSpacing">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">*** <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">புதுவிசையை 50வது இதழுக்குப் பின் இணைய
இதழாக கொண்டுவர உத்தேசம். சந்தாக்களை திரட்டுவதில் எங்களது குறைமுனைப்பாலும், விற்பனைத்தொகையை
பெறுவதிலுள்ள இடர்ப்பாடுகளினாலும் ஏற்பட்டுள்ள நிதிச்சுமையினால் இந்த முடிவு. இந்நிலையில்
திருச்சி<i> BHEL </i>தொழிலக வாசகர்கள் ‘மிகுதிநேரப் பணி செய்தாவது எம்மாலான நிதியுதவியைச்
செய்கிறோம், புதுவிசையை அச்சு வடிவிலேயே தொடருங்கள்<span lang="EN-US">’ </span>என்று
பத்தாயிரம் ரூபாயை முதல் தவணை நன்கொடையாக வழங்கியிருக்கிறார்கள். நிதிநிலை சீரடையுமாயின்
தோழர்களின் நன்னோக்கையும் விருப்பத்தையும் புதுவிசை நிறைவேற்றும். <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><o:p></o:p></span></div>
<br />
<div class="MsoNoSpacing">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">- ஆசிரியர் குழு, புதுவிசை<o:p></o:p></span><br />
<span style="color: blue; font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span>
<span style="color: blue; font-family: arial unicode ms, sans-serif;">செப்டம்பர் முதல்வாரத்தில் கிடைக்கும்.</span><br />
<span style="color: blue; font-family: arial unicode ms, sans-serif;">பிரதிகளுக்கு: </span><span style="color: blue; font-family: "arial unicode ms", sans-serif;">ந.பெரியசாமி - 9487646819</span></div>
</div>
</div>
புதுவிசைhttp://www.blogger.com/profile/09276344793619872435noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8111967010823738396.post-54137674293050179432017-08-23T10:13:00.002-07:002017-08-23T10:13:40.677-07:00இந்தியத் தொழிற்சங்க - இடதுசாரி இயக்கங்களின் முன்னுள்ள சவால் - இக்பால்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjrUoyiNTo12I1gGPUc9CVQn1x06CJrJXuQTTFLPKE5gorwp394YuTS5sAqZPXTbLdyWLYIsaXIX1_DffMAG07_Tfu0J3Pc5fS-D5V98LEXtPid9Bi_E6nLhkl30e9b9skhPlhv7SyRWGHj/s1600/dc-Cover-kj6lrihuv7tqhqel1b8lftcit4-20160419203046.Medi.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="448" data-original-width="800" height="223" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjrUoyiNTo12I1gGPUc9CVQn1x06CJrJXuQTTFLPKE5gorwp394YuTS5sAqZPXTbLdyWLYIsaXIX1_DffMAG07_Tfu0J3Pc5fS-D5V98LEXtPid9Bi_E6nLhkl30e9b9skhPlhv7SyRWGHj/s400/dc-Cover-kj6lrihuv7tqhqel1b8lftcit4-20160419203046.Medi.jpeg" width="400" /></a></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS", sans-serif; font-size: 12pt;">1</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">காங்கிரஸ் கட்சியின் ராஜீவ் காந்தி முதல்முறையாக
பிரதமர் பொறுப்பேற்ற 1985-87 காலக்கட்டத்தில்தான் பொதுத்துறையின் முக்கியத்துவத்தை
பின்னுக்குத்தள்ளி தனியார் முதலாளிகளை மேலும்
கொழுக்க வைப்பதற்கான திட்டங்களை அரசின் திட்டமாகவே ஆக்கிடும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
1986 செப்டம்பர் மாதத்தில் இந்தியத் தொழிற்துறையை மறுசீரமைப்பதற்கான <i>(Reforms)</i> விரிவான செயற்திட்டத்தை வரையுமாறு
திட்டக்குழுவை அவர் பணித்தார், ஒரு விரிவான திட்டமும் வரையப்பட்டது.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">1989-90 காலக்கட்டத்தில் வி.பி.சிங்கின்
தேசிய முன்னணி கூட்டணி அமைச்சரவை பொறுப்பில் இருந்தது. அதன்பின் 1991 மே மாதம் நடந்த
தேர்தலில் காங்கிரஸ் கட்சி 232 இடங்களில் வென்றது. மே 21ஆம் தேதி ராஜீவ் காந்தி படுகொலை
செய்யப்படும் முன் நடந்த முதற் கட்டத் தேர்தலில் 319 இடங்களில் 130 இடங்களை மட்டுமே
வென்ற காங்கிரஸ் இரண்டாம்கட்டத் தேர்தலில்
202 இடங்களில் 102 இடங்களை அதாவது சரிபாதி இடங்களை வென்றது அனுதாப அலையின்
காரணமாகவே என்பது தெரிந்த செய்தி. அப்போதும்கூட பெரும்பான்மை கிட்டவில்லை. அன்றைய
சூழலில் மதவெறி ஆர்.எஸ்.எஸ், பிஜேபி கும்பல் ஆட்சியமைப்பதை தடுக்கும் ஒற்றை நோக்குடன்
இடதுசாரிகள் காங்கிரஸ் அரசுக்கு ஆட்சியில் பங்குபெறாமல் ஆதரவளித்தனர், நரசிம்மராவ்
பிரதமர் ஆனார்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">ரிசர்வ் வங்கி, உலக வங்கி, ஆசிய வளர்ச்சி
வங்கி போன்றவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்ற அரசு அதிகாரியான மன்மோஹன் சிங் நிதியமைச்சர்
ஆக்கப்பட்டார். அன்றைய நிலையில் இந்தியப்பொருளாதாரம் மிகமிக மோசமான நிலையில் இருந்ததாக
காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் </span><i><span style="font-size: 11.5pt;">To
the brink and back </span></i><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">என்ற
நூலில் சொல்கின்றார். அன்றைய மத்திய அமைச்சரவைச் செயலாளரான நரேஷ் சந்திரா ‘பிரதமர்
முன்னுள்ள உடனடி சவால்கள்<span lang="EN-US">’ </span>அடங்கிய எட்டுப்பக்க ரகசியக்குறிப்பை
நரசிம்மராவிடம் அளித்தபோது ‘நமது பொருளாதாரம் இத்தனை மோசமான நிலையில் உள்ளதா?’ என்று
அவர் கேட்டதாகவும், நரேஷ் சந்திரா ‘இல்லை, உண்மையில் மிகமிக மோசமாக உள்ளது<span lang="EN-US">’ </span>என்று சொன்னதாகவும் ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிடுகின்றார். இத்தேசம்
அப்படி யானதொரு மிகப்பெரும் ஆபத்தான சிக்கலில் இருந்தது உண்மைதான் எனில் ஒருசில வருடங்கள்
மட்டுமே ஆட்சியிலிருந்த (காங்கிரஸ் அல்லாத)
மொரார்ஜி தேசா யின் ஜனதா ஆட்சி, அதன்பின் வி.பி.சிங், சந்திரசேகர் போன்ற அரசுகளைத்
தவிர 1947க்குப் பின் இத்தேசத்தை தொடர்ந்து ஆட்சி செய்துவந்த காங்கிரஸ் கட்சியின் பெருமுதலாளிகளுக்கு
ஆதரவான கொள்கைகள் மட்டுமே காரணமாக இருக்கமுடியும் என்பதை காங்கிரஸ் கட்சியினர் வசதியாக
மறைத்து விடுகிறார்கள். விசித்திரம் என்னவெனில் அப்பெரும் சிக்கலில் இருந்து தேசத்தை
மீட்பதாகச் சொல்லிக்கொண்டு சர்வதேச-இந்தியப் பெருமுதலாளிகளுக்கு இத்தேசத்தை மேலும்
அகலமாகத் திறந்துவிடும் எல்.பி.ஜி. எனப்படும் தாராளமயம் - தனியார்மயம் - உலகமயம் ஆகிய
மூன்று கோட்பாடுகளைத்தான் தறிகெட்டு ஓடும்
வாகனத்தின் வேகத்தில் நடைமுறைப்படுத்தினார்கள். <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">இதன்பின் இந்தியாவின் சமூக பொருளாதார
வரலாற்றை 1991க்கு முன், பின் என பகுத்தெழுதத்தக்க வகையில் பெரும் சீரழிவை இத்தேசம்
சந்தித்தது. அதுகாறும் இந்தியப்பெரு முதலாளிகளுடன் மல்லுக்கட்டிக் கொண் டிருந்த இந்திய
இடதுசாரி அரசியலும் தொழிற்சங்க இயக்கமும் சர்வதேசக் கார்ப்பரேட்டுகளோடும் தெருவில்
இறங்கி போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டன. இடதுசாரிகளின் ஆதரவுடன் அமைந்த தேவ கவுடா,
ஐ.கே.குஜ்ரால் ஆகிய காங்கிரஸ் அல்லாத அரசுகளின் காலத்தில் சொல்லும்படியாகவும்,
2000க்குப் பிறகு அமைந்த காங்கிரஸ் அரசின் காலத்தில் ஓரளவும் எல்.பி.ஜி.யின் வேகத்தைக்
கட்டுப்படுத்த முடிந்தது. இவை தவிர்த்த 1990க்குப் பின்னான காலத்தில் தனியார்மயம் மிக
வேகமாக நடைமுறைக்கு வந்தது. கார்ப்ப ரேட்டுக்களின் சொர்க்க பூமியாக இந்தியா மிக வேகமாக
மாறியது. இக்காலக்கட்டத்தில்தான் உலக கோடீசுவரர்கள் பட்டியலில் பல இந்தியர்களும் சேர்ந்தார்கள்.
இதே காலகட்டத்தில்தான் மூடப்பட்ட ஆலைகளின் பட்டியலும் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின்
பட்டி யலும் மிக நீளமானது. விவசாய நிலங்கள் பெரு முத லாளிகளின் நலன் பொருட்டும் நாற்கர
அறுகரச் சாலைகளின் பொருட்டும் பிடுங்கப்பட்டதும் விவசாயிகள் கிராமப்புறங்களை விட்டகன்று
நகர்ப்புறங்களில் தாம் இதுவரை செய்திடாத கட்டுமானத் தொழிலிலும் ஓட்டல்களிலும் தனியார்
செக்யூரிட்டி நிறுவனங்களிலும் அத்தக்கூலி வேலைகளுக்காகத் துரத்தப்பட்டதும் இக்காலத்தில்
தான். காங்கிரஸ் தொடங்கிவைத்த அழிவை சங் பரிவாரின் அடிப்பொடியான நரேந்திரமோடி மிக வேகமாக
முன்னெடுத்துச் செல்வதை தேசம் இப்போது பார்க்கின்றது. மோடியின் வாயிலிருந்து அலங்கார
வார்த்தைகள் அவ்வப்போது அணிவகுத்து வருகின்றன. செய்தித்தாட் களில் முழுப்பக்க விளம்பரங்கள்
கண்ணைப் பறிக்கின்றன. கார்ப்பரேட்டுகளே என் நண்பன் என்று சொல் வதற்கு நரேந்திரமோடி
எப்போதும் கூச்சப்பட்டதில்லை. அதானியின், அம்பானியின்
துணையின்றி பயணம் எதையும் மேற்கொண்டதுமில்லை. இரும்பு, சுரங்கம், தோல், கம்ப்யூட்டர்,
பங்குச்சந்தை, பிட்சா, பர்கர், வறுத்த கோழிக்கறி என பல தொழில்களைச் செய்வதுபோல் ஊடகங்களையும்
கார்ப்பரேட் அதிபர்கள் விலைக்கு வாங்கி ஒரு தொழிலாக நடத்துகின்றார்கள். நாம் பார்க்
கின்ற ‘நடுநிலை' டி.வி.க்களும் நாளேடுகளும் இந்த கார்ப்பரேட் அதிபர்கள் நடத்துபவைதான்.
இந்த ஊடகங்கள்தான் 2014இல் நரேந்திர மோடியையும் 2016இல் ஜெயலலிதாவையும் நாற்காலியிலே
உட்காரவைத்தன. <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">இப்பூவுலகின் சாமானியர் எவராயினும் அவர்
உண்ணும் ஒரு கவள உணவாகினும் அருந்தும் ஒரு குவளை நீராகிலும் அதற்குப் பின்னால் எவனோ
எவளோ எத்தனை பேரோ தம் உயிரைத் தத்தம் செய்து பெற்ற உரிமை என்பது சமூக வரலாறு. இவ்வுரிமைகளின்
பொருட்டு தம் இன்னுயிரை சிறைக்கொட்டடிகளிலும் இருள் கவிந்த தனிமைச்சிறைகளிலும் தூக்குக்கயிறுகளிலும்
நீத்தவர்களின் இரத்தம் சிந்தியவர்களின் வரலாறுகள் தேசங்களின் செயற்கையான எல்லைகளைத்
தாண்டி ரத்த நாளங்கள் போல் நீள்கின்றன. இந்தியத் தொழிலாளி வர்க்கம் இதுகாறும் அனுபவித்துவரும்
உரிமைகளுக்கும் இவ்வாறான நெடிய வரலாறு உள்ளது. இவ்வாறு போராடியும் உயிர்நீத்தும் பெறப்பட்ட
உரிமைகளை 1990களுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு உட்படுத்தாமல் வெறும்
அரசாணைகள் மூலம் வெட் டியோ சுருக்கியோ முற்றாக நீக்கியோ சின்னாபின்னப் படுத்தும் மக்கள்
விரோத நடவடிக்கையில் காங்கிரசும் பாஜகவும் போட்டிபோடுகின்றன. தொழிற்சங்கச் சட்டம்,
தொழிற்தாவா சட்டம், தொழிற் சாலைகள் சட்டம் என ரத்தம் சிந்தியும் உயிர்த்தியாகம் செய்தும்
வென்றெடுக்கப்பட்ட சட்டங்கள் வெட்டிச் சுருக்கப்பட்டு அர்த்தம் இழக்கவைக்கப்படுகின்றன.
அமைப்பு ரீதியாக அணிதிரட்டப்பட்ட தொழிலாளர்களின்-விவசாயிகளின் சக்தி மிகப்பெரும் அரசியல்
பவுதீக சக்தி என்பதை நன்கு உணர்ந்துள்ள கார்ப்பரேட்டுகள் +அரசாங்கக் கூட்டணி, தொழிற்சாலைகளை
மூடுவது, தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்குவது, காலியிடங்களை நிரப்பாமல் விடுவது,
உற்பத்தியைக் குறைப்பது, நிரந்தரத் தொழிலாளர்களின் இடத்தில் காண்ட்ராக்ட் தொழிலாளிகள்
என்னும் புதிய வகை அடிமை முறையைப் புகுத்துகின்றது. தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தியோ
சுருக்கியோ அவற்றை முனை மழுங்கச் செய்கிறது.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">2<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">இத்திட்டத்தின் ஒரு பகுதியாக ‘தொழிலாளர்
வருங்கால வைப்பு நிதியை (EPF) எந்தத் தொழிலாளியும் எடுத்துப் பயன்படுத்த முடியாது'
என்று இன்றைய பி.ஜே.பி.யின் மோடி அரசு புதிய ஆணையை வெளியிட்டது. வைப்பு நிதி என்பது
ஒரு தொழிலாளி தன் அடிப்படை ‘ஊதியத்தில் 12 விழுக்காட்டைத் தனது சேமிப்பில் சேர்ப்பது.
இதே அளவு சமமான தொகையை முதலாளியும் தனது பங்காக தொழிலாளியின் சேமிப்பில் சேர்க்கவேண்டும்.
ஒரு தொழிலாளி இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக வேலையின்றி இருப்பார் எனில் அவர் தனது வைப்பு
நிதி சேமிப்பிலிருந்து ‘மொத்தப் பணத்தையும் திரும்பப் பெற முடியும். 2016 பிப்ரவரி
10 அன்று தொழிலாளர் அமைச்சகம் (நல அமைச்சகம் என்றும் சொல்கிறார்கள்) வெளியிட்ட ஆணையின்படி,
தொழிலாளி ஒருவர் தனது மொத்த சேமிப்பிலிருந்து தனது பங்காக தான் செலுத்திய சேமிப்பை
மட்டுமே திரும்பப் பெற முடியும், முதலாளி அளித்த பங்கை 58 வயது முடிந்த பின்னரே திரும்பப்
பெறமுடியும். இன்னொரு கொடுமை என்ன வெனில் தொழிலாளியின் பங்கான 12%ல் 3.67% மட்டுமே
வைப்பு நிதிக்குப் போகின்றது, மீதி 8.33% ஓய்வூதிய
நிதியில் தான் சேர்க்கப்படும், எனவே மொத்தமுள்ள 24%ல் 3.67 விழுக்காட்டை மட்டுமே திரும்பப்
பெறமுடியுமாம். மாதம் 7000 ரூபாய் மட்டுமே வருமானம் ஈட்டும் பல லட்சம் தொழிலாளிகளுக்கு
இது மிகமிகச் சொற்பமான தொகை என்பதைச் சொல்லவும் வேண்டாம். சி.ஐ.டி.யூ. வின் அகில இந்தியத்
தலைவரான ஏ.கே.பத்மனாபன், “இந்த அறிவிப்பை வெளியிடும் முன் தொழிலாளர்கள் தம் விருப்பத்தைத்
தெரிவிக்க, அதாவது ‘சேமிப்பைத் திரும்பப் பெறுவதா
சேமிப்பில் தொடர்ந்து வைத்துக் கொள்வதா<span lang="EN-US">’ </span>என்று தேர்வு செய்யும்
உரிமையை அவர் களுக்கே விடவேண்டும் என்று நாங்கள் அரசை வற்புறுத் தினோம். அரசுத்தரப்பு
இதை நிராகரித்தது'' என்று சொல்கின்றார். பிராவிடன்ட் நிதிக்கான மத்திய அறங் காவலர்
வாரியத்தில் இவர் உறுப்பினராகவும் உள்ளார்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">இதுவே மிகப்பெரும் பாதகம் என்றால் இதனைவிடவும்
பாதகமான, மோசடியான ஒரு திட்டத்தை மோடி அரசு இதற்குமுன் முன்வைத்தது: அதாவது வைப்பு
நிதியைத் திரும்பப்பெறும் போது அதற்கான பணத்திற்கு வருமான வரியை விதிக்க அரசு திட்டமிட்டது.
புரிகின்றதா? தொழிலாளர்கள் தாங்கள் சேமித்த பணத்தையே தமக்கான ‘வருமானமா<span lang="EN-US">’</span>கக் கருத வேண்டுமாம். பலத்த கண்டனங்களுக்குப் பிறகே இந்த மோசடித்
திட்டத்தை மோடி அரசு கைவிட்டது.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">58 வயதில்தான் திரும்பப் பெறமுடியும்
என்ற மோடி அரசின் ஆணைக்கு நாடெங்கிலும் பலத்த கண்டனங்கள் எழுந்தன. ஏனெனில் தொழிலாளர்
வைப்புநிதிக்கு நேரடி யாகத் தொடர்புள்ளவர்கள் மாதம் 7000- 8000 ரூபாய் வருமானமுள்ள
கோடிக்கணக்கான மக்களே. மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தைப் பரிசீலிக்க நியமிக்கப் பட்ட
ஏழாவது ஊதியக்குழு, மத்திய அரசு அதிகாரிகளின் உயர்ந்தபட்ச மாத அடிப்படை ஊதியத்தை
2,10,000 ரூபாய் எனப் பரிந்துரைத்துள்ள நிலையில் (பிற அலவன்சுகள் தனி) மாத ஊதியம் மொத்தமாக
பத்தாயிரம் கூடப் பெறாத பலகோடித் தொழிலாளர்கள் கொதிப்படைந்தார்கள்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">இந்தியாவெங்கிலும் அணிதிரட்டப்படாத அல்லது
தொழிற்சங்கங்களில் இணையமுடியாத அல்லது தொழிற் சங்கங்களால் திரட்டப்படமுடியாத தொழிலாளர்கள்
பல லட்சம் அல்லது சில கோடிகள் இருக்கின்றார்கள் எனில் அது ஆயத்த ஆடைத் தயாரிப்புத்
தொழில்தான். சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் </span><i><span style="font-size: 11.5pt;">(International Labour Organization) </span></i><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">அறிக்கையின்படி, “ஆயத்த ஆடைத்
தொழில்தான் நகர்ப்புற இந்தியாவின் மிகப்பெரிய தொழிலாக உள்ளது, தேசிய பொருளாதாரத்தில்
முக்கியப் பங்கு வகிக்கின்றது. 20 வருடங்களுக்கு முன் முறைசாராத் தொழில் என்ற நிலையில்
இருந்தது மாறி தொழிற்சாலை சார்ந்த தொழிலாக அது மாறியுள்ளது.'' முக்கியமாக இந்தியாவின்
ஏற்றுமதிப் பொருளாதாரத் தில் பெருமளவு வருவாய் ஈட்டும் தொழில்களில் இது முக்கியமானது.
குறிப்பாக பெங்களூர், திருப்பூர், சென்னை, டெல்லி நகரங்களில் மட்டும் பத்துலட்சம் தொழிலாளர்கள்
இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இது தவிர புறநகர்கள், சிறுநகரங்கள், கிராமங்கள், வீடுகள்
என மேலும் பல லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் பிரபல
பிராண்டுகளாக அறியப்பட்ட ஆனால் இந்தியக்கடைகளில் விற்கப்படும் உள்ளாடைகள், சட்டைகள்,
பாண்ட்டுகள், அரை, முக்கால் டிரவுசர்கள் என அனைத்தும் இவர் களைப் போன்ற பல லட்சம் இந்தியத்
தொழிலாளர்கள் இந்தியாவின் நகரங்களில் தைப்பவையே, உள்நாட்டில் அந்நிய பிராண்டு லேபிள்
ஒட்டப்பட்டு விற்கப்படுவதோடு, பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால் இத்தொழிலாளர்களின்
வாழ்க்கைத்தரம்?<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">உதாரணமாக பெங்களூரின் பிராண்டிக்ஸ் இந்தியா
என்னும் கம்பெனி உள்ளாடைகள் தயாரித்து அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றது.
19,000 தொழிலாளர்கள் பணி செய்கின்றார்கள், வருட நிதிச் சுழற்சி ரூபாய் 1500 கோடி. ஷாஹி
எக்ஸ்போர்ட்ஸ் பெங்களூரின் மிகப்பெரும் ஆயத்த ஆடைக்கம்பெனி, 45 இடங்களில் மொத்தம் 75,000 தொழிலாளர்கள் வேலை செய்கின்றார்கள்.
கோகுல்தாஸ் எக்ஸ்போர்ட்ஸ்க்கு 16 தொழிற்சாலைகள், 12,000 தொழிலாளர்கள், பெங்களூரில்
மட்டும் 5,000 தொழிலாளர்கள். டெக்ஸ்போர்ட் ஓவர்சீஸிற்கு 13 தொழிற்சாலைகள், 12,000 தொழிலாளர்கள்.
கோகுல்தாஸ் இமேஜஸ்க்கு 13 தொழிற்சாலைகள், 2,000 தொழிலாளர்கள். வால்மார்ட், போலோ, நைக்
உள்ளிட்ட பல பிரபல பிராண்டுகளைத் தைப்பவர்கள் இந்தியத் தொழிலாளர்களே. இதே பிராண்டிக்ஸ்
இந்தியா கம்பெனி, விசாகப்பட்டினத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் 19,000 தொழிலாளர்களை
வேலைக்கு வைத்துள்ளது. இத்தொழிலில் பெங்களூரில் மட்டுமே சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள்
உள்ளார்கள்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ள
இத் தொழிற்சாலைகளுக்கு அதாவது முதலாளிகளுக்கு கற்பனைக்கெட்டாத சலுகைகளை மத்திய மாநில
அரசுகள் வாரிக் கொட்டுகின்றன. உதாரணமாக, ஆந்திர அரசு பிராண்டிக்ஸ் கம்பெனிக்கு அரசுநிலத்தை
ஒரு ஏக்கருக்கு ஒரு வருடத்திற்கு வெறும் ஓராயிரம் ரூபாய்க்கு மட்டுமே குத்தகைக்குவிட்டுள்ளது.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">85 விழுக்காட்டிற்கும் அதிகம் பெண்கள்
பணிபுரியும் இத்தொழிலில் நிலவும் மிக மோசமான பணிக்கலாச்சாரம், பாதுகாப்பின்மை, அடிமைத்தனம்,
அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தையும் ஏமாற்றுதல், ஊதியத்துடன் கூடிய விடுமுறையை
மறுத்தல், அனைத்திற்கும் மேல் பாலியல் தொந்தரவு ஆகிய அனைத்துக் கொடுமைகளும் இத்தொழிலாளர்களை
எப்போதும் கொதிநிலை யிலேயே வைத்துள்ளன. 10 மணிநேரம் வரை வேலை. பீஸ்ரேட் முறையில் ஒரு
மணி நேரத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட பீஸ்களின் எண்ணிக்கையை இருமடங்கு, மும் மடங்கு என
உயர்த்துவது (அதே கூலிக்கு), கழிப்பறை கள் உபயோகிப்பதைக்கூட ஒருநாளைக்கு இத்தனை முறைதான்,
அதுவும் இத்தனை நிமிடங்கள்தான் எனக் கண்காணிப்பது, உடல் நலக்குறைவால் எதிர்பாராது விடுப்பெடுக்க
நேர்ந்தால் மீண்டும் தொழிற்சாலைக்குள் நுழையவிடாமல் தடுத்து புதிய நிபந்தனைகளை விதிக்கும்
தந்திரம், அசிங்கமான வார்த்தைகளால் திட்டுவது, சிறு தவறுகளுக்கும் முகத்தில் துணிகளை
விட்டெறிவது, ஆண்களே மேலதிகாரிகளாக, கண்காணிப்பாளர்களாக இருப்பதால் அவர்களால் தரப்படும்
கண்ணுக்குத் தெரியாத நுட்பமான பாலியல் வன்முறைகள், பிரசவத்திற்குப் பிறகு அரசு விதிகள்
தந்துள்ள பிரசவகால ஊதியத்துடன் கூடிய விடுப்பை மறுப்பது, பிரசவிக்கும் பெண்களை வேலையிலிருந்து
நீக்குவது, குழந்தைகள் காப்பகம் இருந்தாலும் ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அனுமதிக்கமறுப்பது
(அதாவது குழந்தைகளுக்குத் தாய்ப்பால் ஊட்டுவதால் உற்பத்தி பாதிக்கப்படுமாம்) எனத் தொடரும்
கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி இல்லை.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியம்
ஒரு நாளுக்கு ரூ.287 (ஊதியத்துடன் கூடிய விடுப்பு நாட்கள் உட்பட) 26 நாட்களுக்கு எனில்,
ரூ.7462ரூபாய் தரப்பட வேண்டும். ஆனால் 7000 மட்டுமே தரப்படும். ரூ.7462 தரப்பட்டதாகக்
கணக்கில் காட்டப்படும். இதுவன்றி இலக்கை எட்டாத தொழிலாளி கூடுதலாக 2 மணி நேரம் வேலை
செய்யவேண்டும், ஆனால் ஓவர்டைம் ஊதியம் தரப்படாது. இ.எஸ்.ஐ, வைப்புநிதி, கேன்டீன், பஸ்
வசதி எனப் பலவகைகளிலும் பிடித்தம் செய்யப்பட்ட பின் இந்த 7000 ரூபாயும்கூடக் கையில்
வராது பிராண் டிக்ஸ் தொழிலாளர்கள் பெங்களூரைச் சுற்றியுள்ள சுமார் 200 கிராமங்களிலிருந்து
கம்பெனியில் பேருந்துகளில் ஏற்றப்பட்டு வருகின்றார்கள். காலை 6 மணிக்கு தொழிற் சாலையில் இருக்க அதிகாலை
4 மணிக்கே வீட்டிலிருந்து புறப்பட வேண்டும். மாலையும் வீட்டை அடைய 8மணி ஆகலாம். ஆக
குழந்தைகளின் கல்வி, உடல்நலன், தனது உடல்நலன், அன்றாடக் குடும்ப விசயங்கள், சமூகத்
தொடர்புகள் அத்தனையும் இரண்டாம்பட்சத்துக்கும் பின்னே எங்கோ போய்விடுகின்றன.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">இதற்கு முன் இத்தொழிலில் விடுதிகள் இருக்காது.
இப்போது விடுதிகள் கட்டப்படுகின்றன. தமிழ்நாடு, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களிலிருந்து
மட்டு மின்றி வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், ஒரிசா போன்றவற்றில் இருந்தும் இத்தொழிலில்
இப்போது பெங்களூரில் பார்க்க முடிகின்றது. தந்திரமாக ஏற்கனவே பலபெயர்களில் பிடிக்கப்படும்
ஊதியத்தில் விடுதி வாடகையையும் நிர்வாகங்கள் பிடித்துவிடுகின்றன.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது,
ஒடுக்கப்பட்ட ஷெட்யூல்டு சாதி மக்கள், பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட பிரிவுகளில்
இருந்தும், சிறுபான்மைச் சமூகங்களான இஸ்லாமியர்களும் இத்தொழிலில் பெரும்பான்மையினர்,
அதிலும் பெண்கள், இவர்களின் சில நூறு ரூபாய்கள் மாத ஊதியத்தை நம்பியே இக் குடும்பத்தினர்
வாழ்கின்றார்கள், இப்பெண்களின் கணவர்கள் தினக்கூலி வேலைக்குச் செல்வார்கள் அல்லது வேலைக்குச்
செல்லமாட்டார்கள். சென்றாலும் அவ்வருவாயை மதுவைக் குடித்துத் தீர்த்துவிடுவார்கள்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">இத்தகைய பல்வேறு அழுத்தங்களும் பிரச்சனைகளும்
ஒரு பெண்மணியை ஒரு தொழிற்சாலையில் தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு வேலை செய்ய அனுமதித்தால்
அதுவே பெரிய சாதனையாகும். ஐந்து வருடங்கள் பணி செய்தால் கிராஜுட்டி எனப்படும் பணிக்கொடையை
வழங்கவேண்டியிருக்கும் என்பதால் ஐந்து வருடங்கள் முடியும் முன்பே பல்வேறு நெருக்கடிகள்
தரப்படும். தொழிலாளர்கள் தாமாகவே வேலையைவிட்டு நின்று விட வேண்டும் என்பதே கொடூரமான
நோக்கம். ஐந்து வருடங்களுக்கு மேல் பணிபுரிவோரின் வருகைப்பதிவு செய்யப்படாது, ‘பஞ்சிங்'
முறை மறுக்கப்படும். இத்தனை கொடுமைகளையும் சகிக்காமல் வேலையை விட்டுச்சென்றால், ஆனால்
மீண்டும் அதே தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தால் அவர் புதிய தொழிலாளியாகி விடுவார்.
எனவே புதிய பிராவிடன்ட் நிதிக்கணக்குத் தொடங்கப்படும்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">தொழிற்சங்கங்கள் வெளியிடக்கூடிய துண்டறிக்கைகளைக்
கையில் வைத்திருந்தால் அதுபோதும் வேலையை விட்டு நீக்குவதற்கு. அப்படியிருக்க ஒரு தொழிற்சங்கம்
தொடங்க அல்லது ஒரு தொழிற்சங்கத்தில் இணைய முனைவோரின் நிலை பற்றிக் கூற வேண்டிய அவசியம்
இல்லை.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">இருப்பினும் பெங்களூரைப் பொருத்தவரை
1990களில் ஆயத்த ஆடைத்தொழிலில் சி.ஐ.டி.யூ பெருவாரியான சங்கங்களைக் கொண்டிருந்ததாகவும்
வலிமையான போராட்டங்களை நடத்திய தொழிற்சங்கமாக இருந்ததாகவும் அறியமுடிகின்றது. ஆனால்
1990களின் தொடக்கத்தில் மத்திய காங்கிரஸ் அரசால் புகுத்தப்பட்ட தனியார் மய- தாராளமயக்
கொள்கைகளின் விளைவாக பல தொழிற்சாலைகள் மூடப்பட்டதும் தொழிலாளர்கள் மிரட்டப்பட்டதும்
பழிவாங்கப்பட்டதும் இத்தொழிலில் தொழிற்சங்க இயக்கத்தின் தேய்மானத்துக்குக் காரணமானவை.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">3<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">இந்நிலையில்தான் தமது சொற்ப சேமிப்பான
வைப்பு நிதிச் சேமிப்பிலும் பாரதிய ஜனதா கட்சியின் நரேந்திர மோடி அரசு கொடூரமாகக் கைவைப்பது
கண்டு யாதொரு அமைப்பும் கட்சியும் தொழிற்சங்கமும் அறைகூவல் விடுக்காமலேயே ஏப்ரல்
18,2016அன்று பெங்களூரின் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் கோபாவேசம்
கொண்டவர்களாக வீதிகளிலும் நெடுஞ்சாலைகளிலும் திரண்டார்கள். மிகச்சில ஆண்களும் பங்குபெற்றார்கள்.
இது வரலாற்றில் தனியாகக் குறிப்பிடவேண்டிய ஒரு போராட்ட நிகழ்வாகும்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">பெங்களூர் போராட்டத்துக்கு முன்பாகவே
விசாகப்பட்டினத்தில் அச்சுதபுரம் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ள பிராண்டிக்ஸ்
இந்தியா கம்பெனியின் 19000 தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தார்கள். கம்பெனி வாயில்
முன்பு தர்ணா செய்து உட்கார்ந்தார்கள். கம்ப்யூட்டர்மீது பெரும் நம்பிக்கை என்பதை விடவும்
பக்தியோடிருப்பவரும் ஆளுயர லத்திகளைக் கண்டுபிடித்து போலீசுகளின் கையில் கொடுத்து விவசாயிகளின்,
தொழிலாளர்களின் பல போராட்டங்களின் மீது ஏவி பெரும் ரத்தக்களறியை ஏற்படுத்திய வரலாற்றுக்குச்
சொந்தக்காரரும் மோடியோடு சேர்ந்தே ஸ்மார்ட் சிட்டி கனவைக் காணும் நவீனருமான சந்திரபாபு
நாயுடு இப் போராட்டத்தைக் கண்டு சகித்துக்கொள்ளாதவராக, மாவட்ட ஆட்சித் தலைவர், அரசு
உயர், நடுத்தர, கீழ் அதிகாரிகள், கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்கள், சுய உதவிக்குழுக்கள்,
தனது கட்சிக்காரர்கள் என அனைவ ரையும் களத்தில் இறக்கி தொழிலாளர்களை மிரட்டினார், போராட்டத்தை
ஒடுக்க முனைந்தார். கர்நாடக காங்கிரஸ் அரசும் இதேபோன்ற நடவடிக்கையில்தான் இறங்கியது.
பெங்களூரில் காங்கிரஸ் அரசின் போலிஸ் மோசமான போராட்ட ஒடுக்குமுறையில் இறங்கியது. தொழிலாளர்களின்
போராட்டங்களை தொடக்க நிலை யிலேயே கிள்ளி எறிவதில் பாரதிய ஜனதா, காங்கிரஸ், தெலுங்குதேசம்
என அனைவரும் ஒரே அணியில் நின்றார்கள். பெங்களூரில்
போராடிய தொழிலாளர்களுடன் கலந்துவிட்ட சமூக விரோதிகள் பேருந்துகளை எரித்தது திட்டமிட்ட
வகையில் போராட்டத்தைச் சீர் குலைப்பதற்கே. இதனால் போலீஸ் தடியடி நடத்தியது. அரசும்
அடக்குமுறைக் கருவியான போலீசும் பெருமுதலாளிகளின் நலனுக்காவே என்பது மீண்டும் ஒருமுறை
அம்பலமானது. <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">பெங்களூரில் ஷாஹி எக்ஸ்போர்ட்ஸ் தொழிற்சாலை
யில் இத்தன்னெழுச்சியான போராட்டம் முதலில் வெடித்தது. தொழிலாளர்கள் வெளியே வந்து மைசூர்
சாலையில் மறியல் செய்தார்கள். 80கி.மீ தொலைவில் பொம்மனஹள்ளியில் ஷாஹியின் மற்றொரு தொழிற்சாலையின்
தொழிலாளர்களும் வெளியேற செய்தி காட்டுத்தீயெனப் பரவியது, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட
தொழிலாளர்கள் சாலைகளிலும் வீதிகளிலும் திரண்டார்கள். போலீசோடு சேர்ந்துகொண்டு தனியார்
செக்யூரிட்டி ஆட்களும் தொழிலாளர்களை லத்தி கொண்டு தாக்கினார்கள். சில நூறு பேர்களை
போலீஸ் கைது செய்தாலும் மறுநாளும் போராட்டம் தீவிரம் அடைந்தது. குறிப்பிடத்தக்க விசயமாக
நிரந்தரத் தொழிலாளர்களுடன் காண்ட்ராக்ட் தொழிலாளர்களும் இப் போராட்டத்தில் இணைந்தார்கள்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">மார்க்சிஸ்ட் கட்சியின் கர்நாடகா மாநிலச்செயலாளர்
மீனாட்சிசுந்தரம், “இக்கோபாவேசப் போராட்டம் யாராலும் அறைகூவல் விடுக்கப்பட்ட ஒன்றல்ல,
தன்னெ ழுச்சியானது'' என்கின்றார். பெங்களூரில் எந்த ஒரு தொழிலிலும் கடந்த 10 ஆண்டுகளில்
இப்படியான சக்தி யான ஆவேசமானதொரு போராட்டம் நடந்ததில்லை என்றும் கூறுகின்றார். தாராளமயம்-தனியார்
மயத்தின் பின்னணியில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உரு வாக்கப்பட்டபின் ஆயத்த ஆடைத்தொழிலாளர்களை
மட்டுமல்ல, எந்தத்தொழிலிலும் எந்தத் தொழிலாளியையும் தொழிற்சங்கத்தில் இணைப்பதோ முடியாத
விசயமாகிப் போனதால் தொழிற்சங்க இயக்கம் தேய்ந்து சிதைந்ததை சி.ஐ.டி.யூ உள்ளிட்ட பல
தொழிற்சங்கத் தலைவர்கள் வருத்தத்துடன் குறிப்பிடுகின்றார்கள்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">4<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">உழைக்கும் பெண்கள் மிகப்பெரிய அளவில்
வீதிகளில் திரண்டு, எந்தவொரு அணி திரட்டப்பட்ட தொழிற்சங்கத்தின் அல்லது அமைப்பின் பின்னால்
இல்லாமல் இரண்டுநாட்கன் போலீஸ் அடக்குமுறையையும் தனி யார் ரவுடிகளையும் எதிர்கொண்டு
போராடியது 1990 களுக்குப்பின் இதுவே முதன்முறையாக இருக்கக்கூடும்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டதுபோல்
இரும்புத்தொழில், கார் உற்பத்தி, கத்தரிக்காய் தக்காளி விவசாயம், சூப்பர் மார்க்கெட்
சங்கிலி, மால்நடத்துவது, மது தயாரிப்பது போல் ஊடகங்களை நடத்துவதையும் கார்ப்பரேட்டுகள்
ஒரு தொழிலாக்கி விட்டதால் பெங்களூர் தொழிலாளர்களின் வீரஞ்செறிந்த போராட்டத்தை இடதுசாரி
ஏடுகள் மட்டுமே வெளியிட்டுத் தமது கடமையைச் செய்தன. பெருமுதலாளிகளின் ஊடகங்கள் சில
பேருந்துகள் எரிக்கப்பட்டதை மட்டுமே செய்தியாக்கியதன் மூலம் தொழிலாளர்களின் நியாயமான
கோரிக்கையை, குறிப்பாக மோடி அரசின் மோசடித்தனமான அரசாணையின் கொடூரத்திற்கு எதிரானதே
இப்போராட் டம் என்பதை திட்டமிட்டு இருட்டடிப்பு செய்தன. போராட்டத்தின் இரண்டாவது நாள்
வைப்புநிதி தொடர்பான தனது கொடுமையான ஆணையை மோடி அரசு சத்தமின்றி திரும்பப் பெற்றுக்கொண்டது.
சாமான்ய மக்களின் வீரஞ்செறிந்த போராட்டத்தின் விளைவாகவே மோடி அரசு தனது அரசாணையை திரும்பப்
பெற வேண்டியிருந்தது என்பதை பெருமுதலாளிகளின் ஊடகங்களால் ஜீரணிக்க முடியவில்லை என்பதால்
இதனையும் ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை. தனது
எஜமானரான இந்துத்துவா மோடிக்கு சாமானிய உழைக்கும் பெண்கள் கொடுத்த மிகப்பெரும் அடியை
வெளியுலகுக்குக் கொண்டு செல்ல கார்ப்பரேட் ஊடகங்கள் ஒன்றும் அத்தனை அறிவீனமானவையல்ல.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">5<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">இதே போன்றதொரு போராட்டம், பெண்களே முக்கியப்
பாத்திரம் ஏற்ற ஒரு போராட்டம் கடந்த 2015 செப்டம்பர் மாதம் கேரளாவில் நடந்தது. அதுவும்
கார்ப்பரேட் ஊடகங்களால் மூடிமறைக்கப்பட்டது. ஆனால் இப்போராட்டம் குறித்து எதிர்மறையான-
அதாவது தொழிற்சங்க இயக்கத்தைக் கொச்சைப்படுத்தும்
குறிப்பாக இடதுசாரி அரசியலை கேள்விக்குள்ளாக்கும் திரிக்கப்பட்ட செய்திகளை கேரளாவின்
ஊடகங்கள் திட்டமிட்டு கேரளமக்கள் மத்தியில் பரப்பியதில் ஓரளவு வெற்றி பெற்றன என்பதைச் சொல்லத்தான் வேண்டும்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">மூணாறில் உள்ள கண்ணன் தேவன் மலைத்தோட்டத்
தொழிலாளர்களின் மகத்தான போராட்டம் அது. அதா வது தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் போராட்
டம். தேவிகுளம் தாலுகாவில் உள்ள இத்தோட்டம் 1,36,600 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்தியப்
பெருமுதலாளியான டாடாவுக்குச் சொந்தமானது. 2005ம் ஆண்டு டாடா டீ (இப்போது டாடா க்ளோபல்
பிவரேஜஸ், உலகின் இரண்டாவது பெரிய தேயிலைக் கம்பனி) தனது மூணாறு தோட்டங்களை தொழிலாளர்களுக்கு
‘விற்பதாக' அறிவித்தது. அதாவது நிர்வாகத்தில தொழிலாளர்களும் 'பங்கு'பெறும் திட்டமாம். பெருமுதலாளியான டாடா அவ்வளவு நல்லவரா? புதிய கம்பெனியில்
13,000 தொழிலாளர்கள் 'குட்டி' பங்குதாரர்களாக ஆனார்கள். ஆனால் கம்பெனியில் 28.52 சதவீதப்பங்குகள்
இப்போதும் டாடாக்கள் வசமே உள்ளன. இதன்றி 87.95 சதவீதப் பங்குகள் இப்போதும் டாடாநல அறக்குழுவுக்கும்
கண்ணன் தேவன் மலைத் தோட்டக் கம்பெனிக்கும் சொந்தமாகவே உள்ளன. உற்பத்தி செய்யப்படும்
தேயிலையில் ஒரு பங்கை குறைந்த விலையில் வாங்கிக் கொள்ளும் உரிமையும் டாடாக்கள் கையில் வைத்துள்ளனர். இதன்றி உள்ளூர்
சந்தைகளில் தேயிலையின் விலையை நிர்ணயிக்கும் சக்தி படைத்தவர்களாக டாடாக்கள் இருக்கிறார்கள்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களில் 70
விழுக்காட் டினர் பெண்களே. கொழுந்து கிள்ளுவது என்பது வெறுமனே கிள்ளுவதல்ல. லாவகம்
வேண்டும். இதில் பெண்கள் பாரம்பரியமாகவே தேர்ந்தவர்கள் என்பதால் பறிக்கும் வேலை பெண்களுக்கும்,
களையெடுப்பது, மருந்து தெளிப்பது, உரம் வைப்பது போன்ற வேலைகள் ஆண்களுக்கும் ஆனவை. இத்தொழிலாளர்களில்
கேரளத்தைச் சேர்ந்தவர்களைக் காண்பது அரிது. அனைவரும் தமிழர்களே. அதிகம் ஷெட்யூல்டு
சாதி மக்களே. இவர்களது உறவுகள் இப்போதும் தமிழ் நாட்டில் தான் இருக்கின்றார்கள்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">தொழிலாளர் சட்டப்படி அவர்கள் ஒரு நாளைக்கு
20 கிலோ தேயிலை பறித்தால் போதுமானது. ஆனால் 12 மணிநேரத்திற்கும் அதிகமான வேலை வாங்கப்படும்.
60 கிலோ, 100 கிலோ வரையும் பறிக்க நிர்ப்பந்திக்கப்படுவார்கள். மூன்று மாதங்களுக்கு
75 கிலோ அரிசி (ஒரு குடும்பத்துக்கு) தரப்படும், இதற்காக ஊதியத்தில் மாதம் ரூ.750 பிடிக்கப்படும்.
இது கிட்டத்தட்ட சந்தை விலைக்கு ஈடாகும். ரேஷன் விலையைவிட மிக அதிக மாகும். பிரிட்டிஷ்
காலத்திய அடிமைகளை அடைக்கும் கொடும் கொட்டகைகளே
இவர்களுக்கு டாடா என்னும் பெருமுதலாளி கொடுத்துள்ள வீடுகளாம். ஆண், பெண், தாய்,
தகப்பன், குழந்தைகள் என அனைவரும் இதில் தான் படுத்துறங்க வேண்டும். சர்வதேசத் தொழிலாளர்
அமைப்பாலும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளாலும் தடை செய்யப்பட்டுள்ள புற்றுநோய் உருவாக்க
வல்ல அஸ்பெடாஸ் ஓடுகள்தாம் இங்கே வீட்டு ஓடுகளாம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">கங்காணி ஒருவரின் வாக்கு முறைப்படி ஓய்வு
என்பது இல்லாத ஒன்று, தேநீர் அருந்தும்போதுகூட ஒரு கையில் டம்ளரும் மறுகையில் இலை பறிப்பதும்
தொடரும். தமது வேலைநிமித்தம் தொடர்ச்சியான குனிவதால் பல பெண்கள் கருப்பை பாதிக்கப்
பட்டு கருப்பையையே இழந்திருக்கின்றார்கள்; தொடர்ச்சியான பூச்சிக்கொல்லிகளோடு ஆன புழக்கத்தால்
ஆண்கள் விஷத்தாக்குதல் பாதிப்புக்குள்ளாகின்றார்கள். மழைக் காலங்களில் இப் பூச்சிக்கொல்லி
நீரோடு கலந்து சமவெளியில் உள்ள ஊர்களின் குடிநீரை உபயோகிப்பதற்குத் தகுதியற்றதாக ஆக்குகின்றது.
ஏறத்தாழ 60% பங்குகள் தொழிலாளர்களுக்கு எனச் சொல்லப்பட்டாலும் உண்மையில் கம்பனியின்
கட்டுப்பாடு டாடாவிடமே உள்ளது. தொழிலாளர்களின் பிரதிநிதிகளாக இருவர் இயக்குநர் குழுக்
கூட்டத்தில் கலந்துகொள்வது சும்மா பெயருக்கே, உண்மையில் அங்கு நடப்பது எதுவும் அவர்களுக்குப்
புரியாது. கூட்டத்தில் தேநீர் அருந்திவிட்டு வருவார்கள்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">மே 2011இல் செய்து கொள்ளப்பட்ட ஊதிய
ஒப்பந்தம் டிசம்பர் 31, 2014 உடன் முடிவுற்றது. அதிலிருந்து தொழி லாளர்கள் தொடர்ச்சியாக
ஊதிய மாற்றம் கோரி வருகின் றார்கள். எட்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. தோட்டத்
தொழிலாளர் கமிட்டியில தொழிற்சங்கங்கள், தேயிலை முதலாளிகள், அரசுத் தரப்பு என முத்தரப்பும் உள்ளன. 10ரூபாய் ஊதிய உயர்வு அறிவித்தார்கள்.
2013-2014க்கு 19% போனஸ் வழங்கிய கண்ணன் தேவன் தோட்ட நிர்வாகம் 2014-15க்கு ஒருதலைப்பட்சமாக
10% போனஸ் அறிவித்தது. 2014-2015 காலத்தில்
நல்ல லாபம் ஈட்டியிருக்கின்ற முதலாளியின் அறிவிப்பு கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எனவே
கண்ணன்தேவன் தொழிலாளர்கள் ‘மெதுவாக வேலை செய்வது<span lang="EN-US">’ </span>என்ற போராட்டத்தை நடத்தத் தொடங்கினார்கள். இதனை எதிர்கொள்ள
‘லாக் அவுட்' செய்வோம் என டாடா நிர் வாகம் அச்சுறுத்தியது. லாக்அவுட் என்பது பிரச்சி
னையை திசைதிருப்பும் என்பதால் சி.ஐ.டி.யூ தலையிட்டு
மெதுவாகச் செய்யும் போராட்டத்தைக் கைவிடச் செய்தது. ஏற்கனவே 2015 செப்டம்பர்
2 அகில இந்திய வேலைநிறுத்தத்தில் தோட்டத்தொழிலாளர்கள்
பங்கேற்றிருந்தார்கள். மறுநாள் 3ம் தேதி தொழிலாளர்கள் தன்னெழுச்சியாக ஊதிய உயர்வு,
போனஸ் பிரச்னைக்காக வேலைநிறுத்தம் தொடங்கினார்கள். 2015 செப்டம்பர் 5 அன்று கண்ணன்தேவன்
அலுவலகம் முன்பு சுமார் 50 பெண்கள் திரண்டு
வேலைநிறுத்தத்தை அறிவித்தார்கள். சற்றுநேரத்தில் செய்தி பரவி மலையகம் எங்கிலுமுள்ள பெண் தொழிலாளிகள் வேலைநிறுத்தத்தில் இறங்கினார்கள்.
வேலைநிறுத்தம் தொடங்கிய மூன்று நாட்கள் கழித்தே கேரள ஊடகங்கள் இதுகுறித்த செய்திகளை
வெளியிட்டன. எப்படிப்பட்ட செய்திகள்? கேரளாவின் தொழிற்சங்க இயக்கங்களை தேயிலைத்தோட்டத்
தொழிலாளிகள் புறக்கணித்துவிட்டதாகவும் புதிய அத்தி யாயம் எழுதப்பட்டு விட்டதாகவும்
‘மலையாள மனோரமா<span lang="EN-US">’ </span>ஏடு கும்மாளம் போட்டது. கேரளா பின்தங்கிப்
போகக் காரணமே இதுபோன்ற வேலைநிறுத்தங்களும்
தர்ணாக்களுமே என்று கொட்டை எழுத்தில் பிரச்சாரம் செய்கின்ற மலையாள மனோராமா, கண்ணன்
தேவன் போராட்டத்தைத் தனது போராட்டம் போல் சித்தரித்தது. உண்மையில் 2015 செப்டம்பர்
2 அகில இந்திய வேலை நிறுத்தம் கேரளாவில் முழுஅளவு வெற்றிபெற்றதை மலையாள மனோரமா விரும்பவில்லை. ஏனெனில் கேரளாவில் அது முழுஅளவு
கடையடைப்பாக மாறி யது. தென்னை நார், தலைச்சுமை, முந்திரி, கைநெசவு, பீடி, கட்டுமானம்,
மோட்டார், லாட்டரி, அங்கன்வாடி - தொழிலாளர்களும், கேரள அரசுப் போக்குவரத்துத் துறை,
ஃபாக்ட் உரத்தொழிற்சாலை ஊழியர்கள், கொச்சி துறைமுகத் தொழிலாளர்கள் எனச் சமூகத்தின்
அனைத்துப்பிரிவினரும் அன்றிருந்த மாநில காங்கிரஸ் அரசுக்கும் மத்தியில் இருந்த பாஜக
அரசுக்கும் எதிரான போராட்டங்களை மாநிலம் தழுவிய அளவில் நடத்திய போதெல்லாம் அதுபற்றி
கண்டுகொள்ளாத அல்லது இதுபோன்ற போராட்டங்கள் மாநில வளர்ச்சியைப் பாதிப்பதாக மட்டுமே
விஷத்தைக் கொட்டிய மலையாள மனோரமா உள்ளிட்ட ஏடுகள் மூணாறு தோட்டத் தொழிலாளர் போராட்டத்தை பெரிய அளவில் விளம்பரப்படுத்துவதன்
நோக்கம் அது தன்னெழுச்சியாக வெடித்ததுதான். உண்மையில் இப்போராட்டம் திடீரென வெடிக்கவில்லை;
நீண்டகால காரணங்கள் உள்நெருப்பாக இல்லாமல்
எந்த ஒரு போராட்டமும் குறிப்பாக வேலை நிறுத்தம் போன்ற பெரும் போராட்டங்கள் திடீரென
ஒரு காரணமுமின்றி வெடிப்பதில்லை. தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகளை முதலாளிகள் + அரசாங்கம்
என்ற கூட்டணி திட்டமிட்டு இழுத்தடிப்பது தொழிலாளர்களைச் சோர்வடையச் செய்யும் தந்திரம்
மட்டுமின்றி தொழிற்சங்கத்தின்பால் தொழிலாளர்கள் கொண்டுள்ள நடவடிக்கைகளை சிதறடிக்கச்
செய்வதும் தொழிற்சங்க இயக்கத்தை மழுங்கடித்து தேய்மானம் அடையச் செய்வதுமே ஆகும். இத்தகைய
முதலாளித்துவ அரசியலுக்குத் துணைபோவதே கார்ப்பரேட் ஊடகங்களின் திட்டமிட்ட பணியாக குறிப்பாக
1990களுக்குப் பிறகு பார்க்கின்றோம். தொழிற்சங்க இயக்கத்தை என்பதைவிடவும் இடதுசாரி
அரசியலைச்சார்ந்த தொழிற்சங்க இயக்கத்தைக் கொச்சைப்படுத்தவதும் பின்னுக்குத் தள்ளுவதும் ‘மெய்ன்ஸ்ட்ரீம் மீடியா' என்று சொல்லப்படும் கார்ப்
பரேட் மீடியாக்களின் திட்டமிட்ட அஜெண்டாவாக மாறியுள்ளது.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">பெங்களூர் ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள்
விசயத்திலும் மூணாறு தோட்டத் தொழிலாளர்கள் விசயத்திலும் நடந்தது இதுவே. கேரள மார்க்சிஸ்ட்
கட்சியின் தலைவர்களில் ஒருவரான இளமரம் கரீம், “மூணாறு தோட்டத்தொழிலாளர் பிரச்னையில்
தொடக்கம் முதலே சி.ஐ.டி.யூ தலையிட்டுவந்தது, எர்ணாகுளத்திலும் திருவனந்த புரத்திலும்
நடந்த பேச்சுவார்த்தைகளுக்கு சி.ஐ.டி.யூ தலைவர்கள் களத்திற்கு நேரடியாகச் சென்ற போது
தொழிலாளர்கள் அவர்களை வரவேற்றார்கள். வி.எஸ்.அச்சுதானந்தன் போராட்டம் முடியும் வரை
அவர்களுடன்தான் இருந்தார்<span lang="EN-US">” </span>என்று சொல்கின்றார்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">6<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">முன்னரே சுட்டப்பட்ட ஜெய்ராம் </span><i><span style="font-size: 11.5pt;">“To the Brink and Back” </span></i><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">என்கிற தனது
நூலில் கூறுகின்றார்: “பு.பொ. கொள்கைகளின் நேர்மறை அம்சங்களெனில் நுகர் பொருட்கள் இப்போது
மக்களுக்கு எளிதில் கிடைக்கின் றன; ஒரு தொலைபேசிக்காக ஒரு கேஸ் இணைப்புக்காக ரயில்
டிக்கெட்டுக்காக நீண்டநேரம் காத்திருக்க வேண்டி
யதில்லை. ஆனால் எதிர்மறையாக மக்களிடையே சமத்துவமின்மை அதிகரித்துள்ளது, கல்வி- பொது
சுகா தாரம் ஆகியவை சீரழிந்துள்ளன. கல்விநிலையங்களின் எண்ணிக்கையும் மாணவர்களின் எண்ணிக்கையும்
அதிகரித்துள்ளது உண்மைதான், ஆனால் கல்வியின் தரம் தாழ்ந் துள்ளது. சுகாதாரத்துறையில்
தனியார் பங்களிப்பு அதிகரித்துள்ளது உண்மைதான், ஆனால் அரசின் பொது சுகாதார அமைப்பு
(அதாவது சாமான்யக் குடிமக்களுக்கான மருத்துவம் பெறும் உரிமை) சீரழிந்துள்ளது. உதாரணமாக
ஹைதராபாத்தில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகள் உள்ளன, உண்மைதான். ஆனால் அங்கிருந்து
ஓர் அரை மணிநேரம் பயணம் செய்தால் அரசுத்தொடக்க நிலை மருத்துவமனையில் டாக்டர்கள், நோயாளிகளின்
எண்ணிக்கையைவிடவும் பெருச்சாளிகள், எலிகள், பூனைகள், சிலந்திவலைகளைத்தான் நீங்கள் பார்க்க
முடியும்<span lang="EN-US">”</span>. காங்கிரஸ்கட்சிக்காரான ஜெய்ராம் ரமேஷ் இந்தளவுக்காவது
உண்மையைப் பேசினாரே என்று நாம் மகிழ்ச்சியடைய வேண்டியதுதான். <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">பெங்களூர் ஆயத்த ஆடைத் தொழிலாளர்களின்
வீதிப் போராட்டமாகட்டும், மூணாறு போராட்டமாகட்டும் பல்வேறு விசயங்கள் தெளிவாகின்றன.
புதிய பொருளாதாரக் கொள்கை, 1990களுக்கு முன்பிருந்த ‘அணி திரட்டப்பட்ட தொழிலாளர்கள்'
என்ற வகையினர் அரசுக்கு ஆபத்தான அணியினர் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்ட கொள்கை,
எனவே எந்தெந்த வகையில் எல்லாம் தொழிலாளர்களை ஒன்றுசேரவிடாமல் தடுக்க முடியுமோ, ஏற்கனவே
அணிதிரட்டப்பட்ட தொழிலாளர்களின் அணிகளைச் சிதைக்க முடியுமோ அதற்கான அத்தனை தந்திரங்களையும்
செய்கின்றது. கட்டுரையில் தொடக்கத்தில் சொன்னபடி, வீதிகளிலும் சிறைகளிலும் ரத்தம் சிந்திப்
போராடிப் பெற்ற, பல விவாதங்களுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் சட்ட வடிவாக்கப்பட்டுப்
பெறப்பட்ட பல உரிமைகளை, யாரோவொரு அரசு அதிகாரியின் ஒற்றைக்கையெழுத்திட்ட அரசு ஆணைகள்
மூலம் </span><i><span style="font-size: 11.5pt;">(Executive Orders) </span></i><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">அதிரடியாக நீக்குவதில் காங் கிரஸ் பாஜக இரண்டும்
ஒருமித்த கூட்டாளிகளாகவே நீடிக்கின்றன, இவ்விசயத்தில்
இவ்விரண்டு கட்சிகளிடம் எந்த வேறுபாட்டையும் பார்க்க முடியாது. இதற்கு மாநிலக்கட்சிகளான
தெலுங்குதேசம், திமுக, அதிமுக, பாமக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் துணைபோவதற்கு
தயங்குவதில்லை.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">ஏற்கனவே அணிதிரட்டப்பட்டுள்ள தொழிலாளர்கள்
இயங்கக்கூடிய அரசுத்துறை, அரசுத்துறை சார்ந்த பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் வேலைப்பளுவைக்
குறைப்பது, அதாவது இவ்வேலைகளை தனியார் தொழிற்சாலைகளுக்கு மாற்றுவது அல்லது இத்தொழில்களின்
இறுதி உற்பத்திப்பொருட்களை வெளிநாட்டிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்துகொள்வது, இதன்
விளைவாக செயற்கையான உற்பத்திக்குறைவு மற்றும் செயற்கையான வேலைப்பளுவின்மையைக் காரணம்காட்டித்
தொடர்ந்து ஆட்குறைப்புச் செய்வது, இறுதியில் அத்தொழிற்சாலைகளை மூடிவிடுவது. இதற்கு
மிகச்சிறந்த உதாரணங்கள் பாரத் அலுமினியம் கம்பெனி, ஹிந்துஸ்தான் டெலிபிரிண்டர்ஸ், பெங்க
ளூரில் இருந்த இந்தியன் டெலிபோன் இன்டஸ்ட்ரீஸ், ஹெச்.எம்.டி.யின் பல யூனிட்கள், தமிழக
அரசின் சிறந்த கனரகத்தொழில் பொதுத்துறை நிறுவனமான சதர்ன் ஸ்ட்ரச்சுரல் லிமிடெட் ஆகியவை.
<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக்
குறைத்து காண்ட்ராக்ட் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது ஒருபுறம், கணிணிமயம்,
தானியங்கி மயம் என்ற பெயரில் பல பத்துப்பேர்கள் செய்த வேலையை ஒரு சில தொழிலாளிகளை மட்டுமே
வைத்துக்கொண்டு தொழிலை நடத்துவது மறுபுறம், இத்தகைய தொழிற்கலாச்சாரப் பின்னணியில்தான்
உலக கோடீசுவரர்கள் வரிசையில் கடந்த இரண்டு பத்தாண்டுகளில் இந்தியாவில் பல தொழிலதிபர்களும்
இடம் பெற்றள்ளார்கள் என்பதைத் தொழிற்சங்க இயக்கம் கவனிக்காமல் இல்லைதான்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">சமீபத்திய உதாரணமாக சேலத்தில் உள்ள மத்திய
அரசின் உருக்காலைத் தொழிற்சாலையை தனியாருக்கு விற்று விட மோடி அரசு தீவிரமாக முயன்று
வருகின்றது. 4,000 ஏக்கர் நிலப்பரப்பில் 181 கோடி ரூபாய் மூலதனத்தில் 1981ஆம் ஆண்டு
தொடங்கப்பட்ட உருக்காலை தொழி லாளர்களின் உழைப்பால் இன்றைக்கு 3000 கோடி ரூபாய் மதிப்புக்கு
உயர்ந்துள்ளது. ஆலை இருக்கும் இடமான 2,500 ஏக்கர், வெற்றிடமான 1,500 ஏக்கர், ஏற்காட்டில்
10 ஏக்கர், குடியிருப்பு, பொது மருத்துவமனை, பொது நூலகம், பொதுக்கல்விச்சாலை ஆகியனவும்
காலியிடத் தில் உள்ள தேக்கு, சந்தன மரங்கள் ஆகிய
சொத்துக்களை யும் சேர்த்துக் கணக்கிட்டால் இன்றைய மதிப்பில் 15,000 கோடிக்கும்
அதிகம் என ஆலையின் தொழிற்சங்கத்தினர் கூறுகின்றார்கள். ஆலை நட்டத்தில் இயங்குவதாக பொய்க்கணக்கு
காட்டுவதன் மூலம் அடிமாட்டு விலைக்கு மோடிக்கு பிரியமான ஒரு முதலாளிக்கு இந்த ஆலையை
அதன் சொத்துக்கள் எல்லாவற்றுடனும் விற்கமுடியும், அத்தோடு அங்கே இயங்கிவரும் தொழிற்
சங்க இயக்கத்தையும் ஒழித்துவிட முடியும்.
<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">இந்த வரிசையில் கேந்திரமான பல பாதுகாப்புத்
துறைத் தொழிற்சாலைகளும் காத்திருக்கின்றன. பாதுகாப்புத் துறையில் அம்பானியின் ரிலையன்ஸ்,
டாடா, அதானி, லார்சன் அண்ட் டப்ரோ போன்ற பெருமுதலாளிகளையும் சர்வதேச பெருமுதலாளிகளையும்
அனுமதிப்பதென மோடி அரசு கொள்கை முடிவு எடுத்துவிட்டது. இதன் மூலம் அரசின் தொழிற்சாலைகளை மூடிவிடுவது, அங்கே
ஏற்கனவே இயங்கிவரும் தொழிற்சங்க இயக் கத்தை அழிப்பது என இரண்டு நோக்கங்களை அரசால் நிறைவேற்ற
முடியும். ஒரு சில லட்சங்கள் கொடுத்து செட்டில்மெண்ட்
செய்யப்பட்ட தொழிலாளர்கள் தம் தொழிலையும் மாதாந்திர வருமானத்தையும் இழப்ப தோடு இத்தொழிற்சாலைகளில்
இயங்கிவந்த உயிரோட்டமான தொழிற்சங்க இயக்கமும் சாகடிக்கப்படுகின்றது என்பதுதான் மையமான
விசயம். ஆட்குறைப்பு, ஆலை மூடல் என்பது வெறும் ஊதியம், வைப்பு நிதி, ஓய்வூதி யம் போன்ற
பணப்பலன் சார்ந்த விசயம் மட்டுமே அல்ல. அணிதிரட்டப்பட்ட தொழிலாளி வர்க்கம் எந்த ஒரு
நாட்டின் பாட்டாளிவர்க்க அரசியல் இயக்கத்துக்கும் அடிப்படையான ஒன்று என்பதை இந்திய-சர்வதேச
முதலாளித்துவம் நன்றாகவே புரிந்துவைத்துள்ளது. அத்தகைய அணிதிரட்டப்பட்ட தொழிற்சங்க
இயக்கத்தையும் தொழிலாளி வர்க்கத்தையும் அழிப்பதில் சர்வதேச-இந்திய முதலா ளித்துவம்
கடந்த இருபதாண்டுகளில் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றுள்ளதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">தாராளமய, தனியார்மய அடிப்படையிலான புதிய
பொருளாதாரக் கொள்கை யில் அரசுசார்ந்த தொழில்களில் மேற்படி தேய்மானம் எனில் தவிர்க்க
இயலாத வகையில் அதன் இயற்கையான தொடர்ச்சியாக இணையாக முறைசாராத அணிதிரட்டப்படாத தொழிலாளர்களின்
எண்ணிக்கை பல கோடிகளாக இந்த 25 ஆண்டுகளில் வளர்ந்து விட்டது கண்கூடு. உதாரணமாக முன்னர்
குறிப்பிட்ட சேலம் உருக்காலையில் நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 1,200; ஒப்பந்த
தொழிலாளர்கள் அதாவது நிரந்தரமற்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை 850. பொதுத்துறையான நெய்வேலி
சுரங்கத்தில் ஒப்பந்தத் தொழிலாளரின் எண்ணிக்கை ஏறத்தாழ 10,000. மத்திய அரசின் தொலை தொடர்புத்துறையான
BSNLஇல் ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை பல்லாயிரம். முறையாக நிறுவப்பட்ட அரசு-அரசுசார்
நிறுவனங்கள் மூடப்பட்டபின், தனியார் நிறுவனங்கள் எந்த அளவுக்கு இருக்கின்ற தொழிலாளர்
சட்டங்களை, உரிமைகளை மதிக்கும் என்பதற்கு பெங்களூரும் மூணாறும் நல்ல உதாரணங்கள். தனியார்
தொழிற்சாலைகளில் ஏன் தொழிற்சங்க இயக்கம் கடந்த 25 வருடங்களில் தோல்வியடைந்துள்ளது என்பதற்கான
காரணங்கள் இந்த இரண்டு உதாரணங்களிலும் மலிந்து கிடக்கின்றன. புதிய வகை ‘காண்ட்ராக்ட்
தொழில்முறை'யை அரசு தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகின்றது. அரசு நிறுவனங்களில் நிரந்தர
ஊழியர்கள் எண்ணிக்கைக்கு இணையாக அல்லது அதிகமாக காண்ட்ராக்ட் ஊழியர் எண்ணிக்கை இருக்கிறது.
இது எதிர்காலத்தில் இன்னும் அதிகமாகும். ஒருவகையில் நிரந்தரத் தொழிலாளர்களை அச்சுறுத்தும்
நடவடிக்கையே இது. இணையாக ஒப்பந்தத் தொழிலாளர்களையும் தொடர்ந்து ஒரு அச்சுறுத்தலின்
கீழ் வைத்திருக்கும் தந்திரமும் அடங்கியுள்ளது. ஆக நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக்
குறைப்பதன் மூலம் ஏற்கனவே இத்தொழில்களில் இயங்கிவரும் அணிதிரட்டப்பட்ட தொழிற்சங்க இயக்கத்தைத்
தேய்மானத்துக்கு இட்டுச்செல்வது. இணையாக நிரந்தரமற்ற காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் எவ்வகையிலும்
ஒரு தொழிற்சங்க இயக்கத்தின் கீழ் திரண்டுவிடாமல் இருப்பதை உத்தரவாதம் செய்வது எனப்
புதிய பொருளாதாரக் கொள்கை இரண்டு மாங்காய்களை அடிக்கின்றது.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">இத்தனை அழுத்தங்கள் அடக்குமுறைகளையும்
மீறிப் போராட்டங்கள் வெடிக்கும்போது ஹரியானாவில் மாருதி சுசுகி தொழிற்சாலையில் நிகழ்ந்ததைப்போல்
அரசு, தனது அடக்குமுறைக்கருவியான போலிசை ஏவி ரத்தக்களறியை உருவாக்கி அடக்குகின்றது.
மாருதி சுசுகி யின் நூற்றுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில்
சிறைகளில் இப்போதும் அடைக்கப்பட்டுள்ளார்கள். சாலையில் டிராபிக் சிக்கலில் சிக்கிக்கொண்டதால்
எரிச்சலுற்ற நீதிபதிகள் தாமாகவே முன்வந்து ‘பொதுநலன்<span lang="EN-US">’ </span>கருதி
வழக்குகளைத் தொடர்ந்துகொள்வதைப் பார்க்கின்ற இந்திய சமூகத் தால், மாருதி சுசுகி தொழிலாளர்கள்பால்
நீதிமன்றங்கள் எத்தகைய அணுகுமுறையை மேற்கொள்கின்றன என்பதையும் தெளிவாகவே பார்க்க முடிகின்றது.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">ஹரியானாவில் ஹீரோ ஹோண்டா தொழிலாளர்கள்
மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட படுபயங்கரமான போலீஸ் அடக்குமுறையும், சில வருடங்களுக்கு
முன் ஆந்திரா வில் தெருவில் இறங்கிப் போராடிய விவசாயிகள் மீது ஆள் உயர லத்திகளைக் கொண்டு
தாக்கி மண்டைகளை உடைத்த தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு வின் போலீஸ் அடக்குமுறையும்
திட்டமிட்டவை, போராட எத்தனிக்கின்ற தொழிலாளர்களை எச்சரிக்கை செய்து அச்சுறுத்துபவை.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">இதற்குச் சமமாக தொழிலாளர்களின் போராட்ட
உணர்வை, தொழிற்சங்கக் கோபாவேச உணர்வை மட்டுப்படுத்தவும் முழுங்கடிக்கவும் அரசு நடத்தை
விதிகளைக் காரணம் காட்டி மிரட்டுவது, தர்மநியாயங்களுக்கு கட்டுப்பட்டு பணிபுரியும்
ஊழியர்களை பழிவாங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளோடு,
பல்வேறு திசை திருப்பல் வேலைகளையும் அரசு நிர்வாகம் செய்வதற்கு தயங்குவதில்லை.
அரசு ஊழியர்களுக்கு அரசு நிர்வாகமே யோகா நிபுணர்கள், மனவள நிபுணர்கள், ஆற்றல் வல்லுநர்கள் போன்ற பல பெயர்களில் ஆர்.எஸ்.எஸ் சாமியார்களைக் கொண்டு பயிற்சி நடத்துகின்றது.
‘சைவ' உணவின் அருமைபெருமைகள் பிரச்சாரம் செய்யப்படுகின்றன. ‘மனஅமைதி<span lang="EN-US">’ </span>அதாவது போராட்ட உணர்வுகளோ அநீதி கண்டு ஆவேசப்படும் உணர்வுகளோ அற்ற
‘கொந்தளிப்பற்ற அமைதியான சாத்வீக மனநிலை<span lang="EN-US">’ </span>கொண்ட ப்ராய்லர்
கோழிகளாக அரசு ஊழியர்களை திட்டமிட்டு மாற்றும் வேலை சமீபகாலங்களில் தீவிரமாக நடக்கின்றது.
அரசு ஊழியர்களின் பொழுதுபோக்கு மன்றங்கள் மனமகிழ் மன்றங்கள் ஆகியன இத்திட்டமிட்ட பிரச்சாரத்துக்குத் துணை போகின்றன. விஞ்ஞானம், மருத்துவம்
என்ற பெயரில் தெருவோர காயகல்ப லேகிய ரேஞ்சுக்கு யோகா விற்பனை முடுக்கிவிடப்படுகின்றது.
<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span lang="EN-US" style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">‘</span><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">மதச்சாற்பற்ற'
இந்திய நாட்டின் ராணுவம், சங் பரிவார சாமியாரான ரவிசங்கரின் யமுனை நதிப்பிரச்சாரக்
கூட்டத்துக்கு எடுபிடி வேலை செய்ய ஏவப்பட்டது.
வாழும் கலை என்ற பெயரில் யமுனை நதியின் பல்லுயிர்ப் பெருக்கமும் சுற்றுச்சூழலும் சாகடிக்கப்
பட்டது. பாரத் மாதாவின் மிலிட்டரி அதிகாரிகளும் மிலிட்டரி லாரிகளும் சீருடைகளை அணிந்து
சங் பரிவார சாமியாருக்கு விசுவாசமான சங்பரிவார் ஊழியர்களாக மாறி களத்தில் இறங்கி வேலை
செய்ததை ஏதோ தேசபக்தியின் முக்கிய அம்சமாக மீடியாக்கள் செய்தியாக்கின எனில், ஒருங்கிணைக்கப்பட்ட-
அணிதிரட்டப்பட்ட மத்திய தொழிற்சங்கங்களும், அரசியல் கட்சிகளும் கூட இந்த இந்துத்துவா
அரசியல் பிரச்சாரத்தை எதிர்த்து பெரிய அளவில் எதிர்ப்புக்குரல் ஏதும் எழுப்பவில்லை
என்பதை எப்படி பொருள்கொள்வது? அரசு அலுவலகங்கள் ஆர்.எஸ்.எஸ்சின் மடமாக மாற்றப்படுவதை
தொழிற்சங்கங்கள் இப்போதும் உணர்ந்ததாக தெரியவில்லை. இது அணா பைசா விவகாரம் அல்ல, தத்துவம் சார்ந்த பிரச்னை
என்பதைத் தொழிற்சங்கங்கள் உணர்ந்த தாகத் தெரியவில்லை. தொழிற்சங்க இயக்கத்தின் தேய்மானத்தின்
ஒருபகுதி காரணமாக அரசின் இந்த போராட்ட மழுங்கடிப்புத் திட்டம் இருப்பதை தொழிற்சங்கங்கள்
உணரவேண்டிய கட்டத்தில்தான் இப்போதும் நிலைமை உள்ளது. இந்துத்துவா அரசியல்+ கார்ப்பரேட்
முதலாளிகள்+அரசு எந்திரம் என்ற கூட்டணி இங்கே வெற்றி பெற்றுள்ளது.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">தொழிற்சங்க இயக்கமும் அணி திரட்டப்பட்ட
தொழிலாளர்கள் என்ற கோடிக்கால் பூதமும் ஒன்றிணையும் போது அது அடிப்படையான சமூக பொருளாதாரக்
கேள்விகளை எழுப்புகின்ற அடிப்படை சமூக மாற்றத்திற்கு இட்டுச்செல்கின்ற பவுதீகச் சக்தியாக
மாறும் என்பதை முதலாளித்துவம் நன்கு உணர்ந்துள்ளது.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">பெங்களூரும் மூணாறும் ஒருவிசயத்தை தெளிவாக
உணர்த்துகின்றன. எத்தகைய அழுத்தமான சிக்கலான புறச்சூழலிலும் தொழிலாளர்களின் நியாயமான
அறச்சீற்றமும் கொடுமை கண்டு பொங்கும் நியாயமான கோபாவேச உணர்வும் மங்கிப் போவதில்லை.
<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<br />
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">முதலாளித்துவம் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்கான
எல்லாவிதமான தந்திரங்களையும் எல்லாக்காலத்திலும் செய்துகொண்டேதான் இருக்கின்றது. எல்லாவிதமான
புதிய புதிய வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டுக் கொண்டேதான் இருக்கின்றது. ஆனால் தொழிலாளர்களின்
அறச்சீற்றத்தையும் நியாயத்துக்கான கோபாவேச உணர்வையும் எவ்வாறு ஒரு பவுதீக சக்தியாக
மாற்றுவது என்பதற்கான வழிமுறைகளை, குறிப்பாக 1990 களுக்குப் பிறகான சூழலில், கண்டறிய
வேண்டியது இந்தியத் தொழிற்சங்க இயக்கத்தின் இடதுசாரி இயக்கங்களின் கடமையாக இருக்கின்றது.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="color: red; font-family: Arial Unicode MS, sans-serif;">- புதுவிசை 47வது இதழ் ( டிசம்பர் 2016 ) </span></div>
</div>
புதுவிசைhttp://www.blogger.com/profile/09276344793619872435noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8111967010823738396.post-72173144315980673212016-11-30T17:40:00.000-08:002016-11-30T17:40:01.893-08:00கியூப மக்கள் வென்று வருவார்கள்- ஃபிடல் காஸ்ட்ரோ ருஸ்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjS6UaVneGuIJ_nOylrfSSZyV6S5o9BVighUDpAe9dM_-Vj3ZdXggQf8nWuvrj5_4QWzrP2X4AzSKM8IHANXUn6WMiDdFWwR24ivEA35Sx2fU1qlgy3waTt3MH4HlfXr2X4z9wo4JaNAR3u/s1600/castro_turkey.jpg_1718483346+%25281%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="226" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjS6UaVneGuIJ_nOylrfSSZyV6S5o9BVighUDpAe9dM_-Vj3ZdXggQf8nWuvrj5_4QWzrP2X4AzSKM8IHANXUn6WMiDdFWwR24ivEA35Sx2fU1qlgy3waTt3MH4HlfXr2X4z9wo4JaNAR3u/s400/castro_turkey.jpg_1718483346+%25281%2529.jpg" width="400" /></a></div>
<br />
<blockquote class="tr_bq" style="text-align: justify;">
<div style="text-align: center;">
<span style="color: red;"><span style="font-family: 'Arial Unicode MS', sans-serif;">கியூபக் கம்யூனிஸ்ட் கட்சியின் 7ஆவது
பேராயத்தின் முடிவில்</span><span style="font-family: 'Arial Unicode MS', sans-serif;"> </span><span style="font-family: 'Arial Unicode MS', sans-serif;">19.04.2016 அன்று கியூபப்
புரட்சியின் தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோ வழங்கிய கருத்துகள். இதுதான் அவர் ஆற்றிய கடைசி
உரை. </span></span><span style="color: red; font-family: 'Arial Unicode MS', sans-serif;">தோழர். காஸ்ட்ரோ அவர்களுக்கான அஞ்சலியாக </span></div>
<div style="text-align: center;">
<span style="color: red;"><span style="font-family: 'Arial Unicode MS', sans-serif;">இவ்வுரை வரவிருக்கும் புதுவிசை 47வது இதழில் இடம்பெற்றுபெற்றுள்ளது.</span></span></div>
<div style="text-align: center;">
<span style="font-family: 'Arial Unicode MS', sans-serif;"><span style="color: red;">தமிழாக்கம்: எஸ்.வி.ராஜதுரை</span></span></div>
<span style="font-family: 'Arial Unicode MS', sans-serif;"><div style="text-align: center;">
<span style="color: red;"><span style="font-family: 'Arial Unicode MS', sans-serif;">நன்றி: </span>MRZine<span style="font-family: 'Arial Unicode MS', sans-serif;">, 26.04.2106</span></span><span style="font-size: 12pt; text-align: justify;"> </span></div>
</span></blockquote>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;"> தோழர்களே,
நெருக்கடிக் காலங்களில் எந்த மக்களையும் வழிநடத்திச்
செல்ல, அதிமானுட முயற்சி தேவைப்படும். அவர்களின்றி மாற்றங்கள் ஏற்படுவது சாத்தியமில்லை. புரட்சிகர
மக்களாலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட, அவர்களால் அதிகாரம் வழங்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட
பிரதிநிதிகளை ஒன்று சேர்த்துள்ள இதுபோன்ற கூட்டம்,
அந்தப் பிரதிநிதிகளின் வாழ்க்கையில் அவர்களுக்கு கிடைத்த மாபெரும் கௌரவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
அந்த கௌரவத்துடன், புரட்சியாளராக இருக்கும் சிறப்புத் தகுதியும் சேர்ந்துகொள்கிறது.
இந்த சிறப்புத்தகுதி நமது உணர்விலிருந்து விளைந்ததாகும்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">நான் சோசலிஸ்டாக அல்லது மேலும் தெளிவாகச்
சொல்வதென்றால், கம்யூனிஸ்டாக ஆனது ஏன்? சோசலிஸ்ட் அல்லது கம்யூனிஸ்ட் என்னும் கருத்துருவாக்கத்தை
வெளிப்படுத்துகிற இந்தச் சொல், உழைப்பு, திறமை, மானுட ஆற்றல் ஆகியவற்றால் வழங்கப்படும்
பொருண்மைச் செல்வம் அனைத்தையும் ஏழைகளும் பொருளில்லாதவர்களும் இழந்த நாளிலிருந்தே அவர்களைச் சுரண்டிவரும் சிறப்புரிமை பெற்றவர்களால் மிகவும் திரிக்கப்பட்டுள்ளது, அவதூறு
செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டக நிலையில், காலங்காலமாக, எல்லையே இல்லாமல் மனிதன் எத்தனை காலம் வாழ்ந்திருப்பான்?
இதற்கான விளக்கம் உங்களுக்குத் தேவையற்றதாக இருக்கலாம். ஆனால், நமது பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு சிலருக்கு விளக்கம் தேவைப்படக்கூடும். <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">நான் அறிவிலியோ, தீவிரவாதியோ, கண்மூடித்தனமாகச்
செயல்படுவனோ அல்லன், பொருளாதாரத்தைப் பயின்றதன் காரணமாக தானாகவே எனது கருத்துநிலையை
உருவாக்கிக்கொண்டவனும் அல்லன் என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்பதற்காகவே எளிய
சொற்களில் பேசுகிறேன்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">சட்டமும் அரசியல் அறிவியலும் கற்கும்
மாணவனாக நான் இருந்தபோது - அப்போது சட்டப் படிப்புக்குத்தான் மேலதிக முக்கியத்துவம்
இருந்தது- அவற்றை கற்பிப்பவர் யாரும் எனக்கு இருக்கவில்லை. அப்போது இருபது வயதே ஆகியிருந்த
எனக்கு விளையாட்டுகளிலும் மலை ஏறுவதிலும் விருப்பம் இருந்தது உண்மைதான். மார்க்ஸியம்-லெனினியம்
ஆகியவற்றை கற்பதற்கு ஆசிரியர் யாரும் இல்லாத அந்த சமயத்தில், நான் வெறும் கோட்பாட்டாளனாகவே
இருந்தேன் என்றாலும் சோவியத் யூனியன் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தேன். புரட்சி
நடந்து எழுபதாண்டுகளுக்குப் பிறகு லெனினின் பணி உடைக்கப்பட்டது. எத்தகைய வரலாற்றுப்
படிப்பினை இது! காலனியத்துக்கும் அதன் பிரிக்கமுடியாத துணைவனான ஏகாதிபத்தியத்துக்கும்
எதிரான போராட்டத்தின் மகத்தான கட்டத்தைக் குறிக்கும் இன்னொரு மகோன்னதமான சோசலிசப்
புரட்சிக்கான வேறோர் எடுத்துக்காட்டை மானுடகுலம் பெறும் வகையில் ரஷியப் புரட்சியைப்
போன்றதோர் நிகழ்வு ஏற்படுவதற்கு இன்னும் எழுபதாண்டுகள் தேவைப்படாது என்று தயக்கமில்லாமல் சொல்ல முடியும்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">ஆயினும், இன்று புவிக்கோளத்திற்கு மேலே
தொங்கிக் கொண்டிருக்கும் மிகப்பெரும் ஆபத்து, நவீன ஆயுதங்களின் அழிவாற்றலிருந்து வரக்கூடும்.
அந்த அழிவாற்ற லால் புவிக்கோளத்தின் அமைதியைச் சீர்குலைத்து, புவிப்பரப்பின் மேல் மானுட
வாழ்வு இருப்பதைச் சாத்தியமற்றதாக்கச் செய்ய முடியும்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">டைனோசார்கள் மறைந்ததுபோல, மனித இனமும்
மறைந்துவிடும். ஒருவேளை, அறிவாற்றலுள்ள புதிய
உயிர் ராசிகள் தோன்றுவதற்கான காலமும் வரலாம். அல்லது அறிவியலாளர்கள் பலர் புரிந்துகொண்டது
போல, சூரிய மண்டலத்திலுள்ள அனைத்து கோள்களும் அவற்றின் துணைக்கோள்களும் உருகிப்போகுமளவுக்கு
சூரிய வெப்பம் அதிகரிக்கலாம். <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">அந்த அறிவியலாளர்கள் பலரின் கோட்பாடுகள்
- நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு அவை தெரியாமலிருக்கலாம் - உண்மையாக இருக்குமேயானால்
- செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள மனிதன் இன்னும் கூடுதலாகக் கற்று மெய்நிலைமைக்கு தன்னைத்
தகவமைத்துக் கொள்ளவேண்டும். மானுடகுலம் இன்னும் நீண்டகாலம் உயிர் பிழைத்திருக்குமானால்,
எதிர்கால சந்ததியினர் நாம் அறிந்துள்ளதைவிட
அதிகம் அறிந்திருப்பர். ஆனால் முதலில் அவர்கள் மிகப்பெரும் பிரச்சினையைத் தீர்க்க வேண்டியிருக்கும்.
தங்களுக்குத் தேவைப்படும் குடிநீர், இயற்கை மூலவளங்கள் ஆகியவற்றின் அளவுகளுக்குள்ள
வரம்புகளுடன் தவிர்க்கமுடியாதபடி முரண்படுகின்ற யதார்த்த நிலைமைகளை எதிர்கொண்டுள்ள
கோடிக்கணக்கான மக்களுக்கு உணவளிப்பது எப்படி என்பதுதான் இந்தப் பிரச்சினை.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">உங்களில் சிலரோ, பலரோ இந்தப் பேச்சில் அரசியல் எங்கே இருக்கிறது
என்று நினைக்கக்கூடும். வருத்தத்தோடுதான் இதைச் சொல்கிறேன் என்பதை நம்புங்கள்.
ஆனால் இங்கும், இந்த மிதமான சொற்களிலும் அரசியல் இருக்கத்தான் செய்கிறது. மானுட குலத்தவராகிய நம்மில் பலர், இந்த யதார்த்த நிலைமைகளின்
மீது ஆழ்ந்த அக்கறை செலுத்தி, விலக்கப்பட்ட கனிகளை உண்ட ஆதாம், ஏவாள் காலத்தில் நடந்ததையே
தொடர்ந்து செய்யாமல் இருப்பார்கள் என்று நம்புவோமாக. தங்களிடம் தொழில்நுட்பமோ, மழையோ,
நீர்த் தேக்கங்களோ ஏதுமில்லாத, மணல்களால் மூடப்பட்டுள் ளவற்றைத் தவிர வேறு எந்த நீரூற்றும்
இனி இல்லாம லுள்ள ஆப்பிரிக்க மக்களுக்கு நாம் எப்படி உணவளிக்கப் போகின்றோம்? பருவநிலைப்
பாதுகாப்பு பற்றிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ள அரசாங்கங்கள் அனைத்தும் என்ன சொல்லப்போகின்றன
என்பதை நாம் பார்க்கத்தான் போகிறோம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">நாம் இந்தப் பிரச்சினைகளில் இடைவிடாது
கவனம் குவிக்க வேண்டும். இந்தப் பிரச்சினைகளின் அடிப்படை அம்சங்களுக்கு அப்பால் அவற்றை விரிவாக
எடுத்துரைக்க நான் விரும்பவில்லை.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">எனக்கு விரைவில் 90 வயதாகிவிடும். இப்படிப்பட்ட
எண்ணம் எனக்கு ஒருபோதும் தோன்றியதில்லை. அது ஒருபோதும் எந்த முயற்சியின் விளைவாக இருந்ததில்லை. அது வெறும் தற்செயல் நிகழ்வு. நானும் விரைவில் மற்ற எவரையும் போல் ஆகிவிடுவேன்.
<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">நமது முறை வரும், நம் எல்லோருக்கும்.
ஆனால், இந்தப் புவிக்கோளத்தில் கியூபக் கம்யூனிஸ்டுகளின் கருத்து எஞ்சியிருக்கும்
- இந்தக் கோளத்தில் நாம் உற்சாகத்துடனும் கண்ணியத்துடனும் வேலை செய்தால் மானுட குலத்துக்குத்
தேவையான பொருள்வகை, பண்பாட்டுச் செல்வங்களை
நம்மால் உற்பத்தி செய்யமுடியும், அதனைப் பெறுவதற்காக
நாம் உறுதிதளராமால் போராட வேண்டும் என்பதற்குச் சான்றாக. கியூப மக்கள் வென்று வருவார்கள் என்ற செய்தியை இலத்தின்
அமெரிக்காவிலும் உலகிலும் உள்ள சகோதரர்களுக்கு நாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">இந்த அறையில் நான் பேசுவது இது கடைசி
தடவைகளில் ஒன்றாக இருக்கக்கூடும். தேர்ந்தெடுக்கப்படுவதற்காக இந்தப் பேராயத்தில்
எந்த வேட்பாளர்களின் பெயர்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளனவோ அவற்றை ஆதரித்து வாக்களித்துள்ளேன்.
எனக்கு அழைப்பு விடுத்து எனது பேச்சைக் கேட்கும் கௌரவத்தை அளித்த உங்களுக்கு நன்றி.
இந்த மகத்தான முயற்சிக்காக தோழர்களாகிய உங்கள் அனைவரையும், முதலாவதாக தோழர் ரவுல் காஸ்ட்ரோவையும் பாராட்டுகிறேன்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">நாம் தொடர்ந்து அணிவகுத்துச் செல்வோம், நாம் எதைச் செம்மைப்படுத்த வேண்டுமோ அதைச் செம்மைப்படுத்துவோம்,
மிக முழுமையான விசுவாசத்துடனும் ஒன்றுபட்ட
சக்தியுடனும் - மார்ட்டி, மேஸியோ, கோமெஸ்<span style="color: red;">*</span> ஆகியோரைப் போல, தடுத்து நிறுத்தப்பட முடியாத
அணிவகுப்பில்.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: center;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">***</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="color: red; font-family: 'Arial Unicode MS', sans-serif; font-size: 12pt;">*</span><span style="font-family: 'Arial Unicode MS', sans-serif; font-size: 12pt;">19ஆம் 20ஆம் நூற்றாண்டுகளில் கியூபாவின்
விடுதலைக்காகப் போராடியவர்கள் :ஹோஸெ மார்ட்டி (1853-1895); ஹோஸெ மாஸியோ
(1845-1896); யுவான் கோமெஸ் (1854- 1933)</span></div>
</div>
புதுவிசைhttp://www.blogger.com/profile/09276344793619872435noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8111967010823738396.post-9446485309089765372016-11-30T08:40:00.000-08:002016-11-30T17:05:58.923-08:00புதுவிசை 47வது இதழின் காலங்கம் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_uTL-5WOU_nLIqHG80zmUCbi4s4oQgo05ctlLrdWLGyz4GVNmhVPWnsreyBPY-5oltsm09URxMZXbrEMbQTJts0fCTRu4MNeHBI3Dumb9Ofpr-GrMR0Rv9KROHCGZP_Qla_UTJhhykT3n/s1600/2visai-47-wrappe.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_uTL-5WOU_nLIqHG80zmUCbi4s4oQgo05ctlLrdWLGyz4GVNmhVPWnsreyBPY-5oltsm09URxMZXbrEMbQTJts0fCTRu4MNeHBI3Dumb9Ofpr-GrMR0Rv9KROHCGZP_Qla_UTJhhykT3n/s320/2visai-47-wrappe.jpg" width="235" /></a></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><span style="font-size: large;">ம</span></span><span style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;">னிதகுலம் இதுவரை கண்டிராத கொடுங்கோன்மை
ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் மோடி. சமூகத்தை சங் பரிவாரம் மற்றும் கார்ப்பரேட்டுகள்
என்கிற இரட்டை எஜமானர்களின் நிகழ்ச்சிநிரலுக்குள் அடைப்பதற்காக அவர் அரசதிகாரம் முழுவதையும்
பயன்படுத்தி வருகிறார். நாட்டின் மாண்புடை அமைப்புகளை சீர்குலைத்து சிறுமைப்படுத்தும்
அவரது தான்தோன்றித் தனமான செயல்பாடுகள் கிண்டலுக்கும் கேலிக்குமுரியதாக வெளித்தெரிந்தாலும்,
அவை கோடானுகோடி மக்களின் தனிப்பட்ட வாழ்வில் நேரடியாக தலையிட்டு தீராத்துயரில் ஆழ்த்தி
வருகின்றன. வரலாற்றுப்போக்கில் உருவாகிவந்த தமது சொந்த வாழ்முறையைக் கைக்கொண்டிருக்கும்
குடிமக்களை அதன் பொருட்டே குற்றவாளிகளாக அறிவித்து தண்டிப்பதற்கு இயன்ற வழிகளிலெல்லாம்
அவரது கெடுமுயற்சி தொடர்கிறது. பண மதிப்பிழப்பு அடாவடி கூட உணவு, உடை, வழிபாடு, மதம்,
கல்வி, கருத்து வெளிப்பாடு என அனைத்துவகையான உரிமைகளையும் பறிப்பதற்கான அவரது முயற்சிகளின்
தொடர்ச்சிதான்.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">பண மதிப்பிழப்பு அடாவடிக்குச் சொல்லப்பட்ட
காரணங்கள் யாவும் பொய்யென அம்பலமாகிவிட்டது. கறுப்பை கமிஷனுக்கு வெள்ளையாக்கும் புதுத்தொழில்
கனஜோராக நடக்கிறது. கைப்பொருளை தொலைத்தாற்போன்ற துக்கத்துடன் வங்கிகளின் முன்னே நாட்கணக்கில்
காத்திருக்கும் மக்களை மோடியின் நிழற்படையினரும் அதிகாரி களும் மிகுந்த ஆணவத்தோடு பரிகாசம்
செய்கின்றனர். மாற்றிமாற்றி பிறப்பிக்கும் குழப்படியான உத்தரவுகளால் ஒரு நிச்சயமற்றத்தன்மையை
ஏற்படுத்தி மக்களை நிரந்தரப்பதற்றத்திற்குள் ஆழ்த்தி ஆத்திரமூட்டுகிறார்கள். தெருவுக்கு
இழுத்தெறியப்பட்டதால் நிலைகுலைந்துப் போய் கொந்தளித்துக்கொண்டிருக்கும் மக்களிடமிருந்து
தாங்கள் வெகுவேகமாக தனிமைப்பட்டு வருவதை மறைக்க போலியான கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு
தம்மைத்தாமே மெச்சிக்கொள்கிறார்கள். <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">எதிர்க்கட்சிகள், பா.ஜ.க.வை நிராகரித்துள்ள 69% வாக்காளர்களின்
பிரதிநிதிகள். அவை எழுப்பும் மக்கள்சார் பிரச்சினைகளை செவிமடுக்காது மமதையோடு சுற்றுகிற
பிரதமரை கண்டிக்காமல், எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்ற கூட்டத்தொடர் வீணாவதாகவும்
வரிப்பணம் விரயமாவதாகவும் சில ஊடகங்கள் பசப்புகின்றன. அமைதியாக நடக்கும் கூட்டங்களில்
மக்கள்விரோத சட்டங்கள்தான் நிறைவேற்றப் படுமெனில் அந்த நாடாளுமன்றம் நடந்தென்ன ஆகப்போகிறது?
பிரதமரின் இந்த துல்லியத்தாக்குதலால் சாகடிக்கப்பட்ட எண்பதுக்கும் மேற்பட்டோருக்கு
இரங்கல் தெரிவிக்கவும்கூட மனமற்ற அந்த கூட்டத்தொடர் அப்படியொன்றும் நாட்டுமக்களுக்கு
நலம் பயக்கும் முடிவுகளை எடுத்து விடப் போவதில்லை. ஆட்சியாளர்களின் அட்டூழியங்களுக்குப்
பதிலடி கொடுக்க அடுத்த தேர்தல்வரை மக்கள் காத்திருப்பார்களெனச் சொல்ல முடியாது. ஏனெனில்
நாட்டில் கலவரம் வெடிக்கும் என்று உச்ச நீதிமன்றம் சொன்னதை மக்கள் கவனத்தில் வைத்துக்கொண்டுதானிருக்கிறார்கள்.</span></div>
<br />
<div class="MsoNoSpacing" style="text-align: right;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><b>-ஆசிரியர் குழு</b><o:p></o:p></span><br />
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><b><br /></b></span>
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><b><br /></b></span>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
கியூப மக்கள் வென்று வருவார்கள்</div>
<div style="text-align: left;">
- ஃபிடல் காஸ்ட்ரோ ருஸ் தமிழில்: எஸ்.வி.ராஜதுரை</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
செம்பதாகையின் ஒரு துளி ரத்தம் </div>
<div style="text-align: left;">
லெனின், டிராட்ஸ்கி, ஸ்டாலின், புகாரின் </div>
<div style="text-align: left;">
- ப.கு.ராஜன்</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
கஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள்</div>
<div style="text-align: left;">
நந்திதா ஹக்ஸர்- தமிழில்: செ.நடேசன்</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
இந்தியத் தொழிற்சங்க - இடதுசாரி இயக்கங்களின் முன்னுள்ள சவால் </div>
<div style="text-align: left;">
- இக்பால்</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
நேர்காணல் : அருந்ததி ராய் </div>
<div style="text-align: left;">
எழுத்து, போராட்டம் மற்றும் சீருடல் பயிற்சி...?</div>
<div style="text-align: left;">
- ஐஸ்வர்யா சுப்ரமணியம் - தமிழில்: ராஜ்தேவ்</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
சிறுகதை : ரயில் பிரயாணம் - லி.ரா.</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
ப்ரமூதியா ஆனந்த தூர் : தீவுச்சிறையும் விடுதலை இலக்கியமும்</div>
<div style="text-align: left;">
எஸ்.வி. ராஜதுரை</div>
<div style="text-align: left;">
<br /></div>
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"></span><br />
<div style="text-align: left;">
பிரதிகளுக்கு : ந.பெரியசாமி 9487646819</div>
<div>
<br /></div>
</div>
<div class="MsoNoSpacing" style="text-align: right;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><b><br /></b></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: right;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><b><br /></b></span></div>
</div>
புதுவிசைhttp://www.blogger.com/profile/09276344793619872435noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8111967010823738396.post-86895491648123841792016-11-04T19:01:00.001-07:002016-11-04T19:01:04.309-07:00யோகா: வரலாறும் பிரச்சாரமும் - ஜெயகாந்தன் மஞ்சாலுமூடு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjo-FGYS0BOzrTKb5GvrBqn1J4nOSouzkkm7prJoJnkQZQgmsQnwXDILuuc9RCpX3oy8svuT5X6RbbEvwpxhB7qxXZMVoy9mvi6WnHvpE6_NV7KHqjQ91UvI-TR871bKB3KEVtdwTZtHQEL/s1600/yoga6.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjo-FGYS0BOzrTKb5GvrBqn1J4nOSouzkkm7prJoJnkQZQgmsQnwXDILuuc9RCpX3oy8svuT5X6RbbEvwpxhB7qxXZMVoy9mvi6WnHvpE6_NV7KHqjQ91UvI-TR871bKB3KEVtdwTZtHQEL/s400/yoga6.jpg" /></a><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: large;"><b>ம</b></span><span style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;">னிதகுலத்தின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு </span><span style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;">ஏற்படுத்துகின்ற ஒற்றை மூலிகையாக<img height="16" id="w9pi87bugthn" src="" width="16" /> யோகாவை கடந்த </span><span style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 16px;">ஜூன் </span><span style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;">மாதம் எல்லா பத்திரிகைகளும் தொலைக்காட்சி ஊடகங்களும் கொண்டாடின. ஜூன் 21-ஐ உலக யோகா தினமாக 135 நாடுகள் “ஆசன” விழாவாய் கோலாகலமாய் கொண்டாடியதாக செய்திகள் வெளிவந்தன. பிரபலங்களும் திரை நட்சத்திரங்களும் ஆட்சியாளர்களும் தங்களுக்கு மலிவான விளம்பரமும் மத்திய அரசின் ஆசியும் பெற இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தினார்கள். அறிவு படைத்தோரும் அறிவற்றவர்களும் ஒரு மாயவலையத்திற்குள் மாட்டியவர்களைப்போல் அதன் பின்னால் சென் றனர். 135 நாடுகளில் நடத்தப்பட்டதனால்(!) யோகா அறிவியல்பூர்வமான ஒன்றாகப் பிரச்சாரத் தம்பட்டங்கள் பரப்பப்படுகின்றன. உலகம் முழுவதுமுள்ள நாடுகளில் போதைப் பொருள் பழக்கம் உள்ளதினால் அதுவும் சரியான ஒன்றே என்று வாதிட மேற்கூறிய கருத்து உதவலாம். அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்படாத பல்வேறு சிகிச்சை முறைகளை வளர்ப்பதற்கு மத்திய அரசு கோடிக்கணக்கான தொகை செலவிட்டு செயல்படுத்துகின்ற ஆயுஷ் துறையின் கீழ் யோகாவையும் உட்படுத்தியிருக்கிறது. சோதிடமும் இத்துறையின் கீழ்தான் இயங்குகிறது! </span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12pt;">சாதி மத அரசியல் பேதமின்றி அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக யோகா இன்று மாறிக்கொண்டிருக்கிறது. சூரியநமஸ்காரம் தவிர்த்த யோகாவை வரவேற்பதில் பிரச்சினை ஏதுமில்லையென சில முஸ்லீம் அமைப்புகளும் கூறிவிட்டன. பாதிரிமார்கள் யோகாவை கற்பதிலும் கற்பிப்பதிலும் கிறிஸ்தவ விரோதமாக ஒன்றுமில்லையென அதன் மதத்தலைமை அனுமதியளித்துள் ளது. இந்திய மாநிலங்கள் அனைத்தும் யோகாவை அரசு விழாவாக கொண்டாடியபோது பீகார் மாநில அரசு மட்டும் அதை அரசு விழாவாக நடத்தமாட்டோம் என முடிவெடுத்தது குறிப்பிடத்தக்கது.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12pt;">பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கல்வித்திட்டத்தின் கீழ் யோகா பயிற்சியளிப்பது தொடர்பாக ஆலோசனைகள் வலுப்பெறுகிறது. பல வருடங்களாக பள்ளிகளில் நடைபெற்றுவந்த உடற்பயிற்சி கல்வி இப்போது இல்லை, அதற்கான உடற்பயிற்சி ஆசிரியர்களையும் சமீப காலமாக நியமிப்பதில்லை. யோகாவில் பட்டம் பெறுபவர்களுக்கு யோகா ஆசிரியர்களாக பள்ளிகளில் நியமனம் பெற வாய்ப்புகள் உருவாகின்றன. இலட்சக்கணக்கான ஆசிரியர்களை இப்படி நியமனம் செய்து சங்பரிவாரத்தின் ஒரு முக்கிய நிகழ்ச்சிநிரல் அரசுத்திட்டமாக வெகுவிரைவில் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்படும் என்ற அபாயத்தை கவனத்திலெடுக்க வேண்டியுள்ளது.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12pt;">ஊடக கவனம் கிடைக்கிற, அனைவராலும் வரவேற்கப்படுகிற யோகாவைப் பற்றியும் அதன் வரலாறு மற்றும் நிகழ்காலத் தேவை குறித்தும் அறிவியல்பூர்வமான ஒரு அலசல் தேவைப்படுகிறது. அந்த அலசலின் ஒரு எளிய துவக்கமாக இக்கட்டுரை அமைந்தால் மகிழ்ச்சியே. இன்று கொண்டாடப்படுகிற யோகாவும் பழங்கால இந்தியாவின் நூல்களில் விளக்கப்படுகிற அல்லது பழக்கத்தில் இருந்த யோகாவும் ஏதேது கோணங்களில் ஒற்றுமைப்படுகிறது அல்லது வேற்றுமைப்படுகிறது என்று ஆராய்வது இதற்கு உதவியாக அமையும்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12pt;"><b><span style="color: red;">யோகாவின் பழமை</span></b><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12pt;">மூன்று தலைகளோடு பத்மாசனத்தில் இருக்கிற ஒரு யோகியின் கற்சிற்பம் மொகஞ்சதாரோ-ஹரப்பா அகழ் வாராய்ச்சியில் கிடைக்கப்பெற்றது. இது சிவனின் சிற்பம் என்ற கருத்தும் உள்ளது. எனவே ஆரியர் வருகைக்கு முன்னரே யோகா இந்தியாவில் பிரச்சாரத்தில் இருந்தது என்று வாதிடுவோரும் உள்ளனர். ஒரு சில உபநிடதங்களிலும், புத்த-சமண இலக்கியங்களிலும் யோகாவை விளக்கும் கருத்துக்கள் உள்ளன. ஸ்வேதசொதரோ உபநிடதம் யோகாவைப்பற்றி பல்வேறு அத்தியாயங்களில் விளக்கமாக கூறியிருக்கிறது. தலையும் கழுத்தும் மார்பும் நேராகப் பிடித்து உடல் அசையாமல் மனதையும் புலன் களையும் இதயத்தோடு ஒருங்கிணைத்தால் பண்டிதரான ஒருவர் பிரம்மம் எனும் தோணியேறி பயத்தின் எல்லா ஆறுகளையும் தாண்டலாம் என ஸ்வேதசொதரோ உபநிடதமும், ஐம்புலன்களும் மனமும் செயல்படாமல் இருப்பதும், புத்தி அசைவற்று இருப்பதுமான ஒரு பிரத் யேக நிலைதான் யோகா என்றும் புலன்களை ஸ்திரத்தன்மையோடு கட்டுப்படுத்த முடிகிற ஒருவருக்கு புத்தியின் ஊசலாட்டங்களிலிருந்து விடுதலை கிடைக்கும் என்றும் கடோ உபநிடம் கூறுகிறது.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12pt;">உபநிடதங்களிலும் புத்த-சமண இலக்கியங்களிலும் முக்கியமாக சாங்கிய தரிசனத்திலும் விளக்கப்பட்டிருந்த யோகா தத்துவங்களை ஒன்றுதிரட்டி ஒரு தனி தத்துவமாக உருவாக்கியவர் பதஞ்சலி எனும் முனிவராகும். “சமாதி, சாதன,விபூதி, கைவல்யம்” என்று நான்கு பகுதிகளில் 195 ஸுக்தங்களாக ஒரு சிறந்த கட்டமைப்புள்ள தரிசனமாக யோகாவை பதஞ்சலி உருவாக்கினார். மிகச் சரியானதொரு விளக்கத்தை யோகாவிற்கு பதஞ்சலி இவ்வாறு அளிக்கிறார் “ யோகா சித்தவிருத்தி நிரோதா:” ஒருவருக்கு பல்வேறு உணர்ச்சிகள் உள்ளன, அவற்றின் வெளிப்பாடுகளே காம குரோத மோக போட்டி மனப்பான்மைகள். இவற்றிலிருந்து வெற்றி அல்லது விடுதலை கிடைத்தால் மட்டுமே அவருக்கு இயற்கையோ டான தொடர்பைப் பற்றிய தவறான ஞானம் அற்று “கைவல்யம்” அடையமுடியும். சித்த விருத்திகளிலிருந்து விடுதலை கிடைக்கவேண்டுமென்றால் ஸ்திரத்தன்மையற்ற மனதை மையப்படுத்தி நிலைபெறுவதற்கான பயிற்சிகள் தேவைப்படுகின்றன. “கைவல்யம்” அடைவதே யோகாவின் நோக்கம். இதை அடைய புருஷன் இயற்கையிலிருந்து வேறுபட்டவன் என்ற சரியான ஞானம் ஏற்படவேண்டும். புருஷன் அழிந்தாலோ கைவல்யம் அடைந்தாலோ இயற்கையானது மற்ற புருஷர்களுக்காக நிலைநிற்குமென்று யோகசூத்திரம் கூறுகிறது. அதாவது “சித்த விருத்தி நிரோதா” வழியாக கைவல்யம் அடைவதே யோகாவின் நோக்கமென்று யோகாவின் புராதனத் தத்துவம் கூறுகிறது.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12pt;"><span style="color: red;"><b>அஷ்டாங்க மார்க்கம்</b></span><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12pt;">“யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரண, தியானம், சமாதி” எனும் எட்டுப்படிகள் யோகா பயிற்சியில் உள்ளன. எட்டுப்படிகளும் சரியான செய்முறைகளால் “பரமானந்தம்” எனும் முழுமையை அடையலாமென்று யோகா விளக்குகிறது. இந்த எட்டுப் படிகளில் ஒன்று மற்றொன்றிலிருந்து உயர்ந்ததோ தாழ்ந்ததோ அல்ல. ஆனால் இன்று ஆசன யோகா மட்டுமே கொண்டாடப்படுகிறது. அதுவும் யோக சூத்திரம் விளக்கும் படியாகவுமில்லை. எட்டுப்படிகளில் முதல் இரண்டு படிகள் ஒழுக்கமான வாழ்க்கை சம்பந்தப் பட்டதாகும். “அஹிம்சை, சத்யம், பிரமச்சரியம், அபரிக்கிரகம்” என்னும் ஐந்து விரதங்களாகும் யமம். இரண்டாம் படியில் அக-புற தூய்மை, தவம், மகிழ்ச்சி, சுயஞானம், ஈஸ்வர தியானம் ஆகியவை இடம் பெறுகின்றன. சுகமான அசைவற்ற இருப்பை (உட்காருதல்) ஆசனம் எனப்படுகிறது. உடலை அசைவற்ற நிலையில் சுகாசனத்தில் நெஞ்சையும் தலையையும் நிமிர்த்தி வைத்து நாலாம் படியான பிராணாயாமம் செய்யவேண்டியது. கட்டுப்படுத்தலுக்கு உள்ளாக்கிய மூச்சு இழுத்தலும் மூச்சு விடுதலும் தான் பிராணாயாமம். புறச்செயல்களிளிருந்து புலன்களை விலக்கி மனதை ஒருமுகப்படுத்துவதே பிரத் தியாகாரம். மனதை உடலின் புறமோ அகமோ உள்ள ஒரு பிரத்தியேகப் புள்ளியில் மையப்படுத்தி நிலைபெறச் செய்வது தாரண. இவ்வழிகளாக மனதின் ஒருமுகப் படுத்திய நிலையை எட்டுவது தியானம். தியான வழியாக உடலும் மனதும் ஒன்றோடொன்று இணைந்து இரண்டும் ஒன்றாக மாறுகின்ற ஒரு உன்னத வாழ்நிலையை சமாதியென்று கூறுகிறது. முற்றும் துறந்து புருஷன் பரபிரஹ்மத்திற்கு இணையாக தூய்மை பெறுவதே கைவல்யம். வாழ்க்கையிலிருந்து பரிபூரணவிடுதலை பெறுவதே பரமானந்தம் அதுவே கைவல்யம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12pt;">இன்று யோகா சாமியார்கள் அனைவரும் ஆடம்பர வாழ்க்கையின் உயர் படிநிலைகளை எட்டியவர்களும் கோடீஸ்வரர்களும் ஆவர். அதுவே அவர்களுக்கு கைவல்யம். ஆசன யோகாவும் பிராணாயாமாவும் ஆகும். பாபா ராம்தேவின் விற்பனைச்சரக்குகள். ஸ்காட்லாந்தில் அவருக்கு ஒரு தீவே சொந்தமாக உள்ளது என்பது ஊரே அறிந்த செய்தி. யோகாவின் தந்தையான பதஞ்சலியின் பெயரைப் பயன்படுத்தி விற்பனை செய்கிற வியாபாரியாகவும் யோகாவின் உயர்ந்தபடியான ‘சமாதி அல்லது கைவல்யம்” அடைந்தவராக(!) ராம்தேவ் திகழ்கிறார் என்பதிலிருந்தே நாம் சிலவற்றை ஊகித்துக்கொள்ள முடியும். டபுள்ஸ்ரீ ரவிசங்கர் சுதர்சன கிரியா என்று பெயரிடப்பட்ட பிராணயாமத்தை விற்பனை செய்கிறார். உலகம் முழுவதும் பல ஆயிரம் கோடிகள் விலை மதிக்கிற சொத்து இவருக்குண்டு. இவர்கள் மட்டுமன்றி யோகா சாமியார்கள் அனைவருமே சொகுசு வாழ்க்கையை அனுபவிப்பவர்களும் கோடிஸ்வரர்களும் ஆவார்கள்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: center;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12pt;"> <b><span style="color: red;">II</span></b><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12pt;">இன்று பிரச்சாரம் செய்யப்படுகின்ற ஒரு யோகாசன முறையும் பதஞ்சலி முனிவரின் யோகா சூத்திரங்களைப் பின்பற்றப்படுவதில்லை. 13ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு துவங்கப்பட்டதும் 15-16ஆம் நூற்றாண்டுகளில் வலிமையடைந்ததுமான ‘ஹடயோகத்தின்’ தத்துவார்த்த மிச்சசொச்சங்களும் நவீன உடற்பயிற்சி முறைகளும் சேர்ந்த கலவையே இன்றைய யோகா. இது புராதன இந்தியா அளித்த கொடையுமல்ல, நமது பாரம்பரிய சொத்துமல்ல, உலகிற்கு நாம் அளித்த விலை மதிக்க முடியாத அறிவுமல்ல.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12pt;"><span style="color: red;"><b>ஹடயோகா</b></span><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><span style="font-size: 12pt;">ஹடயோக பிரதிபிகையும் சிவசம்கிதையும் ஹட யோகாவை விளக்குகிற பழமையான நூல்கள். பதஞ்சலியின் தத்துவத்தோடு ஹடயோகத்திற்கு தொடர்பில்லை. பின்னாட்களில் வியாக்கியானம் செய்து செய்து தொடர்புபடுத்தினர். 1896ல் எழுதப்பட்ட விவேகானந்தரின் ராஜயோகம் ஹடயோகத்தைப் புறக்கணிக்கிறது. சரியான தியானத்திற்கு உதவக்கூடிய அளவிற்கு சரிவர உட்காருதல் என்ற முக்கியத்துவம் மட்டுமே ஆசனத் திற்கு விவேகானந்தர் அளித்துள்ளார். யோகதரிசனத்தின் ஒரு முக்கிய மைல்கல்லாகும் விவேகானந்தரின் இராஜ யோகம் எனும் நூல். 70 வருடங்களுக்குப் பிறகு பி.கே. எஸ்.அய்யங்கார் இயற்றிய </span>“Light on Yoga” <span style="font-size: 12pt;">என்கிற நூல் யோகாவின் மறைநூல் என்றறியப்படுகிறது. ஹட யோகம் மட்டுமல்லாது யோகதரிசனத்தில் ஏற்பட்ட எல்லா பரிணாமங்களையும் விளக்குகின்ற விதமாக இந் நூல் அமைந்துள்ளது. புதிய ஆசனங்கள் உருவாகியதும் யோகாவைப் பற்றிய புதிய நூல்கள் எழுதப்பட்டதும் இந்த நூலை அடிப்படையாக கொண்டேயாகும்.<o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><span style="font-size: 12pt;">ஒருவருக்கு முதுமை பாதிக்காத நிலையை உருவாக்கு வதே ஹடயோகாவின் இலட்சியம். பாலியல் சம்பந்த மான பூடகத்தன்மையுடைய செய்முறைகள் </span>(erotico mystical practice)<span style="font-size: 12pt;"> என்று ஹடயோகத்தை அழைக்கப்படுவதுண்டு. இயற்கை நியதிகளையும் விதிகளையும் மீறி வாழ்வதற்கான வழிமுறைகள் இதில் உள்ளடங்கியிருக்கிறது. “ஜரா-நர-மிருத்யுவை” ஜெயிப்பதாகும் அது. அதற் காக நாலுவிதமான முறைகள் உண்டு. “கிரியைகள், ஆசனங்கள், முத்திரைகள், பிராணாயாமம்”. இவற்றில் “கிரியைகள்” ஆறுவிதமுள்ளன. அவைகளை ஷட்கர்மங்கள் என்று அழைக்கப்படுகிறது. அவைகள் தவுதி, வஸ்தி, நேதி, திறாடக, நவுளி, கபாலபாட்டி. <o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><span style="font-size: 12pt;">தவுதி என்பது வயிற்றை சுத்தப்படுத்துவதற்கு, சுத்தமான துணியைச் சுருட்டி விழுங்கியப் பிறகு ஓர் ஓரத்தைப் பிடித்து திரும்ப இழுத்து எடுப்பது. நேதி என்பது ஒரு நூலினை மூக்கின் ஒரு துவாரம் வழியாக உள்ளே நுழைத்து இன்னொரு துவாரம் வழியாக இழுத்து எடுப்பது அல்லது தண்ணீரைப் பயன்படுத்தி இந்த மாதிரி செய்வது. நீர் எனிமா மூலம் வயிறைச் சுத்தம் செய்வது வஸ்தி. ஒரு பிரத்யேகப் புள்ளியில் கண்பார்வையை மையப்படுத்தி கண்களை தண்ணீர்மயமாக்கி சுத்தம் செய்தல் திறாடக. நவுளி என்பது வயிறை எக்கி ஒட்டிப் பிடிக்கவைத்து மஸாஜ் செய்வது. கபாலபாட்டியானது வயிறை உள்ளாலே எக்கிஎக்கி மூச்சுக் கட்டுப்பாடு செய்வதாகும். கபாலபாட்டி தினமும் செய்தால் உடலில் ஒரு தனி ஆற்றல் உருவாகுமென்றும் அது இயற்கையான அணுக்கதிர் வீச்சு </span>(natural radiation)<span style="font-size: 12pt;"> என்றும் புற்று நோய் ஒழிய இது சிறந்த மருந்தென்றும் ஏழைகளான புற்றுநோயாளிகளுக்கு கபாலபாட்டியானது ஒரு வர தானமென்றும் ராம்தேவ் பிரச்சாரம் செய்கிறார். உடல் கூறு அறிவியல் பற்றிய அறியாமையால் பண்டைய ஹடயோகிகள் இதுபோன்ற முட்டாள்தனங்களை செய்தனர். ஆனால் இன்று வியாக்கியானங்கள் மூலம் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக யோகாவை பிரச்சாரம் செய்வதைத்தான் கேள்விக்கு உட்படுத்த வேண்டியுள்ளது.<o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12pt;"><span style="color: red;"><b>ஆசனங்கள்</b></span><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12pt;"><span style="color: red;"><b><br /></b></span></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12pt;">சிவ சம்ஹிதா 84 ஆசனங்கள் பற்றி கூறினாலும் சித்தா சனா, பரமாசனா, உக்கிராசனா, ஸ்வச்திகாசனா ஆகிய 4 ஆசனங்களை மட்டுமே செய்முறைப்படுத்த வலியுறுத்துகிறது. ஸ்வச்திகாசனா, கோமுகாசனா, வீராசனா, கூர்மா சனா, குக்குடாசனா, உதனகூர்மாசனா, தனுராசனா, மத்சி யாசனா, பச்சிமதானா சனா, மயூராசனா, சவாசனா, பத்மாசனா, சிம்மாசனா, பத்திராசனா ஆகிய ஆசனங்கள் பற்றி மட்டுமே கூறுகிறது ஹடயோக பிரதீபிகை. இன்று பிரச்சாரம் செய்யப்படும் பல ஆசனங்களை இந்நூல்களில் பார்க்க முடியாது. ஆசனங்களை முக்கிய இடத்திற்கு கொண்டுவந்த B.K.S. ஐயங்காரின் நூலில் 200 ஆசனங்களும் அதற்கான 592 படங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12pt;"><span style="color: red;"><b>முத்திரைகள்</b></span><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12pt;"><span style="color: red;"><b><br /></b></span></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12pt;">மகாமுத்ரா, மகாபந்தா, மகாவேதா, கேஜரி, உட்யான பந்தா, மூலபந்தா, ஜலாந்தரபந்தா, விபரீதகரணி, வஜ் ரோலி, சக்திசாலனம் ஆகியவை. ஹடயோக பிரதீபிகையும் சிவசம்ஹிதையும் இந்த முத்திரைகளை ஒரே முக்கியத்துவத்தோடு விளக்குகின்றன. மரணம் மற்றும் முதுமையை வெல்வதற்கு இவற்றைச் செய்யவேண்டும் எனக் கூறுகின்றன. <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12pt;">ஸ்தூல பிரபஞ்சமும் சூட்சும பிரபஞ்சமும் மனித உடலில் உள்ளன, ஆறும் கடலும் மலையும் சூரியனும் சந்திரனும் உடலில் உள்ளடங்கியிருக்கின்றன. பல்வேறு ரேதஸுக்களால் உருவான சந்திரன் சொர்க்கத்தின் ஒரு துளி அமிர்தமாகும். அமிர்து பொழிப்பது சந்திரனாகும். பனியும் மழையும் பெய்கிறதும் சந்திரனிலிருந்தாகும். சந்திரனிலிருந்து பொழிகிற அமிர்த ரசம் செடிகொடிகள் வழியாக மனிதனை அடைகிறது. சூரிய சந்திரன்கள் அமிர்தத்தைக் கைப்பற்ற நடத்துகின்ற பலபரீட்சையே பூமியில் காலநிலை மாற்றத்தை ஏற்படுத்துகிறதென்று ஹடயோகிகள் நம்புகின்றனர். சூரியனுக்கு ஆதிக்கம் கிடைக்கிற காலமும் சந்திரனுக்கு ஆதிக்கம் கிடைக்கிற காலமும் உள்ளன. சந்திரன் அமிர்தத்தைச் சேமிக்கிறது, சூரியன் அதை அருந்தி வற்றச் செய்கிறது. சூரியனுக்கு ஆதிக்கம் வருகிற காலத்தில் நீர்த்தடங்கள் வற்றி வறள்கின்றன. அதுபோலவே மனிதனும். இதுதான் மரணத்தின் காலம்- உத்தராயன காலம். தட்சிணாயன காலம் என்பது சந்திரனுக்கு ஆதிக்கம் வருகின்ற காலம். அதாவது பசுமையின் காலம். பிரபஞ்சத்தின் இந்தக் கட்ட மைப்பு தான் மனிதனிலும் இருப்பதாக ஹடயோகிகள் அறிவியல் சமைக்கிறார்கள். சந்திரன் தலையிலிருந்து அமிர்து பொழிந்து கொண்டேயிருக்கிறது, சூரியன் அடிவயிற்றிலிருந்து அதை அருந்தி முடிக்கிறது. சந்திரன் பொழிகிற அமிர்தத்தை சூரியன் அருந்தி முடிப்பதனால் உடலில் நரையும் முதுமையும் ஏற்படுகின்றன. எனவே சந்திரன் பொழிகிற அமிர்தை சூரியன் அருந்தாமலிருக்க வேண்டுமானால் சூரியனை ஏமாற்றும் வகையிலான விபரீதகரணி முத்திரையைச் செய்ய வேண்டும். கழுத்தை மடக்கி தரையில் குத்தி காலை மேல்நோக்கி நிறுத்தும் போது சந்திரன் பொழியும் அமிர்தம் தலையிலிருந்து கீழ்நோக்கி வந்து சூரியனுக்கு கிடைக்கும் வாய்ப்பு தடுக்கப்படும் விதமாக ரொம்பவும் புத்திசாலித்தனமாக வகுக்கப்பட்ட முத்திரையாம் இது. <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12pt;">இந்த விபரீதகரணி முத்திரையின் நவீன பதிப்பாகும் சீர்ஷாசனம். தொடர்ந்து ஆறுமாதம் விபரீதகரணி செய்து வந்தால் ஜரா நரைகள் மாறும் என்றும் ஒரு நாளில் இரண்டு மணி நேரம் தொடர்ந்து செய்துவந்தால் மரணத்தை வெல்லலாம் என்றும் ஐயங்கார் முதல் பழங்கால நூல்கள் வரை கூறுகின்றன. இந்தளவுக்கு முட்டாள் தனமான சித்தாந்தத்தை மறைத்துப் பிடிப்பதற்கு இன்று இதைச் செய்தால் ஜீரணசக்தி, மலச்சிக்கல், மூலம், பவுத் திரம், மாதவிடாய் பிரச்சினைகள், கருப்பை நோய்கள், மலட்டுத்தனம், பார்வைக்கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி என்று பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு ஏற்படும் என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஆசனங்களின் அரசனாக சீர்ஷாசனத்தை கொண்டாடுவதோடு தொய்வு ஏற்படுகின்ற மூளைக்கு டானிக்காகும் என்றும் இதன் மூலம் மூளையை நோக்கி ரத்தஓட்டம் அதிகரிக்கும் என்றும் போதிக்கிறார்கள். <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><span style="font-size: 12pt;">நமது மூளைக்குத் தேவையான ரத்தம் முறையாக கிடைக்கும் விதமாகத்தான் நமது உடற்கூறு பரிணாமம் வழி அமையப்பெற்றுள்ளது. மூளையின் அமைப்பு சம்பந்தமான அறியாமை பெரிய இன்னல்களை உருவாக்கும். மூளையை நோக்கிய ரத்தஓட்டம் கூடினாலோ குறைந்தாலோ பல்வேறு அபாயங்களை ஏற்படுத்தும். மிருதுவான உயிரணுக்களால் அமையப் பெற்றுள்ள மூளை இதன்மூலம் இற்றுப்போகவோ இறுக்கமேற் பட்டு நாசமடையவோ வாய்ப்பு அதிகமுள்ளது. கண்களில் திரவ அழுத்தம் அதிகரித்தால் </span>Glukoma <span style="font-size: 12pt;">நோய் வருவதற்கு காரணமாகிவிடும்.<o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12pt;"><b><span style="color: red;">வஜ்ரோளி முத்திரை </span></b><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12pt;">சந்திரனில் இருந்து பொழிகின்ற அமிர்தரசம் இரச தாது, இரத்த தாது, அஸ்தி தாது, மஜ்ஜ தாது, வேத தாது, சுக்ல தாது என்று ஆறு தாதுக்களாக பரிணமிக்கிறது. இதன் ஒவ்வொரு கட்டமும் உருவாகிவர ஐந்து நாட்களாகும், முப்பது நாட்களில் ரேதஸ் உருவாகிறது. இவ்விதம் உருவாகின்ற ரேதஸை பாதுகாப்பதே ஹடயோகியின் கடமை. அதற்கான இன்னொரு வழியே வஜ்ரோளி முத்திரை. ஆண் பெண்ணுடலில் செலுத்துகின்ற ரேதஸை திருப்பி எடுக்கிற செய்முறைதான் வஜ்ரோளி முத்திரை. அதற்காக கடுமையான பயிற்சிகளை ஹடயோகிகள் செய்யவேண்டியுள்ளது. ரேதஸ் சந்திரனுக்கு ஈடானதும் மாதவிடாய் ரத்தம் சூரியனுக்கு ஈடானதுமாகும். இரண் டும் யோகியின் உடலில் இணைக்கப்பட வேண்டும்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12pt;"><b><span style="color: red;">சக்தி சாலன முத்திரை</span></b><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12pt;">குண்டலினியை உணர்த்துவதற்கான செய்முறை. ரேதஸை அமிர்தமாக்கி மாற்றுவது குண்டலினியாகும். மூலாதாரத்திலிருக்கிற குண்டலினியை படிப்படியாக மேல்நோக்கி உயர்த்தி சிரத்தில் சேர்க்கும்போது ரேதஸ் அமிர்தமாக மாறுகிறது. அது கீழ்நோக்கி பரவும்பொழுது உடல் முழுவதும் அமரத்துவத்தை எட்டுகிறது. வயிற் றின் கீழ்ப்பகுதியில் பாம்பை போன்று சுருண்டு தூங்குகின்ற குண்டலினியை உணர்த்துவதற்கு பத்மாசனத்தில் இருந்து பாதங்களை பயன்படுத்தி அழுத்தித் தொடுதல் வழியாகவும் வஸ்திரிகா பிராணாயாமம் வழியாகவும் இந்த முத்திரை செய்யப்படுகிறது.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12pt;"><b><span style="color: red;">கேஜரி முத்திரை</span></b><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12pt;">கீழ்த்தாடையிலிருந்து நாக்கின் தொடர்பை கொஞ்சம் கொஞ்சமாக அறுத்து நாக்கின் வெளித்தள்ளுதலை நீட்டிக்கிற செயல். கண்ணிமைகளின் மத்தி வரை வளைத்துக் கொண்டுவருமளவிற்கு நாக்கை நீட்ட வேண்டும். சந்திரன் பொழிகின்ற அமிர்தத்தை நேரடியாக யோகி அருந்துவதற்காகத்தான் இது செய்யப்படுகிறது. செடி கொடிகளின் வழியாக கிடைப்பதில் ஏற்படும் சேதாரத்தை இது போக்குகிறது. நாக்கின் தொடுப்பு அறுந்தால் நாக்கு பின்னோக்கிச் சென்று சுவாசக்குழாய் அடைந்து மரணம் ஏற்பட வாய்ப்புள்ள இச்செயலை இன்று எந்த யோகியும் செய்ய முன்வரமாட்டார்கள் என நம்பலாம்!. <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12pt;"><b><span style="color: red;">பிராணாயாமம்</span></b><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12pt;">நாடிகளைச் சுத்தம் செய்வதற்கான செய்முறை. இடா, பிங்களா என்ற இரண்டு நாடிகள் வழியாக மூச்சு இழுத்தலும் விடுதலும் நடைபெறுகிறது என்று ஹடயோகிகள் விவரிக்கிறார்கள். இரண்டு நாடிகளும் ஒன்றோடொன்று பிணைந்து இடது நாடி வலது மூக்கின் துவாரத்திலும் வலது நாடி இடது மூக்கின் துவாரத்திலும் திறக்கிறது. இந்த நாடிகளின் மத்தியின் ஊடே சுஷ்முனா கடந்து செல்கிறது. இதன் நீளம் மலத்துவாரம் வரை நீள்கிறது. சுஷ்முனாவில் ஆறு சக்கிரங்கள் கீழிருந்து மேலாக அமைந்துள்ளன. இந்த நாடிகளில் படிந்திருக்கிற அழுக்குகளை சுத்தப்படுத்துவதே பிராணாயாமத்தின் நோக்கம். வலது மூக்கை இடதுகை விரல்களால் அடைத்து இடது துவாரம் வழியாகவும் அதேபோல் திருப்பியும் மூச்சு இழுத்தலும் விடுதலும் செய்தலே இந்த முறை. உடலின் மூச்சு இழுத்தல் விடுதல் சம்பந்தமான கற்பனைகளும் உடலியல் சம்பந்தமான அறியாமைகளும் முட்டாள் தனமான சித்தாந்தங்களை உருவாக்கிட வழிவகுத்தது. பரிசுத்தி என்ற ஜோடனைக்காக உருவாக்கப்பட்ட இம் முறைகள் இன்று புதிய விளக்கங்களோடு உலா வருகின்றன. இரத்த அழுத்தம், இதயகுழாய் கோளாறுகள், மூட்டுவலி, சைனஸைடிஸ், பராலிசிஸ், ஆஸ்துமா, ஒவ்வாமை முதலியவற்றுக்கான சர்வரோக நிவாரணியாக பிரச்சாரம் செய்யப்படுகிறது.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><span style="font-size: 12pt;">சுதர்சன கிரியா பிராணாயாமம் அதி வளியோட்டத்திற்கு </span>(Hyper Ventilation) <span style="font-size: 12pt;">காரணமாகிறது. உடலின் கரியமில வாயுவின் நிலையை குலையச்செய்து இரத்த அணுக்க ளின் தேவையற்ற சுருங்கி-விரிவடைதல் மூலம் உடலின் பல்வேறு கோளாறுகளுக்கு காரணமாகிறது. உடற்கூறியல் தொடர்பாக ஒரு ஆரம்பக்கல்வி மாணவனுக்குண் டான புரிதல்கூட இல்லாமல் மூடநம்பிக்கையானதும் கற்பனைகளில் மூழ்கியிருப்பதும் அறிவியலுக்குப் பொருத்தமற்றதுமான நம்பிக்கைகளும் விளக்கங்களும் தான் எல்லா யோகா முத்திரைகளிலும் ஆசனங்களிலும் அடங்கியிருக்கின்றன. ஒரு சிலது மட்டுமே இங்கு விளக்கப்பட்டுள்ளன. ஜரா நரைகள் பாதிக்காமல், முதுமை ஏற்படாமல் அனேகாயிரம் வருடங்கள் வாழ்வதற்கான மோகமும் அதற்கான செயல்திட்டங்களும் விளக்குகிற கற்பனாவாத சித்தாந்தங்களே யோகா தரிசனங்கள். இதுபோன்ற மோகமும் கற்பனையும் உலகம் முழுவதுமுள்ள பண்டைக்கால மனிதகுலத்திடம் இருந்தது என்பது வரலாற்று உண்மையே.<o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: center;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12pt;"> <b><span style="color: red;"> III</span></b><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: center;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12pt;"><b><span style="color: red;"><br /></span></b></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12pt;">15 முதல் 18-ஆம் நூற்றாண்டுவரை ஹடயோகிக் குழுக்கள் இந்தியாவில் வலிமையாக இருந்தன. வணிகத்தின் போக்கை மட்டுமல்ல அரசரைக்கூட கட்டுக்குள் வைக்கும் வலிமையை இவர்கள் பெற்றிருந்தனர். கிழக்கிந்திய கம்பனியின் வருகை இவர்களின் வலிமையில் மாற்றங்களை ஏற்படுத்தியது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஹடயோகிகள் யோகாவை ஒரு மேடை நிகழ்ச்சியாக மாற்றி வருவாயை ஏற்படுத்திக்கொண்டார்கள். உடலின் மெய் வழக்கங்களை காசாக மாற்றுவதற்கு சர்க்கஸ் முறைகளையும் யோகாவோடு இணைத்துக்கொண்டனர். தனிமையாகவும் மறைவாகவும் பிரத்யேகமான சூழலிலும் செய்யவேண்டியதென்று போதிக்கப் பட்டவை மேடைநிகழ்ச்சிகளாக மாற்றப்பட்டன.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12pt;"><b><span style="color: red;">இன்றைய யோகா</span></b><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12pt;">19 நூற்றாண்டின் மத்தியகால அளவில் உடலழகு மேம்படுத்தலில் ஒரு புதிய கலாச்சாரம் ஐரோப்பாவில் வளரத் துவங்கியது. ஜிம்னாஸ்டிக்ஸ், தற்காப்புக்கலைகள் முதலியவை பெரிய அளவில் பிரபலமடைந்தன. காலனியாதிக்க இந்தியாவில், உடல்வலிமையற்றவர்களே இந்தியர்கள் என்ற பிரச்சாரம் மேலோங்கி நின்றது. நவீன உடலழகுக்கலையின் தந்தையெனவும் ஐரோப்பாவின் நாயகன் எனவும் பிரபலமடைந்த யூஜின் சாண்டோ இந்தியாவிற்கு வந்து தனது பயிற்சித்திட்டத்தை சந்தைப்படுத்தினார். தனது பயிற்சித் திட்டத்தை பின்பற்றினால் இந்தியர்கள் ஐரோப்பியர்களைப் போல உடலழகையும் வலிமையையும் பெறலாமென்றும் அதுவே விடுதலைக்கான சிறந்த மார்க்கமென்றும் பிரச்சாரம் செய்யப்பட்டது. காலனியாதிக்க இந்தியாவில் இந்தக் கருத்து பல்வேறு குழுக்களிடையேயும் தனிநபர்களிடையேயும் பெரும் பிரச்சாரம் பெறவும் தாக்கம் ஏற்படுத்தவும் செய்தது. சாண்டோவால் கவரப்பட்டவரும் அவரது மானசிக சிஷ்யனுமாகிய அன்றைய ஒரு சிற்றரசாகிய அவுத்-தின் மன்னன் பிரடிநிதிபந்த், கருவிகளின் உதவி தேவைப் படாமல் செய்யப்படுகிற ஒரு உடற்பயிற்சி முறையை உருவாக்கினார். அதுவே சூரிய நமஸ்காரம். 20-ஆம் நூற்றாண்டின் ஒரு படைப்பாகிய சூரிய நமஸ்காரத்தின் மேல், பழமையானது என்று ஒரு போலிப்பெருமை வர்ணம் பூசுப்பட்டதை தவிர வேறொன்றுமில்லை.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12pt;">சாண்டோவால் உத்வேகமடைந்த ஜெ.சி.குணே (குவல்யானந்தா) இந்தியாவிற்கே உரித்தான ஒரு உடல்வலிமை திறம்படுத்துதல் கலாச்சாரத்தை உருவாக்க வேண்டுமென விரும்பினார். இதற்காக ஐரோப்பாவில் அன்று பிரபலமடைந்திருந்த ஸ்வீடிஷ் உடற்பயிற்சி முறையான Ling முறையையும் இந்தியாவின் சில யோகாசன முறைகளையும் ஒன்றுபடுத்தி ஒரு கலவையாக மனம் மற்றும் உடல்வலிமையை வலுவாக்குகிற ஒரு உடற்பயிற்சி முறையை வடஇந்தியாவில் பிரச்சாரம் செய்தார். இதற்காக 1921ல் அவர் பம்பாயில் “கைவல்யதாமா” என்று பெரிய அளவிலான பயிற்சிமையம் ஒன்றை துவக் கினார். ஜவஹர்லால் நேரு போன்ற தேசியத்தலைவர்கள் இந்த மையத்தை பார்வையிட்டதனால் இது மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தது. இதே காலகட்டத்தில் தென் இந்தியாவில் கே.வி.அய்யர், டி.கிருஷ்ணமாச்சாரி போன்றோர் ஹடயோகாவையும் சாண்டோ பயிற்சி முறைகளையும் கலந்து புதுவிதமான ஆசனங்களைக் உருவாக்கி அவற்றுக்கு சம்ஸ்கிருத பெயர்களையும் சூட்டி பிரச்சாரம் செய்துவந்தனர். 1947 வரையிலும் டி.கிருஷ்ணமாச்சாரிக்கு மைசூர் அரண் மனையிலிருந்து யோகா பிரச்சாரத்திற்காக நிதி அளிக்கப்பட்டு வந்தது, அப்படி அது ஓர் அரசுத்திட்டமாகவே செயல்பட்டு வந்தது. சுதந்திர இந்தியாவில் அரசுத்திட்ட மாக அல்லாமல் மாறிய யோகாவை மறுபடியும் அரசுத் திட்டமாக மாற்றுவதற்கான முயற்சிகள் தற்பொழுது மிக நுட்பமாக முன்னெடுக்கப்படுகிறது.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12pt;">புராதன இந்தியாவில் மோட்சம் அடைவதற்காக (கைவல்யம்) துவங்கப்பட்ட யோகா பிறகு அமரத்துவம் பெறுவதற்கான ஒன்றாகவும், சிற்றின்பம் அளிக்கக்கூடிய தாந்திரிக முறையாகவும், 18ஆம் நுற்றாண்டுக்குப் பிறகு மேடை நிகழ்ச்சிகளான சர்க்கஸ் முறைகளாகவும், 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து உடலழகு / ஜிம்னாஸ்டிக் /சர்க்கஸ் முறைகளாகவும், 20ஆம் நூற்றாண்டில் உடற்பயிற்சியாகவும், இன்று மருத்துவமுறையாகவும் மாறி உள்ளது. பணம் ஈட்டுவதற்கான வழிகளில் மருத்துவத்துறை முதன்மையான இடத்தை எட்டியிருக்கிறது. இன்று அனைத்துமே சிகிச்சைமுறைகளாக சந்தைப்படுத்தப்படுகிறது. மியூசிக்தெரபி, அரோமாதெரபி, சைக்கோ-ரிலிஜியஸ் தெரபி, தியானசிகிச்சை என்பது போல் தற்பொழுது யோகா தெரபியும். <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12pt;">புராதன இந்தியாவின் விசித்திரமான கற்பனைகளை நவீன அறிவியலோடு ஒத்துப் போவதற்கு பொருத்தமான காரணங்கள் இருப்பதாக நிறுவுவது என்ற பிடிவாதம் தான் ஜே.சி.குணே போன்றவர்களுக்கு இருந்தது. இன்றைய யோகாவை ஒரு உடற்பயிற்சியாகக் கூட ஒத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் அதன் பல பயிற்சிகளும் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியதும் தேவையற்றதுமாகும். யோகா சாமியார்களின் இது குறித்தான விளக்கங்களெல்லாம் உள்ளீடற்றவைகளும் அறிவியலுக்குப் பொருந்தாததுமாகும். யோகாவின் பின்னுள்ள சில மனோவியல் பயிற்சிகள் பலபேருக்கு ஒரு போதைச் சுக மனநிலையை அளிக்கிறது. போதைப் பொருள்களும் இதைத்தான் அளிக்கின்றன. இரண்டுமே கேடு விளைவிப்பதுகளே.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12pt;">உதவிய நூல்கள் :<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12pt;">பாரதிய தர்சனம் - கெ.தாமோதரன்<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12pt;">இந்தியயுடே ஆத்மாவு- கெ.தாமோதரன்<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12pt;">வாழும் கலை - அருணன்<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12pt;">ஓஷோ தர்சனம் - ஜெயிம்ஸ்<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12pt;">ஓஷோ விமர்சனம் - இடமருகு<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12pt;">Dr.C. நாராயணன்- ஆய்வு உரைகள்.<o:p></o:p></span></div>
<br />
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
</div>
<br />
<div style="-webkit-text-stroke-width: 0px; color: black; font-family: 'Times New Roman'; font-size: medium; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; margin: 0px; orphans: auto; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 1; word-spacing: 0px;">
<br /></div>
</div>
புதுவிசைhttp://www.blogger.com/profile/09276344793619872435noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8111967010823738396.post-90102862773996875332016-11-04T17:58:00.000-07:002016-11-04T18:26:42.055-07:00நேர்காணல்: மீரா நந்தா<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPhStVL57xS_XNBEO-2MJjKeNo867vTH1W9_bGjIejNn8l2t1fLVypTNLY3a7IauTLIaLpx1EYeU3twgigWTaqOLTFNIMdNC6l5PnqlEeHhmmwid5pV6ecin7fuDmG1ghUKOAuE0lM9xeA/s1600/1meera-nanda.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPhStVL57xS_XNBEO-2MJjKeNo867vTH1W9_bGjIejNn8l2t1fLVypTNLY3a7IauTLIaLpx1EYeU3twgigWTaqOLTFNIMdNC6l5PnqlEeHhmmwid5pV6ecin7fuDmG1ghUKOAuE0lM9xeA/s320/1meera-nanda.jpg" width="294" /></a></div>
<blockquote class="tr_bq" style="text-align: justify;">
<div style="text-align: justify;">
<span style="color: blue; text-align: left;"><span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><i>Science in Saffron</i> </span></span><span style="color: blue; font-family: "arial unicode ms" , sans-serif;"><span style="font-size: 12pt;">(காவியில் அறிவியல்) என்கிற நூலை அண்மையில் வெளியிட்டுள்ள மீரா நந்தாவை
மதமும் அறிவி யலும் குறித்த ஆய்வாளரான ஸ்டீஃபனோ பிக்லியார்டி </span><i>(Stefano Bigliardi)</i> <span style="font-size: 12pt;">இத்தாலிய பகுத்தறிவு இதழான `லாய்டோ’வுக்காக </span><i>(L’Ateo)</i><i style="font-size: 12pt;"> </i><span style="font-size: 12pt;"> நேர்காணல் செய்தார். மீராவும் ஸ்டீஃபனோவும் கேட்டுக்கொண்டதற்கிணங்க அந்நேர்காணலின் ஆங்கில மொழியாக்கத்தை (</span><i>Butterflies and Wheels (2016 Jan 29)</i> <span style="font-size: 12pt;"> இதழ் வெளியிட்டிருந்தது. </span></span></div>
<span style="color: blue;"><span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><span style="font-size: 12pt;"><o:p></o:p></span></span><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></span>
<br />
<div style="text-align: justify;">
<span style="color: blue;"><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><span style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;">தமிழில்: கவின் மலர்</span></span></span></div>
<span style="color: blue;"><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">
</span></span></blockquote>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"> </span><span style="color: red; font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;">ஸ்டீ: உங்கள் கல்வி மற்றும் தொழில் குறித்து
எந்தெந்த விஷயங்கள் குறிப்பிடப்படவேண்டும் என்று விரும்புகிறீர்கள்? உங்களை நான் நாத்திகவாதி
என்பேன். அதை சற்றே விரித்து, உங்கள் நாத்திகத்தின் வேர்களையும் காரணங்களையும் குறித்துப்
பேசலாமா?</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">மீரா: என் அறிவுசார்/தொழில்சார் பாதையும்
என் “நம்பிக்கை” பாதையும் பின்னிப் பிணைந்தவை. ஒன்றோடொன்று தாக்கம் செலுத்துபவை.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">மரபுக்கும் புதிய சிந்தனைகளுக்குமிடையே
அல்லாடிய படியும், ஒரு பெண்ணாக என் சொந்தத்திறனின் மெல்லிய பிரதிபலிப்புக்கும் ஆணாதிக்கத்திற்குமிடையே
ஊசலாடிய படியும் நான் வளர்ந்தேன். நாட்டின் விடுதலைக்காக பிரிட்டிஷாரை எதிர்த்துப்
போராடிய படியே என் தந்தை தன் இளமைக்காலத்தைக் கழித்தார். ஆழமான தேசியவாதத்திற்கும் தேசியவாத
மனோநிலை தரும் ‘அவர்களா நாங்களா’ என்கிற குறுகிய எண்ணங்களுக்கெதிரான கலகத்துக்குமிடையில்
சிக்கியிருந்தேன், இறுதியாக ஆனால் பெரும்பாலும், நம்பிக்கைக்கும் ஐயங்களுக்கும் இடையேயான
போராட்டத்திலேதான் என் நாட்கள் கழிந்தன.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">வட இந்தியாவின் சண்டிகர் நகரில் பிறந்து
இந்த முரண்பாடுகளுடன்தான் வளர்ந்தேன். இந்தியாவின் திட்ட மிட்டு நிர்மாணிக்கப்பட்ட
முதல் நகரம் அதுவே. தேசத்தின் புதிய பிறப்பின் அடையாளமாக அந்நகரம் நிர்மாணிக்கப்பட்டது.
ஜவஹர்லால் நேருவின் கற்பனையிலும், பிரான்ஸின் புகழ்பெற்ற நகர் நிர்மாண நிபுணரான
லெ கார்புசியரின் வடிவமைப்பிலும் உருவாக்கப்பட்டது சண்டிகர் நகரம். உள்கட்டமைப்பிலும்
தோற்றத்திலும் நகரம் நவீனமாக உருவானது. ஆனால் அந்த இடத்திற்கும் மக்களுக்குமான இயல்பான
தொடர்பே உருவாகவில்லை. என் பெற்றோர் உட்பட அங்கு வசித்த பலரும் நாட்டுப் பிரிவினையின்
ரத்தக்களறியில் அகதிகளாக வந்து சேர்ந்தவர்கள்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">மரபான பழக்கவழக்கங்கள் மற்றும் இந்துமதக்
கோட்பாடுகளிலும் அமிழ்ந்த ஒரு சூழலில் தான் வளர்ந்தேன். குடும்பத்தின் வழிபாட்டுத்தலங்களில்,
அருகிலுள்ள இந்து மற்றும் சீக்கியக் கோயில்களில் நடக்கும் பிரார்த்தனைகளில் பங்குகொள்வதும்,
ராமாயண, பகவத் கீதை பாராயணங்களும் வாழ்வின் பகுதிகளாகிவிட்டன. என் கடவுளர்களை நான்
மிகத் தீவிரமாக உள்வாங்கினேன். பிரார்த்தனைகளிலும், பிற சடங்குகளிலும் நான் முன்னால்
நிற்பேன்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><span style="font-size: 12pt;">சந்தேகத்தின் விதைகளை விதைத்து, அதன்
விளைவாக முற்றிலுமாக மத நம்பிக்கைகளை இழக்கச் செய்தது நான் கற்ற அறிவியல் (நுண்ணுயிரியல்).
மூலக்கூறு உயிரிய லும் </span><i>(Molecular biology)</i> <span style="font-size: 12pt;"> உயிர்வேதியியலும் </span><i>(Biochemistry)</i><span style="font-size: 12pt;"> எனக்கு அறிமுகமானது தான் திருப்புமுனையாக அமைந்தது. அதிலும் டிஎன்ஏ-வின் இரட்டை நூலேணி
வடிவம் குறித்து வாசிக்கும்போது என் மூளைக்குள் தீப்பற்றியது. வாழ்வின் அறியப்படாத
ரகசிய கேள்விகளுக்கான விடைகள் அனைத்தும் எனக்குத் தெரியுமென்று நான் உணர்ந்தேன்.
புராணங்களின் கடவுள்கள் மற்றும் பெண் கடவுளர்களைவிட அவ்விடைகள் மிகுந்த நம்பகத்தன்மையுள்ளவை
என்றும் தோன்றியது. அதிலிருந்து நான் வழிபடவே இல்லை.<o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><span style="font-size: 12pt;">அறிவியலில் மிகத் தீவிரமாகி, பிஎச்.டி
ஆய்வு செய்ய முடிவெடுத்தேன். இந்தியாவின் மேல்தட்டு நிறுவனமான புதுதில்லி ஐஐடியில்
பிஎச்.டி ஆய்வை முடித்தேன். ஆனால் ஆராய்ச்சியின் குறைவான தரம், அதிகாரமிக்க, ஏறத்தாழ
நிலப்பிரபுத்துவமான முறையில் இயங்கும் பரிசோதனைச்சாலைகள், அவற்றுக்கும் வெளியுலகிற்கும்
எத்தொடர்புமில்லாத தன்மை இதெல்லாம் எனக்குப் பிடிக்கவில்லை. அப்போதுதான் (1983ல் நான்
உயிரி தொழில் நுட்பத்தில் என் முதல் பிஎச்.டியை முடித்திருந்தேன்) உள்நாட்டில் வளர்ந்திருந்த
காந்தியம் உட்பட பல் வேறு தத்துவங்களைக் கற்ற முக்கியமான அறிவுஜீவிகளாலும்,<i> </i></span><i>writings of Critical Theory (Horkheimer and Adorno) </i><span style="font-size: 12pt;">மற்றும் அறிவியலின் புரட்சிகர தத்துவாதி பால் ஃப்யெராபெண்ட் உட்பட அறிவியலுக்கு எதிரான
பலரின் மேற்குலக கருத்துக்களாலும் நவீன அறிவியல் கடும் தாக்குதலுக்குள்ளானது. அத்துடன்
தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டவரான தாமஸ் குன் மற்றும் ‘அறுபதுகளின்’ பெண்ணிய, ஏகாதிபத்திய
எதிர்ப்பு இலக்கியங்களும் இப்பட்டியலில் உண்டு. (ஐரோப்பிய மையத்துவம் மற்றும் இந்தியாவின்
நவீனத்துவம் போன்றவற்றின் மீது பின்நவீனத்துவ மற்றும் பின்காலனிய விமர்சனங்கள் வரத்தொடங்கியிருந்த
நேரம் அது).<o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">நீண்ட கதையை சுருக்கமாகச் சொல்கிறேன்.
நான் அறிவியலில் மேற்கொண்டு தொடரப் போவதில்லை என்று முடிவெடுத்தேன். ஒரு பெரிய நாளிதழிலில்
(தி இண்டியன் எக்ஸ்பிரஸ்) அறிவியல் எழுத்தாளராக வேண்டும் என்கிற முடிவை பிஎச்.டி முடித்தவுடன்
கைவிட்டேன். பின் அமெரிக்காவிற்குச் சென்று முதலில் வரலாறும் பின் அறிவியலின் தத்துவமும்
இண்டியானா பல்கலைக்கழகத்தில் (ப்ளூமிங்டன்) பயின்றேன். அதன்பிறகு நியூயார்க்கில்
உள்ள ரென்ஸெலேர் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூட்டில் அறிவியல் தொழில்நுட்பத்தில் இன்னொரு
பிஎச்.டி முடித்தேன். <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">என் இரண்டாவது கல்விப்புலப்பாதையை அறிவியலை
ஆதரிப்பதற்காகவே அர்ப்பணித்தேன். அதுவே எனக்கு தனிப்பட்ட வகையில் விழிப்புணர்வையும்
அறிவையும் வழங்கியது. இந்தியப் பண்பாட்டு வாழ்முறைகளில் புதிய ஞானத்தையும் மதச் சார்பின்மையையும்
கொண்டுவரும் திட்டத்தில் தீவிரமாக வேண்டுமென தீர்மானித்தேன்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">என் பணிசார்ந்து நான் ஒரு வட்டப்பாதையை
தேர்ந்தெடுத்திருந்தாலும், மத நம்பிக்கைகளிலிருந்து விடுபட்டு ஐயங்கள் கொண்டு இயற்கைத்துவத்திற்கு
‘மாறிய’ அப் பயணத்திற்கு உண்மையாக இருந்திருக்கிறேன். அந்த மாற்றம் பல பத்தாண்டுகளுக்கு
முன்பு பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் பேச்சரங்கம் ஒன்றில்தான் நிகழ்ந்தது.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><span style="color: red;">ஸ்டீ: பல வடிவங்களில் “மாற்றுச்சிந்தனைகளை”
விதைக்கும் நாடு என்றே தோற்றம் தரப் படுவதும் கூறப்படுவதும், மேலும் “ஒருவரின் உண்மையான
சுயத்தைக்” கண்டடைவதற்கு இந்தியாவில் வழியுள்ளதெனவும் உங்கள் தாய்நாட்டைப் பற்றி
இத்தாலியில் ஒரு கருத்து நிலவுகிறது. இந்த வழக்கமான இந்தியாவின் பிம்பத்தைத் தாண்டியும்
ஒரு சிலர் அறிந்துள்ளனர். எடுத்துக்காட்டாக அதன் வியக்கத்தக்க பொருளாதார வளர்ச்சியையும்
அதன் விளைவான சிக்கல்களையும் அறிந்தவர்களாக உள்ளனர். இந்தியாவை மீரா நந்தாவின் சொற்களில்
அறிந்து கொள்ளலாமா?</span><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">மீரா: இந்தியா பல முரண்பாடுகளின் நிலம்.
வெளியாட்களுக்கு தோற்றமளிப்பதைப் போல, ஆன்மிகத்தால் நிரம்பிய “மாற்றுச் சிந்தனை” மரபுகள்
வழியாகவே ஒரு சாதாரண ஆணோ பெண்ணோ இந்தியாவைப் புரிந்துகொள்கின்றனர். ஆனால் இந்தியா,
தான் தோற்றமளிப்பதைப்போல அத்தனை அன்பானதும் “ஆன்மிகமானது”மாக எப்போதும் இருப்பதில்லை.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">சூழலை நான் எப்படி விவரிப்பேன்? உண்மை
நிலவரங்களுக்காக ஒரு தேசிய நாளிதழின் தலையங்கத்தை துணைக்கழைக்கிறேன் (தி இந்தியன்
எக்ஸ்பிரஸ், டிச 28, 2015)<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
</div>
<ul>
<li style="text-align: justify;"><span style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;">·ஷாம்லியில் ஓர் இளம்பெண் காணாமல் போகிறார்.
ஷாம்லி வட இந்தியாவின் உத்தரப்பிரதேசத்திலுள்ள ஒரு சிறிய நகரம். இந்து மதத்திலிருந்து
இஸ்லாத்திற்கு மதமாற்றம் செய்வதற்காக அப்பெண் இஸ்லாமியர்களால் கடத்தப்பட்டிருக்கிறார்
என இந்து மதத்தைச் சேர்ந்த மூத்தோர் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்கின்றனர். இஸ்லாமியர்களுக்கு
எதிராக வெறுப்பையும் வன்முறையையும் தூண்டும் வகையில் கோயில் பூசாரிகளும், மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட இந்து வலதுசாரி அரசியல் கட்சியான பாஜகவின் தலைவர்களும் அக்கூட்டத்தில்
பேசுகின்றனர். ( சில நாட்கள் கழித்து, அந்தப் பெண், தான் காதலித்த இஸ்லாமிய இளைஞர்
ஒருவரை திருமணம் செய்துகொண்டு டில்லியில் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டது). </span><span style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;">‘லவ் ஜிகாத்’ என்றழைக்கப்படும் சதித்திட்டம்
மூலமாக, இஸ்லாமிய இளைஞர்கள் இந்துப் பெண்களை காதலித்து அவர்களை தங்கள் மதத்திற்கு மாற்றிவிடுவார்கள்
என்கிற இந்துத்துவவாதிகளின் ஒழுக்கம் சார்ந்த கலாச்சார பீதிதான் ஷாம்லி விஷயத்தில்
நாம் பார்ப்பது. </span></li>
</ul>
<br />
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
</div>
<ul>
<li style="text-align: justify;"><span style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;"> கிழக்கத்திய மாநிலமான ஒடிஷாவில் ஒரு
சூனியக்காரர், வயிற்றுவலிக்கான சிகிச்சை என்கிற பெயரில் 17 நாட்களேயான பச்சிளம் குழந்தையை
சூடான இரும்பு ஆணிகள் கொண்டு பச்சை குத்தியிருக்கிறார். இத்தகைய “சிகிச்சை” முறைகள்
வெறும் மூட நம்பிக்கைகளால் மட்டுமல்ல, மருத்துவ வசதிகளின் கடும் பற்றாக்குறை இருப்பதன்
காரணமாகவும் தான் பின்பற்றப்படுகின்றன. இந்த சூனியக்காரர்களின் எண்ணிக்கை அதிகமாகும்பொழுது,
சூனிய முறைகளில் கைதேர்ந்த பெண்கள் வேட்டையாடப்படப்பட்டு கொலை செய்யப்படுவது இந்தியாவின்
பல பகுதிகளில் நடக்கிறது.</span><span style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt; text-align: justify;"> </span></li>
</ul>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
</div>
<ul>
<li style="text-align: justify;"><span style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;">சீக்கிய நம்பிக்கைகளின் “பாதுகாவலராகவும்
பிரச்சாரகராகவும்” வடக்கில் உள்ள மாநிலமான பஞ்சாபில், ஆளும் அரசியல் கட்சியே தன்னை
பிரகடனப்படுத்தியது. மதத்திலிருந்து அப்பாற்பட்டு அரசு இயங்கவேண்டும் என்கிற
கருத்தையேகூட மாநில முதலமைச்சர் எள்ளிநகையாடினார்.</span><span style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt; text-align: justify;"> </span></li>
</ul>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
</div>
<ul>
<li style="text-align: justify;"><span style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;">· இதனிடையே இந்தியப் பொருளாதாரம் சிறப்பாகவே இருக்கிறது: இந்தியப் பிரதமர் “ஸ்டார்ட் அப் இந்தியா” திட்டத்தை அறிவித்தார்.
நிதியமைச்சரோ இந்தியாவின் வணிகம் மிகவும் முன்னேறியுள்ளதாகவும், அடுத்த ஆண்டுக்கான
வளர்ச்சிவிகிதம் 7 முதல் 7.5 சதவிகிதம் இருக்குமென எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.</span><span style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt; text-align: justify;"> </span></li>
</ul>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><span style="color: red;">ஸ்டீ: அரசியல்ரீதியாகப் பார்த்தால்,
உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்று இந்தியா. உண்மையில் அது மதச்சார்பற்ற
ஜனநாயகமாக இருக்கிறதா?</span><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">மீரா: ஆம். இந்தியா உலகின் மிகப்பெரிய
ஜனநாயக நாடுதான். நியாயமான சுதந்திரமான தேர்தல் முறை மூலம் எங்கள் ஆட்சியாளர்களை நாங்களே
தேர்ந்தெடுக்கிறோம் என்ற வழிமுறையானது பெருமைக்குரிய ஒன்றுதான். இதைவிட, ஏழைகளிலும்
ஏழைகளாக, விளிம்புநிலையிலுள்ளவர்கள் அனைவரும் இந்த ஜனநாயக வழிமுறையில் கவனமாக உற்சாகமாக
பங்கு பெறுகிறார்கள் என்பதுதான் மிகவும் முக்கியம். ஆனால் மேற்கத்திய ஜனநாயக நாடுகளில்
தேர்தல் ஜனநாயக முறையில் அடிமட்டத்திலுள்ளோர் பங்கு கொள்வதில்லை. இந்தியாவிலோ மேல்தட்டு
மற்றும் நடுத்தர வர்க்கத்தினரைவிட ஏழைகள் மிகப்பெருமளவில் வாக்களிக்கிறார்கள்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">மதச்சார்பின்மை என்பது முற்றிலும் வேறு
கதை. அமையவிருந்த புதிய நாட்டின் அரசுக்கு இருக்கவேண்டிய தன்மையை வரையறை செய்யும்
“மதச் சார்பற்ற” என்கிற சொல்லை இந்திய அரசியல் சாசனம் தொடக்கத்தில் கொண்டிருக்கவில்லை.
ஆனால் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, “சோஷலிச மற்றும் மதச்சார்பற்ற” என்கிற
சொற்களை அரசியல் அமைப்பின் முன்னுரையில் சேர்க்கச் செய்தார். இப்போதைய பாஜக தலைமையிலான
அரசு இந்த சேர்க்கையை நீக்கிவிட்டு அரசியல் சாசனம் முன்பிருந்த நிலைக்குத் திரும்ப
வேண்டுமெனத் திட்டமிடுகிறது.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">சேர்ப்பது, நீக்குவது என்பது ஒருபுறமிருந்தாலும்,
அரசியல் சாசனம் தன்னளவில் மதச்சார்பற்றதே. சாதி, வர்க்கம் பாலினம், மதம் என்கிற அத்தனை
அடையாளங்களையும் கடந்த குடியுரிமையை அது வழங்குகிறது. மத நம்பிக்கை எதுவாக இருந்தாலும்
(இல்லாமலேயே இருந்தாலும்) குடிமக்களுக்கு சம உரிமையும் சுதந்திரமும் உண்டு.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">ஆனால் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும்
உள்ள பாரம்பரிய மதச்சார்பின்மை போல இந்திய மதச்சார்பின் மையை புரிந்துகொள்ள முடியாது.
அரசுக்கும், மத நிறு வனங்களுக்கும் இடையே சுவரோ அல்லது வேலியோ கூட இல்லை. மத நம்பிக்கைகளிலிருந்து
வெளியேற வேண்டுமென இந்திய மதச்சார்பின்மை அரசை கோரு வதில்லை. மாறாக அனைத்து மதங்களின்
உரிமைகளும் சமமாகப் போற்றப்படவேண்டும் என்கிற அளவிலேயே உள்ளது. இந்து மரபில் உள்ள
“சகிப்புத்தன்மை”யை மீண்டும் நினைவுபடுத்தியும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் தன்மையையும்
வைத்து இவ்வகை மதச் சார்பின்மை நியாயப்படுத்தப்படுகிறது. <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">இந்திய வகை மதச்சார்பின்மையில் நிறைய
பிரச்சனைகள் உள்ளன. ஏட்டில் உள்ளபடி அரசு அனைத்து மதங்களையும் சமமாகப் பாவிக்கவேண்டும்.
ஆனால் நடைமுறையில் அது அத்தனை எளிதாக இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளிலும்
மக்கள்தொகையிலும் இந்துக்களே பெரும்பான்மையினர். எனவே அறிவிக்கப்படாத அதிகாரபூர்வ
மதமாக இந்து மதமே உள்ளது. அரசின் சின்னங்கள், சடங்குகள், மரபுகள் அனைத்தும் இந்துமதத்திலிருந்தே
உருவாக்கப்படுகின்றன. புனித வழிபாட்டுத்தலங்கள், புனித யாத்திரை செல்லுமிடங்களுக்கான
சுற்றுலாவை ஆதரிப்பதன் மூலம் அவற்றின் பொருளாதாரம் வலுப்படுகிறது. சிறுபான்மையினரின்
கல்வி மற்றும் சமூக நிறுவனங்களுக்கு உதவி மறுக்கப் படாத, அவர்களின் உள்விவகாரங்களில்
அரசு தலையிடாத சுயேச்சைமுறை நடைமுறையில் இருக்கிறது என்றாலும், அளிக்கவேண்டிய நிதியுதவிகள்
எல்லாம் பெரும்பான்மை மதத்தைச் சார்ந்தவர்களுக்கே செல்கின்றன.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">இதைவிட, பொதுவெளிகளில்- மருத்தவமனைகள்,
காவல் நிலையங்கள், அரசு அலுவலகங்கள் போன்றவை எல்லாம் இந்துச் சின்னங்களாலும் குறியீடுகளாலும்
நிரம்பியுள்ளன. முக்கிய நிகழ்வுகளின்போது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் கூட
இந்து மதச்சடங்குகளை பின்பற்றுகின்றன. இந்தியாவில் மத அடையாளங்கள் இல்லாத பொது இடத்தைக்
காண்பது அரிது.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><span style="color: red;">ஸ்டீ: (இந்தியாவில்) அரசியலில் மதம்
இப்படி தலையிடுவதால், கல்விக்கொள்கைகளில் அதன் விளைவுகள் என்னவாக இருக்கின்றன?</span><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><span style="font-size: 12pt;">மீரா: தேசியவாத ஆதிக்கத்திற்கு கல்வி
ஒரு பாதையாகிவிட்டது என்பதே எனக்கு மிக முக்கிய பிரச்சனையாகத் தெரிகிறது. இந்திய வரலாறு
- குறிப்பாக இந்திய அறிவியலின் வரலாறு இந்தியாவின் சிறப்பு மற்றும் ஒற்றுமை
குறித்த கட்டுக்கதைகளை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரவே பயன்படுத்தப்படுகிறது. (இதுதான்
உண்மையில் என்னை </span><i>Science in Saffron</i><span style="font-size: 12pt;"> எழுதத் தூண்டியது. சாதனைகளை
நேரடியாகவும், அறிவியலில் இந்திய பங்களிப்புகளை உலகளாவிய ஒப்பீடுகளுடனும் தர விரும்பினேன்).<o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><span style="font-size: 12pt;">இந்து தேசியவாதக் கட்சி ஒன்று (பாஜக)
ஆட்சியில் இருக்கையில், கல்விக்கு இந்து சாயம் பூசும் வேலைகள் அதிகரித்துவிட்டன. பள்ளியின்
பாடத்திட்டத்தில் பகவத் கீதையைக் கொண்டுவர ஏற்கனவே சில மாநில அரசுகள் திட்டமிட்டிருக்கின்றன.
யோகா ஏற்கனவே பல பள்ளிகளில் அன்றாட வகுப்புகளில் ஒன்றாக ஆகிவிட்டிருக்கிறது. கல்விக்கொள்கையை
மாற்றி எழுதத் திட்டங்கள் உள்ளன. இந்துமயமான ஒரு பாடத்திட்டம் வந்துவிடுமோ என்கிற
அச்சம் இருக்கிறது. நாட்டின் உயர்ந்த பதவியில் நரேந்திர மோடி இருக்கையில், இந்துமயமான
கல்விக்கான வேலைகள் மிக முக்கியத்துவம் பெற்றுள்ளன. மேலும் பல மாநிலங்களில் இத்திட்டங்கள்
நடை முறைப்படுத்தப்பட்டும் வருகின்றன. வெண்டி டோனிகரின் </span><i>“The HIndus” </i><span style="font-size: 12pt;"> நூலை
கூழாக்கும் முடிவை எடுக்க பெங்குயின் பதிப்பத்துக்கு அழுத்தம் தந்த தினாநாத் பத்ரா
தான் இந்தப் பெரியளவிலான கல்வி “சீர்திருத்த” இயக்கத்திற்குப் பொறுப்பு. பதிப்பகங்களையும்
மற்ற ஊடகங்களையும் அச்சுறுத்துவதும், சுய தணிக்கை செய்யப் பணிப்பதும் சகஜமாகிவிட்டன.<o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><span style="font-size: 12pt;">இந்து உரிமைகளைக் கொண்டு கல்வி நிறுவனங்களை
சத்தமில்லாமல் கைப்பற்றுவது சில நாட்களாக நடந்து வருகிறது. முதல்முறை பாஜக ஆட்சிக்கு
வந்ததன் பலனாக (1998-2004) பல்கலைக்கழகங்கள் தனியார்மயமாயின ( “பொதுத்துறை - தனியார்
கூட்டு” என்று இதற்கு நாகரிகமாக பெயர் வைக்கப்பட்டது). ஜோசியராகவோ, சாமியாராகவோ மூச்சுப்பயிற்சி
வழங்குகிறவராகவோ ஆகவேண்டுமெனில் இந்தியாவில் ஒரு பல்கலைக்கழகத்தைக் கண்டுபிடித்து
தொழில்முறை பட்டம் பெற்றுவிடலாம். மேல்தட்டு அறிவியல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கூட
சுய பிரக்ஞை ஆய்வுகள் </span><i>( Consciousness studies)</i><span style="font-size: 12pt;"><i> </i>என்கிற பெயரில் பட்ட வகுப்புகளைத்
தொடங்கியுள்ளன. அவை வேறொன்றுமில்லை. வேதாந்தங்களை கற்றுத் தருவதுதான். பிரபலமான குருக்கள்,
ஆசிரமங்கள் மற்றும் ஹரே கிருஷ்ணா போன்ற பக்தி மடங்கள் இவையெல்லாம் இந்த “கல்வித்”
திட்டங்களை முன்னெடுக்கின்றன. அரசியல்வாதிகளில், அரசு அதிகாரிகளில், ஏன் பேராசிரியர்களில்
கூட பலர் இந்தக் குருமார்களைப் பின்பற்றுபவர்களாக இருப்பதால், யாருடைய புருவமும் உயராமல்
எந்தக் கேள்வியுமில்லாமல் கல்வித்துறைக்குள் இந்து மதத்தை நுழைப்பது ஓசையின்றி நடக்கிறது. <o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">இவை எல்லாவற்றையும் விட பாஜக அரசும்
அதன் கூட்டணிக் கட்சிகளும் ஆய்வு நிறுவனங்கள் மற்றும் ஆய்வுப் பேரவைகளிலும் (குறிப்பாக
வரலாற்றாய்வு) இந்து தேசிய ஆதரவாளர்களை நுழைக்கின்றன. மார்க்சிய, மதச்சார்பற்ற வரலாற்றாளர்களை
“தேசவிரோதிகள்” என்று வெளிப்படையாக இந்திய வரலாற்று ஆய்வுப் பேரவை அறிவிக்குமளவுக்கு
நிலைமை மோசமாக இருக்கிறது. இந்தியாவின் பெருமைமிகு சமூக அறிவியல் மற்றும் மனிதமேம்பாட்டு
ஆராய்ச்சி நிறுவனமான நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தை இந்துமயமாக்கும்
திட்டமிருக்கிறது. <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><span style="color: red;">ஸ்டீ: இந்தியாவில் நாத்திகம் என்பது
எந்த வடிவத்தில் இருக்கிறது? யார் அதன் வழிகாட்டிகள்? எப்படி நாத்திகம் செயல்படுகிறது?
நாத்திகவாதிகளுக்கு ஆபத்துகள் உள்ளனவா?</span><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><span style="font-size: 12pt;">மீரா: </span><i>The God Market</i><span style="font-size: 12pt;"> என்கிற
என் அண்மைய நூலில் ஆவணப்படுத்தியுள்ளதைப் போல, இந்தியா பெருமளவில் மதம்சார்ந்த நாடாகவே
உள்ளது. ஆய்வு முடிவுகளின்படி 96 சதவிகிதமானவர்கள் மத நம்பிக்கையுள்ளவர்கள். மக்கள்தொகை
கணக்கெடுப்பில் ‘உங்கள் மதம் என்ன?’ என்கிற கேள்விக்கு நீங்கள் ‘எனக்கு கடவுள் நம்பிக்கை
இல்லை’ என்று பதிலளித்தால் நீங்கள் இந்து மக்கள்தொகையில் சேர்க்கப்படுவீர்கள். அந்தளவிற்கு
மதம் சார்ந்த பாரபட்சம் உள்ளது. தன்னை இஸ்லாமியராகவோ, கிறிஸ்தவராகவோ, சீக்கியராகவோ,
பௌத்தராகவோ, ஜெயினராகவோ அறிவித்துக்கொள்ளாத ஒருவர் இங்கு இந்து என்றே புரிந்துகொள்ளப்படுவார்.<o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">இந்தியாவில் நாத்திகம் இருக்கிறது. கண்கட்டு
வித்தைகளையும் மூடநம்பிக்கைகளையும் மிக வெளிப்படையாகவும் ஆக்ரோஷமாகவும் எதிர்த்துப்
போராடும் பகுத்தறிவுக் குழுக்கள் பல இந்தியாவில் உண்டு. இணையத்திலும் பகுத்தறிவுக்
கருத்துகள் மிகப் பரவலாக உண்டு. ஆனால் பொதுவில் அதன் இருப்பு மிகக் குறைவே.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">நாத்திகம் எந்தளவுக்கு இருந்தாலும் அது
அச்சுறுத்தலுக்கு உள்ளாகியே இருக்கிறது. கடந்த இருபதாண்டுகளில், இந்து மூடநம்பிக்கைகளையும்
இந்து மதத்தின் கட்டுக்கதைகளையும் குறித்து கேள்வி எழுப்பிய முன்னணி அறிவுஜீவிகளில்
மூன்று பேர் படுகொலை செய்யப் பட்டனர். இந்துமதக் கண்ணோட்டத்தையும் பழக்க வழக்கங்களையும்
கேள்வி கேட்டதால், நூல் எரிப்புகள், திரைப்படத் தடைகள் போன்றவை அதிகரித்துவிட்டன.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">பல்கலைக்கழக வளாகங்களிலும் பொதுவெளியிலும்
எழும் மதச்சார்பற்ற குரல்களை ஒடுக்கவும் அச்சுறுத்தவும் அரசு தன் இந்துத்துவ சார்புள்ள
மாணவர் அமைப்பை பயன்படுத்தும் ஆபத்தான போக்கு பரவலாகியுள்ளது. இந்த வார்த்தைகளை நான்
பேசுகையில்கூட, ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் பிரச்சனை கொழுந்து விட்டெரிகிறது.
தலித் (முன்பு தீண்டப்படாத சாதியைச் சேர்ந்த) மாணவர் ஒருவர் உயர் அதிகார மட்டத்திலிருந்து வந்த அரசியல் அழுத்தம் காரணமாக இடைநீக்கம் செய்யப்பட்டார். பல்கலைக்கழகத்திலிருக்கும்
இந்துத்வ சார்பு மாணவர் அமைப்பொன்றின் பொய்ப்புகாரை வைத்து இடைநீக்கம் செய்தது
நிர்வாகம். மேல்தட்டு நிறுவனங்களான ஐஐடி போன்றவற்றில்கூட மதச்சார்பற்ற, பகுத்தறிவுக்
குரல்கள் (பெரும்பாலும் தலித்துகளால் எழுப்பப்படுபவை) நசுக்கப்படுகின்றன. வெகு சாதாரணமாக
அன்றாட நடவடிக்கைகளில் ஒன்றாக ஆகிவிட்ட, அரசே முன்னின்று செய்யும் இந்த அச்சுறுத்தல்
ஒருவித பயச்சூழலையும் சுய தணிக்கையையும் உருவாக்குகின்றது.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><span style="color: red;">ஸ்டீ: உங்கள் நூல்களில் நீங்கள் “காவிமயமான
அறிவியலை” விவரிக்கிறீர்கள், விமர்சிக்கிறீர்கள். அது வெறும் பின்நவீனத்துவ வழக்காறுதானா?
அல்லது உண்மையாகவும் உறுதியாகவும் அறிவியல் தொழில்நுட்பத் துறையில் பாதகங்கள் இதனால்
ஏற்படுமா? எப்படி?.</span><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">மீரா: காவியமயமான அறிவியல் எனும்போது,
இரு விஷயங்கள் உள்ளன. முதலில், ஆன்மா என்பதன் இருப்பை இறுதியான உண்மையாகக் கூறி அதை
மரணத் துக்குப் பிந்தைய வாழ்வு, மறுபிறப்பு போன்றவற்றோடு தொடர்புப்படுத்தும் மரபான
இந்து நம்பிக்கைகளுக்குள் இருக்கும் முரண்பாடுகளின் சுவடுகளை நவீன அறிவியல் தலையீடு
செய்து அழித்திருக்கிறது. இரண்டாவது, நவீன அறிவியல் கோட்பாடுகளான கோபர்நிக்கஸின் சூரிய
மையம், பரிணாம வளர்ச்சி அல்லது குவாண்டம் இயற்பியல் போன்ற கோட்பாடுகளை பழங்கால இந்து
அறிவியலுக்கான விளக்கம் என திரித்துச் சொல்வது.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">காவிமயமான அறிவியலில் பின்நவீனத்துவம்
என்று ஒன்று இல்லை. பின்நவீனத்துவம் மற்றும் அதன் இணைப்பான ஞானத்திற்கெதிரான கோட்பாடுகள்
அனைத்துமே, நவீன அறிவியலுக்கும் மற்ற “மாற்று” சிந்தனை முறைகளுக்கும் இடையேயான
வேறுபாடுகளை மறுப்பதன் மூலம் இந்துமயமாதலுக்கு உதவவே செய்கின்றன. தவிரவும், அறிவியல்
குறித்த பின் நவீனத்துவ, பின்காலனிய சிந்தனைகள் யாவும் அறிவியல் என்பது ஒரு
மேற்கத்திய மற்றும் காலனிய கட்டமைப்பு என்றே நம்புகிறது. காலனிய நாடுகளின் மூலம் மேற்கு
உலகம் உள்ளே நுழைந்ததனால்தான் அறிவியலின் தரவுகள் யாவும் உண்மையாகவும் உலகளாவிய அளவில்
ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்றாகவும் ஆகின என்கிற கருத்தையே அவை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன.
உலகளாவிய பார்வையின்றி குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டும் பாவனையில் பேசும் இந்து தேசியவாதிகளின் மொழியிலேயே பேசுவதாக இக்கருத்துக்களும் அமைந்துவிடுகின்றன.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><span style="color: red;">ஸ்டீ: அறிவியலும் மதமும் சீராக சமரசம்
செய்து கொள்ளலாம் என்று நினைக்கிறீர்களா?</span><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><span style="font-size: 12pt;">மீரா: இல்லை. ஸ்டீவன் வெயின்பெர்கின்
அண்மை நூலான </span><i>"To Explain the World"</i><span style="font-size: 12pt;"> நூலை மேற்கோள் காட்டி
நவீன அறிவியல் குறித்துச் சொல்கிறேன். நவீன அறிவியலின் கண்டுபிடிப்பு என்பது “கணக்கு
சூத்திரப்படியும் சோதனைமுறையிலும் மதிப்பீடு செய்யப் பட்ட, தொடர்பில்லாத கொள்கைகள்
மூலம் பெருமளவிலான வெவ்வேறு முறைகளை விளக்க முற்படுவது”.<o:p></o:p></span></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">நோக்கங்களுடனான எந்தக் கொள்கைக்கும்
இதில் இடமில்லை அல்லது உணர்வுக்கும் இடமில்லை. அது அகம் சார்ந்த கடவுளானாலும் சரி
எங்கும் வியாபித்துள்ள சாத்தானாக இருந்தாலும் சரி. </span><span style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 12pt;">கடவுளோ சாத்தானோ ஒரு கவிதையின் உருவகத்தில் இருக்கலாம், அதுவும் ஒரு மனோதத்துவ உதவி போல அவர்களுக்குத் தேவைப்பட்டால்
மட்டுமே. அதற்கு மேல் அதில் ஒன்றுமில்லை.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">நான் சொல்லவருவது என்னவென்றால், இயற்கை
எப்படி இயங்குகிறது என்பதை விளக்குகையில் அதில் கடவுளுக்கும் அல்லது ஆன்மா தொடர்புடைய
கொள்கைகளுக்கும் எந்த சம்பந்தமுமில்லை: இயல்பான உலகம் நவீன அறிவியலிடம் சரணடைய வேண்டி
இருக்கிறது. உலகை விளக்க கடவுளைக் கொண்டுவந்தால், சான்றுகளோடுதான் எதையும் விளக்கவேண்டுமென்கிற
அறிவியல் சட்டதிட்டங்களுக்கும் இயல்பான உலகளாவிய பார்வைக்கும் பணிந்துபோக வேண்டும்.
ஆப்ரஹாமிய மதங்கள் என்று அழைக்கப்படும் யூதமதம், கிறித்துவம் மற்றும் இஸ்லாம் ஆகிய
மதங்களைப் போலல்லாமல், இந்து இறையியல் பொருளிலிருந்து தெய்வீகத்தைப் பிரித்துப் பார்ப்பதில்லை:
பொருள் உலகை உடைத்துக்கொண்டே போனால் அணுக்கள் இருக்கும்- அதாவது பொருள் என்பது படிப்படியாக
கட்டமைக்கப்பட்டது. அத்துடன் தூய உணர்ச்சிகள், ஆன்மா ஆகியவற்றின் விளைவான இரண்டாம்நிலை
நிகழ்வும்கூட. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், இந்துமதம் ஆன்மிகத்தையும் பொருளையும்
ஒன்றுக்கொன்று தொடர்பற்றதாகப் பார்க்கவில்லை. அதுபோலவே மதம் மற்றும் அறிவியல் தொடர்பான
விஷயங்களையும் தொடர்புபடுத்தியே பார்க்கிறது. ஸ்டீபன் ஜே கோல்டின் வார்த்தைகளில்
சொல்வதானால் ‘ஆன்மீகம், அறிவியல் ஆகியவற்றை வெவ்வேறு- ஒன்று மற்றொன்றின்மீது படியாத
படிக்கு இருக்கவேண்டிய- கற்பிக்கும் களங்களாக இந்து மதம் அடையாளப்படுத்துவதில்லை. இந்தியாவில்
உள்ள மிகப்பெரிய சவாலே இவற்றுக்குத் தொடர்பில்லை என நிறுவுவதே- “ஆன்மிக அறிவியல்”
என்கிற பொய்யான, இல்லாத அறிவியல் வகையை உடைப்பது தான். தயக்கமே இல்லாமல் நிஜ அறிவியலின்
சிறந்த சான்றுகளோடு “ஆன்மிக அறிவியலை” சோதனைக்குட்படுத்திப் பார்த்தால் மட்டுமே இது
சாத்தியம். அதனால்தான் சுவாமி விவேகானந்தாவின் எழுத்துக்களையும் பிரம்மஞானிகளின் எழுத்துக்களையும்
விலக்கிவைக்க வேண்டுமென்பதை தலையாயப் பணியாய் செய்துவருகிறேன். ஏனெனில் அவர்கள்தான்
முதன்முதலாக, இந்தியாவில், பொருள் குறித்த ஆய்வில் ஆன்மிக பரிமாணத்திற்கு “அறிவியல்பூர்வமான”
நியாயங்களை வழங்கியவர்கள். <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><span style="color: red;">ஸ்டீ: அறிவியல் கல்வியை (அல்லது பொதுவாக
கல்வியை) இந்தியாவில் எப்படி சீர்திருத்த வேண்டும் என நினைக்கிறீர்கள்? எந்த நாட்டையாவது
இதில் முன்மாதிரியாக வைத்திருக்கிறீர்களா?</span><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">மீரா: இது மிகவும் பெரிய விஷயம். என்னால்
இதற்கு பதிலளிக்க இயலுமெனத் தோன்றவில்லை.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">உலகளாவிய தரமான கல்வி என்று வருகையில்
இந்தியா மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. எல்லா இடங்களிலும் பொதுப்பள்ளிகள் வந்தால்
அது பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்க வழிசெய்யும்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><span style="color: red;">ஸ்டீ: இந்தியாவில் பெண்களும் (அறிவியல்)
கல்வியும் - சிக்கல்கள் என்ன? சாத்தியமான தீர்வுகள்?</span><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">மீரா: அறிவியல் கல்வியிலும் ஆராய்ச்சியிலும்
பெண்களை சட்டரீதியாகத் தடுப்பது எதுவுமில்லை. அமெரிக்காவில் இருக்கும் தங்கள் சகோதரிகளைவிட
பெண்களுக்கு இங்கு அதிகமாகவே கிடைக்கிறது. எடுத்துக்காட்டாக, பேறுகால விடுப்பு என்று
வரும்போதும், அடுத்தடுத்த குழந்தைகளுக்கும் ஊதியத்துடனேயே அவ்விடுப்பு கிடைக்கிறது. <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">பெண்கள் பாதை வகுத்திருக்கிறார்கள்.
இந்தியாவின் முக்கியமான அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நான் பணியாற்றுகிறேன்.
அங்கே உள்நுழையும் பொழுதாவது பாலின சமத்துவம் இருக்கிறது. சக ஆண்களைவிட பெண்கள் துறைரீதியான
படிப்பில் வல்லவர்களாக உள்ளனர்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">ஆனால் எல்லா நாடுகளிலும் உள்ளது போல
இந்தியாவிலும் தொழில்ரீதியாக முன்னேறிச் செல்கையில் பெண்களின் எண்ணிக்கை குறைவே.
அறிவியல் துறையில் பணியைத் தொடரமுடியாத பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட
அதிகம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">வீட்டில் குழந்தைகளையும் முதியவர்களையும்
பார்த்துக்கொள்ளும் பொறுப்பு என்கிற பெயரில் கூடுதல் சுமைகளை பெண்கள்மீது சுமத்துவது
இதற்குக் காரணமாக இருக்கலாம். ஆண்களும் பொறுப்புகளை உணர்ந்து நியாயமான முறையில் பணிகளில்
பங்கெடுத்துக் கொள்ளாவிட்டால், பெண்களுக்கு அது பாதகமாகவே முடியும்.<o:p></o:p></span><br />
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br /></span>
<span style="color: blue; font-family: "arial unicode ms" , sans-serif;">- புது விசை - இதழ் 46 / ஜீலை 2016</span></div>
<br />
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
</div>
புதுவிசைhttp://www.blogger.com/profile/09276344793619872435noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8111967010823738396.post-74232657050434220332016-07-30T06:44:00.000-07:002016-07-30T06:48:02.726-07:00விக்டர் ஹாரா: மக்களுக்காக இசைத்த கிதார் - எஸ்.வி.ராஜதுரை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<!--[if gte mso 9]><xml>
<w:WordDocument>
<w:View>Normal</w:View>
<w:Zoom>0</w:Zoom>
<w:TrackMoves/>
<w:TrackFormatting/>
<w:PunctuationKerning/>
<w:ValidateAgainstSchemas/>
<w:SaveIfXMLInvalid>false</w:SaveIfXMLInvalid>
<w:IgnoreMixedContent>false</w:IgnoreMixedContent>
<w:AlwaysShowPlaceholderText>false</w:AlwaysShowPlaceholderText>
<w:DoNotPromoteQF/>
<w:LidThemeOther>EN-US</w:LidThemeOther>
<w:LidThemeAsian>X-NONE</w:LidThemeAsian>
<w:LidThemeComplexScript>X-NONE</w:LidThemeComplexScript>
<w:Compatibility>
<w:BreakWrappedTables/>
<w:SnapToGridInCell/>
<w:WrapTextWithPunct/>
<w:UseAsianBreakRules/>
<w:DontGrowAutofit/>
<w:SplitPgBreakAndParaMark/>
<w:DontVertAlignCellWithSp/>
<w:DontBreakConstrainedForcedTables/>
<w:DontVertAlignInTxbx/>
<w:Word11KerningPairs/>
<w:CachedColBalance/>
</w:Compatibility>
<w:BrowserLevel>MicrosoftInternetExplorer4</w:BrowserLevel>
<m:mathPr>
<m:mathFont m:val="Cambria Math"/>
<m:brkBin m:val="before"/>
<m:brkBinSub m:val="--"/>
<m:smallFrac m:val="off"/>
<m:dispDef/>
<m:lMargin m:val="0"/>
<m:rMargin m:val="0"/>
<m:defJc m:val="centerGroup"/>
<m:wrapIndent m:val="1440"/>
<m:intLim m:val="subSup"/>
<m:naryLim m:val="undOvr"/>
</m:mathPr></w:WordDocument>
</xml><![endif]-->
<br />
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="color: black;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiW89oaY6wntdtkpWzp3-zeHGnpW1ZM9nb3-ulQYvQItMWCCsbI74UBZLwngaOtgTvn3pDePwBlyIZTLS5zG71FoK15DSTbOwTS857cUZ_ecquZjUkkMqKZO0C5p2KcEQ76QYJEUnQZCjLW/s1600/ep001613_4.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiW89oaY6wntdtkpWzp3-zeHGnpW1ZM9nb3-ulQYvQItMWCCsbI74UBZLwngaOtgTvn3pDePwBlyIZTLS5zG71FoK15DSTbOwTS857cUZ_ecquZjUkkMqKZO0C5p2KcEQ76QYJEUnQZCjLW/s400/ep001613_4.jpg" width="271" /></a></span></div>
<br />
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">பேட்ரிஷியோ குஸ்மன் <i>(Patrico Guzman)</i>, உலகப் புகழ்பெற்ற ஆவணத் திரைப்பட இயக்குநர்; தென்னமெரிக்க நாடான சிலியில் 1970 முதல் 1973வரை ஸால்வடோர்
அஜென்டெவின் <i>(Salvador Allende)</i> தலைமையில் இருந்த சோசலிச அரசாங்கத்தை
அந்த நாட்டு முதலாளி வர்க்கமும், இராணுவத்திலிருந்த பிற்போக்குத் தளபதிகளும் சிஐஏ-வின்
உதவியுடன் தகர்த்தெறிந்து இராணுவத் தளபதி பினோஷெவின் <i>(Augusto Pinochet)
</i>மூர்க்கத்தனமான பாசிச ஆட்சியை நிறுவியதை மூன்று பாகங்கள் கொண்ட ‘சிலியின் சண்டை’ <i>(Battle of Chile)</i> என்னும் ஆவணப்படத்தில் எடுத்துக்காட்டுகிறார். அஜென்டெவைப் பற்றியும்
சிலியில் பாசிச ஆட்சியாளர்கள் இழைத்த கொடுமைகளைப் பற்றியும் வேறு சில ஆவணப் படங்களையும்
தயாரித்துள்ளார். <br />
<br />
இவற்றில் மிக அற்புதமானதாக நமக்குப் படுவது, ‘வெளிச்சத்திற்கான ஏக்கம்’ <i>(Nostalgia for the Light)</i>. இந்தத்
திரைப்படத்தில் இடம்பெறும் நிகழ்ச்சிகளை எடுத்துரைப்பவரும் <i>(narrator)
</i>அவர்தாம். தென்னமெரிக்க நாடுகளில் மிக நீண்டகாலம் நாடாளுமன்றக் குடியரசு ஆட்சிமுறை
இருந்த நாடு சிலி. தாமிரம், நைட்ரேட் போன்ற கனிமவளங்கள் உள்ள அந்த நாடு, ஸ்பானியர்களால் கொள்ளையடிக்கப்பட்ட பிறகு பிரிட்டிஷ் மூலதனத்திற்குப் பெரும் ஈவுத்தொகைகளை வழங்கக்கூடியதாக இருந்தது; பின்னர் அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டல் களங்களிலொன்றாகியது.
எனினும், அந்த நாடு உலகின் கவனத்தைப் பெருமளவில் ஈர்த்ததில்லை. இந்தத்
திரைப்படத்தில் குஸ்மன் தமது இளமைக் காலத்தைப் பற்றிக் கூறுகிறார்: “குடியரசுத்
தலைவர்கள் பாதுகாப்பு வீரர்களின் துணையில்லாமல் தெருக்களில் நடந்து சென்றார்கள். அந்த
நாட்டில் நிகழ்காலம் மட்டுமே இருந்தது. ஒருநாள் இந்த அமைதியான வாழ்க்கை முடிவுக்கு
வந்தது. ஒரு புரட்சிகர அலை எங்களை உலகின் மையத்திற்கு அடித்துச் சென்றது. இந்த உன்னதமான
முயற்சியின் பகுதியாக இருக்கும் நற்பேறு எனக்கிருந்தது. அந்த முயற்சி எங்களை தூக்கத்திலிருந்து
எழுப்பியது. நம்பிக்கையின் நேரம் எனது ஆன்மாவில் நிரந்தரமாகப் பொறிக்கப்பட்டு விட்டது.”<br />
<br />
வன்முறைப் புரட்சி ஏதுமின்றி, முற்றிலும் அமைதியான ஜனநாயக வழியில் தேர்தல் மூலம்
வெற்றி பெற்று சோசலிச அரசாங்கத்தை அஜெண்டே அமைத்ததைத்தான் குஸ்மன் இவ்வாறு கூறுகிறார்.
இளம் வயதிலிருந்தே விண்ணாய்வியலில் <i>(astrology)</i> ஆர்வம் கொண்டிருந்த குஸ்மனுக்கு,
சோசலிச அரசாங்கம் இருந்த நாள்களில் ஜெர்மனி முதலிய நாடுகளிலிருந்து
விண்ணாய்வியல் ஆராய்ச்சியாளர்களும் அறிவியலாளர்களும் சிலிக்கு வரத் தொடங்கியது பெரும்
உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தந்திருக்கிறது. உலகில் ஈரப்பதம் முற்றிலுமில்லாத
ஒரே ஒரு பாலைவனமான அடகானா <i>(Atacana),</i> சிலியில்தான் உள்ளது. மிகப்பெரும் தொலைநோக்கிகளை <i>(giant telescopes)</i> நிறுவி, அவற்றின் வழியாக விண் வெளியிலுள்ள கோளங்களையும்
நட்சத்திரங்களையும் பார்ப்பதற்கும் அவற்றின் இயக்கத்தையும் செயல்பாடு களையும் தெரிந்துகொள்வதற்கும்
உகந்த இடம் அந்தப் பாலைவனப் பகுதிதான்.</span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">
இந்தத் திரைப்படத்தில் குஸ்மன் நமக்கு அறிமுகப்படுத்தும் விண்ணாய்வு அறிவியலாளர் காஸ்பர்
கலாஸ் <i>(Gasper Galaz)</i> நமது புவிக்கோளும் மனித ராசிகளும் தோன்றியது எவ்வாறு
என்பதையும், நமது பூர்வாங்கம் என்ன என்பதையும் அறிந்துகொள்ள கடந்தகாலத்தைப் பார்க்கும்
முறைகளிலொன்றே விண்ணாய்வியல் என்றும், நிகழ்காலத்தில் நாம் இப்போது பார்க்கும் சூரிய
ஒளியும் நட்சத்திர ஒளியும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அந்தந்த இடங்களிலிருந்து
புறப்பட்டவையாக இருப்பதால் நாம் இந்தக் கணத்தில் ஒரு வகையில் கடந்தகாலத்தில்தான் வாழ்கிறோம்
என்றும் கூறுகிறார், அறிவியல் பல கேள்விகளுக்கு விடை தேடுகிறது, ஆனால் கிடைக்கும்
விடைகளைவிட புதிதாகத் தோன்றும் கேள்விகளே அதிகம் என்றும் கூறுகிறார். இந்தத் திரைப்படம்
அறிமுகப்படுத்தும் தொல்லியல் ஆராய்ச்சியாளர் லாடாரோ நுனெஸ் <i>(Lautaro Nunez)</i>,
விண்ணாய்வாளர்கள், தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் ஆகிய இருவருமே, நிகழ்காலத்தில் கிடைக்கும்
மிக சொற்பமான ‘எச்சங்களை’ வைத்துக்கொண்டுதான் கடந்தகாலத்தை மீளமைப்புச் செய்ய வேண்டியுள்ளது
என்று கூறுகிறார்.<br />
<br />
பினோஷாவின் பாசிச ஆட்சியின் கீழ் நடந்த கொடூரமான மனித உரிமை மீறல்கள், கொலைகள் முதலியனவற்றில்
பெரும்பாலானவை சுவடுகளே இல்லாமல் செய்யப் பட்டிருந்தன. அந்த ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு
சிலியில் ஜனநாயக ஆட்சி திரும்பி வந்த பிறகு, பல்லாயிரக்கணக்கான மக்கள், ‘காணாமல் போன’தாகவோ,
கொலை செய்யப் பட்டதாகவோ சொல்லப்பட்ட தங்கள் குடும்ப உறுப்பினர்களையும், உற்றார் உறவினர்களையும்
தேடிக் கண்டுபிடிக்கவோ, குறைந்தபட்சம் அவர்களது எச்சங்களையாவது கண்டறியவோ முயன்றனர்.
பாசிஸ்டுகளால் கைது செய்யப்பட்டவர்களில் ஆயிரக் கணக்கானோர் அடகானோ பாலைவனத்திற்குக்
கொண்டு செல்லப்பட்டு கொல்லப்பட்டிருக்கின்றனர். அந்தக் கொடிய பாலைவனத்தில் சிதறிக்கிடக்கும்
மனித எச்சங்களில் தமது உற்றார் உறவினர்களின் எலும்புகளையும் மண்டையோடுகளையும் தேடித்
திரியும் பெண்களைக் காட்டுகிறது குஸ்மனின் திரைப்படம்.<br />
<br />
அடகானா பாலைவனத்தில் இருந்த எலும்புகளையும் மண்டையோடுகளையும் கொண்டு பாசிசத்திற்குப்
பலியானவர்களின் அடையாளங்களை நிறுவியவர்கள் ‘பாக்கியசாலிகள்’ என்றால், சிலியின்
தலைநகரம் ஸாண்டியாகோவிலேயே கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களை முழுமையாகவோ, சிதைவுற்ற
நிலையிலோ பார்க்கவும் அவற்றை மீட்டுக் கொணர்ந்து உரிய மரியாதையுடன் புதைக்கும்
வாய்ப்புப் பெற்றவர்களோ ‘ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்’. <br />
<br />
அப்படி ‘ஆசிர்வதிக்கப்பட்டவர்க’ளிலொருவர்தாம் ஜோன் ஹாரா (Joan Jara) தமது
கணவரைக் கொலை செய்தவர்கள், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள், ஆணை பிறப்பித்தவர்கள்
ஆகியோரைக் கண்டறிந்து, சட்டத்தின் முன்நிறுத்தி, நீதியை நிலைநாட்ட ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்
காலம் போராடி வருகின்றவர். இருபதாம் நூற்றண்டு தோற்றுவித்த இலத்தின் அமெரிக்க இசைக்கலைஞர்களில்,
மிகப் புரட்சிகரமானவராக, இடதுசாரி செயல்வீரராக, களப்பணியாளாராக வாழ்ந்து மடிந்த விக்டர்
ஹாராவின் (Victor Ludio Jara Martinez) துணைவியார்தாம்
அவர்.<br />
<br />
1932 செப்டமர் 23இல் சிலியிலுள்ள லோன்குவென் என்னும் நகரத்துக்கு அருகிலுள்ள பெருந்தோட்டமொன்றில்
கூலித்தொழிலாளர்களாக, சொற்ப வருமானத்தோடு வாழ்ந்துவந்த பெற்றோர்களுக்குப் பிறந்த விக்டர்,
தமது ஆறாம் வயதிலிருந்தே தமது அண்ணனோடு சேர்ந்து விறகு பொறுக்குதல், விறகுக்காக சிறு
மரங்களை வெட்டுதல், வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த பன்றிகளுக்காகப் புல் சேகரித்தல்
போன்ற உடலுழைப்பில் ஈடுபடுத்தப்பட்டார். அவரது குடிகாரத் தந்தை தமது மனைவியை வாய்க்கு
வந்தபடி திட்டுவார்; நையப் புடைப்பார். அந்த அம்மையார், விக்டரின் தாயார் அமந்தா, காட்டில்
மூலிகைகளைச் சேகரித்து வந்து விற்பது வழக்கம். வீட்டுச்செலவுக்கு அதுவும் போதாததாக
இருந்ததால், அவர்களது வீட்டின் ஓர் அறை வாடகைக்கு விடப்பட்டது. அதை வாடகைக்கு எடுத்திருந்த
பள்ளி ஆசிரியரொருவர் கிதார் வாசிப்பதுண்டு. அவரிடமிருந்துதான் கிதார் இசையின் தொடக்கப்பாடங்கள்
விக்டருக்குக் கிடைத்தன. அவரது தாயாரும் கிதார் இசைத்துக்கொண்டு நாட்டார் பாடல்கள்
பாடுவதுண்டு. தமது இளமைக்கால நினைவுகளில் மிகவும் பசுமையாக இருப்பவை தாயார் பாடிய
பாடல்கள்தாம் என்று விக்டர் சொல்வதுண்டு. <br />
<br />
அந்தக் குடும்பத்தை வறுமை பிடுங்கித் தின்று கொண்டிருந்த போதிலும் தமது குழந்தைகள்
எப்படியேனும் கல்வியறிவு பெறவேண்டும் என்பதில் உறுதியாக இருந்த அமந்தா, குடிகாரக் கணவரை
விட்டொழித்துவிட்டுக் குழந்தைகளுடன் ஸான்டியாகோ நகருக்கு வந்து, சிறிய உணவு விடுதியொன்றில்
வேலை செய்யத் தொடங்கினார். வறியவர்களும் போக்கிரிகளும் நிறைந்த தெருவொன்றில் அவர்கள்
வாழ்ந்தபோதிலும், அங்கிருந்த இரைச்சலையும் சண்டை சச்சரவுகளையும் பொருட்படுத்தாமல்
விக்டரும் அவரது அண்ணன் லாலோவும் கத்தோலிக்கப் பள்ளியொன்றில் சேர்ந்து ஒழுங்காகப் படித்துவந்தனர்.
அண்டைப் பகுதியிலிருந்த ஒருவர், கிதார் இசைப்பதில் விக்டருக்கு இருந்த ஆர்வம், சொந்தமாக புதிய மெட்டுகள் அமைப்பதில் அவர் வெளிப்படுத்திய திறன் ஆகியவற்றைக் கண்டு வியந்து
கிதார் இசையை முறைப்படி கற்றுக்கொடுக்கத் தொடங்கினார்.<br />
<br />
</span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhS5uGGytxTBAq2j1LaTEeSSaVLrEguJ_2JXbnYIuPyZe3iMy84hsmInzMWCWnH8Z66MynzAgSMhI3_-j6n7IuUkx2pad59nSOLTYYTHg4dKusDcuYfLB0bqTBZyXxINRR_7x5rqQnGYrlZ/s1600/tumblr_m1zgc77nD41r861s1o1_500.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="218" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhS5uGGytxTBAq2j1LaTEeSSaVLrEguJ_2JXbnYIuPyZe3iMy84hsmInzMWCWnH8Z66MynzAgSMhI3_-j6n7IuUkx2pad59nSOLTYYTHg4dKusDcuYfLB0bqTBZyXxINRR_7x5rqQnGYrlZ/s320/tumblr_m1zgc77nD41r861s1o1_500.jpg" width="320" /></a></span></div>
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">நாள் முழுக்க வெவ்வேறு வேலைகளைச் செய்து வந்த அமந்தா, விக்டரின் பதினைந்தாவது
வயதில் இறந்துவிட்டார். ஏதிலியாக்கப்பட்ட விக்டருக்கு உதவி செய்ய முன்வந்த கத்தோலிக்கப்
பாதிரியாரொருவர், அவரை இறையியல் பள்ளியில் சேர்த்துவிட்டார். “மானுடப்பரிவு இல்லாமல் போன
நிலையை ஈடு செய்யக்கூடியதாக உள்ள வேறுவகையான, மேலும் ஆழமான அன்பு கிடைக்கக்கூடும்”
என்னும் நம்பிக்கையைத் தாம் அப்போது இழக்கவில்லை என்று அவர் பின்னாளில் ஜோனிடம் கூறியிருக்கிறார்.
அந்த இறையியல் பள்ளியில் இசைக்குப் பஞ்சமிருக்கவில்லை. விக்டர் அதனை இரசித்தார். அங்கு
பாடவும் செய்தார். பாதிரியாவதற்குப் பயிற்றுவிக்கப்படும் மாணவர்களிடம் பாலிச்சை தோன்றுமானால், அதற்காக அவர்கள் பாவ மன்னிப்புக் கேட்கவேண்டும். அந்த ஆசையைத் தணிப்பதற்காகக்
கடுங்குளிர் காலத்திலும் குளிர்நீரில் குளிக்கவேண்டும். பிரம்மச்சரியம் பூணுவதையோ,
பாதிரிகளுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவதிலோ சிறிதும் விருப்பம்
கொண்டிராத விக்டர், அந்தப் பள்ளி ஆசிரியர்களின் ஒப்புதலுடன் அங்கிருந்து வெளியேறினார்.
பத்து நாட்களுக்குப் பிறகு சிலியின் இராணுவத்தில் சேர்க்கப்பட்ட அவர், அங்கு மிகச்
சிறப்பாகப் பணியாற்றி முதல்நிலை சார்ஜென்ட் பதவிக்கு உயர்த்தப்பட்டார். தலைமை தாங்கும்
ஆற்றலும் இராணுவ அதிகாரியாவதற்கான தகுதியும் பெற்றவர் என்னும் பாராட்டுகளைப் பெற்றார்.
<br />
<br />
உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த தம்மைப் போன்றோர் இராணுவத்தின் ஓர் அங்கமாக இருக்கையில்,
அது எவ்வாறு அவர்களது உலகக் கண்ணோட்டத்தை, சக மனிதர்கள் பற்றிய பார்வையை மாற்றியமைக்கிறது
என்பதைத் தாம் கொல்லப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன் கொடுத்த நேர்காணலொன்றில் கூறினார்:
“தொழில்முறையிலான படைவீரன், சீருடை அணிந்தவன் என்பதாலும், படைப்பிரிவிலுள்ள மற்றவர்களை
விடக் கூடுதலான அதிகாரம் கொண்டிருப்பவன் என்பதாலும், தனது சொந்த வர்க்கத்தின்
உணர்வை இழந்துவிடுகிறான். ஆணையிடுவதற்குப் பழகிப்போன அவன், தன்னை வேறொரு நிலையில்
வைத்துக்கொண்டு, வாழ்க்கையை வேறொரு கண்ணோட்டத்திலிருந்து பார்க்கின்றான். அவன் தன்னை
மற்றவர்களுக்கு மேலானவன் என்று கருதுகிறான். தலைமுடியை மழித்துக்கொண்ட படைவீரனாக இருந்த
நான், ஓர் அதிகாரியின் பூட்ஸுகளுக்குப் பாலிஷ் போட வேண்டியிருந்ததையும் அவரது வீட்டைத்
துப்புரவு செய்ய வேண்டியிருந்ததையும் நினைத்துப் பார்க்கிறேன். அது இயல்பானதொன்றுதான்
என்று அப்போது நினைத்தேன்...உண்மையில் அப்படிப்பட்ட வேலைகளைச் செய்ய அழைக்கப்படுவது
எனக்குக் கிடைத்த சிறப்புரிமை என்றும் கருதினேன். காரணம், மிகுந்த கட்டுப்பாடு உள்ள,
கொடுத்த வேலையைச் சரியாகச் செய்யக்கூடியவன் என்ற நம்பிக்கையை நான் பெற்றிருந்ததுதான்.
ஆனால், வெகுளித்தனம் ஏதுமின்றி அதை இப்போது மீண்டும் பார்க்கையில், ஒரு விஷயத்தைப்
புரிந்துகொள்கிறேன், அதாவது படைவீரனின் அடிமைத்தனத்தையும் அதிகாரியின் மேம்பட்ட நிலையையும்
வடிவமைக்கக்கூடிய ஒன்று அது என்று இப்போது அறிந்துகொள்கிறேன்”.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br />
இராணுவத்தில் பணியாற்றுவதற்கான காலம் முடிந்ததும் வெளியே வந்த அவர் சிறிதுகாலம் எவ்விதக்
குறிக்கோளுமின்றி அலைந்து கொண்டிருந்தார். நண்பர்களின் வீடுகளில் தங்கி மருத்துவமனையொன்றில்
பணியாளாக வேலை செய்துகொண்டிருந்தார். பத்திரிகைகளில் வெளிவந்த விளம்பரமொன்றைப் படித்த
அவர், சிலி பல்கலைக்கழகத்தில் இருந்த ஓர் இசைக் குழுவில் சேர்வதற்கு விண்ணப்பித்தார்.
குரல்வளத்தைக் கண்டறிவதற்கு நடத்தப்பட்ட தேர்வில் வெற்றிபெற்ற அவர், 20ஆம் நூற்றாண்டின்
புகழ்பெற்ற ஐரோப்பிய செவ்வியல் இசைப்படைப்பாளி கார்ல் ஓர்ஃப் (Carl Orff)
படைத்த இசை நாடகமொன்றில் கத்தோலிக்கத் துறவியாக நடித்தும் பாடியும் பாராட்டுப்
பெற்றார். அந்த இசைக் குழுவைச் சேர்ந்த பலரது நட்பைப் பெற்று, அவர்களுடன் சேர்ந்து,
சிலியின் வடபகுதிக்குப் பயணம் சென்று நாட்டார் இசையைக் கற்கத் தொடங்கினார். அப்போது
அவர் அணிந்திருந்த ஆடைகள் கிட்டத்தட்ட அனைத்தும் அவர் சேர்ந்திருந்த இசைக்குழுவிலிருந்த
நல்ல நண்பர் ஒருவர் தந்த ஆடைகள் தாம். சிலி பல்கலைக்கழகத்தின் நாடகக்குழுவில் சேர்வதற்கு
விண்ணப்பிக்குமாறு ஹாராவை ஊக்குவித்தவரும் அந்த நண்பர்தாம்.<br />
<br />
நாடகக்குழுவில் சேர்ப்பதற்கான தகுதித்தேர்வின் போது, ஹாராவால் வசனங்களை சரியாக ஒப்பிக்க
முடியவில்லை என்றாலும் அவரது அங்க அசைவுகள் தேர்வுக்குழுவினரை ஈர்த்ததால், நாடகத்துறைப்
படிப்பிற்குச் சேர்க்கப்பட்டு உதவித்தொகையும் வழங்கப்பட்டார். பல் வேறு நாடகங்களில்
நடித்த அவர், மெல்லமெல்ல சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்ட நாடகங்க ளில் பெரும் ஈடுபாடு
கொள்ளத் தொடங்கினார். அப்போது அவர் நடித்த நாடகங்களிலொன்று, சமுதாயத்தின் அடித்தட்டு மக்களைப் பற்றி மாக்ஸிம் கார்க்கி எழுதிய ‘அதலபாதாளங்கள்’ (Lower Depths). பின்னர் அவரே பல நாடகங்களை இயக்கி மேடையேற்றத் தொடங்கினார். <br />
<br />
1950களின் இறுதியில் ஹாரா, தமது வாழ்க்கையில் மிகப் பெரும் திருப்பங்களையும் மாற்றங்களையும்
ஏற்படுத்திய இரு பெண்களைச் சந்திந்தார். ஒருவர் ஜோன் டேர்னர் பன்ஸ்டர் (Joan Turner Bunster). இங்கிலாந்தைச் சேர்ந்த வரும் நடனக் கலைஞருமான ஜோன், சிலி நாட்டைச்
சேர்ந்த பாலெ நடனக்கலைஞரொருவரைத் திருமணம் செய்து கொண்டு, ஸான்டியாகோவில் நடன ஆசிரியராகப்
பணிபுரிந்து வந்தார். அவரிடம் நடனம் கற்றுக்கொள்ளச் சென்ற ஹாரா காட்டிய மரியாதையைத்
திருப்பிச் செலுத்தும் முகமாக, ஹாரா இயக்கிய நாடகமொன்றைப் பார்க்கச் சென்ற ஜோன் பின்னர்
எழுதினார்: “அதுதான் சிலியில் நான் பார்த்த முதல் நேர்மையான நாடகம். அவரது நாடகம் வெளிப்படுத்திய
யதார்த்தம் சிலியின் யதார்த்தம்தான். வெளியிலிருந்து இறக்குமதி செய்யப் பட்ட யதார்த்தம்
அல்ல”. ஹாராவைச் சந்தித்தப் பிறகு தமக்குள் ஏற்பட்ட மாற்றத்தை ஜோன் பதிவு செய்துள்
ளார்: “நான் விக்டரைச் சந்தித்த போது, மிகவும் சிறிய உலகத்தில், அதாவது நாட்டிய உலகத்தில்,
அடைபட்டுக் கிடந்தேன். அவர்தாம் என்னை அதிலிருந்து உலகத்திற்குக் கொண்டு சென்றார்.
என்னை விஷயங்களைத் தொடவும், பார்க்கவும், உணரவும் வைத்தவர் அவர்தாம். அப்போதுதான் சிலியைப்
பற்றி முதன்முதலாகப் புரிந்துகொண்டேன்”. இருவருக்கும் ஏற்பட்ட நட்பு காதலாக வளர்ச்சியடைய,
ஜோன் தமது முதல் கணவரிடமிருந்து மணவிலக்குப் பெற்று ஹாராவை மணம் புரிந்துகொண்டார்.
முதல் கணவருக்குப் பிறந்த மேன்யுவெலா, ஹாராவுக்குப் பிறந்த அமந்தா (ஹாராவின் தாயாரின்
பெயரும் இதுதான்) ஆகிய இரு பெண் குழந்தைகளும் ஜோன்- விக்டர் ஹாரா இணையருடனேயே வாழ்ந்தனர்.
<br />
<br />
தமது மகள் அமந்தாவுக்கு இளம் வயதிலேயே குணப்படுத்த முடியாத நீரிழிவு நோய் கண்டுவிட்டதை
அறிந்த ஹாரா, அந்த அதிர்ச்சியை மிக எளிதாகக் கடந்து வந்தார் -‘அமந்தா, உன்னை நினைக்கிறேன்’ <span style="font-family: "arial unicode ms" , "sans-serif";">(Te Recuerdo Amanda)1</span> என்னும் பாடலை இயற்றியதன் மூலம். அந்தப் பாடலை
அவர் தமது மகளுக்கு அர்ப்பணித்த போதிலும், அது அந்தச் சிறுமியைப் பற்றிய பாடலோ, நீரிழிவு
நோய் பற்றியதோ அல்ல. மாறாக, தொழிலாளி வர்க்கப் பெண்களின் உருவகமாக ஹாரா பயன்படுத்திய
அமந்தா என்னும் பெண்ணைப் பற்றிய பாட்டு:<br /> </span><br />
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">அமந்தாவை நினைக்கின்றேன்<br />
ஈரமான தெரு<br />
மேன்யுவெல் வேலை செய்து வந்த<br />
தொழிற்சாலைக்கு ஓடிக்கொண்டிருக்கிறாள்<br />
விரிந்த புன்னகை, தலைமுடியில் மழை நீர்<br />
எதுவும் உனக்கு ஒரு பொருட்டல்ல<br />
ஏனெனில் விரைவில் அவனுடன் சேர்ந்துவிடுவாய்<br />
உனக்குக் கிடைத்துள்ளன ஐந்து நிமிடங்கள் <br />
வாழ்க்கை முழுவதுமே அந்த ஐந்து நிமிடங்களில்.<br />
<br />
வேலைக்குத் திரும்பிச் செல்ல அழைக்கும் சங்கொலி<br />
நீ நடந்து கொண்டிருக்கிறாய்<br />
எல்லாவற்றையும் மேலும் ஒளிமிக்கதாய்ச் செய்துகொண்டு<br />
அந்த ஐந்து நிமிடங்கள் உன்னை மலர வைக்கின்றன<br />
ஐந்து நிமிடங்களுக்கும் கூடுதலான நேரத்தை<br />
அமந்தாவுடன் கழிப்பதற்காக<br />
மேன்யுவெல் மலைகளுக்குத் திரும்பிச் செல்கிறான்<br />
தொழிலாளர்களின் உரிமைகளுக்காக<br />
மற்றவர்களுடன் சேர்ந்து போரிட.<br />
ஐந்து நிமிடங்களுக்குப் பின் கொல்லப்பட்டான்<br />
வேலைக்குத் திரும்பிச் செல்ல அழைக்கும் சங்கொலி<br />
பலர் திரும்பி வரவில்லை, மேன்யுவெலும்தான்.<br />
<br />
ஹாராவின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய மற்றொரு பெண்மணி தென்னமெரிக்காவின்
மிகப் புகழ்பெற்ற பாடகரான வயலெட்டா பர்ரா <span style="font-family: "arial unicode ms" , "sans-serif";">(Violeta Parra)</span>. தென்னமெரிக்காவின்,
குறிப்பாக சிலியின், மரபான நாட்டார் இசை வடிவங்களில் நவீன பாடல் களை இணைத்து
இசையமைக்கும் மரபை உண்டாக்கியவர்களின் முன்னோடியான வயலெட்டாவின் இசை நிகழ்ச்சியை சாண்டியாகோ
நகர உணவு விடுதியொன் றில் 1957இல் முதன்முதலாகக் கேட்கும் வாய்ப்புப் பெற்றார் ஹாரா.
நவீனகால சிலி மக்களின் அன்றாட வாழ்க்கை அனுபவங்களுடன் நாட்டார் இசை மரபை இணைத்து சிலியின்
பல்வேறு இடங்களில் இசை மையங்களை உருவாக்கிய வயலெட்டிடமிருந்து உள் உந்துதல் பெற்ற ஹாரா,
சிலியின் நாட்டார் இசை மரபை ஆழமாகக் கற்கத் தொடங்கியதுடன் ‘குன்குமென்’ என்னும் நாட்டார்
இசைக் குழுவில் இணைந்தார். <br />
<br />
வயலெட்டா பர்ரா அறிவொளிமிக்க, கற்றறிந்தவர்களும் இசையில் நாட்டம் கொண்டிருந்தவர்களுமடங்கிய
ஓர் இசைக்குடும்பத்தில் பிறந்தவர். அவர் எழுதி, மெட்ட மைத்துப் பாடிய பல பாடல்கள் இன்றும்
தென், வட அமெரிக்காவில் மட்டுமின்றி, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், ஃபிலிப்பைன்ஸ், தென்
கொரியா போன்ற ஆசிய நாடுகள் முதலியவற்றிலும் பல்வேறு பாடகர்களால் பாடப்பட்டு வருகின்றன.
இவற்றில் மிகச் சிறப் பானதாகக் கருதப்படுவது ‘வாழ்க்கையே உனக்கு நன்றி’ என்னும் பாடல்2
:</span><br />
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br />
எனக்கு எத்தனையோ கொடுத்த வாழ்க்கைக்கு நன்றி<br />
அது எனக்கு இரண்டு ஒளிக்கதிர்களைத் தந்தது<br />
அவை திறக்கையில் கறுப்பு எது, வெள்ளை எது எனத்<br />
துல்லியமாக அடையாளங் காண முடியும்<br />
மேலே கவிந்துள்ள வான்வெளியின் <br />
நட்சத்திர மண்டலத்தையும் <br />
மக்கள் திரளினரிடையே<br />
நான் காதலிக்கும் அவரையும்.<br />
<br />
எனக்கு எத்தனையோ கொடுத்த வாழ்க்கைக்கு நன்றி.<br />
எனக்கு அது ஒரு காதைக் கொடுத்துள்ளது<br />
அந்தக் காது தனது அகலம் முழுவதையும் விரித்து<br />
இரவும் பகலும் சில்வண்டுகளையும் <br />
பாடும் பறவைகளையும்,<br />
சம்மட்டிகளையும் விசையாழிகளையும்<br />
செங்கல்களையும் புயல்களையும் பதிவு செய்கின்றது <br />
கூடவே எனது நேசத்துக்குரியவரின் <br />
மென்மையான குரலையும்.<br />
<br />
எனக்கு எத்தனையோ கொடுத்த வாழ்க்கைக்கு நன்றி<br />
எனக்கு அது ஒலிகளையும் <br />
அகரவரிசைகளையும் தந்துள்ளது<br />
அவற்றைக் கொண்டு நான் சிந்தித்து அறிவிக்கிறேன்:<br />
‘அம்மா’, ‘ நண்பர்’, ‘சகோதரர்’ என்னும் சொற்களை<br />
ஒளிரும் வெளிச்சத்தையும்<br />
காதல் வெளிப்படும் ஆன்மாவின் மார்க்கத்தையும்.<br />
<br />
எனக்கு எத்தனையோ கொடுத்த வாழ்க்கைக்கு நன்றி<br />
களைத்துப்போன எனது கால்களுடன்<br />
நடப்பதற்கான ஆற்றலை அது தந்தது.<br />
அவற்றைக் கொண்டு நகரங்களுக்கும் குட்டைகளுக்கும்<br />
பள்ளத்தாக்குகளுக்கும் பாலவனங்களுக்கும்<br />
மலைகளுக்கும் சமவெளிகளுக்கும்<br />
உங்கள் வீட்டுக்கும் உங்கள் தெருவுக்கும் <br />
உங்கள் முற்றத்துக்கும்<br />
ஊடாகச் சென்றுள்ளேன்.<br />
எனக்கு எத்தனையோ கொடுத்த வாழ்க்கைக்கு நன்றி <br />
அது எனக்கு ஓர் இதயத்தைத் தந்தது<br />
அந்த இதயம் என் உடலை அதிர்வுறச் செய்கின்றது<br />
மானுட மூளையின் விளைபொருளை நான் பார்க்கையில்,<br />
தீயதிலிருந்து மிகவும் விலகியுள்ள நல்லதை நான் பார்க்கையில்,<br />
உனது கண்களின் தெளிவுக்குள் நான் பார்க்கையில்...<br />
<br />
எனக்கு எத்தனையோ கொடுத்த வாழ்க்கைக்கு நன்றி <br />
அது எனக்கு சிரிப்பைத் தந்தது <br />
அது எனக்கு ஏங்கித் தவிக்கும் வேட்கையைத் தந்தது<br />
அவற்றைக் கொண்டு <br />
மகிழ்ச்சியையும் வேதனையையும் வேறுபடுத்துகிறேன்- <br />
இவைதாம் எனது பாட்டுகளை<br />
உங்கள் பாட்டையும்- அதுவும் அதே பாட்டுதான் <br />
ஒவ்வொருவரின் பாட்டையும் - அது எனது பாட்டேதான்<br />
கட்டுவதற்கான இரண்டு பொருள்கள். <br />
<br />
</span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4-_wDFk8TPX4OqjbXgTfX79MIRcXjQq4ZY5Hvp_-aeXuqGNh6v0zb0rtOs6huGKIl_IPH4-Wg49BtR6aWNShWUmFbacr2hvvneOOkz3KyuXjDoRM8WBZqxRe__9EEWTUwF5QFAngrGoIT/s1600/ep001613_1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4-_wDFk8TPX4OqjbXgTfX79MIRcXjQq4ZY5Hvp_-aeXuqGNh6v0zb0rtOs6huGKIl_IPH4-Wg49BtR6aWNShWUmFbacr2hvvneOOkz3KyuXjDoRM8WBZqxRe__9EEWTUwF5QFAngrGoIT/s320/ep001613_1.jpg" width="208" /></a></span></div>
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">பாப்லோ நெரூடா போன்ற முற்போக்குக் கலைஞர்களுடன் தொடர்புகொண்டிருந்த வயலெட்டா தாம்
அமைத்த இசை மையங்கள், சிலியின் நாட்டார் இசை மரபை வளர்ப்பதற்கும் அரசியல் பிரச்சினைகளை
விவாதிப்பதற்குமான களங்களாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். இரயில் எஞ்சின் ஓட்டுநராகப்
பணிபுரிந்த லூயி ஸெரெஸேடா என்பவரைத் திருமணம் செய்து கொண்ட அவருக்கு இஸபெல்,
ஏஞ்செல் என இரு குழந்தைகள். அவரது கணவர் போராட்டக் குணமிக்க கம்யூனிஸ்ட். வயலெட்டாவுமே
சிலியின் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புகொண்டிருந்தார். 1944ஆம் ஆண்டு நடந்த
குடியரசுத்தலைவர் தேர்தலில் இடதுசாரி வேட்பாளரை ஆதரித்து வேலை செய்தார். அவருடைய பிள்ளைகளான ஏஞ்செல், இஸபெல் இருவருமே வயலெட்டின் இசைச் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக நின்று
அவற்றைச் செழுமைப்படுத்தினர். வயலெட்டாவின் புகழ் ஐரோப்பாவுக்கும் பரவியது. அங்கும்
அவரது பாடல்கள் பதிவு செய்யப்பட்டு இசைத்தட்டுகளாக வெளிவந்தன. 1959இல் நோய்வாய்ப்பட்டு
படுத்த படுக்கையாக இருக்க வேண்டியிருந்த அவர், ஓவியக்கலையிலும் பின்னல் வேலைகள் செய்வதிலும்
தமது திறமையை வெளிப்படுத்தினார். ஆனால், அவர் புகழின் உச்சியில் இருந்தபோதுதான், என்ன
காரணத்தினாலோ கைத்துப்பாக்கியால் தலையில் குண்டைப் பாய்ச்சித் தற்கொலை
செய்துகொண்டார். <br />
<br />
வயலெட்டா பர்ரா இறந்தது ஒரு பிப்ரவரி 5இல். அதை நினைவுகூர்ந்து, ‘நாள்களின் குழந்தைகள்:
மானுட வரலாற்றின் நாள்காட்டி’ <span style="font-size: small;"><i><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; line-height: 115%;">(Children of the Days: A Calendar of Human
History )</span></i></span> என்னும் புத்தகத்தில் எடுவர்டோ கலியனோ ‘இரண்டு
குரல்களில்’ என்னும் தலைப்பில் எழுதுகிறார்:</span><br />
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br />
அவர்கள் இருவரும் ஒன்றாக வளர்ந்தனர்,<br />
கிதாரும் வயலெட்டா பர்ராவும்<br />
ஒருவர் அழைத்தால் மற்றொருவர் வருவார்<br />
கிதாரும் அவரும் ஒன்றாகச் சிரித்தனர், ஒன்றாக அழுதனர்,<br />
ஒன்றாகச் சிந்தனையில் ஆழ்ந்தனர், <br />
ஒன்றாக நம்பிக்கை வைத்தனர்<br />
கிதாரின் நெஞ்சில் ஒரு துளை இருந்தது.<br />
அவருடைய உடலிலும்தான்<br />
1967இல் இந்த நாளில், கிதார் அழைத்தார்,<br />
வயலெட்டா வரவில்லை<br />
அப்போதும், அதன் பிறகு ஒருபோதும்.<br />
<br />
சிலி, ஆர்ஜென்டினா, பெரு போன்ற தென்னமெரிக்க நாடுகளில் ‘புதிய இசை' <span style="font-size: small;"><i><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; line-height: 115%;">(nueva
cancion)</span></i></span><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 18.0pt; line-height: 115%;"> </span>
என்னும் போக்கு உருவாவதில் வயலெட்டுடன் சேர்ந்து முக்கியப் பாத்திரம்<span style="font-family: "arial unicode ms" , "sans-serif";"> </span>வகித்தவர் அர்ஜென்டினா
நாட்டைச் சேர்ந்த அடாஹுவால்பா யுபான்குய் <span style="font-size: x-small;"> </span><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 18.0pt; line-height: 115%;"><span style="font-size: x-small;">(Atahulpa Yupanqui)</span> </span> என்னும் இசைக்கலைஞர். உலகப் புகழ்பெற்ற கவிஞர் பாப்லோ நெரூடாவுக்கும் இதில் பங்கிருந்தது.
இலத்தின் அமெரிக்க ‘புதிய இசை'யின் சிறப்பியல்புகளிலொன்று, அந்தக் கண்டத்தின்- குறிப்பாக
ஆண்டெஸ் மலைப்பகுதி களைச் சேர்ந்த மக்களின் - இசை பாணிகளையும் இசைக் கருவிகளையும் பயன்படுத்திக்
கொண்டதாகும். அந்தக் கருவிகளில் முக்கியமானவை (1) சராங்கோ (charango<span style="font-family: "arial unicode ms" , "sans-serif";">)</span>;
சிறு கிதார் போன்ற தோற்றத்தைக் கொண்ட இந்த நரம்பிசைக் கருவி; முன்பு அது தென்னமெரிக்காவில்
காணப்படும் சிறு விலங்கான ஆர்மிடெல்லோவின் ஓடு களைக் கொண்டு உருவாக்கப்பட்டு வந்தது.
இப்போது பலவகையான மரங்கள், சுரைக்காயைப் போன்ற கால பாஷ் என்னும் காயின் குடுக்கைகள்
முதலியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றது. சராங்காவோவும் பாஸ் கிதாரும் (கீழ்
ஸ்தாயி கிதார்) சேர்ந்து இசைக்கும் இசை அற்புதமானது: (2) பொதுவாக ‘பான் பைப்' என்று
அறி யப்படும் ஸாம்போனா (Zampona). அது, துளையிடப்பட்ட பல நாணல் குச்சிகளை ஒன்றாகக்
கட்டி வைத்திருப்பது போன்ற தோற்றம் கொண்டது; (3) கினா (quena<span style="font-family: "arial unicode ms" , "sans-serif";">)</span> என்னும் புல்லாங்குழல்
வகை; (4) பாலொ டி ல்லூவியா (Palo de Ilavia) என்று சொல்லப்படும் மழைக்குச்சி
(Rain Stick). இது ஒருவகைக் கள்ளிச்செடியின் குச்சிக்குள் சிறுசிறு கற்களைப்
போட்டு அந்தக் குச்சியின் இரு முனைகளையும் அடைத்துவிட்டு உருவாக்கப்படுவது (ஒரு வகை
கிலுகிலுப்பை); (5) உன்யாஸ் (Unas). ஆட்டுக் குளம்புகளைக் காயவைத்து அவற்றைத்
துணியிலோ, தோல் வாரிலோ வைத்துத் தைத்து உருவாக்கப்படுவது; (6) போம்போ (<span style="font-family: "arial unicode ms" , "sans-serif";">Bomboo</span>).
இது கீழ் ஸ்தாயியில் இசைக் கப்படும் தோலிசைக் கருவி. இதைத் தூக்கி வைத்துக் கொண்டோ,
உட்கார்ந்துகொண்டோ இசைக்கலாம்.<br />
<br />
இந்த நாட்டாரிசைக் கருவிகளுடன் ஐரோப்பிய நவீனக் கருவிகளும் ‘புதிய ‘இசை' குழுவினரால்
பயன்படுத்தப் பட்டன. நாளாவட்டத்தில் ‘புதிய இசை'ப் போக்கு, பெரு நாட்டின் நகர்ப்புற
கறுப்பின மக்களின் இசை, வட அமெரிக்க நாட்டார் இசை, ராக், ஜாஸ், கருங் கடற்கரைத் தீவுகளின்
இசை மரபு, ஆப்பிரிக்க இசை, ஏன் ஐரோப்பிய செவ்வியல் இசை ஆகியவற்றின் தாக்கத்தையும் பெற்றது.
<br />
<br />
இலத்தின் அமெரிக்காவில் ‘புதிய இசை' போக்கினைப் பின்பற்றிய தனிப்பட்ட இசைக் கலைஞர்கள்,
இசைக் குழுவினர் பெரும்பாலோர் சமூக உணர்வையும் அரசியல் உணர்வையும் கொண்டிருந்தனர்.
கியூபாவின் ஸில் வியோ ரோட்ரிகெஸ், பிரேஸிலின் கில்பர்ட்டொ கில், சிலியின் விக்டர் ஹாரா
ஆகியோர் கிராமப்புற, நகர்ப்புற உழைக்கும் மக்கள் அனுபவிக்கும் ஒடுக்குமுறை, சுரண்டல்
ஆகியன பற்றியும் நம்பிக்கை தரும் எதிர்காலம் பற்றியும் பாடல்களை எழுதினர். இத்தகைய
பாடல்களை மிகுந்த உணர்ச்சியோடும் அர்த்தச் செறிவோடும் பாடிய வர்களிலொருவர் ஆர்ஜென்டினாவைச்
சேர்ந்த மெர்ஸெடெஸ் ஸோஸா <span style="font-size: x-small;"><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; line-height: 115%;">(Mercedes Sosa:1935-2009)</span></span></span><br />
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><span style="font-size: x-small;"><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; line-height: 115%;"> </span></span>
<br />
‘கறுப்புப் பெண்' என்றும் ‘குரலற்றவர்களின் குரல்' என் றும் அழைக்கப்பட்ட ஸோஸா, பிரெஞ்சுக்காரரொருவருக்கும் குவெய்சோ என்னும் பழங்குடியைச் சேர்ந்த அமெரிந்தியருக்கும் பிறந்த பெண்மணி.
வானொலி நிலையமொன்று ஏற்பாடு செய்திருந்த பாட்டுப்போட்டியில் 15ஆம் வயதில் முதல் பரிசைப்
பெற்ற ஸோஸா, அன்று முதல் பாடுவதையே தமது வாழ்க்கைச் செயலாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டார்.
ஸோஸாவின் உணர்ச்சிகரமான சமூக, அரசியல் உணர்வும் குரல்வளமும் இன்னிசையும் இந்தப் பாடல்களைப்
பொருள் செறிவுமிக்கவையாக்கின என்று இசை விமர்சகர்கள் கூறுகின்றனர். ‘உறங்கு உறங்கு
என் குட்டிக் கறுப்புச் செல்லமே’ (</span><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">Duerm<span style="font-family: "arial unicode ms" , "sans-serif";">e</span> <span style="font-family: "arial unicode ms" , "sans-serif";">Ne<span style="font-family: "arial unicode ms" , "sans-serif";">grito</span></span></span>) என்னும் தாலாட்டுப்
பாடல் அவர் பாடிய பாடல்களில் அற்புதமானது. வெனிசூலா- கொலம்பியா நாட்டெல்லையில் பாமர
உழைக்கும் மக்கள் பாடிவந்த இந்தத் தாலாட்டுப் பாடலைப் பதிவு செய்து அதற்கு அருமையான
இசை அமைத்தவர் அடாஹுவால்பா யுபான்குய் என்றால், அதை உலகெங்கும் பிரபல்யப்படுத்தியவர்கள்
விக்டர் ஹாரா, மெர்ஸெடெஸ் ஸோஸா, டேனியல் விலியெட்டி (Daniel Vi<span style="font-family: "arial unicode ms" , "sans-serif";">glietti<span style="font-family: "arial unicode ms" , "sans-serif";"></span></span>)
ஆகியோர். அண்டை வீடொன்றிலோ தனது குழந்தையை விட்டுவிட்டு மிகத் தொலைவிலுள்ள ஓரிடத்தில்
கூலி ஏதும் பெறாமல் கடினமாக உழைக்கச் செல்கின்ற ஒரு ஏழைத்தாயின் கதையைக் கூறுகிறது
இந்தத் தாலாட்டுப் பாட்டு. அண்டை வீட்டுப் பெண்மணி, அந்தக் குழந்தையை உறங்கச் செய்வதற்காகப் பாடுவதுபோல அமைக்கப்பட்டுள்ள இந்தத் தாலாட்டுப் பாட்டை மனம் கசிந்துருகும் வகையில்
பாடியுள்ளார் ஸோஸா. ‘</span><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><span style="font-family: "arial unicode ms" , "sans-serif";">Ne<span style="font-family: "arial unicode ms" , "sans-serif";">grito</span></span></span></span>’ என்பதற்கான நேரடியான பொருள் ‘கறுப்புப் பையன்’
என்றாலும், அதற்கு இங்கே ‘கறுப்புச் செல்லமே’ என்று அர்த்தப்படுத்திக் கொள்வது தான்
பொருத்தமாக இருக்கும். அந்தத் தாலாட்டுப் பாடலின் தமிழாக்கம்3:<br />
<br />
உறங்கு உறங்கு குட்டிக் கறுப்புச் செல்லமே<br />
உன் அம்மா வயலில், <br />
குட்டிக் கறுப்புச் செல்லமே <br />
உறங்கு உறங்கு மொபிலா<br />
குட்டிக் கறுப்புச் செல்லமே<br />
உனது அம்மா வயலில், மொபிலா<br />
அவள் உனக்குக் கௌதாரி கொண்டு வரப் போகிறாள்<br />
அவள் உனக்கு நல்ல பழம் கொண்டு வரப் போகிறாள்<br />
அவள் உனக்குப் பன்றிக்கறி கொண்டுவரப் போகிறாள்<br />
குட்டிக் கறுப்புச் செல்லம் உறங்காவிட்டால்</span><br />
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">வெள்ளைப் பிசாசு வந்துவிடும்<br />
உஷ்; அவன் உன் குட்டிக்காலைத் தின்றுவிடுவான்<br />
சகசபும்பா, சகசபும்பா,அகாபும்பா, சகசபும்பா<br />
உறங்கு, உறங்கு குட்டிக் கறுப்புச் செல்லமே<br />
உனது அம்மா வயலில், <br />
குட்டிக் கறுப்புச் செல்லமே.<br />
.<br />
கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறாள்<br />
(ஆமாம், உழைத்துக் கொண்டிருக்கிறாள்)<br />
உழைத்துக் கொண்டிருக்கிறாள், <br />
கூலி இல்லாமல் (ஆமாம், உழைத்துக் கொண்டிருக்கிறாள்)<br />
உழைத்துக் கொண்டிருக்கிறாள்<br />
இருமிக் கொண்டிருக்கிறாள் <br />
(ஆமாம், உழைத்துக் கொண்டிருக்கிறாள்)<br />
குட்டிக் கறுப்புச் செல்லத்திற்காக,<br />
இந்தக் குட்டிக்காக<br />
குட்டிக் கறுப்புச் செல்லத்திற்காக<br />
ஆமாம், உழைத்துக் கொண்டிருக்கிறாள்.<br />
<br />
இங்கு வெள்ளையர்கள் ‘பிசாசாக உருவகப்படுத்துவது கவனிக்கத்தக்கது. ‘சகசபும்பா, சகசபும்பா, அகாபும்பா,
சகசபும்பா’ - இவை தமிழ்த் தாலாட்டுப் பாட்டுகளில் உள்ள ‘ஆராரோ, ஆரீரரோ’ என்பன
போன்றவை. மிகக் கடினமான வாழ்க்கைச் சூழலிலும் தனது குழந்தைகளைத் திருப்திப்படுத்தும் ஒரு தாயின்
ஆற்றலை மாய வித்தைகளுடன் ஒப்பிடும் ‘எனது தாயின் கரங்கள்' என்னும் பாடலையும் ஸோஸா
பாடியுள்ளார். இவற்றை, ஸ்பானிய மொழி கற்காத நம்மைப் போன்றவர்களும் கேட்டு இரசிக்க
முடியும்.<br />
<br />
ஃபிடல் காஸ்ட்ரோ, செ குவாரா போன்ற இலத்தின் அமெரிக்கப் புரட்சியாளர்களைப் போற்றும்
பாடல்களை ஸோஸா இசையமைத்துப் பாடியுள்ளார்.<br />
<br />
நாட்டார் மரபில் ஹாரா இசையமைத்துப் பாடிய, கிராமப்புறங்களில் உழவர்களிடையே பிரபல்யம்
பெற்றிருந்த பாடல் ‘தளைகளை அறுப்போம்’ ( A disalamrar)4:<br />
<br />
இந்த நிலம் நமது நிலம்<br />
அதிகமாக வைத்திருப்போரின் நிலம் அல்ல<br />
என்பதை நீங்கள் ஒருபோதும் <br />
சிந்தித்திருக்கவில்லையா என்று<br />
இங்கு கூடியிருப்போர்களிடம் கேட்கிறேன்<br />
இது நமது நிலம், <br />
அதிகம் வைத்திருப்போரின் நிலம் அல்ல<br />
இந்த நிலத்தைப் பற்றி <br />
ஒருபோதும் நீங்கள் சிந்தித்திருக்கவில்லையென்றால்<br />
நான் கூறுவேன்<br />
கைகள் நம்முடையவை<br />
எனவே அவை கொடுத்தவைதான் நமது நிலமும்<br />
தளைகளை அறுப்போம், <br />
தளைகளை அறுப்போம்<br />
இது நமது நிலம், <br />
உங்கள் நிலம்,<br />
அவரது நிலம்<br />
பெட்ரோவின் நிலம்,<br />
மரியாவின் நிலம்,<br />
யுவானின் நிலம், <br />
யோஸெவின் நிலம்.<br />
எனது பாடல் ,<br />
அதைக் கேட்க விரும்பாத எவனுக்கோ <br />
தொல்லை கொடுக்கிறது என்றால்<br />
அவன் ஓர் அமெரிக்கன்<br />
அவனொரு நிலவுடைமையாளன்<br />
என்று உறுதியாகச் சொல்வேன் உங்களிடம் <br />
தளைகளை அறுப்போம், <br />
தளைகளை அறுப்போம்<br />
இது நமது நிலம், உங்கள் நிலம்<br />
அவரது நிலம்,<br />
பெட்ரோவின் நிலம்,<br />
மரியாவின் நிலம்,<br />
யுவானின் நிலம்,<br />
யோஸெவின் நிலம்.</span><br />
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br />
விக்டர் ஹாராவின் கற்பனை வளத்துக்குச் சான்றாக இருப்பது மெக்ஸியப் புரட்சியாளர் ஃபிரான்ஸிஸ்கோ
விஜா ( Fransico Villa - பாஞ்ச்சோ விஜா என்று பரவலாக அறியப் பட்டவர்)
பற்றிய அவரது பாடல். இது விஜாவின் இராணுவத்தில் இருந்த ஒரு படைவீரன் பாடுவது போல அமைக்கப்பட்டுள்ளது.
மெக்ஸிகோவில் நிலப் பிரபுத்துவத்துக்கு எதிராகவும் மெக்ஸியக் குடியரசுத் தலைவராக இருந்த
பெர்ஃபோரியோ டயஸின் கொடுங் கோலோட்சிக்கு எதிராகவும் போராடிய புரட்சிகர தளபதிகளிலொருவர்
விஜா, டயஸுக்கு எதிரான ஜனநாயகப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கி, குடியரசுத் தலைவர்
பதவிக்கு வந்தவர் ஃபிரான்ஸிஸ்கோ மாடெரோ. அவருக்கு ஆதரவாக நின்ற படைகளின் தள பதிகளில்
இருவர் விஜாவும் ஹுவார்ட்டோ என்பவரும். ஆனால் தொடக்கம் முதற்கொண்டே ஹுவார்ட்டோவுக்கு
விஜாமீது பொறாமை உணர்வு இருந்தது, அதற்குக் காரணம், விஜா பெரும் பண்ணை உடைமையாளர் களைக்
கொள்ளையடித்தும் இரயில் கொள்ளைகளில் ஈடுபட்டும் இராபின் ஹுட் போல ஏழை மக்களுக்குச்
செல்வத்தைப் பகிர்ந்தளித்து புகழ் பெற்றிருந்ததுதான். பெர்ஃபோரியா டயஸின் ஆட்சியை முடிவுக்குக்
கொண்டுவந்து குடியரசுத்தலைவர் பதவிக்கு வந்த ஃபிரான்ஸிஸ்கோ மாடெரோவைக் கொலை செய்துவிட்டு அரசியல் சட்டத்துக்கு விரோதமாக அந்தப் பதவியைக் கைப்பற்றிக் கொண்ட ஹுவார்ட்டோ,
இராணுவத்தின் ஒழுங்குகளையும் கட்டுப்பாடுகளையும் மீறியதாக விஜா மீது ஒரு குற்றச்சாட்டைச்
சுமத்தி, அவருக்கு மரண தண்டனை விதித்தார். ஆனால், இராணுவத் தளபதி ஒருவர் காட்டிய
கருணையின் காரணமாக, சுட்டுக்கொல்லப்படுவதற்குப் பதிலாக சிறையில் அடைக்கப்பட்டார் விஜா.
சிறைவாசத்தின் போதுதான் விஜா எழுத்தறிவு பெற்றதுடன், அரசியல், வரலாறு முதலியவற்றை
ஆழமாகப் படித்தார். சிறையிலிருந்து தப்பி, அமெரிக்கப் பகுதியொன்றுக்குச் சென்ற அவர்,
மீண்டும் புரட்சியில் ஈடுபடத் தொடங்கினார்.<br />
<br />
அரசியல் சட்டத்திற்கு விரோதமாகக் குடியரசுத் தலைவர் பதவியைக் கைப்பற்றிய ஹுவெர்ட்டோவுக்கு
எதிராகக் கிளர்ந்தெழுந்த அரசியல் தலைவர்கள், இராணுவத் தளபதிகள் ஆகியோருடன் (இவர்களிலொருவர்தாம்
மெக்ஸிகோவின் புகழ்பெற்ற புரட்சியாளர் எமிலியானோ ஜபாட்டா) சேர்ந்துகொண்டார். விஜாவின்
படைகள் ஒரு திசையிலிருந்தும் ஜபாட்டாவின் படைகள் இன்னொரு திசையிலிருந்தும் முன்னேறி
மெக்ஸிகோ நகரைக் கைப்பற்றின. குடியரசுத் தலைவர் மாளிகைக்குள் இருவரும் நுழைந்தனர்.
குடியரசுத்தலைவரின் இருக்கையில் அமர்ந்து ஜபாட்டாவுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்
விஜா. ஆனால் அந்தப் பதவியைக் கைப்பற்றும் விருப்பம் அவருக்கு இருக்கவில்லை. தற்காலிகக்
குடியரசுத் தலைவர் பதவியை ஏற்ற ஜபாட்டா தமக்குக் கீழ் பணியாற்றி வந்த ஒருவன் செய்த துரோகத்தின்
காரணமாக சுட்டுக் கொல்லப்பட்டார்.<br />
<br />
ஒரு கட்டத்தில் விஜாவுக்கு உதவி செய்வதாகக் கூறிய அமெரிக்க அரசாங்கம், முதல் உலகப்
போருக்குப் பிறகு தனது வாக்குறுதியைக் கைவிட்டது. ஹுவெர்ட்டாவுக்கு எதிராக நின்ற இராணுவத்தளபதி
கரான்ஸா என்ப வரை ஆதரித்தார் விஜா அதற்குக் காரணம், ஹுவெர்ட் டாவை ஒப்பிடுகையில் கரான்ஸா
தீமை குறைந்தவர் என்று அவர் கருதியதுதான். ஆனால், கரான்ஸாவுக்கோ தொடக்கம் முதற்கொண்டே
விஜாவைத் தனிமைப்படுத்தும் நோக்கம் இருந்தது. விஜாவின் படைகள், கரான்ஸா வின் படைகளால்
தோற்கடிக்கப்பட்டன. ஆனால், கரான் ஸாவோ பின்னர் அவரது சக இராணுவத் தளபதிகளில்
ஒருவராக இருந்த ஆல்வாரோ ஓப்ரிகான் என்பவரின் ஆதரவளார்களால் கொல்லப்பட்டார். தமக்கு
சவாலாக இருந்த கரான்ஸா கொல்லப்பட்டவுடன் ஹுவெர்ட்டோவுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டார்
விஜா. அந்த சமாதான ஒப்பந்தத்திற்கு ஈடாக, விஜாவுக்கு பெரும் பண்ணையொன்று பரிசாகத்
தரப்பட்டது. அவருக்கு விசுவாசமாக இருந்த 200 படைவீரர்களையும் அவர்களது குடும்பத்தினரையும்
பராமரித்து வந்தது அந்தப் பண்ணை. இதற்கிடையே ஓப்ரிகான், மெக்ஸி கோவின் குடியரசுத்தலைவராகத்
தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அரசியலில் இருந்து விஜா ஓய்வுபெற்றுவிட்ட போதிலும்,
அவர் தமக்கு எப்போதும் எதிரியாக இருப்பார் என்னும் உணர்வு ஓப்ரிகானுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும்
இருந்ததால் அவரைக் கொலை செய்வதற்கான சதித்திட்டம் தீட்டப்பட்டது. எப்போதும் எச்சரிக்கையாக
இருந்துவந்த விஜா 1923ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதியன்று பர்ரால் என்னும் நகருக்குச் சென்றபோது,
அங்கு சுட்டுக் கொல்லப்பட்டார். <br />
<br />
அவரைக் கொலை செய்யச் சதித்திட்டம் தீட்டியவர்களில் முக்கியமானவர் மெக்ஸிகோவின்
சிஹிஹுவாஹுவா மாநிலத்தைச் சேர்ந்த பர்ராஸா என்னும் அரசியல்வாதி. விஜா கொல்லப்பட்டதை
அடுத்து எழுந்த மக்கள் கிளர்ச்சிகளின் காரணமாக கைது செய்யப்பட்ட அவருக்கு, நீதிமன்றம்
20 ஆண்டுச் சிறைத்தண்டனை வழங்கியது. ஆனால், சிஹிஹுவாஹுவா மாநில ஆளுநர்
அந்தத் தண்டனையை மூன்று மாதமாகக் குறைத்தார். பின்னாளில் பர்ராஸா மெக்ஸிகோ இராணுவத்தில்
கேனலாகவும் (Colonel) ஆக்கப்பட்டார். விஜா இன்றும் மெக்ஸிய மக்களால் மிகப்பெரும்
வீரராகவும் தேசப்பற்றாளராகவும் கொண்டாடப்படுகின்றார். அவரது நினைவைப் போற்றி சிலியின்
நாட்டார் வழக்கில் ஹாரா எழுதிய பாடல்:<br />
<br />
குடியரசுத் தலைவரின் இருக்கையில் <br />
அமர்ந்து பார்த்தாரெனினும் <br />
அந்த அரியணை மீது <br />
ஒருபோதும் பொறாமை கொண்டிராத<br />
அழியாப் புகழுடைய அந்த மனிதர்<br />
ஃபிரான்ஸிஸ்கோ விஜாவின்<br />
படைவீரனாக இருந்தேன்.<br />
இப்போது ஆற்றுக்கு அப்பால்<br />
வெகுதொலைவில் வாழ்கிறேன் <br />
அழியாப் புகழுடைய அந்த நாள்களை<br />
நினைவில் கொண்டு<br />
அய் அய் அய்!<br />
<br />
இப்போது ஆற்றுக்கு அப்பால்<br />
வெகுதொலைவில் வாழ்கிறேன் <br />
நெடுந்தொலைவிலுள்ள பர்ராலுக்குச்<br />
சென்ற விஜாவை நினைவில் கொண்டு<br />
அவரது மெய்க்காப்பாளர்களில் <br />
நானும் ஒருவன்<br />
நாளாவட்டத்தில் மேஜராகப் <br />
பதவி உயர்வு பெற்றவன்<br />
எங்களது நாட்டையும் <br />
அதன் கௌரவத்தையும்<br />
பாதுகாக்கும் போராட்டத்தில் <br />
நாங்கள் முடமாக்கப்பட்டோம்<br />
படையெடுப்பாளரை எதிர்த்து <br />
நாங்கள் சண்டை புரிந்த<br />
அந்தக் கடந்தகால நாள்களை<br />
நினைத்துப் பார்க்கிறேன்<br />
அய் அய் அய்!<br />
<br />
இன்று நான் கடந்தகாலத்தை<br />
அந்த ‘மெய்காப்பாளர்களை’<br />
நான் மேஜராக இருந்த நாள்களை<br />
நினைத்துப் பார்க்கிறேன்<br />
எத்தனையோ தூரம் நான் சவாரி செய்த குதிரையை<br />
யிம்மெனெஸ் நகரில் மரணம் வீழ்த்தியது<br />
என் மீது குறிவைக்கப்பட்ட தோட்டா<br />
அதன் உடலைத் துளைத்துச் செல்ல<br />
மரண வேதனையில் வலியால் துடித்தது<br />
தன் உயிரைக் கொடுத்தது நாட்டுக்காக<br />
அய் அய் அய்!<br />
<br />
அது இறந்தபோது எப்படியெல்லாம்<br />
அழுது புலம்பினேன்<br />
பாஞ்சோ விஜா, எனது நினைவிலும் இதயத்திலும்<br />
செதுக்கப்பட்ட உங்களை ஏந்திச் செல்கிறேன்<br />
ஆல்வெரோ ஓப்ரிகானின் படைகளால் சிலவேளை<br />
நான் வெல்லப்பட்ட போதிலும்<br />
புரட்சியின் இறுதிவரை விசுவாசமிக்க படைவீரனாக இருந்துள்ளேன் எப்போதும்.<br />
அய் அய் அய்!<br />
பீரங்கிகளுக்கு அடியில் எத்தனையோ சண்டை புரிந்த<br />
விசுவாசமிக்க படைவீரனாகவே எப்போதும். <br />
<br />
1960களிலும் 1970களிலும் அமெரிக்க சிஐஏ, அமெரிக்க இராணுவம் ஆகியவற்றின் உதவியுடன் இலத்தின்
அமெரிக்க நாடுகளில் நிறுவப்பட்ட சர்வாதிகார, இராணுவ அரசாங்கங்கள் ‘புதிய இசை'க் குழுவினரையும்
ஒடுக்கின. பிரேஸிலின் ஜில்பர்டோ கில், அந்த நாட்டில் இராணுவ அரசாங்கத்தை விமர்சித்ததற்காக
விசாரணை யின்றி சிறையில் ஒன்பது மாதங்கள் அடைக்கப்பட்டுப் பின்னர் அந்த நாட்டைவிட்டு
வலுக்கட்டாயமாக வெளி யேற்றப்பட்டார். சிலியைச் சேர்ந்த இண்டி-இயிமானி <span style="font-size: small;">(<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; line-height: 115%;">Inti-Illimaani</span>)</span>
என்னும் இசைக்குழுவினர் ஸல்வடோர் அஜென்டேவின் ஆட்சி தூக்கியெறியப்பட்ட சமயத்தில் ஐரோப்பியப்
பயணம் மேற்கொண்டிருந்ததால் தப்பித்தனர். நீண்டகாலம் அவர்கள் பிரான்ஸிலேயே அரசியல்
அகதிகளாக வாழ்ந்தனர். 1976இல் ஆர்ஜென்டினாவில் இராணுவப்புரட்சி நடந்த பின், ஸோஸா பல்வேறு
வகையான தொல்லைகளுக்காளானார். அவரது பாடல்களும் இசை நிகழ்ச்சிகளும் தணிக்கைக்குட்படுத்தப்பட்டன.
அவர் உலகப்புகழ் பெற்றிருந்த காரணத்தால், ஆட்சியா ளர்களின் சித்திரவதையிலிருந்து தப்பினார்.
ஆயினும் 1979இல் லா ப்ளாட்டா என்னுமிடத்தில் அவர் இசை நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தபோது,
அங்கு வந்த இராணுவத்தினர் அவரை சோதனை போட்டு, அவரையும் அங்கு இசை கேட்க வந்திருந்த
200 பேரையும் கைது செய்தனர். உலகம் முழுவதிலுமிருந்து வந்த கண்டனங்களின் காரணமாக விடுதலை
செய்யப்பட்ட அவர், தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஐரோப்பாவுக்குச் சென்றார். இராணுவ
ஆட்சிகளின் காலம் முடிந்த பின் 1980களில் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்திருந்த ‘புதிய
இசை' இயக்கத்தினர் தத்தம் நாடுகளுக்குத் திரும்பி வந்தனர். கில்பர்ட் கில், பிரேஸிலில்
லூலா தலைமையில் அமைக்கப்பட்ட அரசாங்கத்தில் அமைச்சராகவும் இருந்தார்.<br />
<br />
ஆர்ஜென்டினாவின் நீண்டகால இராணுவ ஆட்சிக்குப் பிறகு ஜனநாயக முறை திரும்பி வந்தது. நாடு
திரும்பிய ஸோஸா, நவ-தாராளவாதப் பொருளாதாரத்தின் கொடு மைகளைக் கணிசமான அளவில் தணித்த
அரசாங்கங்களை - அவை புரட்சிகரமான அரசாங்கங்கள் அல்ல என்ற போதிலும் - ஆதரித்தார். புரட்சிகரச்
சூழல் ஏதும் நிலவாததைக் கருத்தில்கொண்ட அவர் கூறினார்: “முன்பு, நமது கனவுகள்
மேலும் தீவிரமானவையாக, பரிபூரணமானவையாக இருந்தன. இப்போதோ நம்மால் என்ன செய்ய முடியுமோ,
அதைத்தான் செய்ய முடியும்”.<br />
<br />
அவரது வாழ்நாளிலேயே, அவரது பாடல்கள் அடங்கிய 70 ஆல்பங்கள் வெளிவந்தன. நாடு திரும்பிய
பிறகு, அவ்வப்போது அவர் கடும் நோய்வாய்ப்பட்டு வந்த தால், இசை நிகழ்ச்சிகளை நடத்துவது
அடிக்கடி தடைப்பட்டது. இருப்பினும் தம்மால் முடிந்தபோதெல்லாம் பல்வேறு நாடுகளுக்கு
இசைப்பயணம் மேற்கொண்டு எண்ணற்ற பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றார். அதுமட்டுமின்றி,
ஷகிரா, லூஸியானோ பாவரோட்டி போன்ற பாடகர்களுடன் இணைந்தும் பல நிகழ்ச்சிகளை நடத்தினார்.
2009இல் சிறுநீரகக் கோளாறும் இதயக் கோளாறும் ஏற்பட்டு அக்டோபர் 4இல் காலமானார். ஸ்பானிய
மொழி அறியாதவர்களும்கூட கேட்டு இரசிக்கக்கூடிய ஸோஸாவின் பாட்டுகள் ஒன்றிரண்டை இங்கு
பரிந்துரை செய்ய முடியும்: மேலே குறிப்பிட்ட (ஸோஸா பாடிய) இரு பாடல்கள்; வயலெட்
பர்ராவின் <span style="font-size: small;"><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; line-height: 115%;">‘Gracias a la Vida'</span></span> (வாழ்க்கையே உனக்கு நன்றி). இவற்றை
‘யூ ட்யூப்'பிலிருந்து எளிதாகப் பெறலாம்.<br />
<br />
வயலெட் பர்ரா சிலியிலும் ‘புதிய இசை' இயக்கத்தைத் தொடங்கி வைத்திருந்தார். 1950களின்
இடைப்பகுதியில் சிறிதுகாலம் குன்குமென் என்னும் இசைக்குழுவில் பணியாற்றி வந்த விக்டர்
ஹாரா, நாட்டார் இசையில் தேர்ச்சி பெற்ற பின், ஸாண்டியாகோவிலிருந்ததும் வயலெட்டின் மகன்
ஏஞ்சலால் நடத்தப்பட்டு வந்ததுமான இசை மையத்தில் பாடத் தொடங்கினார். 1966இல் அவரது பாடல்களின்
முதல் ஆல்பம் வெளிவந்தது. அதிலிருந்த ஒரு பாட்டு, வலதுசாரிப் பழைமைவாதிகளுக்கு ஆத்திர
மூட்டியது. ‘லா பீட்டா' என்னும் அந்தப் பாட்டு, மரபான நகைச்சுவைப் பாட்டுதான். மதப்பற்று
நிறைந்த ஒரு கத்தோலிக்கப் பெண்மணிக்கு அவள் வழக்கமாகச் செல்லும் தேவாலயத்திலுள்ள பாதிரியார்
மீது கொள்ளை ஆசை. ஆனால், பாவ மன்னிப்புக் கேட்க அவரிடம்தான் போகிறாள்- இதுதான் அந்தப்
பாட்டு சொல்லும் விஷயம். அந்தப் பாட்டு வானொலி நிலையங்களில் தடை செய்யப்பட்டது. இசைத்தட்டுகளை
விற்பனை செய்யும் கடைகளில் அந்த ஆல்பம் விற்கப்படுவது நிறுத்தப்பட்டது. ஆனால், இந்த
நிகழ்வு, அந்த நாட்டின் இளம் மக்களிடையேயும் முற்போக்குவாதிகளிடையேயும் ஹாராவின் பெயரைப்
பிரபலமாக்கியது. வலதுசாரிப் பழைமைவாதிகள் ஹாரா மீது குறிவைக்கத் தொடங்கிய தற்கு இந்தப்
பாட்டு மட்டும் காரணமல்ல; அவர் ஸால்வடோர் அஜெண்டேவின் தலைமையில் இருந்த இடதுசாரி
அரசியலுடன் மேன்மேலும் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு வந்ததும்தான்.
1960களின் தொடக்கத்தில் சோவியத் யூனியனுக்குச் சென்று வந்த ஹாரா, பின்னர் சிலியின்
கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். அவரது புகழ் ஓங்கத் தொடங்கியதற்கு, பாட்டுகள் எழுதுவதில் அவருக்கு இருந்த திறமை மட்டுமல்ல; அந்தப் பாட்டுகளுக்கு இடதுசாரி உள்ளடக்கத்தைக்
கொடுத்து வந்ததும்தான். வலதுசாரிகளுடன் அவருக்கு ஏற்பட்ட முதல் அரசியல் மோதலுக்குக்
காரணமாக இருந்தது, ‘போர்ட்டோ மோன்ட் பற்றிய கேள்விகள்' என்னும் பாடலாகும். போர்ட்டோ
மோன்ட் என்னுமிடத்தில் வீடற்றவர்கள் நடத்தியப் போராட்டத்தைக் கலைப்பதற்காக, அவர்கள்
மீது தாக்குதல் தொடுக்குமாறு அந்த நகரின் உயர் அரசாங்க அதிகாரி காவல்துறையினருக்கு
ஆணை பிறப்பிக்க, காவல் துறையினரோ போராட்டக்காரர்களை மூர்க்கத்தனமாகத் தாக்கினர்.
அந்த அதிகாரி சிலநாட்களுக்குப் பிறகு கொலை செய்யப்பட்டிருந்தார். இவையனைத்துக்கும்
அந்த அதிகாரியே காரணம் என்று அவர் மீது நேரடித்தாக்குதல் தொடுப்பதாக அமைந்திருந்தது ஹாராவின் பாட்டு. இதன் காரணமாக ஒருநாள் வலதுசாரிகள் ஹாராவை கடுமையாக அடித்து உதைத்தனர்.<br />
<br />
வயலெட் பர்ராவின் இசை மையத்தில் அவர் பாடிய மற்றொரு புகழ்பெற்ற பாட்டு, அவரும் அவரது
துணைவியார் ஜோனும் தென் சிலியிலுள்ள மாபுசெ என்னும் பகுதியில் சந்தித்த ‘ஏஞ்செலிட்டா
ஹ்யூனிமான்' என்னும் தொழிலாளியைப் பற்றிய பாட்டாகும். 1969இல் தனி யொரு இசைத்தட்டாக
வெளிவந்த அந்தப் பாட்டு, கம்பளங்கள் நெய்யும் அந்தப் பெண் தொழிலாளியை ஓர் உருவகமாகக்
கொண்டு சிலி நாட்டின் ‘படைப்பாற்றல் மிக்க அனாமதேயக் கரங்களை'ப் போற்றுகின்றது. மேற்கத்திய இசையின் D-F-G-A-C நோட்டுகளில் (ரி-ம-ப-த-ஸ என்னும் ஸ்வர வரிசையில்) அமைக்கப்பட்ட
இந்த இசைவடிவம் தென்னமெரிக்காவின் ஆண்டெஸ் மலைப் பகுதிகளுக்கே உரியது என்று இசை வல்லுநர்கள்
கூறு கின்றனர். இந்த நாட்டார் இசை பாணி ‘குவெகா' (Cueca<span style="font-family: "arial unicode ms" , "sans-serif";">)</span> என்றழைக்கப்படுகின்றது.
கிதாரை மைய இசைக்கருவியாகக் கொண்ட இந்த இசைபாணியில் தென்னமெரிக்க நாட்டார் இசைக் கருவிகளான
கினா, ஸாம்போனா, சராங்கோ ஆகிய நரம்புக்கருவிகளும் கயோன் (Cajon) எனச் சொல்லப்படும்
தோல் கருவியும் பயன்படுத்தப் படுகின்றன.</span><br />
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br />
1969இல் ஸான்டியாகோவிலுள்ள சிலி பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘புதிய
இசை' விழாவில், ‘உழைப்பாளிக்கான ஒரு பிரார்த்தனை' <span style="font-size: small;"><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; line-height: 115%;">(Plegaria A Un Labrador)</span></span>
என்னும் பாடல் முதல் பரிசைப் பெற்றது. அந்தப் பாடலை இயற்றி, மெட்டமைத்துப் பாடியவர்
ஹாரா. சிலியின் பண்பாட்டு மரபுகளை உயர்த்திப் பிடிப் பதற்காக ஏராளமான இசைக்கலைஞர்கள்
கலந்து கொண்ட அந்த விழா இடதுசாரிக் கோலம் கொண்டிருந்தது. அந்தப் பரிசைப் பெற்ற<span style="font-family: "arial unicode ms" , "sans-serif";"> </span>பிறகு
ஹாரா, அஜெண்டெ மற்றும் மக்கள் ஒற்றுமை அணியின் <span style="font-size: small;"><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; line-height: 115%;">(Unidad Popular)</span></span><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 18.0pt; line-height: 115%;"> </span>
பண்பாட்டுத் தூதராக இலத்தின் அமெரிக்க நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு மார்க்ஸிய இடதுசாரி
உணர்வை வெளிப் படுத்தும் பாடல்களை இசைத்துத் தொழிலாளர்களையும் மாணவர்களையும் அணிதிரட்டினார்.<br />
<br />
அவருடைய இன்னொரு புகழ்பெற்ற அரசியல் பாட்டு, 1970 இல் சிலியின் குடியரசுத் தலைவர் தேர்தலில்
‘மக்கள் ஒற்றுமை' இயக்கத்தின் சார்பில் போட்டியிட்ட ஸால்வடோர் அஜெண்டேவை ஆதரித்து எழுதப்பட்டு
நாடெங்கிலும் பரவலாகப் பாடப்பட்ட ‘வெற்றி பெறுவோம்' <span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: small;"></span><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 18.0pt; line-height: 115%;"><span style="font-size: x-small;"><span style="font-size: small;">(Venceremos</span>)</span><span style="mso-spacerun: yes;">
</span></span> என்னும்
பாட்டு ஆகும். <br />
<br />
ஸால்வடோர் அஜெண்டெ மருத்துவப்படிப்புப் படித்தவர். ஆனால் சோசலிசக் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட
அவர், மருத்துவத்தொழிலை நாடாமல் அரசியல் வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்.
மார்க்ஸியத்தை ஏற்றுக்கொண்ட அவர், கம்யூனிஸ்ட் கட்சியில் சேரவில்லை. மாறாக, சோசலிஸ்ட்
கட்சியில் இணைந்து பணியாற்றி வந்தார். 1952, 1954, 1958ஆம் ஆண்டுகளில் சிலியில் நடந்த
குடியரசுத்தலைவர் தேர்தல்களில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். ஆனால், 1958 ஆம் ஆண்டுத்
தேர்தலில் அவருக்கும் அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர்களுக்கும் இடையே வாக்கு வித்தியாசம் முன்பைவிடக் குறுகியதாக இருந்ததை அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் தங்களுக்கு விடுக்கப்பட்ட
சவால் என்று கருதினர். எனவே அடுத்தத் தேர்தலில் (1964ஆம் ஆண்டுத் தேர்தல்) இடதுசாரி
அணிகளின் கைகளுக்கு வெற்றி போய்ச் சேர்ந்துவிடுவதை எப்படியேனும் தடுத்து நிறுத்திவிடவேண்டும்
என்பதற்காக, அமெரிக்காவிலிருந்த ஜான் கென்னடி அரசாங்கம் 1961ல் தேர்தல் குழுவொன்றை
அமைத்தது. அதில் அமெரிக்க வெளியுறவுத்துறை, வெள்ளை மாளிகை, சிஐஏ ஆகியவற்றைச் சேர்ந்த
உயரதிகாரிகள் உறுப்பியம் வகித்தனர். இதற்கு இணையான இன்னொரு குழுவும் சிலியின் தலைநகர்
ஸாண்டியாகொவில் உருவாக்கப்பட்டது. அதில் உறுப்பியம் வகித்தவர்கள் அமெரிக்கத் தூதரக
உயரதிகாரிகள், சிஐஏ உளவாளிகள் ஆகியோர். அந்த இரு குழுக்களும் சிலியில் இருந்த வலதுசாரிப்
பிற்போக்கு அரசியல் கட்சிகளுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக்கொண்டு, அந்தக் கட்சிகளுக்குத்
தேவையான அனைத்துவகைப் பொருளாதார, பிரசார உதவிகளைச் செய்தன. கிராமப்புறங்களிலுள்ள விவசாயிகள்,
நகர்ப்புறங்களிலுள்ள தொழிற்சங்கக் கூட்டமைப்புகள், மாணவர்கள், வெகுமக்கள் ஊடகங்கள்
ஆகியவற்றில் கம்யூனிஸ்ட்-விரோதக் குழுக்களை உருவாக்கி, பின்னர் கிறிஸ்தவ ஜனநாயகக்
கட்சியைச் சேர்ந்த எடுவர்டோ ஃப்ரெய் <span style="font-size: small;"><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; line-height: 115%;">(Eduardo Frei) </span></span> என்பவரை வலதுசாரிச்
சக்திகளின் பொது வேட்பாளராகத் தேர்தல் களத்தில் இறக்கின. 1964ஆம் ஆண்டில் அமெரிக்கக்
குடியரசுத் தலைவர் தேர்தலும் நடந்தது. அந்தத் தேர்தலில் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி
வேட்பாளர் லிண்டன் ஜான்ஸன், குடியரசுக் கட்சி வேட்பாளர் பார்ரி கோல்ட்வாட்டர்
ஆகியோர் இருவர் சார்பாகவும் செலவிடப்பட்டதைவிடக் கூடுதலான பணத்தை (20 மில்லியன் அமெரிக்க
டாலர்) மேற்சொன்ன குழுக்கள் அஜெண்டெவுக்கு எதிரான பிரசாரத்துக்குச் செலவிட்டன. பிற்போக்குச்சக்திகள்
எதிர்பார்த்ததை விடக் கூடுதலான வாக்குகளை (56%) ஃப்ரெய் பெற்றார். அமெரிக்க நாடாளுமன்றத்தின்
மேலவையில் (செனட்) சிஐஏ சமர்ப்பித்த அறிக்கை, முன்னுவமை காணாத வகையில் அந்தக்
கம்யூனிஸ்ட் எதிர்ப்புப் பிரசார இயக்கம் வெற்றிகரமாக அமைந்ததாகக் கூறியது. பெண் வாக்காளர்களைக்
குறிவைத்து நடத்தப்பட்ட அந்த பிரசாரத்தில், ஸால்வடோர் அஜெண்டெ பதவிக்கு வந்தால், மரபான,
பெண்களுக்கே உரிய விழுமியங்க ளும் குடும்பங்களின் அறவொழுக்கங்களும் அழிக்கப்படும்
என்று சொல்லப்பட்டது. பொருள்வகையில் பெண்களைக் கவர்ந்திழுக்கும் திட்டங்களும் ஃப்ரெய்யின் தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்பட்டிருந்தன.<br />
<br />
அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் சிலியின் வலதுசாரிப் பிற்போக்காளர்களுக்கும் பீதி ஏற்படுத்தும்
தேர்தல் அறிக்கையை முன்வைத்து அஜெண்டெ தேர்தல் களத்தில் இறங்கியிருந்தார். அவ்வறிக்கை
கூறியது; நாட்டின் செல்வம் மறுபங்கீடு செய்யப்படும் (அன்று சிலியின் மக்கள்தொகையில்
2 விழுக்காட்டினர் நாட்டின் செல்வத்தில் 45 விழுக்காட்டைத் தம் கையில் வைத்திருந்தனர்);
தாமிரச் சுரங்கங்களில் தொடங்கி நாட்டின் முதன்மையான தொழில்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்படும்; விரிவான விவசாயச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும்; சோசலிச, கம்யூனிச நாடுகளுடனான
உறவுகள் மேம்படுத்தப்படும். அதேவேளை அஜெண்டெ தமது கொள்கை சோவியத் யூனியனிலிருந்து
சுயேச்சையான தாக இருக்கும் என்றும் அறிவித்திருந்தார்.<br />
<br />
ஆக, இத்தகைய திட்டங்களைக் கொண்டிருந்த அஜெண்டெ ஆட்சிக்கு வந்தால் தமது புவிசார்-அரசியல்
மற்றும் பொருளாதார நலன்கள் பாதிக்கப்படும் என்று அமெரிக்காவும் பன்னாட்டு மூலதன நிறுவனங்களும்
அஞ்சியதில் வியப்பில்லை. <br /> </span><br />
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">ஆனால், அஜெண்டெவின் செல்வாக்குத் தொடர்ந்து வளர்ந்துகொண்டிருந்தது. 1970 ஆண்டு நடந்த
குடியரசுத் தலைவர் தேர்தலில் ‘மக்கள் ஒற்றுமை’யின் (இதில் அஜெண்டெவின் சோசலிஸ்ட் கட்சி,
சிலி கம்யூனிஸ்ட் கட்சி முதலியன இருந்தன) வேட்பாளராக அஜெண்டெ நிறுத்தப்பட்டார்.
1970 ஜூன்2இல் நடந்த அமெரிக்கா வின் தேசியப் பாதுகாப்பு ஆலோசனைக் குழுக் கூட்டத்தில், தேசியப் பாதுகாப்புப் பிரச்சினைகள் தொடர்பாக அமெரிக்கக் குடியரசுத் தலைவரின்
முதன்மை ஆலோ சகராக இருந்த ஹென்றி கிஸ்ஸிஞ்சர் கூறினார்: “ஒரு நாடு தனது மக்களின் பொறுப்பின்மை
காரணமாக கம்யூனிஸ்ட் நாடாக மாறுவதை நாம் ஏன் ஏதும் செய்யாமல் பார்த்துக் கொண்டிருக்க
வேண்டும்?”. ஒரு நாடு என்று அவர் குறிப்பிட்டது சிலியை. ‘பொறுப்பற்றவர்கள்’ என்று
அவர் வர்ணித்தது சிலி நாட்டு மக்களை!<br />
<br />
‘மக்கள் ஒற்றுமை’ அணிக்குள் பிளவு ஏற்படுத்துவதற்காக, அஜெண்டெவின் வெற்றி ஸ்டாலினிஸ
ஒடுக்கு முறையைக் கொண்டுவரும் என்னும் பிரசாரத்தை சிஐஏ முடுக்கிவிட்டது. முந்தைய தேர்தலில்
செய்ததைப் போலவே அது இலட்சக்கணக்கான அமெரிக்க டாலர் களை அஜெண்டெவிற்கு எதிரான பிரசாரத்திற்குச்
செலவிட்டது. அப்படியிருந்தும் 1970ஆம் ஆண்டு செப்டம்பர் 11இல் நடந்த தேர்தலில் மற்ற
இரு வேட்பாளர்களை ஒப்பிடுகையில் அஜெண்டெ பெற்ற வாக்குகள் அதிகம். எனினும், அந்த
நாட்டின் அரசியல் சட்டத்தின்படி, 50 விழுக்காட்டிற்கும் குறைவாக வாக்காளர்களின் வாக்கு
களைப் பெற்றவர்களில் ஒருவரைக் குடியரசுத் தலைவ ராக்குவதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல்
தரவேண்டும். அஜெண்டெ பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வலதுசாரியான
யோர்ஹெ அலெஸ்ஸாண்ட்ரிக்குக் கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கையைவிடச் சற்றுக் கூடுதலானது தான்.
எனினும், ஏழு வார காலம் அமெரிக்கா, அஜெண்டெவைப் பதவி ஏற்க விடவில்லை. 1970 செப்டம்பர்
15இல் அமெ ரிக்கக் குடியரசுத் தலைவர் ரிச்சர்ட் நிக்ஸன், ஹென்றி கிஸ்ஸிஞ்சர், சிஐஏவின்
தலைவர் ரிச்சர்ட் ஹெல்ம்ஸ் ஆகியோர் கூடி விவாதித்தனர். சிலியின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்க
எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வதற்கு அமெரிக்கா தயாராக இருந்தது. அலெஸ்ஸாண்ட்ரிக்கு
வாக்களிக்குமாறு செய்ய சிலி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கையூட்டுக் கொடுப்பது
பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆலோசனை கைவிடப்பட்டு, சிலியில் இராணுவப்புரட்சி
நடத்தவும், நாடாளுமன்றத்தின் முடிவுகள் அஜெண்டெவுக்கு சாதகமாக இருந்தால் அதை அந்த இராணுவப்புரட்சியின்
மூலம் இரத்து செய்யவும் தீர்மானிக்கப்பட்டது. தேவைப்பட்டால் அஜெண் டெவைக் கொலை செய்யவும்
முடிவு செய்யப்பட்டது!<br />
<br />
சிஐஏ, சிலி இராணுவத்திலிருந்த உயரதிகாரிகள் சிலருடன் தொடர்பு கொண்டு, அவர்களைக் கொண்டு
ஒரு இராணுவப்புரட்சி செய்யத் திட்டமிட்டு அவர்களில் சிலரையும் தம் கைக்குள் போட்டுக்கொண்டனர்
அமெரிக்க ஆட்சியாளர்கள். ஆனால் அவர்களுக்குப் பெரும் முட்டுக்கட்டையாக இருந்தவர் சிலியின்
இராணுவத் தலைமைத் தளபதியான ஷ்னெய்டர். அவர் அந்த நாட்டு இராணுவம் கடைபிடித்து
வந்த மரபுப்படி, இராணுவம் அரசியல் சட்டத்திற்குக் கட்டுப்பட்டதாகவே இருக்க வேண்டும்
என்பதில் உறுதியாக இருந்தார். இதற்கி டையே சிஐஏ, தன்னுடன் ஒத்துழைக்க முன்வந்த இராணுவச்
சக்திகளுக்கு நவீன ஆயுதங்களை வழங்கி வந்தது. 1970 அக்டோபர் 22 அன்று ஷ்னெய்டரை அவரது
அலுவலகத்திற்குச் செல்லும் வழியில் கடத்திச் செல்வதற்கான முயற்சி நடந்தது. அப்போது
நடந்த துப்பாக்கிச் சண்டையில் அவர் கொல்லப்பட்டார். ஆனால் ஜனநாயக ஆட்சிமுறையைக் கவிழ்க்கும்
இராணுவப் புரட்சியைச் செய்யும் சிஐஏவின் நோக்கம் நிறைவேறவில்லை. ஷ்னெய்டரின் மரணம்,
அரசியல் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்ற இராணுவ மரபை வலுப்படுத்தியதால்,
இரு நாட்களுக்குப் பிறகு, அஜெண்டெ குடியரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு சிலி
நாடாளுமன்றம் ஒப்புதல் தந்தது. 1970 நவம்பர் 3 அன்று பதவியேற்றார் அஜெண்டெ.<br />
<br />
ஆனால் அதன் பிறகுதான் தொடங்கியது வர்க்கப் போராட்டம். குறைவளர்ச்சியிலிருந்தும் ஏகாதிபத்திய
நாடுகளையும் பன்னாட்டு மூலதன நிறுவனங்களையும் சிலியின் பொருளாதாரம் சார்ந்திருக்கும்
நிலையிலிருந்தும் அந்த நாட்டை மீட்பதற்கான திட்டங்களைத் தீட்டினார் அஜெண்டெ. தொழிற்சாலைகள்
பலவற்றைத் தொழிலாளர்களே நிர்வகிக்கின்ற முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.
நீண்ட நெடுங்காலமாக சத்தூட்டக் குறைவினால் குழந்தைகள் அவதியுற்று வந்த நாடுகளிலொன்று
சிலி. அந்த நிலையைப் போக்குவதற்காக, பிறக்கும் குழந்தை ஒவ்வொன்றுக்கும் அது எட்டு மாதங்கள் பூர்த்தி செய்யும்வரை ஒவ்வொரு நாளும் அரை லிட்டர் பால் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார் அஜெண்டெ. ஆனால், சிஐஏ நிறுவனத்தின் தலைவர் வில்லியம் கோல்பியோ வேறொரு திட்டத்தை
வகுத்திருந்தார். அதாவது, அஜெண்டெவின் அரசாங்கத்துக்குள்ள பெருமையை அகற்றி அதைத் தூக்கியெறியும்
வகையில் அதன் பொருளதாரத்தைச் சீர்குலைக்கும் நுட்பமான அனைத்து முயற்சிகளையும் செய்வது.
<br />
<br />
அஜெண்டெ குடியரசுத்தலைவராகப் பதவியேற்பதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் தந்தவுடனேயே,
சிலியில் அமெரிக்கத் தூதராக இருந்த எட்வர்ட் கெல்லி, “அஜெண்டெவின் ஆட்சியில் கீழுள்ள
சிலிக்கு ஒரு ஆணியோ, ஒரு மரையோகூடச் செல்லக்கூடாது” என்று கூறினார். அச்சமயம் சிலியின்
பொருளாதாரம் அமெரிக்காவையே பெரிதும் சார்ந்திருந்ததால் அதனைப் பலகீனப் படுத்துவது
அமெரிக்காவுக்கு எளிதானதாக இருந்தது. அடுத்த மூன்றாண்டுகளில் அமெரிக்கா தந்துவந்த அனைத்து
பொருளாதார உதவிகளும் அமெரிக்க ஏற்று மதி-இறக்குமதி வங்கி போன்றவை சிலிக்கு வழங்கி வந்த
கடன்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. 1971-73 ஆம் ஆண்டுகளில் உலக வங்கி சிலிக்கு எந்தக்
கடனும் வழங்க மறுத்தது. சிலியில் தனியார் அமெரிக்க நிறுவனங்களின் முதலீடுகள் பாதுகாக்கப்படும்
என்னும் உத்திர வாதத்தை அமெரிக்க அரசாங்கம் தர மறுத்ததுடன் சிலியில் பொருளாதரத்தை
நசுக்குமாறு அமெரிக்கத் தொழில், வர்த்தக நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டன. தாமிரச் சுரங்கங்களும்,
பெட்ரோலிய, உருக்கு, மின்சாரத் தொழில்களும் நாட்டுடையாக்கப்பட்டு விட்டாலும், அந்தத்
தொழில்களில் பயன்படுத்தப்பட்டு வந்த யந்திரங்கள், உதிரிபாகங்கள் ஆகியவை பழுதடைந்தால்
அவற்றை வாங்கமுடியாமல் செய்துவிட்டது அமெரிக்கா. அவற்றுக்கு முன்கூட்டியே பணம் தருவதற்குச்
சிலி முன்வந்தபோதிலும் அவற்றை விற்க மறுத்துவிட்டன அமெரிக்க நிறுவனங்கள். விரைவாக
சரிந்துவரும் சிலியின் பொருளாதாரம் அலைஅலையான வன்முறைப் போராட்டங்களைத் தூண்டிவிட்டு
இறுதியில் இராணுவப் புரட்சிக்கு வழிகோலும் என்பது அஜெண்டெவின் ஆட்சியைத் தூக்கியெறிய
விரும்புகிறவர்களுக்கான யதார்த்தப்பூர்வமான நம்பிக்கை தருகின்றது என்று ஐஐட்டி என்னும்
பன்னாட்டு நிறுவனம் தயாரித்த அறிக்கையொன்று கூறியது. <br />
<br />
அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடையின் காரணமாக சிலி நாட்டு மக்களின் அன்றாடத் தேவைகளுக்கான
பொருள்களுக்கு- உணவுப்பொருள்களிலிருந்து சிகரெட், தொலைக்காட்சி, கார் முதலியவற்றுக்கான
உதிரிபாகங்கள் வரை - பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த நிலை மையை இன்னும் மோசமாக்குவதற்காக
நாட்டின் பல் வேறு துறைகளில், பல்வேறு இடங்களில் வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடப்பதற்கு
அமெரிக்க நிதி உதவி செய்தது. 1972 அக்டோபரில் சரக்குகளை ஏற்றிச் செல்லும் லாரிகள்,
டிரக்குகள் ஆகியவற்றின் உரிமை யாளர்கள் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தின் காரணமாக,
மக்களின் அன்றாட, இன்றியமையாத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருள்களின் விநியோ கமும்
விற்பனையும் மிகப் பெருமளவில் பாதிக்கப்பட் டன. தொடர்ந்து பல்வேறு வணிகர்களும், தொழிலதிபர்
களும் தமது நிறுவனங்களை இழுத்து மூடினர். அரசாங்க அதிகாரிகள் பலர் பதவி விலகி அரசு
நிர்வாகம் ஒழுங்காகக் செயல்பட முடியாதபடி செய்தனர். மாணவர் அமைப்புகள், மருத்துவர்
சங்கங்கள், வழக்குரைஞர் அமைப்புகள் ஆகியவற்றிலும் சிஐஏ ஊடுருவியது. <br />
<br />
அஜெண்டெவின் அரசாங்கம், கருத்துச் சுதந்திரத்திற்கோ, பத்திரிகை சுதந்திரத்திற்கோ எந்தத்
தடையையும் விதிக்கவில்லை. இதைப் பயன்படுத்திக் கொண்ட வலதுசாரிப் பிற்போக்கு ஊடகங்கள்
நாட்டில் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல் பற்றிய செய்திகளை ஊதிப் பெருக்கி வெளியிட்டன.
உள்நாட்டுப் போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாகக்கூட சில பத்திரிகைகள் எழுதின. அஜெண்டெ
அரசாங்கத்தின் சோசலிச நடவடிக்கைகளால் எந்தப் பயனும் இல்லை, அவை நாட்டை அழிவுப் பாதைக்கே
இட்டுச்செல்லும் என்னும் கருத்து மக்களிடையே வலுப்பெறச் செய்யத்தான் இந்த முயற்சிகள்
அனைத்தும் மேற்கொள்ளப்பட்டன. அஜெண்டெவின் சோசலிச முயற்சிகளுக்கு வலதுசாரிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நாடாளுமன்றமும் நீதித்துறையும் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்தன.<br />
<br />
அரசாங்கத்திற்கு எதிரான வேலை நிறுத்தங்களையும் இராணுவத்திலிருந்து வந்த எதிர்ப்புகளையும்
சமாளிப்பதற்காக, அஜெண்டெவின் அரசாங்கம் சிலியின் இராணுவத் தலைமைத் தளபதியாக இருந்த
ப்ராட்ஸ் என்பவரைத் தனது அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டது. ஆனால், இந்த நியமனம்
அரசாங்கத்திற்கும் இராணுவத்திற்கும் ஏற்பட்ட நிலையற்ற சமாதான மாகவே அமைந்தது. <br />
<br />
சர்வதேச உணர்வு மிகுந்த ஹாரா, ஸ்பெயினில் தளபதி ஃப்ராங்கோவின் பாசிசம் ஏற்படுத்திய
பயங்கரமான சூழலை மிக நன்றாகப் புரிந்துகொண்டிருந்தார். ஓர் உழவராகப் பிறந்து, கவிஞராக
மலர்ந்து ஃப்ராங்கோவின் பாசிசச் சிறையில் மரணமடைந்த மிகுயெல் ஹெர்னாண் டெஸின் கவிதைப்
புத்தகங்களையும் விவிலியப் பிரதி ஒன்றையும் தமது படுக்கைக்கு அருகிலிருந்த மேஜையில்
எப்போதும் வைத்திருந்த ஹாரா, ஹெர்னாண்டெஸின் கவிதையொன்றுக்கு இசையமைத்து அதை இண்டி-இயிமானி
குழுவினருடன் பாடுவதற்கான ஒத்திகையை மும்முரமாகச் செய்து கொண்டிருந்தார். ஸ்பெயினில்
ஜனநாயகச் சக்திகளைத் துடைத்தெறிய எதிர்ப்புரட்சியில் ஈடுபட்ட பாசிஸ்டுகள், அதை மக்களின்
சுதந்திரத்திற்காக நடத்துவதாகக் கூறிக்கொண்டார்கள். அதைக் கருத்தில் கொண்டு ஹெர்னாண்டெஸ்
கவிதையொன்றை எழுதினார் 5:<br />
<br />
சுதந்திரத்தைப் பற்றிப் பேசுபவர்கள்<br />
நமது உழைக்கும் மக்களின் இரத்தத்தைக் கொண்டு<br />
எனது நாட்டை மீண்டும் கறைபடியச் செய்கின்றனர்<br />
ஆனால் அவர்களது கைகளிலோ<br />
குற்றத்தின் முத்திரை பதிக்கப்பட்டுள்ளது.<br />
அவர்கள் நமது குழந்தைகளைத் <br />
தாய்மார்களிடமிருந்து பிரித்து<br />
கிறிஸ்து சுமந்த சிலுவையைப் <br />
புதிதாகக் கட்டமைக்க விரும்புகிறார்கள்.<br />
<br />
கடந்த நூற்றாண்டுகளிலிருந்து தாம் சுவீகரித்த இகழை<br />
அவர்கள் மறைக்கப் பார்க்கிறார்கள்<br />
ஆனால் கொலைகாரர்களின் அடையாளத்தை <br />
அவர்களது முகங்களிலிருந்து துடைத்துவிட முடியாது<br />
ஆயிரமாயிரம் பேர் ஏற்கெனவே தங்கள் இரத்தத்தைத் <br />
தியாகம் செய்துள்ளனர்<br />
ஆறாய்ப் பெருகியோடும் அந்த இரத்தம்<br />
ரொட்டித்துண்டுகளைப் பெருகச் செய்துள்ளது.<br />
<br />
இப்போது நான் எனது குழந்தையோடும் சகோதரனோடும்<br />
நாமெல்லோரும் நாள்தோறும் கட்டிக்கொண்டிருக்கும் <br />
புதிய உலகத்தில் வாழ விரும்புகிறோம்.<br />
துன்பத்தின் எஜமானர்களே<br />
உங்கள் அச்சுறுத்தல் என்னை மிரளச் செய்யவில்லை<br />
நம்பிக்கை நட்சத்திரம் எப்போதும் எங்களுடையதுதான்.<br />
மக்கள் என்னும் காற்று என்னை அழைக்கின்றது<br />
மக்கள் என்னும் காற்று என்னைச் சுமக்கின்றது<br />
அது எனது இதயத்தை நாலாபுறமும் தூவுகின்றது<br />
எனது தொண்டையினூடாக செய்தி பரப்புகிறது <br />
ஆகவே மரணம் என்னைத் தூக்கிச் செல்லும் வரை<br />
கவிஞனின் குரல் கேட்கப்படும்<br />
மக்களின் சாலை வழியாக<br />
இப்போதும் எப்போதும்<br />
<br />
சிலி அரசாங்கத்தின் தூதராக வெளிநாடுகளில் பணியாற்றி வந்த கவிஞர் பாப்லோ நெரூடா தாயகம்
திரும்பி வந்து நெக்ரா என்னும் தீவில் கடற்கரையோரமுள்ள வீட்டில் வசித்து வந்தார். அவர்
தாயகம் திரும்பிய போது ஸாண்டியாகோவில் அவருக்கு மக்கள் வெள்ளம்போல் திரண்டு வந்து வரவேற்பளித்தபோது
அவர் நிகழ்த்திய உரையிலும் பின்னர் மே 26அன்று அவரது வீட்டிலிருந்து தேசிய தொலைக்காட்சி
நிலையத்தால் ஒளிபரப்பப்பட்ட உரையிலும் ஸ்பெயினில் 1930களில் நடந்த உள்நாட்டுப் போரில்
பாசிஸ்டுகள் வெற்றியடைந்ததையும் அதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் துன்பங்கள்
அனுபவித்ததையும் எடுத்துக் காட்டி, சிலியில் ஓர் உள்நாட்டுப் போர் ஏற்படுமானால் அது
அந்த நாட்டு மக்களுக்குப் பேரழிவை உண்டாக்குமாதலால் மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன்
இருக்கவேண்டும் என்றும், அத்தகைய பேரழிவைத் தடுப்பதற்கு சிலியின் கலைஞர்கள் தம்மால்
இயன்றதனைத்தையும் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். <br />
<br />
அந்த வேண்டுகோளை ஏற்று விக்டர் ஹாரா, இன்ட்டி-இயிமானி இசைக்குழுக் கலைஞர்கள் முதலியோர்
பாசிச எதிர்ப்பு பிரசார கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்தத் தொடங்கினர். ஸ்பெயினில் பாசிசம்
ஆட்சிக்கு வந்தது பற்றிய தொடர் நிகழ்ச்சிகளை தேசியத் தொலைக்காட்சி நிறுவ னத்தின் சார்பாக
வழங்கிய ஹாரா, ஒவ்வொரு நிகழ்ச்சியின் போதும் நெருடாவின் கவிதையொன்றைப் பாடுவதை வழக்கமாகக்
கொண்டிருந்தார்.</span><br />
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br />
வலதுசாரிப் பிற்போக்காளர்களும் அவர்களை ஆதரித்து வந்த ஊடகங்களும் தொடர்ந்து எதிர்ப்புரட்சி
பிரசாரங்களைச் செய்துவந்தன. மக்களைப் பீதியில் ஆழ்த்துவதற்காக ஸாண்டியாகோ நகரெங்கும்
‘ஜகார்த்தா திரும்பிவரப் போகின்றது’ (1965இல் இந்தோனீஷியாவில் நடந்த இராணுவப்புரட்சி
பல இலட்சக்கணக்கான கம்யூனிஸ்டு களையும் அவர்களது ஆதரவாளர்களையும் கொன்று குவித்தது.
இதைத்தான் ‘ ஜகார்த்தா’ என்ற குறியீட்டின் மூலம் மக்களுக்குச் சொல்ல விரும்பினர் எதிர்ப்புரட்சி
யாளர்கள். இந்தோனீஷியாவின் தலைநகரம் ஜகார்த்தா) என்ற வாசகங்கள் சுவர்களில் எழுதப்பட்டிருந்தன.<br />
<br />
இந்த வலதுசாரிப் பிற்போக்குப் பிரசாரம், பல இடதுசாரிகளைக் காவுகொண்டது. அவர்களிலொருவர்
ரொபெர்ட்டொ அஹுமடா என்ற கட்டடத் தொழிலாளி. இடதுசாரிக் கூட்டணியை ஆதரித்துப் பிரசாரம்
செய்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிச் செல்வதற்காக வலதுசாரிச் சக்திகளின் குடியிருப்புகளின்
வழியாக நடந்து வந்துகொண்டிருந்த ரொபெர்ட்டொ அஹுமாடா அந்தக் குடியிருப்புகளின் மாடிகளிலொன்றிலிருந்து
சுடப்பட்ட துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியானார்.<br />
<br />
அந்தத் தொழிலாளியும் அவரது குடும்பத்தினரும் ஹாராவுக்கு நன்கு அறிமுகமானவர்களாக இருந்தனர்.
ரொபெர்ட்டோவின் மரணம் ஹாராவை மிகவும் உலுக்கியது. அவரது நினைவைப் போற்றும் வகையில்
அவர் தமது ஒரு பாடலை இயற்றினார் ஹாரா. ரொபெர்ட்டோ தமது மனைவியுடன் பேசுவது போன்று
வடிவமைக்கப்பட்டிருந்தது அந்தப் பாடல். ‘எனது வேலைக்குப் போகும் வழியில்' <span style="font-size: small;"><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; line-height: 115%;">(Cuando
voy al trabjo)</span>6</span> என்னும் பாடல், ரொபொர்ட்டாவைப் பற்றிய பாடல் மட்டுமல்ல;
தொழிலாளி வர்க்கத்தின் மீது ஹாராவுக்கி ருந்த அளவற்ற பற்றையும் பாசத்தையும் வெளிப்படுத்தக்கூடிய பாடலும்தான்:<br />
<br />
எனது வேலைக்குப் போகும் வழியில்<br />
உன்னை நினைக்கின்றேன்.<br />
நகரத்தின் தெருக்களினூடே<br />
உன்னை நினைக்கின்றேன்.<br />
புகை படிந்த ஜன்னல்களுக்கு ஊடாகத் தெரியும்<br />
முகங்களைப் பார்க்கையில்-<br />
அவர்கள் யார், எங்கு செல்கிறார்கள் <br />
என்பது எனக்குத் தெரியாது -<br />
என் வாழ்க்கையின், <br />
எதிர்காலத்தின் தோழியே உன்னையும்<br />
கசப்பான நேரங்களையும் <br />
உயிரோடு இருப்பதன் மகிழ்ச்சியையும்<br />
நினைக்கின்றேன்<br />
ஒரு கதையின் தொடக்கத்தை, <br />
அதன் முடிவை அறியாமல்<br />
படைத்துக் கொண்டு.<br />
நாள் வேலை முடிந்து<br />
மாலைநேரம் நாம் கட்டிய கட்டடங்களின் மீது<br />
தனது நிழல்களை விரித்து வருகையில்<br />
நண்பர்களிடையே விவாதித்துக்கொண்டும்<br />
இந்த நேரத்தையும் எதிர்காலத்தையும் பற்றிய விஷயங்களை <br />
அலசிக் கொண்டும் வேலையிலிருந்து திரும்பி வருகையில்<br />
என் அன்பே, எனது வாழ்க்கையின், <br />
எதிர்காலத்தின் தோழியே<br />
உன்னை நினைக்கின்றேன்.<br />
<br />
நான் வீட்டுக்கு வருகையில் நீ அங்கு இருக்கிறாய்<br />
நாம் இருவரும் சேர்ந்து நமது கனவுகளை நெய்கின்றோம்<br />
கதையின் தொடக்கத்தை, அதன் முடிவை அறியாமல்<br />
படைத்துக் கொண்டு.<br />
<br />
சிஐஏவின் அனைத்துவகை உதவிகளோடு, சிலியில் எதிர்ப்புரட்சியை நடத்துவதற்கான முயற்சிகளை
வலதுசாரி பாசிஸ்டுகள் மும்முரமாகச் செய்துகொண்டிருந்தனர். அவர்களுக்கு முதலில் பலியானவர்
அஜெண்டெ வின் ஆதரவாளரும் கடற்படைத் தளபதிகளிலொருவரு மான கமாண்டெர் ஆர்டுரோ அராயா. அஜெண்டேவுக்கும் கடற்படையில் நாட்டுக்கு விசுவாசமாக இருந்தவர் களுக்குமிடையே தொடர்பை ஏற்படுத்தி
வந்தவர் அவர், தமது வீட்டின் பால்கனியில் நின்று கொண்டிருந்த போது எதிர்ப்புரட்சியாளர்களால்
சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கு அடுத்த கட்டமாக, இராணுவத்தின் தலைமைத் தளபதியும் அஜெண்டெவின்
அரசாங்க அமைச்சருமான தளபதி ப்ராட்ஸ் மீது குறிவைத்தனர் பாசிஸ்டுகள். முற்போக்குக்
கருத்துகளைக் கொண்டிருந்தவரும் நாட்டுப் பற்றாளருமான அவர்தாம் அவர்களுக்குப் பெரும்
முட்டுக்கட்டையாக இருந்தவர். அவரைப் பதவியிலிருந்து நீக்குவதற்காக அற்பத்தனமான வழிமுறைகள்
கையாளப்பட்டன. ஒருநாள் ப்ராட்ஸ் தமது அலுவலகத்திற்கு போக்குவரத்து நெரிசல் மிகுந்த
சாலையொன்றில் சென்று கொண்டிருக்கும்போது, மேட்டுக்குடியைச் சேர்ந்த சிலர் இரண்டு வாகனங்களில்
வந்து வேண்டுமென்றே அவர் பயணம் செய்த காரை வழிமறித்தனர். தொடர்ந்து அவர்கள் இப்படிச்
செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்த ப்ராட்ஸ், தமது காரை வழிமறித்த அந்த வாகனமொன்றிலிருந்த
காரோட்டியை எச்சரிக்கும் விதமாக தமது கைத்துப்பாக்கியை எடுத்துக் காட்டினார். அந்தக்
காரோட்டி, தமது காரை நிறுத்திவிட்டு வெளியே வந்தபோதுதான், அது ஆண்களைப் போலத் தலைமுடியைக்
குட்டையாகக் கத்திரித்துக் கொண்டிருந்த ஒரு மேட்டுக்குடிப்பெண் என்பது அவருக்குத் தெரியவந்தது.
ஆனால், அந்தப் பெண்மணி போட்ட சத்தத்தைக் கேட்டு அங்கு திரண்ட ஆண்களும் பெண்களும் உண்மை
விஷயத்தைத் தெரிந்துகொள்ளாமலேயே, நிராயுதபாணி யான ஒரு பெண்ணை மிரட்டிய கேவலமான
காரியத்தைச் செய்துவிட்டதாக ப்ராட்ஸைத் திட்டியதுடன், அவரைத் தாக்கவும் முற்பட்டனர்.
அந்த நிகழ்ச்சியை பூதாகரமாக்கின ஊடகங்கள். ஏராளமான இராணுவத் தளபதிகள், உயரதிகாரிகள்
ஆகியோரின் மனைவிமார்கள், ப்ராட்ஸின் வீட்டுக்கு எதிரே திரண்டு சகிக்கமுடியாத
அவதூறுகளையும் குற்றச்சாட்டுகளையும் அவர்மீது தொடுத்தனர். ‘மார்க்ஸியத்திலிருந்து
நாட்டைக் காப்பதற்கு எந்தக் குறுக்கீட்டையும் செய்யாத ஒரு கோழை’ என்று அவரை வசைபாடினர்.
அவமான உணர்ச்சியின் காரணமாக, ப்ராட்ஸ் அஜெண்டெவைச் சந்தித்துப் பதவி விலகல் கடிதத்தைக்
கொடுத்துவிட்டார். அதைத் திரும்பப் பெறுமாறு அஜெண்டெ எவ்வளவோ கேட்டுக்கொண்ட போதிலும்
ப்ராட்ஸ் தமது முடிவில் உறுதியாக இருந்துவிட்டார்.<br />
<br />
இராணுவத்திலிருந்த உயரதிகாரிகள் பெரும்பாலோர் வலதுசாரிகளாக இருந்ததால் சிஐஏவின் செல்லப்
பிள்ளைகளிலொருவரான தளபதி பினோஷெ, இராணுவத்தின் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்றார்.
அஜெண்டெவுக்கு எதிரான இராணுவப்புரட்சிக்கான ஒத்திகைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த
போது, விக்டர் ஹாரா, தமது குடும்பத்தினருடன் நெக்ரா தீவுக்குச் சென்றிருந்தார். அங்கு
அவர் இயற்றிய பாடலுக்கு ‘ நெக்ரா தீவின் பாடல்’ எனப் பெயரிட விரும்பினார். பாசிஸ்டுகளின்
எதிர்ப்புரட்சி முயற்சிகளை நன்கு அறிந்திருந்த அவர், தமது சாவைப் பற்றியும் முன்னுணர்ந்து
கொண்டாரோ என்னவோ. அதனால்தான் அவரது கொள்கைப் பிரகடனமாக அமைந்திருந்தது. 1973 செப்டம்பர்
3இல் அவர் இயற்றிய, பின்னாளில் ‘கொள்கை அறிக்கை’ (Ma<span style="font-family: "arial unicode ms" , "sans-serif";">nifesto</span>) எனப் பெயரிடப்பட்ட
அந்தப் பாடல் 7:<br />
<br />
பாடுவது எனக்குப் பிரியமானது என்பதாலோ <br />
எனக்குக் குரல் வளம் இருப்பதாலோ<br />
நான் பாடுவதில்லை.<br />
எனது கிதாரிடம் உணர்ச்சியும் அறிவும் இருப்பதால்<br />
பாடுகிறேன்.<br />
மண்ணின் இதயமும் புறாவின் சிறகுகளும் <br />
கொண்டது எனது கிதார்<br />
மகிழ்ச்சியையும் துயரத்தையும்<br />
ஆசீர்வதிக்கும் புனித நீர் அது.<br />
வயெலெட் 8 கூறுவது போல<br />
எனது பாடலுக்குக் குறிக்கோள் உண்டு<br />
கடினமாக உழைக்கும் கிதார்<br />
வசந்தத்தின் நறுமணம் கமழும் கிதார்.<br />
<br />
எனது கிதார் செல்வந்தர்களுக்கானது அல்ல, இல்லை<br />
நிச்சயமாக இல்லை<br />
எனது பாடல் நட்சத்திரங்களை அடைவதற்காக<br />
நாம் கட்டிக் கொண்டிருக்கும் ஏணி.<br />
ஏனெனில், ஒரு பாடல் பொருள்கொள்வது <br />
தனது பாடலை உளப்பூர்வமாகப் பாடிக்கொண்டே<br />
மரிக்கின்ற ஒருவனின் நாளங்களில் <br />
அது துடிக்கும்போதுதான்.<br />
<br />
எனது பாடல் நொடியில் தோன்றி மறையும்<br />
பாராட்டுக்கானது அல்ல<br />
வெளிநாட்டுப் புகழைப் பெறுவதற்கானதுமல்ல<br />
அது இந்தக் குறுகிய நாட்டுக்கானது<br />
புவியின் அடியாழங்களுக்கேயானது<br />
அங்கேதான் எல்லாமே<br />
ஓய்வு கொள்ள வந்து சேருகின்றன<br />
அங்கேதான் எல்லாமே தொடங்குகின்றன <br />
தீரமிக்கதாய் இருந்த பாடல்<br />
அங்கேதான்<br />
என்றென்றும் புதிய பாடலாகவே இருக்கும்.<br />
<br />
நெக்ரா தீவிலிருந்து ஸாண்டியாகோவுக்கு ஹாராவும் அவர்கள் குடும்பத்தினரும் திரும்பிவரும்
வழியில் பாசிஸ்டுகளின் தாக்குதலுக்கு உள்ளாயினர். மயிரிழையில் தப்பித்த அவர்கள் வீடு
வந்து சேர்வதற்கு முன்னரே இராணுவப்புரட்சி உச்சக்கட்டத்தை அடைந்துவிட்டது. 1973 செப்டம்பர்
11இல் பினோஷெவின் எதிர்ப்புரட்சி இராணுவப்படைகள் அஜெண்டெவின் மாளிகையைச் சூழ்ந்துகொண்டன.
அவற்றுக்குப் பின்புலமாக கடலில் வலம் வந்து கொண்டிருந்தன அமெரிக்கப் போர்க்கப்பல்கள்.
ஆனால், பாசிஸ்டுகளிடம் சரணடைய மறுத்துவிட்டார் அஜெண்டெ. அவர் தம் நாட்டு மக்களிடம்
ஆற்றிய கடைசி வானொலி உரையில் கூறினார்: “உங்களிடம் நான் பேசுவதற்கான கடைசி வாய்ப்பு
இதுவாகத்தான் இருக்கும்... நான் பதவி விலகமாட்டேன். மக்கள் என் மீது வைத்துள்ள
விசுவாசத்திற்கு ஈடாக எனது உயிரைத் தருவேன்... உங்களிடம் சொல்கின்றேன்: ஆயிரமாயிரம்
சிலி மக்களின் மனச்சாட்சியில் நாம் விதைத்துள்ள விதைகளை முற்றிலுமாகத் துடைத்தெறிந்துவிட
முடியாது என்பது நிச்சயம்... சமூக மாற்றம் என்னும் நிகழ்வுப் போக்கை எந்தக் குற்றச்செயலாலும்
பலவந்தத்தாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது. வரலாறு நமக்கே சொந்தம். ஏனெனில் அதை
உருவாக்குபவர்கள் மக்கள்”.<br />
<br />
அஜெண்டெவின் வானொலி உரையைத் தமது வீட்டிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த ஹாராவின்
உள்ளம் கொதித்தது. பாசிசத்தை முறியடிக்கத் தம்மால் செய்யக்கூடிய அனைத்தையும் செய்வதற்குத்
தயாராக இருந்த அவருக்குத் தொலைபேசி அழைப்பொன்று வந்தது. உடனே அவர் வீட்டிலிருந்து புறப்பட்டார்.
அப்போது அஜெண்டெவின் மாளிகைமீது பாசிசத் துருப்புகள் குண்டுமாரி பொழிந்துகொண்டிருந்தன.
ஸாண்டியாகோ நகரம் முழுவதும் குழப்பத்தில் சிக்கியிருந்தது. இடதுசாரிகளும் அவர்களது
இருப்பிடங்களும் அலுவலகங்களும் குறிவைத்துத் தாக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். ஹாராவும்
அவரது தோழர்கள் பலரும் அவர் பணியாற்றி வந்த சிலி பல்கலைக்கழகக் கட்டடத்திற்குள் தஞ்சம்
புகுந்தனர்.</span><br />
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br />
அவர் எங்கு சென்றார், அவருக்கு ஏற்பட்ட கதி என்ன என்பதை அறியாமல் அவரது மனைவி ஜோனும்
பெண் மக்களும் தவியாய்த் தவித்துக்கொண்டிருந்தனர். வெளியுலகத் தொடர்புகள் முழுவதும்
துண்டிக்கப்பட்டிருந் தன. அண்டைப்பகுதிகளில் பகைமை கக்கும் வலதுசாரிப் பிற்போக்காளர்களின்
குடியிருப்புகளே மிகுந்திருந்தன. இடதுசாரிக் கலைக்குழுக்களைச் சேர்ந்த சிலர் மட்டுமே
ஹாராவின் குடும்பத்திற்கு ஆதரவாக இருந்தனர். ஆனால், நாள்தோறும் கைது செய்யப்படும்,
கொலை செய்யப்படும் இடதுசாரிகளின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டேயிருந்தது.<br />
<br />
இராணுவத்தால் கைது செய்யப்பட்டு, ஸாண்டியாகோவிலுள்ள ஒரு மைதானத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட
ஹாராவும் அவரது தோழர்களும் பின்னர் இன்னொரு மைதானத்துக்கு மாற்றப்பட்டனர். அங்கு இராணுவத்தினரின் கைதிகளாக இருந்தவர்கள் ஐயாயிரம் பேர். அவர் களில் முக்கியமானவர்களைப் பொறுக்கியெடுத்து
சித்திரவதை செய்து கொல்லத் தொடங்கினர் இராணுவத்தினர். கொலைக்களத்துக்கு அழைத்துச்
செல்லப்பட்டார் ஹாரா. ‘நீதான் அந்தப் பொறுக்கிப் பாடகனா?’ என்று கேட்டான் ஓர் இராணுவ
அதிகாரி. பின்னர் ஹாராவின் கை கால் எலும்புகள் முறிக்கப்பட்டன. கடைசியில் அவரது நெற்றியையும்
உடலின் பிற பகுதிகளையும் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்தன.<br />
<br />
அவரது உடல் அந்த மைதானத்துக்கு அருகிலுள்ள ஒரு தெருவில் வேறு பல உடல்களோடு சேர்த்துத்
தூக்கியெறியப்பட்டிருந்தது. அதை அடையாளம் கண்டு கொண்ட ஹாரவின் ஆதரவாளர் ஒருவர் -சவக்கிடங்கில்
வேலை பார்த்து வந்தவர்- அடையாளம் தெரியாதவர்க ளின் உடல்களோடு சேர்த்து அதை இராணுவத்தினர்
பொது சவக்குழியில் புதைத்துவிடுவார்கள் என்றஞ்சி - அதை எடுத்து அந்த சவக்கிடங்குக்குள்
வைத்துவிட்டு நேராக ஹாராவின் வீட்டுக்கே சென்று, அந்த செய்தியை ஜோனிடம் தெரிவித்தார்.
சவக்கிடங்குக்கு விரைந்து சென்ற ஜோன், அங்கு இருந்தது ஹாராவின் உடல்தான் என்பதை அடையாளம்
கண்டு கொண்டார். உடல் முழு வதிலும் சித்திரவதைக் காயங்கள். குடும்ப உறுப்பினர்களைத்
தவிர வேறு யாருக்கும் தெரியாமல் ஹாராவின் உடலை அடக்கம் செய்வதற்கு இராணுவம் அனுமதி
கொடுத்துவிட்டது. ஹாராவின் மரணம் பற்றிய செய்தியை அன்று ஒரேயொரு நாளிதழ் மட்டும் குட்டிச்
செய்தியாக வெளியிட்டது.<br />
<br />
ஹாரா கொல்லப்படுவதற்கு ஓரிரு நாள்களுக்கு முன்பு, அவர் சிறை வைக்கப்பட்டிருந்த மைதானத்தில்
கிடைத்த துண்டுத்தாளொன்றில் தமது கடைசிப்பாடலை எழுதியிருந்தார். தம்மைக் கொலை செய்யப்படுவதற்கு
இராணுவத்தினர் எந்த நேரத்திலும் வருவார்கள் என்பதால் அந்தக் காகிதத்துண்டைத் தமது தோழரொருவரிடம் கொடுத்திருந்தார். அந்தத் தோழர் அதைத் தமது காலணியோடு அணியும் ஸாக்ஸில் மறைத்து
வைத்திருந்தார். ஆனால், அவரும் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்படும்போது அந்தக்
காகிதம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுவிட்டது. ஆனால், இதற்கிடையில் அந்தக் கவிதை அவரது
தோழர்கள் சிலரால் பிரதியெடுக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டிருந்தது. இரகசியமாகக் கடத்தி
வரப்பட்ட அந்தப் அந்த பிரதிகளிலொன்று சிலியின் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் போய்ச் சேர்ந்தது.
அதில் சிறு திருத்தங்கள் செய்து வெளியிட்டது அந்தக் கட்சி. <br />
<br />
பினோஷேவின் இராணுவ ஆட்சி தூக்கியெறியப்பட்டு, ஜனநாயக ஆட்சிமுறை அந்த நாட்டிற்குத் திரும்பி
வந்த பிறகு, எந்த மைதானத்தில் ஹாரா சித்திரவதை செய்யப் பட்டுக் கொலை செய்யப்பட்டாரோ
அந்த மைதானத்திற்கு ‘விகடர் ஹாரா ஸ்டேடியம்’ எனப் பெயர் சூட்டப் பட்டது. சிலியிலுள்ள
வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களிலொன்றாகக் கருதப்படும் அந்த மைதானத்திற்கு ஆண்டுதோறும்
பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர். ஹாராவின் நினைவைப் போற்றும் வகையில்
உலகெங்குமுள்ள புகழ்பெற்ற பாடகர்களும் இசைக் கலைஞர்களும் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளனர்.
<br />
<br />
சிலியில் ஜனநாயக ஆட்சிமுறை திரும்பிய பிறகு, பினோஷேவின் இராணுவ ஆட்சியில் நடந்த மனித
உரிமை மீறல்கள் பற்றிய விசாரணைகளின் போது விக்டர் ஹாராவைக் கொலை செய்தவர்கள் யார் என்பது
தெரிய வந்தது. எனினும், கொலைகாரர்களைத் தண்டிக்க ஜோன் நடத்திவரும் சட்டரீதியான போராட்டம்
இன்றும் தொடர்கிறது. எனினும் 1973இல் நடந்த பாசிச எதிர்ப்புரட்சி கட்டவிழ்த்துவிட்ட
பயங்கரத்தை இன்றைய தலைமுறையினருக்கும் எதிர்காலத் தலைமுறையினருக்கும் எடுத்துக் கூறும்
எச்சரிக்கைப் பலகையாக அமைந்து விட்டது ஹாரா எழுதிய அந்தக் கடைசிக் கவிதை-பாடல்:<br />
<br />
நாம் ஐயாயிரம் பேர் இங்கிருக்கின்றோம்<br />
நகரத்தின் இந்தச் சிறு பகுதியில்<br />
ஐயாயிரம் பேர்<br />
நகரங்களிலும் நாடு முழுவதிலும் <br />
நாம் எத்தனை பேர் இருக்கின்றோம்?<br />
இங்கு நாம், விதைகளை விதைக்கின்ற,<br />
தொழிற்சாலைகளை இயக்குகின்ற<br />
பத்தாயிரம் கைகள்.<br />
பசிக்கும்,குளிருக்கும், பீதிக்கும், வலிக்கும்<br />
தார்மீக நிர்பந்தத்திற்கும், அச்சத்திற்கும்,<br />
புத்தி பேதலிப்புக்குமுள்ளான மனிதர்கள்தாம் எத்தனை?<br />
நட்சத்திர மண்டலத்திற்குள் மறைந்தவர்கள் போல<br />
நம்மில் அறுவர் தொலைந்து போயினர்.<br />
ஒருவர் மரணமடைந்தார், <br />
இன்னொருவர் அடித்துக் கொல்லப்பட்டார் - <br />
ஒரு மானுடப் பிறவியை இப்படி அடித்துக் கொல்வது<br />
சாத்தியம் என்று நான் ஒரு போதும் நம்பியதில்லை.<br />
மற்ற நால்வரும் தமக்கேற்பட்ட அச்சத்திற்கு <br />
முடிவு கட்ட விரும்பினர்.<br />
ஒருவர் சூன்யத்திற்குள் குதித்தார்<br />
மற்றொருவர் சுவரின் மீது தமது தலையை மோதி <br />
சாவைத் தழுவினார்.<br />
ஆனால் அவர்கள் அனைவரின் கண்களிலுமே <br />
நிலைகுத்தியிருந்தது மரணத்தின் பார்வை <br />
பாசிசத்தின் முகம் தட்டியெழுப்பியுள்ள பீதிதான் என்னே!<br />
எதைப் பற்றியும் கடுகளவும்கூடப் பொருட்படுத்தாது <br />
பிசிறின்றி வெட்டும் கத்தியைப் போலத்<br />
துல்லியமாக அவர்கள் <br />
தங்கள் திட்டத்தை நிறைவேற்றுகிறார்கள்.<br />
அவர்களைப் பொறுத்தவரை <br />
இரத்தம் பதக்கத்திற்கு ஈடானது.<br />
படுகொலை செய்வது வீரச்செயலுக்கு ஈடானது.<br />
கடவுளே, நீங்கள் படைத்த உலகம் இதுதானா?<br />
உங்களது ஏழு நாள் அற்புதங்கள், உழைப்பு ஆகியவற்றின் விளைபொருள் இதுதானா?<br />
இந்த நான்குச்சுவர்களுக்குள், வெறும் எண்ணைத் தவிர வேறொன்றுமில்லை<br />
இம்மியளவும் வளராத, <br />
மெல்ல மெல்ல சாவை மட்டுமே விரும்புகிற எண்.<br />
ஆனால் எனது மனச்சான்று திடீரென<br />
என்னைத் தட்டி எழுப்புகின்றது<br />
இங்கு வீசும் அலைக்கு இதயத்துடிப்பு இல்லை என்பதை<br />
இயந்திரங்களின் நாடித்துடிப்பு மட்டுமே உள்ளது என்பதை<br />
பிரசவம் பார்க்கும் செவிலியர்கள் போல<br />
இன்முகங் காட்டும்9<br />
இராணுவம் இருப்பதைக் காண்கின்றேன்.<br />
மெக்ஸிகோவும் கியூபாவும் உலகமும் <br />
இந்த அக்கிரமத்திற்கு எதிராக<br />
உரத்த குரல் எழுப்பட்டும்.<br />
<br />
எதையும் உற்பத்தி செய்யாத பத்தாயிரம் கைகள் நாம்<br />
நமது தாயகத்தில் நாம் எத்தனை பேர் இருக்கின்றோம்?<br />
நமது தோழர் குடியரசுத் தலைவரின் இரத்தம்<br />
குண்டுகளையும் இயந்திரத் துப்பாக்கிகளையும்விட <br />
அதிகமான வலுவோடு தாக்கத் தொடங்கும்.<br />
அதைப் போலவே மீண்டும் நமது முஷ்டியும்.<br />
<br />
பாடுவது என்பது எத்தனை கடினம்<br />
பயங்கரத்தை நான் பாடியே ஆக வேண்டும் என்ற போதும்<br />
நான் வாழும் வாழ்க்கையாக பயங்கரம்<br />
நான் மரணித்துக் கொண்டிருக்கும் பயங்கரம்<br />
இத்தனைக்கும் மத்தியில்,<br />
மௌனமும் கூக்குரலும் எனது பாடலை முடிக்கும்<br />
எல்லையற்ற இந்தப் பல தருணங்களில்<br />
நான் என்னைக் காண்பது எவ்வளவு கடினம்<br />
நான் காண்பது நான் என்றுமே காணாதவை<br />
நான் உணர்ந்தவை, உணர்பவை<br />
தக்க தருணத்தைப் பிறப்பிக்கும்.<br />
<br />
***<br />
மேற்கோள்கள்:<br />
<br />
1. இந்தப் பாடலின் ஆங்கில மொழியாக்கத்திற்கு: <span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt; line-height: 115%;">Joan Hara,<span style="mso-spacerun: yes;">
</span><i style="mso-bidi-font-style: normal;">An<span style="mso-spacerun: yes;">
</span>Unfinished Song: Life of Victor Hara</i>, Jonathan Cape, New York, 1997</span> </span><br />
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">2. இந்தப் பாடலின் ஆங்கில மொழியாக்கத்திற்கு: <span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">Tracy Charles, Violeta Parra
& the concept of cultural discourse,<span style="font-family: "arial unicode ms" , "sans-serif";"> </span><i style="mso-bidi-font-style: normal;">tracycharles.blogspot.com/2007/01/violeta-parra-concept-of-cultural.htm</i></span></span></div>
</div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">3. இந்தப் பாடலின் ஆங்கில மொழியாக்கத்திற்கு: </span><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">Duerme Negrito, <i style="mso-bidi-font-style: normal;">Wikipedia</i>.</span></span> </span><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"></span><br />
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"></span></span></div>
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">
</span><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">
<br />
4. இந்தப் பாடலும் ஃபிரான்ஸிஸ்கோ விஜா பற்றிய பாடலும் ஆங்கில மொழியாக்கத்துடன்
யு ட்யூபில் கிடைக்கின்றன. </span><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><i style="mso-bidi-font-style: normal;"><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12pt;">https://youtu.be/BfEHz5gBWHY; https://youtu.be/3koGm4F14WE</span></i></span><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<i style="mso-bidi-font-style: normal;"><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12pt;"><br /></span></i><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"></span></div>
</span><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">
<br />
5. இந்தக் கவிதையின் ஆங்கில மொழியாக்கத்திற்கு: </span><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt; line-height: 115%;">Joan Hara,<span style="mso-spacerun: yes;">
</span><i style="mso-bidi-font-style: normal;">An<span style="mso-spacerun: yes;"> </span>Unfinished Song: Life of Victor Hara</i>,
Jonathan Cape, New York, 1997.</span></span></span><br />
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><!--[if gte mso 9]><xml>
<w:WordDocument>
<w:View>Normal</w:View>
<w:Zoom>0</w:Zoom>
<w:TrackMoves/>
<w:TrackFormatting/>
<w:PunctuationKerning/>
<w:ValidateAgainstSchemas/>
<w:SaveIfXMLInvalid>false</w:SaveIfXMLInvalid>
<w:IgnoreMixedContent>false</w:IgnoreMixedContent>
<w:AlwaysShowPlaceholderText>false</w:AlwaysShowPlaceholderText>
<w:DoNotPromoteQF/>
<w:LidThemeOther>EN-US</w:LidThemeOther>
<w:LidThemeAsian>X-NONE</w:LidThemeAsian>
<w:LidThemeComplexScript>X-NONE</w:LidThemeComplexScript>
<w:Compatibility>
<w:BreakWrappedTables/>
<w:SnapToGridInCell/>
<w:WrapTextWithPunct/>
<w:UseAsianBreakRules/>
<w:DontGrowAutofit/>
<w:SplitPgBreakAndParaMark/>
<w:DontVertAlignCellWithSp/>
<w:DontBreakConstrainedForcedTables/>
<w:DontVertAlignInTxbx/>
<w:Word11KerningPairs/>
<w:CachedColBalance/>
</w:Compatibility>
<w:BrowserLevel>MicrosoftInternetExplorer4</w:BrowserLevel>
<m:mathPr>
<m:mathFont m:val="Cambria Math"/>
<m:brkBin m:val="before"/>
<m:brkBinSub m:val="--"/>
<m:smallFrac m:val="off"/>
<m:dispDef/>
<m:lMargin m:val="0"/>
<m:rMargin m:val="0"/>
<m:defJc m:val="centerGroup"/>
<m:wrapIndent m:val="1440"/>
<m:intLim m:val="subSup"/>
<m:naryLim m:val="undOvr"/>
</m:mathPr></w:WordDocument>
</xml><![endif]--><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><!--[if gte mso 9]><xml>
<w:LatentStyles DefLockedState="false" DefUnhideWhenUsed="true"
DefSemiHidden="true" DefQFormat="false" DefPriority="99"
LatentStyleCount="267">
<w:LsdException Locked="false" Priority="0" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Normal"/>
<w:LsdException Locked="false" Priority="9" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="heading 1"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 2"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 3"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 4"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 5"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 6"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 7"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 8"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 9"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 1"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 2"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 3"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 4"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 5"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 6"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 7"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 8"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 9"/>
<w:LsdException Locked="false" Priority="35" QFormat="true" Name="caption"/>
<w:LsdException Locked="false" Priority="10" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Title"/>
<w:LsdException Locked="false" Priority="1" Name="Default Paragraph Font"/>
<w:LsdException Locked="false" Priority="11" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtitle"/>
<w:LsdException Locked="false" Priority="22" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Strong"/>
<w:LsdException Locked="false" Priority="20" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Emphasis"/>
<w:LsdException Locked="false" Priority="59" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Table Grid"/>
<w:LsdException Locked="false" UnhideWhenUsed="false" Name="Placeholder Text"/>
<w:LsdException Locked="false" Priority="1" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="No Spacing"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 1"/>
<w:LsdException Locked="false" UnhideWhenUsed="false" Name="Revision"/>
<w:LsdException Locked="false" Priority="34" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="List Paragraph"/>
<w:LsdException Locked="false" Priority="29" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Quote"/>
<w:LsdException Locked="false" Priority="30" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Quote"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="19" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtle Emphasis"/>
<w:LsdException Locked="false" Priority="21" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Emphasis"/>
<w:LsdException Locked="false" Priority="31" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtle Reference"/>
<w:LsdException Locked="false" Priority="32" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Reference"/>
<w:LsdException Locked="false" Priority="33" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Book Title"/>
<w:LsdException Locked="false" Priority="37" Name="Bibliography"/>
<w:LsdException Locked="false" Priority="39" QFormat="true" Name="TOC Heading"/>
</w:LatentStyles>
</xml><![endif]--><!--[if gte mso 10]>
<style>
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:"Times New Roman";
mso-bidi-theme-font:minor-bidi;}
</style>
<![endif]--><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt; line-height: 115%;"></span></span></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt; line-height: 115%;"> </span>
<br />
6. இந்தப் பாடலின் ஆங்கில மொழியாக்கதிற்கு: மேற் சொன்ன நூல்<br />
<br />
7. ஸ்பானிய மொழியில் எழுதப்பட்ட இந்தப் பாடலுக்குக்குப் பல்வேறு ஆங்கில மொழியாக்கங்கள்
உள்ளன. இந்தக் கட்டுரையாசிரியர் கண்ணில்பட்ட முதல் ஆங்கில மொழியாக்கம், </span></span><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><!--[if gte mso 9]><xml>
<w:WordDocument>
<w:View>Normal</w:View>
<w:Zoom>0</w:Zoom>
<w:TrackMoves/>
<w:TrackFormatting/>
<w:PunctuationKerning/>
<w:ValidateAgainstSchemas/>
<w:SaveIfXMLInvalid>false</w:SaveIfXMLInvalid>
<w:IgnoreMixedContent>false</w:IgnoreMixedContent>
<w:AlwaysShowPlaceholderText>false</w:AlwaysShowPlaceholderText>
<w:DoNotPromoteQF/>
<w:LidThemeOther>EN-US</w:LidThemeOther>
<w:LidThemeAsian>X-NONE</w:LidThemeAsian>
<w:LidThemeComplexScript>X-NONE</w:LidThemeComplexScript>
<w:Compatibility>
<w:BreakWrappedTables/>
<w:SnapToGridInCell/>
<w:WrapTextWithPunct/>
<w:UseAsianBreakRules/>
<w:DontGrowAutofit/>
<w:SplitPgBreakAndParaMark/>
<w:DontVertAlignCellWithSp/>
<w:DontBreakConstrainedForcedTables/>
<w:DontVertAlignInTxbx/>
<w:Word11KerningPairs/>
<w:CachedColBalance/>
</w:Compatibility>
<w:BrowserLevel>MicrosoftInternetExplorer4</w:BrowserLevel>
<m:mathPr>
<m:mathFont m:val="Cambria Math"/>
<m:brkBin m:val="before"/>
<m:brkBinSub m:val="--"/>
<m:smallFrac m:val="off"/>
<m:dispDef/>
<m:lMargin m:val="0"/>
<m:rMargin m:val="0"/>
<m:defJc m:val="centerGroup"/>
<m:wrapIndent m:val="1440"/>
<m:intLim m:val="subSup"/>
<m:naryLim m:val="undOvr"/>
</m:mathPr></w:WordDocument>
</xml><![endif]--><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><!--[if gte mso 9]><xml>
<w:LatentStyles DefLockedState="false" DefUnhideWhenUsed="true"
DefSemiHidden="true" DefQFormat="false" DefPriority="99"
LatentStyleCount="267">
<w:LsdException Locked="false" Priority="0" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Normal"/>
<w:LsdException Locked="false" Priority="9" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="heading 1"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 2"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 3"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 4"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 5"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 6"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 7"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 8"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 9"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 1"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 2"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 3"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 4"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 5"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 6"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 7"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 8"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 9"/>
<w:LsdException Locked="false" Priority="35" QFormat="true" Name="caption"/>
<w:LsdException Locked="false" Priority="10" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Title"/>
<w:LsdException Locked="false" Priority="1" Name="Default Paragraph Font"/>
<w:LsdException Locked="false" Priority="11" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtitle"/>
<w:LsdException Locked="false" Priority="22" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Strong"/>
<w:LsdException Locked="false" Priority="20" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Emphasis"/>
<w:LsdException Locked="false" Priority="59" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Table Grid"/>
<w:LsdException Locked="false" UnhideWhenUsed="false" Name="Placeholder Text"/>
<w:LsdException Locked="false" Priority="1" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="No Spacing"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 1"/>
<w:LsdException Locked="false" UnhideWhenUsed="false" Name="Revision"/>
<w:LsdException Locked="false" Priority="34" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="List Paragraph"/>
<w:LsdException Locked="false" Priority="29" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Quote"/>
<w:LsdException Locked="false" Priority="30" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Quote"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="19" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtle Emphasis"/>
<w:LsdException Locked="false" Priority="21" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Emphasis"/>
<w:LsdException Locked="false" Priority="31" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtle Reference"/>
<w:LsdException Locked="false" Priority="32" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Reference"/>
<w:LsdException Locked="false" Priority="33" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Book Title"/>
<w:LsdException Locked="false" Priority="37" Name="Bibliography"/>
<w:LsdException Locked="false" Priority="39" QFormat="true" Name="TOC Heading"/>
</w:LatentStyles>
</xml><![endif]--><!--[if gte mso 10]>
<style>
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:"Times New Roman";
mso-bidi-theme-font:minor-bidi;}
</style>
<![endif]--><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt; line-height: 115%;">Lanka Guardian </span> என்னும் ஆங்கில ஏட்டில் </span></span></span><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><!--[if gte mso 9]><xml>
<w:WordDocument>
<w:View>Normal</w:View>
<w:Zoom>0</w:Zoom>
<w:TrackMoves/>
<w:TrackFormatting/>
<w:PunctuationKerning/>
<w:ValidateAgainstSchemas/>
<w:SaveIfXMLInvalid>false</w:SaveIfXMLInvalid>
<w:IgnoreMixedContent>false</w:IgnoreMixedContent>
<w:AlwaysShowPlaceholderText>false</w:AlwaysShowPlaceholderText>
<w:DoNotPromoteQF/>
<w:LidThemeOther>EN-US</w:LidThemeOther>
<w:LidThemeAsian>X-NONE</w:LidThemeAsian>
<w:LidThemeComplexScript>X-NONE</w:LidThemeComplexScript>
<w:Compatibility>
<w:BreakWrappedTables/>
<w:SnapToGridInCell/>
<w:WrapTextWithPunct/>
<w:UseAsianBreakRules/>
<w:DontGrowAutofit/>
<w:SplitPgBreakAndParaMark/>
<w:DontVertAlignCellWithSp/>
<w:DontBreakConstrainedForcedTables/>
<w:DontVertAlignInTxbx/>
<w:Word11KerningPairs/>
<w:CachedColBalance/>
</w:Compatibility>
<w:BrowserLevel>MicrosoftInternetExplorer4</w:BrowserLevel>
<m:mathPr>
<m:mathFont m:val="Cambria Math"/>
<m:brkBin m:val="before"/>
<m:brkBinSub m:val="--"/>
<m:smallFrac m:val="off"/>
<m:dispDef/>
<m:lMargin m:val="0"/>
<m:rMargin m:val="0"/>
<m:defJc m:val="centerGroup"/>
<m:wrapIndent m:val="1440"/>
<m:intLim m:val="subSup"/>
<m:naryLim m:val="undOvr"/>
</m:mathPr></w:WordDocument>
</xml><![endif]--><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><!--[if gte mso 9]><xml>
<w:LatentStyles DefLockedState="false" DefUnhideWhenUsed="true"
DefSemiHidden="true" DefQFormat="false" DefPriority="99"
LatentStyleCount="267">
<w:LsdException Locked="false" Priority="0" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Normal"/>
<w:LsdException Locked="false" Priority="9" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="heading 1"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 2"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 3"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 4"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 5"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 6"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 7"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 8"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 9"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 1"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 2"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 3"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 4"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 5"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 6"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 7"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 8"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 9"/>
<w:LsdException Locked="false" Priority="35" QFormat="true" Name="caption"/>
<w:LsdException Locked="false" Priority="10" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Title"/>
<w:LsdException Locked="false" Priority="1" Name="Default Paragraph Font"/>
<w:LsdException Locked="false" Priority="11" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtitle"/>
<w:LsdException Locked="false" Priority="22" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Strong"/>
<w:LsdException Locked="false" Priority="20" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Emphasis"/>
<w:LsdException Locked="false" Priority="59" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Table Grid"/>
<w:LsdException Locked="false" UnhideWhenUsed="false" Name="Placeholder Text"/>
<w:LsdException Locked="false" Priority="1" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="No Spacing"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 1"/>
<w:LsdException Locked="false" UnhideWhenUsed="false" Name="Revision"/>
<w:LsdException Locked="false" Priority="34" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="List Paragraph"/>
<w:LsdException Locked="false" Priority="29" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Quote"/>
<w:LsdException Locked="false" Priority="30" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Quote"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="19" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtle Emphasis"/>
<w:LsdException Locked="false" Priority="21" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Emphasis"/>
<w:LsdException Locked="false" Priority="31" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtle Reference"/>
<w:LsdException Locked="false" Priority="32" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Reference"/>
<w:LsdException Locked="false" Priority="33" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Book Title"/>
<w:LsdException Locked="false" Priority="37" Name="Bibliography"/>
<w:LsdException Locked="false" Priority="39" QFormat="true" Name="TOC Heading"/>
</w:LatentStyles>
</xml><![endif]--><!--[if gte mso 10]>
<style>
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:"Times New Roman";
mso-bidi-theme-font:minor-bidi;}
</style>
<![endif]--><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt; line-height: 115%;">ஏட்டில் (Vol 1, No.10,September 15, 1979)</span> வெளியிடப்பட்டது. அந்த ஆங்கில மொழியாக்கத்தின் தமிழாக்கம் ‘மண்ணும்
சொல்லும்: மூன்றாம் உலகக் கவிதைகள்' என்னும் தொகுப்பில் (அன்னம் (பி) லிமி டெட், சிவகங்கை,
1991; அடையாளம், புத்தா நத்தம், 2006) இடம் பெற்றுள்ளது. இன்னொரு ஆங்கில மொழியாக்கம், இணையதளமொன்றிலிருந்து பெறப்பட்டது. அதன் தமிழாக்கம் ‘செம்மலர்' ஏப்ரல் இதழில்
வெளிவந்த ‘பொய்களின் மீது கட்டப்பட்டுள்ள பாசிசத்துக்கு எதிராக...' என்னும் கட்டுரையில்
உள்ளது. இந்தக் கட்டுரையிலுள்ள தமிழாக்கம், ஜோன் ஹாரா எழுதியுள்ள மேற்சொன்ன நூலிலுள்ளது.
இந்த நூலிலுள்ள கடைசி மூன்று அத்தியாயங்களை </span></span></span></span><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><!--[if gte mso 9]><xml>
<w:WordDocument>
<w:View>Normal</w:View>
<w:Zoom>0</w:Zoom>
<w:TrackMoves/>
<w:TrackFormatting/>
<w:PunctuationKerning/>
<w:ValidateAgainstSchemas/>
<w:SaveIfXMLInvalid>false</w:SaveIfXMLInvalid>
<w:IgnoreMixedContent>false</w:IgnoreMixedContent>
<w:AlwaysShowPlaceholderText>false</w:AlwaysShowPlaceholderText>
<w:DoNotPromoteQF/>
<w:LidThemeOther>EN-US</w:LidThemeOther>
<w:LidThemeAsian>X-NONE</w:LidThemeAsian>
<w:LidThemeComplexScript>X-NONE</w:LidThemeComplexScript>
<w:Compatibility>
<w:BreakWrappedTables/>
<w:SnapToGridInCell/>
<w:WrapTextWithPunct/>
<w:UseAsianBreakRules/>
<w:DontGrowAutofit/>
<w:SplitPgBreakAndParaMark/>
<w:DontVertAlignCellWithSp/>
<w:DontBreakConstrainedForcedTables/>
<w:DontVertAlignInTxbx/>
<w:Word11KerningPairs/>
<w:CachedColBalance/>
</w:Compatibility>
<w:BrowserLevel>MicrosoftInternetExplorer4</w:BrowserLevel>
<m:mathPr>
<m:mathFont m:val="Cambria Math"/>
<m:brkBin m:val="before"/>
<m:brkBinSub m:val="--"/>
<m:smallFrac m:val="off"/>
<m:dispDef/>
<m:lMargin m:val="0"/>
<m:rMargin m:val="0"/>
<m:defJc m:val="centerGroup"/>
<m:wrapIndent m:val="1440"/>
<m:intLim m:val="subSup"/>
<m:naryLim m:val="undOvr"/>
</m:mathPr></w:WordDocument>
</xml><![endif]--><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><!--[if gte mso 9]><xml>
<w:LatentStyles DefLockedState="false" DefUnhideWhenUsed="true"
DefSemiHidden="true" DefQFormat="false" DefPriority="99"
LatentStyleCount="267">
<w:LsdException Locked="false" Priority="0" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Normal"/>
<w:LsdException Locked="false" Priority="9" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="heading 1"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 2"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 3"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 4"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 5"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 6"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 7"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 8"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 9"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 1"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 2"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 3"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 4"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 5"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 6"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 7"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 8"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 9"/>
<w:LsdException Locked="false" Priority="35" QFormat="true" Name="caption"/>
<w:LsdException Locked="false" Priority="10" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Title"/>
<w:LsdException Locked="false" Priority="1" Name="Default Paragraph Font"/>
<w:LsdException Locked="false" Priority="11" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtitle"/>
<w:LsdException Locked="false" Priority="22" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Strong"/>
<w:LsdException Locked="false" Priority="20" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Emphasis"/>
<w:LsdException Locked="false" Priority="59" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Table Grid"/>
<w:LsdException Locked="false" UnhideWhenUsed="false" Name="Placeholder Text"/>
<w:LsdException Locked="false" Priority="1" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="No Spacing"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 1"/>
<w:LsdException Locked="false" UnhideWhenUsed="false" Name="Revision"/>
<w:LsdException Locked="false" Priority="34" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="List Paragraph"/>
<w:LsdException Locked="false" Priority="29" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Quote"/>
<w:LsdException Locked="false" Priority="30" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Quote"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="19" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtle Emphasis"/>
<w:LsdException Locked="false" Priority="21" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Emphasis"/>
<w:LsdException Locked="false" Priority="31" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtle Reference"/>
<w:LsdException Locked="false" Priority="32" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Reference"/>
<w:LsdException Locked="false" Priority="33" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Book Title"/>
<w:LsdException Locked="false" Priority="37" Name="Bibliography"/>
<w:LsdException Locked="false" Priority="39" QFormat="true" Name="TOC Heading"/>
</w:LatentStyles>
</xml><![endif]--><!--[if gte mso 10]>
<style>
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:"Times New Roman";
mso-bidi-theme-font:minor-bidi;}
</style>
<![endif]--><span style="font-size: small;"><i><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; line-height: 115%;">ww.historyisaweapon.com/defcon1/jaraunfinsong.html</span></i></span><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt; line-height: 115%;"> </span> என்னும் இணணயதளத்திலிருந்து
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஹாராவின் துணைவியாரும் ஸ்பானிய மொழி நன்கு அறிந்தவரு
மான ஜோனின் ஆங்கில மொழியாக்கம்தான் சரியான மொழியாக்கம் என்று கருத வேண்டும். <br />
<br />
8. வயலெட்டா பர்ரா<br />
<br />
9 </span></span></span></span></span><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><!--[if gte mso 9]><xml>
<w:WordDocument>
<w:View>Normal</w:View>
<w:Zoom>0</w:Zoom>
<w:TrackMoves/>
<w:TrackFormatting/>
<w:PunctuationKerning/>
<w:ValidateAgainstSchemas/>
<w:SaveIfXMLInvalid>false</w:SaveIfXMLInvalid>
<w:IgnoreMixedContent>false</w:IgnoreMixedContent>
<w:AlwaysShowPlaceholderText>false</w:AlwaysShowPlaceholderText>
<w:DoNotPromoteQF/>
<w:LidThemeOther>EN-US</w:LidThemeOther>
<w:LidThemeAsian>X-NONE</w:LidThemeAsian>
<w:LidThemeComplexScript>X-NONE</w:LidThemeComplexScript>
<w:Compatibility>
<w:BreakWrappedTables/>
<w:SnapToGridInCell/>
<w:WrapTextWithPunct/>
<w:UseAsianBreakRules/>
<w:DontGrowAutofit/>
<w:SplitPgBreakAndParaMark/>
<w:DontVertAlignCellWithSp/>
<w:DontBreakConstrainedForcedTables/>
<w:DontVertAlignInTxbx/>
<w:Word11KerningPairs/>
<w:CachedColBalance/>
</w:Compatibility>
<w:BrowserLevel>MicrosoftInternetExplorer4</w:BrowserLevel>
<m:mathPr>
<m:mathFont m:val="Cambria Math"/>
<m:brkBin m:val="before"/>
<m:brkBinSub m:val="--"/>
<m:smallFrac m:val="off"/>
<m:dispDef/>
<m:lMargin m:val="0"/>
<m:rMargin m:val="0"/>
<m:defJc m:val="centerGroup"/>
<m:wrapIndent m:val="1440"/>
<m:intLim m:val="subSup"/>
<m:naryLim m:val="undOvr"/>
</m:mathPr></w:WordDocument>
</xml><![endif]--><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><!--[if gte mso 9]><xml>
<w:LatentStyles DefLockedState="false" DefUnhideWhenUsed="true"
DefSemiHidden="true" DefQFormat="false" DefPriority="99"
LatentStyleCount="267">
<w:LsdException Locked="false" Priority="0" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Normal"/>
<w:LsdException Locked="false" Priority="9" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="heading 1"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 2"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 3"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 4"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 5"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 6"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 7"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 8"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 9"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 1"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 2"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 3"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 4"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 5"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 6"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 7"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 8"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 9"/>
<w:LsdException Locked="false" Priority="35" QFormat="true" Name="caption"/>
<w:LsdException Locked="false" Priority="10" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Title"/>
<w:LsdException Locked="false" Priority="1" Name="Default Paragraph Font"/>
<w:LsdException Locked="false" Priority="11" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtitle"/>
<w:LsdException Locked="false" Priority="22" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Strong"/>
<w:LsdException Locked="false" Priority="20" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Emphasis"/>
<w:LsdException Locked="false" Priority="59" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Table Grid"/>
<w:LsdException Locked="false" UnhideWhenUsed="false" Name="Placeholder Text"/>
<w:LsdException Locked="false" Priority="1" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="No Spacing"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 1"/>
<w:LsdException Locked="false" UnhideWhenUsed="false" Name="Revision"/>
<w:LsdException Locked="false" Priority="34" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="List Paragraph"/>
<w:LsdException Locked="false" Priority="29" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Quote"/>
<w:LsdException Locked="false" Priority="30" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Quote"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="19" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtle Emphasis"/>
<w:LsdException Locked="false" Priority="21" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Emphasis"/>
<w:LsdException Locked="false" Priority="31" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtle Reference"/>
<w:LsdException Locked="false" Priority="32" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Reference"/>
<w:LsdException Locked="false" Priority="33" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Book Title"/>
<w:LsdException Locked="false" Priority="37" Name="Bibliography"/>
<w:LsdException Locked="false" Priority="39" QFormat="true" Name="TOC Heading"/>
</w:LatentStyles>
</xml><![endif]--><!--[if gte mso 10]>
<style>
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:"Times New Roman";
mso-bidi-theme-font:minor-bidi;}
</style>
<![endif]--><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12pt; line-height: 115%;">Violenc is the midwife of
democracy in Chile </span>என்று வலதுசாரிப் பிற்போக்காளர்கள் கூறிவந்ததால், அதை இங்கு முரண்நகையாக விக்டர்
ஹாரா பயன்படுத்துகிறார் என்று ஊகிக்க இடமுண்டு.</span></span></span></span></span></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
</div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><!--[if gte mso 9]><xml>
<w:WordDocument>
<w:View>Normal</w:View>
<w:Zoom>0</w:Zoom>
<w:TrackMoves/>
<w:TrackFormatting/>
<w:PunctuationKerning/>
<w:ValidateAgainstSchemas/>
<w:SaveIfXMLInvalid>false</w:SaveIfXMLInvalid>
<w:IgnoreMixedContent>false</w:IgnoreMixedContent>
<w:AlwaysShowPlaceholderText>false</w:AlwaysShowPlaceholderText>
<w:DoNotPromoteQF/>
<w:LidThemeOther>EN-US</w:LidThemeOther>
<w:LidThemeAsian>X-NONE</w:LidThemeAsian>
<w:LidThemeComplexScript>X-NONE</w:LidThemeComplexScript>
<w:Compatibility>
<w:BreakWrappedTables/>
<w:SnapToGridInCell/>
<w:WrapTextWithPunct/>
<w:UseAsianBreakRules/>
<w:DontGrowAutofit/>
<w:SplitPgBreakAndParaMark/>
<w:DontVertAlignCellWithSp/>
<w:DontBreakConstrainedForcedTables/>
<w:DontVertAlignInTxbx/>
<w:Word11KerningPairs/>
<w:CachedColBalance/>
</w:Compatibility>
<w:BrowserLevel>MicrosoftInternetExplorer4</w:BrowserLevel>
<m:mathPr>
<m:mathFont m:val="Cambria Math"/>
<m:brkBin m:val="before"/>
<m:brkBinSub m:val="--"/>
<m:smallFrac m:val="off"/>
<m:dispDef/>
<m:lMargin m:val="0"/>
<m:rMargin m:val="0"/>
<m:defJc m:val="centerGroup"/>
<m:wrapIndent m:val="1440"/>
<m:intLim m:val="subSup"/>
<m:naryLim m:val="undOvr"/>
</m:mathPr></w:WordDocument>
</xml><![endif]--><!--[if gte mso 9]><xml>
<w:LatentStyles DefLockedState="false" DefUnhideWhenUsed="true"
DefSemiHidden="true" DefQFormat="false" DefPriority="99"
LatentStyleCount="267">
<w:LsdException Locked="false" Priority="0" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Normal"/>
<w:LsdException Locked="false" Priority="9" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="heading 1"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 2"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 3"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 4"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 5"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 6"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 7"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 8"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 9"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 1"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 2"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 3"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 4"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 5"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 6"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 7"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 8"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 9"/>
<w:LsdException Locked="false" Priority="35" QFormat="true" Name="caption"/>
<w:LsdException Locked="false" Priority="10" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Title"/>
<w:LsdException Locked="false" Priority="1" Name="Default Paragraph Font"/>
<w:LsdException Locked="false" Priority="11" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtitle"/>
<w:LsdException Locked="false" Priority="22" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Strong"/>
<w:LsdException Locked="false" Priority="20" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Emphasis"/>
<w:LsdException Locked="false" Priority="59" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Table Grid"/>
<w:LsdException Locked="false" UnhideWhenUsed="false" Name="Placeholder Text"/>
<w:LsdException Locked="false" Priority="1" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="No Spacing"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 1"/>
<w:LsdException Locked="false" UnhideWhenUsed="false" Name="Revision"/>
<w:LsdException Locked="false" Priority="34" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="List Paragraph"/>
<w:LsdException Locked="false" Priority="29" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Quote"/>
<w:LsdException Locked="false" Priority="30" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Quote"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="19" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtle Emphasis"/>
<w:LsdException Locked="false" Priority="21" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Emphasis"/>
<w:LsdException Locked="false" Priority="31" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtle Reference"/>
<w:LsdException Locked="false" Priority="32" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Reference"/>
<w:LsdException Locked="false" Priority="33" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Book Title"/>
<w:LsdException Locked="false" Priority="37" Name="Bibliography"/>
<w:LsdException Locked="false" Priority="39" QFormat="true" Name="TOC Heading"/>
</w:LatentStyles>
</xml><![endif]--><!--[if gte mso 10]>
<style>
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:10.0pt;
font-family:"Calibri","sans-serif";}
</style>
<![endif]-->
</span></span></span></span></span></span><br />
<div class="MsoEndnoteText">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><span style="font-family: "arial unicode ms" , "sans-serif";">தரவுகள்:</span></span></span></span></div>
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">
<div class="MsoEndnoteText" style="line-height: normal; margin-bottom: .0001pt; margin-bottom: 0in; margin-left: 81.0pt; margin-right: 0in; margin-top: 0in; mso-list: l0 level1 lfo1; text-indent: -.25in;">
<span style="font-family: "tscu_paranar"; mso-bidi-font-family: TSCu_Paranar; mso-fareast-font-family: TSCu_Paranar;"><span style="mso-list: Ignore;">1.<span style="font: 7.0pt "Times New Roman";"> </span></span></span><span style="font-family: "latha";">Amy
Cunninfham, Victor Jara-The Martyred Musician of Nueva Cancion Chilena, </span><i style="mso-bidi-font-style: normal;"><span style="background: white none repeat scroll 0% 0%; font-family: "tscu_paranar";">soundsandcolours.com/.../<b>chile</b>/<b>victor</b>-<b>jara-the-martyred</b>-<b>musician-of-nue</b>
(</span></i><span style="background: white none repeat scroll 0% 0%; font-family: "tscu_paranar";">accessed on 20<sup>th</sup> December 2014)</span><span style="font-family: "tscu_paranar";"></span></div>
<div class="MsoEndnoteText" style="line-height: normal; margin-bottom: .0001pt; margin-bottom: 0in; margin-left: 81.0pt; margin-right: 0in; margin-top: 0in; mso-list: l0 level1 lfo1; text-indent: -.25in;">
<span style="font-family: "tscu_paranar"; mso-bidi-font-family: TSCu_Paranar; mso-fareast-font-family: TSCu_Paranar;"><span style="mso-list: Ignore;">2.<span style="font: 7.0pt "Times New Roman";">
</span></span></span><span style="background: white none repeat scroll 0% 0%; font-family: "tscu_paranar";">Joan Hara<i style="mso-bidi-font-style: normal;">, An Unfinished Song: The Life of Victor
Jara, Jonathan Cape, New York, 1997</i></span><i style="mso-bidi-font-style: normal;"><span style="font-family: "tscu_paranar";"></span></i></div>
<div class="MsoEndnoteText" style="line-height: normal; margin-bottom: .0001pt; margin-bottom: 0in; margin-left: 81.0pt; margin-right: 0in; margin-top: 0in; mso-list: l0 level1 lfo1; text-indent: -.25in;">
<span style="font-family: "tscu_paranar"; mso-bidi-font-family: TSCu_Paranar; mso-fareast-font-family: TSCu_Paranar;"><span style="mso-list: Ignore;">3.<span style="font: 7.0pt "Times New Roman";">
</span></span></span><span style="background: white none repeat scroll 0% 0%; font-family: "tscu_paranar";">Violeta Parra<i style="mso-bidi-font-style: normal;">, Wikipedia (</i>accessed on 14<sup>th</sup>
January 2014)</span><i style="mso-bidi-font-style: normal;"><span style="font-family: "tscu_paranar";"></span></i></div>
<div class="MsoEndnoteText" style="line-height: normal; margin-bottom: .0001pt; margin-bottom: 0in; margin-left: 81.0pt; margin-right: 0in; margin-top: 0in; mso-list: l0 level1 lfo1; text-indent: -.25in;">
<span style="font-family: "tscu_paranar"; mso-bidi-font-family: TSCu_Paranar; mso-fareast-font-family: TSCu_Paranar;"><span style="mso-list: Ignore;">4.<span style="font: 7.0pt "Times New Roman";">
</span></span></span><span style="background: white none repeat scroll 0% 0%; font-family: "tscu_paranar";">1973<span style="mso-spacerun: yes;"> </span>Chilean coup d’etat<i style="mso-bidi-font-style: normal;">, Wikipedia </i>( accessed on 31<sup>st</sup> January 2015)</span><span style="font-family: "tscu_paranar";"></span></div>
<div class="MsoListParagraph" style="background: white; margin-left: 81.0pt; mso-add-space: auto; mso-line-height-alt: 6.25pt; mso-list: l0 level1 lfo1; text-indent: -.25in;">
<span style="font-family: "tscu_paranar"; font-size: 10.0pt;"><span style="mso-list: Ignore;">5.<span style="font: 7.0pt "Times New Roman";">
</span></span></span><i style="mso-bidi-font-style: normal;"><span style="background: white none repeat scroll 0% 0%; font-family: "tscu_paranar";">Tracy Charles, Violeta Parra &the concept of cultural
discourse</span></i><i style="mso-bidi-font-style: normal;"><span style="background: white none repeat scroll 0% 0%; font-family: "tscu_paranar"; font-size: 10pt;">, t</span></i><cite><span style="font-family: "tscu_paranar"; font-size: 10pt;">racycharles.blogspot.com/2007/01/<b>violeta</b>-<b>parra</b>-<b>concept-of-cultural</b>.html
(accessed on 14th January 2014)</span></cite><i style="mso-bidi-font-style: normal;"><span style="font-family: "tscu_paranar"; font-size: 10pt;"></span></i></div>
<div class="MsoEndnoteText" style="line-height: normal; margin-bottom: .0001pt; margin-bottom: 0in; margin-left: 81.0pt; margin-right: 0in; margin-top: 0in; mso-list: l0 level1 lfo1; text-indent: -.25in;">
<span style="font-family: "tscu_paranar"; mso-bidi-font-family: TSCu_Paranar; mso-fareast-font-family: TSCu_Paranar;"><span style="mso-list: Ignore;">6.<span style="font: 7.0pt "Times New Roman";">
</span></span></span><span style="font-family: "tscu_paranar";">Mercedes Sosa Obituary<i style="mso-bidi-font-style: normal;">, The Guardian, London, 5<sup>th</sup>
October 2009 </i>(accessed on 11<sup>th</sup> October 2009)</span></div>
<div class="MsoListParagraph" style="background: white; line-height: 14.4pt; margin-bottom: .0001pt; margin-bottom: 0in; margin-left: 81.0pt; margin-right: 0in; margin-top: 5.05pt; mso-add-space: auto; mso-list: l0 level1 lfo1; mso-outline-level: 2; text-indent: -.25in;">
<span style="font-family: "tscu_paranar"; font-size: 10.0pt;"><span style="mso-list: Ignore;">7.<span style="font: 7.0pt "Times New Roman";">
</span></span></span><span style="font-family: "tscu_paranar"; font-size: 10pt;">D.Lencho, Mercedes Sosa,
1935-2009, <i style="mso-bidi-font-style: normal;">WSWS.org</i>, 10<sup>th</sup>
October 2009 (accessed on 11<sup>th</sup> October 2009)</span></div>
<div class="MsoEndnoteText" style="line-height: normal; margin-bottom: .0001pt; margin-bottom: 0in; margin-left: 81.0pt; margin-right: 0in; margin-top: 0in; mso-list: l0 level1 lfo1; text-indent: -.25in;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif";"><span style="mso-list: Ignore;">8.<span style="font: 7.0pt "Times New Roman";"> </span></span></span><span style="font-family: "arial unicode ms" , "sans-serif";">Duerme Negrito<i style="mso-bidi-font-style: normal;">, Wikipedia</i></span></div>
<div class="MsoEndnoteText" style="line-height: normal; margin-bottom: .0001pt; margin-bottom: 0in; margin-left: 81.0pt; margin-right: 0in; margin-top: 0in; mso-list: l0 level1 lfo1; text-indent: -.25in;">
<span style="font-family: "tscu_paranar"; mso-bidi-font-family: TSCu_Paranar; mso-fareast-font-family: TSCu_Paranar;"><span style="mso-list: Ignore;">9.<span style="font: 7.0pt "Times New Roman";">
</span></span></span><span style="font-family: "tscu_paranar";">Eduardo Galeano,<i style="mso-bidi-font-style: normal;"><span style="mso-spacerun: yes;"> </span>The Children of the Days,A
Calender of Human History</i>, Nation Books, New York, 2013</span></div>
</span></span></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
புதுவிசை 44வது இதழ்</div>
<!--[if gte mso 9]><xml>
<w:LatentStyles DefLockedState="false" DefUnhideWhenUsed="true"
DefSemiHidden="true" DefQFormat="false" DefPriority="99"
LatentStyleCount="267">
<w:LsdException Locked="false" Priority="0" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Normal"/>
<w:LsdException Locked="false" Priority="9" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="heading 1"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 2"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 3"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 4"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 5"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 6"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 7"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 8"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 9"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 1"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 2"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 3"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 4"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 5"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 6"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 7"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 8"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 9"/>
<w:LsdException Locked="false" Priority="35" QFormat="true" Name="caption"/>
<w:LsdException Locked="false" Priority="10" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Title"/>
<w:LsdException Locked="false" Priority="1" Name="Default Paragraph Font"/>
<w:LsdException Locked="false" Priority="11" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtitle"/>
<w:LsdException Locked="false" Priority="22" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Strong"/>
<w:LsdException Locked="false" Priority="20" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Emphasis"/>
<w:LsdException Locked="false" Priority="59" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Table Grid"/>
<w:LsdException Locked="false" UnhideWhenUsed="false" Name="Placeholder Text"/>
<w:LsdException Locked="false" Priority="1" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="No Spacing"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 1"/>
<w:LsdException Locked="false" UnhideWhenUsed="false" Name="Revision"/>
<w:LsdException Locked="false" Priority="34" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="List Paragraph"/>
<w:LsdException Locked="false" Priority="29" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Quote"/>
<w:LsdException Locked="false" Priority="30" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Quote"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="19" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtle Emphasis"/>
<w:LsdException Locked="false" Priority="21" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Emphasis"/>
<w:LsdException Locked="false" Priority="31" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtle Reference"/>
<w:LsdException Locked="false" Priority="32" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Reference"/>
<w:LsdException Locked="false" Priority="33" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Book Title"/>
<w:LsdException Locked="false" Priority="37" Name="Bibliography"/>
<w:LsdException Locked="false" Priority="39" QFormat="true" Name="TOC Heading"/>
</w:LatentStyles>
</xml><![endif]--><!--[if gte mso 10]>
<style>
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
</style>
<![endif]--><br />
<div class="s3gt_translate_tooltip" id="s3gt_translate_tooltip" is_bottom="true" is_mini="true" style="left: 142px; opacity: 0; position: absolute; top: 6870px;">
<div class="s3gt_translate_tooltip_mini" id="s3gt_translate_tooltip_mini_logo" title="Translate selected text">
</div>
<div class="s3gt_translate_tooltip_mini" id="s3gt_translate_tooltip_mini_sound" title="Play" title_play="Play" title_stop="Stop">
</div>
<div class="s3gt_translate_tooltip_mini" id="s3gt_translate_tooltip_mini_copy" title="Copy text to Clipboard">
</div>
<link href="chrome://s3gt/skin/s3gt_tooltip.css" rel="stylesheet" type="text/css"></link></div>
<div class="s3gt_translate_tooltip" id="s3gt_translate_tooltip" is_bottom="true" is_mini="true" style="left: 543px; position: absolute; top: 19071px;">
<div class="s3gt_translate_tooltip_mini" id="s3gt_translate_tooltip_mini_logo" title="Translate selected text">
</div>
<div class="s3gt_translate_tooltip_mini" id="s3gt_translate_tooltip_mini_sound" title="Play" title_play="Play" title_stop="Stop">
</div>
<div class="s3gt_translate_tooltip_mini" id="s3gt_translate_tooltip_mini_copy" title="Copy text to Clipboard">
</div>
<link href="chrome://s3gt/skin/s3gt_tooltip.css" rel="stylesheet" type="text/css"></link></div>
</div>
புதுவிசைhttp://www.blogger.com/profile/09276344793619872435noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8111967010823738396.post-85365388831126851372016-07-13T09:32:00.000-07:002016-07-13T09:45:52.547-07:00புதுவிசை 46வது இதழின் காலங்கம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<!--[if gte mso 9]><xml>
<w:WordDocument>
<w:View>Normal</w:View>
<w:Zoom>0</w:Zoom>
<w:TrackMoves/>
<w:TrackFormatting/>
<w:PunctuationKerning/>
<w:ValidateAgainstSchemas/>
<w:SaveIfXMLInvalid>false</w:SaveIfXMLInvalid>
<w:IgnoreMixedContent>false</w:IgnoreMixedContent>
<w:AlwaysShowPlaceholderText>false</w:AlwaysShowPlaceholderText>
<w:DoNotPromoteQF/>
<w:LidThemeOther>EN-US</w:LidThemeOther>
<w:LidThemeAsian>X-NONE</w:LidThemeAsian>
<w:LidThemeComplexScript>X-NONE</w:LidThemeComplexScript>
<w:Compatibility>
<w:BreakWrappedTables/>
<w:SnapToGridInCell/>
<w:WrapTextWithPunct/>
<w:UseAsianBreakRules/>
<w:DontGrowAutofit/>
<w:SplitPgBreakAndParaMark/>
<w:DontVertAlignCellWithSp/>
<w:DontBreakConstrainedForcedTables/>
<w:DontVertAlignInTxbx/>
<w:Word11KerningPairs/>
<w:CachedColBalance/>
</w:Compatibility>
<w:BrowserLevel>MicrosoftInternetExplorer4</w:BrowserLevel>
<m:mathPr>
<m:mathFont m:val="Cambria Math"/>
<m:brkBin m:val="before"/>
<m:brkBinSub m:val="--"/>
<m:smallFrac m:val="off"/>
<m:dispDef/>
<m:lMargin m:val="0"/>
<m:rMargin m:val="0"/>
<m:defJc m:val="centerGroup"/>
<m:wrapIndent m:val="1440"/>
<m:intLim m:val="subSup"/>
<m:naryLim m:val="undOvr"/>
</m:mathPr></w:WordDocument>
</xml><![endif]-->
<br />
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKQFEdIeWARexgwVnO88CoqZHcJlBSklagaRPtccUvHNbVx9xwDRllw3EcENoXzJcanHpRwCMvNwZafiLk1bAtEU3jkyw0cyvIQoCSfHf0c0xpr77doJTPtaRRXuu6YArGlKy08JNVLfHs/s1600/visai-46-wrappe1.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKQFEdIeWARexgwVnO88CoqZHcJlBSklagaRPtccUvHNbVx9xwDRllw3EcENoXzJcanHpRwCMvNwZafiLk1bAtEU3jkyw0cyvIQoCSfHf0c0xpr77doJTPtaRRXuu6YArGlKy08JNVLfHs/s400/visai-46-wrappe1.jpg" width="293" /></a><span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><span style="font-size: x-large;">உ</span>டைமையிலும் உற்பத்தியிலும் உற்பத்தி
செய்யப்பட்டவற்றை தமக்குள் பகிர்ந்து கொள்வதிலும் இந்தியச் சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வையும்
சுரண்டலையும் கட்டிக்காக்கும் சட்டப்பூர்வமான அடியாட்படையே இங்குள்ள அரசமைப்பு. “பொத்தாம் பொதுவானது”
என ஜிகினா பூசி திரிந்தாலும் சுரண்டும் வர்க்கத்தின் தேவைகளை நிறைவேற்றவே அது
கடமைப்பட்டுள்ளது. அது பேசும் அறம் முறம் நீதி சட்டம் ஒழுங்கு நாட்டுப்பற்று என்பவையெல்லாம்
சுரண்டும் வர்க்கத்தின் நலனுக்கு உட்பட்டவையே. நாடாளுமன்றம் சட்டமன்றம் நீதிமன்றம்
ராணுவம் காவல்துறை சிறைகள் வங்கிகள் கல்விக்கூடங்கள் மதங்கள் கட்சிகள் ஊடகங்கள்
ஆகியவையும் தமக்குரிய வேலைப் பிரிவினையை திறம்பட நிறைவேற்றி சுரண்டும் வர்க்கத்திற்கே
சேவை செய்யும் கேவலம் அன்றாடம் அம்பலமாகி வருகிறது. </span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br />
ஊரும் உலகும் பார்த்திருக்க யாராலும் பகிரங்கமாக திருட முடியுமா? முடியும் என்கிறார்கள்
இந்தியாவின் பெருவணிகக் குழுமங்களின் முதலாளிகள். ஆமாம், அவர்கள் எவ்வித தடங்கலுமின்றி
சட்டப்பூர்வமாக இந்த நாட்டின் வளங்களையும் நிதியாதாரங்களையும் மக்களது சேமிப்பையும்
போட்டிப் போட்டுக்கொண்டு திருடுகிறார்கள். அவர்கள் கன்னக்கோல் வைக்கவும் களவெடுக்கவும்
களவெடுப்பதை பதுக்கவும் தேவையான உதவிகளை இந்த நாட்டின் அரசாங்கமே செய்கிறது. மக்களது
குமுறல், கட்சிகளின் கண்டனங்கள், நாட்டுநலனில் அக்கறையுள்ளோரது அறிவுரைகள் என்று எதையும்
பொருட்படுத்தாமல் இந்தத் திருட்டுக்கூட்டத்திற்கு காவலிருக்கிறது அரசாங்கம். நாட்டு மக்களையும்
இந்த முதலாளிகள் தமது அடிமைகளாகப் பங்கிட்டுக் கொண்டதாக அறிவிக்கும் நிலைமை வெகுசீக்கிரத்தில்
வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. <br style="mso-special-character: line-break;" />
<br style="mso-special-character: line-break;" />
</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">***<br />
இரவு 11 மணிக்கு மேல் அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி குடிமக்களின் நடமாட்டச்
சுதந்திரத்தைப் பறித்துவந்தன மத்திய மாநில அரசுகள். ஆனால் இப்போதோ 10 பேருக்கு
மேல் பணியாற்றும் பெருங்கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், தொழிற்சாலைகள் போன்றவை
24மணி நேரமும் செயல்படுவதே பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று சட்டத்திருத்தம்
கொண்டுவருகின்றன. முதலீட்டாளர்களுக்கு ஆள் பிடித்துக் கொடுப்பதன்றி சாமானிய மக்களின்
நலன் என்று இதில் எதுவும் இல்லை.</span><br />
</div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEim2Liws_DN0I_lxUeOY5eJWlIoD7zW0CqI44saHqQFgvQ7XL41mV1xoKxr08So08VxsPoKAH_3WKBKVZIOnkG0u7y3nk9fL7wXhp7Hi8m0E2WAPZSJuM06rv7TECRZhVdQnUGYFP3N37sP/s1600/46-index.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEim2Liws_DN0I_lxUeOY5eJWlIoD7zW0CqI44saHqQFgvQ7XL41mV1xoKxr08So08VxsPoKAH_3WKBKVZIOnkG0u7y3nk9fL7wXhp7Hi8m0E2WAPZSJuM06rv7TECRZhVdQnUGYFP3N37sP/s400/46-index.jpg" width="287" /></a></div>
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br />
பொருளாதாரத்தளத்தில் நடக்கும் கொள்ளைகள், சமூக நலன்சார் திட்டங்களை ஒழித்துக் கட்டும்
அரசின் பொறுப்பின்மை, அன்றாடம் கீழிறங்கும் சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரம், மதப்பெரும்பான்மை
வாதத்தின் பெயரால் சிறுபான்மையினர்மீது ஏவப்படும் தாக்குதல், பார்ப்பனீயத்தை சகல மக்கள்
மீதும் திணிக்கும் பண்பாட்டு மேலாதிக்கம், தலித்துகள் மற்றும் பெண்கள் மீது நாளும்
பொழுதும் பெருகிவரும் வன்கொடுமைகள் என்று எல்லாப் பக்கமிருந்தும் சூழும் பிரச்னைகளால்
நிலைகுலைந்து கொண்டிருக்கிறது சமூகம். சமூக வாழ்வின் எந்தவொரு தளத்தில் எழும் பிரச்னைக்கும்
தீர்வு கண்டிடும் உள்ளக வலுவை ஒருபோதும் பெற்றிட முடியாமல் இந்திய ஆளும் வர்க்கம்
தத்தளித்துக்கொண்டிருப்பதன் அவலமான வெளிப்பாடே இப்பிரச்சினைகள். சமூகத்திற்கு தலைமைதாங்கும்
யோக்கியதாம்சத்தை இவ்வாறு முற்றிலும் இழந்து நிற்கும் ஆளும் வர்க்கமானது மக்கள் மீதான
கண்காணிப்பையும் ஒடுக்குமுறையையும் கடுமையாக்குவதன் மூலம் தனது ஆயுளை நீட்டித்துக்
கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஆயினும் சொந்த வாழ்வனுபவம் நெட்டித்தள்ளும் போது
மக்கள் எது கண்டும் அஞ்சாது போராடத் துணிவார்கள் என்பதை பெங்களூரு ஆயத்த ஆடை தொழிலாளர்களின்
போராட் டம் மறுபடியும் நிரூபித்தது. தமக்கு தலைவர்களென யாருமில்லை என அவர்கள் சொன்னாலும்,
வருங்கால வைப்பு நிதி தொடர்பான புதிய சட்டம் தங்களுக்கு எதிரானது, அது முறியடிக்கப்பட
வேண்டும் என்று விழிப்படைந்த தொழிலாளர்களின் கூட்டு மனசாட்சிதான் அந்தப் போராட்டத்திற்கு
தலைமையேற்று நடத்தி அரசைப் பின்வாங்கச் செய்திருக்கிறது. ஆளும் வர்க்கம் ஏற்படுத்தும்
நெருக்கடியானது, வர்க்கப் போராட்டத்திற்கான களத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கான
தேவையை அதிகரித்திருக்கிறது. <br style="mso-special-character: line-break;" />
<br style="mso-special-character: line-break;" />
</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;">***<br />
தனது பதின்ம வயதிலிருந்து கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக இந்திய, தமிழ்ச் சமூகத்தின்
அசைவியக்கத்தை உலகக்கண் கொண்டு பார்த்து எழுதியும் பேசியும் இயங்கி வருகிற உயிர்க்களஞ்சியம்
தோழர். எஸ்.வி. ராஜதுரை. அவரது வரலாறு என்பது ஆளும் வர்க்கத்தை எதிர்த்த செயற்பாடுகளின்
வரலாறாகத்தான் விரியும் என்பதை ஆட்சியாளர்கள் சரியாகவே புரிந்துவைத்துள்ளனர். எனவேதான்
அவர்கள், அவரைப் பற்றிய ஆவணப் படத் திரையிடலை தடுத்து அவரது களச்செயல்பாடுகள்
மீதும் கருத்தியல் செல்வாக்கின் மீதும் தமக்குள்ள அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
தவிரவும் தம்மை விமர்சிப்பதற்கான வாய்ப்புகளையும் குடிமக்களுக்கு வழங்கிவிடுமளவுக்கு
ஆட்சியாளர்கள் எப்போது ஜனநாயகவாதிகளாக இருந்திருக்கிறார்கள்?</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 12.0pt;"><br />
- ஆசிரியர் குழு, புதுவிசை</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<!--[if gte mso 9]><xml>
<w:LatentStyles DefLockedState="false" DefUnhideWhenUsed="true"
DefSemiHidden="true" DefQFormat="false" DefPriority="99"
LatentStyleCount="267">
<w:LsdException Locked="false" Priority="0" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Normal"/>
<w:LsdException Locked="false" Priority="9" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="heading 1"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 2"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 3"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 4"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 5"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 6"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 7"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 8"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 9"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 1"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 2"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 3"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 4"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 5"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 6"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 7"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 8"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 9"/>
<w:LsdException Locked="false" Priority="35" QFormat="true" Name="caption"/>
<w:LsdException Locked="false" Priority="10" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Title"/>
<w:LsdException Locked="false" Priority="1" Name="Default Paragraph Font"/>
<w:LsdException Locked="false" Priority="11" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtitle"/>
<w:LsdException Locked="false" Priority="22" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Strong"/>
<w:LsdException Locked="false" Priority="20" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Emphasis"/>
<w:LsdException Locked="false" Priority="59" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Table Grid"/>
<w:LsdException Locked="false" UnhideWhenUsed="false" Name="Placeholder Text"/>
<w:LsdException Locked="false" Priority="1" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="No Spacing"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 1"/>
<w:LsdException Locked="false" UnhideWhenUsed="false" Name="Revision"/>
<w:LsdException Locked="false" Priority="34" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="List Paragraph"/>
<w:LsdException Locked="false" Priority="29" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Quote"/>
<w:LsdException Locked="false" Priority="30" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Quote"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="19" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtle Emphasis"/>
<w:LsdException Locked="false" Priority="21" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Emphasis"/>
<w:LsdException Locked="false" Priority="31" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtle Reference"/>
<w:LsdException Locked="false" Priority="32" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Reference"/>
<w:LsdException Locked="false" Priority="33" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Book Title"/>
<w:LsdException Locked="false" Priority="37" Name="Bibliography"/>
<w:LsdException Locked="false" Priority="39" QFormat="true" Name="TOC Heading"/>
</w:LatentStyles>
</xml><![endif]--><!--[if gte mso 10]>
<style>
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
</style>
<![endif]--></div>
புதுவிசைhttp://www.blogger.com/profile/09276344793619872435noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8111967010823738396.post-70696130470290004302016-02-13T07:02:00.000-08:002016-02-13T07:16:03.174-08:00சமகால முதலாளித்துவத்தில் திரும்பிவரும் பாசிசம் - சமிர் அமின்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<!--[if gte mso 9]><xml>
<w:WordDocument>
<w:View>Normal</w:View>
<w:Zoom>0</w:Zoom>
<w:TrackMoves/>
<w:TrackFormatting/>
<w:PunctuationKerning/>
<w:ValidateAgainstSchemas/>
<w:SaveIfXMLInvalid>false</w:SaveIfXMLInvalid>
<w:IgnoreMixedContent>false</w:IgnoreMixedContent>
<w:AlwaysShowPlaceholderText>false</w:AlwaysShowPlaceholderText>
<w:DoNotPromoteQF/>
<w:LidThemeOther>EN-US</w:LidThemeOther>
<w:LidThemeAsian>X-NONE</w:LidThemeAsian>
<w:LidThemeComplexScript>X-NONE</w:LidThemeComplexScript>
<w:Compatibility>
<w:BreakWrappedTables/>
<w:SnapToGridInCell/>
<w:WrapTextWithPunct/>
<w:UseAsianBreakRules/>
<w:DontGrowAutofit/>
<w:SplitPgBreakAndParaMark/>
<w:DontVertAlignCellWithSp/>
<w:DontBreakConstrainedForcedTables/>
<w:DontVertAlignInTxbx/>
<w:Word11KerningPairs/>
<w:CachedColBalance/>
</w:Compatibility>
<w:BrowserLevel>MicrosoftInternetExplorer4</w:BrowserLevel>
<m:mathPr>
<m:mathFont m:val="Cambria Math"/>
<m:brkBin m:val="before"/>
<m:brkBinSub m:val="--"/>
<m:smallFrac m:val="off"/>
<m:dispDef/>
<m:lMargin m:val="0"/>
<m:rMargin m:val="0"/>
<m:defJc m:val="centerGroup"/>
<m:wrapIndent m:val="1440"/>
<m:intLim m:val="subSup"/>
<m:naryLim m:val="undOvr"/>
</m:mathPr></w:WordDocument>
</xml><![endif]--><blockquote class="tr_bq">
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="color: red;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">உலகப் புகழ்பெற்ற ஆப்பிரிக்க மார்க்ஸிய
அறிஞர் சமிர் அமின்<span style="mso-spacerun: yes;"> (Samir Amin) </span>பிரெஞ்சு மொழியில்<span style="mso-spacerun: yes;"> </span>எழுதிய இக்கட்டுரை ஜேம்ஸ்
மெம்ப்ரெஸால் (James Membrez) ஆங்கிலத்தில்<span style="mso-spacerun: yes;"> </span>மொழியாக்கம் செய்யப்பட்டு ‘ மன்த்லி ரெவ்யூ' ஏட்டின் செப்டம்பர் 2014 இல் வெளிவந்துள்ளது.<span style="mso-spacerun: yes;"> </span>ஆங்கிலம் வழித்<span style="mso-spacerun: yes;"> </span>தமிழாக்கமும் குறிப்புகளும் : <span style="font-size: large;">எஸ்.வி. ராஜதுரை</span></span></span></div>
</blockquote>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;"><span style="font-size: large;">இ</span>ந்தக் கட்டுரையின் தலைப்பே, <span style="mso-tab-count: 2;"></span>அரசியல்
அரங்கிற்குள் பாசிசம் <span style="mso-tab-count: 2;"></span>திரும்பி
வந்துள்ளதை சமகால முதலாளித்துவத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியுடன் இணைத்துப்பார்ப்பதாக
அமைவது தற்செயலானதல்ல. பாசிசம் என்பதும் நாடாளுமன்ற ஜனநாயகத்திலுள்ள நிச்சயமற்றத்தன்மைகளை
நிராகரிக்கின்ற எதேச்சாதிகார போலிஸ் ஆட்சியும் ஒன்றல்ல. முதலாளியச்சமுதாயத்தை நிர்வகிப்பதில் சில திட்டவட்டமான சூழ்நிலைமைகளில் எதிர் கொள்ளப்படுகின்ற சில சவால்களுக்கான
குறிப்பிட்டதொரு அரசியல் எதிர்வினைதான் பாசிசமாகும்.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">வேற்றுமையில் ஒற்றுமை</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">பல ஐரோப்பிய நாடுகளில், குறிப்பாக
1930களிலிருந்து 1945 வரை, முன்னணியிலிருந்து அதிகாரத்தைச் செலுத்திவந்த அரசியல் இயக்கங்களை
பாசிசம் என்று சரியாகக் கூறமுடியும். இத்தாலியின் பெனிட்டோ முஸ்ஸோலினி, ஜெர்மனியின்
அடால்ஃப் ஹிட்லர், ஸ்பெயினின் ஃப்ரான்ஸிஸ்கோ ஃப்ராங்கோ, போர்ச்சுக லின் அந்தோனியோ டெ
ஒலிவெய்ரா ஸலாஸர், ஃபிரான்ஸின் ஃபிலிப் பெதெய்ன், ஹங்கேரியின் மிக்லோஸ் ஹோர்த்தி, ரொமேனியாவின்
அயோன் அந்தோனெஸ்க்யூ, குரோஷியாவின் அன்ட்டே பவெலிச் ஆகியோரின் ஆட்சிகள் இதில் அடங்கும்.
பாசிசத்திற்கு பலியான சமுதாயங்களின் பன்முகத்தன்மை - வளர்ச்சியடைந்த பெரிய முதலாளிய
சமுதாயங்கள், ஆதிக்கத்துக்குட்பட்ட சிறிய முதலாளிய சமுதாயங்கள், வெற்றிகரமான யுத்தத்துடன்
சம்பந்தப்பட்டிருந்த சமுதாயங்கள், யுத்தத்தில் ஏற்பட்ட தோல்வியின் விளைபொருள்களாக
இருந்த சமுதாயங்கள் ஆகிய இரண்டும் இவற்றில் அடங்கும் - இந்தச் சமுதாயங்கள் அனைத்தையும்
நாம் ஒன்றாகச் சேர்ப்பதைத் தடுக்கின்றது. எனவே, பல்வகைக் கட்டமைப்புகளும் பல்வகைச்சூழல்
இணைவுகளும்<span style="mso-spacerun: yes;"> </span>இந்தச் சமுதாயங்களில் ஏற்படுத்திய
வெவ்வேறு வகை பாதிப்புகளை நாம் திட்டவட்டமாக எடுத்துக்கூறியாக வேண்டும்.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">ஆயினும், இந்தப் பல்வகைத்தன்மையைத் தாண்டி,
பாசிச சமுதாயங்கள் அனைத்துக்கும் பின்வரும் இரு பொதுப்பண்புகள் இருந்தன. </span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">(1) சம்பந்தப்பட்ட
குறிப்பிட்ட சூழ்நிலைமைகளில், அந்த பாசிசங்கள்<span style="mso-spacerun: yes;">
</span>அனைத்துமே முதலாளித்துவத்தின் அடிப்படை நெறிகளை -<span style="mso-spacerun: yes;"> </span>குறிப்பாக நவீன ஏகபோக முதலாளித்துவம் உள்ளிட்ட முதலாளியத்
தனிச்சொத்தை- கேள்விக்குட்படுத்தாத வகையில் அரசாங்கத்தை நிர்வகிக்க விரும்பின. அதனால்தான்,
பாசிசச் சொல்லாடல்களில் ‘முதலாளித்துவம்', ‘செல்வந்தர்களின் ஆட்சி' ஆகியன நீண்ட வசைமாரிகளுக்கு
உட்படுத்தப்பட்டிருந்த போதிலும்,<span style="mso-spacerun: yes;"> </span>இந்த பாசிசங்கள்
முதலாளித்துவத்தை நிர்வகிப்பதற்கான வெவ்வேறு வடிவங்களாக இருந்தனவேயன்றி, முதலாளித்துவம்
நிலவுவதற்கான நியாயத்தைக் கேள்விக்குட்படுத்துகின்ற அரசியல் வடிவங்களாக இருக்கவில்லை.
இந்தப் பல்வேறு வகை பாசிசங்களால் முன்வைக்கப்பட்ட ‘மாற்றுத் திட்டங்களை'ப் பரிசீலனை
செய்கையில், பாசிசச் சொல்லாடல்களின் உண்மைத்தன்மையில் ஒளிந்துகொண்டிருக்கும் பொய்
புலப்பட்டு விடுகின்றது. இந்தச் சொல்லாடல்கள் முதலாளியத் தனிச்சொத்து என்னும் முக்கியப்
பிரச்சினையைப் பொருத்தவரை எப்போதுமே மௌனம் சாதித்து வந்தன. பாசிசம் மட்டுமே, முதலாளிய
சமுதாயத்தின் அரசியல் நிர்வாகம் எதிர்கொண்ட சவால்களுக்கான ஒரே ஒரு எதிர்வினையாக<span style="mso-spacerun: yes;"> </span>இருக்கவேண்டியதில்லை என்றாலும், கொந்தளிப்பான,
ஆழமான நெருக்கடிகள் தோன்றும் சூழல் இணைவுகளில்தான் ஆதிக்க மூலதனத்துக்கு பாசிசம் ஆகச்சிறந்த
தீர்வாக, ஏன் சிலவேளை<span style="mso-spacerun: yes;"> </span>சாத்தியமான ஒரே தீர்வாகத்
தோன்றுகிறது. ஆக, நமது பகுப்பாய்வு இந்த நெருக்கடிகள் மீது கவனம் குவிக்கவேண்டும்.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">(2) நெருக்கடியிலுள்ள முதலாளியச் சமுதாயத்தை
நிர்வகிப்பதற்குப் பாசிசத்தைத் தேர்வு செய்தல் என்பது<span style="mso-spacerun: yes;"> </span>எப்போதுமே- இதை ஒரு வரையறையாகக்கூடக் கொள்ளலாம்-
‘ஜனநாயகத்தை'த் திட்டவட்டமாக நிராகரிப்பதை அடிப்படையாகக் கொள்கிறது. நவீன ஜனநாயகத்திற்கு
அடிப்படையாகவுள்ள கோட்பாடுகளையும் நடைமுறைகளையும்- பல்வகைக் கருத்துகளை அங்கீகரித்தல்,
பெரும்பான்மையைத் தீர்மானிக்கத் தேர்தல் வழிமுறைகளை நாடுதல், சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு
உத்தரவாதம் செய்தல் முதலியவற்றை- அகற்றிவிட்டு, அவற்றுக்கு மாற்றீடாக ஒட்டுமொத்தமான
கட்டுப்பாடு, ‘மாபெரும் தலைவ'ரினதும் அவரது முகவர்களினதும் அதிகாரத்துக்கு அடிபணிதல்
என்னும் மதிப்பீடுகளை உருவாக்குகின்றது. மதிப்பீடுகள் இவ்வாறு தலைகீழாக மாற்றப்படுவதுடன்
கூடவே, அடிபணிதலை நியாயப்படுத்துவதைச் சாத்தியமாக்குவதற்காகப் பின்னோக்கிய கருத்துகளுக்கு அழைத்துச்செல்லப்படுவதும் நடக்கிறது. கடந்தகாலம் என்று சொல்லப் படுவதற்கு
(மத்திய காலத்துக்குத்) திரும்பிச்செல்வது அவசியம் என்று பிரகடனப்படுத்துதல், அரசு
மதம் அல்லது ‘இனம்' அல்லது ‘இனத்துவம்' (‘தேசம்') என்பதன் பண்புகள் என்று சொல்லப்படுவனவற்றுக்கு
அடிபணிதல் ஆகியன பாசிசச்சக்திகளால் பயன்படுத்தப்படும் கருத்தியல் சொல்லாடல் கருவிகளாக
அமைகின்றன. இந்த இரு பண்புகளும் நவீன ஐரோப்பிய வரலாற்றில் காணப்பட்ட பலவேறு பாசிச
வடிவங்களுக்குப் பொதுவானவை. அந்த வடிவங்களைக் பின்வருமாறு வகைப்படுத்தலாம்:</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">1. உலகம் முழுவதிலுமான அல்லது குறைந்தபட்சம்
பிரதேச அளவிலான, முதலாளித்துவ அமைப்பில் மேலாதிக்கம் செலுத்தும் சக்திகளாக வளர்ச்சியடையும்
வேட்கை கொண்டிருந்த முக்கிய, ‘வளர்ச்சியடைந்த' முதலாளிய அரசுகளின் பாசிசம்.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">இவ்வகையான பாசிசத்திற்கு முன்மாதிரியாக
இருப்பது நாஜிசம். ஜெர்மனி, 1870களிலிருந்து பெரிய தொழில் வளர்ச்சி அரசாகவும், அந்த
சகாப்தத்தில் இருந்த மேலாதிக்க அரசுகளுடனும் (அப்போது முதல்நிலையில் மகா பிரிட்டனும்,
இரண்டாம் நிலையில் பிரான்சும் இருந்தன) மேலாதிக்கச் சக்தியாக வளர ஆசைப்பட்டுக் கொண்டிருந்த
நாட்டுடனும் (அமெரிக்கா) போட்டிபோடக்கூடியதாகவும் வளர்ந்திருந்தது. 1918ஆம் அதற்கு
ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, தனது மேலாதிக்க ஆசையின் தோல்வியால் ஏற்பட்ட பின்விளைவுகளை அது சமாளிக்க வேண்டியிருந்தது. ஹிட்லர் தெளிவாகத் தமது திட்டத்தை வகுத்தார்: ரஷியாவும்
அதற்கு அப்பாலுள்ள பகுதிகளும் உள்ளிட்ட ஐரோப்பாவில் ‘ஜெர்மனி'யின் மேலாதிக்கத்தை,
அதாவது, நாஜிசத்தின் எழுச்சிக்கு உதவி செய்த ஏகபோக நிறுவனங்களின் முதலாளித்துவ மேலாதிக்கத்தை
நிறுவுதல் என்பதுதான் அந்தத் திட்டம். தமது முக்கிய எதிராளிகளுடன் சமரசம் செய்துகொள்வதற்
கும் கூட அவர் தயாராக இருந்தார்: அதாவது ஐரோப்பாவை யும் ரஷியாவையும் தாம் எடுத்துக்கொண்டு,
சீனாவை ஜப்பானுக்கும், ஆசியாவின் பிற பகுதிகளையும் ஆப்பிரிக்காவையும் மகா பிரிட்டனுக்கும்,
லத்தின் அமெரிக்க நாடுகளை அமெரிக்காவுக்கும் கொடுத்துவிடுவது என்னும் சமரத்துக்கு அவர்
தயாராக இருந்தார். அத்தகைய சமரசம் சாத்தியமானது என்று நினைத்ததுதான் அவரது தவறு: மகா
பிரிட்ட னும் அமெரிக்காவும் அதற்கு உடன்படவில்லை; அந்த நாடுகளுக்கு மாறாக, ஜப்பானோ
அதை ஆதரித்தது.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">ஜப்பானிய பாசிசமும் இதே வகையைச் சேர்ந்ததுதான்.
1895 ஆம் ஆண்டிலிருந்தே ஜப்பான் கிழக்கு ஆசியா முழுவதிலும் தனது மேலாதிக்கத்தைத் திணிக்க
விரும்பியது. ஜப்பானில் எழுச்சி பெற்றுக்கொண்டிருந்த முதலாளித்துவம், தொடக்கத்தில்<span style="mso-spacerun: yes;"> </span>‘பேரரசாட்சி' வடிவத்தில் நிர்வகிக்கப்பட்டுவந்தது.
அந்த வடிவம், மேல்தோற்றத்துக்கு<span style="mso-spacerun: yes;"> </span>‘தாராளவாத'
நிறுவனங்களை<span style="mso-spacerun: yes;"> </span>(தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம்
போன்றவற்றை) அடிப்படையாகக் கொண்டிருந்தா லும், உண்மையில் ஜப்பானின் பேரரசர், நவீனமயமாக்கலால்
மாற்றம் பெற்றிருந்த மேற்குடியினர் (aristocracy) ஆகியோரின் முழுமையான
கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. பின்னர் அந்த வடிவம், இராணுவ உயர் தலைமையால் நேரடியாக
நிர்வகிக்கப் பட்ட மூர்க்கதனமான வடிவமாக மாறியது. பேரரச/பாசிச ஜப்பானுடன் நாஜி ஜெர்மனி
கூட்டணி அமைக்க, மகா பிரிட்டனும் (பேர்ல் ஹார்பர் துறைமுகத்தின்மீது 1941இல் ஜப்பானியப்
போர் விமானங்கள் குண்டுவீச்சு நடத்தியப் பிறகு) அமெரிக்காவும் ஜப்பானுடன் மோதின. ஜப்பா
னிய ஆக்கிரமிப்பை எதிர்த்து சீனாவிலும் போர் நடந்தது. அந்த எதிர்ப்புப் போரில் ஈடுபட்டிருந்த
கோமிண்டாங்கில் இருந்த குறைபாடுகள், மாவோயிஸ்ட் கம்யூனிஸ்டுகள் வழங்கிய ஆதரவால் ஈடுசெய்யப்பட்டன.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">2. இரண்டாம் நிலை முதலாளிய அரசுகளின்
பாசிசம்</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">இதற்கு முதன்மை எடுத்துக்காட்டாக இருப்பவர்
இத்தாலியின் முஸ்ஸோலினி. பாசிசம் என்பதை (அதன் பெயரையும்)<span style="mso-spacerun: yes;"> </span>உருவாக்கியவர் அவர்தான். 1920களில் ஏற்பட்ட முதலாளித்துவ நெருக்கடி, வளர்ச்சியடைந்து வந்த கம்யூனிஸ்ட் அச்சுறுத்தல் ஆகியவற்றுக்கு இத்தாலிய
வலதுசாரிச் சக்திகளிடமிருந்து (பழைய மேற்குடி வர்க்கம் முதலாளி வர்க்கம், நடுத்தர
வர்க்கங்கள்) வந்த எதிர்வினைதான் முஸ்ஸோலினியிசமாகும். உலகம் முழுவதையும் மேலாதிக்கம்
செய்வது ஒருபுறமிருக்கட்டும், அய்ரோப்பா முழுவதிலும்கூட மேலாதிக்கம் செய்யும் விருப்பம்
இத்தாலிய முதலாளித்துவத்துக்கோ, அதன் அரசியல் கருவியான முஸ்ஸோலினியின் பாசிசத்துக்கோ
இருக்கவில்லை.<span style="mso-spacerun: yes;"> </span>ரோமப் பேரரசை மறுநிர்மாணம் செய்யப்
போவதாக முஸ்ஸோலினி என்னதான் தம்பட்டமடித்துக் கொண்டாலும், (மத்தியதரைக்கடல் பகுதியின்
எஜமானனாக இருந்த) மகா பிரிட்டனுடனோ,<span style="mso-spacerun: yes;"> </span>நாஜி
ஜெர்மனியு டனோ கூட்டணி வைப்பதன் மூலமே தம்மை நிலை நிறுத்திக்கொள்ள முடியும் என்பதை<span style="mso-spacerun: yes;"> </span>அவர் புரிந்துகொண்டிருந்தார். சாத்தியமான இரு கூட்டணிகளில்
எதைத் தேர்ந்தெடுப்பது என்பதில் இரண்டாம் உலகப்போர் தொடங்கும் வரை முஸ்ஸோலினிக்கு
ஊசலாட்டம் இருந்துவந்தது.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">ஸலாஸர், ஃப்ராங்கோ ஆகியோரின் பாசிசமும்
இதே வகையைச் சேர்ந்தவைதான். குடியரசுக் கொள்கையை ஆதரித்த தாராளவாதிகளிடமிருந்தோ, சோசலிசக்
குடியரசு வாதிகளிடமிருந்தோ வந்த அச்சுறுத்தலுக்கான எதிர்வினையாக ஸ்பெயினின் வலதுசாரிச்
சக்திகளாலும் கத்தோலிக்கத் திருச்சபையாலும் ஆட்சியில் அமர்த்தப்பட்டவர்கள்தாம் அந்த
இரு சர்வாதிகாரிகளும். இந்தக் காரணத்தால்தான்,<span style="mso-spacerun: yes;">
</span>(கம்யூனிச-எதிர்ப்பு) என்னும் போர்வையின் கீழ் ஜனநாயக-விரோத வன்முறையை மேற்கொண்ட
அவர்கள் ஒருபோதும்<span style="mso-spacerun: yes;"> </span>முக்கிய ஏகாதிபத்திய அரசுகளால்
ஒதுக்கி வைக்கப்படவில்லை. 1945ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்கா அவர்களுக்கு மறுவாழ்வு
கொடுத்தது (நேட்டோவின் நிறுவன உறுப்பினர்களிலொருவர் ஸலாஸர்; தனது நாட்டில் அமெரிக்காவின்
இராணுவத்தளங்களை நிறுவ ஸ்பெயின் இசைவு தந்தது). அமெரிக்காவைப் பின்பற்றி, இயல்பாகவே
பிற்போக்கு முதலாளிய ஒழுங்கமைப்பை உத்தரவாதம் செய்கின்ற<span style="mso-spacerun: yes;"> </span>ஐரோப்பியச் சமுதாயமும் (European Community);
இது இப்போது ஐரோப்பிய ஒன்றியம் [European Union] என்றழைக்கப் படுகிறது)
அவர்களுக்கு மறுவாழ்வு வழங்கியது. போர்ச்சுகலில் 1974ல் நடந்த ‘கார்னேஷன் புரட்சி'க்
கும் 1980இல் ஃப்ராங்கோவின் மறைவுக்கும் பிறகு, இந்த இரு சமுதாய அமைப்புகளும்<span style="mso-spacerun: yes;"> </span><i>(ஸ்பானிய, போர்ச்சுகல் பாசிச சமுதாய அமைப்புகளும்
-எஸ்.வி.ஆர்.)</i><span style="mso-spacerun: yes;"> </span>நமது சகாப்தத்திலுள்ள ‘குறைந்தபட்ச
ஜனநாயக அரசாங்கங்க'ளின் முகாமில் சேர்ந்துகொண்டன.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">3.தோற்கடிக்கப்பட்ட அரசுகளின் பாசிசம்</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">இவற்றில் பிரான்ஸின் விஷி அரசாங்கம்,
பெல்ஜியத்தில் லியோ டெக்ரே (Leon Degrelle)<span style="mso-spacerun: yes;"> </span>தலைமையிலிருந்த அர சாங்கம், நாஜிகளால் ஆதரிக்கப்பட்ட
‘ஃப்ளெமிஷ்' போலி அரசாங்கம் ஆகியன அடங்கும். பிரான்ஸில் மேல்தட்டு வர்க்கங்கள், மக்கள்
முன்னணிக்குப் பதிலாக ஹிட்லரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டன (இந்த விஷயம் பற்றி அன் லெக்ரோ-ரிட்ஸ் [Anne-Lecroix-Ritz] எழுதியுள்ள நூலைப் பார்க்கவும்). தோல்வியுடனும்
‘ஜெர்மானிய ஐரோப்பா'வுக்கு அடிபணிதலுடனும் தொடர்புடையனவாக இருந்த இந்த பாசிசங்கள்,
நாஜிகளின் தோல்விக்குப் பிறகு பின்வாங்கிப் பின்னணிக்குச் சென்றுவிட்டன. பிரான்சில்
இந்த பாசிசம், நாஜி-எதிர்ப்புப் போராட்டக்காரர்களின் கவுன்சில்களுக்கு வழிவிட்டுச்
சென்றுவிட்டது. இந்தக் கவுன்சில்கள் குறிப்பிட்ட காலத்திற்கு கம்யூனிஸ்டுகளை இதர நாஜி- எதிர்ப்புப்
போராளிகளுடன் (குறிப்பாக, தளபதி டி காலுடன்) ஒன்றிணைத்தன. ஆனால், இந்தக் கவுன்சில்களின்
பரிணாம வளர்ச்சி வேறு திசையில் சென்றது. அதாவது,(நாஜிச-பாசிசத் தாக்குதல்களால் பாதிப்படைந்த)
ஐரோப்பிய நாடுகளின் மறுநிர்மாணம் தொடங்கப் பட்டு, பிரான்ஸ் மார்ஷல் திட்டத்திலும் நேட்டோவிலும்
சேர்ந்து, அமெரிக்க மேலாதிக்கத்திற்கு விருப்பத்துடன் அடிபணிந்தது. பாசிச-எதிர்ப்புப்
போராட்டத்தில் - இதில் முதலாளித்துவ எதிப்புப் போராட்டமும் உள்ளுறைந்திருந்தது - உருவான
தீவிர இடதுசாரி சக்திகளிடமிருந்து பழைமைவாத இடதுசாரிச் சக்திகளும், கம்யூனிச-எதிர்ப்பு
வலதுசாரி சோசலிச-ஜனநாயகவாதிகளும் நிரந்தரமான முறிவை ஏற்படுத்திக்கொண்டன.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">4.கிழக்கு ஐரோப்பியச் சார்பு<span style="mso-spacerun: yes;"> (Dependent) </span>முதலாளிய சமுதாயங்களின் பாசிசம்</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">கிழக்கு ஐரோப்பாவிலிருந்த முதலாளியச்
சமுதாயங்கள், மேற்சொன்ன சமுதாயங்களிலிருந்து மிகவும் வேறுபட்டவை. போலந்து, பால்டிக்
அரசுகள், ரொமேனியா, ஹங்கேரி, யூகோஸ்லேவியா, கிரீஸ்,போலந்தின் ஆட்சியின் கீழ் இருந்த
மேற்கு உக்ரெய்ன் ஆகியவற்றின் சமுதாயங்களே அவை. அங்கிருந்தது பிற்போக்கான, எனவே சார்பு
முதலாளித்துவமாகும். முதலாம், இரண்டாம் உலகப் போர்களுக்கு இடைப்பட்ட ஆண்டுகளில், இந்த
நாடுகளின் ஆளும் வர்க்கங்கள் நாஜி ஜெர்மனியை ஆதரித்துவந்தன. இருப்பினும், ஹிட்லரின்
திட்டத்துடன் அவற்றுக்கிருந்த அரசியல் தொடர்புகளை ஒவ்வொன்றாகப் பரிசீலிப்பது அவசியம்.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">போலந்தில் ரஷிய ஆதிக்கத்தின் (ஜார் ரஷிய
ஆதிக்கத்தின்) மீதிருந்த பழைய பகைமை, சோவியத் யூனியனுக்கு எதிரான பகைமையாக மாறியது.
இதை ஊக்குவித்தது, போலிஷ் மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்த கத்தோலிக்கப் போப்பும்
அவரது சீடர்களுமாவர். பிரான்ஸில் இருந்த விஷி அரசாங்கத்தைப் போலவே போலந்தும் இயல்பாகவே
ஜெர் மனியைச் சார்ந்து பிழைக்கும் நாடாக மாறியிருக்கும். ஆனால், ஹிட்லரால் அதைப் புரிந்துகொள்ள
முடியவில்லை. அவரைப் பொருத்தவரை ரஷியர்கள், உக்ரெய்னியர்கள், ஸெர்பியர்கள் ஆகியோரும்கூட
யூதர்கள், ரோமாக்கள் <i>(ஜிப்ஸிகள் -எஸ்.வி.ஆர்.)</i>, இன்னும்<span style="mso-spacerun: yes;"> </span>பல இனத்தவரைப் போலவே முற்றிலுமாக ஒழித்துக்கட்டப்பட
வேண்டியவர்களாக இருந்தனர். ஆகவே, நாஜி ஜெர்மனியுடன் அணி சேர்ந்த போலிஷ் பாசிசம் என்பதற்கு
இடமிருக்கவில்லை.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">இதற்கு மாறாக, ஹோர்த்தியின் ஆட்சியின்
கீழ் இருந்த ஹங்கேரி, அன்டோனெஸ்குவின் தலைமையில் இருந்த ரொமானியா ஆகியன, நாஜி ஜெர்மனிக்கு
அடிமைப்பட்ட கூட்டாளிகளாக நடத்தப்பட்டன. இவ்விரு நாடுகளிலுமிருந்த பாசிசங்கள், அந்தந்த
நாட்டுக்கேயுரிய சமுதாய நெருக்கடிகளின் விளைவாகத் தோன்றியவைதான்: ஹங்கேரியில் சிறிதுகாலமே
நீடித்ததும் பேலா குன்னின் தலைமையில் இருந்ததுமான கம்யூனிஸ்ட் ஆட்சிக்குப் பிறகு,
‘கம்யூனிசம்' பற்றி உருவாக்கப்பட்டிருந்த பீதி, ரொமானியாவில் ஹங்கேரியர்களுக்கும்
ரூத்தேனியர்களுக்கும் எதிராகத் திரட்டப்பட்ட தேசியவெறி ஆகியன இந்த நாடுகளில் பாசிசத்தை
உருவாக்கின.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">யூகேஸ்லாவியாவில் ஹிட்லரின் ஜெர்மனியும்
அதனையடுத்து முஸ்ஸோலினியின் இத்தாலியும் ‘சுதந்திர' குரோஷியாவை ஆதரித்தன. இந்த ‘சுதந்திர'
குரோஷியாவின் நிர்வாகம், கத்தோலிக்கத் திருச்சபையின் தீர்மானகரமான ஆதரவு பெற்றிருந்த
ஸெர்பிய-விரோத உஸ்டாஷி என்னும் பாசிச அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது; அதேவேளை,<span style="mso-spacerun: yes;"> </span>ஒழித்துக்கட்டப்பட வேண்டிய மக்கள் பிரிவினரில் ஸெர்பியர்களையும் சேர்த்திருந்தனர்<span style="mso-spacerun: yes;"> </span>நாஜிகள்.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">தொழிலாளர் வர்க்கப் போராட்டங்கள், அவற்றுக்கு
சொத்துடைமை வர்க்கங்கள் காட்டிய எதிர்வினை ஆகிய இரண்டிற்குமான எதிர்கால வாய்ப்புக்கான
சூழ்நிலைமையை ரஷியப் புரட்சி, 1939க்கு முந்தைய சோவியத் யூனியனில் மட்டுமல்லாது, ரஷியா
இழந்திருந்த பிரதேசங்களான பால்டிக் நாடுகள், போலந்து ஆகியவற்றிலும் மாற்றியிருந்தது.
1921ம் ஆண்டு ரீகா ஒப்பந்தத்தையடுத்து, போலந்து பேலாரஸ் நாட்டின் மேற்குப்பகுதிகளையும்
(வோல்னியா), உக்ரெய்னையும் (முன்பு ஆஸ்திரியப் பேரரசிடமிருந்த தென் கால்ஸியா, ஜார்
பேரரசில் ஒரு மாகாணமாக இருந்த வட கால்ஸியா) தன்னுடன் இணைத்துக்கொண்டது.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">இந்தப் பிரதேசம் முழுவதிலும், 1917ஆம்
ஆண்டு தொட்டு (ஏன், முதல் ரஷியப்புரட்சி நடந்த 1905ஆம் ஆண்டிலிருந்தே) இரண்டு முகாம்கள்
வடிவம் கொண்டன : ஒன்று,<span style="mso-spacerun: yes;"> </span>தங்களது நன்மைக்காக
தீவிரமான நிலச்சீர்திருத்தத்தை விரும்பிய விவசாய வர்க்கத்தின் பெரும் பகுதியினரிடையேயும் அறிவாளிகளின் வட்டாரங்களிலும் (குறிப்பாக யூதர்களிடம்) பெரும் ஆதரவைப் பெற்றிருந்த
சோசலிச ஆதரவு முகாம் (இது பின்னர் போல்ஷ்விக் ஆதரவு முகாமாக மாறியது); மற்றொன்று,
அனைத்து<span style="mso-spacerun: yes;"> </span>நில உடைமை வர்க்கங்களிடையே இருந்த
சோசலிச-எதிர்ப்பு முகாம் (சோசலிச எதிர்ப்பின் காரணமாக இந்த முகாம், பாசிச செல்வாக்கின்
கீழ் இருந்த ஜனநாயக விரோத அரசாங்கங்களுக்கு பரிவு காட்டியது). இந்த இரு முகாம்களுக்கிருந்த
வேறுபாடு, பால்டிக் நாடுகள், பேலாரஸ், மேற்கு உக்ரெய்ன் ஆகியன சோவியத் யூனியனில் மீண்டும்
ஐக்கியப்பட்டபோது, மேலதிக அழுத்தம் பெற்றது.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">ஒருபுறம், போலிஷ் தேசியவெறிக்கும் (போலிஷ்
குடியேற்றங்களை உருவாக்குவதன் மூலம், போலந்துடன் இணைக்கப்பட்டிருந்த பேலாரஸ், உக்ரெய்னியப்
பகுதிகளை ‘போலிஷ் மயமாக்குவதில்' விடாப்பிடியாக இருந்த தேசியவெறி) அந்த தேசியவெறியால்
பாதிக்கப் பட்ட மக்களுக்குமிடையே இருந்த முரண்பாட்டின் காரணமாகவும்;<span style="mso-spacerun: yes;"> </span>மறுபுறம், போலிஷ்-எதிர்ப்பு, (கம்யூனிச-எதிர்ப்பின்
காரணமாக ஏற்பட்ட) ரஷிய-எதிர்ப்பு ஆகிய இரண்டையும் கொண்டி ருந்த உக்ரெய்னிய ‘தேசியவாதிகளுக்கும்'
ஹிட்லரின் திட்டத்துக்குமிடையிலான முரண்பாட்டின் காரணமாகவும் (ஹிட்லரின் திட்டத்தில்,
நாஜி ஜெர்மனிக்கு அடிமைப்பட் டிருந்த உக்ரெய்ன் அரசை உருவாக்குவது இருக்கவில்லை; ஏனெனில்
நாஜிகளால் ஒழித்துக் கட்டப்பட வேண்டிய மக்களாக உக்ரெய்னியர்கள் குறித்து வைக்கப்பட்டிருந்தனர்)
ஐரோப்பாவின் இந்தப்பகுதியில் ‘பாசிச-ஆதரவாளர்களு'க்கும் ‘பாசிச-எதிர்ப்பாளர்களு'க்கும் இருந்த
முரண்பாட்டின் அரசியல் வரைபடம் மங்கலானதாக்கப்பட்டிருந்தது.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">இங்கு நான் ஓல்ஹா ஓஸ்ட்ரிட்சௌக் (Olha Ostritchouk) <span style="mso-spacerun: yes;"></span>எழுதியுள்ள </span><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">Les Ukrainens face d' leur passe</span> என்னும் புத்தகத்தை வாசகர்களுக்குக் குறிப்பிட விரும்புகிறேன்.
ஐரோப்பாவின் இந்தப்பிரதேசத்தின் (சோவியத் உக்ரெய்னாக மாறிய ஆஸ்த்ரிய கால்ஸியா, போலிஷ்
உக்ரெய்ன், சின்ன ரஷியா ஆகியன) சமகால வரலாற்றைப் பற்றிய ஒஸ்ட்ரிட் சௌக்கின் கூர்மையான
பகுப்பாய்வு,<span style="mso-spacerun: yes;"> </span>இன்னும் தொடர்ந்து நீடிக்கும்
முரண்பாடுகள், மோதல்கள் ஆகியவற்றிலுள்ள பிரச்சினைகளையும் உள்நாட்டு பாசிசம் ஆக்கிரமித்துள்ள
இடத்தையும் வாசகர்கள் புரிந்துகொள்ள உதவும்.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">கடந்தகால மற்றும் நிகழ்கால பாசிசத்தின்
மீது மேற்கு நாட்டு வலதுசாரி சக்திகள் காட்டும் பரிவு</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">இரண்டு உலகப்போர்களுக்கிடையில் நிலவிய
ஐரோப்பிய நாடாளுமன்றங்களிலிருந்த வலதுசாரி உறுப்பினர்கள் எப்போதுமே பாசிசத்தின் மீதும்,
அதைவிட வெறுக்கத்தக்கதாக இருந்த நாஜிசத்தின்மீதும் பரிவு காட்டி வந்தனர். மிகையான
‘பிரிட்டிஷ்தன்மை' கொண்டிருந்த சர்ச்சிலும்கூட முஸ்ஸோலினி மீதான தமது அனுதாபத்தை ஒருபோதும்
மூடி மறைத்ததில்லை. அமெரிக்கக் குடியரசுத்தலைவர்களும், ஜனநாயக, குடியரசுக் கட்சிகளும்<span style="mso-spacerun: yes;"> </span>ஹிட்லரின் ஜெர்மனி தோற்றுவித்த அபாயத்தையும், எல்லாவற்றுக்கும்
மேலாக பேரரச/ பாசிச<span style="mso-spacerun: yes;"> </span>ஜப்பான் தோற்றுவித்த அபாயத்தையும்
மிகத் தாமதமாகவே கண்டறிந்தனர். அமெரிக்க ஆளும் வர்க்கத்துக்கே உரிய மனித வெறுப்பு
மனப்பான்மையுடன், பிறர் சத்தமின்றிச் சிந்தித்து வந்ததை பகிரங்கமாகக் கூறினார் ட்ரூமன்: போரில்
ஈடுபட்டுள்ள ஜெர்மனி, சோவியத் ரஷியா, தோற்கடிக்கப்பட்ட ஐரோப்பியர்கள் ஆகிய அனைவரும்
போரால்<span style="mso-spacerun: yes;"> </span>சோர்வடையட்டும்; பிறகு எவ்வளவு தாமதமாக
முடியுமோ அவ்வளவு தாமதமாக அமெரிக்கா தலையிட்டு எல்லா பலன்களையும் அறுவடை செய்துகொள்ளட்டும்.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">இது கொள்கைரீதியான பாசிச-எதிர்ப்பின்
வெளிப்பாடு அல்ல. 1945ல் ஸலாஸரையும் ஃப்ராங்கோவையும் மீண்டும் ஆட்சியில் அமர்த்த எவ்விதத்
தயக்கமும் காட்டப்படவில்லை. மேலும், அய்ரோப்பிய பாசிசத்தின் உட்கையாகச் செயல்படுவது
கத்தோலிக்கத் திருச்சபையின் கொள்கையிலுள்ள நிலையான அம்சமாக இருந்து வந்துள்ளது.<span style="mso-spacerun: yes;"> </span>ஆகவே, போப் பன்னிரண்டாம் பயஸை முஸ்ஸோலினி, ஹிட்லர்
ஆகியோரின் கூட்டாளி எனக் கூறுவது மிகையாகாது.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">ஹிட்லரின் யூத-எதிர்ப்புக் கொள்கையும்கூட,
மிக தாமதமாகவே, அது தனது கொலை வெறியின் இறுதிக்கட்டத்தை அடைந்த பிறகே<span style="mso-spacerun: yes;"> </span>இழிவுபடுத்தப்பட்டது. ஹிட்லரின் பேச்சுகளால் தூண்டிவிடப்பட்ட
வெறுப்புக்கு, ‘யூத-போல்ஷ்விச'த்தின்<span style="mso-spacerun: yes;"> </span>மீதான
வெறுப்புக்கு அழுத்தம் தருவது பல அரசியல்வாதிகளிடம் பொதுவாக இருந்த விஷயம்தான்.<span style="mso-spacerun: yes;"> </span>நாஜிசத்தின் தோல்விக்குப் பிறகுதான், கோட்பாட்டளவில்
யூத எதிர்ப்புக் கொள்கையைக் கண்டனம் செய்வது அவசியமானதாகியது. யூத-எதிர்ப்புக் கொள்கையைக்
கண்டனம் செய்வதை மேலும் எளிதாக்கிய காரணம், ‘பேரழிவுக்கு பலியானவர்கள்' என்னும் சிறப்புப்
பட்டத்துக்கான வாரிசுகள் என்று தங்களுக்குத் தாங்களே உரிமை கொண்டாடியவர்கள் இஸ்ரேலின்
ஜியோனிஸ்டுகளாக, பாலஸ்தீனர்கள், அராபிய மக்கள் ஆகியோருக்கு (இவர்கள் ஐரோப்பிய யூத-எதிர்ப்புக்
கொள்கையின் பயங்கரச் செயல்களோடு எவ்விதத்திலும் சம்பந்தப் படாதவர்கள்) எதிரான மேற்கு
நாட்டு ஏகாதிபத்தியத்தின் கூட்டாளிகளாக மாறியது தான்.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">நாஜிகள் மற்றும் முஸ்ஸோலினியின் இத்தாலியின்
தகர்வின் காரணமாக, மேற்கு அய்ரோப்பிய (‘இரும்புத் திரை'க்கு மேற்கே இருந்த நாடுகளின்)
வலதுசாரி அரசியல் சக்திகள் தங்களை, பாசிசத்தின் உடந்தையாளர்களாகவும் கூட்டாளிகளாகவும்
இருந்தவர்களிடமிருந்து (இவர்களும் அந்த வலதுசாரி அரசியல் சக்திகளில் உள்ளடங்கியிருந்தவர்கள்
தாம்) வேறுபடுத்திக்கொள்ள வேண்டியதாயிற்று. இது வெளிப்படையான விஷயம். ஆயினும், பாசிச
இயக்கங்கள் பின்னணிக்குச் செல்லும்படியும் திரைக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளும்படியும்<span style="mso-spacerun: yes;"> </span>நிர்பந்திக்கப்பட்டனவேயன்றி அவை உண்மையில் காணாமல்
போகவில்லை.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">மேற்கு ஜெர்மனியில், ‘சமரசம்' என்னும்
பெயரால், அந்த நாட்டு அரசாங்கமும் அதன் புரவலர்களும் (அமெரிக்காவும், அதற்கடுத்தபடியாக
மகா பிரிட்டனும் பிரான்சும்) போர்க் குற்றங்களையும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களையும்
இழைத்தவர்களில் கிட்டத்தட்ட அனைவரையும் அப்படியே விட்டுவிட்டன. பிரான்ஸில், நாஜிகளுடன்
ஒத்துழைத்தவர்களுக்கு மரணதண்டனை வழங்குதல் என்னும் பெயரால் மிகைச்செயல்களில் ஈடுபட்டார்கள்
என்னும் காரணம் காட்டி, நாஜி எதிர்ப்புப் போராளிகள்மீது சட்ட நடவடிக்கை கள் தொடங்கப்பட்டன.
அதேவேளை அந்துவான் பினாயின் தலைமையில் விஷி அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் அரசியல் அரங்கிற்கு
மீண்டும் வந்தனர். இத்தாலியில் பாசிசம் மௌனமாக்கப்பட்டது என்றாலும், அது கிறிஸ்தவ ஜன
நாயகக் கட்சி அணிகளிலும் கத்தோலிக்கத் திருச்சபை அணிகளிலும் தொடர்ந்து நிலவி வந்தது.
ஐரோப்பிய சமுதாயத் தால் ( பின்னர் இது ‘ஐரோப்பிய ஒன்றிய'மாக மாறியது) 1980இல் ஸ்பெயினில்
திணிக்கப்பட்ட சமரசத்திட்டம், ஃப்ராங்கோ ஆட்சிக்காலத்தில் இழைக்கப்பட்ட குற்றங்களை
நினைவூட்டுவதைத் தடை செய்துவிட்டது.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">பழைமைபேண் வலதுசாரி சக்திகள் மேற்கொண்ட
கம்யூனிஸ்ட்-எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு மேற்கு ஐரோப்பிய, மத்திய ஐரோப்பிய சோசலிச,
சோசலிச-ஜனநாயகக்<span style="mso-spacerun: yes;"> </span>கட்சிகள் தந்த ஆதரவுதான் பாசிசச்சக்திகள்
திரும்பி வந்ததற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த ‘மிதவாத' இடதுசாரிக் கட்சிகள்<span style="mso-spacerun: yes;"> </span>ஒருகாலத்தில் உண்மையான, உறுதியான பாசிச-எதிர்ப்புக்
கட்சிகளாகத்தான் இருந்தன. ஆனால் அதை அவை மறந்துவிட்டன. இந்தக் கட்சிகள் சமூக தாராளவாதக்
கட்சிகளாக (social-liberal parties) மாற்றப்பட்டமையும், பிற்போக்கு
முதலாளித்துவ அமைப்புக்கான உத்தர வாதமாகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஐரோப்பிய<span style="mso-spacerun: yes;"> </span>மறுநிர்மாணத்துக்கு அவை தந்த நிபந்தனையற்ற ஆதரவும்,
நேட்டோ மூலமும் இதர வழிகளிலும் அமெரிக்க மேலாதிக்கத்துக்கு அவை நிபந்தனையற்ற முறையில்
அடிபணிந்ததும், மரபான வலதுசாரி சக்திகளும் சமூக தாராளவாதிகளும் இணைந்த பிற்போக்கு அணியொன்று
வலுப்படுத்தப்படு வதைச் சாத்தியமாக்கியுள்ளன; இந்த அணி, தேவைப்படும் போது, புதிய அதிதீவிர
வலதுசாரிகளுக்கும் தனக்குள் இடம் கொடுக்கக்கூடியதாக உள்ளது.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">பின்னர், கிழக்கு ஐரோப்பிய பாசிசத்துக்கு
மறுவாழ்வு தரும் நடவடிக்கைகள் 1990லிருந்து விரைவாகத் தொடங்கின. அந்தந்த கிழக்கு ஐரோப்பிய
நாடுகளில் இருந்த பாசிச இயக்கங்கள் எல்லாமே பல்வேறு அளவுகளில் ஹிட்லரிசத்தின் விசுவாசமான
கூட்டாளிகளாகவோ அதனுடன் ஒத்துழைத்தவையாகவோ இருந்தவைதாம். நாஜிகளின் தோல்வி நெருங்கி
வருகையில் அந்த பாசிச இயக்கங்களிலிருந்த செயலூக்கமுள்ள தலைவர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் மேற்கு நாடுகளுக்கு அனுப்பப்பட்டு, அமெரிக்க ஆயுதப்படைகளிடம் ‘சரணடையுமாறு'
செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர்கூட அவர்கள் இழைத்த குற்றங்களுக்காக விசாரணை செய்யப்பட
சோவியத், யூகோஸ்லேவியா அல்லது புதிய மக்கள் குடியரசு அரசாங்கங்களிடம் (கிழக்கு ஐரோப்பிய
கம்யூனிஸ்ட் அரசாங்கங்கள்-எஸ்.வி.ஆர்.) ஒப்படைக்கப்படவில்லை (இது நேசநாடுகள் தமக்கிடையே
செய்துகொண்ட ஒப்பந்தங்களை மீறுவதாகும்). அவர்கள் எல்லோரும் அமெரிக்காவிலும் கனடாவிலும்
புகலிடம் தேடிக்கொண்டனர். அவர்களுடைய மூர்க்கத்தனமான கம்யூனிச-எதிர்ப்புக்காக, மேற்சொன்ன
நாடுகளின் அரசாங்கங்கள் அவர்களுக்கு ஏராளமான சலுகைகளை வழங்கின.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">மேலே குறிப்பிடப்பட்ட நூலில் ஓஸ்ட்ரோசௌக்,
அமெரிக்க அரசாங்கக் கொள்கையின் குறிக்கோள்களுக்கும் (அமெரிக்காவுக்குப் பின்னால் உள்ள
ஐரோப்பிய அரசாங்கங்களின் கொள்கைகளின் குறிக்கோள்களுக்கும்) கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலுள்ள
(குறிப்பாக, உக்ரெய்னின்) பாசிசவாதிகளுக்குமிடையே உள்ள கூட்டை, மறுக்கமுடியாதபடி மெய்ப்பிப்பதற்கான
அனைத்துத் தகவல்களையும் தந்துள்ளார். எடுத்துக்காட்டாக, ‘பேராசிரியர்' டிமிட்ரோடோம்ஸ்
டோவ் (Dmytro Domstov) என்பவர் 1975ல் மரணமடையும் வரை தமது படைப்புகள்
அனைத்தையும் கனடாவில்தான் வெளியிட்டு வந்தார். ‘யூத-போல்ஷ்விசம்' என்னும் சொற்றொடரை
(நாஜிகள் பயன்படுத்திய சொற்றொடர் -எஸ்.வி. ஆர்.) வழக்கமாகப் பயன்படுத்தி வந்த அவரது
எழுத்துகள் மூர்க்கத்தனமான கம்யூனிச-எதிர்ப்பு எழுத்துகள் மட்டுமல்ல, அடிப்படையில்
ஜனநாயக-விரோத எழுத்துகளுமாகும். மேற்குலகிலுள்ள ஜனநாயக அரசுகள் என்று சொல்லப்படுபவை<span style="mso-spacerun: yes;"> </span>உக்ரெய்னில் ‘ஆரஞ்சுப்புரட்சி'க்கு (அதாவது பாசிச
எதிர்ப்புரட்சிக்கு) ஆதரவு தந்ததுடன், அதற்கு நிதியுதவி வழங்கி அதனை ஒழுங்கமைக்கவும்
செய்தன.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">பாசிசவாதிகளை ‘மிதவாத' ஊடகங்கள் ஆதரிக்கின்றன.
ஆனால் அதை அவற்றால் வெளிப்படையாக ஒப்புக் கொள்ள முடியாது. எனவே அந்த ஆதரவை மூடிமறைக்க
அவை பயன்படுத்தும் ‘சாமர்த்தியமான' வழிமுறை மிக சுலபமானது: அதாவது ‘பாசிஸ்ட்' என்னும்
சொல்லுக்குப் பதிலாக ‘தேசியவாதிகள்' (Nationalists)<span style="mso-spacerun: yes;"> </span>என்னும் சொல்லைப் பயன்படுத்துகின்றன. ‘பேராசிரியர்'
டோம்ஸ்டோவ் இனி ‘பாசிஸ்ட்' அல்ல; அவர் ‘தேசியவாதி'! அதேபோல, மரி லெ பென் ( Marine Le Penn;<span style="mso-spacerun: yes;"> </span>பிரான்சில் இப்போதுள்ள ஓர்
அதிதீவிர வலதுசாரிக் கட்சியின் தலைவர்- எஸ்.வி.ஆர்.), ‘பாசிஸ்ட்' அல்லர், மாறாக (
‘லெ மோந்த்' நாளேடு எழுதுவதைப்போல) ‘தேசியவாதி'!!</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">இந்த அசல் பாசிஸ்டுகள், அவர்களே சொல்லிக்கொள்வது
போல ‘தேசியவாதிகளா'? இது கேள்விக்குரியது. சமகால உலகிலுள்ள உண்மையான ஆதிக்கச்சக்திகளின்,
அதாவது அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றின் ஏகபோக முதலாளியச் சக்திகளின் அதிகாரத்தைக்
கேள்விக்குட்படுத்துபவர் கள்தாம் இன்று ‘தேசியவாதிகள்' என்னும் பெயருக்குத் தகுதியுடையவர்கள்.
‘தேசியவாதிகள்' என்று சொல்லப்படுபவர்கள், வாஷிங்டன், பிரெஸ்ஸெல்ஸ், நேட்டோ ஆகியவற்றின் நண்பர்கள். அவர்களது ‘தேசியம்' என்பது, அவர்களது அவப்பேறுகளுக்கு ஒருபோதும் காரணமாக
இல்லாத அண்டைப்புற அப்பாவி மக்களின் மீது தேசியவெறி கொண்ட வெறுப்பைக் காட்டுவதுதான்:
உக்ரெய்னிய பாசிஸ்டுகளுக்கு எதிரிகளாக இருந்தவர்கள் ரஷியர்கள் (ஜார் அல்ல); குரோஷிய
பாசிஸ்டுகளுக்கு எதிரியாக இருந்தவர்கள் ஸெர்பியர்கள்; பிரான்ஸ், ஆஸ்திரியா, ஸ்விட்ஸர்லாந்து,
கிரீஸ், இன்னும் வேறு இடங்களில் தோன்றியுள்ள புதிய அதிதீவிர இடதுசாரிகளைப் பொருத்தவரை,
அந்த நாடு களுக்குப் ‘புலம்பெயர்ந்தவர்கள்தாம்' எதிரிகள்.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">ஒருபுறம் அமெரிக்காவிலுள்ள முக்கிய அரசியல்
சக்திகள் (குடியரசுக் கட்சியினரும் ஜனநாயகக் கட்சியினரும்), ஐரோப்பாவிலுள்ள முக்கிய
அரசியல் சக்திகள் ( நாடாளுமன்ற வலதுசாரிகள், சமூக தாராளவாதிகள்) ஆகியோருக்கும், மறுபுறம்
கிழக்கு ஐரோப்பாவிலுள்ள பாசிஸ்டுகளுக்கும் உள்ள கள்ளக்கூட்டால் ஏற்படும் அபாயத்தைக்
குறைத்து மதிப்பிடக் கூடாது. இந்தக் கள்ளக்கூட்டின் பேச்சாளராகத் தம்மைத்தாமே நிறுவிக்கொண்டுள்ள
ஹில்லாரி கிளின்டன், போர்வெறிக் கூச்சலை அதன் எல்லைக்கே கொண்டு சென் றுள்ளார். ஜார்ஜ்
டபிள்யூ.புஷ்ஷையும் விஞ்சும் வகையில் அவர், ரஷியாவுக்கு எதிரான கெடுபிடிப்போரை (cold war) மீண்டும் தொடங்குவதுடன் மட்டுமல்லாது,<span style="mso-spacerun: yes;">
</span>பழிவாங்கும் வெறியோடு அந்த நாட்டின்மீது முன்கூட்டியே இராணுவத் தாக்குதலை நடத்தவேண்டும்
என்றும், உக்ரெய்ன், ஜார்ஜியா, மோல்டோவா மற்றும் சீனா, ஆதிக்கச்சக்தி களுக்கு எதிராக
ஆசிய, ஆப்பிரிக்க, இலத்தின் அமெரிக்க நாட்டு மக்கள் கிளர்ச்சி செய்துவரும் இடங்கள்
ஆகியவற்றில் மேலும் வெளிப்படையான இராணுவத் தலையீட்டைச் செய்யவேண்டும் என்றும் அறைகூவல்
விடுத்துள்ளார். அவப்பேறாக, அமெரிக்கா, தனக்கு ஏற்பட்டுள்ள சரிவுக்கான<span style="mso-spacerun: yes;"> </span>எதிர்வினையாக சிறிதுகூடத் தயக்கமில்லாமல் மேற்கொள்ளும்<span style="mso-spacerun: yes;"> </span>நடவடிக்கைகள் ,‘அமெரிக்காவின் முதல் பெண் குடியரசுத்
தலைவராக' ஹில்லாரி கிளின்டனைத் தேர்ந்தெ டுப்பதற்கான போதுமான ஆதரவைத்<span style="mso-spacerun: yes;"> </span>திரட்டக்கூடும். இந்த போலி பெண்ணிலைவாதிக்குப் பின்னால்
இருப்பவை என்ன என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">அமெரிக்காவிலும், ‘பழைய இரும்புத்திரை'க்கு
மேற்கே உள்ள ஐரோப்பிய நாடுகளிலும் உள்ள ‘ஜனநாயக’ அமைப்புக்கு பாசிச அபாயம் இன்னும்கூட
அச்சுறுத்தலாக இருப்ப தில்லை என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில், மரபான நாடாளுமன்ற வலதுசாரிகளுக்கும்
சமூக தாராளவாதிகளுக்குமிடையே ஏற்பட்டுள்ள கூட்டின் காரணமாக, வரலாற்று ரீதியான பாசிச
இயக்கங்களைப் பின்பற்றி உருவாகின்ற அதிதீவிர வலதுசாரி சக்திகளின் சேவைகளை நாடவேண்டிய
தேவை ஆதிக்க மூலதனத்திற்கு இல்லாமல் போய்விட்டது. அப்படியானால், கடந்த பத்தாண்டுகளில்
ஐரோப்பிய நாடுகளில் அதிதீவிர வலதுசாரி சக்திகள் தேர்தல் வெற்றிகளைப் பெற்றதற்குக்
காரணம் என்ன? மேல்நிலையாக்கப்பட்டுள்ள ஏகபோக முதலாளித்துவம் (generalized monopoly capitalism) எல்லா இடங்களிலும் பரவிவருவதால் ஐரோப்பியர்களும்கூடப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால்தான், (மரபான) வலதுசாரிச் சக்திகளுக்கும் சோசலிச
இடதுசாரிகள் என்று சொல்லப்படுபவர்களுக்குமிடையே ஏற்பட்டுள்ள கூட்டுக்கு எதிர்வினையாக,
அவர்கள் தேர்தலைப் புறக்கணிப்ப தையோ, அதிதீவிர வலதுசாரிகளுக்கு வாக்களிப்பதையோ விரும்புகின்றனர்.
ஆக இந்தச்சூழலில் புரட்சிகரமான இடதுசாரி சக்திகளாக வளரக்கூடிய சக்திகளுக்குப் பெரும்
பொறுப்பு இருக்கிறது. நடப்பிலுள்ள முதலாளித்துவத்தைக் கடந்துசெல்கிற உண்மையான முன்னேற்றத்துக்கான
திட்டங்களை அவை துணிச்சலோடு முன்மொழியுமானால், இப்போது அவற்றுக்கு இல்லாத நம்பகத்தன்மையை
உருவாக்கிக்கொள்ள முடியும். தற்போது குறிப்பிட்ட தனித் தனிப் பிரச்சினைகளின் பொருட்டு
துண்டுதுண்டாக நடத்தப்பட்டு வரும் எதிர்ப்பியக்கங்களை ஒருங்கிணைக்கவும்<span style="mso-spacerun: yes;"> </span>தற்காப்புப்போராட்டங்களை அவற்றுக்கு வழங்கவும்
புரட்சிகர இடதுசாரிகளால் முடியும். இத்தகைய இடதுசாரி ‘இயக்கத்'தால், உழைக்கும் வர்க்கங்களுக்குச்
சார்பாக சமுதாயத்தில் பல்வேறு வர்க்கங்களுக்குள்ள பலாபலத்தை மாற்றியமைத்து முன்னேற்றகரமான
வளர்ச்சியை சாத்தியப்படுத்த முடியும். இதற்கான நிரூபணமாக இருப்பவை, தென் அமெரிக்க நாடுகளில் மக்கள் இயக்கங்கள் அடைந்துள்ள வெற்றிகளாகும்.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">இப்போதுள்ள நிலைமைகளில், அதிதீவிர வலதுசாரிகள்
பெற்றுள்ள தேர்தல் வெற்றிகளும் கூட சமகால முதலாளியத்திலிருந்தே தோன்றியவைதான். இந்தத்
தேர்தல் வெற்றிகள், ‘மக்களைக் கவர்ந்திழுப்பதற்காக உருவாக்கப்பட்டவை' என்று அதிதீவிர
வலதுசாரிகளின் சொல்லாடகள், அதிதீவிர இடதுசாரிகளின் சொல்லாடல்கள் ஆகிய இரண்டையும் ஒரே
குரலில் இகழ்ந்து அவை இரண்டையும் ஒன்றாகச் சேர்ப்பதற்கு ஊடகங்களை அனுமதிக்கின்றன. இப்படிச்
செய்வதன் மூலம், இந்த ஊடகங்கள், அதிதீவிர வலதுசாரி கள் (‘வலதுசாரி' என்னும் சொல்லே
சுட்டிக்காட்டுவது போல) முதலாளித்துவ ஆதரவுச்சக்திகள், மூலதனத்தின் கூட்டாளிகளாக ஆகக்கூடியவர்கள்
என்பதையும், அதிதீவிர இடதுசாரிகளோ முதலாளித்துவ அதிகார அமைப்புக்கு அபாயகரமான எதிர்ப்புச்
சக்திகளாக வளரும் ஆற்றல் கொண்டவர்கள் என்னும் உண்மையை மூடிமறைக்கின்றன.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">மேற்கு, கிழக்கு அய்ரோப்பிய நாடுகளில்
காணப்படும் சூழல் இணைவு சிற்சில மாற்றங்களுடன் அமெரிக்காவிலும்<span style="mso-spacerun: yes;"> </span>இருப்பதை நம்மால் அவதானிக்கமுடிகின்றது. ஆனால்,
அமெரிக்காவிலுள்ள அதிதீவிர வலதுசாரிகள் ஒருபோதும் பாசிஸ்டுகள் என்று அழைக்கப்பட்டதில்லை.
கடந்தகால ‘மெக்கார்த்தியச'த்தைப் போலவே, இன்றைய தேநீர் விருந்து வெறியர்களும் (ஹில்லாரி
கிளிண்டன் போன்ற) போர் வெறியர்களும் ‘தன்னுரிமை' என்பதற்குப் பகிரங்கமான ஆதரவு தெரிவிக்கின்றனர்.
முதலாளித்துவ அமைப்பால் பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளுக்கு இணங்குவதாக அவர்களால்
‘சந்தேகிக்கப்படும்' அரசாங்கத்திற்கு எதிராக ஏகபோக மூலதனத்தின் உடைமையாளர்கள், அவற்றை
நிர்வகிப்பவர்கள் ஆகியோரின்<span style="mso-spacerun: yes;"> </span>நலன்கள் பாதுகாக்கப்பட
வேண்டும் என்னும் பொருளில்தான் அவர்கள் ‘தன்னுரிமை' என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறார்கள்.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">பாசிஸ்ட் இயக்கங்களைப்பற்றிய கடைசி அவதானிப்பு
இது தான்: கோரிக்கைகளை எழுப்புவதை எப்போது, எவ்வாறு நிறுத்திக்கொள்வது என்பதை அவை அறிந்துகொள்ளாமல்
இருப்பதாகத் தோன்றுகிறது. தலைவர் வழிபாடு, கண்மூடித்தனமான அடிபணிதல், வெறியுணர்வைப்
பரப்பும் போலி-இனத்துவ, போலி-மதக் கட்டுக்கதைகளை விமர்சன நோக் கில்லாமலும் வானளாவிய
வகையிலும் போற்றிப் புகழ்தல், வன்முறைச் செயல்களுக்காக ஆயுதமேந்திய குடிபடைகளுக்கு
ஆள்சேர்த்தல் ஆகியன பாசிசத்தைக் கட்டுப்படுத்த முடியாத சக்தியாக ஆக்குகின்றன. பாசிசம்
எந்த சமூகப் பிரிவினரின் நலன்களுக்கு சேவை புரிவதற்காக அறிவற்ற பிறழ்வுகளைச் செய்கின்றதோ,
அந்தப் பிறழ்வுகளின் கண்ணோட்டத்திற்கும்கூட ‘தவறுகளாக'த் தென்படுவனவற்றை அது செய்வது
தவிர்க்க முடியாததாக அமைந்துவிடுகிறது. ஹிட்லர் உண்மையிலே மனநோயாளி; இருப்பினும் அவரால் தம்மை ஆட்சியில் அமர்த்திய பெரும் முதலாளிகளைத் தமது பைத்தியக்காரத்தனத்தின்
இறுதிவரை பின்பற்றி வருமாறு நிர்பந்திக்க முடிந்தது; அது மட்டுமின்றி, மக்கள்தொகையில்
மிகப்பெரும் பகுதியின் ஆதரவையும் திரட்டிக்கொள்ள முடிந்தது. ஹிட்லரிசம் என்பது ஓர்
அதீதமான விஷயம் என்றாலும், மனநோயாளிகளாக இல்லாத முஸ்ஸோலினி, ஃப்ராங்கோ, ஸலாஸர் ஆகியோரின்
கூட்டாளிகளும் கையாட்களும்கூட கொடுங்குற்றச் செயல் களை இழைக்கத் தயங்கியதில்லை.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">சமகாலத் தெற்கு நாடுகளில் பாசிசம்</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">இலத்தின் அமெரிக்காவிலுள்ள விவசாயிகள்,
அடிமை நிலைக்குத் தாழ்த்தப்பட்டு, நிலவுடைமையாளர்களின் கொடூரமான ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுச்
சுரண்டப்பட்டனர். இந்தச் சுரண்டலை அடிப்படையாகக் கொண்டே இலத்தின் அமெரிக்கா, 19ம் நூற்றாண்டில்
உலகளாவிய மூலதனத்துடன் இணைக்கப்பட்டது. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பது
மெக்ஸிகோவில் இருந்த போர்ஃபிரோ டயஸின் ஆட்சி அமைப்பு. 20ம் நூற்றாண்டில் உலக முதலாளியத்துடன்
இலத்தின் அமெரிக்கா மேலும் நெருக்கமாக இணைக்கப்பட்டதன் காரணமாக ‘வறுமை நவீனமயமாக்கப்பட்டது'.
ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் நிகழ்ந்ததைவிட மிக அதிக அளவிலும், மிக விரைவாகவும் கிராமப்புறத்திலிருந்து
மக்கள் வெளியேறினர். இதன் காரணமாக, பழைய கிராமப்புற வறுமை வடிவங்களிலிருந்து வேறுபட்ட புதிய வறுமை வடிவங்கள் லத்தின் அமெரிக்க நகர்ப் புறச்சேரிகளில் தோன்றின. அதேவேளை,
சர்வாதிகார ஆட்சி களை நிறுவியும், தேர்தல் மூலம் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும்<span style="mso-spacerun: yes;"> </span>ஜனநாயகத்தை ஒழித்துக்கட்டியும், கட்சிகளையும் தொழிற்சங்கங்களையும்
தடைசெய்தும், உளவுபார்க்கும் தொழில்நுட்பங்களின் மூலம் யாரை வேண்டுமானாலும் கைது செய்யவும்
சித்திரவதை செய்யவுமான உரிமைகள் அனைத்தையும் ‘நவீன' உளவுத்துறையினருக்கு வழங்கியும்
வெகுமக்கள் மீதான அரசியல் கட்டுப்பாடு<span style="mso-spacerun: yes;"> </span>'நவீனமயமாக்கப்பட்டது'. முதலாளித்துவத்துக்கான இத்தகைய அரசியல் நிர்வாக வடிவங்கள், ஐரோப்பிய சார்பு
முதலாளிய நாடுகளில் காணப்பட்ட பாசிசங்களுடன் மிகவும் ஒத்திருந்தன என்பதில் சந்தேகமில்லை.
20ம் நூற்றாண்டு லத்தின் அமெரிக்காவிலிருந்த சர்வாதிகார ஆட்சிகள் அந்தந்த நாட்டுப்
பிற்போக்கு அணிக்கு (பெரும் நிலவுடைமையாளர்கள், தரகு முதலாளி வர்க்கங்கள், லத்தின்
அமெரிக்காவில் ஏற்பட்ட இந்த உதிரி வளர்ச்சி வடிவத்திலிருந்து சிலவேளை பயன டைந்த மத்தியதர
வர்க்கங்கள் ஆகியோர் அடங்கியதுதான் இந்த அணி) மட்டுமல்ல; எல்லாவற்றுக்கும் மேலாக, ஆதிக்க
வெளிநாட்டு மூலதனத்துக்கு, குறிப்பாக அமெரிக்க மூலதனத்துக்கு சேவை செய்தன. அதனால்தான்,
அமெ ரிக்கா இந்த சர்வாதிகார ஆட்சிகளை- லத்தின் அமெரிக்கா வில் அண்மையில் மக்கள் இயக்கங்கள்
வெடித்துக் கிளம்பி<span style="mso-spacerun: yes;"> </span>நிலைமையை மாற்றிய வரை-ஆதரித்து
வந்தது. இந்த மக்கள் இயக்கங்களுக்குள்ள ஆற்றலும், அவை கொண்டுவந்த சமூக, ஜனநாயக முன்னேற்றங்களும்-
குறைந்த காலத்துக்கேனும்- பாசிச சர்வாதிகார ஆட்சிகள் திரும்பி வருவதைத் தடுத்துள்ளன.
ஆனால் எதிர்காலம் நிச்சயமற்றதாக உள்ளது. ஒரு புறம் உழைக்கும் வர்க்கங்களுக்கும், மறுபுறம்
உள்நாட்டு முதலாளித்துவம், உலக முதலாளித்துவம் ஆகியவற்றுக்குமிடையே இப்போதுதான் மோதல்
தொடங்கியுள்ளது. எல்லா வகையான பாசிசங்களயும் போலவே, லத்தின் அமெரிக்க சர்வாதிகார ஆட்சிகளாலும்
‘தவறுகளை'ச் செய்வதைத் தவிர்க்க முடியவில்லை, சில தவறுகள் அந்த சர்வாதிகார ஆட்சிகளின்
அழிவுக்கும் வழிகோலின.<span style="mso-spacerun: yes;"> </span>இதற்கு எடுத்துக்காட்டு
யோர்ஹெ ரஃபெய்ல் விடெலாவின் (Jorge Rafael Videla) <span style="mso-spacerun: yes;"> </span>சர்வாதிகார ஆட்சி. அர்ஜெண்டின மக்களிடையே தோன்றியிருந்த
தேசிய உணர்வைத் தமது சொந்த ஆதாயத்துக்குப் பயன்படுத்த முனைந்த அவர் மால்வினாஸ் தீவுகளைக்
கைப்பற்றப் போர் தொடுத்தார்.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">1980களில் தொடங்கி, மேல்நிலை ஏகபோக முதலாளியப்
பரவலின் காரணமாக உருவான உதிரி வளர்ச்சி, பாண்டூங் சகாப்தத்தில் (1955-1980) ஆசியாவிலும்
ஆப்பிரிக்காவிலும் தோன்றிய ஆட்சிமுறைகளை அகற்றிவிட்டது.<span style="mso-spacerun: yes;"> </span>இந்த உதிரி வளர்ச்சி,லத்தின் அமெரிக்காவில் ஏற்பட்டதைப்
போலவே,<span style="mso-spacerun: yes;"> </span>வறுமையை நவீனமயமாக்கி ஒடுக்குமுறை வன்முறையையும்
நவீனமயமாக்கியுள்ளது. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக இருப்பவை அரபு உலகில் நாஸரின்
ஆட்சிக்குப் பிற கும் இராக்கில் பாத் கட்சியின் ஆட்சிக்குப் பிறகும் தோன்றி யுள்ள அரசாங்க
அமைப்புகளாகும். பாண்டூங் சகாப்தத்தைச் சேர்ந்த தேசிய, மக்களாதாரவு பெற்ற ஆட்சிகளையும்<span style="mso-spacerun: yes;"> </span>உலகமயமாக்கப்பட்ட நவ-தாராளவாத வாகனத்தில் ஏறிக்கொண்ட அவற்றின் வாரிசுகளையும்- அவை அனைத்துமே ‘ஜனநாயகத்தன்மையற்றவை' என்னும் காரணம்
காட்டி-ஒன்றாகச் சேர்க்கக்கூடாது. பாண்டூங் சகாப்த ஆட்சிகள், எதேச்சாதிகார அரசியல்
நடைமுறைகளைக் கொண்டிருந்தபோதிலும், மக்களால் ஏற்றுக்கொள்ளப் பட்டவையாக இருந்தன. அதற்குக்
காரணம், ஒன்று, அந்த ஆட்சிகளின் உண்மை யான சாதனைகள்தாம்; அந்த சாதனைகளிலிருந்து உழைக்கும் வர்க்கங்களில் பெரும்பான்மையினர் பலனடைந்தனர்; இரண்டு, அந்த ஆட்சிகளின் ஏகாதிபத்திய-எதிர்ப்பு
நிலைப்பாடு. அந்த ஆட்சிகளுக்குப் பிறகு வந்த சர்வாதிகார ஆட்சிகள், எப்போது உலகமயமாக்கப்பட்ட
நவதாராளவாதத்தையும் அதனோடு சேர்ந்துவரும் உதிரி வளர்ச்சியையும் ஏற்றுக் கொண்டனவோ அப்போதே
அவை தாம் இருப்பதற்கான நியாயத்தை இழந்துவிட்டன. (பாண்டூங் சகாப்த) ஆட்சி, ஜனநாயக ஆட்சியாக
இல்லாமலிருந்தாலும், அது<span style="mso-spacerun: yes;"> </span>மக்களா தரவு பெற்ற,
தேசியத்தன்மை வாய்ந்த ஆட்சியாக இருந்தது.<span style="mso-spacerun: yes;"> </span>அது
நவதாராளவாதப் பொருளாதார, மக்கள் விரோத, தேச விரோதத் திட்டத்திற்கு சேவை செய்யும் போலிஸ்
வன்முறை ஆட்சிக்கு வழிவிட்டு மறைய வேண்டியதாயிற்று.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">2011ல் தொடங்கிய அண்மைக்காலக் கிளர்ச்சிகள்,
சர்வாதிகார ஆட்சிகளைக் கேள்விக்குட் படுத்தியுள்ளன. ஆனால், சர்வாதிகார ஆட்சிகள் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளதோடு சரி. இந்த சர்வாதிகார ஆட்சிகளுக்கான மாற்றுகள்<span style="mso-spacerun: yes;"> </span>நிலைபெற வேண்டுமானால், இந்தக் கிளர்ச்சிகள் எந்த
மூன்று குறிக்கோள்களுக்காக எழுந்துள்ளனவோ, அந்த மூன்று குறிக்கோள்களையும் ஒன்றிணைப்பதில்
அவை வெற்றியடைய வேண்டும். பின்வருவனதான் அந்த மூன்று குறிக் கோள்கள்: சமுதாயம், அரசியல்
ஆகியவற்றை ஜனநாயகப் படுத்துதலைத் தொடர்ந்து செய்தல், முற்போக்கான சமூக வளர்ச்சிகள்,
தேசிய இறையாண்மையை உறுதி செய்தல்.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">இந்த வெற்றியைச் சாதிப்பதிலிருந்து நாம்
வெகுதூரம் பின்தங்கியிருக்கிறோம். அதனால்தான் கண்ணுக்குத் தெரிகின்ற குறுகிய காலத்துக்குப்
பல்வேறு மாற்றுகள் சாத்தியமானவை யாகத் தோன்றுகின்றன. பாண்டூங் சகாப்தத்தைச் சேர்ந்த
தேசிய, மக்களாதரவு ஆட்சிமுறைக்கு (சிறிது ஜனநாயகத்தன்மையைச் சேர்த்துக்கொண்டு)<span style="mso-spacerun: yes;"> </span>திரும்பிச் செல்வது சாத்தி யமா? அல்லது<span style="mso-spacerun: yes;"> </span>உறுதிபெற்ற ஜனநாயக, மக்கள்சார்பான, தேசிய முன்னணி
ஏற்படுமா? அல்லது கடந்தகாலத்தை நோக்கிய<span style="mso-spacerun: yes;"> </span>பிரமைக்குள்
- அது இன்றையச் சூழலில், அரசியலையும் சமுதாயத்தையும் ‘இஸ்லாமியமயமாக்கும்' வடிவத்தை
மேற்கொள்கின்றது - மூழ்குவதா?</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">முதலாளித்துவத்தின் சவாலுக்கான இந்த
மூன்று மாற்றுகளில் எதைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது என்பதில் மிகுந்த குழப்பம் ஏற்பட்டுள்ள
இந்தச்சூழலில், மேற்கு நாட்டு அரசு கள் (அமெரிக்காவும் அதற்குக் கீழ்ப்படிந்துள்ள ஐரோப்பியக்
கூட்டாளிகளும்) ஒன்றைத் தேர்வு செய்து கொண்டுள்ளன: அவை அரசியல் இஸ்லாத்தின் வடிவங்களான
முஸ்லிம் சகோதரத்துவம் அமைப்புக்கும் மற்றும்/ அல்லது இதர ‘ஸலாஃபிஸ்ட்'அமைப்புகளுக்கும்
முன்னுரிமையுடன் கூடிய ஆதரவை வழங்கியுள்ளன. இதற்கான காரணம் எளிதானதும் தெளிவானதுமாகும்:
இந்த அரசியல் சக்திகள் உலக மயமாக்கப்பட்ட நவதாராளவாதத்துக்குள்ளேயே தமது அதிகாரத்தைச்
செலுத்துவதை ஏற்றுக்கொண்டுள்ளன; இப்படிச் செய்வதன் மூலம், சமூகநீதி, தேசிய சுதந்திரம்
ஆகியவற்றுக்கான வருங்கால வாய்ப்புகளைக் கைவிட்டுவிடுகின்றன. ஏகாதிபத்திய சக்திகளின்
குறிக்கோளும் இதுதான்.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">இவ்வகையில், அரசியல் இஸ்லாத்தின் செயல்திட்டம்
சார்பு முதலாளித்துவ சமுதாயங்களில் காணப்படும் பாசிச வகையோடு சேர்ந்திருக்கிறது. உண்மையில்
இது, எல்லா வகை யான பாசிசங்களுடனும் இரு அடிப்படையான பண்புகளைப் பகிர்ந்துகொள்கிறது:
1. முதலாளிய அமைப்பின் இன்றியமையா அம்சங்களுக்கான சவால்கள் அரசியல் இஸ்லாத்தில் இல்லை
(அதாவது, இன்றையச்சூழலில், உலகமயமாக்கப்பட்ட நவதாராளவாத முதலாளித்துவத்தின் பரவலுடன்
தொடர்புடைய உதிரி வளர்ச்சிமுறையை அது கேள்விக்குட்படுத்துவதில்லை); 2.அரசியல் நிர்வாகத்திற்கு<span style="mso-spacerun: yes;"> </span>ஜனநாயக விரோத, போலிஸ்-அரசு வடிவங்களைத் (கட்சி களையும்
அமைப்புகளையும் தடைசெய்தல், இஸ்லாமிய ஒழுக்கநெறிகளைத் திணித்தல் போன்றவை) தேர்ந்தெ
டுத்துக் கொள்ளுதல்.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">இவ்வாறு ஏகாதிபத்திய அரசுகள், பிற நாடுகளில்
ஜனநாயக-விரோத ஆட்சிமுறைகள் ஏற்படுவதைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதால் (இது, வெள்ளம்போல்
நம்மைச் சூழ்ந்து கொள்ளும் பிரச்சாரங்களிலுள்ள ஜனநாயக-ஆதரவு சொற்ஜாலத்திலுள்ள பொய்யை
நிரூபிக்கின்றது), சம்பந்தப்பட்ட இஸ்லாமிய ஆட்சிகளின் ‘மிகைச் செயல்களை' இந்த ஏகாதி
பத்திய அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டியதாகின்றது. பாசிசத்தின் இதர வடிவங்களைப் போலவே,
அவை இருப்பதற்கான அதே காரணங்களின் பொருட்டே, இந்த மிகைச் செயல்கள் ‘இஸ்லாமியவாத’ச்
சிந்தனை முறையின் ‘மரபணுக்களி'லேயே பதிந்துவைக்கப்பட்டுள்ளன: கேள்வி கேட்காமல் தலைவர்களுக்கு
அடிபணிதல், அரசு மதத்தைப் பற்றியொழுகுவதை வெறித்தனமாகப் போற்றிப் புகழ்தல்,<span style="mso-spacerun: yes;"> </span>நிர்பந்தத்தின் மூலம் அடிபணிதலைச் சாதிக்க அதிர்ச்சிப்படைகளைப் பயன்படுத்துதல். உண்மையில், உள்நாட்டுப்போர் நடக்கும் சூழலில் தான் (எடுத்துக்காட்டாக,
ஸன்னி களுக்கும் ஷியாக்களுக்குமிடையிலான உள்நாட்டுப் போர்)<span style="mso-spacerun: yes;"> </span>‘இஸ்லாமிய' செயல்திட்டம் வளர்ச்சி காண்கிறது
( இதை ஏற்கெனவே பார்க்க முடிகிறது). இந்த ‘இஸ்லாமிய' செயல் திட்டம் ஏற்படுத்துகின்ற
விளைவு,<span style="mso-spacerun: yes;"> </span>நிரந்தரமான குழப்பம் மட்டுமே. ஆக,
சம்பந்தப்பட்ட சமுதாயங்கள் உலக அரங்கில்<span style="mso-spacerun: yes;"> </span>தம்மை
அறுதியிட்டுக்கொள்வதைச் சாத்தியமற்றதாக்கு வதற்கான உத்தரவாதமே இவ்வகையான இஸ்லாமிய அரசு
(அதிகாரம்) ஆகும். ‘இஸ்லாமிய' அரசாங்கத்தைவிடச் சிறந்ததொன்றை- ஸ்திரமான, அமெரிக்காவுக்கு
அடிபணிந் துள்ள உள்நாட்டு அரசாங்கத்தை- உருவாக்கும் எண்ணத்தை வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும்
அமெரிக்க ஏகாதிபத்தியம் கைவிட்டுவிட்டது; அப்படிப்பட்ட அரசாங்கத்துக்கு அடுத்தபடியாக
சிறந்தது என்று அது கருதும் ‘இஸ்லாமிய' அரசாங்கத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">இதேபோன்ற வளர்ச்சிகளையும் தேர்வுகளையும்
ஹிந்து இந்தியா போன்ற, அராபிய-முஸ்லிம் உலகத்திற்கு வெளியே உள்ள பகுதிகளிலும் காணலாம்.
அண்மையில் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி, உலகமயமாக்கப்பட்ட நவதாராளவாதத்திற்குள்
தனது அரசாங்கம் சேர்த்துக் கொள்ளப்படுவதை ஏற்றுக்கொள்கின்ற பிற்போக்குத்தனமான ஹிந்துமதக்
கட்சியாகும். எழுச்சி பெற்றுவரும் வல்லரசாக வளரும் திட்டத்திலிருந்து இந்தியா, தன்னுடைய
அரசாங்கத்தின் கீழ் பின்வாங்குவதை உத்தரவாதம் செய்யும் கட்சியாகும். அதை பாசிஸ்ட் கட்சி
என்று கூறுவது மிகையாகாது.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">முடிவாகச் சொல்வதென்றால், பாசிசம் மேற்கு,
கிழக்கு, தெற்கு நாடுகளுக்குத் திரும்பி வந்திருக்கின்றது; அது திரும்பி வந்துள்ளது,
இயல்பாகவே, மேல்நிலையாக்கப்பட்ட, நிதி மூலதனமயமாக்கப்பட்ட, உலகமயமாக்கப்பட்ட ஏகபோக
முதலாளித்துவத்தின் கட்டமைப்பு சார்ந்த நெருக்கடியுடன் தொடர்புடையதாகும். நெருக்கடிக்குள்ளான
முதலாளித் துவ அமைப்பின் ஆதிக்க மையங்கள், பாசிச இயக்கங்களின் சேவைகளை உண்மையிலேயே
நாடக்கூடிய அபாயம் அல்லது அதற்கான சாத்தியப்பாடு என்னும்<span style="mso-spacerun: yes;"> </span>அபாயம் நம்மிடம் மிகப்பெரும் விழிப்புணர்வைக் கோருகின்றது.
இப்போதுள்ள நெருக்கடி இன்னும் மோசமானதாகத்தான் ஆகப்போகின்றது. இதன் விளைவாக, பாசிஸ்ட்
தீர்வுகளை நாடக் கூடிய அச்சுறுத்தல், உண்மையான அபாயமாக மாறும்.<span style="mso-spacerun: yes;"> </span>வாஷிங்டனின் போர்வெறிக்கு ஹில்லாரி கிளிண்டன் தந்து
வரும் ஆதரவு,<span style="mso-spacerun: yes;"> </span>உடனடியான எதிர்காலத்துக்கு நல்லதல்ல.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">***</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">குறிப்புகள்:</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">நேட்டோ (ழிகிஜிளி : (NATO : The North Atlantic Treaty Organization): அமெரிக்கா, மேற்கு ஐரோப்பிய
நாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய, 28 உறுப்பிய நாடுகளைக்கொண்ட<span style="mso-spacerun: yes;"> </span>பாதுகாப்பு அமைப்பு. வெளிநாடுகளிலிருந்து வரும்
இராணுவத்தாக்குதல்களிலிருந்து பாது காத்துக் கொள்வதற்காகவென்று 1949இல் உருவாக்கப்பட்ட
இந்த அமைப்பின் நோக்கம், சோவியத் யூனியன் மற்றும் இதர கம்யூனிஸ்ட் நாடுகளின் செல்வாக்குப்
பரவாமல் தடுப்பதுதான். 1991ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் போர்களுக்கு
‘ நேட்டோ' உறுதுணையாக இருந்திருக்கி றது. இந்த அமைப்பின் தலைமையகம் பெல்ஜியத்தின்
தலைநகரான பிரெஸ்ஸெல்ஸில் இயங்குகிறது.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">கார்னேஷன் புரட்சி: போர்ச்சுகலில் இருந்த
ஸலாஸரின் பாசிச ஆட்சியைத் தூக்கியெறிந்த புரட்சி;<span style="mso-spacerun: yes;">
</span>கம்யூனிஸ்டுகள், ஜனநாயகவாதிகள், இராணுவத்திலிருந்த முற்போக்குச்சக்திகள் ஆகியோர்<span style="mso-spacerun: yes;"> </span>இணைந்து நடத்திய அந்தப் புரட்சியில் பங்கேற்றவர்களுக்கு,
மக்கள் கார்னேஷன் பூக்களை வழங்கி பாராட்டுத் தெரிவித்ததால் ‘கார்னேஷன் புரட்சி' என்று
அழைக்கப்பட்டது.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">விஷி அரசாங்கம் (Vichy Government)
: பிரான்ஸ் நாஜிகளிடம் சரணடைந்த பிறகு அவர்களிடம் அடிபணிந்த மார்ஷல் பெதெய்ன்<span style="mso-spacerun: yes;"> </span>தலைமையில் விஷி என்னுமிடத்தில் அமைக்கப்பட்ட<span style="mso-spacerun: yes;"> </span>அரசாங்கம்.<span style="mso-spacerun: yes;">
</span></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">மார்ஷல் திட்டம் (Marshall Plan): இரண்டாம் உலகப்போரின் காரணமாகப் பெரும் பொருளாதார அழிவுகளைச் சந்தித்திருந்த
ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தை மீட்டுக் கொண்டுவருவ தற்காக உருவாக்கப்பட்ட திட்டம் (European Recovery Program-ERP). அன்றைய அமெரிக்க
வெளியுறவு அமைச்சர் ஜார்ஜ் மார்ஷல் அத்திட்டத்தை உருவாக்க முன்முயற்சி எடுத்ததால்
‘மார்ஷல் திட்டம்' என்றழைக்கப்பட்டது. உலகப்போரில் அனைத்து மேற்கு ஐரோப்பிய நாட்டுப்
பொருளாதாரங்களும்<span style="mso-spacerun: yes;"> </span>நசிந்திருக்க, அமெரிக்கப்
பொருளாதாரம் மட்டுமே விரைவான வளர்ச்சியடைந்திருந்தது. அதற்குக் காரணம் பேர்ல் துறைமுகத்தின்
மீது ஜப்பானியர் நடத்திய திடீர்த்தாக்குதலைத் தவிர வேறு எந்த இராணுவத்தாக்குதலும் எதிரி
நாடுகளால் அதன்மீது நடத்தப்படவில்லை. ஐரோப்பாவை மறுநிர்மாணம் செய்வதற்கான ‘மார்ஷல்
திட்ட'த்தை உருவாக்குவதற்கு 1947 முதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இது தொடர்பான
பேச்சு வார்த்தைகளுக்கு வருமாறு சோவியத் யூனியனுக்கும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும்
அழைப்பு விடுக்கப்பட்டபோதிலும், அத்திட்டம் சோசலிச நாடுகளுக்கு அமெரிக்காவிலிருந்து
வரும் அச்சுறுத்தலாகும் என்று ஸ்டாலின் கருதியதால் அந்த நாடுகள்<span style="mso-spacerun: yes;"> </span>கலந்து கொள்ளவில்லை. 1947 ஜூலை முதல் நான்கு நிதியாண்டுகளுக்கு
அமல்படுத்தப்பட்ட அத்திட்டம் ஐரோப்பிய நாடுகளுக்கு 13 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள
பொருளாதார, தொழில்நுட்ப உதவிகளை வழங்கியது. அத்திட்டக்காலம் முடிவடைகையில் மேற்கு
ஜெர்ம னியைத் தவிர மற்ற எல்லா மேற்கு ஐரோப்பிய நாடுகளுமே உலகப் போருக்கு முந்தைய பொருளாதார
வளர்ச்சி மட்டத்தை அடைந்திருந்தன. அதேவேளை,<span style="mso-spacerun: yes;">
</span>இந்த நாடுகள் அமெரிக்காவின் உற்பத்திப் பொருள்களுக்கான பரந்த<span style="mso-spacerun: yes;"> </span>சந்தையாக மாறின. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர்
பல மேற்கு ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் கணிசமான செல்வாக்குடன் இயங்கிவந்தன.
பிரான்ஸிலும் இத்தாலியிலும் நாஜிசத்திற்கும் பாசிசத்திற்கும் எதிரான போராட்டத்தில்
கம்யூனிஸ்ட் கட்சிகள் முன்னணிப் பாத்திரம் வகித்தன. எனவே இந்த நாடுகளில் கம்யூனிஸ்டுகள்
ஆட்சிக்கு வந்துவிடுவார்கள் என்னும் அச்சமும் அமெரிக்காவிடம் இருந்தது. இந்த அச்சத்தைப்
போக்குவதற்கும் சோவியத் யூனியனின் செல்வாக்குப் பரவாமல் தடுப்பதற்கும் ‘மார்ஷல் திட்டம்'
பயன்பட்டது. </span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">ரீகா ஒப்பந்தம்: போலந்துக்கும் சோவியத்
யூனியனுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தம்.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">ட்ரூமன்<span style="mso-spacerun: yes;"> (Harry S. Truman) </span>:<span style="mso-spacerun: yes;"> </span>அமெரிக்காவின் 33ஆவது குடியரசுத் தலைவராக 1945 முதல்
1953 வரை பதவி வகித்தவர்.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">இரும்புத் திரை (Iron Curtain):
பிரிட்டிஷ் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்தவரும் இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டிஷ்
பிரதமராக இருந்தவருமான வின்ஸ்டன் சர்ச்சிலால் உருவாக்கப்பட்ட சொற்றொடர். மேற்கு நாடுகளுடன்,
சோவியத் யூனியனும் கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகளும் வெளிப்படையான<span style="mso-spacerun: yes;"> </span>தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதைத் தடுப்பதற்காக
சோவியத் யூனியன் உருவாக்கிய கருத்து நிலையை மட்டுமின்றி,<span style="mso-spacerun: yes;"> </span>அந்த நாடுகளின் அரசியல், பிரதேச எல்லைகளையும் குறிப்பதற்காக
‘இரும்புத்திரை' என்னும் சொற்றொடர் பயன்படுத்தப்பட்டது. </span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">ஆரஞ்சுப் புரட்சி: உக்ரெய்னின் குடியரசுத்
தலைவரைத் தேர்ந்தெடுப்ப தற்கான முதற்கட்டத் தேர்தலில் ஊழலும் முறைகேடுகளும் நடந்த தாகக்
கூறி, 2014 நவம்பர் முதல் 2005<span style="mso-spacerun: yes;"> </span>ஜனவரி வரை நடந்தப்
போராட்டங்களும்<span style="mso-spacerun: yes;"> </span>அரசியல் செயல்பாடுகளும் ‘ஆரஞ்சுப்
புரட்சி' என அழைக்கப்படுகின்றன.<span style="mso-spacerun: yes;"> </span>இந்த நடவடிக்கைகளுக்கு
அமெரிக்க அரசின் வெளியுறவுத்துறையும் அமெரிக்காவிலுள்ள பல்வேறு நிறுவனங்க ளும் நிதி
உதவி செய்ததை இலண்டனிலிருந்து வெளிவரும் ‘தி கார்டி யன்' நாளேடு அம்பலப்படுத்தியது.
மேற்கு நாட்டுப் ‘பார்வையாளர்க' ளின் கண்காணிப்பின் கீழ் 2005 ஜனவரியில் நடந்த தேர்தல்
நியாய மானது, நேர்மையானது என்று மேற்கு நாடுகள் பாராட்டின. மேற்கு நாடுகளால் ஆதரிக்கப்பட்ட<span style="mso-spacerun: yes;"> </span>விக்டர் யுஸ்ஷெங்கோ 52% வாக்கு களைப் பெற்று வெற்றிபெற்றார்.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">மேல்நிலை ஏகபோக முதலாளித்துவம் (generalized monopolies/monopoly capitalism): இந்தக் கருத்தாக்கத்துக்கு
சமிர் அமின் கூறும் விளக்கம்: ஒப்பீட்டளவில் சுயேச்சையாக உள்ள நிறுவனங்கள் என்னும்
கடலிலுள்ள தீவுகளாக (முக்கியமான தீவுகளாக இருந்த போதிலும்) இருப்பவை அல்ல இன்றுள்ள
ஏகபோக நிறுவனங்கள். அவை ஒன்றிணைந்த அமைப்பாக இருக்கின்றன. எனவே, இந்த ஏகபோக நிறுவனங்கள்
உற்பத்தி அமைப்புகள் அனைத்தையும் தமது இறுக்கமான கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன.
சிறிய, நடுத்தர நிறுவனங்கள் மட்டுமல்லாது<span style="mso-spacerun: yes;"> </span>ஏகபோக
நிறுவனங்கள் என்று கறாராக வரையறுக்க முடியாத பெரிய கார்ப்பரேஷன்களும்கூட இன்றைய ஏகபோக
நிறுவனங்கள் உருவாக்கியுள்ள கட்டுப்பாட்டு வலைக்குள் தான் இருக்கின்றன. அவற்றுக்கிருந்த
சுயேச்சைத்தன்மை<span style="mso-spacerun: yes;"> </span>மிகவும் சுருங்கி, அவை மேற்சொன்ன
ஏகபோக நிறுவனங்களின் துணை ஒப்பந்தக்காரர்களாகிவிட்டன. இந்த மேல்நிலை ஏகபோக முதலாளித்துவம் என்பது அமெரிக்க, மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பா, ஜப்பான் ஆகியவற்றில் மூலதனம்
மத்தியப்படுத்தப்படுவதில் உள்ள புதிய கட்டமாகும். 1980களிலும் 1990களி லும் இந்தக்
கட்டத்தை ஏகபோக மூலதனம் அடைந்தது. இந்த மேல் நிலை ஏகபோக நிறுவனங்கள்தாம் இன்று உலகப்
பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">உதிரி வளர்ச்சி<span style="mso-spacerun: yes;"> (Lumpen Development)</span>: ‘உதிரி வளர்ச்சி'
என்னும் சொற்றொடரைக் கீழ்க்காணும் பொருளில் சமிர் அமின் பயன்படுத்துகிறார்: ஏகாதிபத்திய
மைய (core)<span style="mso-spacerun: yes;"> </span>நாடுகளால், உலகின் ஓர நாடுகள் (periphery) மீது திணிக்கப்படும் வளர்ச்சி முன்மாதிரியின் காரணமாக விரைவாக,
ஓர நாடுகளின் சமுதாயங்கள் விரைவாக சிதைந்து கொண்டிருக்கின்றன. உழைக்கும் மக்கள், வெறும்
உயிர்பிழைப்புக்கான ஊதியம் மட்டுமே தரப்படும் முறைசாராத்துறைகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
அவர்களது வக்கற்ற நிலை அதிகரித்து வருகின்றது. அமெரிக்கா, மேற்கு ஐரோப்பிய நாடுகள்,
ஜப்பான ஆகிய ‘மைய' நாடுகளைச் சேர்ந்த<span style="mso-spacerun: yes;"> </span>ஒரு சில
ஏகபோக நிறுவனங்க ளின் கட்டுப்பாட்டிலேயே உலக மூலதனம் இயங்குகின்றது. அவற்றின் மீது<span style="mso-spacerun: yes;"> </span>ஓர நாடுகளின் அரசுகளுக்குக் கட்டுப்பாடு இருப்பதில்லை;
மாறாக, ‘மைய' நாடுகளின் மூலதனத்துக்குப் பாதுகாப்பை உத்த வாதம் செய்கின்றன. (மேல்நிலை
ஏகபோக முதலாளித்துவம், உதிரி வளர்ச்சி- இரண்டுக்குமான விளக்கத்திற்கு: Samir Amin, The Implosion of the Contemporary Global Capitalist System,http://www.globalresearch.ca/implosion-of-contemporary-capitalism-audacity-more-audacity-in-form..)</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">மெக்கார்தியிசம் (McCarthyism):
அமெரிக்க அரசை உளவு பார்ப் பதற்காகவும் அமெரிக்கச் சமுதாயத்தைச் சீர்குலைப்பதற்காகவும்
அரசாங்கப் பொறுப்புகளிலும் சமுதாய, அரசியல், பண்பாட்டுத் துறை களிலும் ஊடுருவியுள்ள
கம்யூனிஸ்டுகள், அவர்களது ஆதரவாளர் கள், சோவியத் உளவாளிகள் ஆகியோரைக் ‘களையெடுத்தல்'
என்ற பெயரால் 1950களில் நடத்தப்பட்ட ஒடுக்குமுறை நடவடிக்கைகளே மெக்கார்தியிசம் ஆகும்.
அமெரிக்காவின் விஸ்கோன்ஸின் மாகா ணத்திலிருந்து குடியரசுக்கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட
நாடாளுமன்ற உறுப்பினரான (செனெட்டர்) ஜோசெஃப் மெக்கார்த்தி இந்த நடவடிக்கைகளுக்குத்
தலைமை தாங்கியதால் இவற்றுக்கு மெக்கார்த் தியிசம் எனப் பெயர் ஏற்பட்டது. தேசவிரோதக்
கம்யூனிஸ்டுகளையும் அவர்களது ஆதரவாளர்களையும் களையெடுப்பது என்னும் பெயரால்<span style="mso-spacerun: yes;"> </span>நடத்தப்பட்ட ஒடுக்குமுறைகளால் பாதிக்கப் பட்டவர்களில்
சார்லி சாப்ளின், நாடகாசிரியர்கள் லிலியன் ஹெல்மன், ஆர்தர் மில்லர், பிரபல பாடகர் போல்
ரோப்ஸன் போன்றோரும் அடங்குவர்.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">தேநீர் விருந்து (இயக்கம்): 2007இல்
அமெரிக்காவில் தொடங்கப்பட்ட அரசியல் இயக்கம். அரசாங்கச் செலவுகளையும் வரிகளையும் குறைப்பதன்
மூலம் அமெரிக்கக் கூட்டாட்சி அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்திலுள்ள பற்றாக்குறையைப்
போக்க முடியும் என்பது இந்த இயக்கத்தின் கருத்துகளிலொன்று. சாதாரண அமெரிக்கக் குடிமக்களைக் கவர்வதற்காக சில ஜனரஞ்சக முழக்கங்களை இந்த இயக்கம் எழுப்பி வருகின்றது என்றாலும்,
அடிப்படையில் இது தனிச் சொத்தைப் பாதுகாப்பதையும் அமெரிக்காவின் நலன்களை முன் னிட்டு
பிற நாடுகளில் இராணுவத்தலையீடு செய்வதையும் பரிந்துரைக்கின்றது.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">குடிபடை (militia): ஆயுதப்பயிற்சி
பெற்ற குடிமக்களைக் கொண்டு உருவாக்கப்படும் படை. இது, அரசாங்கத்தின் அதிகாரபூர்வமான
இராணுவத்தின் அங்கம் அல்ல. ஆனால், பாசிஸ்டுகள் இதுபோன்ற குடிபடைகளை உருவாக்கி, தங்கள்
எதிரிகளைத் தாக்குவதற்கு அவற்றைப் பயன்படுத்துவதற்கு பாசிச அரசாங்கம் முழு ஒப்புதல்
தருகின்றது. பாசிச-எதிர்ப்பு இடதுசாரிகள், ஏகாதிபத்திய-எதிர்ப்புச் சக்திகள் ஆகியனவும்கூட
தங்களுக்கான குடிபடைகளை உருவாக்கிக் கொள்கின்றனர். ஆனால் இந்தக் குடிபடைகளின் நோக்கமும் செயல்பாடும் பாசிஸ்ட் குடிபடைகளின் நோக்கத்திலிருந்தும் செயல்பாட்டிலிருந்தும்
முற்றிலும் வேறுபட்டவை.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">யோர்ஹெ ரஃபெய்ல் விடெலா: 1976இல் இராணுவப்புரட்சி
மூலம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி அர்ஜைண்டினாவின் குடியரசுத் தலைவராக 1981 வரை
பதவி வகித்தவர். அவரது ஆட்சிக்காலத்தில்<span style="mso-spacerun: yes;"> </span>பல்லாயிரக்கணக்கான
அர்ஜைண்டினக் குடிமக்கள் ‘காணாமல் போகச்' செய்யப்பட்டனர்; ஆயிரக்கணக்கானோர் சிறைகளில்
அடைக்கப்பட்டுச் சித்தரவதை செய்யப் பட்டனர். ஆயிரக்கணக்கான பெண் கைதிகள் பாலியல் பலாத்காரம்
செய்யப்பட்டனர். கர்ப்பிணிக ளாக்கப்பட்ட பெண்களுக்குப் பிறந்த குழந்தைகள் அவர்களிடமிருந்து
பிரிக்கப் பட்டு, இராணுவத்தைச் சேர்ந்த குடும்பங்களிடம் ஒப்படைக்கப் பட்டனர்.<span style="mso-spacerun: yes;"> </span>அந்த நாட்டில் இராணுவ ஆட்சி அகற்றப்பட்ட பிறகு,
மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளில் விடெலா<span style="mso-spacerun: yes;"> </span>இழைத்தக் குற்றங்கள்<span style="mso-spacerun: yes;"> </span>நிரூபிக்கப்பட்டன. அதன் விளைவாக 50 ஆண்டு சிறைத்தண்டனை
விதிக்கப்பட்ட அவர், குளியல் அறையில் வழுக்கி விழுந்து, சிறையிலேயே இறந்தார். அர்ஜைண்டினாவுக்கு
அருகில் உள்ளவையும் பிரிட்டிஷ் இராணுவ முகாம்கள் உள்ளதுமான மால்வினாஸ் தீவுகளைக் கைப்பற்ற
அவரது ஆட்சிக்காலத்தில் மேற் கொள்ளப்பட்ட இராணுவத்தாக்குதல்கள் பிரிட்டிஷ் இராணுவத்தால்
முறியடிக்கப்பட்டன.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">பாண்டுங் சகாப்தம்:<span style="mso-spacerun: yes;"> </span>அன்று உலகில் இருந்த அமெரிக்க முகாம், சோவியத் முகாம்
ஆகிய இரண்டிலும் சேராமல், சுயேச்சையாகத் தமது அரசியல், பொருளாதார வளர்ச்சியைக் காண
விரும்பிய ஆசிய, ஆப்பிரிக்க நாடுகள் இந்தோனீஷியாவின் பாண்டூங் நகரத்தில் 1955 ஏப்ரலில்
நடந்த மாநாட்டில் கலந்துகொண்டன. 1961இல் யூகாஸ்லேவியாவின் தலைநகர் பெல்கிரேடில் நடபெற்ற
மாநாட்டில் தான் ‘அணிசேரா இயக்கம்' முறைப்படி<span style="mso-spacerun: yes;">
</span>உருக்கொண்டது. பாண்டூங் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்த நாடுகள் இந்தோனீசியா, பர்மா,
பாகிஸ்தான், இலங்கை, இந்தியா ஆகியனவாகும். பாகிஸ்தான் பின்னர், அமெரிக்க முகாமுக்குச்
சென்றுவிட்டது. பாண்டூங் சகாப்தம் என்று சமிர் அமின் இக்கட்டுரையில் குறிப்பிடுவது,
அணிசேரா (நாடுகளின்) இயக்கம் இருந்த காலகட்டத்தைத்தான். அந்த இயக்கத்தில் முன் னணிப்
பாத்திரம் வகித்தவர்கள் ஜவகர்லால் நேரு, சுகார்ணோ, கமால் அப்துல் நாஸர், மார்ஷல் டிட்டோ, சௌ என்லாய் ஆகியோராவர். இந்த நாடுகள் எல்லாவற்றிலுமே நாடாளுமன்ற ஜனநாயக முறை இருக்கவில்லை;
சில நாடுகளில் அந்த<span style="mso-spacerun: yes;"> </span>ஜனநாயகமுறை மீது கடுமையான
வரம்புகள் விதிக்கப்பட்டிருந்தன. இன்னும் சில நாடுகளில், ஏகாதிபத்திய- எதிர்ப்பும்
தேசப்பற்றும் கொண்டிருந்த இராணுவத்தின் ஆட்சி நிலவியது.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">இந்த நாடுகளின் ஆட்சிமுறைகள் 1980களிலிருந்து
மாற்றமடைந்து நவதாராளவாத ஆட்சி முறைக்கு வழிவிட்டதாக<span style="mso-spacerun: yes;"> </span>சமிர் அமினின் கட்டுரையில் கூறப்படுவது சரியான கருத்து
அல்ல. ஏனெனில், இந்த நாடுகள் பலவற்றில், பல்வேறு காரணங்களால் ஆட்சிமுறைகள் 1980க்கு
முன்னரே மாற்றப்பட்டுவிட்டன. எடுத்துக்காட்டாக, 1965இல் சிஐஏவின் பின்பலத்துடன் நடந்த
இராணுவ எதிர்ப்புரட்சி, சுகார் ணோவை ஆட்சியிலிருந்து அகற்றி அமெரிக்க ஆதரவு அரசாங்கத்தை
அமைத்தது. </span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;">ஸலாஃபிஸம்: இஸ்லாத்திற்குள்ளேயே இருக்கும்
ஓர் இயக்கம். தொடக்ககால முஸ்லிம்களின் (முன்னோர்களின் -ஸலாஃப்) வழிமுறைகளையும் நெறிகளையும்
பின்பற்ற வேண்டும் என வலியுறுத்துபவர்களே ஸலாஃபிஸ்டுகள்.</span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;"><span style="color: red;"><span style="font-family: "Arial Unicode MS","sans-serif"; font-size: 12.0pt;"><span style="mso-spacerun: yes;"></span>புதுவிசை 42வது இதழிலிருந்து</span></span></span></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<br /></div>
<!--[if gte mso 9]><xml>
<w:LatentStyles DefLockedState="false" DefUnhideWhenUsed="true"
DefSemiHidden="true" DefQFormat="false" DefPriority="99"
LatentStyleCount="267">
<w:LsdException Locked="false" Priority="0" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Normal"/>
<w:LsdException Locked="false" Priority="9" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="heading 1"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 2"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 3"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 4"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 5"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 6"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 7"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 8"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 9"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 1"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 2"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 3"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 4"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 5"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 6"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 7"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 8"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 9"/>
<w:LsdException Locked="false" Priority="35" QFormat="true" Name="caption"/>
<w:LsdException Locked="false" Priority="10" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Title"/>
<w:LsdException Locked="false" Priority="1" Name="Default Paragraph Font"/>
<w:LsdException Locked="false" Priority="11" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtitle"/>
<w:LsdException Locked="false" Priority="22" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Strong"/>
<w:LsdException Locked="false" Priority="20" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Emphasis"/>
<w:LsdException Locked="false" Priority="59" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Table Grid"/>
<w:LsdException Locked="false" UnhideWhenUsed="false" Name="Placeholder Text"/>
<w:LsdException Locked="false" Priority="1" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="No Spacing"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 1"/>
<w:LsdException Locked="false" UnhideWhenUsed="false" Name="Revision"/>
<w:LsdException Locked="false" Priority="34" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="List Paragraph"/>
<w:LsdException Locked="false" Priority="29" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Quote"/>
<w:LsdException Locked="false" Priority="30" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Quote"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="19" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtle Emphasis"/>
<w:LsdException Locked="false" Priority="21" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Emphasis"/>
<w:LsdException Locked="false" Priority="31" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtle Reference"/>
<w:LsdException Locked="false" Priority="32" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Reference"/>
<w:LsdException Locked="false" Priority="33" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Book Title"/>
<w:LsdException Locked="false" Priority="37" Name="Bibliography"/>
<w:LsdException Locked="false" Priority="39" QFormat="true" Name="TOC Heading"/>
</w:LatentStyles>
</xml><![endif]--><!--[if gte mso 10]>
<style>
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
</style>
<![endif]--><div class="s3gt_translate_tooltip" id="s3gt_translate_tooltip" is_bottom="true" is_mini="true" style="left: 594px; opacity: 0; position: absolute; top: 14088px;">
<div class="s3gt_translate_tooltip_mini" id="s3gt_translate_tooltip_mini_logo" title="Translate selected text">
</div>
<div class="s3gt_translate_tooltip_mini" id="s3gt_translate_tooltip_mini_sound" title="Play" title_play="Play" title_stop="Stop">
</div>
<div class="s3gt_translate_tooltip_mini" id="s3gt_translate_tooltip_mini_copy" title="Copy text to Clipboard">
</div>
<link href="chrome://s3gt/skin/s3gt_tooltip.css" rel="stylesheet" type="text/css"></link></div>
</div>
புதுவிசைhttp://www.blogger.com/profile/09276344793619872435noreply@blogger.com0